சினிமாவில் ஸ்நோ க்ளோப்கள் | Depiction of Snow Globe in Films

ஸ்நோ க்ளோப் எனப்படும் கண்ணாடி அலங்கார உருண்டையை நாம் முக்கிய திரைப்படங்களில் பார்த்திருப்போம், பளிங்கு போன்ற நீரால் நிரப்பப்பட்டு,உள்ளே இயற்கைக் காட்சிகள் ,பறவைகள், விலங்குகள் அல்லது மணமக்களின்  வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.

பழைய திரைப்படங்கள் துவங்கி இன்றைய திரைப்படங்கள் வரை ஸ்நோ க்ளோப்களுக்கு நீங்காத இடம் உண்டு,ஆனால் அவை பெரும்பாலும் சோகத்தையே பறைசாற்றுகின்றன.

எப்படி ஹிட்ச்காக்கின் சித்தாந்தப்படி ஒரு துப்பாக்கிக்கு க்ளோஸப் வைத்தால் அது வெடித்தே தீருகிறதோ, இந்த அழகிய ஸ்நோ க்ளோப்களும்  சினிமாவில்  அழிவின் சின்னமாகவே இருக்கின்றன.

Unfaithful [2002] படத்தில் ஆதர்சமான கணவன் [Richard Gere] மனைவியின்[Diane Lane]  12 வருட  இல்வாழ்க்கை  ஒரு அழகிய புத்திசாலி இளைஞனின் [Olivier Martinez] குறுக்கீட்டால் தடுமாறுகிறது, மனைவி தன்னைக் கட்டுப்படுத்த முயன்று தோற்று வழி தவறி விடுகிறாள்,ஒரு கட்டத்தில் தன் கணவன் தனக்கு திருமணநாளுக்குப் பரிசளித்த இந்த ஸ்நோ க்ளோபை, தன்  காதலனுக்கு பரிசளித்து விடும் அளவுக்கு பித்து முற்றுகிறது,

உளவறிந்த கணவன் காதலனைத் தேடிப்போய் பேசுகிறான்,ஆனால் அங்கே இந்த ஸ்நோ க்ளோப் இருப்பதைக் கண்டவன்,அவள் தன் பிறந்தநாளுக்கு பரிசளித்தது என காதலன் கூசியபடி சொல்ல, அந்த ஸ்நோக்ளோபை கையில் ஏந்தி கண்ணீர் விடுகிறான் கணவன்,இது நான் அவளுக்கு எங்கள் மணநாளுக்கு பரிசளித்தது என்று கூறி சுயபச்சாதாபத்தின் உச்சத்தில் கேவியவன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த ஸ்நோ க்ளோபை எடுத்து அந்த இளைஞனின் மண்டையை உடைத்து விடுவான். அந்த இளைஞன்  அங்கே துடிதுடித்து குருதி வழிய மரணிப்பான், பின்னர் இந்த ஸ்நோ க்ளோப்பை சுத்தம் செய்து வீட்டுக்கு கொண்டுவந்து பழைய இடத்திலேயே வைத்து விடுவான் கணவன்.

பின்னொரு சந்தர்ப்பத்தில் மனைவி கணவன் செய்த கொலைக்காக அருவருக்க,கணவன் அவளின் முறை தவறிய உறவுக்கு அருவருப்பான்,உன்னைக் கொல்ல முடியவில்லை,அதனால் அவனைக் கொன்றேன் என்பான், மனைவியை அந்த ஸ்நோ க்ளோபை திறந்து பார்க்கச் சொல்வான்,அவள் திறந்தால் அதில் இவர்கள் மற்றும் குட்டி மகனின் புகைப்படம் இருக்க ,அதன் பின்னே Do not open until our 25 the anniversary. To my beautiful wife, the best part of everyday என்று எழுதியிருக்கும்.மிக அருமையான காட்சி அது.


ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில்   சினிமா டூப்பான ஷாரூக் கான பிரபல நடிகை தீபிகாவையை ஒருதலைக் காதல் செய்வார்,அவளை ஒரு தீவிபத்தில் காப்பாற்றவும் அவளின் உன்னதமான  நட்பு கிடைக்க,அதைக் காதல் என எண்ணுவார்,அவளுக்குப் பரிசளிக்க இந்த ஸ்நோ க்ளோபை வாங்குவார், ஆனால் நிஜத்தில் அந்த நடிகைக்கும் பிரபல தயாரிப்பாளர்  அர்ஜுன் ராம்பாலுக்கும் ரகசிய உறவு இருக்கும்.இந்த உறவால் நடிகை கருத்தரித்தும் விடுவாள்,ஊரறிய திருமணம் செய்து கொள்ள கேட்பாள்,இந்த விஷயத்தை கேட்ட தயாரிப்பாளர் தன் மண வாழ்க்கையும் சினிமா எதிர்காலமும் பாழாகிவிடும் என்று எண்ணி தன் புதிய படத்தின் செட்டுக்குள் நடிகையைப் பூட்டி வைத்து தீவைத்துக் கொல்வார்.



பத்லாபூர் திரைப்படத்தில் ஆதர்ச இளம் தம்பதிகளான வருண் தாவனும் ,யாமி கௌதமும் இன்பச் சுற்றுலா செல்லும் இடங்களில் எல்லாம் ,இந்த ஸ்நோ க்ளோப்களை வாங்கி சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.அவளும் குட்டி மகனும் ஒரு வங்கிக் கொள்ளையில் கொல்லப்பட,ஒரே நாளில் வாழ்க்கை தடம் புரண்டுவிடும்.வருண்  15 வருடம் கழித்தும் பழிவாங்கும் வெறி அடங்காமல் இருப்பார்.அப்படி ஒரு நாள் தன் எதிரியின் வாழ்க்கைக்குள் தேடி நுழைந்தவர்,அங்கே மிக அந்த வசதியான வீட்டுக்குள் இந்த ஸ்நோ க்ளோப்கள் இருப்பதைக் கண்டவர் மிஷாவுக்கும் இதிலெல்லாம் மிகுந்த ஆர்வமிருந்தது என்பார். அதன் பின்னர் பழிவாங்கும் வெறி உச்சம் பெறும்,கணவன் மனைவி ஜோடியான விநய் பதக்கும்,ராதிகா ஆப்தேவும் அங்கே ஸ்தம்பித்துப் போவர்.



சிட்டிஸன் கேன் படத்தின் துவக்கத்தில் ஃபாஸ்டர் கேன் தன் மரணப்படுக்கையில் இந்த ஸ்னோ க்ளோபைப் பார்த்து ரோஸ் பட் என்று கடைசியாக உச்சரித்து உயிர் துறப்பார்,இந்த கண்ணாடி உருளை அவர் கைகளில் இருந்து உருண்டு விழுந்து சிதறும்.அப்புள்ளியில் இருந்து படம் துவங்கும்.

கோயன் சகோதரர்களின் ஃபார்கோ க்ரைம் நுவார் திரைப்படத்தின் ஒரிஜினல் ஸ்பெஷல் எடிஷன் VHS வாங்கியவர்களுக்கு  இந்த ஸ்நோ க்ளோபை இலவசமாகத் தந்தனர். அதனுள் ஃபார்கோ திரைப்படத்தின் முக்கியமான குற்றச்செயல்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன, ரசிகர்கள் அதை பெருமையான சேமிப்பாக இன்றும் வைத்திருப்பதைப் படித்தேன்,

ஃபார்கோ படத்தில் பனிச்சூழலில் கார் ஒன்று கவிழ்ந்திருக்கும்,அருகே பெண் போலீஸ் அதிகாரி ஃப்ரான்கஸ் மெக்டார்மெண்ட் துப்பாக்கியுடன் நின்றிருப்பார்,அதைக் குலுக்க, கிளம்பும் வெந்நிற பனித்துகள்கள் ,ரத்த நிறத்தில் மாறும். மற்றொரு பயங்கர காட்சியான wood cutter காட்சியும் இந்த ஸ்நோ க்ளோப்களாக இடம் பெற்றிருந்தன.என்ன ஒரு விளம்பர யுக்தி பாருங்கள்?
Add caption

ஸ்நோ க்ளோப்களை வேறு எங்காவது திரைப்படத்தில் பார்த்திருந்தால் குறிப்பிடுங்கள் நண்பர்களே

யாகூப் மேமனுக்கு தூக்கு



யாகுப் மேமனின் வழக்கு மிகவும் சிக்கலானது,எப்படி குடும்பத்தில் ஒருவர் செய்யும் தேச துரோக குற்றம்  அக்கொடிய குற்றவாளி சட்டத்தின் பிடியில் அகப்படாத நிலையில் வலியச் சென்று சரணடைந்த குடும்ப உறுப்பினரை  காவு வாங்கும் என்பதன் சிறந்த எடுத்துக்காட்டு.

யாகுப் மேமன் மிகச் சிறந்த கல்வி மானாக இருந்திருக்கிறார், அவரின் அதீத முன் எச்சரிக்கையும் சிறந்த இந்தியக் குடிமகன் கனவுமே  அவருக்கு எமனாக வாய்த்து விட்டது.

இதைப் பற்றி சிந்தித்ததில் ஹஸாரான் க்வாய்ஷெய்ன் அய்ஸி  [Hazaaron Khwaishein Aisi ] படத்தில் வரும் விக்ரம் [ஷைனி அகுஜா] கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறது,விக்ரம் வேகமாய் வளர்ந்து வரும் கார்பொரேட் மற்றும் அரசியல் தரகன். இந்திய எமர்ஜென்ஸியின் உச்சத்தில்  விக்ரமின்  ஒருதலைக் காதலி கீதாவின் கணவன் நக்ஸலைட் சித்தார்த்தை [கேகே மேனோன்] போலீசார் காலில் சுட்டுப் பிடித்து விடுகின்றனர், அவனை பீகாரின் ஒரு குக்கிராமத்தின் சுகாதார மையத்தில் அனுமதித்து சிகிச்சை தருகின்றனர்.

அன்றைய ஆட்சியாளர்களின் முக்கிய கருவருப்பு பட்டியலில் இருக்கும் சித்தார்த்தை என்கவுண்டர் செய்ய மேலிடத்திலிருந்து ஒப்புதலும் வந்து விடுகிறது, அந்த சுகாதார மையத்திலிருக்கும் மார்க்ஸிய அனுதாபி மருத்துவர் மூலம் சித்தார்த்தின் மனைவி கீதாவின் வீட்டிற்கு இச்செய்தி தொலைபேசி வழியே செல்கிறது,

 ஆனால் அங்கே கீதா இல்லாத நிலையில் தொலைபேசி செய்தியைக் கேட்ட விக்ரம் வேண்டா வெறுப்புடன் சித்தார்த்தை மீட்கப் பொருப்பேற்றவன் அக்கிராமத்திற்கு தானே வலியச் செல்கிறான்,வழியில் கார் இடக்கு செய்ய,ஒரு கோழி வண்டியில் ஏறிச் செல்கிறான்,அதன் ஓட்டுனர் இரவு பிரயாணத்தில் தூங்கிவிட,வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது, விக்ரம்   அதே கிராம சுகாதார மையத்தில் சித்தார்த்துக்கு பக்கத்திலேயே பலத்த காயங்களுடன் சேர்க்கப்படுகிறான்.

அங்கே வைத்து சித்தார்த்தை ஏசுகிறான், உன்னால் எனக்கு என்ன ஆனது பார் என்கிறான்,வலிக்கு ஊசி போட வரும் நர்ஸிடம் விளையப்போகும் விபரீதம் புரியாமல் இஞ்செக்‌ஷனில் bubble check செய்திருக்கிறதா?இது சுகாதாரமானதா? என்கிறான்.

அன்றிரவே நக்ஸலைட் குழுவினர் தங்கள் சகா சித்தார்த்தை அந்த சுகாதார மையத்துக்குள் நுழைந்து கட்டிலுடன் மீட்டு தூக்கிக் கொண்டு செல்கின்றனர். சித்தார்த் விக்ரமையும் நம்முடன் மீட்போம் என்றதற்கு அவன் பெரிய அரசியல்வாதியின் மகனாயிற்றே,அவனுக்கு ஒன்றும் நேராது என்கின்றனர்.

காலையில் விபரீதம் துவங்குகிறது,நன்கு குடித்து விட்டு போதையில் தூங்கிய கான்ஸ்டபிளுக்கு பயத்தில் பேதியாகிறது, சித்தார்த் எங்கே? என்று மயக்கம் தெளியாத விக்ரமை வந்து உலுக்குகிறான்.புது டில்லியில் இருந்து 5000 வருடங்கள் பின் தங்கியிருக்கும் கிராமத்தில் தான் இருக்கிறோம்,என்ன நேருமோ? என்ற நினைப்பிலேயே விக்ரமிற்கு கடும் வலியுடன் பயமும் சேர்ந்து கொள்கிறது,தன் கார்பொரேட் ,டிப்ளோமஸி அதிகாரம் எதுவும் செல்லுபடியாகாத காட்டுமிராண்டிகளின் சூழல் ,காவல் துறை அதிகாரிகளிடம் என்ன சொல்லியும் பயனில்லை,எல்லாமே விபரீதமாகத் தான் முடிகிறது,

கான்ஸ்டபிள் அவசர அழைப்பின் பேரில் அங்கே வந்த இன்ஸ்பெக்டருக்கு சித்தார்த்தை அவசரகதியில் என்கவுண்டர் செய்தாக வேண்டிய கட்டாயம். ஆனால் சித்தார்த் அங்கில்லை, இப்போது இரு காவல்துறை கோமாளிகளும் விக்ரமை இழுத்துச் செல்கின்றனர். நான் அவன் இல்லை, எனக்கு உங்கள் எம்.பி யை தெரியும் என சொல்லச் சொல்ல வயலுக்குள்  கொண்டு தள்ளுகின்றனர்.

அங்கே விக்ரமை சுடப்போனால் துப்பாக்கியில் தோட்டா இல்லை,அதை முதல் நாள் இரவே நக்ஸலைட்கள் துடைத்திருக்கின்றனர். ஒரே வழி இரும்புக்கழியால் மண்டையை உடைத்து ஆஸிட் கொண்டு இவன் முகத்தை சிதைத்து இவன் தான் சித்தார்த் என்று சொல்லி வழக்கை முடித்து விடலாம என்கிறார் இன்ஸ்பெக்டர் [ஷவ்ரப் ஷுக்லா].

அது தான் தன் வேலையைக் காத்துக்கொள்ள ஒரே வழி என்று நம்பிய கான்ஸ்டபிள் இரும்புக் கழியால் விக்ரமின் மண்டையை உடைக்கத் துவங்குகிறான், தொலைவில் அந்த தொகுதி எம்.பி கேட்டதற்கிணங்க ஆட்சித்துறை அதிகாரிகள் விக்ரமை காப்பாற்ற வந்தும், அங்கே விக்ரமின் மண்டை சிதைந்து விட்டிருக்கிறது. அதன் பின்னர் மிகச்சிறந்த கல்விமான் விக்ரம் தன் எஞ்சிய வாழ்நாளை மனநோயாளியாகக் கழிப்பதாகப் படம் முடியும்.

இப்படித்தான் டைகர் மேமன் என்னும் மகாக் கொடியவனுக்கும் எனக்கும் எந்தத தொடர்புமில்லை, என்று தன் வீட்டாருடன் 22 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்து சரணடைந்த யாகுப் மேமன், அகப்பட்டவனை தூக்கிலிடுவோம் என்னும் பழைய கொள்கைகளின் படி தூக்கிலிடப்படுகிறார்.

இந்த கொலை ஈரானிலோ, சவுதிஅரேபியாவிலோ அமெரிக்காவிலோ பாகிஸ்தானிலோ நடந்தால் அது ஆச்சர்யமல்ல, இந்தியா போன்ற நாட்டில் நடப்பது தான் அதிசயம்.ஆச்சர்யம்.உலகின் புருவத்தை உயர்ந்த வைக்கும். எத்தனையோ பார்த்து விட்டோம் , இதையும் பார்ப்போம், இங்கே யார் யாகுப் மேனன் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தாலும் வெகுஜனத்தின் முன்னே குற்றவாளி தான், உலகம் என்றும் அப்படித்தான்.

மக்களுக்கு யாராவது தூக்கில் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும், 1800களில் சதி என்னும் உடன்கட்டையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களே?!!!  ,அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது ஜில்லெட்டினில் வீழ்த்தப்பட்ட அறிஞர்கள் , எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், அவர்கள் மனைவி குழந்தைகள்  தலைகளை சதுக்கத்தில் கூடி குரூரமாக வேடிக்கை பார்த்தார்களே பெர்வெர்ட்டுகள், அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?!!! நாட்டில் எது எப்படி நடந்தாலும் அகப்பட்ட யாரையேனும்   தூக்கில் போட்டு விட வேண்டும்.

யாகுப் மேமனுக்கு சல்மான் கான் போன்ற குற்றப் பின்னணி உள்ள நடிகர்கள் வக்காலத்து வாங்கும் போது யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை என்னும் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.எனவே அவர்கள் வக்காலத்து வாங்காமல் இருப்பதே உத்தமம்.

யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டால் அவர் தான் இந்திய அரசால் தூக்கிலிடப்பட்ட முதல் சார்டட் அக்கவுண்டண்ட் ப்ரொஃபெஷனலாக இருப்பார். ஜூலை 30 அவருக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டால் பிறந்தநாளன்றே தூக்கிலிடப்ப்பட்டவர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் பெறுகிறார்.

http://geethappriyan.blogspot.ae/2013/07/black-friday-2004.html
https://en.wikipedia.org/wiki/Yakub_Memon
http://timesofindia.indiatimes.com/india/Yakub-Memon-does-not-deserve-to-be-hanged-top-intelligence-office-wrote/articleshow/48202387.cms
http://thewire.in/2015/07/17/why-yakub-memon-should-not-be-hanged-6662/

தெரு நாய்கள் படுகொலை தீர்வு என்ன?



https://www.youtube.com/watch?v=CPfaKXVnp30

தெரு நாய்களைப் பிடித்து கழுத்தில் சுருக்கிட்டுக் கொல்வதில் எனக்கும் உடன் பாடில்லை தான்,

 ஆனால் எத்தனையோ நாள் வேலை முடித்து இரவில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு  என் தெருவில் என் சொந்த வீட்டுக்குள் வண்டி ஓட்டிக்கொண்டு நுழைவதற்கு நான் பட்ட பாடுகள் அதிகம்.

தெரு என்பது மனிதர்கள் மட்டுமே வாழ வேண்டிய பகுதி அல்ல தான்.ஆனால் 1000 பேர் வசிக்கக்கூடிய தெருவில் 50 முதல் 100 தெரு நாய்கள் இருந்தால் என்ன ஆகும்?

நாம் தெருநாய்களின் மறு வாழ்விற்கு எல்லாவற்றுக்கும் ப்ளூக்ராஸையே நம்பியிருந்தால் வேலைக்காகாது.முனிசிபாலிட்டி காரர்களையும் நாம் குறை சொல்ல முடியாது,முனிசிபாலிட்டியில் நிலவும் ஊழல் மற்றும் ஆள் பற்றாக்குறையால் அவர்களால் தெருவில் வீசப்படும் குப்பைகளையே சரிவர அள்ள முடிவதில்லை.அவர்கள் அள்ளினாலும் குப்பை மீண்டும் மீண்டும் தெருக்களில் வீசப்படுகின்றன,இந்த குப்பை கூளங்கள் தான் தெரு நாய்கள் புகலிடமாக விளங்குகின்றன.

இதற்கு  தீர்வுகள் உண்டு,

எல்லோரும் தம் வீட்டுக் குப்பையை குப்பை வண்டிக்காரர்கள் வருகையில் அவர்களிடம் மட்டும் கொட்டுவது,

அப்படி கொட்டத் தவறி விட்டுவிட்டால் அதை குப்பைத் தொட்டி எங்கே இருக்கிறதோ அங்கே தேடிப் போய் அதன் உள்ளே மட்டும் கொட்டுவது.இதன் மூலம் குப்பையைக் கிளறி தின்று கொழுக்கும் நாய்கள் வேறு இடம் தேடிச் செல்லும்,குப்பையே கிடைக்காத பட்சத்தில் அருகிவிடும்.

 நாம் அனைவரும் வீட்டுக்கு ஒரு தெரு நாய் குட்டியை தத்தெடுப்பது, அதற்கு தடுப்பு ஊசிகள் போட்டு,தினமும் அன்புடன் பேணி வளர்ப்பது, இதன் மூலம் குழந்தைகளிடமும் பாதுகாப்பாக நாய் வளர்க்கும் ஆர்வத்தை வளர்க்க முடியும்.இதன் மூலம் உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல் வளரும்.முதியவர்களின் தனிமை தவிர்க்கப்படும், ஏக்கம்,தற்கொலைகள் கூட தவிர்க்கப்படும்.

நடிகை த்ரிஷா ,விஷால் மற்றும் பெரிய சிறிய எழுத்தாளர்கள் , ப்ளாக்கர்கள் ,கவிஞர்கள் என்று மிருக ஆர்வம் கொண்ட பிரபலங்கள்  வெளிநாட்டு ரக நாய்களை அதிக விலை கொடுத்து வாங்கி வளர்ப்பதை விட்டு  நம் இந்திய பரையா நாய்களை [pariah dog]   வளர்க்க வேண்டும்,இவை மிகுந்த புத்திசாலித்தனம் கொண்ட நாய் வகைகள், சீற்றத்திலும் எந்த வெளிநாட்டு நாய் வகைகளுக்கும் இளைத்ததல்ல, மேலும் இது வெளிநாட்டு நாய்களைப் போல வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்து குட்டிகள் ஈனுவதில்லை அதற்கென்றே September-October மாதத்தை தேர்வு செய்து இனப்பெருக்கம் செய்வது என்பதும் அதிசயம் .https://en.wikipedia.org/wiki/Indian_pariah_dog

பெரிய நடிகர்களின்  பரந்து விரிந்த பண்ணை வீடுகளில் ஆதரவற்ற வயதான நாய்களை நூற்றுக்கணக்கில் பண்ணை அமைத்தும் வளர்க்கலாம். அங்கே நாய்களின் திறமைகளை ஊக்கப் படுத்த பயிற்சி மையமும் அமைக்கலாம். நாய்களுக்கான சுகாதார மையமும் அமைக்கலாம்.இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

இயக்குனர் பாலு மகேந்திரா இது போன்ற எளிமையான நாயைத் தான் வளர்த்து நேசம் காட்டினார்.இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இதை ஆக்க பூர்வமாக செய்து வருகிறார்,தன் வீட்டில் சுமார் 20 தெரு நாய்களை வளர்த்து வருகிறார்.

இதன் மூலம் நம் வீட்டுக்கும் காவலாயிற்று,நம் தெருவில் நாய்கள் பெருகுவதும் கட்டுக்குள் வரும்.நாய்கள் உண்மையிலேயே மனிதர்களின் தோழன்.ஆனால் அளவுக்கு மிஞ்சுகையில் போராட்டம் தான்.

வியாபம் = வியாபாரம்



வியாபம்=வியாபாரம்

ஆஷிஷ் சதுர்வேதி என்னும் இளைஞரைப் பற்றி படிக்க படிக்க ஆச்சரியம் தொற்றிக்கொள்கிறது, வியாபம் ஊழலின் ஊற்றுக்கண்ணை வெளிக்கொணர்ந்த ஒரு ஏழை இளைஞன்.

வியாபம் ஊழலை எளிமையாக விளக்க வேண்டும் என்றால் வசூல்ராஜா MBBS படத்தை எடுத்துக்கொள்ளலாம். அதில் வரும் ப்ரொஃபஸர் க்ரேஸி மோகன் பக்கிரி கமல் ஹாசனின் மிரட்டலுக்கு பயந்து தலையில் விக் வைத்துக்கொண்டு வசூல்ராஜாவுக்கு பதிலாகச் சென்று மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிவிட்டு வருவார் அல்லவா?

சதுர்வேதியும் அவரின் ஆயுள்-பாது காவலரும்

அது போன்றுத் தான் இந்த வியாபம் ஊழலில் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு  நன்றாகப் படிக்கும்  மாணவர்களும், லெக்சரர்களும், தகுதியற்றவர்களுக்கு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தும்,  பேப்பர் சேஸிங் செய்தும் வெற்று தேர்வுத் தாள்களை சரியான விடைகள் கொண்டு நிரப்பி தற்குறிகளே அங்கு தேர்வான அவலம் கடந்த 10 ஆண்டுகளில் அரங்கேறியுள்ளது.

இப்படி தேர்வாகி வந்தவர்கள் தான் அநேகம் பேர் மத்தியப் பிரதேச மாநிலத்தில்  மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், காவல்துறை ,வனத்துறை , பொதுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்,  இது எப்படி இருக்கு?!!!

இந்தியனாக இருப்பதில் மிகவும் அருவருப்படையும் தருணம் இந்த வியாபம் ஊழலைப் பற்றி படிக்கும் தருணம் என்றால் மிகையில்லை. நம்மூரிலும் தான் ஊழல் நடக்கிறது,ஆனாலும் பொதுப்பணி நுழைவுத் தேர்வுகளில் இது போல BROTHEL செய்யவில்லை.இத்தனைக்கும் இங்கே கல்வித்தந்தைகள் அந்நாளைய சாராய வியாபாரிகள் தான்.
அவலட்சணம் பொருந்திய வியாபம் லோகோ

நம் இந்திய கல்வி நிறுவனங்கள் அகில உலக அளவில் நூறாம் இடம் கூட பிடிக்க முடியாமல் போனது இது போன்ற துடைக்க முடியாத களங்கங்களால் தான்.

வியாபம் ஊழலை வெளிக்கொணர்ந்த ஆஷிஷ்  சதுர்வேதியின் ஃபேஸ்புக் பக்கம்
https://www.facebook.com/pages/Ashish-Chaturvedi-The-youngest-whistle-blower-of-Vyapam-Scam/708858335908572

வியாபம் ஊழலைப் பற்றி படிக்க
https://en.wikipedia.org/wiki/Vyapam_scam

வியாபம்[வியாபாரம்] இணையத்தளம்
http://www.vyapam.nic.in/

பெனடிக்ட் ஜெபகுமார் மற்றும் பெங்களூரு டயர் மாஃபியா



நீங்கள் பெங்களூருவில் 2 வீலர் அல்லது கார் ஓட்டுகிறீர்கள் என்றால் இவருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறீர்கள்.

பஞ்சர் கடைக்காரர்களே சாலையிலும், தெருவிலும் ஆணிகளைப் போட்டு,  நம் வாகனங்களை பஞ்சர் செய்து விட்டு , மிகுந்த பிகு செய்த பின் பஞ்சரும் ஒட்டி , கூடவே மட்டமான டயர் ட்யூபையும்  நம் தலையில் அநியாய விலைக்கு கட்டி ஏமாற்றுவார்கள் என நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.இப்போது பார்த்தும் விட்டேன்.

பெங்களூருவைச் சேர்ந்த இந்த நல்ல மனிதர் பெனடிக்ட் ஜெபகுமார் அந்த டயர் மாஃபியாவை கையும் களவுமாக காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்ததுடன் நில்லாமல் தினமும் தான் அலுவலகம் போகும் பாதையில் இருக்கும் ஆணிகளை பொறுக்கி சேகரித்து படம் எடுத்து தன் தளத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார், காவல் துறையினரையும் , மேயரையும் tag செய்கிறார், அவரை வாழ்த்துவோம். அவரின் தளம் https://www.facebook.com/MyRoadMyResponsibility?fref=ts

பேராசை கொண்ட பஞ்சர் கடை ஆசாமிகளே,இந்த பிழைப்புக்கு பிச்சை எடுக்கலாம் தானே?!!!

http://www.thenewsminute.com/article/five-kilos-nails-three-years-mans-hobby-has-saved-bengaluru-many-tyre-punctures

Pu-239 [2006] [ஹாலிவுட்]


Pu-239 படத்தின் துவக்கத்தில் வரும் 80களின் சோவியத் ரஷ்யாவின் புகழ்பெற்ற அரசியல் நையாண்டி இது .

quotation that was popular in Russia under Boris Yeltsin: "Two dogs meet on the street in Moscow. The first dog says, 'How are things different for you with Perestroika?' And the second dog says, 'Well, the chain is still too short, and the food dish is still too far away ... But now we are allowed to bark as much as we want.

போரிஸ் எல்ட்ஸின் ஆட்சியில் இரு நாய்கள் தெருவில் சந்தித்துக் கொள்கின்றன, வெளிப்படை சீர்திருத்தம் அமல் படுத்தப் பட்ட பின் வாழ்க்கை எப்படிப் போகிறது? !!!

அலுத்துக்கொண்ட மற்ற நாய் , ஒரு பெரிய மாற்றமுமில்லை, முன்பைப் போன்றே கழுத்துச் சங்கிலியின் நீளம் குட்டை, உணவுத்தட்டின் தூரமும் மிக அதிகம், ஆனால் எத்தனை வேண்டுமானாலும் குரைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறோம் என்கிறது.

இது எந்நாட்டுக்கும் எம்மக்களுக்கும் பொருந்தக்கூடிய சிலேடை, எந்நாட்டிலும் தலைவர்கள் கோமாளிகளாகத் தான் பார்க்கப்படுகின்றனர்,
தலைவர்கள் மக்களை முட்டாள்களாகத் தான் பார்க்கின்றனர்.

மிக அருமையான உலக சினிமா இது, ரஷ்யாவில் அணு ஆயுதங்களுக்கு மூலப் பொருட்கள் செய்யும் செரிவூட்டு ஆலைகளின் ஆபத்தான பாதுகாப்பற்ற நிலை பற்றி ஒரு வசனம் வரும், ரஷ்யாவில் உருளைக்கிழங்கு மூட்டை கிடங்கில் இருக்கும் காவல் கூட 100 வருடப் பழமையான ரேடியம், பளூட்டோனியம் செரிவூட்டல் ஆலைகளில் இராது.

கள்ளச் சந்தையில் சர்வ சாதாரணமாக தீவிரவாத இயக்கங்களுக்கு எப்படி பளூட்டோனியம் கிடைக்கிறது? என்பன பற்றி விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் பேசுகிற படம்,

அமெரிக்காவின் முதலாளித்துவத்தால் விளைந்த பேரிடரான ரேடியம் பெண்கள் பற்றிய ஆவணப்படமும் படத்தின் ஊடே வருகிறது,

கல்பாக்கம் , கய்க்கா, கூடன்குளம் போன்ற பெரிய அணுக்கூடங்களில் நடக்கும் விபத்துக்கள் , அனுதினம் அத்தொழிலாளிகள் சந்திக்கும் ரேடியேஷன் பாய்ஸனிங் பிரச்சனைகள் போன்றவற்றை மக்களாகிய நாம் எளிதில் விளங்கிக் கொள்ள வைக்கும் படைப்பு இது. அவசியம் பாருங்கள்.

Directed by Scott Z. Burns
Produced by Charlie Lyons
Miranda de Pencier
Guy J. Louthan
Written by Scott Z. Burns
Based on PU-239 and Other Russian Fantasies
by Ken Kalfus
Starring Paddy Considine
Radha Mitchell
Oscar Isaac
Music by Abel Korzeniowski
Cinematography Eigil Bryld
Edited by Tatiana S. Riegel
Leo Trombetta
Distributed by Beacon Pictures
HBO Films
Release dates
  • September 12, 2006 (Toronto International Film Festival)
Running time
97 mins
Country United Kingdom
Language English

பாகுபலி இந்தியாவின் பெருமைமிகு சினிமா


பாகுபலி பிரம்மாண்டம் என்னும் சொல்லுக்கே காப்புரிமை பெற்றிருக்கும் படம் என்றால் மிகையில்லை, படம் பார்ப்பவரை கண் இமைக்க மறக்க வைக்கும் படம் சமீபத்தில் இதுவாகத் தான் இருக்கும்.

இயக்குனர் ராஜ்மவ்லி இந்திய சினிமா ரசிகர் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டார், திரும்பத் திரும்ப படம் பார்க்கச் செல்லும் ரிப்பீட்டட் ஆடியன்ஸே இதற்கு சாட்சி, 

ஒருவரை விமர்சகர் முகமூடியை கிழித்தெறிந்து விட்டு பார்க்க வைக்கும் படம்,250 கோடி பணம் செலவிடத் தயாரிப்பாளர் தயாராக இருந்தால் மட்டும் யாராலும் இப்படி படம் எடுத்து விட முடியாது, மிகப் பெரிய பொருப்பு இது, இயக்குனருக்கு அபாரமான கற்பனை, அழகுணர்ச்சி, ஆளுமைத்திறன் அமைந்திருக்க வேண்டும், இயக்குனரின் கற்பனைத் திறனை செல்லுலாய்டுக்கு மாற்ற அபாரமான பயிற்சி வேண்டும், 

அப்பயிற்சியை இயக்குனர் ராஜ் மவ்லி தன் முந்தைய மகதீரா, நான் ஈ படங்கள் மூலமே படிப்படியாக பெற்றிருக்கிறார்,

பாகுபலியில் திரிசூல வியூகம் என்னும் போர் யுத்தியை மினியேச்சர் சிப்பாய்கள் தளவாடங்கள் கொண்டு விளக்கியும் அதை நேர்த்தியுடன் செயல்படுத்தியும் இருந்தனர்.

காலகேயர்களின் ஆஜானுபாகுவும் பயங்கரமும் பிரமிக்கும் படி இருந்தது,காலகேயர்களின் அரசனும் ,வீரர்களும்,விற்போரும் 300 படத்தில் வந்த கரிய உயரமான பெர்ஷிய நாட்டு அரசன் Xerxes,யும் அவன் போர் வீரர்களையும் நினைவூட்டினர்,ஆனால் பாகுபலியின் போர்காட்சிகள் தனித்துவமாக அமைந்திருந்தது எங்கும் அனிமேஷன் துருத்திக் கொண்டு தெரியாததும் அதன் சிறப்பு.

படத்தில் மிகச்சிறிய குறைகள் இருந்தாலும் அவை படத்தின் பிரம்மாண்டத்தின் முன் தவிடு பொடியாகிறது, படம் ஐமேக்ஸில் பார்த்து படத்துடன் ஒன்றுங்கள். படத்தைக் கழுவி ஊற்றிக் காயப்போடுபவர்கள் பாகுபலி இரண்டாம் பாகத்துக்கும் கொஞ்சம் மீதம் வைத்துக் கொள்ளுங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)