பிக் ஃபிஷ் என்னும் இத் திரைப்படம் ஃபாண்டசி-அட்வென்சர் வகையை சேர்ந்ததாகும். இயக்குநர் டிம் பர்டன்[Tim Burton] ஹாலிவுட்டின் முக்கியமான சமகால இயக்குனராவார். இவருடைய முந்தைய படைப்புகளான எட் வுட், ஸ்வீனி டாட் த டெமான் பார்பர் ஆஃப் ஃப்ளீட் ஸ்ட்ரீட், அலைஸ் அண்ட் ஒண்டர்லாண்ட், ஸ்லீப்பி ஹாலோ போன்றன மிகச்சிறந்த வரவேறப்பை பெற்றவையாகும். இவரின் படைப்புகள் பெரும்பாலும் ஃபேண்டஸி மற்றும் மாயாஜாலம், மந்திரஜாலம், பாடல்களுடனான கதைசொல்லல்கள் நிறைந்த, பரவசங்கள் அளிக்கும் படைப்புக்களாவே இருக்கின்றன. இப்படம் அமெரிக்க எழுத்தாளர் டேனியல் வால்லேஸ் எழுதி 1998 ஆம் வருடம் வெளியான பிக்ஃபிஷ் என்னும் நாவலைத் தழுவி ஜான் ஆகஸ்டின் திரைக்கதையில் ,டிம் பர்ட்டன் இயக்கி 2003 ஆம் வருடம் வெளிவந்தது. உலகெங்கும் சினிமா ரசிகநெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தது.
திரைக்கதையில் ஒரு யுத்தி இருக்கிறது, படத்தில் காட்டப்படும் நம்பமுடியாத விஷயங்களைக்கூட எதிரே அமர்ந்துள்ள பார்வையாளனின் மூளை முழுமையாக நம்புகின்ற வகையில் , திரைக்கதையை புத்திசாலித்தனமாக அமைப்பதன் மூலம் அவனை மெல்ல உள்ளே இழுத்து கட்டிப் போட்டுவிடமுடியும் என்பதே அது!!!.
நாம் எத்தனையோ தந்தைகளைப் பற்றிய கதைகளைக் கேட்டிருப்போம், சிலவற்றை திரைப்படமாகவும் பார்த்திருப்போம். அவற்றிலிருந்து விலகி இப்படி ஓர் வித்தியாசமான தந்தை மகன் கதையை பார்ப்பது இதுவே முதல் முறையாய் இருக்கும். எட்வர்ட் ப்ளூம் தன் மகன் வில் ப்ளூமுக்கு சிறுவயது முதலே வீரபிரதாபக் கதைகளாக சொல்லி வருகிறார். எதைப்பற்றி மகன் பேச வாய் எடுத்தாலும் அதைப்பற்றி ஒரு கதையை தன்னை மையப்படுத்தி சொல்ல ஆரம்பிக்கிறார். எல்லா கதையிலுமே இவருக்கு கதாநாயகன் வேடம் தான். இவரால் உலகில் முடியாத தீரச்செயலே இல்லை என்கிறார். முன்னொரு காலத்தில்....!!!. என்று கதை சொல்ல வாயெடுக்கும் அவரை முதல்முறையாக சந்திக்கும் நபருக்கு வேண்டுமானால் அக்கதைகள் பிடிக்கக்கூடும் , ஆனால் பலநூறு முறை அதே கதைகளை கேட்ட வில் ப்ளூமால் ஒருகட்டத்தில் அக்கதைகளை நம்பவோ சகித்துக் கொள்ளவோ முடியவில்லை.ஏனென்றால் அவன் வளர்கிறானாம்.!!!!
திரைக்கதையில் ஒரு யுத்தி இருக்கிறது, படத்தில் காட்டப்படும் நம்பமுடியாத விஷயங்களைக்கூட எதிரே அமர்ந்துள்ள பார்வையாளனின் மூளை முழுமையாக நம்புகின்ற வகையில் , திரைக்கதையை புத்திசாலித்தனமாக அமைப்பதன் மூலம் அவனை மெல்ல உள்ளே இழுத்து கட்டிப் போட்டுவிடமுடியும் என்பதே அது!!!.
![]() |
இயக்குனர் டிம் பர்ட்டன் |
வில் ப்ளூமின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எட்வர்ட் ப்ளூம் தன் விருந்தினர்களுக்கும் என் மகன் பிறந்த தினத்தில், நான் என் திருமண மோதிரத்தை தூண்டிலில் இணைத்து யாராலும் பிடிக்க முடியாத பெரிய கொழுத்த மீன் ஒன்றைப் பிடித்தேன் !!!! என மீண்டும் அக்கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.....!!!!. எல்லோருமே அதை ஆர்வமாகக் கேட்டாலும் மகன் வில் ப்ளூம் மிகவும் எரிச்சலடைகிறான். அம்மாவும் உறவினர்களும் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் காதல் மனைவி ஜோசப்பின்னை கூட்டிக்கொண்டு , வீட்டை விட்டே கிளம்பிவிடுகிறான்.
![]() |
எட்வர்டாக இவான் மெக் க்ரகொர் |

இந்த வீரபிரதாபங்கள் மிக மிக அழகாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. நம்ப முடியாதவற்றை கூட நம்ப வைத்துபடம் பார்க்கும் ஒருவரை


அங்கே அதற்கு துணையாக இருந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர் சகோதரிகளான பிங் & ஜிங்கை தன்னுடன் கூட்டிக்கொண்டு அமெரிக்கா

அந்த பணத்தைக்கொண்டு தன் காதல் மனைவிக்கு ஒரு அழகிய கனவு இல்லத்தைக் கட்டிக் கொடுக்கிறான் ப்ளூம், பின்னொரு நாளில் தான் முதன் முதலில் கண்டுபிடித்த உலகின் மிகஅழகிய கிராமம், பொலிவிழந்து , அழுக்காகி, பாழடைந்ததைக் கண்டவன் அதை புதுப்பொலிவுடன் புதுபித்துக் கொடுக்கிறான் ப்ளூம். அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீடுமே கடனில் மூழ்கியிருக்க, எட்வர்ட் தன் பணத்தைக்கொண்டு ஒவ்வொருவர் கடனையும் அடைத்து, அந்த பத்திரங்களை அவரவரிடமே ஒப்படைக்கிறான். தன் மகன் வில் ப்ளூம் பிறந்த அதே தினத்தில் ஒரு பெரிய கொழுத்த மீனைப் பிடிக்கிறான்!!!! இப்படியாக வில் ப்ளூம் முன்பு அப்பா எட்வர்ட் ப்ளூம் தன்னிடம் பலமுறை பகிர்ந்த வீர பிரதாபங்களை நினைத்துப் பார்க்கிறான்.
தன் தந்தையிடம் போய் அப்பா!!! , நீங்கள் இதுவரை உங்களுக்கு நடந்ததாக சொன்ன கதைகள் எல்லாம் பொய்கள், புரட்டுக் கதைகள் என்று எனக்குத் நன்றாய் தெரியும். உங்களைப் பற்றிய உண்மை எனக்குத் முழுமையாகத் தெரிய வேண்டும். இன்னும் சில நாளில் எனக்கு ஒரு மகன் பிறப்பான் . என் அப்பாவைப் பற்றி முழுமையாகத் தெரியாத நான் எப்படி என்னைப் பற்றி அவனுக்குச் சொல்ல முடியும் ?!!! என கேட்கிறான். அதற்கு எட்வர்ட் ப்ளூம் நிதானமாக, நான் பிறந்த தினத்திலிருந்து நான் நானாகவே தான் இருந்திருக்கிறேன், யாரோடும் எதற்காகவும் பொய் சொன்னதில்லை. அதை இவ்வளவு பெரியவனாக வளர்ந்து நிற்கும் நீ தெரிந்து கொள்ள வில்லையென்றால் அது உன் தவறேயன்றி வேறில்லை என்கிறார். மிகவும் எரிச்சலடைகிறான் வில்ப்ளூம்.
பின் வரும் நாட்களில் தன் தந்தை சொன்ன வீரபிரதாபக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களை கண்டுபிடிக்க முயல்கிறான் வில் ப்ளூம். முதல் கட்டமாக தன் தந்தை கண்டுபிடித்த ஊரான ஸ்பெக்டருக்கு செல்கிறான் வில். அங்கே வைத்து தன் தந்தை சொன்ன ஜென்னி என்னும் பெண்ணை சந்திக்கிறான். அவள், எட்வர்ட் அவர் வாக்களித்த படியே கிராமத்துக்கு திரும்பி வந்ததாகவும், சிதிலமடைந்திருந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டையும் புணரமைத்துத் தந்ததாகவும் அதிசயத்துடன் சொல்கிறாள். வில் ப்ளூமாக இவற்றை நம்பவே முடியவில்லை,தன் தந்தைக்கும் அப்பெண்மணிக்கும் ஏதோ உடற்தொடர்பு இருக்க வேண்டும்,அதனால் தான் அப்பெண்மணி தந்தையாரின் பொய்களை நியாயப்படுத்துகிறாள்.என்று நம்புகிறான்.
தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது. அன்று இரவு எட்வர்ட் ப்ளூமுடன் தங்குகிறான், மகன் வில் ப்ளூம். அங்கு வரும் மருத்துவர்

அன்றைய நாள் மதிய வேளை மூன்று மணிக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் சாதாரணமாகத் தான் நீ பிறந்தாய்!!!. மருத்துவரால் தேதி கணிக்கப்பட்டு, எதிர்பார்க்கப்பட்ட ஒரு வாரத்திற்கு முன்பே நீ பிறந்து விட்டமையால், வெளியூருக்கு சென்றிருந்த உன் தந்தையால் நீ பிறக்கையில் அருகே இருக்க இயலவில்லை. அந்த குறையை ஈடு செய்யவே தன் திருமண மோதிரத்தை தூண்டிலில் இணைத்து பெரிய அரியவகை மீனான உன்னைப் பிடித்ததாக பெருமையுடன் அனைவரிடமும் கூறிவந்திருக்கிறார் எட்வர்ட். நடந்த உண்மையை விட உன் தந்தையின் புனையப்பட்ட கதை தான் எனக்குப் பிடிக்கிறது , அது ஏன் உனக்குப்பிடிக்கவில்லை?!!! என்று வியக்கிறார்.
இப்படி தன் தந்தை சொன்னது அனைத்தும் சற்றே மிகைப் படுத்தி சொல்லப் பட்ட உண்மைகளே என்பதை அறிகிறான் வில் ப்ளூம். தன் தந்தை ஒரு சிறந்த கதை சொல்லி, இது அநேகருக்கு கிடைக்காத பாக்கியம், ஆனால் அவரை நிறைய முறை தன் ஆர்வமின்மையால் நோகடித்திருக்கிறோம் என்று எண்ணி வருந்துகிறான் . கடைசியில் தன் தந்தைக்கு அருகே சென்று அமர்ந்தவன் அவரால் பேசமுடியாததால் கதை சொல்லமுடியாமல் போக, அவர் இறப்பைப் பற்றிய கதையை அவரின் படுக்கையில் அமர்ந்து அவருக்கே திரும்ப சொல்கிறான். அங்கே கதை தீவிரமடைந்து எட்வர்ட் & வில் கண்களில் பரவசம் தரும் காட்சியாக விரிகிறது. வில்ப்ளூமும் எட்வர்டும் ஊருக்கு அருகே ஓடும் ஒரு ஆற்றை நோக்கி காரில் வேகமாக பயணிக்கின்றனர், அங்கே ஆற்றை நெருங்கியதுமே எட்வர்ட்டை மகன் வில் கைகளில் தூக்கிக்கொள்கிறான், தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு ஆற்றுக்குள் போகும் வழியில் எட்வர்டின் நண்பர்கள் அனைவரும் குறுக்கிட்டு,மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒருவர் பின் ஒருவராக எட்வர்டுக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்புகின்றனர்.இப்படி ஒரு மரணம் தழுவுதலை நாம் வாழ்நாளில் பார்த்திருக்கமாட்டோம்.
ஆற்றுக்குள் முழ்ங்கால் தண்ணீரில் இறங்குகிறான் வில். அங்கே தன் அம்மா சாண்ட்ரா எட்வர்டை நோக்கி இதழ்மலர்ந்து சிரித்தபடி இருக்க, எட்வர்ட் தன் திருமண மோதிரத்தை எச்சில் கொண்டு ஈரப்படுத்தி பின்னர் கழற்றி அவளிடம் தந்துவிடுகிறார். வில் அங்கே நட்டாற்றுக்குள் சென்றதும் அவரை அப்படியே நீரில் ஒரு மீனை விடுவது போல் விடுகிறான், நீரில் மெல்ல மூழ்குகிறார் எட்வர்ட். வில் இப்போது அப்பாவை மூழ்கடித்த இடத்தில் ஒரு பெரிய கொழுத்த மீன் சுற்றிக்கொண்டு வேகமெடுத்துப் போவதை பார்க்கிறான். இப்போது நாம் மருத்துவமனையைப் பார்க்கிறோம். எட்வர்டும் நெடுநாட்கள் கழித்தேனும் மகன் வில் தன்னை , அவன் மேல் வைத்துள்ள தன் பாசத்தை புரிந்து கொண்ட மகிழ்ச்சியிலும் திருப்தியிலும் மெல்ல அனுபவித்து கண்கள் மூடி இறக்கிறார் .
மறுநாள், எட்வர்டின் இறுதி ஊர்வலம் நடக்கிறது, அன்று நடந்ததைப்போன்ற ஒரு நிகழ்வை வில் ப்ளூம் தன் வாழ்நாளில் சந்தித்ததேயில்லை. அன்று அவனுக்கு அடுக்கடுக்கான இன்ப அதிர்ச்சிகள் காணக்கிடைத்தன. தந்தை எட்வர்ட் ப்ளூமுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு யாருக்கும் சொல்லி அனுப்பாமலே , தந்தை சொன்ன வீரபிரதாபக் கதைகளில் வந்த மாந்தர்களை ஒன்றன் பின் ஒன்றாக சந்திக்கிறான் வில் ப்ளூம். முதலில் அந்த ஏழு அடி ராட்சத மனிதன்.
ஆற்றுக்குள் முழ்ங்கால் தண்ணீரில் இறங்குகிறான் வில். அங்கே தன் அம்மா சாண்ட்ரா எட்வர்டை நோக்கி இதழ்மலர்ந்து சிரித்தபடி இருக்க, எட்வர்ட் தன் திருமண மோதிரத்தை எச்சில் கொண்டு ஈரப்படுத்தி பின்னர் கழற்றி அவளிடம் தந்துவிடுகிறார். வில் அங்கே நட்டாற்றுக்குள் சென்றதும் அவரை அப்படியே நீரில் ஒரு மீனை விடுவது போல் விடுகிறான், நீரில் மெல்ல மூழ்குகிறார் எட்வர்ட். வில் இப்போது அப்பாவை மூழ்கடித்த இடத்தில் ஒரு பெரிய கொழுத்த மீன் சுற்றிக்கொண்டு வேகமெடுத்துப் போவதை பார்க்கிறான். இப்போது நாம் மருத்துவமனையைப் பார்க்கிறோம். எட்வர்டும் நெடுநாட்கள் கழித்தேனும் மகன் வில் தன்னை , அவன் மேல் வைத்துள்ள தன் பாசத்தை புரிந்து கொண்ட மகிழ்ச்சியிலும் திருப்தியிலும் மெல்ல அனுபவித்து கண்கள் மூடி இறக்கிறார் .
மறுநாள், எட்வர்டின் இறுதி ஊர்வலம் நடக்கிறது, அன்று நடந்ததைப்போன்ற ஒரு நிகழ்வை வில் ப்ளூம் தன் வாழ்நாளில் சந்தித்ததேயில்லை. அன்று அவனுக்கு அடுக்கடுக்கான இன்ப அதிர்ச்சிகள் காணக்கிடைத்தன. தந்தை எட்வர்ட் ப்ளூமுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு யாருக்கும் சொல்லி அனுப்பாமலே , தந்தை சொன்ன வீரபிரதாபக் கதைகளில் வந்த மாந்தர்களை ஒன்றன் பின் ஒன்றாக சந்திக்கிறான் வில் ப்ளூம். முதலில் அந்த ஏழு அடி ராட்சத மனிதன்.
இரண்டாவதாக ஒரே மாதிரி இருக்கும் உடலுக்கு மேலே ஒட்டிப்பிறந்த கொரிய இரட்டைச் சகோதரிகள், தங்களின் இரண்டே கால்களின் நடந்து வந்து மரியாதை செலுத்துவதைப் பார்த்து அக மகிழ்கிறான். நெக்குறுகியவன்,வெட்கித் தலைகுனிகிறான். தந்தைமீது சொல்லொனா பக்தி பிறக்கிறது, இதோ இப்போது மூன்றாவதாக தந்தை எட்வர்டுடன் ராணுவத்தின் ஒன்றாக பணியாற்றிய ராணுவ வீரர்களும் அங்கே வருகின்றனர். இதுவரை தன் பெருமையை தானே கூறக்கேட்டிருந்த வில் ப்ளூம் முதல்முறையாக தந்தையின் பெருமைகளை பிறத்தியார் கூறக் கேட்கிறான். அவர்கள் நிறுத்தாமல் எட்வர்ட் ப்ளூமின் பெருமைகளைப் பேசுகின்றனர். புளங்காகிதம் அடைகிறான் ப்ளூம்.
அனைவரும் ஒருமனதாக "Edward was a Social Person" என்று போற்றுகின்றனர். சிறுவயது முதலே வீரபிரதாபங்கள் பொருந்தியக் கதைகளை சொல்லும் தன் தந்தை போல இவ்வுலகில் எத்தனை பேருக்கு கதைசொல்லி தந்தை கிடைப்பார்கள் என்று வியக்கிறான் வில் ப்ளூம். தன் தந்தையை தனக்கு கிடைத்த பொக்கிஷமாக கருத ஆரம்பித்துவிட்டான் . தன் தந்தையின் வீரபிரதாபக் கதைகள் அழிந்துவிடக்கூடாது என்று அவன் தன் மகன்களுக்கும் அவற்றை சொல்கிறான். வில் ப்ளூமின் மனமாற்றம் மனைவிக்கும் அவன் அம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. தந்தையைப்போல ஒரு சாகச வீரனாக இல்லாவிட்டாலும் கைதேர்ந்த ஒரு கதைசொல்லியாக ஆகிக்கொண்டிருக்கிறான் வில்ப்ளூம்.
என்ன ஒரு பரவசமளிக்கும் படம் இது?!!!இவ்வளவு நேரம்,எப்படி இப்படி ஒரு நம்ப முடியாத மாயாஜாலம் போன்ற திரைப்படத்தை,அனுபவித்து ஊன்றி பார்த்தோம் என்று ஆச்சர்யப்படவைக்கும். படம் முடிந்தவுடனும் காதுகளில் ரீங்காரமிடும் டான்னி எல்ஃப்மேனின் அற்புத இசையைப் பற்றி சொல்லிகொண்டே போகலாம். பிலிப் ரூஸ்லாட்டின் அபாரமான ஒளிப்பதிவு வாழ்நாளில் ஒருவரால் மறக்கமுடியாது. இயக்குனர் டிம் பர்ட்டனின் வாழ்நாள் சாதனையாக இப்படத்தின் இயக்கத்தை சொல்லிக்கொள்ளலாம்.நடிகர் ஜேம்ஸ் மெக் க்ரகொர் மிகச்சிறந்த நடிகர்.தந்தை பாத்திரத்துக்கு மிகவும் நன்றாக பொருந்தினார்.வாழ்நாளில் படம் பார்த்த யாரும் மறக்க முடியாத படம் இது.
படத்தின் இறுதிக்காட்சியின் காணொளி யூட்யூபிலிருந்து அவசியம் பாருங்கள்;-
என்ன ஒரு பரவசமளிக்கும் படம் இது?!!!இவ்வளவு நேரம்,எப்படி இப்படி ஒரு நம்ப முடியாத மாயாஜாலம் போன்ற திரைப்படத்தை,அனுபவித்து ஊன்றி பார்த்தோம் என்று ஆச்சர்யப்படவைக்கும். படம் முடிந்தவுடனும் காதுகளில் ரீங்காரமிடும் டான்னி எல்ஃப்மேனின் அற்புத இசையைப் பற்றி சொல்லிகொண்டே போகலாம். பிலிப் ரூஸ்லாட்டின் அபாரமான ஒளிப்பதிவு வாழ்நாளில் ஒருவரால் மறக்கமுடியாது. இயக்குனர் டிம் பர்ட்டனின் வாழ்நாள் சாதனையாக இப்படத்தின் இயக்கத்தை சொல்லிக்கொள்ளலாம்.நடிகர் ஜேம்ஸ் மெக் க்ரகொர் மிகச்சிறந்த நடிகர்.தந்தை பாத்திரத்துக்கு மிகவும் நன்றாக பொருந்தினார்.வாழ்நாளில் படம் பார்த்த யாரும் மறக்க முடியாத படம் இது.
படத்தின் இறுதிக்காட்சியின் காணொளி யூட்யூபிலிருந்து அவசியம் பாருங்கள்;-
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by | Tim Burton |
---|---|
Produced by | Dan Jinks Bruce Cohen Richard D. Zanuck |
Screenplay by | John August |
Based on | Novel: Daniel Wallace |
Starring | Ewan McGregor Albert Finney Billy Crudup Jessica Lange Alison Lohman Steve Buscemi Danny DeVito Helena Bonham Carter Hailey Anne Nelson |
Music by | Danny Elfman |
Cinematography | Philippe Rousselot |
Editing by | Chris Lebenzon |
Studio | Jinks/Cohen Company The Zanuck Company Tim Burton Productions |
Distributed by | Columbia Pictures |
Release date(s) | December 10, 2003 |
Running time | 126 minutes |
Country | United States |
Language | English |