யாகூப் மேமனுக்கு தூக்கு



யாகுப் மேமனின் வழக்கு மிகவும் சிக்கலானது,எப்படி குடும்பத்தில் ஒருவர் செய்யும் தேச துரோக குற்றம்  அக்கொடிய குற்றவாளி சட்டத்தின் பிடியில் அகப்படாத நிலையில் வலியச் சென்று சரணடைந்த குடும்ப உறுப்பினரை  காவு வாங்கும் என்பதன் சிறந்த எடுத்துக்காட்டு.

யாகுப் மேமன் மிகச் சிறந்த கல்வி மானாக இருந்திருக்கிறார், அவரின் அதீத முன் எச்சரிக்கையும் சிறந்த இந்தியக் குடிமகன் கனவுமே  அவருக்கு எமனாக வாய்த்து விட்டது.

இதைப் பற்றி சிந்தித்ததில் ஹஸாரான் க்வாய்ஷெய்ன் அய்ஸி  [Hazaaron Khwaishein Aisi ] படத்தில் வரும் விக்ரம் [ஷைனி அகுஜா] கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறது,விக்ரம் வேகமாய் வளர்ந்து வரும் கார்பொரேட் மற்றும் அரசியல் தரகன். இந்திய எமர்ஜென்ஸியின் உச்சத்தில்  விக்ரமின்  ஒருதலைக் காதலி கீதாவின் கணவன் நக்ஸலைட் சித்தார்த்தை [கேகே மேனோன்] போலீசார் காலில் சுட்டுப் பிடித்து விடுகின்றனர், அவனை பீகாரின் ஒரு குக்கிராமத்தின் சுகாதார மையத்தில் அனுமதித்து சிகிச்சை தருகின்றனர்.

அன்றைய ஆட்சியாளர்களின் முக்கிய கருவருப்பு பட்டியலில் இருக்கும் சித்தார்த்தை என்கவுண்டர் செய்ய மேலிடத்திலிருந்து ஒப்புதலும் வந்து விடுகிறது, அந்த சுகாதார மையத்திலிருக்கும் மார்க்ஸிய அனுதாபி மருத்துவர் மூலம் சித்தார்த்தின் மனைவி கீதாவின் வீட்டிற்கு இச்செய்தி தொலைபேசி வழியே செல்கிறது,

 ஆனால் அங்கே கீதா இல்லாத நிலையில் தொலைபேசி செய்தியைக் கேட்ட விக்ரம் வேண்டா வெறுப்புடன் சித்தார்த்தை மீட்கப் பொருப்பேற்றவன் அக்கிராமத்திற்கு தானே வலியச் செல்கிறான்,வழியில் கார் இடக்கு செய்ய,ஒரு கோழி வண்டியில் ஏறிச் செல்கிறான்,அதன் ஓட்டுனர் இரவு பிரயாணத்தில் தூங்கிவிட,வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது, விக்ரம்   அதே கிராம சுகாதார மையத்தில் சித்தார்த்துக்கு பக்கத்திலேயே பலத்த காயங்களுடன் சேர்க்கப்படுகிறான்.

அங்கே வைத்து சித்தார்த்தை ஏசுகிறான், உன்னால் எனக்கு என்ன ஆனது பார் என்கிறான்,வலிக்கு ஊசி போட வரும் நர்ஸிடம் விளையப்போகும் விபரீதம் புரியாமல் இஞ்செக்‌ஷனில் bubble check செய்திருக்கிறதா?இது சுகாதாரமானதா? என்கிறான்.

அன்றிரவே நக்ஸலைட் குழுவினர் தங்கள் சகா சித்தார்த்தை அந்த சுகாதார மையத்துக்குள் நுழைந்து கட்டிலுடன் மீட்டு தூக்கிக் கொண்டு செல்கின்றனர். சித்தார்த் விக்ரமையும் நம்முடன் மீட்போம் என்றதற்கு அவன் பெரிய அரசியல்வாதியின் மகனாயிற்றே,அவனுக்கு ஒன்றும் நேராது என்கின்றனர்.

காலையில் விபரீதம் துவங்குகிறது,நன்கு குடித்து விட்டு போதையில் தூங்கிய கான்ஸ்டபிளுக்கு பயத்தில் பேதியாகிறது, சித்தார்த் எங்கே? என்று மயக்கம் தெளியாத விக்ரமை வந்து உலுக்குகிறான்.புது டில்லியில் இருந்து 5000 வருடங்கள் பின் தங்கியிருக்கும் கிராமத்தில் தான் இருக்கிறோம்,என்ன நேருமோ? என்ற நினைப்பிலேயே விக்ரமிற்கு கடும் வலியுடன் பயமும் சேர்ந்து கொள்கிறது,தன் கார்பொரேட் ,டிப்ளோமஸி அதிகாரம் எதுவும் செல்லுபடியாகாத காட்டுமிராண்டிகளின் சூழல் ,காவல் துறை அதிகாரிகளிடம் என்ன சொல்லியும் பயனில்லை,எல்லாமே விபரீதமாகத் தான் முடிகிறது,

கான்ஸ்டபிள் அவசர அழைப்பின் பேரில் அங்கே வந்த இன்ஸ்பெக்டருக்கு சித்தார்த்தை அவசரகதியில் என்கவுண்டர் செய்தாக வேண்டிய கட்டாயம். ஆனால் சித்தார்த் அங்கில்லை, இப்போது இரு காவல்துறை கோமாளிகளும் விக்ரமை இழுத்துச் செல்கின்றனர். நான் அவன் இல்லை, எனக்கு உங்கள் எம்.பி யை தெரியும் என சொல்லச் சொல்ல வயலுக்குள்  கொண்டு தள்ளுகின்றனர்.

அங்கே விக்ரமை சுடப்போனால் துப்பாக்கியில் தோட்டா இல்லை,அதை முதல் நாள் இரவே நக்ஸலைட்கள் துடைத்திருக்கின்றனர். ஒரே வழி இரும்புக்கழியால் மண்டையை உடைத்து ஆஸிட் கொண்டு இவன் முகத்தை சிதைத்து இவன் தான் சித்தார்த் என்று சொல்லி வழக்கை முடித்து விடலாம என்கிறார் இன்ஸ்பெக்டர் [ஷவ்ரப் ஷுக்லா].

அது தான் தன் வேலையைக் காத்துக்கொள்ள ஒரே வழி என்று நம்பிய கான்ஸ்டபிள் இரும்புக் கழியால் விக்ரமின் மண்டையை உடைக்கத் துவங்குகிறான், தொலைவில் அந்த தொகுதி எம்.பி கேட்டதற்கிணங்க ஆட்சித்துறை அதிகாரிகள் விக்ரமை காப்பாற்ற வந்தும், அங்கே விக்ரமின் மண்டை சிதைந்து விட்டிருக்கிறது. அதன் பின்னர் மிகச்சிறந்த கல்விமான் விக்ரம் தன் எஞ்சிய வாழ்நாளை மனநோயாளியாகக் கழிப்பதாகப் படம் முடியும்.

இப்படித்தான் டைகர் மேமன் என்னும் மகாக் கொடியவனுக்கும் எனக்கும் எந்தத தொடர்புமில்லை, என்று தன் வீட்டாருடன் 22 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்து சரணடைந்த யாகுப் மேமன், அகப்பட்டவனை தூக்கிலிடுவோம் என்னும் பழைய கொள்கைகளின் படி தூக்கிலிடப்படுகிறார்.

இந்த கொலை ஈரானிலோ, சவுதிஅரேபியாவிலோ அமெரிக்காவிலோ பாகிஸ்தானிலோ நடந்தால் அது ஆச்சர்யமல்ல, இந்தியா போன்ற நாட்டில் நடப்பது தான் அதிசயம்.ஆச்சர்யம்.உலகின் புருவத்தை உயர்ந்த வைக்கும். எத்தனையோ பார்த்து விட்டோம் , இதையும் பார்ப்போம், இங்கே யார் யாகுப் மேனன் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தாலும் வெகுஜனத்தின் முன்னே குற்றவாளி தான், உலகம் என்றும் அப்படித்தான்.

மக்களுக்கு யாராவது தூக்கில் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும், 1800களில் சதி என்னும் உடன்கட்டையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களே?!!!  ,அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது ஜில்லெட்டினில் வீழ்த்தப்பட்ட அறிஞர்கள் , எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், அவர்கள் மனைவி குழந்தைகள்  தலைகளை சதுக்கத்தில் கூடி குரூரமாக வேடிக்கை பார்த்தார்களே பெர்வெர்ட்டுகள், அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?!!! நாட்டில் எது எப்படி நடந்தாலும் அகப்பட்ட யாரையேனும்   தூக்கில் போட்டு விட வேண்டும்.

யாகுப் மேமனுக்கு சல்மான் கான் போன்ற குற்றப் பின்னணி உள்ள நடிகர்கள் வக்காலத்து வாங்கும் போது யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை என்னும் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.எனவே அவர்கள் வக்காலத்து வாங்காமல் இருப்பதே உத்தமம்.

யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டால் அவர் தான் இந்திய அரசால் தூக்கிலிடப்பட்ட முதல் சார்டட் அக்கவுண்டண்ட் ப்ரொஃபெஷனலாக இருப்பார். ஜூலை 30 அவருக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டால் பிறந்தநாளன்றே தூக்கிலிடப்ப்பட்டவர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் பெறுகிறார்.

http://geethappriyan.blogspot.ae/2013/07/black-friday-2004.html
https://en.wikipedia.org/wiki/Yakub_Memon
http://timesofindia.indiatimes.com/india/Yakub-Memon-does-not-deserve-to-be-hanged-top-intelligence-office-wrote/articleshow/48202387.cms
http://thewire.in/2015/07/17/why-yakub-memon-should-not-be-hanged-6662/
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)