எண்டோசல்ஃபான் என்னும் எமகாதக ரசாயனம்!!!


ருமை நண்பர்களே!!!

'எண்டோ சல்ஃபான் (Endo Sulfan)’  என்னும் அதிபயங்கரமான பூச்சிக் கொல்லி மருந்தைப்பற்றி அறிவீர்கள் தானே?!!!.இந்த பூச்சிக்கொல்லி மருந்து உலகின் 81 நாடுகளில் தடைசெய்யப்பட்டது. நார்வே நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில், கடந்த மாதம் நடந்த உலக சுகாதார மாநாட்டில், 2012 மத்தியில் எண்டோ சல்ஃபானுக்கு உலக அளவில் தடை விதிக்கத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆனால் மக்கள் விரோத போக்குடைய காங்கிரஸ் அரசு இம்மருந்தை தடைசெய்ய ஆனவரை சுணக்கம் காட்டி வருவது தான் கண் கூடு. 

லகே வெறுத்து ஒதுக்கும் இம்மருந்தை  இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும்’ என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்   உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் தொடுத்து இருக்கிறார்கள்,ஆனால் தீர்ப்பும் அரசின் செயல்பாடுகளும் மக்களுக்கு சாதகமாக வருமா?!! அல்லது பூச்சி மருந்து முதலாளிகளுக்கும், அவர்களிடம்  கையூட்டு பெற்று வயிற்றை கழுவும் அரசியல்வாதிகளுக்கும் சாதகமாக வருமா?!!! என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

ண்டோ சல்ஃபான் என்னும் எமகாதக ரசாயனத்தை முந்திரி, பருத்தி, புகையிலை உள்ளிட்ட பணப் பயிர்களை தின்று அழிக்கும் சிறியவகைப் பூச்சிகளை கொல்ல அதிகம் பயன்​படுத்துகிறார்கள். 1950-ல்  அமெரிக்காவில் அறிமுகப்​படுத்தப்பட்ட இந்த பூச்சிக் கொல்லி, 1970-ல் இந்தியாவுக்கு வந்தது. இங்கு நிரந்தரமாக தங்கிவிட்ட இம்மருந்து நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலைகளையும் திறந்தது ,இங்கே ஆண்டுக்கு 8,500 டன் எண்டோ சல்ஃபான் உற்பத்தி செய்யப்பட்டு 4,000 டன் வெளிநாடுகளுக்கும் செல்கிறது, எஞ்சியது இந்தியாவுக்குள்ளேயே சந்தைப்படுத்தப்படுகிறது . கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் முந்திரிக் காடுகள் அதிகம். இங்கு ஹெலிகாப்டர் மூலம் இந்த மருந்தைத் தொடர்ந்து முந்திரிப்பண்ணை முதலாளிகள் தெளித்து வந்ததில், இதுவரை 400க்கும் பேருக்கு மேற்பட்டோர் கொடூரமாக இறந்து விட்டார்கள்.

து மனித உடலுக்குள் போய்விட்டால், முதலில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். வலிப்பு, நடை தடுமாற்றம், மூச்சுத் திணறல், வயிற்றுப் போக்கு, நினைவு இழத்தல் எனத் தொடங்கி இறுதியில் கோமா நிலைக்குக் கொண்டுபோய்விடும். கருவுற்ற தாய்மார்களுக்கு முதல் எட்டு வாரங்களிலேயே இது கருவைப் பாதிக்கும். ஹார்மோன் சுரப்பதில் சிக்கலை உண்டாக்குவதால், ஆண் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தி பெண் சுரப்பிகளை அதிகப்படுத்தும். அதனால், பிறக்கும் ஆண் குழந்தைகள்கூட அதிகப் பெண்மைத்தன்மையுடன் இருப்பார்கள்.

ந்த பகுதியில் நிறைய குழந்தைகள் விகாரமாக பூசணிக்காய் அளவு கொண்ட பருத்த தலையுடன் பிறக்கின்றன. இந்தக் குழந்தைகளுக்கு தைராய்டு ஒழுங்காக இருக்காது. இன்சுலினும் சுரக்காது. வயதுக்கேற்ற வளர்ச்சியும் இருக்காது. ஆண் குழந்தைகளுக்கு விரைகள் முதிர்ச்சியடையாமல் இருக்கும். இவர்களுக்கு வயதுக்கேற்ற வளர்ச்சியும் இருக்காது. மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டு பிறவியிலேயே இவர்கள் பார்வையும் இழக்க நேரிடும். 

பெரியவர்களையே ஆட்டிப்படைக்கும் இந்த பூச்சிக்கொள்ளியின் வீரியம் பிறக்கும் குழந்தைகள் மீது தொடுக்கும் வெறியாட்டம்   சொல்லி மாளாது மேலே உள்ள படங்களே காண்போருக்கு ஆயிரம் கதைகள் சொல்லும். இதனால் எண்டோ சல்ஃபானுக்கு இந்தியாவில் தடை விதிக்கக் கோரி, ஆளும் மார்க்சிஸ்ட்களே கேரளத்தில் தொடர்ந்து போராடுகிறார்கள்.கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில், சொர்க்கா என்ற கிராமத்தில்  நிறைய குழந்தைகள்  எண்டோ சல்ஃபானின் வீரியத்தால் பாதிக்கப்​பட்டு பிறக்கும்போதே குருடாகப் பிறக்கின்றனர்.

நான்கு வயதான நிறைய குழந்தைகளுக்கு சிறுநீர்ப் பை வயிற்றுக்கு வெளியே தொங்கியபடி இருக்கிறது. 20 வயதான நிறைய இளைஞர்கள் வலிப்பு நோயினால் பீடிக்கப்பட்டு  வாழ்கையையே தொலைத்துவிட்டு கிடக்கிறார்கள். 28 முதல் 30 வயதுகளிலுள்ள  நிறைய பேர்களுக்கு, நான்கு வயது குழந்தைக்கான மன வளர்ச்சிகூட இல்லை. மனித உடலில் கலக்கும் எண்டோ சல்ஃபான் கழிவுகள், சிறுநீரகம் மற்றும் ஈரல் மூலம் வெளியேறுவதால், அவையும் பாதிக்கப்பட்டு இதயம் பலவீனமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

பொது நல வழக்குத் தொடுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்'' எண்டோ சல்ஃபானுக்கு நிரந்தரத் தடை விதிப்பது குறித்து கேரள அரசு இதுவரை 11 கமிட்டிகளை நியமித்தும், இந்த பூச்சிக்கொல்லியை தடை செய்ய முடியவில்லை. எண்டோசல்ஃபான் தயாரிக்கப்படும் உற்பத்தி ஆலைக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து இருக்கிறார்கள். ஆனாலும் இம்மருந்து  நீக்கமற எல்லா ஊர்களிலுமே விற்கப்படுகிறது, கேரளாவின் தட்பவெப்ப நிலையால் இம்மருந்தின் வீர்யம் சொல்லொனாத்துயரை இதுவரை ஏற்படுத்தியிருக்கிறது. இனி பொறுப்பது ஆகாது என்னும் அயற்சியும் கோபமும் பகுதி மக்களிடையே ஒருசேர ஏற்பட்டதால் தான்  நீதிமன்றத்தை மக்கள் அணுகி இருக்கின்றனர். பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், பெரும்பாலான மாநிலங்களும் மத்திய அரசும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்...'' என்றார்.
எண்டோசல்ஃபானுக்கு ஒத்து ஊதும் மத்திய      சுற்றுச்சூழல் மற்றும்   வனத்துறை அமைச்சர்     ஜெய்ராம் ரமேஷ்

ண்டோ சல்ஃபான் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு  குணப்படுத்தும் மருந்துகள் இல்லவே இல்லை என்பது மற்றொரு துயரம்,திருடனாய் பார்த்து திருந்தினால் தான் திருட்டை ஒழிக்க முடியும், அது போல கறை படிந்த அரசியல் வாதிகள், இனியேனும் மக்களை சோதனைச்சாலை எலியாக மாற்றி விளையாடாமல் இருத்தல் வேண்டும்,இந்தியாவில் இன்னொரு போபால் விஷவாயு சம்பவம் போன்றதோர் பேரிடர் வேண்டுமா?!!!, பாரதத்தில் நூற்று இருபது கோடி மக்கள் இருக்கிறார்களே அதில் ஐந்து ஆயிரம் பேர் செத்தால் ஒன்றும் குடி முழுகிபோய்விடாது என்னும் மெத்தனப்போக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஆட்சியாளர்களிடையே மறையவேண்டும், மக்களாகிய நாமும் அது கேரளத்து மக்கள் தானே பாதிக்கப்பட்டுள்ளனர், தமிழகத்துக்கு கேடு வருகையில் பார்த்துக் கொள்வோம் என்று பாராமுகம் காட்டாமல், இதை கண்டித்தும் எதிர்த்தும் ஃபார்வர்டு மெயில்களும், ஃபேஸ்புக்குகளில், ட்விட்டர்கள், பஸ் போன்ற ஊடகங்களில் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்தும் வரவேண்டும்.செய்வீர்களா?!!!

=====0000=====
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)