அருமை நண்பர்களே!!!,
ஒரு வழியாக வேலை தேடும் படலம் வெற்றிகரமாக முடிந்து சென்னைக்கே திரும்பிவிட்டேன், அமீரகத்தில் கடந்த ஒரு மாத நேர்காணல்களில் கிடைத்த வாய்ப்புகள் எல்லாமே ,ஏதோ ஒருவகையில் மனதுக்கு ஒவ்வாததாகவே அமைந்தது, சரி சென்னைக்கே திரும்பி விடுவோம், என்று வந்தும் விட்டேன். கடைசியாக வேலை பார்த்த நிறுவனம் போல மனதுக்கு திருப்தியாக அமையுமா?!!! என்றால் சந்தேகமே!!! அத்தனை சிறப்பான ஒரு வேலை அது, கடந்த ஒரு வருடமாகவே அங்கே வேலை தீவிரமாக இருந்ததில்லை,மனதை மிகவும் வருத்திக்கொண்டிருந்த வீட்டுக்கடனை இறையருளால் முழுதாக அடைத்துவிட்டு திரும்பியதில் தான் அதீத மனதிருப்தி எனக்கு, அமீரக மண்ணை விட்டு கிளம்பவே மனமில்லை, எனக்கு எத்தனையோ வசதி வாய்ப்புக்களை அள்ளி வழங்கிய பூமி அது!!! நிச்சயம் நல்ல வாய்ப்புக்கள் வருகையில் திரும்ப போவேன்.
இப்போதைக்கு குடும்பத்தினருடன் ஓய்வை கழிக்கிறேன்.நல்ல மனதுக்கு பிடித்தமான வேலையாக ,ஆற அமர தேடிக்கொண்டு இருக்கிறேன்.எதுவும் ஒத்து வராத பட்சத்தில் படிக்கவும் எண்ணம் இருக்கிறது. இங்கே குடும்பத்தினருடனும்,உறவினருடனும் மனதுக்கினிய நண்பர்களையும் அடிக்கடி சந்திக்க முடியும் என்ற மகிழ்ச்சியும் நிரம்பவே உண்டு. நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ள என் கைபேசி எண்:-9840419602
நேரம் கிடைக்கையில் மீண்டும் உலகசினிமாக்கள் எழுத எண்ணம் உண்டு!!!



19 கருத்துரைகள்:
தல.. பத்திரமா போய் சேர்ந்தது சந்தோசம். கிடைச்ச வாய்ப்பில் குழந்தைகளோடு நல்லா டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க.
கடனடைத்த வீட்டை விட வேறென்ன நிம்மதி வேணும் சொல்லுங்க?
நார்மலானதும்.. திரும்ப எழுத வாங்க. தமிழ் விக்கியே நீங்க இல்லாம தடுமாறுதுன்னு FeTNA’ல சொன்னாங்க. :) :)
ஆகா?கிளம்பிட்டாய்கய்யா
தல.. நாந்தான் இப்ப புள்ளிராஜாவா கோலம் போட்டுகிட்டு இருக்கேன்.
ஹா.பா
தெரியும் தல,உங்க கமெண்டை தெரியாதா?
தெரியும் தல,உங்க கமெண்டை தெரியாதா?
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. நடப்பவைகளை மகிழ்வோடு அனுபவியுங்கள். வாழ்த்துக்கள்.
ஆஹா..ஓய்வுக்காலத்தை நல்லா எஞ்சாய் செய்யுங்க..உலகப்படங்களை அப்பப்போ அறிமுகப்படுத்த மறந்துடாதீங்க பாஸ்.
நீங்கள்.... பிறந்த மண்ணில்.... சாதிக்க... இறைவன் விரும்பி... அதை நிறைவேற்ற ஆணை பிறப்பித்து விட்டதாக எனக்கு படுகிறது.சென்னை வரும்போது சந்திக்கிறேன் நண்பரே!
ஒய்வை நல்லா அனுபவிங்க நண்பா...
வருக வருக சென்னைக்கு வருக
நன்றாக ஓய்வெடுங்கள் ..உறவினர்கள் நண்பர்களை சந்தியுங்கள் ..அப்படியே வலைபக்கமும் வாருங்கள் .உங்களின் பதிவை எதிர்நோக்குகிறோம்
wishes for another innings!
கருத்திட்ட அருமை நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் மகிழ்ச்சியும்,சிறிய ஒய்வுக்கு பின்னர் மீண்டும் வருகிறேன்.
கடந்த ஒரு வருடமாகவே அங்கே வேலை தீவிரமாக இருந்ததில்லை,மனதை மிகவும் வருத்திக்கொண்டிருந்த வீட்டுக்கடனை இறையருளால் முழுதாக அடைத்துவிட்டு திரும்பியதில் தான் அதீத மனதிருப்தி எனக்கு,//
சந்தோசம்
வாழ்த்துக்கள் அன்பரே. உமக்கு மனதிற்கினிய வேலை அமையும். எழுத்து பணி தொடரட்டும்.
இரா.அரவிந்தன்
தல.. இன்னா மேட்டர். சைலண்டா இருக்கீங்க?
வணக்கம்! எப்படி இருக்கீங்க? சென்னை மீண்டும் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி! விரைவில் சந்திப்போம்!
ஏற்கெனவே பத்து வருசத்துக்கு முன்னாடி மெட்ராசுக்கு படிக்க போனேன்.நாலு வருஷ கொர்சு ஆறு வருசமாச்சு!!அதனால் மன உளைச்சல் இப்போ சொந்த ஊரில்.மேட்ராசுன்னாலே அலர்ஜி.அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.வாய்ப்பிருந்தா சொந்த ஊரிலேயே இருப்பது மனனலனுக்கு நன்று!!
அட இன்னா பாஸ் நீங்க?
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்து சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!
கருத்துரையிடுக