த ஜாப்பனீஸ் வைஃப்[The Japanese Wife][2010][இந்தியா][15+]

டத்தின் பெயரைப்பார்த்துவிட்டு யாரும் ஜப்பானிய மேட்டர் படமோ? என்று நினைக்க வேண்டாம் , நம்ம பாரதத்தில் எடுக்கப்பட்ட மகத்தான படம் இது!!!....
ங்களுக்கு பேனா நட்பு நினைவிருக்கிறதா? உங்களுக்கு பேனா நண்பர்கள் இருந்திருக்கிறார்களா? பத்து வருடங்களுக்கு முன்பு வரை பிரபல பத்திரிக்கைகள் சில,  இதற்கென்றே கடைசிப்பக்கத்தை ஒதுக்கியிருந்தனர். எனக்கு அதன்          மூலம்  4 பேனா நண்பர்கள் இருந்தனர், ஆனால் காலப்போக்கில் யாரும் தொடர்பில் இல்லை. இப்போது ஆர்குட், ஃபேஸ்புக், யாஹூ,கூகிள் என இருந்தாலும் அந்த முகம் தெரியாத நண்பர்களின் கடிதங்கள் தந்ததைப்போல பரவசம் இல்லை என்றே சொல்லவேண்டும். ஒன்றின் வளர்ச்சி தான் இன்னொன்றின் வீழ்ச்சி, அப்படிப்பட்ட பேனா நட்பை வைத்து இப்படி ஓர் அழகிய படம் தந்திருக்கின்றனர்.!!! உடனே காதல்கோட்டையையும், பொக்கிஷத்தையும் நினைக்கவேண்டாம்!!!.

சுரத்தனமான தொழில்நுட்ப வளர்ச்சி கோலோச்சும்  இப்படியோர் காலகட்டத்தில் இப்படியோர் காதல் கதையா?!! என நிச்சயம் வியக்க வைக்கிறது, இந்திய பேரலல் சினிமாவின் ஈடு செய்ய முடியா ஆளுமையான ராஹுல் போஸ் இதிலும் உணர்ந்து செய்திருக்கிறார். இதுவரை இவரை கவனிக்கவில்லை என்றால் இனியேனும் கவனிப்பீர்கள், அப்படி ஓர் பாதிப்பை நமக்குள்  இவரின் ஸ்நேஹமோய் பாத்திரம் மூலம் ஏற்படுத்துகிறார். படத்தின் இறுதிக்காட்சியில் பதேர் பாஞ்சாலியில் துர்காவினால் கிடைத்த தாக்கம், இதிலும் ஒருவருக்கு கிட்டும் என்பது திண்ணம். ஒவ்வொரு காதலர்களும், கணவன் மனைவியும்  வாழ்வில் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

டத்தின் லொக்கேஷன்கள் இதுவரை நாம் பார்த்திராத ஒன்று,!!!பாரதம் தான் எத்தனை விதமான நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டுள்ளது!!!, இதில் மேற்கு வங்காளத்தையும் பங்களாதேஷையும் இணைக்கும், சுந்தர்பன் என்னும் ஆறும் காடும் சேரும் பலேஷ்வர் நதிதீரத்தின் நடுவே அமைந்த தீவுத்திட்டில், கதை நடக்கிறது,  துஷார் காந்திரே மற்றும் விக்ரம் ஸ்ரீவத்ஸவாவின் ஓளிப்பதிவு மிக ரம்மியம். படத்தில் பாடல்களே இல்லை,மெதுவாக சென்றாலும் அபர்ணா சென்னின் சற்றும் தொய்வில்லா திரைக்கதையும் , இயக்கமும் நம்மை உற்சாகம் கொள்ளச் செய்கிறது, சாகர் தேசாயின் பிண்ணணி இசை மிகவும் இனிமை. ஆக மொத்தத்தில் ப்ரில்லியண்டான  மினிமலிச-ட்ராமா வகை திரைப்படம் இது.

========0000==========
படத்தின் கதை:-
1985ஆம் ஆண்டு, சுந்தர்பன் என்னும் மின்சாரமில்லா கிராமத்தில்  படம் துவங்குகிறது . மழைக்காலத்தில்  யாரும் உள்ளேயோ ,வெளியேவோ , வரவோ,போகவோ முடியாத ஒரு ஊர் !!, ராட்சச கொசுக்கள் வேறு, 30 வயது ஸ்நேஹமொய் [ராஹுல் போஸ்] அங்கேயே வசிக்கும் எளிய பிராமண குடும்பத்தை சேர்ந்த கணக்கு வாத்தியார்.,மறுகரைக்கு படகு பிடித்து சென்று பாடம் நடத்தி வருகிறார். கூச்சசுபாவமாதலால் நண்பர்களே இல்லை, இவருக்கு ஒரு வெகுஜன இதழ் மூலம், 21வயது ஜப்பானிய பெண் மியாகியின் [சிகுசா டகாகு ]பேனா நட்பும் கிடைக்கிறது,

ண்ணற்ற கடிதங்களின் மூலம் இவர்கள் நட்பு மேம்படுகிறது, இருவருமே வங்காளம்/ஜப்பான் - ஆங்கில மொழி அகராதியை பார்த்து,படித்து,பொருள் உணர்ந்து அதன் பின்னே கடிதம் எழுதுகின்றனர்.இதன் மூலம் இருவருக்கும் இனம்புரியா பரவசமும் தொற்றிக்கொள்கிறது,இவளுக்கு கடிதம் எழுத ஆகும்  செலவுக்கே , ஸ்நேஹமொய் ட்யூஷனும் எடுக்கிறார்.அவள் புகைப்படம் அனுப்புகிறாள். இவரையும் எடுத்து அனுப்பகேட்டவள், இவருக்கு போலராய்டு கேமராவும் தபாலில் பரிசளிக்கிறாள்.

பெற்றோரை சிறுபிராயத்திலேயே சூராவளி வெள்ளத்தில் இழந்த ஸ்நேஹமொய் பெரியம்மாவின் அன்பும் பராமரிப்பிலுமே வளர்ந்தவர், பெரியம்மா மாஷி [மவுஷுமி சேட்டர்ஜி] , இவருக்கு உறவுக்கார பெண்ணான பதின்ம வயது சந்தியா வை [ரைமா சென் ] மணம் பேச,இவர் மியாகிக்கு அதை எழுதுகிறார்.

வளோ இவரின் உண்மையான நட்பில் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டு ,இவரை விரும்புவதாய் சொல்கிறாள், இவரும் அதற்கு மனமுவந்து சம்மதிக்க, தபாலிலேயே திருமணமும் செய்துகொள்கின்றனர் . எப்படி?!!! அவள் இவருக்கு  வெள்ளி மோதிரம் அனுப்ப, இவர் அவளுக்கு குங்குமமும், கண்ணாடி கைவளையல்களும் அனுப்புகிறார். அவளின் வீட்டிலேயே இருக்கும் சிறிய மளிகைக் கடையை கவனிக்கிறாள், அவளின் ஒரே அண்ணன் யோகோஹோமாவுக்கு மணமாகி சென்றுவிடுகிறான்,  வயதான படுத்த படுக்கையான விதவை அம்மா இருப்பதால் , அவளின் உடம்பு தேறியவுடன் இவள் இந்தியா வருவது என முடிவாகிறது,

வருக்கோ 100டாலர் மதிப்பில் கூட சம்பளம் இல்லாததால் இவராலும் ஜப்பான் செல்ல முடியவில்லை, மனைவிக்கு உண்மையானவராய் இருப்பதால் எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, கொடிய பிரிவுத்துயரை தீர்க்க அவளின் கடிதத்தை வைத்துக்கொண்டு  விடுமுறை நாளில் காலியாய் இருக்கும் படகில் அமர்ந்தபடி கரமைதுனம் செய்தே தீர்க்கிறார்.

ப்படியே கொடிய 15 வருடங்கள் ஓடிவிடுகிறது, இவரின் வீட்டுக்கு இப்போது 8வயது சிறுவன் பால்டுவும்,அவனின் அழகிய இளம் கைம்பெண் அம்மா சந்தியாவும் போக்கிடம் இன்றி வர, இவருக்கு நாளடைவில் பால்டு மீது தந்தைக்குண்டான பாசம் வருகிறது, அழகிய கைம்பெண் சந்தியா மிகவும் வெகுளி, கூச்சசுபாவி, இவரின் துணிமணிகளை துவைத்து, இஸ்திரி செய்து, இவரின் அறையை சுத்தம் செய்கிறாள், ஆனால் பேசுவதில்லை, முகத்தை பார்ப்பதுமில்லை. தன் அழகிய முகத்தை கூட காட்டுவதில்லை,

வருக்கு அவள் மீது பரிவு பிறக்கிறது, இப்போது  காற்றாடி திருவிழா நடக்கிறது, சந்தியா மாஞ்சா போடுவதற்கு பாட்டில்களை பொடிசெய்கிறாள், அதில் குங்குமம் கலந்து நூலுக்கு மாஞ்சா ஏற்றுகின்றனர், பால்டுவுடன் இணைந்து தன் மனைவி 15ஆம் வருட பரிசாய் அளித்த, பலவகையான காற்றாடிகளை வைத்து போட்டியிலும் பங்குபெறுகிறார். அதில் இவர் உள்ளூர் ஆட்களிடம் தோற்றாலும் இதன் மூலம் சிறுவன் பால்டுவையும், சந்தியாவையும் உளமாற மகிழ்வித்தது தான் மிச்சம் என்று தன்னை தேற்றிக்கொள்கிறார்.[இந்த காட்சி மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது, ஒருவருக்கு கைட் ரன்னர் படம் கொடுத்த பரவசத்தை இந்த காட்சியும் தரவல்லது]

ப்போது மிகப்பெரிய சோதனையாக,மியாகியின் அம்மா காலமாகிவிடுகிறார். மியாகிக்கும் உடல்நலன் மோசமாக பாதிக்கப்படுகிறது, அவள் அண்ணன் வீட்டுக்கே போகிறாள், இவர் தொடர்ந்து அவளுக்கு அங்கே கடிதம் எழுதியும், காசில்லா நிலையிலும் ஐஎஸ்டி பேசியும் வருகிறார். அவளுக்கு நோய்கான உபாதைகளையும் அவளின் வலி, வேதனையையும் கவனமாய் எழுதி குறித்துக்கொண்டவர், அக்கறையுடன் ஆயுர்வேதா, சித்தா, யுனானி, அலோபதி என எல்லா மருந்துகளையும் தேடி அலைந்து வாங்கி தபாலில்அனுப்புகிறார். இதற்காக அலையவே 6 மாதங்கள் வேலைக்கு விடுப்பு எடுக்கிறார். மியாகியும் நம்பிக்கையுடன் அவற்றை உட்கொள்கிறாள்.பெரியம்மாவுக்கு இதனால் பொறுமை எல்லை மீறுகிறது.

ப்போது சிறுவன் பால்டுவுக்கு 9 வயது, அவன் அம்மா சந்தியா அவனுக்கு உபநயனம் செய்விக்க  விரும்புகிறாள், அதற்கான செலவுகளுக்கு தன் நகையை பக்கத்து கரையில் உள்ள நகைக்கடையில் அடகு வைக்கவும், பூஜைசாமான்கள், காய்கறிகள் வாங்கவும், ஸ்நேஹமொய்யுடன் படகேறுகிறாள், அவள் இவருக்கு படகில் அமர இடம் பிடிக்க, இவர் அவளுக்கு வெயிலுக்கு குடைபிடிக்கிறார், படகிலிருந்து இறங்க உதவுகிறார், அவரின் மென்மையான அருகாமை அவளுக்கு பிடிக்கிறது, நட்புக்கும் காதலுக்கும் இடையேயான சின்ன இழை  இவர்களுக்குள் ஓடத் துவங்குகிறது.!!!

டைத்தெருவில், காய்கறி, விளக்கு, பூ, பழம் வாங்கிவிட்டு, இவள் நகை அடமானம் வைக்கபோக, இவர் பேல் பூரிக்காரனிடம் பேல்பூரி தயாரிக்க கேட்கிறார்,அங்கே திரும்ப வந்தவள் உரிமையாய் சாப்பிடும் நேரத்தில்  நொறுக்குத்தீனியா?!!,பக்கத்தில் ஓரு மலிவு உணவுவிடுதி உள்ளது சாப்பாடு சாப்பிடுவோம், என அழைத்து போகிறாள். அங்கே இருவருக்கும் மீன் பறிமாறப்படுகிறது, இவள் கைம்பெண் என்பது தெரியாமல் அவளுக்கும் இலையில் மீன் வைத்துவிட்டனர், இவள் கைம்பெண் உணவை வீணாக்ககூடாது, என்று சொல்லிக்கொண்டே சாதாரணமாய் இவர் இலைக்கு அவற்றை தள்ளுகிறாள், இவர் அதை மறுக்காமல் உண்ணுகிறார்.அவளுக்கு ஓர் திருப்தி.மகிழ்ச்சி.

ரும் வழியில் எதேதோ சிந்தனைகள்,சந்தியாவுக்கு இவரின் அருகாமை மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது, இப்போது இவரிடம் நன்கு பேச த் துவங்கியும் விட்டாள். இவருக்கு அவள் பிறை முகம் இப்போது நன்கு காணக்கிடைக்கிறது,  மிஞ்சிப்போனால் 30 வயது இருக்கலாம்!!!கடவுளே.

ரவு,சந்தியாவின் அழுகுரல் கேட்டு எழுந்தவர்,கீழே போய்ப் பார்க்க,சந்தியா அவள் வயதுக்கே உரிய ஏக்கத்திலும், சுயபச்சாதாபத்திலும்  வாசலில் அமர்ந்து வெடித்து  அழுகிறாள்.இவர் அருகே அமர்ந்ததும் இவர் தோளில் சாய்ந்து  முட்டிக்கொண்டு அழுகிறாள். இவர் தேற்றுவதற்காக அவள்  தோளை விகல்பமில்லாமல் பிடித்தது தான் தாமதம், சுயநினைவுக்கு வந்தவள், முகத்தை வெட்டிக்கொண்டு உள்ளே சென்றுவிடுகிறாள், இவருக்கோ குற்ற உணர்வு, இதை மனைவியிடம் மறைக்ககூடாது என கடிதம் எழுத வார்த்தைகளை தேடித் தேடி தோற்றுப் போனவர் , எழுதியும் விடுகிறார். குற்ற உணர்வின்  உச்சத்தில் இருந்தவரிடம் சிறுவன் பால்டு மனைவியின் புதிய கடிதத்தை தர, இவருக்கு மேலும் ஓர் அதிர்ச்சி.

மியாகிக்கு வந்திருப்பது ரத்த புற்றுநோயாம், அவள் இப்போது கீமோதெரபி எடுக்கிறாளாம், இவள் உயிர் பிழைக்க 50% சாத்தியக்கூறு உள்ளதாய் டாக்டர்கள் சொன்னார்கள்,என்கிறாள், கணவனிடம் எதையும் மறைக்ககூடாது என்று எண்ணி,இவருக்கு தன் ரிப்போர்ட்டுகள்,ஸ்கேன்களை அனுப்புகிறாள்.

வருக்கு மனைவி மியாகி இறந்துவிடுவாளோ?!!!என அச்சம் உண்டாகிறது, 15வருடம் பார்க்காத பெண்ணிடம்,எழுத்திலும்  கொண்டுவரமுடியாத முடியாத ஓர் பாசம் கொண்டிருக்கிறார்., உடனே கொல்கத்தாவின் புகழ்பெற்ற  கோனாலஜிஸ்டிடம் ஓடுகிறார்.

இனி என்ன ஆகும்?

1,ஸ்நேஹமொய் ஜப்பான் போனாரா?மியாகியை சந்தித்தாரா?
2.ஸ்நேஹ மொய் சந்தியாவை கைபிடித்தாரா?
3,மியாகி புற்றுநோயிலிருந்து குணமடைந்தாரா?
போன்றவற்றை டிவிடியில் பாருங்கள்.இந்த படத்தை ஒருவர் வாழ்நாளில் தவறவிடவே கூடாது என்பேன்.
========0000==========
பேரலல் சினிமா வளர்ச்சி, பார்வையாளர்களின் தொடர் தேடலிலும், ஊக்கத்திலுமே  அதிகம்  சாத்தியமாகிறது, ஆகவே மாற்று சினிமாக்களை பார்த்து ஆதரியுங்கள்.

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
========0000==========

========0000==========
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-

Directed by Aparna Sen
Written by Kunal Basu (story)
Aparna Sen (screenplay)
Starring Rahul Bose
Raima Sen
Moushumi Chatterjee
Chigusa Takaku
Music by Sagar Desai
Editing by Raviranjan Maitra
Distributed by Saregama Films
Release date(s) 9 April 2010[1]
Running time 105 minutes
Country India
Language English, Japanese, Bengali

========0000==========
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)