ஒப்பற்ற திரைப்படமான ஆடுகளத்துக்கு ஆறு தேசிய விருதுகள்!!!

ருமை நண்பர்களே!!!,
58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன,இந்த முறை தேசிய விருது என்னும் அதிர்ஷ்ட மழை தமிழ்நாட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டோ கொட்டென்று கொட்டியிருக்கிறது.இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படம் மொத்தம் ஆறு விருதுகளை அள்ளி  வந்துள்ளது.இது தமிழராகிய நமக்கெல்லாம் எத்தனை பெருமை?!!!

சிறந்த நடிகர்-தனுஷ், சிறந்த இயக்குநர் - வெற்றிமாறன், சிறந்த திரைக் கதை- வெற்றி மாறன், சிறந்த நடன வடிவமைப்பு-தினேஷ்குமார், சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருதும் ஆடுகளம் படத்துக்குக் கிடைத்துள்ளது. சிறந்த எடிட்டிங்குக்கான விருது - கிஷோருக்கு  கிடைத்துள்ளது. பேட்டைக்காரன் என்னும் முக்கிய கதாபாத்திரத்தின்  மூலம்  பல லட்சம்     ரசிகர் நெஞ்சங்களில் ஒரே நாளில் குடி புகுந்த   புது முக நடிகரான ஈழக் கவிஞர்   ஐ . வெ.ச. ஜெயபாலனுக்கு சிறப்பு விருதும் கிடைத்துள்ளது!!!
மேலும் யார் யாருக்கெல்லாம் இவ்வருடம் தேசிய விருதுகள் கிடைத்துள்ளது என்பதை இந்த சுட்டியில் அறியலாம், இந்த பொன்னான தருணத்தில் இயக்குனர் வெற்றிமாறனை மனதார போற்றி வாழ்த்துகிறேன்.அவர் இது போல பல உலக சினிமாக்களை படைக்க இந்த விருது உந்துதலாக அமையுமென்பது திண்ணம்!!!இந்நேரத்தில் எனது ஆடுகளம் திரைப்பட விமர்சனத்தை மீள்பதிவாக இடுவதில் பெருமை அடைகிறேன்.நன்றி.

ஆடுகளம் [Adukalam] [இந்தியா][2011] தமிழில் ஓர் உலக சினிமா!!!


டுகளம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படம், வெற்றிமாறன் உலக அளவில்  மதிப்பிடப்படும் தரமான தமிழ் சினிமாவின் நம்பிக்கை ஒளி . பொல்லாதவனுக்கும் ஆடுகளத்துக்கும் இடைப்பட்ட மூன்று வருடத்தில் இவர் நிச்சயம் நிறைய வீட்டுப் பாடங்கள் செய்திருப்பார் என நம்பினேன், அது பொய்க்கவில்லை. மேலும் ஒரு இயக்குனருக்கு இரண்டாவது படம்  மரணக்கிணறு போன்றதாகும். நல்ல கதைக்களமும் சிறப்பான தொழில்நுட்பம் சார் இயக்கமும் இருந்தால் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னும்  அக் கிணற்றைத் தாண்ட முடியும். ஏனைய இயக்குனர்கள் வித்தியாசமாக படம் செய்யவேண்டும், புதிதாக செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் துவங்கி, படத்துக்கான கருவை தன்னுள் தேடாமல் காற்றில், குறுந்தகட்டில் அந்நிய திரைப்படங்களில் தேடுவர். அதை அப்படியே தூக்கி தமிழ் சினிமாவுக்காக மாற்றி களவாடுவர். அது பல சமயம் பிள்ளையார் பிடிக்கபோய்  குரங்கான கதை தான்!!!.

னால்,வெற்றிமாறன் இரண்டாம் படத்திலும் தன் முத்திரையை ஆழமாக பதித்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றிலேயே படத்தின் கதை வடிவமைக்க உந்துதலாய் அமைந்த திரைப்படங்களின் பெயர்களைப் போடுகிறார் பாருங்கள். அது மிக மிக அரிய பண்பு. தனக்கு சொந்த மண்ணின் கதையான சேவல்சண்டையை படமாக்க உந்துதல் அளித்தது அமெர்ரோஸ் பெர்ரோஸ்ஸின் நாய்ச்சண்டை தான் என்கிறார். பொல்லாதவன் திரைப்படத்தை நான் எத்தனை முறை பார்த்தேன்  என்றே தெரியாது . வெற்றிமாறன் சிரியஸாக பேரலல் சினிமா எடுப்பேன் என கிளம்பி பணம் போட்ட தயரிப்பாளரை இதுவரையில் மொட்டையடித்ததில்லை. மெயின் ஸ்ட்ரீம் சினிமா விரும்பிகளுக்கும், பேரலல் சினிமா விரும்பிகளுக்கும் ஏற்ற வகையில் படம் எடுத்து எல்லோரையும் இன்புற்று உய்ய வைத்திருக்கிறார்.

பொல்லாதவன் திரைப்படத்தை ஒருவர் பைசைக்கிள் தீவ்ஸுடன் ஒப்பிட்டால் அது மிகப்பெரிய நகைப்புக்கிடம், ஆது வேறு, இது வேறு, ஆடுகளமும் எதனுடனும் ஒப்பிட முடியாத ஒரு ஆகச்சிறந்த படைப்பு!!!. எம்.டி வாசுதேவன் நாயர். மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பரதன், பாலா போன்றவர்களின் படைப்புகளுக்கு அடுத்து காலத்துக்கும் பேசப்படக்கூடிய படைப்பு . நிறைகுடம் தளும்பாது குறைகுடம் கூத்தாடும் என்பதற்கேற்ப , இயக்குனர் வெற்றி மாறன் தலைக்கனமாக பேசி நான் இதுவரை  பார்த்ததில்லை. ஆனால் அவர் படைப்புகள் அவருக்காக பேசும். உணர்வு ரீதியாக திரைப்படங்கள் வடிக்கும் பாலாவின் புதிய படம் அவன் இவன் , அது ஆடுகளம் உண்டாக்கிய தாக்கத்தை தரவேண்டும்,  தந்துவிடுமா?!!! என நினைக்கத் தோன்றுகிறது. ஆடுகளத்தில் அவ்வளவு சக்திவாய்ந்த பாத்திரங்கள் வெற்றிமாறன் உருவாக்கியது, அவற்றை நிஜத்தில் உலவவிட்டது, அதை செலுலாய்டு அற்புதம் என்பேன்.

து நாயகனுக்காக பின்னப்பட்ட கதை அல்ல, கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமுமே நாயகர்களாக தம்மை முன்னிறுத்திக் கொள்பவர்கள் தான், அவர்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களுக்கு மத்தியில் குறுக்கிடும் சேவல்சண்டை, அதனுடன் பின்னிப்பிணைந்த காதல், நட்பு, பாசம், அன்பு, வெற்றி, தோல்வி, புகழ்,  கவுரவம்,  துரோகம், இரட்டைவேடம்  வஞ்சம் என அன்றாடம் காய்ச்சி மனிதர்கள் நாம் வேடமிட்டு அரங்கேற்றிக்கொள்ளும் சம்பிரதாய நாடகங்களே!!!,

டத்தின் இறுதியில் சில புதிர்களை நமக்கு பொதித்து வைக்கிறார் இயக்குனர். குரு-பேட்டைக்காரன்  சிஷ்யன் கருப்புவின் கண்முன்னால் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு சரிகிறார். அது ஏன்?,   குட்டு வெளிப்பட்டதே என வெட்கப்பட்டு கூசியவர் மனம் திருந்தி  கழுத்தை அறுத்துக்கொண்டாரா? அல்லது தான் இறந்த பிறகும் கூட இந்த கருப்புக்கும் துரைக்குமான வஞ்சம் கொழுந்துவிட்டு எரிய வேண்டும். கருப்பு நடைபிண வாழ்வு வாழவேண்டும், சேவற்கட்டாரியாக புகழ் பெறவேகூடாது என  வீம்புக்கென்று கழுத்தை அறுத்துக்கொண்டாரா? யோசித்துப்பார்க்கிறேன். சுவாரஸ்யமான புதிராய் தான் இருக்கிறது.இப்படித்தான் நிஜவாழ்வில் நமக்கு மிக பரிச்சயமான மனிதர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என கணிக்க முடிவதில்லை.


றுதியில் கருப்பு தன் குருவுக்கு காணிக்கையாக அவர் இறந்த பிறகும் அவர் புகழுக்கு கேடு நிகழக்கூடாது என்று ஊரைவிட்டே ஓடுகிறார் . ஒரு பக்கம் போலீசும் மறுபக்கம்  துரையின் ஆட்களும் தேட, நிராயுத பாணியாக காதலியுடன் ஓடுகிறார். இக்காட்சியிலும்  நம்மை சிந்திக்கவித்திருக்கிறார்  இயக்குனர். அது ஏன்?..ஓடுகையில் கருப்பு தன் குரு பேட்டைக்காரன் அவர் வீட்டில்  பதுக்கிவைத்திருந்த பணம்  2.5 லட்சத்தை தன்னுடன் எடுத்துக்கொண்டு வந்தவர் அதை ஆட்டோவிலேயே விட்டு விட்டு  செல்வது தனக்கு பணம் ஒரு பொருட்டல்ல  எனக்காட்டவா ?!!! அல்லது தன் குருவின் வீட்டில் அப்பணம் இருந்தால் தன் குரு பேட்டைக்காரன் தான் குற்றவாளி என துரைக்கும் ஊராருக்கும் தெரிந்துவிடுமே எனக்கருதியா?!!! கருப்பு அந்த 2.5 லட்சம் பணத்தை குருவின் பணம்[பேட்டைக்காரன் பதுக்கியதால்] என்று தான்  கொண்டு போகாமல் தான் வந்த ஆட்டோவிலேயே  விட்டுட்டார் என நினைக்கிறேன். அவர் அதைக் கொண்டு போயிருந்தாலும் எந்த பாதகமில்லை. ஊராரின், போலீசாரின் பார்வையில் அவர் கொலைகாரனே!!!பொல்லாதவனில்  பல்சர் பைக்கும் ஒரு பிரதான பாத்திரம்,இதில் அந்த துணிக்கடை பாலீத்தீன் பைக்குள் இருக்கும் பணமும்  ஒரு பிரதான பாத்திரம்.  இயக்குனர் வெற்றிமாறன் தாராளமாக இந்த புள்ளியில் இருந்து ஆடுகளம் பாகம்-2ஐத் துவக்கலாம், அதுவும் வேறு ஒரு கதைக்களத்தில். பில்லா-2, மன்மதன் -2, நடுத்தெரு நாய்கள்-2 என பாகம்-2 எடுக்கையில் இதை தாராளமாக எடுக்கலாம்.


ர்  சாதாரணத்தை வைத்து அசாதாரணம் படைத்துள்ளார் இயக்குனர்.  தனுஷ் கருப்புவாக வந்து கல் நெஞ்சங்களையும் கூட கரைத்துவிடுகிறார். படிக்காத ஊதாரி இளைஞன் வேடம் என்றால் இவருக்கு சர்க்கரையாயிறே? !!! சிம்பு போன்ற தன் வயதை ஒத்த நடிப்பு அவமானங்களுக்கு எதிர்மாரான நடிகர் தனுஷ் . பொல்லாதவனில் இவரை பிடிக்காமல் போயிருந்தாலும் இதில் நிச்சயம் பிடித்து விடும். அப்படி கருப்பு கதாபாத்திரத்துக்குள்ளே காணாமல் போயிருக்கிறார். ஒரு காதல் பித்து பிடித்தவன் , குருவின் கடைசி செல்லப்பிள்ளையான சீடன். விதவை அம்மாவுக்கு வாய்த்த தத்தாரிப்பிள்ளை என எத்தனை பரிமாணம் தனுஷுக்கு?!!! . தோழி அய்லினிடம் இந்த இடத்துல ஒரு மவுத்கிஸ் அடிச்சி ஃபினிஷ் பண்ணிக்கலாமா?!!! என்று கேட்பதும், ஐஅம் லவ் யூ, என்பது, அவள் உனக்கு  என்ன வேண்டும்? என்றதும் பால்ஸ்!!!பால்ஸ்!!! என்பது, என்ன தொழில் செய்கிறாய்? என ஆங்கிலோ இந்திய மூதாட்டி கேட்க காக் , காக் ஓட்டிங் என்பதும் படு ஆரவாரம், அதுவும் சேவல் சண்டைக்காட்சிகளில் இவர் எதிராளி கட்டாரியிடம் பேசும் நகைச்சுவை கலாய்ப்பு வசனங்கள் அபாரம். தனக்கு  தானே பேசும் இளைஞர்களை உங்களுக்கு தெரியுமா?எனக்கு நிறைய பேரைத் தெரியும்.இதில் கருப்புவும் நிறைய கனவுகளை தனக்குள் இருக்கும் ஒருவனிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்.யதார்த்தம்.

பேட்டைக்காரனாக வந்த ஜெயபாலன், என்னே ஒரு புதுமுகம்?!!! கடவுளே இப்படி ஒரு நடிகரை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதற்கே  வெற்றி மாறனுக்கு கோடி நன்றிகள். இவர் சமகாலத்தின் சிறந்த புதுமுக குணச்சித்திர நடிகர் என்பேன். தமிழில் ஓர் சிறந்த நடிகர் ராஜ்கிரனுக்கு ஆகச்சிறந்த மாற்று கிடைத்துவிட்டார். இவருக்கு ராதாரவி குரல் கொடுத்ததன் மூலம் அவரும் ஓர் அங்கமாகிவிட்டார். அத்தனை பொருத்தம். துரையின் மீது கோபப்பட்டவர், மீனா சாரைப் போகசொல்லு முகத்தைப் பார்க்கவே பிடிக்கலை என்னும் இடமெல்லாம் க்ளாஸ்.  இந்த தத்ரூபமான ரிசல்ட் வருவதற்கு மாறன் எப்படி உழைத்திருக்க வேண்டும் ?!!! மலைப்பாக இருக்கிறது, பேட்டைக்காரன் சக்கை போடு போடுகிறார். இனி அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கா விட்டாலும் வாழ்நாள் சாதனைக்கென்று சொல்லிக் கொள்ள இப்படம் ஒன்றே போதும்.

ன்ஸ்பெகடர் ரத்னசாமி பாத்திரம் அபாரம், நரேனுக்கு இன்ஸ்பெகடர் & சேவல்சண்டை கட்டாரி என இரட்டைச்சவாரி. எனக்குத் தெரிந்து இந்த அளவுக்கு யாரும் நிஜ வாழ்வில் நாம் காணும் போலீஸ் போன்றதோர் வேடத்துக்கு இப்படி பொருந்தியதில்லை, எப்படி? காய் நகர்த்தினால் பழைய சேவல்சண்டை கூட்டாளி பேட்டைக்காரன் ,தன்னிடம் மீண்டும் சேவல் சண்டைக்கு வருவான்,  என்று இவர் போடும் ஒவ்வொரு திட்டமும் தூள். ஒரு கட்டத்தில் சேவல் சண்டையில் பேட்டைக்காரனின் மற்றொரு சிஷ்யன் கருப்புவிடம் தோற்றுவிட்டதும் அதை பேட்டைக்காரனிடமே தோற்றதாய் கருதி சேவல் சண்டையை தலை முழுகுவது அற்புதம். சேவல்சண்டை போட்டிகளில் இப்படி ஒரு குலமானம் பொதிந்திருப்பது எந்த படத்திலும் இப்படி காட்டப்பட்டதில்லை. அவரின் அம்மா, மனைவி, உதவியாக வரும் வழுக்கை மண்டை போலீஸ்[புதுப்பேட்டையில் தனுஷின் அப்பா?] ஏட்டு என ஒவ்வொரு பாத்திரமும்  சிறப்பு.

துரையாக வந்த கிஷோர் அதகளம் செய்துள்ளார், இதில் ஆட்டோ சங்கர் போல கெட்டப்பில் கிராப் தலை, இரவல் குரல் அவருக்கு.  இதற்கு முன் நம்முள் பதிந்த பொல்லாதவன், வெண்ணிலா கபடிக்குழு, வம்சம் போன்ற படத்தில் பார்த்த கிஷோரின் பாதிப்புகளை அழித்துவிட்டு, புதிய வடிவம் பெற்று துரையாகவே வாழ்ந்திருக்கிறார். ஒரு குருவின் முதன்மை சிஷ்யனுக்கு  தனக்குத்தான் எப்போதுமே குருவின் பாராட்டு கிடைக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும். அதற்கு பங்கம் வந்தால் அவனிடம் கர்வமும் பொறாமையும்  குடிகொள்ளும்,  எவ்வளவு குணவான் ஆயினும் அவனுள் ஆத்திரம் குடிகொண்டால் அவன் புத்தி மட்டமாகிவிடும், அந்த நிலையை படத்தின் பிற்பாதிகளில்  மிகச்சரியாக உள்வாங்கி நடித்துள்ளார் இவர். இவருக்கு சமுத்திரக்கனி குரல் கொடுத்ததன் மூலம் சமுத்திரக்கனியும் ஒரு அங்கமாகிவிட்டார். இவரின் மதுரைத்தமிழ் மிகவும் சுத்தம். கருப்பு வாங்கித் தரும் மோதிரத்தை கையில் வாங்கியவர், எதுக்குடா வீண்செலவு?  என்று கேட்டு விட்டு அதை வாங்கி போட்டுக்கொண்டு நல்லாருக்குடா, என்று கருப்பை பாசத்துடன் பார்ப்பார். மிகவும் ரசித்தேன். அண்ணன் தம்பியாகவே பழகியவர்கள் கடைசிக் காட்சியில் நிலவொளியில் நிலத்தில் புரண்டு அடித்துக் கொள்ளும் காட்சி நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது, கருப்புவின் அம்மாவின் சாவில் உண்மையிலேயே வருத்தத்துடன் வந்துவிட்டு, பேட்டைக்காரனின் திறமைரீதியான ஒப்பீட்டுதலால் கருப்புவின் மீது சடாரென ரஜோகுணம் கொண்டு, அக்ரீமெண்டு போட்டிருக்கு!!! நினைவிருக்குல்ல? சீக்கிரம் போட்டி நடக்கட்டும்!!! என்று கறாராய் சொல்வது எல்லாம் க்ளாஸ்.

பேட்டைக்காரனின் நண்பன் உதவியாளன் அயூப்பாக வந்தவர் பெரிய கருப்ப தேவர், படத்தின் மூன்று முக்கியபாத்திரமான ஆணிவேர் கதாபாத்திரங்கள் பேட்டைக்காரன், ரத்னசாமி பின்னே இவர். மொத்தமே ஐந்து அல்லது எட்டு நிமிடம் தான் காட்டப்படுவார் .   ஆனால் பாதி படம் முழுக்க இவரைப் பற்றி பேசுகின்றனர். அதன் மூலம் இவர் சேவல் சண்டைக்கு அளித்த பங்களிப்பை நாம் கண்கூடாக அறிகிறோம். நடக்கப்போகும் தன் மகள் திருமணத்துக்கு சீதனமாய் மோட்டார் பைக்கும் மொத்த திருமணச்செலவையுமே ரத்தினசாமி ஏற்பதாய் சொல்லியும், தடுமாறாமல் 40 வருடகால நட்பே முக்கியம் என்று சீறி விலகும் பாத்திரம். மிக முக்கியமானது.பணத்தால் எல்லோரையும் விலைக்கு முடியாது என சொன்ன பாத்திரம்.

28வயது மூத்த பேட்டைக்காரனுடன் அவரின் சேவல்சண்டை வெற்றிகளை ரசித்து, ஆசைப்பட்டு ஓடிவந்து சேர்ந்து வாழும் மீனாள் பாத்திரம், குறிப்பிடவேண்டிய ஒன்று. இவரின் தவமாய் தவமிருந்து அண்ணி பாத்திரம் கூட மறக்க முடியாதது, நாம் வாழும் சமூகத்தில் அடித்தட்டு வர்க்க மக்களிடையே மனதுக்கு பிடித்திருந்தால் இது போல ஓடிவந்து சேர்ந்து வாழும் சூழல் இருக்கிறது. அதை நம்பும் படி பிரதிபலித்திருக்கிறார். ஒருகட்டத்தில் அதிகம் பிடித்த பேட்டைக்காரன் மீது ,அதீத வெறுப்பு ஏற்பட்டு மண்ணைவாரி தூற்றிவிட்டு, இனிமேலும் நான் இங்கருந்தா எனக்கும் விஷம் வைத்து கொன்னுடுவே!!!!,என்று கதறி அழுது நைட்டியுடனேயே  வீட்டைவிட்டு வெளியேறும் காட்சிகள்  சிறந்த சான்று.ஒரு ஆணின் சந்தேகம் எந்த அளவுக்கு அவனை விரும்பிய பெண்ணை உடையச்செய்யும் என விளக்கும் பாத்திரம்.

டுப்பல்லில் சொத்தையுடன் கருப்புவின் வலது கையாய் வரும் நண்பன் ஊளையை குறிப்பிட்டு சொல்லவேண்டும். அதிரடியான கருப்புவுக்கு எதையுமே பகுத்தறிந்து பார்க்கத் தெரியாது , ஆனால்? ஊளைக்கு தெரியும். இரவு 7மணிக்கு எந்த தெருடா வெறிச்சோடியிருக்கு?, தப்பா தெரியுதுடா, பணம் பூராத்தையும் அவர் தான் ஆட்டைய போட்டிருப்பாரோன்னு சந்தேகமாருக்குடா!!!! , எனச்  சொல்லி கருப்புவிடம் சத்து சத்தென அடி வாங்குகிறார். நண்பனுடன் நிழலாகவே நடந்திருக்கிறார். தூய நட்பு எதிர்பார்ப்பற்றது,  அத்தூய நட்புக்கு சான்று தான்  ஊளை பாத்திரம்.

னுஷின் அம்மாவாக வந்த பெண்மணி சுப்ரமணியபுரத்தின் அழகருக்கு அம்மாவாக வந்த பெண்மணி எனத் தெரிந்தது, அந்த அம்மா மிக மிக இயல்பான பாத்திரம், என் தலைவிதி ஆயுசுக்கும் கோழிப்பீயை அள்ளிச் சுமக்கனும்!!!! என அங்கலாய்க்கும் பாத்திரம். என் அம்மா நினைவுக்கு வந்தது. அம்மா என்பவள் எத்தனை மேலான படைப்பு, தெய்வத்துக்கும் மேலானவள் தாய் என நினைக்கத் தோன்றுகிறது. எப்போதோ இறந்த கணவரின் நினைவை அவர் வாழ்ந்த வீட்டு சுவற்றிலும் தரையிலும் உணர்ந்தவர், அது கணவன் கடன் வாங்கியதால் இன்னும் அடமானத்தில் இருப்பதால்  அவ்வீட்டிற்க்கு அடுத்த ஒரு சிறிய ரேழியியையே ஒத்திக்கு எடுத்து குடியிருக்கிறார். இது மதுரையில் நான் நிறைய பார்த்திருக்கிறேன். மதுரையின் மனிதர்கள், ஆடம்பரத்தை வெறுப்பவர்கள். 8 அடி அகலம் 20 அடி நீளம் இருந்தாலே அதில் 2 குடித்தனம் கூட இருக்கும். அந்த ரியாலிட்டிக்காக இதை சொல்லவந்தேன். பேட்டைக்காரன்  வசிக்கும் ஊருக்கு வெளியே அமைந்த  மலையடிவார வீடும் ஒரு ரியாலிட்டி காட்சியாக்கத்துக்கு சான்று. போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள், சேவற்சண்டை டோர்னமெண்ட் காட்சிகள். ஃபெளெக்ஸ் சைன் போர்டில் பேட்டைக்காரனுக்கும் துரைக்கும் ரத்னசாமிக்கும் வைக்கப்படும்  அரச தோரணை தீம்கள். ஆரவாரமான எதிர்ப்பார்ப்பைக் கூட்டும் சேவற் சண்டை காட்சிகள் என ஒவ்வொன்றும் அருமையாக பார்த்துப் பார்த்து இழைத்த ரகம்.
 
புறநகர அரசுப்பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களுக்கும் ஏனைய புற நகர் மக்களுக்கும் அடிக்கடி தங்கள் தெருவில் நடக்கும் ஒன்றைத் தெரிந்திருக்கும். கூடப்படிக்கும் அழகான பெண்ணுக்காக மாணவர்கள் அடித்துக்கொள்ளும் காட்சி தான் அது , அதை சால்வ் செய்வதற்க்கென்றே ஒரு பழைய மாணவரும், மிகவும் ஆடி முடித்த சித்தப்புவும் இருப்பார்கள், அது போல இப்படத்தில் ஒரு காட்சி, ”தங்கச்சி ரெண்டு பேர்ல நீ யாரை லவ் பண்றேன்னு சொல்லும்மா”!!!அண்ணங்க நாங்க பாத்துக்கறோம் என்கிறார்கள். செம நோஸ்டால்ஜியா கிளம்புகிறது.

ய்லினாக வந்த தப்ஸி மிகமிக அழகு, பெண் மனசு ஆழம் என்று சொல்லுவார்கள், பெண் மனம் மிகவும் புதிர், பேரழகனைக்கூட திரும்பிப் பார்க்காத சில பெண்கள் மிகவும் சாதாரணமாய் இருக்கும் பலருக்கு விருப்ப துணையாக அமைந்து விடுவதுண்டு, அதை நானே பல இடங்களில் பார்த்திருக்கிறேன், இதை வைத்து தான் விவேக் கூட வாடா நாமளும் நம்ம மூஞ்சியில் ஆசிட் ஊத்திக்கலாம், அப்போதான் பொண்ணுங்க நம்மையும் பார்க்கும்!!! என மின்னலேவில் லந்தாக சொலுவார். ஆகவே அய்லினுக்கு நாயகன் கருப்புவின் மீது காதல் வருவது என்னைப்பொறுத்த வரை நம்பும்படியாகத்தான் உள்ளது, தவிர பெண்களுக்கு, தனக்கு எல்லாம் தெரியும் என இறுமாந்திருப்பவனை விட தனக்கு தெரியாது என்பவனை மிகவும் பிடிக்கும் போலும், அதனால் தான் படிக்காத குடிகாரன், சேவல் சண்டை கட்டாரி தன்னிடமே காசு பிடுங்கிய கருப்புவைக் கூட காதலிக்க வைக்கிறது.

து தவிர நான் பல்லாவரம் வெட்ரன் லைன்ஸ் [veteran lines] பகுதிகளில்  பால்யத்தில் அதிகம் சுற்றியிருக்கிறேன். அங்கே ஏனைய ஆங்கிலோ இந்திய இளம்பெண்கள் ஆங்கிலோ இந்தியரல்லாத மற்ற சாதி ஆண்களையே அதிகம் விரும்பி வீட்டை எதிர்த்து வெளியேறியிருக்கிறார்கள். அவர்களையே திருமணமும் செய்து கொண்டு ஒண்டுக் குடுத்தனத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டு, எதாவது நிறுவனமொன்றில் டெலிபோன் ஆபரேட்டராக இருப்பர். அவர்களின் கணவன் ஒன்று சூதாடியாகவோ, குடிகாரனாக இருப்பான், அல்லது எதாவது நிறுவனத்தில் கடைநிலை ஊழியனாக இருப்பான்.  இதை வடசென்னையைப் பற்றி நன்கு அறிந்தவரான வெற்றிமாறன் அங்கே பெரம்பூரின் ஆங்கிலோ இந்தியக் குடியிருப்புகளில் அதிகம் புழங்கியிருப்பார் போல.அவர்களின் சமூகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் பக்கா.

தை நன்கு அவதானித்து தான் அய்லின்  பாத்திரத்தையும் அய்லின் கருப்பு காதலையும் உருவாக்கி சேர்த்திருக்கிறார். இதில் திணிப்பு, செயற்கை இல்லவே இல்லை என்பேன். என் நண்பன் சீனி என்பவன் தன் வீட்டுக்கு அடுத்த ஆங்கிலோ இந்திய குடித்தனப் பெண்ணான ஆண்ட்ரியா என்பவளை 15 வயதிலேயே ஃபிகர் மடித்தது, அதைப்பார்த்து நாங்கள் நமக்கு உசாராகலையேடா!!! என வயிறெரிந்தது எல்லாம் என் வாழ்விலேயே நடந்த படியால் நான்  இந்தக் காதலை நம்புகிறேன்.

டத்தில் வந்த எல்லா பாத்திரங்களையுமே எழுத்தில் வடிக்க ஆசைதான் ஆனால்!!!, அது அவ்வளவு எளிதா என்ன? படத்தை ஏற்கனவே 4 முறை பார்த்தாகிவிட்டது , ஒவ்வொறு முறையும் பார்க்கையில் ஒவ்வொன்றைப் பார்க்கிறேன். குறைகள்?!!! படத்தில் குறைகள் என்று பார்த்தால் ஒன்றிரண்டு உள்ளன, அதை பெரிது படுத்தி, தானம் வந்த மாட்டை பல்பிடித்து பார்கப்போவதில்லை.நல்ல படம் வருவதே அரிது!!!

சை, பாடல்கள் அடடா அருமையோ அருமை,  ஜிவி பிரகாஷ்!!! வெகுநாளாகவே நீங்கள் சாதிக்க ஆசைகொண்டு சிறந்த பங்களிப்பை ஆற்றி வருகின்றீர்கள், ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை, அது எல்லா துறையினருக்குமே விதிவிலக்கல்ல. உங்களிடம் உள்ள குறையே நீஙகள் எல்லாமாகவும் ஆக ஆசைப்பட்டு எதாகவும் ஆக முடியாமல் போவது போல், உங்களை நீங்கள் நம்பாதது தான். இப்படத்திலேயே நிறைய பாபெல், அமெர்ரோஸ் பெர்ரோஸ்,  21 க்ராம்ஸ் பிண்ணணி இசை பாதிப்புகள். நிறைய அந்நிய படைப்புகள், இசைக்கோர்வைகள் சங்கீதம் கேட்கும் நீங்கள் அதை அதன் பாதிப்பை, ஒரு கொலாஜ் போல வெளிக்காட்டிவிடுகிறீர்கள், பல இடங்களில் எளிமையே அழகு, பல இடங்களில் சத்தமே தேவையில்லை, பாடல்களில் எந்த குறையுமில்லை, பிண்ணணி இசை பிரமாதமாக இருந்தும் எதற்கு எதைப் போடுவது என்ற தெரிவு  இல்லை, ஆனால் அது பலவருட தவம், இந்த உங்கள் இடத்தை  இளம் வயதில் அடைந்தமைக்கு பாராட்டுக்கள். இப்படத்தில் உங்கள் இசை தனுஷின், மீனாளின், அய்லினில் சிலபல  வசனங்களை கபளீகரம் செய்துவிட்டது, மற்றபடி எல்லா பாடல்களும், அதற்கு அளிக்கப்பட்ட இசைப்பங்களிப்பும், குரல் தெரிவையும் மிகவும் ரசித்தேன்.

வேல்ராஜின் கேமராவைப் பற்றி சொல்லவேண்டுமானால் ஒரு பதிவு போதாது, நான் இதுவரை எந்த தமிழ் சினிமாவிலுமே இரவு ஒளிஅமைப்பில் இப்படி ஒரு ஒளிஓவியத்தை பார்த்ததில்லை,கதாபாத்திரங்களின் மீது விழும் நிலவு ஒளி, அங்கே ஏறபடுத்தும் சையோகிராஃபியை [நிழல்குத்து] உற்று நோக்குங்கள். அந்த நகாசு வேலைய ரசியுங்கள். உங்களுக்கு இந்த வேல்ராஜ் என்னும் மனிதனை பிடித்துப் போய்விடும். சந்தோஷ் சிவனின் பிஃபோர் த ரெயின்ஸ் படத்தை விட நன்றாக இருந்த ஒளிப்பதிவு. இரவு நிலவொளி வீட்டுக்குள்ளே விழுகையில் மஞ்சள் டோன் சேபியாவும்.இரவு நிலவொளி வீட்டுக்கு வெளியே விழுகையில் நீல நிற டோன் சேபியாவும் சேர்த்திருந்தார். இன்னும் சூரிய ஒளி கதாபாத்திரங்களின் மீது உண்டுபண்ணும் சயோகிராஃபியை க்ளோஸப் காட்சிகளில் மிகவும் ரசித்தேன்,ஹாட்ஸ் ஆஃப் வேல்ராஜ்.

பொல்லாதவனுக்கு அடுத்து மூன்று வருடம் தீஸிஸ் செய்து அதிரடியாய் மீள் நுழைந்து சதம் அடித்த வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள். இவரின் பேட்டி த சண்டே இந்தியனில் வெளிவந்ததை என் நண்பர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். மிக முக்கியமான பேட்டி அது!!!! ஆகவே உங்களுக்கும் அதைப் பகிர்கிறேன். படிக்கவும்.
=====0000=====

 தொடர்வது இயக்குனர் வெற்றி மாறனின் பேட்டி:-

"என் மனோநிலையைப் பொறுத்து என் ஹீரோவை வடிவமைக்கிறேன்"
ஆடுகளத்தில் வெற்றிகரமாக ஆடிமுடித்த உற்சாகத்துடன் பேசுகிறார் இயக்குநர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவின் மாணவர். காற்றில் கதைகளைத் தேடாமல் மக்களின் வாழ்க்கையில் கண்டடையும் இயக்குநராக பரிணமித்திருக்கிறார். சர்வதேசப் படங்கள், இலக்கியம், எழுத்து என தனது ஈடுபாடுகள் குறித்து த சன்டே இந்தியனிடம் பேசும்போது பகிர்ந்துகொண்டார்.
நீங்கள் எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள். உங்களுடைய பின்னணி என்ன?
என்னுடைய அப்பா சித்திரவேல், கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர். அம்மா Vetrimaranமேகலா சித்திரவேல், எழுத்தாளர். அக்கா டாக்டர். எனக்கு பதினைந்து வயதிலேயே சினிமா மீதான ஆர்வம் வந்துவிட்டது. ஆனால் அதை வெளிப்படுத்துகிற துணிச்சல் மட்டும் இல்லாமல் இருந்தேன். பள்ளிப்படிப்பை முடித்து லயோலா கல்லூரியில் சேரும்போதுதான், அதற்கான தருணம் வாய்த்தது. அந்த தைரியத்தை பேராசிரியர் ராஜநாயகம் கொடுத்தார். 'சினிமாதான் உன் எதிர்காலம் என்று நினைத்தால் அதில் ஈடுபடு' என்று உற்சாகமாகப் பேசினார். இந்தப் பயணத்திற்கு அவர்தான் தொடக்கம். அவரே என்னை இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் சேர்த்துவிட்டார். 1997 முதல் 2005 அதுவொரு கனாக் காலம் வரை அவரிடம் பணியாற்றினேன். 2004 ஆகஸ்டில் தனுஷ் படம் செய்யலாம் என்று சொன்னார். பொல்லாதவன் வெளியான ஆண்டு 2007 நவம்பர். வாழ்க்கையிலும் காத்திருத்தல் என்பது தொடர்ந்துவந்த சங்கடமாக இருந்தது. ஏழு ஆண்டுகள் காதலித்தேன். ஒரு படம் இயக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று காத்திருந்தேன். ஆனால் பையன் படம் பண்ணப் போகிறான் என்று வீட்டில் திருமண தேதியெல்லாம் குறித்துவிட்டார். படம் தள்ளிப்போனது, திருமணம் மட்டும் நடந்தது.

பாலுமகேந்திராவிடமிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள். அவருடைய பாணியிலிருந்து எப்படி மாறுபடுகிறீர்கள்?
எங்களிடம் இருப்பது பாலுமகேந்திரா கற்றுக்கொடுத்த சினிமாதான். ஆனால் அதை எங்களுடைய எண்ணத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவரிடமிருந்து வேறுபடவேண்டும் என்பதற்காகவே எந்த சினிமாவையும் எடுக்கவில்லை. அப்பாவும் நாமும் ஒன்றுதான் என்றாலும் ரேகைகள் வேறுபடுகின்றனவே. நமக்கு என்ன வருமோ அதுதான் பிரதிபலிக்கும். வளர்ப்புமுறை, சிறுபிராயத்தில் பார்த்த சினிமாக்கள், உள் மனம் எல்லாமும் சினிமா மொழியை, நாம் இயக்கும் படத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கின்றன. அவருடைய உயரத்துக்கு வர முடியாது. சின்ன அளவில்தான் அவரை நாங்கள் பின்தொடர்கிறோம். நம்முடைய இயல்பு என்னவோ அதுதான் படத்தில் கதையாக வருகிறது.

தனுஷூடன் சேர்ந்தே இரண்டு படங்களை செய்துள்ளீர்கள். இருவரும் சேர்ந்தே நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளீர்கள். ஒரு இயக்குனராக தனுஷை எப்படி பார்க்கிறீர்கள்?
அதுவொரு கனாக் காலம் படத்திலிருந்து தனுஷூடன் பழக்கமுண்டு. அவர் ஒரு டைரக்டர் ஆர்டிஸ்ட். ஒவ்வொரு காட்சியையும் நன்கு புரிந்துகொண்டு நடிப்பார். எல்லா படங்களிலும் அவர் கற்றுக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறார். ஒரு இயக்குனர் சொல்வதை மட்டும் கேட்பது பெரிய விஷயமில்லை. ஆனால் நமக்கு என்ன தேவையோ, ஸ்கிரிப்ட்டுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே அவர் தருவார். ஒரு மில்லி மீட்டர் அளவுகூட ஸ்டார் என்பதை எந்த காட்சியிலும் வெளிப்படுத்த மாட்டார். இப்படி செய்துகொள்ளலாமா என்றும் கேட்டு காட்சிக்கு மெருகு சேர்ப்பதில் ஆர்வமாக இருப்பார். என்னுடைய மனோநிலை, உடலமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து என்னுடைய ஹீரோவை வடிவமைக்கிறேன். 72 மணி நேரம் நான் தூங்காமல் வேலை பார்த்துக்கொண்டே இருப்பேன். எனவே எனது படங்களில் தூங்குவது போன்ற காட்சிகளை வைக்கமாட்டேன். என்னால் இரண்டுபேரை அடிக்க முடியும். அதுக்குமேலே முடியாது என்றால் என் ஹீரோவும் அப்படித்தான். தனுஷை மனதில் வைத்துக்கொண்டுதான் கதைகளை எழுதுகிறேன். இதுவரை 5 ஸ்கிரிப்டுகள் எழுதி, 2 படங்களைத்தான் எடுத்திருக்கிறேன். வேறொருவரை வைத்து எழுத எனக்கே பயிற்சி வேண்டும். ஆடுகளம் படத்தில் பட காட்சிகளில் வெறுமனே நிற்பார்; சும்மா உட்கார்ந்திருப்பார். படம் வெளிவந்ததும் யாரைப் பற்றிப் பேசுவார்கள் என்று அவருக்குத் தெரியும்.
கமர்ஷியல் பார்முலாக்களிலிருந்து விலகி தமிழ் சினிமா, தமிழ் வாழ்க்கையை சற்று நெருக்கமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்தப் போக்கு குறித்த உங்கள் கருத்தை சொல்லுங்கள்?
தமிழர்களின் அடையாளங்களை தமிழ் வாழ்வியலை கூர்ந்துப் பார்த்து படங்கள் எடுப்பது புதியதல்ல. பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் நமக்குக் கிடைக்கத் தொடங்கிய சர்வதேசப் படங்களின் பரவலான அறிமுகம் நம்முடைய அடையாளங்களைத் தேடவைத்திருக்கிறது. அது 2002 வாக்கில் நிகழ்ந்தது. இப்படி டிவிடிக்களை மக்களிடம் ஜனநாயகப்படுத்திய பர்மா பஜார் வியாபாரிகளுக்கு ஒரு படத்தை அர்ப்பணிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். சில படங்களை படவிழாக்களில்தான் பார்க்கமுடியும். அவர்கள் அதையெல்லாம் எளிதாக்கிவிட்டார்கள்.
எந்த அளவு துல்லியமாக நம் மண்ணின் அடையாளங்களைச் சொல்கிறோமோ, அந்த அளவு அது சர்வதேச எல்லையைத் தொடும். சர்வதேசப் படங்கள் உள்ளே வரும்போது தன்னுடைய மண்சார்ந்த அடையாளங்களை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கம் அதிகரிக்கிறது. என் முதல் படத்தில் சென்னை வாழ்க்கையைச் சொன்னேன். அதைவிட சேவல் சண்டையின் மிகப்பெரிய பதிவாக ஆடுகளம் இருப்பதால், ஒரு சமூகத்தின் வாழ்க்கையைச் சொன்ன திருப்தி இருக்கிறது. ஆடுகளம் படத்திற்கு Ôஅமரோஸ் பரோஸ்Õ என்ற படம்தான் ஆரம்பப்புள்ளியாக இருந்தது. அதில் ஒரு நாய்ச்சண்டையின் ஊடே பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். சர்வதேசப் படங்களைத் திறந்துவிட்டதுதான் நம்முடைய வேர்களை நோக்கி பயணிக்கத் தூண்டுதலாக அமைந்தது.
ஒரு சினிமா இயக்குனர் என்பதற்கான உங்களது தனிப்பட்ட இலக்கணம் என்ன?
ஓர் உண்மையைச் சொல்வதென்றால் ஆக்ஷன், கட் சொல்வதால் மட்டும் இயக்குநராகி விடமுடியாது. ஒரு முழுமையான விழிப்புணர்ச்சியுள்ள நிலையை அடைந்து, ஒரு நல்ல படத்தை எடுத்துவிடுவேன் என்ற நம்பிக்கையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதற்கான ஒரு பயணத்தில் இருப்பதாகவே உணர்கிறேன். பொல்லாதவன் படத்தில் பணியாற்றிய படக்குழுவினரை ஆடுகளம் படத்தின் மூலம் ஒரு படிமேலே உயர்த்தி வைத்திருக்கிறேன். அந்த வகையில் நாங்கள் எல்லோரும் ஒரு வளர்ச்சியைக் கண்டிருக்கிறோம்.
வாசிப்பு அனுபவம் சினிமாவுக்கு எப்படி உதவுகிறது?
இருபத்தைந்து வயதில் ஸ்கிரிப்ட் எழுதத் தொடங்கிவிட்டேன். ஒரு சராசரி வாழ்க்கையை வாழ முயற்சித்தாலும் சில நேரங்களில் அது இயலாமல் போய்விடுகிறது. ஒரு முப்பது ஆண்டு அனுபவத்தை வைத்துக்கொண்டு, அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு எப்படி கதைகள் எழுத முடியும். இரண்டு, புத்தகங்கள் என் மனப்போக்கை மாற்றியமைத்தன என்று சொல்லலாம். மங்கோலிய நாடோடிகளின் வாழ்க்கையைச் சொன்ன ஜியாங் ராங்கின் 'உல்ஃப் டோட்டம்'என்ற 600 பக்க நாவல், இருபது ஆண்டுகால வாழ்க்கையை சாறாகக் கொடுத்தது. அந்த எழுத்தாளரின் பல ஆண்டு அனுபவங்களை பத்து நாட்களில் புரிந்துகொள்கிறோம். மாணவப் பருவத்தில் படித்த அலெக்ஸ் ஹேலியின் Ôரூட்ஸ்Õ என்ற நாவல். என் வாழ்க்கையை ரூட்ஸ¨க்கு முன் பின் என்று பிரித்துக் கொள்ளலாம். ஓர் ஆப்பிரிக்க குடும்பத்தின் ஏழு தலைமுறையினரின் வலியைச் சொன்ன நூல் அது. ஒரு மனிதன் சக மனிதனை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துகிறான் என்பது புரிந்தது. புத்தகங்கள்தான் உலகத்தைப் பற்றிய முழுமையை நமக்குக் கொடுக்கின்றன. சினிமாக்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றுவதில்லை. நல்ல புத்தகங்கள்தான் அதைச் செய்கின்றன. நாங்கள் ஒரு கதையை வெளிப்படுத்தும் கட்டாயத்தில் இருப்பதால், சுவைக்காக படிப்பதற்குப் பதிலாக உள்ளடக்கத்திற்காக படிக்கும் கட்டாயம் வந்துவிட்டது.
உங்களுக்குப் பிடித்த சர்வதேச, இந்திய, தமிழ், இயக்குனர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
அகிரோ குரோசவா, அலெக்சாண்டர் கொன்சாலஸ் இனாரிட்டு, தமிழில் பாலுமகேந்திரா, மணிரத்னம்.
தமிழ் சினிமாவின் வணிகக்கூறுகளை தக்க வைத்துக்கொண்டே இயல்பான ஒரு கதையைச் சொல்கிறீர்கள். அதுதான் உங்கள் பாணியா?
ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் முதலீடு செய்கிற தயாரிப்பாளர், முதலில் அது கிடைக்கவேண்டும் என்றுதான் நினைப்பார். அதுவும் கிடைக்காவிட்டால் தொடர்ந்து படங்கள் செய்ய முடியாது. அது நிறைவேற வேண்டும். வேறெதையும்விட சினிமா என்ற கலையில் மட்டும்தான் அறிவியலும் வணிகமும் சேர்ந்திருக்கிறது. மினிமம் கேரண்டி இல்லாவிட்டால் எப்படி அடுத்த படத்தை எடுக்க முடியும். அதற்கு உத்தரவாதம் கிடைத்துவிட்டால், நாம் என்ன நினைக்கிறோமோ அதை செய்துகொள்ளமுடியும். எனக்கு இரண்டு படவாய்ப்புகளும் அப்படித்தான் அமைந்தன. என் விருப்பங்களுக்கு குறுக்கீடாக யாருமே நிற்கவில்லை. பொல்லாதவன் படத்தில் ஒரு காமெடி காட்சியை மட்டும் விருப்பமில்லாமல் வைத்தேன்.
வஐச ஜெயபாலனை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
எங்களுடன் பணியாற்றிய உதவி இயக்குநர் ஹசீன்தான், கவிஞர் வஐச ஜெயபாலனை அறிமுகப்படுத்தினார். 'ஒருமுறை அவரைப் பாருங்கள். நாம் தேடுகிற கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார்' என்று சொன்னார். அவரைப் பார்த்ததும் ரொம்பவும் பிடித்துவிட்டது. நடிக்கிறீர்களா என்று கேட்டேன். உடனே சரி என்றார். பேட்டைக்காரராக உருவாக்கிவிட்டோம்.

உங்களுடைய அடுத்த ஆடுகளம் என்ன?
இன்னும் தீர்மானிக்கவில்லை. கிளவுட் நைன் நிறுவனத்திற்காக அடுத்த படத்தை இயக்குகிறேன். என்மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பதால், ஏற்கெனவே எழுதிவைத்திருந்த கதைக்களனை மாற்றலாம் என்றிருக்கிறேன்.

சுந்தரபுத்தன்
நன்றி: த சன்டே இந்தியன்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)