குமா [KUMA][2012][ஆஸ்திரியா][ஜெர்மனி&துருக்கி]


குமா ஆஸ்திரிய நாட்டுத் திரைப்படம்,ஜெர்மனி மற்றும் துருக்கி மொழியில் வெளியானது. ஐரோப்பிய அரபு வாழ்வியல் யதார்த்தங்களை மிக அற்புதமாக வெளிப்படுத்தும் படைப்பு, குமா என்றால் துருக்கியில் சிற்றன்னை என்று அர்த்தம்,துருக்கி நாட்டில் அழகிய மலைக் கிராமத்தில் ஏழை பேரழகி   ஆயிஷா[] ,அண்டை நாடான ஆஸ்திரியாவில் குடியேறிய துருக்கியர்களின் குடும்பத்துக்கு அவசர அவசரமாக வாக்கப்படுகிறாள். மாப்பிள்ளை வீட்டாரே திருமண செலவை ஏற்றுக்கொண்டதால் மகள்களைப் பெற்ற ஏழை அப்பாவுக்கு பெரிய நிம்மதி. மாப்பிள்ளை வேறு வியனாவில் நிர்வாகம் படிப்பவர்,பெரிய கௌரவமான குடும்பம்,ஒரு பெரிய மனபாரம் இறங்கியது ஆயிஷாவின் அப்பாவுக்கு,இனி அவர் அடுத்த சகோதரிகளின் திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம்.


திருமணம் நடந்த அன்றே வியன்னாவுக்கு டெம்போ வேனில் புறப்படுகின்றனர். அங்கே வீட்டில் அடியெடுத்து வைத்த உடனேயே ஆயிஷாவுக்கு அதிர்ச்சிகரமான அந்த உண்மையை உரைக்கின்றனர். ஆயிஷா திருமணம் முடித்ததோ மகன் ஹசனை, ஆனால் அவனின் தந்தை முஸ்தஃபா [] தான் அவளை பெண்டாள காத்திருக்கிறார், மிகவும் கட்டுப்பெட்டியாக வளர்க்கப்பட்ட ஏழைப் பெண்ணான ஆயிஷாவை திருமணம் முடித்து கூட்டி வந்த அன்றே மாப்பிள்ளை வீட்டார் குழுமி, இந்த கேவலமான ரகசியத்தை அவளுக்கு எந்த கால அவகாசமும் தராமல் போட்டு உடைக்கும் இடம் மிக நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது,அதற்கு ஆயிஷா வெளிப்படுத்தும் திரை மொழி அபாரம்.
 
இதற்கு அவ்வீட்டு குடும்பத்தலைவர் முஸ்தஃபாவின் கேன்சர் வியாதி முற்றிய மனைவி ஃபத்மாவே[Nihal G. Koldas] முக்கிய காரணம், அவளுடைய கட்டாயம் மற்றும் மிரட்டலின் பெயரில் தான் இந்த அவலம் நடந்திருக்கிறது, தன்னை தியாகியாக காட்டிக் கொள்ள ஒரு இளம் நாற்றை வயல் மாற்றி நட்டிருக்கிறாள்.  தான் கீமோதெரபி &அறுவை சிகிச்சை  பலனளிக்காமல் இறந்து விட்டால் தன் கணவனும் குழந்தைகளும் கவனிப்பாரற்று போவரே, என்னும் சுயநலமே இதற்கு முக்கிய  காரணமாக இருக்கிறது, அன்றே அவளின் முடிவைக் கூட கேட்காமல் மேலும் ஒரு அதிர்ச்சியாக கிழப்புருடருடன் முதலிரவும் நடக்கிறது, ஏற்கனவே முதல் மனைவி மூலம் 6 வாரிசுகள் உள்ள குடும்பத்தலைவர், மகள் வயதில் இருக்கும் ஆயிஷாவையும் ஒரே வருட காலத்தில்  தன் மகளுக்கு தாயாக்குகிறார்.

 குடும்பத்தில் மூத்த மனைவியையும் கணவரையும் தவிர இது யாருக்கும் இந்த புதிய உறவை பிடிப்பதில்லை,ஆயிஷா தன் பிறந்த வீட்டார் யாருமே நடந்த அநீதியை அறிய விடுவதில்லை, தனக்கு கிடைத்த கிழப்புருடனை பாக்கியமாகக் கருதுகிறாள். ஒரே வீட்டில் முதல் மனைவியும் இரண்டாம் மனைவியும் அத்தனை ஒற்றுமையாக இருக்கின்றனர்,சக்களத்தி சண்டை என்றால் என்ன?என்னும் அளவுக்கு அந்நியோன்யம் நிலவுகிறது. முதல் மனைவிக்கு வேண்டிய அத்தனை சிருஷைகளையும் முகம் சுளிக்காமல் செய்கிறாள் ஆயிஷா, அவளுக்கு கழுவி குளிப்பாட்டுவது வரை ஒன்றுவிடாமல் செய்கிறாள்,

இவளை ஊரார் முன்பாக மணம் முடித்த மகன் ஹசன் ஆயிஷாவை மட்டுமல்ல எந்தப் பெண்ணையுமே திரும்பிப் பார்ப்பதில்லை,அவன் ஒரு ஹோமோ செக்ஸுவல், இந்த ரகசியத்தை அவன் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை, அவனின் இந்த ரகசியத்தை அறிந்தது போல் யாரும் வெளிக்காட்டிக் கொள்வதுமில்லை, ஆயிஷாவுக்கு மட்டும் இந்த ரகசியத்தை யாரும் தெரிய விடுவதில்லை, அவன் வியன்னாவில் படித்துக்கொண்டே பகுதிநேர வேலயும் பார்த்து தன் கல்விக்கட்டணத்தை கட்டிக்கொள்கிறான், வீட்டுக்கும் முடிந்ததை கொடுத்து வருகிறான், மூத்த மகன் ஜெர்மனியில் குடியேறியவன்,மணம் முடித்து மனைவியுடன் வசிக்கிறான்,ஆனால் வீட்டுக்கு எதுவுமே தந்து உதவுவதில்லை, அவன் இந்த விசித்திர திருமணத்துக்கு  ஜெர்மனியில் இருந்து வரவுமில்லை.

ஆஸ்திரியாவில்- வியன்னாவில் இருக்கும் அந்த  புறநகர் பகுதி மக்களின் பார்வைக்கு ஆயிஷா அவ்வீட்டின் மருமகள் மட்டுமே, ஆயிஷாவின் குழந்தையை அந்த குடும்பத்தலைவரின் பேத்தி என்றே எல்லோரும் நினைக்கின்றனர். ஆயிஷா போன்ற அழகியை தங்கள் மகனுக்கும் திருமணம் செய்ய ஆசைப்படுகின்றனர்,அதற்காக துருக்கிக்கு தூது விடுகின்றனர்.


ஆயிஷாவை அந்த குடும்பத்தலைவரின் கடைசி மகன் ,அவனின் பதின்ம வயது சகோதரி தவிர யாருமே பொருட்டாகக் கூட மதிப்பதில்லை. அவளை பட்டிக்காடு என்று புறம் பேசி கேலி செய்கின்றனர், நம்மூரில் எப்படி ஆங்கிலம் தெரியாததை ஒரு குறையாக கருதி கேலி பேசுவரோ, அதே போல ஆயிஷாவுக்கு ஜெர்மன் மொழி பேசத் தெரியாததை திருமணமாகி குழந்தையும் பெற்ற மூத்தமகளும்,பள்ளிப் படிப்பு முடித்த அடுத்த மகளும் கூட ஒரு பெரிய குறையாகவே குத்திக்காட்டுகின்றனர்.அவர்களுக்கு முன் ஆயிஷா  கூனிக்குறுகிப் போனாலும், கடைக்குட்டிகளின் அன்பினால் அந்த அவமானத்தை ஈடுசெய்கிறாள், அவர்களுடைய பள்ளிப் பாடங்களை யாருக்கும் தெரியாமல்   மெல்ல எழுத்துக் கூட்டிப் படித்து ஜெர்மன் மொழியை எழுதவும் படிக்கவும் கற்கிறாள்.

ஆயிஷா தன்னிடம் யார் எப்படி நடந்தாலும் அவள் அனைவரிடம் மிகவும் அன்பாக இருக்கிறாள், தனக்கு நிகழ்ந்த அநீதியைக்கூட இயல்பாக எடுத்துக்கொண்டு அத்தனை ஒட்டுதலுடன் அவ்வீட்டில் இளைய எஜமானியாக வலம் வருகிறாள், மூத்த மனைவி, தன் கணவரை தினமும் இரவில் அவளுடன் அனுப்பி உறங்கச் செய்கிறாள்.ஆயிஷாவும் ஃபத்மாவும் இருவருக்குள்ளும் எந்த ஒளிவு மறைவுமே வைத்துக் கொள்ளுவதில்லை, மகுடிக்கு மயங்கிய பாம்பைப்போல ஆயிஷா அந்த குடும்பத்தலைவனுடனும், முதல் மனைவியுடனும் அந்யோன்யமாகி விடுகிறாள்.நாம் கண்ணுறூவது சினிமாவா அல்லது நிஜவாழ்க்கையா?என்னும் குழப்பத்தை தோற்றுவித்துவிடுகின்றனர்.

மூத்த மனைவி கேன்சருக்காக எடுத்துக் கொள்ளும் கீமோ தெரபி சிகிச்சைகள், அவளை மிகவும் உருக்குலைக்கிறது, வீட்டின் மொத்த நபர்கள் 9பேருமே அவள் தேறி வர பிரார்த்தனை செய்கின்றனர்,கீமோ தெரபி முடிந்தவுடன் அவளுக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது,வீட்டார் அனைவருமே அறையின் வாசலில் குழுமியிருக்க,முஸ்தஃபா ஆயிஷாவின் கைகளை கோர்த்துக் கொண்டு அவருக்கு இவளும் ,இவளுக்கு அவரும் ஆறுதல் வழங்கிக் கொள்கின்றனர்,கடைக்குட்டி மகன் அம்மாவுக்கு என்ன ஆகும் என அழுதபடி வர,அவனை ஆயிஷா மார்புறத் தழுவி உனக்கு நான் இருக்கிறேன் என தேற்றுகிறாள்.

டாக்டர்கள் 80 சதவிதம் தான் அவள் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதையும் மீறி ஃபத்மா  கேன்சரை வென்று விடுகிறாள், ஆனால் அவளின் கணவர் முஸ்தஃபா, அந்த பெரிய குடும்பத்தின் தலைவர் எல்லோரையும் விட்டு விட்டு மாரடைப்பால் அகால மரணமடைகிறார்.

அது ஒரு பெரிய கல்லறை, வானெங்கும் ஆயிரக்கணக்கில் பறவைக்கூட்டம், சவ அடக்கம் நடந்து கொண்டிருக்கிறதும்,பெண்கள் அனைவருமே ஓரமாக நின்றபடி அழுகின்றனர்,சற்றுத் தள்ளி முஸ்தஃபாவின் சவ அடக்கம் நடந்து கொண்டிருக்கிறது. ஆயிஷா கணவர் இறந்ததற்கு ,அவரைக் ஊரார் முன்னர் கட்டி அழக்கூட வழியின் ,அக்கூட்டத்தில் நின்றபடி கேவி கேவி அழுகிறாள். முன்னர் மனிதர்களால் ஏமாற்றப்பட்டவள், இப்போது கடவுளாலும் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி அழுகிறாள்.

ஆயிஷா என்ன ஆனாள்?!!! வருமானம் ஈட்டும் குடும்பத்தலைவர் முஸ்தஃபா இறந்ததும் அந்த பெரிய குடும்பம் என்ன ஆனது? அவர்களுக்கு ஆஸ்திரியா பென்ஷன் தந்ததா? குழந்தைகள் படிப்பை தொடர்ந்தனரா? ஃபத்மாவுக்கும் ஆயிஷாவுக்கும் முன்பைப் போன்றே தோழிகளைப் போன்ற உறவு நீடித்ததா? ஃபத்மா தன் வாழ்க்கையை நன்கு வாழ்ந்தவள், தன் நாற்பதுகளில் இருக்கும் அவள் அடுத்தடுத்து 6 குழந்தைகளைப் பெற்றவள், அவள் கணவர் முஸ்தஃபாவுடனான நீண்டகால குடும்ப வாழ்க்கையின் நினைவுகளுடனே வாழ்க்கையை ஓட்டிவிடுவாள்,
 ஆனால் ஆயிஷா,பச்சை இளம் தளிர்,அவள் எதிர் கொள்ளப் போகும் வலி என்ன?!!!வீட்டுக்கு இளம் விதவை,ஆனால் ஊருக்கு அவள் விதவை இல்லை,அவளுடைய இக்கட்டான நிலை,அன்புக்கு ஏங்கியும்,தன் உள் மன ஆசைகளால் அவள் உள்ளாகும் அவஸ்தைகள் போன்றவற்றை அவசியம் படத்தில் பாருங்கள்,இயக்குனர் ன் ஒரு ப்ரில்லியண்டான இயக்கம், மிக அருமையான ஒளிப்பதிவும்,கதாபாத்திரங்களின் மிகவும் அற்புதமான நடிப்பு, அபாரமான நடிகர்கள் அத்தனை பேருமே.யாரும் தவறவிடக்கூடாத ஒரு படம். படம் மிகவும் மெதுவாக சென்றாலும் பார்வையாளர்களை லயித்துப் போகச் செய்யும் கதை இது. எத்தனையோ உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களையும் விருதுகளையும் வாங்கிய படம், நாம் கேள்வியுற்றிராத ஐரோப்பிய + அரபு தேசத்தின் யதார்த்தமான கதை இது.

படத்தின் காணொளி யூட்யூபிலிருந்து:-




படத்தின் குழுவினர் விபரம் விக்கியிலிருந்து:-
Directed by Umut Dag
Produced by Veit Heiduschka
Michael Katz
Screenplay by Petra Ladinigg
Story by Umut Dag
Music by Iva Zabkar
Cinematography Carsten Thiele
Editing by Claudia Linzer
Studio Wega Film
Running time 93 minutes
Country Austria
Language German
Turkish
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)