என்ன இயக்குனர் பத்மராஜனுக்கு ஆங்கிலம் தெரியாதா?!!!



எழுத்தாளர் ஜெயமோகன் நேற்று காலஞ்சென்ற மலையாள எழுத்தாளர் மற்றும் இயக்குனர் பத்மராஜன் என்கிற பாப்பேட்டா பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார்.

அவரின் Ardent Fan ஒருவர் அவருடன் நளினமான ஆங்கிலத்தில் மானசீகமாக உரையாடி, ஒரு Tribute செய்திருந்தார்,அந்த வீடியோவின் லிங்கை பகிர்ந்தவர் பாப்பேட்டனுக்கு இப்பேற்பட்ட நளினமான ஆங்கில Tribute ஐ புரிந்து கொண்டிருக்கக்கூட முடியாது,திகைத்திருப்பார், என ஏளன தொனியில் எழுதியிருந்தார் , 

அந்த மடமையான கட்டுரையின் சாரத்தை மலையாள சினிமா பற்றிய கலாரசனையுள்ள யாராலுமே ஏற்றுக் கொள்ள முடியாது, இவரிடம் பாப்பேட்டா சந்திக்கையில் வட்டார மலையாளத்தில் பேசினாராம், அதனால் அவரை இவர் நன்கறிவாராம், 

பாபேட்டாவின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் நன்கு படித்தவர்கள், படத்தில் நல்ல English பேசுபவர்கள், Manglish பேசுபவர்கள் அல்ல எனபதை அவர் உணர்ந்திருந்தாலே இப்படி எழுதியிருக்க மாட்டார்,

அவரின் Family Drama வான திங்காழ்சே நல்ல திவசம் படத்தில் வரும் வீட்டோட வேலைக்காரி கதாபாத்திரம் கூட ஆங்கிலம் பேசும்,

அவளை எள்ளி நகையாடி நாங்கள் இருவர் (காதலர்கள் )பேசுவது உனக்கு புரிகிறதா? 

என தரவாட்டு வீட்டுக்கு வந்த மும்பை பேத்தி திமிருடன் ஏய் அம்மணி Could you follow us? What did were talking !!! என வினவ , 
yes i could என பட்டென உரைத்து நகர்வார் அந்த ப்ரீ டிகிரி படிக்கும் வேலைக்காரப் பெண் அம்மணி, 

பாப்பேட்டாவின் தூவானத்தும்பிகள் படத்தின் நாயகனான ஜெயக்ருஷ்ணன் பாப்பேட்டாவே தான், தன்னை ஒரு இலக்கியவாதி பிரதி எடுத்தால் தான் ஜெயக்ருஷ்ணன் போன்ற கதாபாத்திரங்கள் உயிர் பெறும், 

ஜெயக்ருஷ்ணன் இரண்டு முகம் கொண்டவன், கிராமத்தில் அவன் அசல் பட்டிக்காட்டான்,நகரத்தில் அவன் ஒரு மிடுக்கன் , ரசனாகரன்,

சமூகத்தில் பெண் தரகர்,கறி வியாபாரி, பார் டெண்டர்,முதல் பெரும் தொழிலதிபர் வரை மனதார சிலாகிக்கப்படுபவன், அவர்களுடன் அவரகட்கேற்ப உரையாடும் கலை கைவரப்பட்டவன்,எங்கே தேவையோ அங்கே நல்ல ஆங்கிலம் பேசுபவன்,

அப்படியே அவரின் நமக்குப் பாக்கான் முந்திரித்தோப்புகள் சோலமனை எடுத்துக் கொண்டாலும் ஆச்சர்யங்கள் கிட்டும், படித்த பட்டதாரி, paulo Coelho உள்ளிட்ட மேலை இலக்கியங்கள் படிப்பவன், ஆங்கிலத்தில் கவிதை எழுதுபவன்,பைபிளில் தனக்குப் பிடித்தமான மன்னர் சோலமன் அத்தியாயங்களை அனாயசமாக ஆங்கில அர்த்தம் புரிந்து அசைபோடுபவன், நாயகியும் அவனும் அந்த வாக்கிய அத்தியாய எண்களைக் கொண்டே காதல் கடிதங்கள் எழுதிக் கொள்வார்கள்

சோலமன் தன் மைசூர் திராட்சைப் பண்ணையில் ட்ராக்டர் ஒடிப்பான், அம்மாவைக் காண திடீரென கிளம்பி வருகையில் பழுது பார்க்க வேண்டியிருக்கும் டாங்கர் லாரியையும் லாவகமாய் ஒடித்து வரும் சூரன்

அப்படியான வெளிப்பூச்சில்லாத மாந்தர்களின் படைப்புகள் ஏராளம் தந்தவரை எதற்காக மட்டம் தட்டுவது போல ஒரு கட்டுரையை ஜெயமோகன் எழுதினார் எனப் புரியவில்லை, 

ஜெயமோகனுக்குள் இருக்கும் குமாஸ்தா ஆங்கிலம் பேசும் தாழ்வு மனப்பான்மை தான் அவருக்கு பாப்பேட்டா மீதான இந்த மதிப்பீட்டைத் தந்ததா என ஒரு சம்ஷயமுண்டு

பாப்பேட்டாவின் படைப்பில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இங்கே அவருக்கு மேற்கோள் காட்டினால் விடிந்துவிடும்

அவரின் கட்டுரை இங்கே

http://www.jeyamohan.in/84345

//ஒரு நண்பர் அனுப்பிய சுட்டி இது. பத்மராஜனுடன் ஓர் அந்தரங்கமான உரையாடல் என இந்த சிறியபடத்தைச் சொல்லலாம்.
நான் கவனித்த சில விஷயங்கள். ஒன்று, இந்தப்பையனுக்கு எந்தவகையிலும் மலையாளத்தன்மை இல்லை. அவன்பேசுவதே கேரளத்துக்கு அப்பால் எங்கோ இருந்துகொண்டு எனத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் பத்மராஜனிடம் பேசுவதை நினைத்தாலே வேடிக்கையாக இருக்கிறது. அவரை எனக்குத்தெரியும்- ஒரு முறை சந்தித்திருக்கிறேன். லோஹியுடன். இந்த ஆங்கிலப்பேச்சைக்கேட்டால் திகைத்திருப்பார்
பத்மராஜன் முழுக்கமுழுக்க கேரளத்தின் வட்டாரப் பண்பாட்டுக்குள் இருந்தவர். ஒற்றப்பாலத்தைச் சுற்றியிருக்கும் வள்ளுவநாடு அவரது களம். அவரது கதாபாத்திரங்கள் அறிவுஜீவிகள் அல்ல. அவர்கள் பேசுவதும் இயல்பான உணர்ச்சிவெளிப்பாடுதானே ஒழிய கருத்துக்கள் அல்ல. அவ்வகையில் செவ்வியல்தன்மை மேலோங்கிய எம்.டி.வாசுதேவன்நாயரின் உலகுக்கு வலுவான மாற்றாக எழுந்தவை பத்மராஜனின் படங்கள்.
ஒற்றப்பாலத்தின் கதைசொல்லியாகவே இலக்கியத்திற்குள் வந்தார். நட்சத்திரங்களேகாவல், ரதிநிர்வேதம், கள்ளன்பவித்ரன், இதா இவிடவரே ஆகியவை அவரது புனைவுலகின் நுணுக்கமான அழகுடன் இன்றும் உள்ளன. நடையையும் கதாபாத்திர உருவாக்கத்தையும் வைத்து அவரை வன்முறை கலந்த கேரள ஜானகிராமன் என்று சொல்லலாம்.
அவர் திரைக்கதை எழுதிய ஆரம்பகாலப் படங்கள் அந்த மண்ணின் காமத்தையும் வன்முறையையும் நேரடியாகச் சித்தரிப்பவை. உதாரணம், இதா இவிட வரே, சத்ரத்தில் ஒரு ராத்ரி, வாடகைக்கு ஒரு ஹ்ருதயம், ரதிநிர்வேதம், தகரா, கரும்பின் பூவினக்கரே. வன்முறையையும் காமத்தையும் நம்பகமாக கலையழகுடன் சொன்னவர் என்பதே பத்மராஜனின் அடையாளமாக இருந்தது. பரதன் – பத்மராஜன் கூட்டு மலையாளத்தில் திரைக்காலகட்டம் ஒன்றைத் தொடங்கிவைத்தது.
பின்னர் அவரே இயக்கிய பெருவழியம்பலம், கள்ளன் பவித்ரன், ஒரிடத்தொரு பயில்வான் முதலிய படங்கள் கூட அந்த மண்ணின் கதைகள்தான். மிகமிக வட்டாரத்தன்மைகொண்டவை. அங்கு மட்டுமே உருவாகும் கதைமாந்தர்கள் அவர்கள் என்று நமக்குத்தோன்றும். பிற்காலத்தில் காமத்தின் உள்ளறைகளுக்குள் சென்று நோக்கும் சில படங்களை எடுத்தார். தூவானத்தும்பிகள், தேசாடனக்கிளி கரையாறில்ல, நமுக்குபார்க்கான் முந்திரித்தோப்புகள். அவற்றிலும் கதைமாந்தரின் ஊர் வள்ளுவநாடுதான்.
நிலமே அற்றவன் போலத்தெரியும் இந்தப்பையனைக் கவர்ந்தது எது? அந்த நிலத்தில் வேரூன்றி எழுந்த புனைவுலகின் மலர்ந்த மலர்களை மட்டுமே இவன் பார்க்கிறான். கலை அப்படியும் சென்றடையக்கூடும் போலும்//

பாப்பேட்டாவின் Ardent Fan ன் Tribute இங்கே
https://www.youtube.com/watch?v=Kl96WTpNoh4
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)