சென்னை 375


பறவைப் பார்வையில் சென்னை மாநகரம்
இன்று ஆகஸ்ட் 22, சென்னை தினம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு சென்னை என்று நிரந்தமாக அழைக்கப்பட்டு வரும் சென்னைக்கு 375 வயதாம், நினைக்கவே பெருமையாக இருக்கிறது, சென்னைக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.எனக்கு உலகை புரிய வைத்த ஆசான் சென்னை,பணத்தை துரத்த வாய்ப்பளித்த சென்னை, 

சென்னையை அதன் ஆட்சியாளர்கள் ஏறிவரும் மக்கள் தொகைக்கு தகுந்தவாறு urban design [நகர்ப்புற வடிவமைப்பு] செய்து சரியாக grid pattern ல் வடிவமைத்திருந்தால் ,இன்று நாம் காற்றுக்கு ஜன்னலை திறந்து வைத்தாலும் காற்று வராமல் புழுக்கத்தில் இருக்கும் நிலை இருந்திருக்காது,இந்தியாவில் சரியாக நகர்ப்புற வடிவமைக்கப்பட்டவை 28 நகரங்கள் ,அவற்றை இங்கே போய் படிக்கலாம்   

இங்கே துபாயில் வீட்டு மனைக்கு plot கள் 45டிகிரி கோணத்தில் அமைந்திருக்கும், காற்று வரும் திசையில் நம்வீட்டின் வெளிப்புறச்சுவரும் அதிக ஜன்னல்களும் அமைக்க முடியும். தவிர சென்னையை இதன் சிஎம் டி ஏ திட்ட அதிகாரிகளும் சரிவர திட்டங்கள் இயற்றி சரியாக கடைபிடித்திருந்தால் , பல வீடுகளில் 2 அடி, 3அடி செட்பேக் கூட இல்லாமல் கட்டப்பட்டு காற்றும் வெளிச்சமும் புகமுடியாத நிலை இருந்திருக்காது. சென்னையில் தரைத்தளத்தில் குடியிருக்கும் மக்கள் படும் அவதி சொல்லில் வடிக்க முடியாது, முக்கிய தொல்லையாக நான் கருதுபவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்,ஆட்சியாளர்கள் நினைத்தால் இந்நிலை நிச்சயம் மாறும்.
  1. கொசுக்கடி ,
  2. சாக்கடை நாற்றம், 
  3. படபடப்பு கூட்டும் ஆட்டோ சைலன்சர் இரைச்சல். 
  4. கரண்ட் போகையில் காற்று வருமே என்று சன்னலை திறந்து வைத்துத் தூங்க முடியாது, பீரோ புல்லிங் திருடன் வந்து நேக்காக திருடிச்சென்று விடுவான். 
  5. சாலைகளும் சாக்கடைகளும் சரியாக திட்டமிட்டு வடிவமைக்கப்படாததால்  அடை மழை நாளில் வீட்டுக்குள் மழைநீருடன், சாக்கடை நீர் புகும் அவலம் சொல்லில் வடிக்க முடியாது.
இவையெல்லாம்,சாமானியன் சென்னையில் சந்திக்கும் துயரம். இருந்தும் எனக்கு எப்போதும் சென்னையில் வசிக்கவே பிடிக்கிறது.எதிர்காலத்தில் சென்னையிலேயே ஓய்வு பெற விரும்புகிறேன்.

சென்னையில் நான் நடந்த தடங்களை திரும்பிப் பார்க்கிறேன்.

நான் பிறந்தது சென்னை தான், சிலவருடங்கள் மதுரையில் கழித்துவிட்டு, 1986ல் சென்னைக்கு வந்துவிட்டோம்.பல்லாவரத்தில் தான் வாசம்.மதுரையில் இத்தனை பின்கோடு, தபால்நிலையம், ரயில்நிலையம் பார்த்ததில்லை துறைமுகத்தை சுற்றி வளர்ந்த வட சென்னையில் நான் கால்வைக்கவே 10 வருடம் பிடித்தது,மீட்டர் கேஜ் ஓடிய தாம்பரம் டு பீச் வரை தான் சென்னை என நினைத்திருந்த எனக்கு அதையும் தாண்டி ப்ராட்கேஜ் ஓடும் வடசென்னை மிகுந்த ஆச்சர்யமூட்டியது,பெரம்பூர் என்னும் பெயரிலேயே 3 ரயில்நிலையங்களா என வியந்தேன்.

டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ய ரயில் தான் உகந்தது என்பதால் ரயில் மார்கத்தில் அப்படி சுற்றியிருக்கிறேன்,கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி நடிகர் நடிகைகளின் வீடுகளை நேரில் பார்க்கலாம் என முயன்று களைத்திருக்கிறேன்.எனக்கு சென்னையில் மிகவும் பிரியமான இடம் பல்லாவரம் மலை,நிறைய படப்பிடிப்புகள் நடந்த இடம், 

அதற்கு 4 வழியாக போகலாம்,திரிசூலம் ரயிலடியில் இருந்து நடந்து 3கிமீ நடந்தால் மலைக்கு மேலே போய்விடலாம்,அல்லது பல்லாவரம் கல்லறை தோட்டம் வழியாக மேலே ஏறினால் 2 கிமீ,அல்லது ஈசுவரிநகர் மேடு வழியே ஏறீனால் 1.5கிமீ,அல்லது பழைய பல்லாவரம் பஞ்சபாண்டவர் மலை வழியே ஏறினால் 1.5கிமீ வரும்,சென்னையில் யாருமே போகத்துணியாத இடத்துக்கெல்லாம் நானும் நண்பனும் சைக்கிளில் போயுள்ளோம்.

அப்படி கீழ்கட்டளை,பெருங்குடி வழியாக போய் திருவான்மியூர் பீச்சுக்கு போனதை என்னவோ நாங்கள் பீச்சையே கண்டுபிடித்தது போல வகுப்பில் பேசுவோம்.தாம்பரம் அருகே தர்காஸ் என்று ஒரு இடம் உண்டு,அங்கு எல்லாம் போய் குட்டையில் ஆடியுள்ளோம்.அந்த இடத்துக்கருகே அதன் பின்னர் தான் கிஷ்கிந்தா எல்லாம் வந்தது.சென்னையில் எனக்கு பிடித்த இன்னொரு இடம் என்று சொன்னால் பட் ரோட்டில் இருக்கும் போர் நினைவுச்சின்னம்,அதை அத்தனை சுத்தமாக வைத்திருப்பர்,

அதற்கு பெரும் நிதி அகில உலக கல்லறைகள் நிதியம் வழங்குவதால் பளிங்கு போலான நிர்வாகம் சாத்தியமானது,அதை இன்னும் பார்க்காதவர்கள் போய் பாருங்கள். எனக்கு ரயில்நிலையங்களுக்கு பெயர் வைத்த வெண்ணைவெட்டிகளை அடிக்க ஆத்திரம் வரும்.பரங்கி மலை என பெயர் இருக்கும் ஆனால் அங்கேயிருந்து 4கிமீ நடந்தால் தான் புனித தோமையார் மலை வரும். பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரு பலகை மறக்க முடியாது. 

திருநீர்மலை போக இங்கே இறங்கவும் என்று,அங்கே இருந்து திருநீர்மலை போக சுமார் 8கிமீ வரும்.அதற்கு பழந்தண்டலம் போக ஒரு பஸ் இருந்தது,குடிகாரர்கள் மட்டுமே ஏறுவர்,அப்போது திருநீர்மலை சாராய சாம்ராஜ்ஜியமாக விளங்கியது,குடிமகன்கள் நல்ல ஊரல் போட்டிருக்கும் இடமாக ஏறுவது இறங்குவதுமாக இருப்பர்,பஸ்ஸே ஆடிஆடித்தான் பல்லாவரம் செல்லும்,சாலை அப்படி.நான் சிறுவனாயிருக்கையில் பார்த்த ஏரிகள்,குளங்கள் இன்று இல்லை,இருந்தாலும் சாக்கடையாகி உள்ளது.

மழைக்காலத்தில் மட்டுமே அடையாரில் வெள்ளம் கரைபுரண்டு வரும். அங்கே போய் அட்டகாசம் செய்திருக்கிறோம்.அப்போது கண்டோன்மென்ட் பல்லாவரத்தில் இருந்து கவுல்பஜார் போகும் வழியில் பெரிய 50அடி விட்டம் கொண்ட மிலிட்டரி கிணறு ஏணியுடன் இருந்தது, வீட்டுப்பாடம் எழுதாததால் தண்டிக்கப்பட்ட சிறுவர்களை அங்கே பார்க்கலாம்,அத்தனி பெரிய கிணற்றை அதற்கு பின் நான் பார்த்ததே இல்லை.

சென்னையில் திரிசூலம் ரயிலடி மட்டும் புதியதாக இருக்கும்,ஏனைய நிலையங்கள் 1930களில் கட்டிமுடிக்கப்பட்டிருக்க,திரிசூலம் மட்டும் 1984-85ல் திறக்கப்பட்டது,ராஜீவ் காந்திக்காக விமான நிலையம் செல்லும் சாலையை இணைக்க அவசர அவசரமாக சுரங்கப்பாதையும் போடப்பட்டது என்பார்கள்.நீண்டநாட்களாக நான் விமானநிலைய வளாகத்தில் இருக்கும் சந்தியம்மன் கோவிலினால் திரிசூலத்துக்கு அந்த பெயர் வந்திருக்கும் என நினைத்தேன்,ஆனால் அங்கே ஆயிரம் வருட பழமைவாய்ந்த திரிசூலநாதர் பெயரால் என்று பின்னர் தான் தெரியும்,இன்னும் சென்னை பற்றி நிறைய எழுதுவேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)