
(அசல் சென்னை வார்த்தை வழக்குகளுக்காக கெட்ட வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன....மன்னிக்கவும்.)
வேல்கண்ணன் என்னும் வீடு ப்ரோகரை (மன்னிக்கவும் மீடியெடேர்)
நாகவல்லியம்மன் கோவில் அருகில் எப்போதும் சிகரெட் பிடித்துக்கொண்டோ,
சாந்தி குட்கா மென்று கொண்டோ, கூட படித்த நண்பர்கள் வேலைக்கு போய் வருகையில் வலுக்கட்டாயமாக பாதை மறிக்கப்பட்டு மொக்கை போட்டு அவர்கள் தாங்காமல்,
நான் கூல் டிரிங்க் வாங்கி தருகிறேன்,உட்டுடு என்று இவனுக்கு அழுதுகொண்டே வாங்கி தரும் போதோ பார்க்கலாம்,
இவனைப் போன்ற சக மீடியடர்களும் பல்லாவரம் போக அநியாய வாடகை
(40 ருபாய் )கேட்கும் ஆடோக்காரர்களும் அருகே இருப்பர்.
இவன் வாயை கிளறி புளங்காகிதம் அடைவர்,
அவ்வளவு கவிச்சை.
இவன் கண்கள் கடந்து போகும் சிறுமிகளை கூட அளவெடுக்காமல் விடுவதில்லை.எப்போதும் ஒரு தவ்ளத்தனமான பேச்சு ,பார்வை. இப்போது கத்திரி ஆகையால் வெண்ணிலா ஐஸ் கிரீம் கேட்டு வாங்கி சாப்பிடுவதாக கேள்வி..
வாயில் மென்று கொண்டிருக்கும் பபிள் கம்மை பார்த்தாலும் கேட்ப்பான்,
ஆசை படுவது எல்லாம் பெரிசு தான்,அறுக்கத்தெரியாதவன் இடுப்பில் ஆயிரத்திஎட்டு கதிர் அரிவாள் போல இவனுக்கு வியாபார யுக்திகள் பல ,
ஒன்றும் உருப்படியாயிருக்காது.
மனைவி எக்ஸ்போர்ட் கம்பனியில் வேலை பார்க்க, பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் மாமியார் தயவில் படிக்க,
துரை மூன்று வேலையும் நன்கு வயிறு முட்ட தின்பது ,ஒசிக்குடி,ஓசி பிரியாணி ,ஓசி டீ,
ஓசி அவுட் கோயிங் கால்,என ஓசி உபயத்தில் வண்டி ஓட.
இப்போது பரபரப்பாய் உள்ள உடனடி மீடியெடேர்தொழிலில் தானும் குதித்தான்,
இவனுக்கு தேர்தல் போது கவர் போட போவது,கவுன்சிலருக்கு கடைசி எடுபிடி காரியங்கள் செய்வது. பஞ்சாயத்தில் கடைகோடியாய் இருந்து கட்டிங் வாங்குவது ,
போன்றவை உபதொழில்,
வெள்ளை அடிக்க ஆள் பிடித்துக்கொடுத்தாலும் கமிஷன் வாங்கிக்கொள்வான்.
திருமணம் பதிவு செய்ய மூன்று பேரில் ஒருவனாய் கையெழுத்து போட அழைத்துப்போன நண்பனிடம் 500 பணம் கேட்டு வாங்கியவன்.
அவனுக்கு தனியாக சென்று வீடு காலியாக உள்ளது பற்றி தகவல் அறிவது பிடிக்காது,அவனுக்கு 15 இஸ்த்திரி வண்டிக்காரர்களும்,3 கேபிள் டிவி காரர்களும் ,பூக்காரர்களும்,பலசரக்கு கடை ஜெராக்ஸ் கடை,என தகவலளிப்பர் .
அந்த பல்லாவரம்,பம்மல் ,பொழிச்சலூர் ,அனகாபுத்தூர் ,சங்கர் நகர் எங்கு வீடு காலியாக ஆனாலும் தெரிந்துவிடும்,
கிடைக்கும் ஒரு மாத வாடகை பண கமிஷனை வீட்டுக்காரனை காட்டிய பார்ட்டி ,வீடு தேடியவனை கூட்டி வந்த பார்ட்டி,பக்கத்து தெரு வரை வந்த பார்ட்டி,வீடு வாசல் வரை வந்து நீ போ நான் இங்கயே நிக்கறேன் என்று கழண்ட பார்ட்டி என பங்கு போட்டு பிரிக்க ஒரு நாளுக்கு ஐந்நூறு தேறும்,
இவனுக்கும் இவன் கொடுக்கும் துப்பு மூலம் வாரத்திற்கு ஒரு ஆயிரம் கிடைக்கும்,
இவன் வாடிக்கையாளர் எல்லாம் ஐடி ,பேங்க்,மற்றும் நல்லா பணம் சம்பாதிக்கும் கூட்டம்,இவன் டுலெட் போர்டை கண்ட உடன்,(அ) கேட்டவுடன் வீடுகாரரை பார்த்துவிடுவான், முகத்தில் வெந்நீரை ஊற்றினாலும் போகமாட்டான்.
சார் 3500 க்கா சிங்கிள் பெட்ரூம் விடப்போறீங்க?என்ன சார் பொழைக்க தெரியாம?
என்கிட்டே விடுங்க என்கிட்டே ஆளு 5000 குடுக்க ரெடியா இருக்காங்க ,கரண்ட் பில் யூனிட் 6 ருபாய் சரியா?அது தவிர ஹஸ்பன்ட் & வைப் ,சின்ன பாப்பா மூணு பேரு தான் ,
அப்பா அம்மாவெல்லாம் வரவே மாட்டாங்கோ,
அவன் பஸ்சுலயும் ஷேர் ஆட்டோவிலும் போற ஆளு.வண்டி கிடையாது,
ரெண்டு பேரும் ஆபிஸ் போறதால தண்ணி செலவே இருக்காது,
அது சரியில்லை இது சரியில்லைன்னு சொல்லவே மாட்டான்,
என வாடகையை 2000 ஏற்றிவிடுவான்.
அப்படி ஏற்றி விட்டு வாடகைக்கு வந்த ஆளை பார்த்து கமிஷன் வாங்கி தெருக்கோடியில் எல்லோரும் பகிர்ந்து டாஸ்மாக் சென்று இரண்டு மணி நேரம் குடித்துவிட்டு வீடு போவார்கள்,
இது அவனுக்கு வாடிக்கையாக போய்விட்டது,
இதனால் உடம்பு வேறு விஜயகாந்த் மாதிரி பெருத்துவிட்டது,
ஒரு பக்கம் பார்த்தால் அப்படியே மேக்கப் போடாத விஜயகாந்த் மாதிரி இருப்பான்.
டூப் கூட போடலாம்.
அன்று மாலை ஒரு ஹவுஸ் ஓனர் மனதை கலைத்து இருக்கும் ஆளை காலி செய்து கொடு.நான் உனக்கு 5000 க்கு ஆள் உடனே இட்டாரேன் என்னா?என்று சொல்ல.
இவனே டோக்கன் அட்வான்ஸ் 500கொடுக்க,
வீட்டுக்காரன் 2000 அதிகம் கிடைக்குதே என்று உடனே குடியிருப்பவரிடம் வாடகை ஏற்றம் பற்றி சொல்ல ,அவர்கள் பதற ,
அதற்கு இவரும் ஒரு மீடிஎட்டேர் தான் இவர்கிட்ட கேளு என் வீடு எவ்ளோ வாடகை போவும்னு?என்று சொல்ல ,
இவன் அந்த ஆளை தனியே கூட்டிப்போய்,
இதோ பாருய்யா 3000 வாடகைக்கு பம்மல்ல வூடு கிடைக்காது ,
வோணும்னா அனகாபுத்தூர்ல கணேஷ் தேட்டராண்ட வேண்ணா ஒன்னு காலியாவுது.
உனுக்கு ஓகேன்னா நாளைக்கே பாக்கலாம்.
என்று சொல்ல வீட்டுக்காரர் தலை சுற்ற சுவற்றை பிடித்துக்கொண்டார்.
அதன் பின்னே மறுபடியும் நாகவல்லியம்மன் கோவில் அருகே வந்து கரண்ட் கட்டாகிஇருந்தாலும் இவனிடம் மாட்டிய நண்பர்களிடம் ஒரு மணி நேரம் மொக்கை போட்டு வீடு வந்தால் பசங்க படுத்து விட்டனர்,
மனைவி மட்டும் டிவி சீரியல் பார்த்துக்கொண்டிருக்க ,
இவன் வந்ததும்...
இன்னா ஓத்து துண்ணுட்டியா?
இவன், ம்ம்ம்......
அசிங்கமாக சிரித்தான்(வழிந்தான்).
இன்னா போவுது?
ம்ம்ம்......... நாடகம்.
இவன்,இன்னா கோவம் டா?
ம்ம்ம்......... வீட்டுக்காரன் வந்துட்டு போனான் ,
இவன்,இன்னாவாம் அவனுக்கு ?
வாடகை வர்ற மாசத்துலேந்து 4000 ரூபாவாம் ,
குடுக்க இஷ்டமில்லாட்டி வூட்ட காலி பண்ண சொல்லிட்டான்,
அடுத்த பார்ட்டி நாளைக்கே வர ரெடியாம் ,
இவன்,தெவ்டியாப்பய்யன்,...இன்னாடி இது தம்மாத்தூண்டு புறாக்கூண்டுக்கு
குடுக்கற 2000 மே அதிகம்டி,
நீ இன்னாடி சொன்ன?
................................மௌனம்.,,,,,பின்னர் ஆக்ரோஷமாகி
ம்ம்ம்...................... ,நீ தினம் பண்ணுற அநியாயம் இன்னிக்கு வீட்டுல காம்சிருக்குது.
நீ குடி கெடுக்கறதால இங்க இப்படியெல்லாம் நடக்குதுயா.
வாங்குற காசெல்லாம் எங்களுக்காவது குடுத்தியா?அல்லாம் அந்த டாஸ்மாக் தேவ்டியாளுக்கே வுட்டு நொலுந்துற ..
இங்க பொண்டாட்டி புள்ள துன்னா இன்னா,துன்னாட்டி இன்னா?
உன் வயிறு நிரம்பிடனும்,
துன்றதும் அவ்ளோ.. பேல்றதும் அவ்ளோ..,
வாடகை உழைச்சு குடுத்தா என்னை மாதிரி உரைக்கும்டா மாமாப்பயலே ...
புள்ளீங்க இன்னா படிக்கிதுன்னு தெரியுமாடா?
ஒனக்கு ஒரு மசுரும் கவலையில்ல,இதுக்கும் நான் தாண்டா அவுக்கணும்..
பாடு.......இதெல்லாம் டீசென்ட்டான வசவுகள் ,
நாடகம் முடிந்ததும் ,இவன் தேனருவி சேனல் மாற்றிய போது கேட்டாளே ஒன்று?
அவன் எதற்கும் தொட்டு பார்த்துக்கொண்டான்.
தமிழக அரசு படம் போட்ட இலவச வண்ண தொலை காட்சியில் தேனருவி சானலில்
நீரில் நனைந்த நமீதா சரத்குமாரை பிணைந்து அர்ஜுனா ,அர்ஜுனா என்று பாட ,
இவன் உற்சாகமாக ,
படுத்திருந்த அவள் வேகமாக எழுந்து இவன் முகத்தில் எச்சில் துப்பி விட்டு போனாள்.
இவன் ஒண்ணுமே நடக்காத மாதிரி முகத்தை துடைத்து
ஒரே புழுக்கம்..... ஏசி போடனும்
என்று சாந்தி பாக்கை வாயில் பிரித்துக்கொட்டிக்கொண்டு பாடலை பார்க்க ஆரம்பித்தான்.
___________________________________________________________________
டிஸ்கி:-
இது குறித்து எழுத காரணம்.
என் பால்ய நண்பருக்கு என் விடுப்பில் வீடு தேட போய் நான் கண்ட அவலமான தரிசனமே ,ஒரு நல்ல வீட்டுக்காரரையோ,புரோக்கரையோ நான் சந்திக்கவில்லை.கடைசியில் பால்ய நண்பர் 3500 ரூபாய்க்கு வீடு கிடைக்காமல் ராணிப்பேட்டை சென்றுவிட்டார்.
அங்கிருந்து அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து எக்ஸ்பிரெஸ் ரயில் பிடித்து வேலைக்கு வருகிறார்.இப்போதும் என்னதான் பொருளாதார பின்னடைவு இருந்தாலும்,முன்பு போல புறநகரில் 3500 ரூபாய்க்கு வீடு கிடைப்பதில்லை .
இதில் உள்ள கெட்ட வார்த்தைகளை மறந்து விடுங்கள்.
நல்ல செய்தியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
இது சிறுகதை போட்டிக்கு எழுதப்பட்ட கதையின் மீள்பதிவு.