Stories that stir லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Stories that stir லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முற்பகல் செய்யின் - கலக்கல் கதைகள்



















(அசல் சென்னை வார்த்தை வழக்குகளுக்காக கெட்ட வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன....மன்னிக்கவும்.)

வேல்கண்ணன் என்னும் வீடு ப்ரோகரை (மன்னிக்கவும் மீடியெடேர்)
நாகவல்லியம்மன் கோவில் அருகில் எப்போதும் சிகரெட் பிடித்துக்கொண்டோ,
சாந்தி குட்கா மென்று கொண்டோ, கூட படித்த நண்பர்கள் வேலைக்கு போய் வருகையில் வலுக்கட்டாயமாக பாதை மறிக்கப்பட்டு மொக்கை போட்டு அவர்கள் தாங்காமல்,
நான் கூல் டிரிங்க் வாங்கி தருகிறேன்,உட்டுடு என்று இவனுக்கு அழுதுகொண்டே வாங்கி தரும் போதோ பார்க்கலாம்,

இவனைப் போன்ற சக மீடியடர்களும் பல்லாவரம் போக அநியாய வாடகை
(40 ருபாய் )கேட்கும் ஆடோக்காரர்களும் அருகே இருப்பர்.
இவன் வாயை கிளறி புளங்காகிதம் அடைவர்,
அவ்வளவு கவிச்சை.
இவன் கண்கள் கடந்து போகும் சிறுமிகளை கூட அளவெடுக்காமல் விடுவதில்லை.எப்போதும் ஒரு தவ்ளத்தனமான பேச்சு ,பார்வை. இப்போது கத்திரி ஆகையால் வெண்ணிலா ஐஸ் கிரீம் கேட்டு வாங்கி சாப்பிடுவதாக கேள்வி..

வாயில் மென்று கொண்டிருக்கும் பபிள் கம்மை பார்த்தாலும் கேட்ப்பான்,
ஆசை படுவது எல்லாம் பெரிசு தான்,அறுக்கத்தெரியாதவன் இடுப்பில் ஆயிரத்திஎட்டு கதிர் அரிவாள் போல இவனுக்கு வியாபார யுக்திகள் பல ,
ஒன்றும் உருப்படியாயிருக்காது.

மனைவி எக்ஸ்போர்ட் கம்பனியில் வேலை பார்க்க, பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் மாமியார் தயவில் படிக்க,
துரை மூன்று வேலையும் நன்கு வயிறு முட்ட தின்பது ,ஒசிக்குடி,ஓசி பிரியாணி ,ஓசி டீ,
ஓசி அவுட் கோயிங் கால்,என ஓசி உபயத்தில் வண்டி ஓட.
இப்போது பரபரப்பாய் உள்ள உடனடி மீடியெடேர்தொழிலில் தானும் குதித்தான்,

இவனுக்கு தேர்தல் போது கவர் போட போவது,கவுன்சிலருக்கு கடைசி எடுபிடி காரியங்கள் செய்வது. பஞ்சாயத்தில் கடைகோடியாய் இருந்து கட்டிங் வாங்குவது ,
போன்றவை உபதொழில்,
வெள்ளை அடிக்க ஆள் பிடித்துக்கொடுத்தாலும் கமிஷன் வாங்கிக்கொள்வான்.
திருமணம் பதிவு செய்ய மூன்று பேரில் ஒருவனாய் கையெழுத்து போட அழைத்துப்போன நண்பனிடம் 500 பணம் கேட்டு வாங்கியவன்.

அவனுக்கு தனியாக சென்று வீடு காலியாக உள்ளது பற்றி தகவல் அறிவது பிடிக்காது,அவனுக்கு 15 இஸ்த்திரி வண்டிக்காரர்களும்,3 கேபிள் டிவி காரர்களும் ,பூக்காரர்களும்,பலசரக்கு கடை ஜெராக்ஸ் கடை,என தகவலளிப்பர் .
அந்த பல்லாவரம்,பம்மல் ,பொழிச்சலூர் ,அனகாபுத்தூர் ,சங்கர் நகர் எங்கு வீடு காலியாக ஆனாலும் தெரிந்துவிடும்,

கிடைக்கும் ஒரு மாத வாடகை பண கமிஷனை வீட்டுக்காரனை காட்டிய பார்ட்டி ,வீடு தேடியவனை கூட்டி வந்த பார்ட்டி,பக்கத்து தெரு வரை வந்த பார்ட்டி,வீடு வாசல் வரை வந்து நீ போ நான் இங்கயே நிக்கறேன் என்று கழண்ட பார்ட்டி என பங்கு போட்டு பிரிக்க ஒரு நாளுக்கு ஐந்நூறு தேறும்,
இவனுக்கும் இவன் கொடுக்கும் துப்பு மூலம் வாரத்திற்கு ஒரு ஆயிரம் கிடைக்கும்,
இவன் வாடிக்கையாளர் எல்லாம் ஐடி ,பேங்க்,மற்றும் நல்லா பணம் சம்பாதிக்கும் கூட்டம்,இவன் டுலெட் போர்டை கண்ட உடன்,(அ) கேட்டவுடன் வீடுகாரரை பார்த்துவிடுவான், முகத்தில் வெந்நீரை ஊற்றினாலும் போகமாட்டான்.
சார் 3500 க்கா சிங்கிள் பெட்ரூம் விடப்போறீங்க?என்ன சார் பொழைக்க தெரியாம?
என்கிட்டே விடுங்க என்கிட்டே ஆளு 5000 குடுக்க ரெடியா இருக்காங்க ,கரண்ட் பில் யூனிட் 6 ருபாய் சரியா?அது தவிர ஹஸ்பன்ட் & வைப் ,சின்ன பாப்பா மூணு பேரு தான் ,
அப்பா அம்மாவெல்லாம் வரவே மாட்டாங்கோ,
அவன் பஸ்சுலயும் ஷேர் ஆட்டோவிலும் போற ஆளு.வண்டி கிடையாது,
ரெண்டு பேரும் ஆபிஸ் போறதால தண்ணி செலவே இருக்காது,
அது சரியில்லை இது சரியில்லைன்னு சொல்லவே மாட்டான்,
என வாடகையை 2000 ஏற்றிவிடுவான்.

அப்படி ஏற்றி விட்டு வாடகைக்கு வந்த ஆளை பார்த்து கமிஷன் வாங்கி தெருக்கோடியில் எல்லோரும் பகிர்ந்து டாஸ்மாக் சென்று இரண்டு மணி நேரம் குடித்துவிட்டு வீடு போவார்கள்,
இது அவனுக்கு வாடிக்கையாக போய்விட்டது,
இதனால் உடம்பு வேறு விஜயகாந்த் மாதிரி பெருத்துவிட்டது,
ஒரு பக்கம் பார்த்தால் அப்படியே மேக்கப் போடாத விஜயகாந்த் மாதிரி இருப்பான்.
டூப் கூட போடலாம்.

அன்று மாலை ஒரு ஹவுஸ் ஓனர் மனதை கலைத்து இருக்கும் ஆளை காலி செய்து கொடு.நான் உனக்கு 5000 க்கு ஆள் உடனே இட்டாரேன் என்னா?என்று சொல்ல.
இவனே டோக்கன் அட்வான்ஸ் 500கொடுக்க,
வீட்டுக்காரன் 2000 அதிகம் கிடைக்குதே என்று உடனே குடியிருப்பவரிடம் வாடகை ஏற்றம் பற்றி சொல்ல ,அவர்கள் பதற ,

அதற்கு இவரும் ஒரு மீடிஎட்டேர் தான் இவர்கிட்ட கேளு என் வீடு எவ்ளோ வாடகை போவும்னு?என்று சொல்ல ,
இவன் அந்த ஆளை தனியே கூட்டிப்போய்,
இதோ பாருய்யா 3000 வாடகைக்கு பம்மல்ல வூடு கிடைக்காது ,
வோணும்னா அனகாபுத்தூர்ல கணேஷ் தேட்டராண்ட வேண்ணா ஒன்னு காலியாவுது.
உனுக்கு ஓகேன்னா நாளைக்கே பாக்கலாம்.
என்று சொல்ல வீட்டுக்காரர் தலை சுற்ற சுவற்றை பிடித்துக்கொண்டார்.

அதன் பின்னே மறுபடியும் நாகவல்லியம்மன் கோவில் அருகே வந்து கரண்ட் கட்டாகிஇருந்தாலும் இவனிடம் மாட்டிய நண்பர்களிடம் ஒரு மணி நேரம் மொக்கை போட்டு வீடு வந்தால் பசங்க படுத்து விட்டனர்,
மனைவி மட்டும் டிவி சீரியல் பார்த்துக்கொண்டிருக்க ,
இவன் வந்ததும்...

இன்னா ஓத்து துண்ணுட்டியா?
இவன், ம்ம்ம்......
அசிங்கமாக சிரித்தான்(வழிந்தான்).
இன்னா போவுது?
ம்ம்ம்......... நாடகம்.
இவன்,இன்னா கோவம் டா?

ம்ம்ம்......... வீட்டுக்காரன் வந்துட்டு போனான் ,
இவன்,இன்னாவாம் அவனுக்கு ?

வாடகை வர்ற மாசத்துலேந்து 4000 ரூபாவாம் ,
குடுக்க இஷ்டமில்லாட்டி வூட்ட காலி பண்ண சொல்லிட்டான்,
அடுத்த பார்ட்டி நாளைக்கே வர ரெடியாம் ,

இவன்,தெவ்டியாப்பய்யன்,...இன்னாடி இது தம்மாத்தூண்டு புறாக்கூண்டுக்கு
குடுக்கற 2000 மே அதிகம்டி,
நீ இன்னாடி சொன்ன?

................................மௌனம்.,,,,,பின்னர் ஆக்ரோஷமாகி
ம்ம்ம்...................... ,நீ தினம் பண்ணுற அநியாயம் இன்னிக்கு வீட்டுல காம்சிருக்குது.
நீ குடி கெடுக்கறதால இங்க இப்படியெல்லாம் நடக்குதுயா.
வாங்குற காசெல்லாம் எங்களுக்காவது குடுத்தியா?அல்லாம் அந்த டாஸ்மாக் தேவ்டியாளுக்கே வுட்டு நொலுந்துற ..
இங்க பொண்டாட்டி புள்ள துன்னா இன்னா,துன்னாட்டி இன்னா?
உன் வயிறு நிரம்பிடனும்,
துன்றதும் அவ்ளோ.. பேல்றதும் அவ்ளோ..,
வாடகை உழைச்சு குடுத்தா என்னை மாதிரி உரைக்கும்டா மாமாப்பயலே ...

புள்ளீங்க இன்னா படிக்கிதுன்னு தெரியுமாடா?
ஒனக்கு ஒரு மசுரும் கவலையில்ல,இதுக்கும் நான் தாண்டா அவுக்கணும்..
பாடு.......இதெல்லாம் டீசென்ட்டான வசவுகள் ,
நாடகம் முடிந்ததும் ,இவன் தேனருவி சேனல் மாற்றிய போது கேட்டாளே ஒன்று?
அவன் எதற்கும் தொட்டு பார்த்துக்கொண்டான்.

தமிழக அரசு படம் போட்ட இலவச வண்ண தொலை காட்சியில் தேனருவி சானலில்
நீரில் நனைந்த நமீதா சரத்குமாரை பிணைந்து அர்ஜுனா ,அர்ஜுனா என்று பாட ,
இவன் உற்சாகமாக ,
படுத்திருந்த அவள் வேகமாக எழுந்து இவன் முகத்தில் எச்சில் துப்பி விட்டு போனாள்.

இவன் ஒண்ணுமே நடக்காத மாதிரி முகத்தை துடைத்து
ஒரே புழுக்கம்..... ஏசி போடனும்
என்று சாந்தி பாக்கை வாயில் பிரித்துக்கொட்டிக்கொண்டு பாடலை பார்க்க ஆரம்பித்தான்.
___________________________________________________________________
டிஸ்கி:-
இது குறித்து எழுத காரணம்.
என் பால்ய நண்பருக்கு என் விடுப்பில் வீடு தேட போய் நான் கண்ட அவலமான தரிசனமே ,ஒரு நல்ல வீட்டுக்காரரையோ,புரோக்கரையோ நான் சந்திக்கவில்லை.கடைசியில் பால்ய நண்பர் 3500 ரூபாய்க்கு வீடு கிடைக்காமல் ராணிப்பேட்டை சென்றுவிட்டார்.
அங்கிருந்து அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து எக்ஸ்பிரெஸ் ரயில் பிடித்து வேலைக்கு வருகிறார்.இப்போதும் என்னதான் பொருளாதார பின்னடைவு இருந்தாலும்,முன்பு போல புறநகரில் 3500 ரூபாய்க்கு வீடு கிடைப்பதில்லை .

இதில் உள்ள கெட்ட வார்த்தைகளை மறந்து விடுங்கள்.
நல்ல செய்தியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
இது சிறுகதை போட்டிக்கு எழுதப்பட்ட கதையின் மீள்பதிவு.

விதைப்பதையே அறுக்கிறோம்.-கலக்கல் கதைகள்



































ருநாள் பிரயன் ஆண்டர்சன் என்னும் நண்பர்
ஒரு வயதான பெண்மணி வழியில் டயர் பஞ்சராகிப் போன தன் பென்சு காரின் அருகில் நின்று போகும் வரும் வண்டிகளை கைகாட்டி உதவி கேட்டு கொண்டிருப்பதை பார்க்கிறார்.

தன் காரை அணைக்காமல் கதவை திறந்து இறங்கி,அந்த முதிய பெண்மணியை நெருங்கி,புன்னகைத்தும் கூட அவருக்கு நம்பிக்கை இல்லாமல் பதிலுக்கு புன்னகைக்க வில்லை.

அந்த அம்மா எதோ ஒரு அவசரத்திலும் பயத்திலும் இருப்பது நன்கு விளங்குகிறது.கடந்த ஒருமணி நேரமாக இந்த பெண்மணிக்கு யாரும் உதவவில்லை போலும்.குளிரில் வேறு நடுங்குகிறார்.
இருட்டிக் கொண்டு வேறு வருகிறது.

தன் தோற்றம் கண்டு அவருக்கு பசித்தவன் போலும், ஏழை போலும் தோன்றுகிறதோ?தம்மை அடித்து இருக்கும் பணத்தை பிடுங்கிக் கொள்வான் என நினைத்து விட்டாரோ?

இந்த குளிரில் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் அந்த பெண்மணி விரைத்தே இறந்து விடுவார்.எனவே என்ன நினைத்தால் என்ன என்று?

அவரை நெருங்கி
அம்மா என் பெயர் பிரயன் அண்டர்சன்,நான் உங்களுக்கு டயர்களை மாற்றி தருகிறேன்.நீங்கள் வெதுவெதுப்பாக காரின் உள்ளே அமருங்கள்.
இப்போ முடிந்து விடும் என்று சொல்லி விறு விறு விறுவென டயர் கழற்ற ஆரம்பிக்கிறார்.போல்டுகள் மிகவும் திருகூட்டப்பட்டிருந்ததால் உள்ளங்
கையில்,முழங்கையில் காயங்கள் பட்டு விடுகிறது.
கைகளும் கரியாகிவிடுகிறது.

புன்னகையுடன் அந்த பெண்மணியை நோக்கி முடிந்துவிட்டது என குரல் கொடுக்கிறார்.அந்த பெண்மணிக்கோ உயிர் போய் உயிர் வந்த சந்தோஷம்.
அவரை நோக்கி குனிந்து

நான் அவசரமாக செயின்ட் லூயிஸ் சென்றுகொண்டிருக்கும் போது இப்படி ஆனது. ஐயா , கடவுள் போல வந்து எனக்கு உதவினீர்கள்.
இதற்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை,என்று மேலும்

நான் உங்களுக்கு ,இதற்கு எவ்வளவு தரவேண்டும்?
எனக்கு எவ்வளவு தொகையானாலும் ஆட்சேபனை இல்லை.என்கிறார்.
இவர் புன்னகைத்து.

நான் இது பணத்துக்காக செய்த உதவியல்ல.
கடவுளுக்கு எனக்கு எப்படி யார் மூலம் தரவேண்டும் என்று நன்கு தெரியும் .
நான் அப்படித்தான் இதுவரை வாழ்ந்திருக்கிறேன்.என்று பணத்தை மறுக்கிறார்.
மேலும்.

உங்களுக்கு உண்மையிலேயே எனக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என தோன்றினால் ,அடுத்தமுறை கஷ்டத்தில் இருப்பவரை காண நேர்ந்தால்.வலிய போய் உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்,அப்போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

அந்த பெண்மணி காரை இயக்கி சாலையில் கலக்கும் வரை இருந்து விட்டு.மிகுந்த ஆத்ம திருப்தியுடன்.தன் காருக்கு வருகிறார்.

இப்போது மழை பிடித்துக் கொள்ள,
அந்த முதிய பெண்மணி சாலையோர உணவகம் கண்டு காரை உள்ளே செலுத்தி நிறுத்தி,உணவகத்திற்குள் நுழைந்து கதகதப்பான இடம் தேடி அமர்கிறார்.அது மிகவும் சிறிய எளிமையான உணவகம்,வெளியே இரண்டு பெட்ரோல் பும்புகளும் இருக்கின்றன.நிறைய கூட்டம்.

அதற்கு முன் இந்த பெண்மணி அப்படி ஒரு உணவகம் வந்ததில்லை.
இப்போது அங்கு வேலை பார்க்கும் பணிப் பெண் சுத்தமான பூத்துவாலையுடன் அருகில் வருகிறாள். இந்த பெண்மணியை அன்புடன் நெருங்கி, மழையில் நனைந்த இவரின் தலையை துடைத்து விடுகிறாள்.

அப்போது தான் இவர் அந்த பெண்மணியின் எட்டுமாத பேறுகால வயிற்றை.
கவனிக்கிறார்.என்ன ஒரு பிறவி?காலையில் இருந்து வேலை பார்த்துக் கொண்டு ,வயிற்றில் சுமையையும் வைத்துக் கொண்டு வீங்கிய கால்களுடன் எப்படி இந்த பெண்ணால் புன்சிரிப்புடன் இருக்க முடிகிறது?எப்படி முன் பின் தெரியாதவருக்கு கூட உதவ முடிகிறது?
என்று மனதுக்குள் பிரயன் ஆண்டர்சன்னையும் நினைத்துக் கொள்கிறார்.

பின்னர், இரவு உணவை முடித்து பில் வருகையில் , தட்டில் 100 டாலர் வைக்கிறார்.அந்த பெண் அதை எடுத்துப் போய் செலுத்தி,மீதம் தொகை கொண்டு வந்து இவரை தேட,இவர் வெளியேறியிருக்கிறார்.

அப்போது அந்த நாப்கினில் எதோ எழுதியிருப்பதை கண்டு வியப்புடன் அதை படிக்கிறாள்.படிக்கையில் நெகிழ்ந்து கண்ணீர் விடுகிறாள்.
அதில்,நாப்கினுக்கு கீழே இன்னும் நான்கு 100 டாலர் தாள்கள் உள்ளன.
நீ எனக்கு இதை திரும்ப தரவேண்டியதில்லை.

நான் ஒருவருக்கு செலுத்த வேண்டிய நன்றிக்கடனை உன்னிடம் தீர்த்துக் கொண்டேன்.உனக்கு உண்மையில் எனக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என தோன்றினால்,இந்த உதவி சங்கிலி உன்னுடன் முடிந்து விடாமல் தொடரும்படி பார்த்துக் கொள்.என எழுதியிருந்தார்.

உணவகம் அடைக்கும் நேரம் நெருங்குகிறது.மனதில் சந்தோஷ பாரம்.
பாத்திரங்களை கழுவ வேண்டும்.மீதமுள்ள மேசைகளை கவனிக்க வேண்டும்.
எல்லா மேசைகளிலும் சர்க்கரை புட்டியில் சர்க்கரை நிரப்ப வேண்டும்.
களைப்பு அசத்தியது.

ஒரு வழியாக வீடு திரும்பி ,கட்டிலில் ஏறி , அந்த பெண்மணியையும்,கடிதத்தையும் அவர் செய்த உதவியையும் மனதுக்குள் அசை போடுகிறாள்.அந்த பெண்மணிக்கு எப்படி தெரியும்?
கணவன் மனைவி நாங்கள் ஒவ்வொரு மாதத்தையும் ஓட்ட படும் பாடு.
அடுத்த மாதம் வரப்போகும் தன் பேறுகால சிகிச்சை செலவு?

இவர் உதவியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்?.
தன் கணவன் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்?
தூங்கும் போதும் எதிர்வரும் செலவுகளை எப்படி சமாளிப்போம் என்ற கவலையில் தூங்கும் தன் ஆசை கணவனுக்கு செல்லமாய் முத்தமிட்டு.
கவலைபடாதே பிரயன் ஆண்டர்சன் ,எல்லாம் சரியாகிவிடும்,
நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். என்கிறாள்.

விவிலியத்தில் ஒரு புனித வசனம் உண்டு
து கொடுக்கப்படுகிறதோ அதுவே திரும்ப எடுக்கப்படுகிறது.
(Obadiah 15; Gal. 6:7)
விதைப்பதையே அறுக்கிறோம்.
நல்லதையே விதைப்போம்
போன்றன.
இது நகல்

இது அசல்

WHAT GOES AROUND COMES AROUND

One day a man saw an old lady,stranded on the side of the road, but even in the dim light of day, he could see she needed help. So he pulled up in front of her Mercedes and got out. His Pontiac was still sputtering when he approached her.

Even with the smile on his face, she was worried. No one had stopped to help for the last hour or so. Was he going to hurt her? He didn't look safe; he looked poor and hungry.

He could see that she was frightened, standing out there in the cold. He knew how she felt. It was that chill which only fear can put in you.

He said, 'I'm here to help you, ma'am. Why don't you wait in the car where it's warm? By the way, my name is Bryan Anderson .'

Well, all she had was a flat tire, but for an old lady, that was bad enough. Bryan crawled under the car looking for a place to put the jack, skinning his knuckles a time or two. Soon he was able to change the tire. But he had to get dirty and his hands hurt.

As he was tightening up the lug nuts, she rolled down the window and began to talk to him. She told him that she was from St. Louis and was only just passing through.. She couldn't thank him enough for coming to her aid.

Bryan just smiled as he closed her trunk. The lady asked how much she owed him. Any amount would have been all right with her. She already imagined all the awful things that could have happened had he not stopped. Bryan never thought twice about being paid. This was not a job to him. This was helping someone in need, and God knows there were plenty, who had given him a hand in the past. He had lived his whole life that way, and it never occurred to him to act any other way.

He told her that if she really wanted to pay him back, the next time she saw someone who needed help, she could give that person the assistance they needed, and Bryan added, 'And think of me.'

He waited until she started her car and drove off. It had been a cold and depressing day, but he felt good as he headed for home, disappearing into the twilight.

A few miles down the road the lady saw a small cafe. She went in to grab a bite to eat, and take the chill off before she made the last leg of her trip home.. It was a dingy looking restaurant. Outside were two old gas pumps The whole scene was unfamiliar to her. The waitress came over and brought a clean towel to wipe her wet hair. She had a sweet smile, one that even being on her feet for the whole day couldn't erase. The lady noticed the waitress was nearly eight months pregnant, but she never let the strain and aches change her attitude. The old lady wondered how someone who had so little could be so giving to a stranger. Then she remembered Bryan ...

After the lady finished her meal, she paid with a hundred dollar bill. The waitress quickly went to get change for her hundred dollar bill, but the old lady had slipped right out the door. She was gone by the time the waitress came back. The waitress wondered where the lady could be.Then she noticed something written on the napkin

There were tears in her eyes when she read what the lady wrote: 'You don't owe me anything. I have
been there too. Somebody once helped me out, the way I'm helping you. If you really want to pay me back, here is what you do: Do not let this chain of love end with you..'

Under the napkin were four more $100 bills.

Well, there were tables to clear, sugar bowls to fill, and people to serve, but the waitress made it through another day. That night when she got home from work and climbed into bed, she was thinking about the money and what the lady had written. How could the lady have known how much she and her husband needed it? With the baby due next month, it was going to be hard.....

She knew how worried her husband was, and as he lay sleeping next to her, she gave him a soft kiss and whispered soft and low, 'Every thing's going to be all right. I love you, Bryan Anderson .'

There is an old saying 'What goes around comes around.' (Obadiah 15; Gal. 6:7)

Today I sent you this story, and I'm asking you to pass it on. Let this light shine.
Don't delete it, don't return it. Simply, pass this on to a friend
Good friends are like stars....You don't always see them, but you know they are always there.

மாத்தி யோசி


























மாத்தி யோசி

கலக்கல் கதைகள் -எந்த விடயத்தையும் வித்தியாசமாய் சிந்தியுங்கள்

ரு அரசு கட்டிடத்தின் படிகளில் கண் பார்வை இழந்த சிறுவன் பிச்சைக்காக அமர்ந்திருந்தான்.அவன் காலடியில் இருந்த தொப்பியில் சில சில்லறை காசுகளே சேர்ந்திருந்தன.கூடவே ஒரு அறிவிப்பு பலகை

" நான் பார்வையற்றவன்" தயவுசெய்து எனக்கு உதவுங்கள் என்கிறது.

அவ்வழியாக கடந்து போன சான்றோர் ஒருவர்,தொப்பியில் கொஞ்சம் காசு போடுகிறார்.அந்த அட்டையை எடுத்து,திருப்பி அதில் ஏதோ எழுதுகிறார்.
இப்போது அதை கடந்து போகும் அனைவரும் காசு போடுகின்றனர்.
தொப்பியும் நிரம்பி வழிகிறது.
சிறுவனுக்கோ மிகவும் சந்தோஷம்.

மதிய உணவு வேளையின் போது அந்த சான்றோர் அங்கு வர
இவன் காலடி சத்தத்தை வைத்து அவரை கண்டுபிடிக்கிறான்.
அவரிடம்
ஐயா ,இன்று காலை நீங்கள் தானே அந்த அட்டையில் ஏதோ எழுதியது?
இவ்வளவு காசு சேரும் படி அதில் என்ன எழுதினீர்கள்?என வினவ.
அவர்,தம்பி நான் அதில் உண்மையைத்தான் எழுதியிருந்தேன்.
என்ன ,அதை கொஞ்சம் புதுமையாக சொல்லியிருந்தேன்.

இது தான் அந்த வாசகம்

"இன்று மிக அழகிய நாள்,ஆனால் என்னால் அதை காண முடியாது"
முதல் வாசகத்திற்கும் இரண்டாம் வாசகத்திற்கும் என்ன வித்தியாசம்?என்கிறீர்களா?
ஆம் இரண்டும் சிறுவன் பார்வையற்றவன் என்ற உண்மையை தான் சொல்கிறது.முதல் வாசகம் மக்களிடம் காசு போட்டு உதவுங்கள் என சொல்கிறது.
ஆனால் இரண்டாம் வாசகம் இன்றைய நாளின் அழகை கடந்து செல்பவர்கள் அனுபவிக்க முடியும்,ஆனால் சிறுவனால் முடியாது என சொல்கிறது.

முதல் வாசகம் சிறுவன் பார்வை அற்றவன் என்றும்
இரண்டாம் வாசகம் கடந்து செல்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்,அவர்களால் பார்க்க முடியும் என்றும் .
இந்த சிறு கதையின் மூலம் நாம் இரண்டு பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.
ஒன்று :-புதுமை செய்,எல்லா செயல்களுக்கும் சிறந்த மாற்று வழி ஒன்றிருக்கும்,அதில் முயற்சி செய்.மொத்தத்தில் மாத்தியோசி
இரண்டு:-கிடைத்ததை மகிழ்ச்சியாக மதித்து ஏற்றுக்கொள்.
அது கூட இல்லாதார் எத்ததனை பேருண்டு உலகில்?
இல்லாதாருக்கும்,தேவை உள்ளோருக்கும் உன்னால் முடிந்த உதவியை செய்.
என்பது தான் அது
இந்த கதைக்கு மாத்தி யோசி என்று பெயர் சூட்டிய வடலூரார் கலையரசனுக்கு நன்றி.நண்பர்களே தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி.

இது நகல்.


இது அசல்.

Stories that stir

There is always a better way

A blind boy sat on the steps of a building with a hat by his feet. He
held up a sign which said: “I am blind, please help.” There were only
a few coins in the hat. A man was walking by. He took a few coins from
his pocket and dropped them into the hat. He then took the sign,
turned it around, and wrote some words. He put the sign back so that
everyone who walked by would see the new words.

Soon the hat began to fill up. A lot more people were giving money to
the blind boy.

That afternoon the man who had changed the sign came to see how things
were. The boy recognized his footsteps and asked, “Were you the one
who changed my sign this morning? What did you write?” The man said,
“I only wrote the truth. I said, what you said but in a different
way.”

What he had written was: “Today is a beautiful day and I cannot see it.”

Do you think the first sign and the second sign were saying the same
thing? Of course both signs told people the boy was blind. But the
first sign simply told people to help by putting some money in the
hat. The second sign told people that they were able to enjoy the
beauty of the day, but the boy could not enjoy it because he was
blind. The first sign simply said the boy was blind. The second sign
told people they were so lucky that they were not blind. Should we be
surprised that the second sign was more effective?

There are at least two lessons we can learn from this simple story.

Be innovative. Think differently. There is always a better way!

The second is: Be thankful for what you have. Someone else has less.
Help where you can make it great for the needful.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (157) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)