To Kill a Mockingbird - 1962: டு கில் ய மாக்கிங்பேர்ட்

To Kill a Mockingbird - 1962: 
ராபர்ட் முல்லிகன் இயக்கத்தில், 1962-ல் வெளியான 'To Kill a Mockingbird' திரைப்படம், ஹார்ப்பர் லீயின் நாவலை அதன் ஆன்மாவைச் சிதைக்காமல், வெள்ளித்திரையில் நிலைநிறுத்திய ஒரு அழியாத கல்ட் க்ளாஸிக் படைப்பு. 

இப்படத்தை நீதிமன்ற நாடகமாக அடக்க முடியாது; அமெரிக்கச் சமூக மனசாட்சியின் ஆழ்மன ஆவணமாகவும், கருணையையும் அப்பாவியையும் கொண்டாடும் ஒரு சினிமா அகராதியாகவும் திகழ்கிறது.

இயக்குநர் முல்லிகன், மகா மந்தநிலை  நிலவிய 1930-களின் அலபாமா கிராமத்தின் தெற்கு கோதிக்  சூழலை, அதன் வெப்பம், வறுமை, மற்றும் இனப் பாகுபாட்டின் அமைதியான அச்சுறுத்தலுடன் கச்சிதமாகப் படம்பிடித்துள்ளார். 

ஒட்டுமொத்தக் கதையும், ஸ்கவுட் என்ற சிறுமியின் பார்வையில் சொல்லப்படுவது ஒரு கவித்துவ உத்தி. இக்கதை, பெரியவர்களின் கொடூரமான உலகம், ஒரு குழந்தையின் அப்பாவித்தனமான கண்களுக்கு எப்படித் தெரிந்தது என்பதை நுட்பமாகக் காட்சிப்படுத்துகிறது.

 ஒளிப்பதிவு, கிராமத்தின் வெற்று வீடுகளையும், வாடிய புல்வெளிகளையும், அட்டிகஸின் வீட்டின் நிழல் சூழ்ந்த அமைதியையும் ஒரு கனவுத் தோற்றம் போலக் காட்டி, காலத்தின் நீட்சியை உணர வைக்கிறது.

நடிகர் கிரிகோரி பெக்கின் அட்டிகஸ் ஃபிஞ்ச் பாத்திரம், அமெரிக்க சினிமாவின் ஆகச் சிறந்த பாத்திரங்களில் ஒன்றாகும்.

 அட்டிகஸ், ஒரு புத்திசாலி வழக்கறிஞராக மட்டுமல்லாமல், தனது பிள்ளைகளுக்கும் ஊருக்கும் ஒரு ஒளிவிளக்காகவும் இருந்தார். 

பெக்கின் அமைதியான குரல், நேர்மையான பார்வை, மற்றும் நீதிமன்றத்தில் அவர் டாம் ராபின்சனுக்காகப் பேசும் நீண்ட வசனங்கள், திரையில் அவர் தனித்து நிற்கும் அறநெறி சார்ந்த வலிமையைக் காட்டியது.
 இக்கதாபாத்திரத்திற்கு வேண்டி அவர் வென்ற ஆஸ்கர் விருது, நியாயத்தின் சின்னமாக இன்றும் போற்றப்படுகிறது.

 அதேபோல, ஸ்கவுட் மற்றும் ஜெம் பாத்திரங்களை ஏற்று நடித்த குழந்தைகள், தங்கள் அப்பாவித்தனமான கேள்விகள் மூலமும், பார்வையாளர் மனசாட்சியைத் தொட்டார்கள்.

இத்திரைப்படத்தின் மிக முக்கியமான மேதமை, மர்மமான பூ ராட்லி கதாபாத்திரத்தை கையாண்ட விதம். படத்தின் பெரும்பகுதிக்கு அவர் திரையில் தோன்றவே மாட்டார்; ஆனால், மரப்பொந்தில் பரிசுகளை வைப்பது, பின்னர் குழந்தைகளைக் காப்பது என, மௌனமான செயல்கள் மூலம் அவர் பாசம், இரக்கம், மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தியபடியே இருப்பார்.

 இறுதிவரை அமைதியைக் கடைப்பிடித்து, வெளியில் இருந்து சமூகத்தின் கொடூரங்களைப் பார்க்கும் பூ ராட்லி, சமூகத்தில் ஒதுக்கப்பட்ட , அப்பாவி மனிதர்களின் சின்னமாகவே மாறுகிறார். 

பூவைச் சட்டம் தண்டிப்பதை விடுத்து, சமூக மௌனத்தின் மூலம் அவரைக் காக்கும் ஷெரிஃப் டேட்டின் முடிவு, நியாயத்தைக் காக்க சட்டத்தின் எல்லையை மீறலாம் என்ற ஒரு சிக்கலான செய்தியைப் பதிகிறது.

அப்பாவியைக் கொல்வது (The Mockingbird Metaphor)
"அப்பாவி பறவையைக் கொல்லுவது  " என்ற அட்டிகஸின் உவமை, கதையின் மையத்தை விளக்குகிறது. 

டாம் ராபின்சன் ஒரு அப்பாவியானவன், யாருக்கும் உதவ மட்டுமே தெரிந்தவன்—அவன் ஒரு பாடும் பறவை (Mockingbird) போன்றவன். இனப் பாகுபாடு நிறைந்த நீதிமன்றம் அவனை தண்டித்தது அநீதியைக் குறிக்கிறது. 

அதேபோல, பூ ராட்லியும் அப்பாவியாகவே வாழ்ந்தவர். இத்திரைப்படம், இனவெறி மற்றும் வர்க்கப் பாகுபாட்டால் அப்பாவிகள் எப்படி அழிக்கப்படுகிறார்கள் என்பதைப் பேசியதுடன், ஒரு தலைமுறையினருக்குச் சமூக நீதி பற்றிய முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுத்தது.

இப்படம் உன்னதமான கலை இயக்கம், மிகச் சிறந்த நடிப்பு, மற்றும் ஆழமான அறநெறி சார்ந்த கருப்பொருளால், உலக சினிமா வரலாற்றில் நீதிக்கான ஒரு அழியாத குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

படத்தின் கதை:-

அமெரிக்க இலக்கியத்தின் செவ்வியல் படைப்பான 'To Kill a Mockingbird', ஹார்ப்பர் லீயால் 1960-ல் எழுதப்பட்டது. இது அவரது சொந்த வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளைத் தழுவி, மகா மந்தநிலை (Great Depression) நிலவிய காலத்தில் (1933–35) அலபாமா மாகாணத்தின் மேகோம் என்ற கற்பனைக் கிராமத்தில் நடக்கும் கதை.
இந்த நாவல் வெளியானதுமே வெற்றி பெற்று, இலக்கியத்துக்கு தரப்படும் உயரிய பரிசான புலிட்சர் பரிசையும் வென்றது.

கதை முழுவதையும், ஆறு வயதுச் சிறுமியான ஜீன்னா லூயிஸ் "ஸ்கவுட்" ஃபிஞ்ச் என்பவர் விவரிக்கிறார். ஸ்கவுட், தன் மூத்த சகோதரன் ஜெம், மற்றும் தன் தாய் இல்லாத குறையைப் போக்கும் சமையல்காரியான கால்புர்னியாவுடன் வசித்து வருகிறாள். 
அவர்களின் தந்தை அட்டிகஸ் ஃபிஞ்ச், நேர்மையான, நடுவயதுள்ள வெள்ளையின வழக்கறிஞர். அவர் சமூக நீதியைப் பெரிதும் மதிப்பவர். 

ஒவ்வொரு கோடைகாலத்திலும், சார்லஸ் பேக்கர் ஹாரிஸ் என்ற சிறுவன், தன் அத்தையுடன் மேகோம் கிராமத்திற்கு வருவான். இந்த மூன்று குழந்தைகளும் தங்கள் பக்கத்து வீட்டில் வசித்த, மிகவும் மர்மமான மற்றும் ஒதுங்கி வாழும் ஆர்தர் "பூ" ராட்லியைப் பற்றி பலதும் பேசி அஞ்சுகின்றனர்.
 அதேசமயம் ஆச்சரியமும் கொண்டிருந்தனர். 

பூ ராட்லியைப் பற்றி ஊர் மக்கள் பேசுவதைத் தவிர்த்தனர், பல வருடங்களாக யாரும் அவரை வெளியே கண்டதுமில்லை. இந்த மர்ம மனிதனை எப்படி வீட்டிலிருந்து வெளியே கொண்டு வருவது என்று குழந்தைகள் பல கனவுகளைக் கண்டனர்.

இரண்டு கோடைகால நட்புக்குப் பிறகு, ஸ்கவுட்டும் ஜெம்மும் ராட்லி வீட்டின் வெளியே இருந்த ஒரு மரப்பொந்தில், தாங்கள் சில சிறிய பரிசுகளை பொம்மைகள், டிரின்கெட்டுகள் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டனர். மர்மமான பூ ராட்லி, நேரில் வராவிட்டாலும், பாசத்தோடு அவர்களுக்குப் பரிசுகளைக் கொடுப்பதைக் குழந்தைகள் புரிந்துகொள்கின்றனர். 

ஆனால், ஒரு நாள் பூவின் அண்ணன் அந்த மரப்பொந்தைச் சிமெண்ட் கொண்டு மூடிவிட்டதால், பரிசுகள் வருவது நின்றன.

 குழந்தைகளின் கற்பனைக் கதைகளுக்குள் வாழ்ந்த பூ ராட்லி, அவர்களுக்குத் தெரியாமல் பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

இந்தக் காலத்தில்தான், நீதிபதி டெய்லர், அட்டிகஸிடம் ஒரு முக்கியமான வழக்கை ஒப்படைக்கிறார். டாம் ராபின்சன் என்ற கருப்பின ஆண், மேயெல்லா ஈவல் என்ற இளம் வெள்ளையினப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
மேகோம் கிராமத்தின் பெரும்பான்மையான மக்கள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டாம் ராபின்சனை எதிர்த்தனர். ஆனாலும், அட்டிகஸ், தன் கடமையைத் திறம்படச் செய்ய ஒப்புக்கொள்கிறார்.

 அட்டிகஸை எதிர்த்து, மற்ற குழந்தைகள் ஜெம்மையும் ஸ்கவுட்டையும் "நீக்ரோ காதலனின் பிள்ளைகள்" என்று கேலி செய்கின்றனர்.

 தந்தை சண்டையிட வேண்டாம் என்று சொல்லியிருந்தாலும், ஸ்கவுட் தன் தந்தையின் மரியாதையைக் காப்பாற்ற எதிர்த்துப் போராடுவதற்கு ஆசைப்படுகிறாள்.

வழக்கு விசாரணைக்கு முந்தைய நாள் இரவு, அட்டிகஸ், டாம் ராபின்சன் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வாசலில் தனியாக நின்று கொண்டிருந்தார். 

டாம் ராபின்சனை சட்ட விரோதமாகத் தாக்க (lynch) துடித்த ஒரு ஆத்திரமூட்டப்பட்ட கும்பல் அங்கே வந்தது. எதிர்பாராத விதமாக, ஸ்கவுட், ஜெம் மற்றும் டில் அங்கே வந்து சேர்ந்தனர். அந்தச் சமயத்தில், ஸ்கவுட், அந்தக் கும்பலில் இருந்த ஒருவனின் மகனான தன் வகுப்புத் தோழனைஅடையாளம் கண்டு, அவனுடன் மனம் விட்டுப் பேசினாள். 

அவளது அப்பாவியான, இதயப்பூர்வமான பேச்சு, அந்தக் கும்பலின் வன்முறை மனநிலையை  உடைத்தது; அவமானமடைந்த அக்குடும்பத்தினர் கலைந்து சென்றனர்.

அட்டிகஸ் தன் பிள்ளைகள் நீதிமன்றத்திற்கு வருவதை விரும்பவில்லை. ஆனால், ஜெம், ஸ்கவுட் மற்றும் டில், மெலனியின் தேவாலயப் பாதிரியாரான ரெவரெண்ட் சைக்ஸ் அழைப்பின் பேரில், கருப்பின மக்கள் அமரும் உப்பரிகையில்  அமர்ந்து வழக்கை உன்னிப்பாகக் கவனித்தனர்.

நீதிமன்றத்தில், அட்டிகஸ் தனது திறமையால் மேயெல்லா ஈவலும் அவள் தந்தை பாப் ஈவலும் பொய் சொல்கிறார்கள் என்பதை நிறுவுகிறார். 

அட்டிகஸின் விசாரணையில், உண்மையில் மேயெல்லா தான் டாம் ராபின்சனிடம் அத்துமீறிப் பாலியல் சமிஞ்யைகளை வெளிப்படுத்தினாள் என்பதும், இதன் விளைவாக அவளது சொந்தத் தந்தையால் அவள் கடுமையாகத் தாக்கப்பட்டாள் என்பதும் நிரூபணமாகிறது.

 மேலும், பாப் ஈவல் இடது கையால் தாக்குபவர் என்றும், டாம் ராபின்சன் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் தன் இடது கையை முழுவதுமாக இழந்தவர், இதனால் அவரால் மேயெல்லாவைத் தாக்கியிருக்க முடியாது, என்றும் அட்டிகஸ் வாதாடுகிறார். 

டாம் ராபின்சன், மேயெல்லாவைப் "பார்த்துப் பரிதாபப்பட்டதால்" தான் அவருக்கு உதவச் சென்றதாகச் சொல்கிறார். ஆனால், ஒரு கருப்பின ஆண் ஒரு வெள்ளையினப் பெண்ணுக்காகப் பரிதாபப்படுவது வெள்ளையினச் சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியாத அவமானமாகவே கருதப்பட்டது.

 நீதிமன்றத்தில் ஆதாரம் தெளிவாக இருந்தபோதிலும், வெள்ளையின நடுவர்கள்  டாம் ராபின்சனை குற்றவாளி என்று தீர்ப்பளித்தனர்.

 நீதியின் மீது ஜெம் வைத்திருந்த நம்பிக்கை இதனால் மிகவும் குலைந்தது. தீர்ப்பு வெளியானபோது, மாடியில் இருந்த கருப்பின மக்கள் அனைவரும், அட்டிகஸிற்கு மரியாதை செலுத்தும் விதமாக எழுந்து நின்கின்றனர்.

அட்டிகஸ் மேலதிக முறையீட்டில் தீர்ப்பை மாற்றலாம் என்று நம்புகிறார். ஆனால், நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியாகி 24 மணி நேரத்திற்குள், டாம் ராபின்சன் சிறையிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுகிறார்.

டாம் ராபின்சன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் அவர் மீது கூறப்பட்ட பொய்களை அட்டிகஸ் அம்பலப்படுத்தியதால், பாப் ஈவல் அவமானமடைகிறான். அட்டிகஸ், ஈவலுக்கு இருந்த கடைசி கொஞ்ச நஞ்ச மரியாதையையும் அழித்துவிட்டதாக உணர்ந்த பாப், பழிவாங்க சபதம் பூணுகிறான்.

முதலில், அவன் அட்டிகஸின் முகத்தில் துப்புகிறான், பிறகு நீதிபதியின் வீட்டிற்குள் நுழைய முயற்சிக்கிறான், இறுதியாக டாம் ராபின்சனின் விதவை மனைவியை மிரட்டுகிறான். இந்த மிரட்டல்கள், பாப் ஈவல் எவ்வளவு மோசமானவன் என்பதைக் காட்டுகின்றன.

அடுத்ததாக, இலையுதிர்காலத்தில் ஒரு இருள் சூழ்ந்த இரவில், பள்ளி விழாவில் கலந்துகொண்டுவிட்டு, காட்டு வழியாக நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜெம் மற்றும் ஸ்கவுட்டைக் குறிவைத்து, பாப் ஈவல் வன்முறைத் தாக்குதல் நடத்துகிறான்.

அத்தாக்குதலில் ஜெம்மிற்கு கை உடைகிறது, அவன் மயக்கமடைகிறான்.
தாக்குதலின் குழப்பத்திற்கு நடுவில், ஒரு மர்மமான நபர் வந்து, குழந்தைகளைக் காப்பாற்றுகிறார். அவர் மயங்கிக் கிடந்த ஜெம்மைத் தூக்கிக்கொண்டு ஃபிஞ்ச் வீட்டிற்குக் கொண்டு வருகிறார். 

ஜெம் படுக்கையில் கிடக்கும்போது, ஸ்கவுட், கதவுக்குப் பின்னால் கூச்சத்துடன் ஒதுங்கி நிற்கும் அந்த விநோதமான மனிதனைக் கூர்ந்து பார்க்கிறாள். 

அவன் வேறு யாருமல்ல, இத்தனை நாட்களாக அவர்கள் பயந்தும், மர்மமாகவும் பார்த்த பூ ராட்லிதான் அவர் என்று உணர்கிறாள்.

கொலைவெறித் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க ஷெரிஃப் டேட் அங்கே வருகிறார். அவர் ஈவல், கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டறிகிறார். 

அட்டிகஸ், ஜெம் தற்காப்புக்காகத்தான் ஈவலைக் குத்தியிருக்க வேண்டும் என்று தவறாக நம்புகிறார். ஆனால், ஷெரிஃப் டேட், பூ ராட்லிதான் குழந்தைகளைக் காப்பாற்ற ஈவலைக் குத்திக் கொன்றார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்கிறார். 

பூவைச் சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, 
ஈவல் தவறி விழுந்து தன் கத்தியாலேயே குத்திக்கொண்டதாக ஷெரிஃப் டேட் முடிவெடுத்து முதல் தகவல் அறிக்கை எழுதுகிறார்.

பூ ராட்லியின் செயல் ஒரு அப்பாவி உயிரைப் பாதுகாக்கும் உன்னதச் செயல் என்பதை அட்டிகஸ் ஏற்றுக்கொள்கிறார். தன் சகோதரனைக் காப்பாற்றிய பூ ராட்லியின் கையைப் பிடித்துக்கொண்டு, ஸ்கவுட் அவரை அவர் வீடுவரை அழைத்துச் செல்கிறாள்.

 பூ ராட்லி தன் வீட்டு வாசலுக்கு நுழைந்து மறைந்துவிடுகிறார், அதன் பிறகு ஸ்கவுட் அவரை மீண்டும் ஒருபோதும் பார்க்கவேயில்லை.

ராட்லியின் வீட்டு வாசலில் நின்றபடி, ஸ்கவுட் இத்தனை நாட்களாகத் தான் பூவின் மீது கொண்டிருந்த பயத்தையும், அவர் எப்படித் தனிமையில் இருந்து அவர்களுக்குப் பரிசுகளைக் கொடுத்து, இறுதியில் அவர்களைக் காப்பாற்றினார் என்பதையும் உணர்கிறாள். 

பூ ராட்லியின் பார்வையில் இருந்து உலகத்தைப் பார்க்கிறாள், அப்போதுதான் அவள் உண்மையான இரக்கத்தையும் புரிதலையும் அடைகிறாள்.

கதையின் முடிவில், வயதுவந்த ஸ்கவுட், அந்த முக்கியமான கோடைகாலத்தையும், அட்டிகஸ் ஜெம்மின் படுக்கையருகே இரவு முழுவதும் விழித்திருந்து, அவன் கண் விழிக்கும்போது அவனுக்காகத் தயாராகக் காத்திருந்ததையும் நினைவுகூர்கிறாள்.

 நியாயத்தையும் இரக்கத்தையும் கற்றுக்கொடுத்த அட்டிகஸ் மற்றும் அப்பாவி உயிர்களைக் காக்கத் தன்னைக் கொடுத்த பூ ராட்லியின் நினைவுகள் ஒரு மகத்தான பாடமாக அவள் மனதில் நிலைக்கிறது, நினைவுகள் ஆசுவாசம் தருகையில் படம் நிறைகிறது.

கிரிகோரி பெக்கின் அட்டிகஸ் ஃபிஞ்ச் பாத்திரம், அமெரிக்க சினிமாவின் ஆகச் சிறந்த பாத்திரங்களில் ஒன்றாகும். அட்டிகஸ், ஒரு புத்திசாலி வழக்கறிஞராக மட்டுமல்லாமல், தனது பிள்ளைகளுக்கும் ஊருக்கும் ஒரு ஒளிவிளக்காகவும் இருக்கிறார். பெக்கின் அமைதியான குரல், நேர்மையான பார்வை, மற்றும் நீதிமன்றத்தில் அவர் டாம் ராபின்சனுக்காகப் பேசும் நீண்ட வசனங்கள், திரையில் அவர் தனித்து நிற்கும் அறநெறி சார்ந்த வலிமையைக் காட்டியது. இக்கதாபாத்திரத்திற்கு அவர் வென்ற ஆஸ்கர் விருது, நியாயத்தின் சின்னமாக இன்றும் போற்றப்படுகிறது.

 அதேபோல, ஸ்கவுட் மற்றும் ஜெம் பாத்திரங்களை ஏற்று நடித்த குழந்தைகள், தங்கள் அப்பாவித்தனமான கேள்விகள் மூலமும், பார்வையாளர் மனசாட்சியைத் தொட்டார்கள்.

இத்திரைப்படத்தின் மிக முக்கியமான மேதமை, மர்மமான பூ ராட்லியைக் கையாண்ட விதம். படத்தின் பெரும்பகுதிக்கு அவர் திரையில் தோன்றவே மாட்டார்; ஆனால், மரப்பொந்தில் பரிசுகளை வைப்பது, பின்னர் குழந்தைகளைக் காப்பது என, மௌனமான செயல்கள் மூலம் அவர் பாசம், இரக்கம், மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார்.

 இறுதிவரை அமைதியைக் கடைப்பிடித்து, வெளியில் இருந்து சமூகத்தின் கொடூரங்களைப் பார்க்கும் பூ ராட்லி, சமூகத்தில் ஒதுக்கப்பட்ட  அப்பாவி மனிதர்களின் குரலாகவே மாறுகிறார். 

பூவைச் சட்டம் தண்டிப்பதை விடுத்து, சமூக மௌனத்தின் மூலம் அவரைக் காக்கும் ஷெரிஃப் டேட்டின் முடிவு, நியாயத்தைக் காக்க சட்டத்தின் எல்லையை மீறலாம் என்ற ஒரு சிக்கலான செய்தியைப் பதிகிறது.

இத்திரைப்படம், அதன் கலைநயம் மற்றும் சமூக நீதி மீதான அழுத்தமான பார்வையால், சினிமா வரலாற்றில் ஒரு கலங்கரை விளக்கமாகப் போற்றப்படுகிறது. 
நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை மற்றும் விருதுகள் என அனைத்து அம்சங்களிலும் இக்காவியம் சிறப்புப் பெறுகிறது

கிரிகோரி பெக் ஏற்று நடித்த  அட்டிகஸ் ஃபிஞ்ச் பாத்திரம், ஒரு நடிகரின் உச்சபட்ச அறைகூவலாக அமைந்தது. அவரது நிதானம், நீதியின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை, மற்றும் அமைதியான கண்ணியம் ஆகியவை, ஒரு தந்தையின் பாசத்தையும் சமூக வழிகாட்டியின் பங்கையும் திரையில் மிக நேர்த்தியாகப் பிரதிபலித்தன. 

அதேபோல, இளம் நடிகர்களான மேரி பாத்தம் -ஸ்கவுட்   பிலிப் ஆல்போர்ட்  - ஜெம் ஆகியோரின் இயல்பான, அப்பாவித்தனமான நடிப்பு, பெரியவர்களின் சிக்கலான உலகத்தை ஒரு குழந்தையின் பார்வையில் கொண்டுவந்து சேர்த்தது.

இயக்குநர் ராபர்ட் முல்லிகன் (Robert Mulligan), நாவலின் உணர்வுபூர்வமான ஆழத்தை, அதன் மெல்லிய நாடகம் சிதையாமல் திரைக்கு மாற்றிய விதம் பிரமிக்கத்தக்கது. 1930-களின் தென் அலபாமா சூழலை, அதன் வெப்பம், வறுமை மற்றும் அமைதியான இனப் பாகுபாடு ஆகியவற்றுடன் கவித்துவமாக அவர் கையாண்டிருந்தார்.

 கதை சொல்லலில் அவர் கையாண்ட நிதானமும், மௌனமான தருணங்களின் பயன்பாடும், குறிப்பாக பூ ராட்லி (Robert Duvall) தொடர்பான காட்சிகளில் அவர் காட்டிய மர்மமும் இரக்கமும், இத்திரைப்படத்தை ஒரு அழியாத கல்ட் கிளாசிக்காக மாற்றின.

எர்னஸ்ட் ஹாலர் (Ernest Haller) அவர்களின் ஒளிப்பதிவு, இத்திரைப்படத்திற்குக் கூடுதல் வலிமை சேர்த்தது. கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்ட ஒவ்வொரு காட்சியும், அக்காலத்தின் இருண்ட சூழலையும், அதேசமயம் அட்டிகஸ் மீதான நம்பிக்கையின் ஒளியையும் சித்தரித்தது. 

கிராமத்தின் அமைதியான சாலைகள், பழமையான வீடுகள், மற்றும் நீதிமன்றத்தின் இருண்ட கூரைகள் ஆகியவை, கதைக்குத் தேவையான  பின்னணியையும், மன அழுத்தத்தையும் நுட்பமாகக் காட்சிப்படுத்தின.

எல்மர் பெர்ன்ஸ்டைன் (Elmer Bernstein) அவர்களின் இசை, இத்திரைப்படத்தின் உணர்ச்சிப் பூர்வமான தூணாகச் செயல்பட்டது. அவரது மென்மையான, எளிய தீம் இசை, ஸ்கவுட் மற்றும் ஜெம்மின் அப்பாவித்தனத்தையும், துயரத்தையும், பூ ராட்லியின் தனிமையையும், அட்டிகஸின் நேர்மையையும் பிரதிபலித்தது.

 பிரம்மாண்டமான பின்னணி இசையைத் தவிர்த்து, சில எளிய பியானோ நோட்டுகள் மற்றும் ஆர்மோனியம் ஒலிகள் மூலம் அவர் உருவாக்கிய சூழல், பார்வையாளர்களை நேரடியாகக் கதாபாத்திரங்களின் மனநிலைக்கு அழைத்துச் சென்றது.

விருதுகளின் கௌரவம்
இந்தச் சாதனைப் படைப்பு, அதன் தரத்திற்காகப் பல்வேறு உயரிய விருதுகளை அள்ளி, உலகளவில் கௌரவிக்கப்பட்டது:

 புலிட்சர் பரிசு (Pulitzer Prize): (நாவலுக்காக)
ஆஸ்கர் விருதுகள் (Academy Awards):
 சிறந்த நடிகர்: கிரிகோரி பெக் (அட்டிகஸ் ஃபிஞ்ச்)
  சிறந்த தழுவல் திரைக்கதை: ஹார்ட்டன் ஃபூட் 
 சிறந்த கலை இயக்கம் (கருப்பு வெள்ளை): அலெக்சாண்டர் டிரான்னர் 
கோல்டன் குளோப் விருது 
சிறந்த படம் 
 சிறந்த நடிகர்  கிரிகோரி பெக்சமூக நீதி மேம்பாட்டிற்கான விருது
இந்த வெற்றிகள், இது வெறும் திரைப்படமல்ல, அது காலத்தால் அழியாத கலையின், சமூக நீதியின், மற்றும் மனித நேயத்தின் பதிவு என்பதை நிரூபிக்கின்றன.

படம் ப்ரைம்,நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது, சினிமா ஆர்வலர்கள் தவற விடக்கூடாத படம்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)