
கிளி போல பொண்டாட்டி இருக்க குரங்கு போல வைப்பாட்டி யைத் தேடும் பட்டியலில் தற்போது நல்ல நடிகர் என்ற பெயரை எடுத்து அதை காற்றுக்குமிழி போல உடைத்து கெடுத்தும் கொண்ட பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜா வும் இணைந்து கொண்டார்.தன் வீட்டு வேலைக்காரப் பெண்ணை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் எய்ட்ஸ் பிரச்சார விழிப்புணர்வு படங்கள்,லைப் இன் மெட்ரோ ,
மகேஷ் பட்டின் கேங்ஸ்டர், அய்ஷ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷைனி அகுஜா. திருமணம் ஆனவர். மும்பை ஓஷிவாரா பகுதியில் இவரது வீட்டில் 18 வயது இளம் பெண் வேலை செய்து வந்தார்.
வீட்டில் தனியாக இருந்த வேலைக்கார பெண்ணை நடிகர் ஷைனி கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் பெண்ணை கற்பழித்தது நடிகர் ஷைனிதான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை நடிகர் ஷைனி அகுஜா கைது செய்யப்பட்டார். மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஷைனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நடிகர் ஒருவர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தால் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.ஒரு வார கால தொடர் போலீஸ் விசாரணைக்குப் பிறகு
தன் வீட்டில் வேலைசெய்த பெண்ணை கற்பழித்ததை நடிகர் அகுஜா ஒப்புக் கொண்டுள்ளார். முதலில் கற்பழிப்பு குற்றச்சாட்டை மறுத்த அவர், மருத்துவபரிசோதனையில் உண்மை தெரியவந்ததை அடுத்து ஒப்புக் கொண்டிருக்கிறார். "கேங்ஸ்டர்' உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்தவர் நடிகர் ஷைனி அகுஜா. வீட்டில் வேலை செய்து வந்த இளம்பெண்ணை கற்பழித்தாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து, அகுஜாவின் வீட்டை போலீசார் "சீல்' வைத்தனர். மேலும், கற்பழிப்பு தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க, சிறப்பு தடயவியல் குழுவினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இது குறித்து, துணை கமிஷனர் நிகேத் கவுசிக் கூறுகையில், "மருத்துவப் பரிசோதனையில் அகுஜா, இளம்பெண்ணை கற்பழித்தது உறுதி செய்யப் பட்டுள்ளது. அதற்கான டாக்டர் சர்டிபிகேட் அதை தெளிவாக்கி இருக்கிறது' என்றார். கற்பழிப்பு குற்றத்தை முதலில் மறுத்து வந்த நடிகர் அகுஜா, பின்னர் அதை ஒப்புக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகர்களுக்கு தன்னடக்கம் மட்டும் போதாது தனி மனித ஒழுக்கமும் நிச்சயம் வேண்டும்.அவர் மட்டும் ஆசையை அடக்கி மனைவியை மட்டுமோ அல்லது வேறு திரைத் தோழிகளையோ,அல்லது இதற்கென்றே இருக்கும் எஸ்கார்ட் மங்கைகளையோ புணர்ந்திருந்தால் இந்த பிரச்சனை இருந்திருக்குமா?
ஏழை பெண் தானே ?இவளால் என்ன செய்து விட முடியும் ?என்ற பணத்திமிர் ,குடி வெறி.இப்படி ஆக்கி விட்டிருக்கிறது.
இதனால் தான் சொல்கிறேன்..மனிதனை மிருகமாய் மாற்றும் மதுவையும் இன்னபிற போதை வஸ்துக்களையும் ஒருவன் மறக்க வேண்டும். இவர் வாழும் சினிமா உலகிலேயே முன் மாதிரியாய் இருக்கும் நடிகர் சிவகுமாரை போல ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.இவரை தயவு செய்து பெயிலில் விட்டு அந்த பெண்ணுக்கு அநீதி கிடைக்கச் செய்யாதீர்கள் அரச எந்திரங்களே....