ராஜேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ராஜாத்தி ரோஜாக்கிளி (1985) மறக்கப்பட்ட அமானுஷ்ய சினிமா


ராஜாத்தி ரோஜாக்கிளி (1985) இந்த படம் தேடிப் பார்க்க முக்கிய காரணம் அன்று 80 களில் வானொலியில் ஒலிபரப்பான " காஞ்சிபுரம் ஜரிகபட்டு வாங்கித்தாரேன் " பாடல் ,  ஓடையின்னா நல்ல ஓடை ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை போன்ற பாடல்கள் தான், சந்திரபோஸ் இசையில் மலேசியா வாசுதேவன்,யேசுதாஸ் ,  பாடிய இனிமையான மெல்லிசைப்பாடல்கள் என்றும் மறக்க முடியாதவை .

நேற்று படம் பார்க்கையில் ரோலிங் டைட்டிலில்  மாயாஜால காட்சிகள் இன்னார் என்று பெயர் வருகையில் தான் இது அமானுஷ்ய திரைப்படம் என்றே தெரியும், படம் பார்க்க பார்க்க எண்ணிலடங்கா ஆச்சர்யங்கள்.

படம் முழுக்க கம்பம் பள்ளத்தாக்கை சுற்றி அமைந்த எழில் கொஞ்சும் ஊர்களில் படமாக்கியிருந்தனர், பெரியாறு ப்ராஜக்ட்,கம்பம் ரேஞ்ச், சுருளியாறு மின் நிலையம், கூடலூர்,கு.க.பட்டி,K.G.பட்டி,சுருளிபட்டி,KM பட்டி என நிறைய பட்டி தொட்டிகளை படத்தில் காணலாம்.

இதில் நடிகர் கவுண்டமணி தான் பிரதான வில்லன், ஆச்சி மனோரமா தான் வில்லி, படத்தில் அவர் பேய்க்கு பயந்து கணவன் கவுண்டமணி வாங்கி வைத்த  பிராந்தியை முழுக்க  ராவாக குடிக்கும் காட்சி கூட வருகிறது, செந்தில் கூட இதில் கெட்டவர் கவுண்டமணியின் கையாள் தான்.

அன்னக்கிளி தேவராஜ் மோகன் இரட்டையரில் S. தேவராஜ் இயக்கிய திரைப்படம் இது, இது ஊரில் நடந்த உண்மை சம்பவம் என்கிறார் படத்தின் துவக்கத்தில் தோன்றி பேசிய இயக்குனர்.

படத்தின் கதை:-

பணம் கிடைக்கிறது என்றால் எந்த கொலைபாதகமும் நயவஞ்சகமும் செய்யத் துணிபவர் கவுண்டமணி, இவரது மனைவி மனோரமாவும் கூட உடந்தையாக இருப்பவர், உடன் செந்தில் உட்பட சில அடிபொடிகள் கூட உண்டு, ஜோசியக்காரன் வீட்டுக்குள் புதையல் உண்டு என சொன்னதால் நடு வீட்டிற்குள் பத்தடி ஆழத்துக்கு குழி தோண்டி ஏமாறுகிறார் கவுண்டமணி.easy money செய்ய அத்தனை அலைகிறார்கள் இத்தம்பதிகள்.

மனோரமாவின் அண்ணன் அவ்வூர் பண்ணையார்,கொடைவள்ளல்,
மனைவியை இழந்தவர்,ஒற்றை மகன் , அவர் உடன் கணக்கு புத்தகத்தோடு வாய்க்கால் வரப்பெங்கும் உடன் அலைகிறார் மச்சான் கவுண்டமணி , தன் பங்குக்கு ஏகம் வாரிச் சுருட்டுகிறார், 

பண்ணையார் திடீரென நோய்வாய்பட்டு இறக்கிறார், இறக்கும் தருவாயில் தன் ஒரே மகன் சுருட்டையனை இவர்களை நம்பி ஒப்படைத்தவர், அவன் மேஜர் ஆனதும் சொத்துக்களை அவனிடம் தருமாறு கேட்கிறார், 

ஆனால் கவுண்டமணியும் மனோரமாவும் இந்த முழு சொத்தையும் ஏக வாரிசுபோல அனுபவிக்கின்றனர், 
 தன் ஒரே மகளை மட்டும் படிக்க அனுப்புகின்றனர்,  சுருட்டையனை அடி அடி என வாத்தியார் அமர்த்தி அடிக்க வைத்து படிப்பு மீதே வெறுப்பு வரச் செய்கின்றனர்,

சுருட்டையன் தேர்ந்த விவசாயியாக வளர்கிறார்,ராஜேஷ் தான் வளர்ந்த சுருட்டையன், நளினி அவரின் அத்தை மகள்,அவர் கல்லூரி படிப்பதால் படிக்காத சுருட்டையனை அறவே பிடிப்பதில்லை,மணக்க விரும்பவில்லை, இதனால் சொத்து எளிதாக வருவதாயில்லை, நளினி  உடன் பயிலும் சுரேஷை விரும்புகிறார், 

வீட்டில் சுருட்டையனை சம்பளம் வாங்காத வேலைக்காரன் போலவே நடத்துகின்றனர், சரிவர உணவு கூட வழங்குவதில்லை,சொந்த வீட்டில்  அகதி போல வாழுகிறார் சுருட்டையன், அத்தை மாமாவை எதிர்த்து பேச நினைக்கையில் உறவு முறை பார்த்து வெகுண்டு எழ மறக்கிறார்.

சுருட்டையன்  பக்கத்து வீட்டுப் பெண் சுலக்‌ஷனாவை விரும்புகிறார்,ஏழை பணக்காரன் வித்தியாசத்தால் திருமணத்துக்கு கவுண்டமணி எதிர்ப்பு காட்ட, அப்போது வெகுண்டவர் அரிவாளை மாமன் கவுண்டமணி கழுத்தில் வைத்து மிரட்டி திருமணத்துக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் கெடுபிடியாக வாங்குகிறார், 

கம்பம் சென்று ஜவுளி எடுத்து வருகிறேன் என  ஊராரிடமும் காதலி சுலக்‌ஷனாவிடம் சொல்லி விட்டுச் செல்கிறார், போகையில் தான் அந்த காஞ்சிபுரம் ஜரிகபட்டு பாடல் பாடுகிறார், பாடல் முடிவில் அவசரப்பட்டு திருமணத்துக்கு முன்பே காதலியுடன் கிணற்று மேட்டின் மறைவில் வைத்து உறவு கொண்டு விடுகிறார், இதை முறைப்பெண் நளினி ஒளிந்து பார்க்கிறார்.

சுருட்டையன் ஊர் தாண்டுகையில் இவரை வழிமறித்த கவுண்டமணி செந்தில் மற்றும் இரண்டு அல்லக்கைகள் சுருட்டையனை தாக்கி கொன்று விடுகின்றனர், அல்லக்கைகள் இருவரை சுருட்டையனின் நாய் கடிக்கிறது, சுருட்டையன் சாகும் போது கவுண்டமணிக்கு சாகும் வரை நிம்மதி இருக்காது என  மண்ணை வாரி தூற்றி சாபம் தந்துவிட்டு சாகிறார்,

பிணத்தை சேறு உள்ள பாழும் கிணற்றில் தள்ளி விடுகின்றனர், செந்தில் பட்டு வேட்டி சட்டையை சுடுகாட்டில் புதைத்த வேறு பிணத்தை தோண்டி அணிவித்து ஆக்ரோஷமிகு சுருளி ஆற்றில் வீச, அழுகிய சடலம் போலீசுக்கு கிடைக்கிறது, கவுண்டமணி போலீஸாரை பணம் தந்து சரிகட்டுகிறார், சுலக்‌ஷனா காதலன் உடன் ஒருநாள் வாழ்ந்ததால் சுருட்டையன் இறந்த செய்தி தெரிந்ததும் வெள்ளை புடவை உடுத்தி வலம் வருகிறார், அவர் தந்தைக்கு அவமானம், இயக்குனர் கிருஷ்ணராஜ் அந்த ஊரில் விவசாயி,  சுருட்டையனின் நலம் விரும்பி ஆவார், அவரால் இந்த சின்னஞ்சிறுப்பெண் வெள்ளைபுடவை உடுத்தி விதவை ஆனதை சகிக்கவே முடியவில்லை, 

சில மாதங்கள் ஆக சுலக்‌ஷனா கருத்தரிக்கிறார், கிருஷ்ணராஜ் ஊராருடன் சென்று சுலக்‌ஷனாவை கவுண்டமணி வீட்டில் கொண்டு போய் மருமகள் வம்ச வாரிசை சுமப்பவள் என்று வாழ வைக்க பேசுகிறார், ஆனால் அவர்கள் மசிவதில்லை, இனி பராசக்தியே அவர்களுக்கு கூலி தரவேண்டும் என்று உறுதி கொண்டவர் காவி தரிக்கிறார்,உடம்பு முழுதும்  விபூதி, சந்தனம் குங்குமம் பூசியவர் நேராக போய் சுருளியாறு முத்துமாரி கோயிலில் அம்மனை குறுகுறுவென பார்த்தபடி தவம் இருக்கிறார்,சுமார் 48 நாட்கள் கழிகிறது, ஊண் உறக்கம்  விட்டு உள்ளம் குவித்து தாயை வேண்ட தாய் அருள் புரிகிறார், கிணற்று மேட்டில் இருந்து சுருட்டையனின் ஆவி மேலெழும்பி அதன் சித்து விளையாட்டை காட்டுகிறது,

சுருட்டையனின் நாயால் கடிபட்ட இரண்டு அல்லக்கைகள் நாய்போலவே குலைத்து எச்சில் வடித்து சாகின்றனர்.
 மனோரமாவை பட்டப்பகலில் சமையலறையில் நுழைந்த சுருட்டையனின் பேய் அறை அறைகிறது, கவுண்டமணி தூங்குகையில் கால்களை திருப்பி முறுக்கி விடுகிறது, 

நளினி காதலன் சுரேஷை மணமுடிக்க முதலிரவில் மாப்பிள்ளை சுரேஷை மாறி மாறி அறைகிறது, செந்திலை துரத்திப்போய் அதே பாழும் கிணற்றில் துரத்தி விழச்செய்து கொல்கிறது, நளினி சுரேஷ் ஊர் விட்டு தப்பிச் செல்லும் வில்வண்டியை சுருட்டையனின் பேய் ஓட்டிப் போய் கவிழ்த்து விட்டு எச்சரிக்க,அவர்கள் மீண்டும் வீட்டுக்கே வருகின்றனர், 

இப்போது அம்மன் கோயிலில் உண்ணா தவமிருந்த கிருஷ்ணராஜ் சுலக்‌ஷனா பால் வார்க்க , அம்மா நீ தான் பொறுப்பு என பாலை ஏற்காமல் உயிர்விடுகிறார்.

இப்போது நளினிக்குள் சுருட்டையனின் பேய் புகுந்து உக்கிரமாக ஆட்டுவிக்கிறது,  சுரேஷ், மனோரமா கவுண்டமணி மூவர்  ஊரின் புகழ்பெற்ற பூலாநந்தீஸ்வரர் கோயிலில் மனைவியை ஒரு நாள் இரவு முழுக்க விட்டு வர,நளினியை  பூசாரிகள் பலிபீடத்தில் உட்கார வைத்து கட்டுகின்றனர், நடுநிசியில் நளினி உடம்பு கடிகார முள் போல பலி பீடத்தின் அச்சில் சுற்றுகிறது, பேய் பிடித்த மகள் கத்துவதை சகிக்காமல் ஓடி வந்து பலிபீடத்தின் அருகே நின்று பார்த்தவர்களை சுருட்டையன் பேய் வெளியேறி இவர்கள் இருவரை அறைந்து காட்டுக்குள் துரத்திப் போய் மாறி மாறி அறைகிறது,சுரேஷ் வெளியே வராததால் தப்புகிறார் ,மனோரமா கவுண்டமணியை விடாமல் துரத்திப் போய் அதே பாழும் கிணற்றில் விழவைத்து சேற்றில் மூழ்கடித்து சாகடிக்கிறது,

மறுநாள் நளினி பலிபீடத்தில் அருகே கட்டாந்தரையில் கண்விழித்தவரை கணவர் சுரேஷ் தேற்றி அழைத்துபோகிறார், நளினி முற்றிலும் திருந்தியவர் , இந்த சுருட்டையன் சொத்து தனக்கு வேண்டாம் என்று கொத்துசாவி, பத்திரம் நகை நட்டு என அனைத்தையும் சுருட்டையனின் மனைவி சுலக்க்ஷனாவிடம் வலுக்கட்டாயமாக தந்துவிட்டு ஊரைவிட்டே போகையில் படம் நிறைகிறது.

அருந்ததி , காஞ்சனா போல ஒரு பொழுதுபோக்கு சித்திரம் ஆனால் படம் A சான்றிதழ் பெற்றதால் குழந்தைகள் பார்க்க ஏற்றதல்ல, சுரேஷின் கல்லூரி நண்பர்கள் சீட்டு விளையாடுகையில் அவர்கள் சீட்டு ஆட உபயோகிப்பது ந்யூட் மாடல் சீட்டுகள்,ஒளிப்பதிவாளர் சோமன் அதற்கு zoom போட்டுள்ளதை என்ன சொல்ல?, ராஜேஷ் மற்றும் சுலக்‌ஷனா காதல் காட்சிகள் இந்த A சான்றிதழை பெற்றுத் தந்து , படத்தை  வெகுஜன பார்வையாளர்களிடமிருந்து மறைத்துவிட்டது, ஒரு அமானுஷ்ய திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் குடும்பத்துடன் பார்க்குமாறு அமைந்திருத்தல் அவசியம், இப்படி வயது வந்தோருக்கு மட்டுமான படமாக அமைந்தால் படம் பெட்டிக்குள் சுருண்டுவிடும்.

இந்த A சான்றிதழ் பெற்ற படத்துக்கு கல்கி இதழில் பணிபுரிந்த ஜெயமன்மதன் என்பவர்  காதலை கண்ணியமாக காட்டிய படம் என்று பாராட்டி எழுதிய விமர்சனம் இணைப்பில் பாருங்கள்.

மகாநதி | சிறை அதிகாரி முத்துசாமி கதாபாத்திரம்

கிருஷ்ணாவுக்கு திருநாகேஸ்வரம் பூர்வீக வீடு விட்டபின் நாய்பிழைப்பு, நரி ஊளையிடும் மடிப்பாக்கம் வீடு, மத்திய சிறை, யமுனாவின் ரேழி வைத்த வீடு, சிறை அதிகாரி முத்துசாமியின் காவலர் குடியிருப்பு வீடு

கிருஷ்ணாவும் பஞ்சாபகேசனும் மகள் காவேரியை சோனாகாச்சியில் இருந்து  மீட்டு வரப்போன ஐந்து நாளும் சிறை அதிகாரி முத்துசாமி வீட்டில் தான் யமுனா பரணி   தங்கியிருப்பார்கள்,வீட்டில் காவலர் கவாத்து புகைப்படம் மாட்டியிருப்பதைப் பார்க்கலாம்.

மீட்டு வந்தவுடன்  புது மனிதர்களால் அந்த வீடே நிரம்பியிருக்கும், இதனால் யமுனாவிடம் காவேரியின் துரத்தும் கோர கனவுகள் பற்றி மாடிப்படிகளில் அமர்ந்து புலம்பி அரற்றுவார் கிருஷ்ணா.

மிகச் சிறிய காவலர் குடியிருப்பு வீடு அது, அந்த வீட்டில் பஞ்சாபகேசன் நீண்ட ரயில் பயணக் களைப்பில் சோஃபாவில் அசௌகர்யமாக  உறங்குவார்,

 ஐந்து நாட்களாக முத்துசாமி பணிக்குச் செல்லமாட்டார், காரணம் மிகவும் நேர்மையான அதிகாரி முத்துசாமி ,சீருடை அணிந்தால் தன்னால் கிருஷ்ணாவுக்கு உதவி செய்ய முடியாது, பாதுகாப்பு தரமுடியாது என்பதால் தான், 

கிருஷ்ணா பெயரில் வெங்கடாசலம் ஆளை அடித்ததாக கொலைவழக்கு குற்றப்பத்திரிக்கை பதிவானதால், மறுநாள் விடியலில் கிருஷ்ணா சரண்டைந்தால் தான் தன்னால் வேலைக்கு போகமுடியும் என்பதை கிருஷ்ணாவை தனியே அழைத்து ரகசியமாக சொல்வார் முத்துசாமி, 

படித்துக் கொண்டிருக்கும் தன் மகன் முருகேசனை வெளியே போகச் சொல்ல வேண்டி சிகரட் வாங்கி வரக் கேட்பார், அப்பயே வாங்கி வச்சுட்டேன்பா என்றவனிடம் அப்படின்னா வாழைப்பழம் வாங்கிவா என வெளியே அனுப்புவார் முத்துசாமி,

அவன் அப்பாவுக்காக அலுத்துக் கொண்டே  போனாலும் உடனே எழுந்து போவதில் செய்தி உள்ளது, பின்னாளில் அப்பாவின் நண்பர் கிருஷ்ணாவின் மகள் காவேரியை மணமுடிப்பவன் முருகேசன், முத்துசாமிக்கு மகன் இருப்பதை காட்டியது போலவும் ஆயிற்று , அவன் அப்பா சொல் தட்டாத பிள்ளை என்பதை அந்த காட்சியில் நிறுவியது போலவும் ஆயிற்று.

ஆல் இன் ஆல் அழகுராஜா AKA ஆல் இன் ஆல் காண்டாமிருகம்



ஆல் இன் ஆல் அழகுராஜா நேற்று தான் பார்த்தேன்,இது சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை முட்டாள் என நினைத்து எடுக்கப்பட்ட இன்னொரு படம், மற்றொன்று நையாண்டி, படத்தில் ஒரே சவசவ என பேசிக்கொண்டே இருக்கிறார்கள் கார்த்தியும், சந்தானமும் ,இதில் சந்தானம் தன்னை வாடா போடாவென கூப்பிடக்கூடாது என கார்த்தி ஸ்பெஷல் கண்டிஷன்  இயக்குனரிடம் போட ,சந்தானம்  அவரை நீங்க வாங்க  என செயற்கையாக அழைக்கிறார், ஹீரோக்கள் படத்தின் வசனத்திலும் கையை வைத்தால் இயக்குனர் என ஒருவர் எதற்கு தான் இருக்கிறார்?

கார்த்திக்கு 15 கோடி தந்து கோழி அமுக்குவது போல அமுக்கி விட்டதால், அவரை முதல் ஃப்ரேம் முதல் கடைசி ஃப்ரேம் வரை காட்டி நம்மை சாகடித்துள்ளார் ராஜேஷ் , அதே போலவே சந்தானம் கால்ஷீட்டும் பவுன் கணக்கானபடியால் அதையும் கடைசி ஃப்ரேம் வரை, ஐயகோ!!! .என்னால் 3 மணிநேர அன் கட் வெர்சன் பார்க்க முடியவில்லை [ரொம்ப முக்கியம்] ,

ராதிகா ஆப்தே என்னும் நல்ல மராட்டிய நடிகை அவருக்கு 80களின் அம்பிகா கணக்காக விக்,காதுக்கு பூ எல்லாம் வைத்து அழகூட்டி ஒரு உருப்படியான பாடலுக்கு ஆடவிட்டு அடுத்த ரீலிலேயே மும்பைக்கு பேக்கப் செய்து விட்டனர், அதற்கு பின்னர் கடைசி டைட்டில் கார்ட் வரை ஆளைக் காணோம், சென்னை எக்ஸ்ப்ரெஸ் படத்தில் தீபிகா படுகேன பேசிய இழவுத் தமிழை விட மிக நன்றாக இருந்தது இவர் தமிழ், பாவம் இவர்   சிரத்தையுடன்  நிறைய ரிகர்சல் எல்லாம் செய்து தமிழ் பேசினாராம், ப்ரொமோவில் சொன்னார்,என்ன பிரயோசனம்?,நிகழ்காலத்தில் அவர் என்ன ஆனார்? என அவரின் முன்னாள் லவ் இன்ட்ரெஸ்ட் பிரபு கூட கிளைமேக்ஸில் கேட்பதில்லை,

நரேய்ன் போன்ற அருமையான நடிகர்  சமீபத்தில் வந்த இரு படங்களில் அடுத்தடுத்து மொன்னையாக்கப் பட்டுள்ளார்,ஒன்று நையாண்டி, மற்றொன்று இது, மிக நல்ல நடிகரான நாசருக்கும் அதே கதி,படத்தை சகித்துக்கொண்டு  பார்க்க வைக்கும் ஒரே பிடிமானம் காஜல் அகர்வால் தான்,இவரை ஸ்பெஷல் 26 படத்திலிருந்து மிகவும் பிடித்து போனது,கமர்ஷியல் மொக்கைகளில் கூட தன் பெஸ்டை தருகிறார் கண்ணழகி,ஆனாலும் இவரது போர்ஷன்களில் அத்தனை கற்பனை வறட்சி, இவரையும் அரைலூசு ஆக்கி புண்ணியம் கட்டிக்கொண்டிருக்கிறார் ராஜேஷ்.

இதில் சந்தானத்தை பெண்   வேடத்தில் அத்தனை விகாரமாக காட்டியுள்ளார் , எங்கோ இருக்கும் வாழ்ந்து கேட்ட முன்னாள் ஹீரோ சுதாகரை கூட கலாய்க்கிறாராம் சந்தானம்,அதே போலவே குட்கா முகேஷையும் கலாயக்க அது படத்தில் இல்லை   , பாவம், நல்ல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ,அவரை இந்த விகாரமான பெண் மீது பித்தம் கொண்டது போன்ற பாத்திரம் தந்து தண்டித்திருக்கிறார், அவ்வை சண்முகி போலவே க்ளைமேக்ஸில் சந்தானத்தின் ரவிக்கையை  அவிழ்த்து காஜலுக்கு காட்டுகிறார் கார்த்தி, நாராசம்!!! , சரண்யா பிரபு இருவருமே நன்கு வீணடிக்கப்பட்டனர் ,விவேக் ஹர்ஷன் எடிட்டிங்காம், நன்றாகவே ஓப்பி அடித்துள்ளார்,இவர் வாங்கிய சம்பளம் உண்மையிலேயே ஜீரணிக்குமா?!!!  அடுத்த முறையாவது ராஜேஷ் ப்ரோமோஷனுக்கு செலவிடும் நேரத்தை எடிட்டருடன் செலவிடுங்கள்,, அப்படி இல்லாவிட்டால் ஹீரோவாக நடிக்க வந்துவிடுங்கள் ,இந்தக்  கொடுமைக்கு அதை தாங்கிக் கொள்வோம் ,

ராஜேஷ் அடுத்த படத்திலாவது படம் பார்ப்பவனை முட்டாள் என கருதாமல் இருந்தால் சரி, இந்தப் படத்துக்கு எல்லாம் விளக்கம் வேண்டாம் தான் ,இருந்தாலும் தருகிறேன். ஒரே நாளில் சிட் பண்ட் விளம்பரப் படம் எடுக்கின்றனர், அதில் கேனைத்தனமாக மங்களம் சிட்பண்டுக்கு நான் கேரண்டி என்கிறார் காஜல், இந்த மொக்கை சேனலில் விளம்பரம் பார்த்து, மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஒரே நாளில் கட்டுகின்றனராம், அதை சிட்பண்ட் அதிபர் [பாவம் v.s. ராகவன்] ஒரே இரவில் எடுத்து ஓடுகிறாராம், அதை மக்கள் அதே இரவில் கண்டு பிடித்து ,விடியலில் முதல் வேளையாக விளம்பர மாடல் காஜல் வீட்டு வாசலில் நின்று கோஷம் போட்டு பணத்தை திருப்பி கேட்கின்றனராம், அவரின் அப்பா முழுப்பணத்தையும் செட்டில் செய்கிறாராம்.

கார்த்தி காஜலை வீட்டில் இறக்கி விட்ட அதே இரவில்  இது அத்தனையும் நடக்கிறதாம், காஜல்இரவு  காதலை சொல்வார் என போன் கால் எதிர்பார்த்த கார்த்தி, காஜல் உடனே வருமாறு சொல்ல ,நடு இரவில் அங்கே சென்றால் இவை அனைத்தும் அவருக்கு தெரிய வருகிறதாம்,இதை  படிக்கவே எத்தனை கேவலமாக இருக்கிறது?, அத்தனை கேவலமாக இயக்கியுள்ளார் ராஜேஷ். இதையெல்லாம் எழுதனும் என்று எனக்கு மட்டும் ஆசையா? காமெடி படம் என்றால் கன்டினியூட்டி முக்கியம் இல்லை என விட்டுவிட்டீர்களா?

ஏனையா, ஒரு இரவை முடியக் கூட விடமாட்டீர்களா? அப்படி என்ன அவசரம்? அதில் ஒரு ஜம்ப், இரவு - பகல் கண்டினியூட்டி எத்தனை முக்கியம் திரைப் படத்தில்? இத்தனை மிக்ஸ் அப் ஏன்? கன்டினியூட்டி பார்க்க அசிஸ்டெண்ட் டைரக்டர் யாருமே இல்லையா? இல்லை எல்லோருக்கும் இயக்குனர் ராஜேஷ் என்றால் சிம்ம சொப்பனமா? எம்.எஸ் பாஸ்கர் முன்பொரு படத்தில் நல்ல வசனம் ஒன்று பேசுவார், வேண்டா வெறுப்பாய் புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்சானாம் என்று, இந்தப்படத்தில் அவரும் இருக்கிறார், இந்தப்படம் அழகுராஜா அல்ல காண்டாமிருகம்.

இதில் ஒரே ஒரு ஆறுதல், கல்லில் நாரை உறிக்கும் பலே தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜாவைக் கூட ரைட்ராயலாக ஏமாற்றியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ், எத்தனுக்கு எத்தன் வையகத்தில் உண்டு என உணர்ந்தேன்,இதே K.E.ஞானவேல் ராஜா [இனிஷியல் ரொம்ப முக்கியம்] பீட்ஸா என்னும் பேரை மட்டும் வைத்துக்கொண்டு ,பீட்ஸாவின் இரண்டாம் பாகம் என நம்பிப் போன எத்தனையோ ரசிகர்களை ரைட்ராயலாக ஏமாற்றியியது நினைவருக்கும், புளிசாதத்துக்குள்ளே முட்டையை வைத்து பிரியாணி என சத்தியம் செய்தது போன்ற மோசடி அது,சரவணபவன் லோகோவைத் திருடி த்ராபையான ஓட்டல் துவங்கி உள்ளே ஊசிப்போன பண்டம் விற்றது போன்ற மோசடி அது,  நவீன ஜேப்படி அது!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)