what just happened?மெய்யாக நடந்தது என்ன ? 2008






அங்கீகரித்தமைக்கு நன்றி : யூத்ஃபுல் விகடன்

























ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான பென் (ராபட் டிநீரோ), தன் படத்தை முடித்து வெளியிடுவதற்க்குள் படும் அல்லல் துயரங்களை, மிகுந்த நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள் . தயாரிப்பாளர் ஸ்டுடியோ ஹெட்டிற்கு பயந்து கதையை மாற்றுவது, நடிகர்களின் படத்தில் வரும் தோற்றத்தை திடீரென மாற்றுவது, மற்றும் அனுதினமும் சந்திக்கும் சர்ச்சைகள், பொல்லாப்புகள் என்று.


படம் பார்க்கும் நாமும் அவர் கூடவே போகுமிடமெல்லாம் பயணிக்கிறோம்.வயிறு குலுங்க சிரிக்கிறோம். அவரின் முதல் மணவாழ்க்கை கசந்து விவாகரத்தாகி, மிகப்பெரிய தொகையையும் வீட்டையும் அலிமனியாக(ALI MONEY) கொடுத்து மகளின் பாசமும் விடாமல் இவரை வாட்ட , இரண்டாம் மணவாழ்க்கையும் கசந்து விவாகரத்திற்கு விண்ணப்பித்து பின்னர் பேச்சுவார்த்தை என்னும் சமரச நிலைக்கு வந்து ஓயாத வேலை பளுவின் இடையிலும் கவுன்சிலிங் போய் வருகிறார்கள்.


அவ்வப் பொழுது வாய்ப்பு கேட்டு வலிய வந்து மாடல் நங்கைகள் படுக்கைக்கு விருந்தாகின்றனர். இவரது இரண்டாம் மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருந்தும் இவரே ஒழுங்கில்லாததால் இவரால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் , அவளை தலை முழுகவும் முடியாமல் படும் அவஸ்தை. தன் பள்ளியிறுதி படிக்கும் மூத்த மகள் தூக்கு மாட்டி இறந்த இளம் ஸ்டூடியோ ஏஜென்டிடம் தன்னை பறிகொடுத்ததை சொல்கையில் ஏற்படும் பதட்டம்,பரிதவிப்பு என அப்படி ஒரு இயற்கையான நடிப்பு. தன் புதிய படத்தில் "sean penn" என்னும் பெரிய ஹீரோவை நடிக்க வைத்து ,படமும் முடிந்து ப்ரீவியூ காட்சி பிரமுகர்களுக்கு திரையிடப்பட,


வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் "sean penn" செத்திருக்க கூடாது, எனவும், மீதி பேர் அந்த நாயை துடிக்க துடிக்க சுட்டு கொள்வது தப்பு, ரொம்ப கொடுமை என்கின்றனர். இதை தங்களுக்கு வழங்கப்பட்ட கருத்து அட்டையிலும் திட்டி எழுதி ,திரும்ப கொடுக்க. ஸ்டூடியோ ஹெட் "லு" என்னும் பெண் உயர் அதிகாரி . இவரையும் படத்தின் இயக்குனரையும் அழைத்து , மனுஷன் சாகலாம், ஆனால் "நாய் சாகக் கூடாது." இது தான் இன்றைய ஹாலிவுட்டின் லாஜிக்,டிரென்ட் எல்லாம் .அதனால் நாயை பிழைக்க வை என்கிறார்.


இயக்குனர் முரண்டு பிடிக்க, "லு" வேறு இயக்குனரை வைத்து அந்த காட்சியை படம் எடுக்க வைப்பேன் என மிரட்ட , மேலும் வரும் மாதம் "CANNES" நடக்க போகிறது . அதில் இப்படம் சிகப்பு கம்பள வரவேற்ப்பை பெறாது எனவும் மிரட்ட, இயக்குனர் பெரும் ஆர்பாட்டத்திற்கு பின்னர் பணிகிறார். "sean penn"ஐ அழைக்காமலேயே அவர் சம்மந்தப்பட்ட அந்த காட்சியை
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கொண்டு எடுத்து நாயை பிழைக்க வைக்கிறார். "ben"ற்கோ சந்தோஷம், இயக்குனரை அப்படியே கட்டிக் கொள்கிறார். கிளைமாக்ஸ் மாற்றத்தை ஸ்டூடியோ ஹெட் லூவிற்க்கு போட்டு காட்ட, அவர் "CANNES" இற்கு இப்படத்தை பரிந்துரைக்கிறார்.

அடுத்த கட்ட சோதனையாக ப்ரூஸ் வில்லீசால் வந்த தலைவலி

ஆறு மாதம் முன்பு தன் புதிய படத்திற்கு ப்ரூஸ் வில்லீசிடம் அட்வான்சு கொடுக்கும் போதே கதைப்படி அவர் காரல் மார்க்ஸ் போல அடர்ந்த தாடி,மீசை வைக்க வேண்டும். என சொன்னதின் பேரில் அவர் ஆறு மாதம் தாடி,மீசை வளர்த்து கால்ஷீட் கொடுத்த தேதியில் ஆஜர் ஆகிறார். ஸ்டூடியோ ஹெட் லூவிற்க்கு யாரோ ஒரு பிரமுகர் "இதுவரை ப்ரூஸ் வில்லீஸ் தாடி,மீசை வைத்து நடித்ததில்லை" அப்படி நடித்தாலும் ஓடாது , அதனால் வழக்கம் போல வழு வழு முகத்துடனே நடிக்கட்டும், என ஐடியா கொடுக்க.


இயக்குனரும் கதையில் எளிதாக தாடி,மீசையை எடுத்துவிட்டு காட்சி வைக்க , ப்ரூஸ் வில்லீசிடம் போய் தாடியை எடுக்க சொல்கையில் ஆரம்பிக்கிறது விபரீதம். அவர் திட்டுகிறார் பார்க்கணும்.?நம்மூர் கமலகாசனேல்லாம் பிச்சை வாங்கும் அளவுக்கு ஏசுகிறார். கண்டதையும் போட்டு உடைத்து என் சம்பளத்தில் பிடிச்சுக்கோ என்கிறார், ஐயோ.எல்லாம் சகட்டு மேனிக்கு வாங்கி கட்டி கொள்கின்றனர்.


பக்கத்தில் நெருங்கவே எல்லோருக்கும் பயம். "ben"ற்கோ மத்தளம் போல இரண்டு பக்கமும் அடி. காலில் விழாத குறையாக கெஞ்சியும் மசியாத ப்ரூஸ் வில்லீஸ் பிடி வாதம் எல்லை மீற . ஸ்டூடியோ ஹெட் "லு "கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறார், நாளை கடைசி நாள், ப்ரூஸ் விலீஸ் தாடியை எடுத்தால் படம், இல்லை என்றால் ஊத்தி மூடலாம் என்று. மறுநாள் எவ்வளவு கெஞ்சியும் மசியாத ப்ரூஸ் வில்லீஸ் காரவானின் கதவை திறந்து வெளியே வர , எல்லா யூனிட் ஆட்களுக்கும் அதிர்ச்சி,


தாடியுடன் ப்ரூஸ் வில்லீஸ் , பென் திட்ட வாயெடுக்க, ப்ரூஸ் வில்லீஸ் அப்படியே திரும்பி இன்னொரு பக்க தாடையை காட்டுகிறார். பளபளவென்ற ஷேவ் செய்த கன்னம், மனிதர் சிரித்துக் கொண்டே "MOTHERFUCKERS"என் பிளட் ப்ரெஷரை ஏற்றி விட்டீர்கள் அல்லவா? உங்களுக்கு இப்போ திருப்தியா ?என்று சொல்ல படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.


அடுத்த கட்ட சோதனையாக "CANNES" திருவிழாவில் வந்த தலைவலி,

ஒருவழியாக எல்லா சோதனையையும் கடந்து சிகப்பு கம்பள வரவேற்ப்பை பெற்று, படத்தை இரண்டாயிரம் திரை நட்சத்திர பார்வையாளர் முன் திரையிட. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நெருங்குகிறது, "ben" இயக்குனர் முகத்தை சமாதானத்துக்காக பரிவுடன் பார்க்க, அவர் விருட்டென கூலிங் கிளாசை மாட்டிக் கொள்கிறார்.             



திரையில் "sean penn" பெரிய மணல் திட்டின் மேல் நிற்க அவரை துரத்தி வந்த வில்லன்கள் கூட்டம் அவரை ஆறு ரவுண்டுகள் சுடுகின்றது. அவர் பிதாவே இந்த பாவிகளை மன்னிப்பீராக, என்று அப்படி உருண்டு விழுந்து இறக்கிறார்.(படு இயற்கையான உருளல்)என்ன நடிப்பு?. அடுத்து அவரின் செல்ல நாய் குரைத்த படி ஓடி வந்து அவரை பரிவுடன் நக்க, வில்லன் கூட்டம் அந்த நாயையும் விட்டு வைக்காமல் நான்கு ரவுண்டு,
தலை வயிறு என சுட, அரங்கே ஊ.ஆ ,அவுச் ,என்று உச்சு கொட்டி மவுனிக்க ,


யாரோ ஒரு புண்ணியவான் கை தட்டலை லேசாக ஆரம்பித்து வைக்க , அரங்கே மந்தை ஆடு போல ஆரவாரம் செய்து கைதட்டி அங்கீகரிக்கிறது. அனைவரும் பாராட்ட, இயக்குனர் பிடிவாதம் ஜெயிக்கிறது, படம் நல்ல வரவேற்பை பெறுகிறது. ஸ்டூடியோ ஹெட் லூவிற்க்கு வந்த கோபத்தில், வேண்டுமென்றே "ben" னை விட்டு விட்டு தன் தனி விமானத்தை எடுத்துக் கொண்டு,மற்ற குழுவினருடன் பறக்கிறார். "ben" பழைய படி தன் அன்றாட வாழ்க்கைக்கு, திரும்புவது போல கதை முடிகிறது.


இந்த கட்டுரையில் நான் சொன்னது சொற்பமே. படம் பார்த்தீர்களென்றால் உங்களுக்கு சிரித்து சிரித்து வயிற்று வலி வந்துவிடும். சும்மாவா சொன்னார்கள் ?

ஒரு படத்தை ரிலீஸ் செய்வது தலைபிரசவம் போல என்று?நாமெல்லாம் எளிதாக சொல்லிவிடுகிறோம்,பட்டால் தான் தெரியும் போலிருக்கு.




------------------------------------------------------------------------------------------------


Directed by
Barry Levinson
Produced by
Art Linson
Mark Cuban
Robert De Niro
Jane Rosenthal

Written by
Art Linson
Starring
Robert De Niro
Sean Penn
Stanley Tucci
Bruce Willis
Catherine Keener
John Turturro
Kristen Stewart
Michael Wincott
Robin Wright Penn

Music by
Marcelo Zarvos
Cinematography
Stéphane Fontaine

திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இதோ.
----------------------------------------------------------------------------

நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகுள்

தாழ்மையான விண்ணப்பம் :-
இங்கு முழு படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி தந்திருக்கிறேன் என்று
நினைப்பவர்கள்,நினைப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.


காரணம்:-
முன்பு நான் ஆங்கில படத்தின் உச்சரிப்பு புரியாமல் அதை முழுமையாக புரிந்து ஊன்றி பார்க்க முடியாமல் போனது.அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்னும் சிறு முயற்சி. இதை குறை சொல்லி நான் எடுக்கும் இந்த நல்ல முயற்சியையும் கெடுக்க வேண்டாம்.எல்லாவற்றிர்க்கும் மேல் பாணி என்று ஒன்றிருக்கிறது.
இது என் பாணி.


இது எனக்கு எழுத்து பயிற்சியும் அளிக்கிறது.
imdb தளத்தில் விசிறிகள் ஒரு படத்தில் லயித்தால் அதை பற்றி "trivia" மற்றும்
faq,goofs,synopsis,plot எழுதி அந்த படத்தின் வெற்றிக்கு உதவுவதுண்டு.
அது போல ஒரு சிறு முயற்சி தான் இது.
ஒரு படத்தை விமர்சனம் படித்துவிட்டு போய் யாரும் கட்டாயம் பார்ப்பதில்லை.
நாம் லயித்ததை பிறருக்கு சொல்கிறோம் அவ்வளவே.
நன்றி

Seven Pounds செவென் பவுண்ட்ஸ்





இரு வருடங்களுக்கு முன், தன் கவனக்குறைவால், வருங்கால மனைவி "சாரா" ( robinne lee) மற்றும் எதிரே வந்த வாகனத்தில் இருந்த ஆறு பேரின் வாழ்வை ஒரு விபத்தில் பலி கொண்ட முன்னாள் ஏரோநாடிகல் எஞ்சினியர் "டிம் தாமஸ்"(வில் ஸ்மித்) குற்ற உணர்வின் உச்சமாக தற்கொலைக்கு முயன்று முடியாமல், தன்னால் பாதிக்கப்பட்ட ஏழு பேரின் உயிர்களுக்கு இணையாக ஏழு நல்ல காரியங்களை நிகழ்த்துகிறார். அவை என்ன ?     செவென்  பவுண்ட்ஸ்  என்றால்             என்ன?
பதிலை பின்னர் சொல்கிறேன்

டிம் தனக்கு தாமே தண்டனை கொடுக்க நினைக்கிறார். விபத்திற்கு பின்னர் ஒரு வருடம் கழித்து நுரை ஈரல் புற்றுநோயால் பீடிக்கப்பட்ட ,வருமான வரித்துறை அதிகாரியான , தன் அண்ணன் பென் தாமசுக்கு தன் "lung lobe" ஐ தானம் செய்கிறார். இனி புகை பிடிக்கக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கிறார் . ஆறு மாதங்கள் கழித்து ஒரு நல்ல உள்ளம் கொண்ட, குழந்தைகள் நல தொண்டு நிறுவன அதிகாரி ஹோலீக்கு தன் "liver" இன் ஒரு பகுதியை தானம் செய்கிறார். மேலும் தன் ஒரு கிட்னியை நல்ல உள்ளம் கொண்ட "ஜார்ஜ்" என்னும் ஜூனியர் ஹாக்கீ பயிர்ச்சியாளருக்கு தானம் செய்கிறார். 


அதன் பின்னரும் தொடர்ந்து தன்னால் உயிருடன் இருக்கும் போதே தானம் தரக் கூடிய அவயங்களுக்கு உகந்த நல்ல பண்பாளர்களை தேடுகின்றார். அப்போது ரத்த புற்று நோயால் அவதிப்படும் ஒரு மருத்துவருக்கு ஒரு முறை "தன் எலும்பு மஜ்ஜையை தானம் செய்கிறார்.
அவரை நல்லவரென்று நம்பியிருக்கையில், அவரது ஆஸ்பத்திரியில் திடீர் விஜயம் செய்து ஒரு மூதாட்டியிடம் அவரை பற்றி விசாரிக்கிறார்.


அந்த மூதாட்டி மருத்துவர் தம்மை எப்போதும் (நீரை மிச்சம் செய்ய)குளிக்க வைக்க மாட்டேன் என்கிறார்,என்றும், தனக்கு அவர் பரிந்துரைக்கும் மருந்துகள் குணப்படுத்துவதற்கு மாறாக தூக்கத்தை வரவழைக்கின்றது என அழுதபடி கூற, இவர் அந்த மூதாட்டியை இரு கைகளிலும் ஏந்தி "பாத்ரூம் "எங்கே? எனக்கேட்டு அங்கு சென்று குளிக்க வைக்கிறார். அங்கு வந்த டாக்டர் சமாதானம் செய்ய முயற்சிக்க, இவர் நான் உன்னை நம்பினேன், நீ சக உயிரை மதிக்காதவன்,உனக்கு போய் நான் என் அறிய எலும்பு மஜ்ஜையை தானம் செய்தேனே? இனி அது உனக்கு இல்லை. என்று அவர் தலையை ஒரு மோதுமோதுவாறே?அப்பா... வில்ஸ்மித் ,வில்ஸ்மித் தான் ... 

பின்னர் ஒரு ஏழை சிறுவன் நிக்கொலசுக்கு தன் எலும்பு மஜ்ஜையை தானம் செய்கிறார்.(முதுகு தண்டில் இருந்து திரவம் எடுக்கின்றனர்) அவ்வப்பொழுது, அரசின் உயர் பதவியில் இருக்கும் தன் உயிர் நண்பன் "dan" ஐ சந்தித்து. தன் இதயம் நன்கொடைக்கும் விழித்திரை நன்கொடைக்கும் உகந்த நல்ல மனிதரை காட்டுமாறு கேட்கிறார். அவரை தான் தாம் "executor" ஆக நியமித்துள்ளதாக சொல்லுகிறார். இதற்கு சம்மதிக்காத அவரை உரிமையுடன் கடிந்து கொள்கிறார். தன்னுடைய அழகிய கடற்க்கரை பங்களாவை காலி செய்து, பின் சுத்தம் செய்து பூட்டி நகரின் மையத்தில் ஒரு மோட்டல் விடுதியில் அறை எடுக்கிறார். 


தன் கண்ணாடி சிலிண்டர் வடிவ மீன் தொட்டியில் தனக்கு பிடித்த ஜெல்லி மீனை போட்டு நீந்த விடுகிறார். ஒருநாள் குழந்தைகள் நல தொண்டு நிறுவன அதிகாரி ஹோலீயை அணுகி மிகுந்த வறுமையில் உதவிக்கு வாடும் நல்ல மனிதரை தனக்கு பரிந்துரைக்க வேண்டுகிறார். அவர் நெகிழ்ந்து போய் , தன் குடிகார ,அசிங்கமாக பேசி,துன்புறுத்தும் காதலனால் இரு முறை தற்கொலைக்கு முயன்ற மெக்சிக்க பெண்மணியான "கோநீ டேப்போஸ் "இன் விலாசம் தர, இவர் அங்கு சென்று தன்னால் அவளுக்கு உதவ முடியும் என்று சொல்கிறார்.


அவள் தன் காதலனுக்கு பயந்து இன்னொரு ஆளை நம்ப தயாராக இல்லை.ஆகவே இவரின் உதவி வேண்டாம் என்றும். வீட்டை விட்டு வெளியேறும் படியும் சொல்கிறாள். இவர் விடாப்பிடியாக விசிடிங் கார்டை கொடுத்து விட்டு வருகிறார்.

மேலும் இவர் தன் அண்ணன் பென் தாமஸ் என்னும் பெயர் மற்றும் அடையாள அட்டையை பயன்படுத்தி இதயம் மாற்று சிகிச்சைக்கு இதயம் வேண்டி காத்திருக்கும் "எமிலி போசா"என்னும் "hand made" greetings தயாரிப்பாளரை,கண்டுபிடித்து அவர் நல்லவர் என்று உணர்கிறார்.எமிலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கும் போது , அவரின் தோட்டத்திற்கு விதை போட்டு களை எடுக்கிறார். பூக்கள் பூக்கச் செய்கிறார்.அவளின் கிரேட்டேன் ரக உயரமான நாயை நன்கு பராமரித்து நண்பனாகிறார்.அவளின் நின்று போன வருமானத்திற்கு தன்னால் முடிந்த ஏதேனும் செய்ய நினைக்கிறார்.

ஒரு நாள் "கோநீ டேப்போஸ் " இவரின் கைபேசிக்கு அழுத படி போன் செய்து இனி இந்த நரகம் வேண்டாம் என்றும் தன்னை மன்னித்து தனக்கு உதவும் படியும் சொல்ல. இவர் தன் காரையும் அழகிய கடற்க்கரை பங்களாவையும் அவளுக்கு தானமாக எழுதிக் கொடுத்து , அவளின் இரு குழந்தைகளுடன் அங்கு சென்று நிம்மதியாய் இருக்கும் படியும் சொல்லி அனுப்புகிறார். பின்னர் பார்வையற்ற மாட்டிறைச்சி விற்பனையாளன் மற்றும் பகுதி நேர பியாநிஸ்டான "எஸ்ரா டர்னர்" (வூடி ஹாரேல்சொன்)ஐ வெறுப்பேற்றி அவர் நல்லவர் என கண்டுபிடிக்கிறார். 


தன் விழித்திரைகள் அவருக்கு தான் என முடிவெடுக்கிறார். ஒருநாள் வழக்கம் போல சிறுவன் நிகொலசுக்கு எலும்பு மஜ்ஜை தானம் செய்து விட்டு வலியில் படுத்திருக்க, எமிலி ஆசையுடன் "இரவு விருந்துக்கு அழைக்க, மறுக்காது வருகிறார். அங்கு எமிலி பரிசாக தரும் புத்தாடைகளை அணிகிறார். எமிலி இதய நோயின் காரணமாக அச்சு வேலைகளை நிராகரிக்க , இவர் முன்னமே "எமிலி போசா" வின் 150 வருட பாரம்பரிய கை விசை அச்சு எந்திரத்திற்கு, இவள் எளிதாய் இயக்கும் வண்ணம் மோட்டார் பொருத்தி அதை இயக்கி வாழ்த்து அட்டைகளில் அதே "hand made" தரம் வரச் செய்கிறார். அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து , அதை இயக்கி காட்ட 


மகிழ்ச்சி பிடிபடவில்லை அவளுக்கு. அவள் இவரை மிகுந்த ஆசையுடனும்,ஆனந்த கண்ணீருடனும் படுக்கைக்கு அழைத்துச் செல்கிறாள் . முதலில் தயங்கிய இவர், ஒரு இதய நோயாளி முதிர் கன்னி நல்ல உள்ளம் நோகக் கூடாது என்று அவளை கூடுகிறார். பின்னர் அவளுடன் பேசுகையில் , அவளுக்கு தன் இதய தான பேஜரில் அழைப்பு வரும் என்ற நம்பிக்கை போய் விட்டது,என்றும் தனக்கு வாழும் வரை இவரின் துணை போதும் என்று என்ன என்னவோ கனவுகளை அவருடன் இவள் பகிர , இவர் பதறி துடிக்கிறார். 


நல்ல உள்ளம் கொண்ட இவள் உயிர் வாழ வேண்டும் என அங்கிருந்து கிளம்புகிறார். தன் மோட்டலுக்கு செல்கிறார். தன் அண்ணன் பென் தாமசுக்கு ஒரு கடிதமும் எமிலி , எஸ்ராவுக்கு ஒவ்வொரு கடிதமும் எழுதி வைக்கிறார். குளியல் தொட்டியில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த 2 மூட்டை ஐஸ் கட்டிகளை கொட்டுகிறார். தன் உயிர் நண்பன் "dan" ற்கு போன் செய்து "
It's time." என்று கூறி போனை வைக்கிறார். 

பின் எஸ்ராவிற்கு போன் செய்து தான் அவரை வார்த்தைகளால் காயப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டு ,அவருக்கு, விரைவில் விழித்திரை தானத்திற்கு அழைப்பு வரும் என்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார். பின்னர் "911" இற்கு போன் செய்து இங்கு தற்கொலை நடக்கப் போகிறது என்று விலாசம் சொல்கிறார். தொட்டியில் இறங்குகிறார். தன் செல்ல வளர்ப்பு ஜந்துவான ஜெல்லி மீனை தன் மேல் விட்டுக் கொள்கிறார். அது தீண்டியதும் துடித்து உயிர்விடுகிறார். நண்பர் "dan" கதறியபடியே முன்னின்று இதயமாற்று மற்றும் விழித்திரை மாற்று சிகிச்சைகளை நடத்துகிறார். 

சில தினங்கள் கழித்து அவர் அண்ணன் பென் தாமஸ் எமிலி போசாவை சந்தித்து உண்மைகளை விளக்கி டிம் தாமசின் கடிதத்தை கொடுக்கிறார். அதில் நல்ல மனிதரான எஸ்ராவை இவள் மணந்தால் இவர் மகிழ்வேன் என்றிருக்க. ஒரு பியானோ இசை நிகழ்ச்சியில் எமிலி எஸ்ராவை சந்தித்து அவர் விழிகளில் டிம்மின் விழிகளை பார்த்து ஆனந்த கண்ணீர் விடுகிறாள். இருவரும் மண வாழ்க்கையில இணைகின்றனர். இதில் நடித்த ஒவ்வொருவரும் அப்படி ஒரு இயல்பான நடிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.   நம் ரசனைக்கு ஒரே தீனி தான். 


இந்த குழு முன்பே இணைந்து "pursuit of happiness" படம் கொடுத்திருந்தனர். வில்ஸ்மித் மீண்டும் நிரூபித்துவிட்டார். நாமெல்லாம் கருப்பாய் பிறக்கவில்லையே ?என்று ஏங்க வைக்கிறார். இவரின் நடிப்பு அபாரம். எமிலி போசா (rosario dawson)என்னவொரு பெண்மணி?
என்ன ஒரு அழகு ?என்ன ஒரு உடற் மொழி? ஒரு காட்சியில் முகம் அப்படியே தரையில் படுமாறு தொப்பென விழுவார் பாருங்கள்?அப்பா? பார்வை அற்றவராக வந்த "எஸ்ரா டர்னர்"(woody haarelson) he is the man , (இவர் நடித்த natural born killers பார்த்திருக்கிறேன்) என்ன ஒரு தேர்ந்த நடிப்பு. "iam trying to help you sir " என்பாரே பார்க்கணும்? 


அந்த மூதாட்டி மற்றும் அந்த கிரேட்டேன் ரக நாய் என்று நடிப்பு படையலே போட்டு விட்டனர். .செவென் பவுண்ட்ஸ் என்றால் என்ன? செவென் பவுண்ட்ஸ் என்பது அவரின் உடலில் இருந்து தானம் கொடுக்கப்பட்ட அவயங்களின் மொத்த எடையை குறிக்கும்.
-------------------------------------------------------------------------------------------
remarkable phrases
Ben Thomas: It is within my power to drastically change his cirumstances, but I don't want to give that man a gift he doesn't deserve.
Ben Thomas: I haven't treated myself very well.
Emily Posa: Start now.
Ben Thomas: In seven days, God created the world. And in seven seconds, I shattered mine.
Emily Posa: Why do I get the feeling you're doing me a really big favor?
Ben Thomas: Because I get the feeling that you really deserve it.
Dan: [Answering his phone] Hello?
Ben Thomas: [Ben on the other line] It's time.
Ben Thomas: I was planning on dying here.
Larry: Then you'll have to pay in advance!
Ezra Turner: [Last lines] You must be Emily. It's so nice to meet you.
----------------------------------------------------------------------------------
Directed by
Gabriele Muccino
Produced by
Todd Black
Jason Blumenthal
James Lassiter
Will Smith
Steve Tisch
Written by
Grant Nieporte
Starring
Will Smith
Rosario Dawson
Woody Harrelson
Michael Ealy
Barry Pepper
Music by
Angelo Milli
Cinematography
Philippe Le Sourd
Editing by
Hughes Winborne

திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இதோ.

நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகுள்
தாழ்மையான விண்ணப்பம் :-
இங்கு முழு படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி தந்திருக்கிறேன் என்று
நினைப்பவர்கள்,நினைப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.

காரணம்:-
முன்பு நான் ஆங்கில படத்தின் உச்சரிப்பு புரியாமல் அதை முழுமையாக புரிந்து ஊன்றி பார்க்க முடியாமல் போனது.அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்னும் சிறு முயற்சி. இதை குறை சொல்லி நான் எடுக்கும் இந்த நல்ல முயற்சியையும் கெடுக்க வேண்டாம்.எல்லாவற்றிர்க்கும் மேல் பாணி என்று ஒன்றிருக்கிறது.
இது என் பாணி.

இது எனக்கு எழுத்து பயிற்சியும் அளிக்கிறது.
imdb தளத்தில் விசிறிகள் ஒரு படத்தில் லயித்தால் அதை பற்றி "trivia" மற்றும்
faq,goofs,synopsis,plot எழுதி அந்த படத்தின் வெற்றிக்கு உதவுவதுண்டு.
அது போல ஒரு சிறு முயற்சி தான் இது.
ஒரு படத்தை விமர்சனம் படித்துவிட்டு போய் யாரும் கட்டாயம் பார்ப்பதில்லை.
நாம் லயித்ததை பிறருக்கு சொல்கிறோம் அவ்வளவே.
நன்றி

ஹோட்டல் ருவாண்டா[ 2004]Hotel Rwanda [யூகே+யூஎஸ் ஏ][15+]

து பல சர்ச்சைகளுக்கு உள்ளான படம். இது ஓர் உண்மை சம்பவத்தை தழுவி எடுத்திருந்தாலும், நடந்த சம்பவத்தை அப்படியே பதிவு செய்யாமல் விட்டுவிட்ட உணர்வே படம் பார்த்த எனக்கு கொடுத்தது!!!, ஏன்? இதை பற்றிய நிறைய கட்டுரைகளை முன்னமே தேடித்தேடி படித்திருந்தமையாலும், இது பார்க்கும் முன்னரே ஜானி மேட் டாக் என்னும்  படம் பார்த்த வியப்பினாலும். சம் டைம்ஸ் இன் ஏப்ரல் என்னும் தொலைக்காட்சி படத்தை பார்த்ததாலும் எனக்கு ஒரு வரலாற்று ஆவணப்படம் கொடுக்கவேண்டிய தாக்கத்தை இப்படம் கொடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே  குறிப்பிட வேண்டியிருக்கிறது.

ந்த சம்பவத்தை ஒரு குடும்பத்தின் குடும்பத்தலைவரின் பார்வையில் சுட்டிக்காட்டுவது போல மட்டுமே உள்ளது.படம் தயாரித்தது உலக அண்ணன் அமெரிக்காவும்,இங்கிலாந்தும்,படம் இயக்கியது டெர்ரி ஜார்ஜ் என்னும் அயர்லாந்து இயக்குனர். ஆகவே!! ஏதோ யாருக்கோ பயந்து பயந்தது சொல்ல வந்ததை சொல்லியிருக்கின்றனர்,என்ற எண்ணமே மேலோங்குகிறது .  இதில் காட்டியது எள்ளளவு, நிகழ்ந்ததோ மலையளவு. நாயகன் நாயகி,குழந்தைகள் மற்றும் தோன்றிய மக்கள் அனைவரும் நன்கு நடித்திருந்தனர்.வேறென்ன சொல்ல,சரி உண்மையில் ருவாண்டாவில் அந்த நூறு நாட்கள் என்ன நடந்தது என்று கொஞ்சம் அசைபோட்டு பார்ப்போமா?!!!!


ந்த துத்சி மக்களைப்பற்றி படித்தவுடன் ரொம்ப நாட்கள் தூங்கவில்லை, பார்க்கும் நண்பரிடமெல்லாம் இந்த சம்பவம் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன், ஆனால் அவர்கள் அதை அறிந்திருக்கவுமில்லை, தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவுமில்லை,என்பது வேறு கதை.!!! இந்த ஹுது என்னும் கொலைகாரர்கள் இன்னும் உயிருடன் தானே உள்ளனர்? என்ற அங்கலாய்ப்பு மட்டும் வருவது நிற்கவில்லை.
கிரிகோரி கயிபண்ட[Grégoire kayipanda]என்ற சண்டாளன், ருவாண்டாவின் முன்னாள் ஹுது இன அரசியல் தலைவன்,நீண்டகாலம் கொழுந்துவிட்டு எரிந்த இனவன்முறைக்கு நெய்யூற்றியவன். 1994 ஆம் ஆண்டு துத்சி இன மக்களுக்கு(கருப்பாக ,உயரமாக ,நீண்ட மூக்குடன் காணப் படுவர்) எதிராக ஹுது இன மக்களை (கருப்பாக ,குள்ளமாக ,சப்பை மூக்குடன் காணப்படும் மக்கள்)தூண்டி விட்டு வெறும் நூறே நாட்களில் சுமார் பத்து லட்சம் பேரை கொன்று குவித்தவன்.
 
னப்படுகொலைக்கான வானொலி சேவையை சிறப்பாய் தொடங்கி நேர்முக வர்ணனையை தொகுத்து வழங்க ஆணையிட்ட கொடூரன், வானொலியில் தொடர்ந்து மூளைச்சலவை செய்தவன்,(எத்தனை துட்சி மக்களை கொன்றாலும் அவர் உடைமைகள் கொன்றவருக்கு சொந்தம் என்று )

கிட்டத்தட்ட மூன்று லட்சம் துத்சி இன பெண்களை 24 மணி நேரமும் இயங்கும் கற்பழிப்பு முகாம்களில்(பள்ளிக்கூடங்கள் மற்றும் சர்ச் தான் முகாம்கள்) வைத்து தீவிரமாக பலபேரால் கற்பழிக்க பட்டு பின் அவளது இடுப்பெலும்பை உடைத்து ,அல்லது கீழ் பாகத்தை சிதைத்து கூழாக்கி மிக குரூரமாக கொலை செய்ய ஆணை இட்ட மாபாதகன் ,

ற்போது ஐநாவின் உபசரிப்பில் விஐபி அந்தஸ்த்து சிறையில் இவனுக்கு ஆயுள் தண்டனையாம், (ஏனென்றால் அன்னாரின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் அல்லவா?) முடிவு!!! இப்போது 60 சதம் துத்சி இன மக்கள் உயிருடன் இல்லை,கொன்று குவித்து குதூகளித்த ஹுது இன மக்கள் 1 லட்சம் பேர் போர் கைதியாக பிடிக்கப்பட்டு சிறையில்,மீதமுள்ள மக்கள் காட்டில் சரணடைய பிடிக்காமல் இப்போதும் ஐநாவுடன் ஒளிந்து சண்டையிட்டு வாழ்கின்றனர், சம்பவம் நடந்து பதினைந்து வருடங்கள் ஆன நிலையில், யாரும் இதை நினைத்து கூட பார்ப்பது கூட அரிதாகிவிட்டது,ஏனென்றால் தனக்கு நடந்தால் விபத்து,பிறர்க்கு நடந்தால் வெறும் செய்தி என்னும் சராசரி மனிதர் தானே நாம்!!!?:(

க்களை கொல்ல உபயோகிக்கப்பட்ட ஆயுதம்-நம்மூரில் மீன்காரர்கள் பயன்படுத்தும் கத்தி போன்றது (சீனத் தயாரிப்பாம்) பெண்களை கற்பழித்த பின் அவளின் உறுப்பை சிதைக்க உபயோகிக்கப்பட்ட ஆயுதம்-நம்மூரில் சக்தி வழிபாட்டுக்கு பயன்படுத்தும் சூலம் போன்றது (சீனத் தயாரிப்பாம்)

து தவிர மெஷின் கண்கள்,ஏவுகனை,பீரங்கிகளை பெல்ஜியம் ,சீனா போன்ற நல்லவர்கள் கொடுத்து உதவினார்களாம். இன்னும் இனப்படுகொலைகள் இலங்கையிலும் ,காசாவிலும் ,செர்பியாவிலும் திபெத்திலும்,துருக்கியிலும் ,மியான்மாரிலும்,லெபனானிலும் தொடர்ந்து வருகின்றது, ஐ நாவும் ,உலக போலீஸ் அமெரிக்காவும் இன்ன பிற முன்னணி நாடுகளும் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்க்கின்றன,(எல்லாம் ஆயுத வியாபாரம்,கட்டை பஞ்சாயத்து,பாதுகாப்பு வரி,ஒப்பந்த முறை போர் வீரர் மற்றும் ராணுவ தள வாடங்கள் சப்ளை ,போன்ற மேலதிக காரணங்களால் தான் என சொல்லவும் வேண்டுமா?!!!.)

ஆனால் நாரப்பயல்கள் பதினாறாம் நாள் காரியம் செய்ய மட்டும் சொம்போடு தவறாமல் வந்துவிடுவர் .மேலதிக விபரங்களுக்கு
===========0000============
போருக்கு பின் இன்றைய ருவாண்டா
மிக மோசமான ஒரு இனப்படுகொலையை நடத்திவிட்டு குற்ற உணர்வுடன் வசிக்கும் ஹுடுக்கள் ஜெர்மானியர்களை விட படு கேவலமானவர்கள்  என்பதில் ஐயமே இல்லை,அவர்களை கடந்த 15 வருடங்களாக துத்சிக்கள் ஆளுவது மிகச்சரியே.

துவும் இல்லாமல் பெல்ஜிய நாட்டவர் அங்கு ஆண்ட போதே சில சுத்தம் மற்றும் சுகாதாரம் சம்மந்தப்பட்ட விஷயங்களை விட்டு சென்றுள்ளனர் , அதனால் இன்றைய ருவாண்டா ஐரோப்பிய நாடுகள் போல மிக சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் காணப்படுகிறது.. ஆனால்?!!!

ன வெறியை மட்டும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் ப்ரிட்டனும் ஐநாவும்,நெய்யூற்றி தொடர்ந்து வளர்த்துள்ளனர்.அதற்க்கு சாட்சி படம் முழுக்க வானொலியில் தொடர்ந்து கேட்கும், இனவெறிக்கு மூளைச்சலவை செய்யும் ஒரு மாபாதகன் ஜார்ஜெஸ் ரக்கியூ [Georges_Ruggiu ] வின்  கொடூரக் குரல்,இந்த இழிமகன் ஒரு பெல்ஜியன் , இவன் செய்த வானொலி சேவைக்கு சொற்ப தண்டனையாக 12 ஆண்டுகளை முடித்துவிட்டு விரைவில் வெளியில் வரப்போகிறான்.இந்த வேசிமகனை எவனாவது எதாவது செய்ய முடியுமா?!!! இவன் இருப்பது விஐபி அந்தஸ்து சிறையே!!!.அங்கே இவனுக்கு மது முதல் மாது வரை பெல்ஜிய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது எனப்படித்தபின்னர், போர்கைதிகளாக பிடிபடுவர்களை உடனே பின்னந்தலையில்  சுட்டுக்கொல்வது எவ்வளவு சரி?!! என உணர்ந்தேன்.சல்லிப்பயல்,முடிந்தால் இவன் போட்டோவிலாவது துப்பிவிட்டு போகவும்.
===========0000============
ஹோட்டல் ருவாண்டா திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி:-


சம்டைம்ஸ் இன் ஏப்ரல் திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி:-




ஜானி மேட் டாக்  திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி:-




நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி விக்கிபீடியா,நன்றி கூகுள்

நேற்று வரைந்த டால்மேஷன் நாய்

"த ஷஷாங்க் ரெடேம்ப்ஷன் " "the shawshank redemption"(1994)











"the shawshank redemption"(1994)
இந்த படம் வெளியாகி பதினைந்து வருடம் கழித்துப் பார்த்ததை எண்ணி ஆறாத வேதனைப்பட்டேன்.மிகப்பெரிய இழப்பே.

"த ஷஷாங்க் ரெடேம்ப்ஷன் "(ஷஷாங்கில் தண்டனைக்காலம்)வட அமெரிக்காவின் 180 வருட பழமை வாய்ந்த ஆறடி கனமுள்ள,

சுவர் கொண்ட காற்று கூட புக முடியாத ஒரு கொடுஞ்சிறை. உள்ளே வந்தால் நரகம் தான்.

அரக்கத்தனமான சிறை அதிகாரிகள்.
உள்ளே உலவும் இன வன்முறையாளர்கள்.
ஓரினச் சேர்க்கையாளர்கள்.
என்று.சாமானியனால் தாக்கு பிடிக்க முடியாத கொடும் சூழல்...

இந்த கதை 1947 ஆம் ஆண்டு பயணிக்கிறது.
ஆண்டி டூப்ரேன் (tim robbins)என்ற வங்கி அதிகாரி தன மனைவியை கள்ளக் காதலனுடன் உல்லாசமாய் இருக்கும் போது இருவரையும் சுட்டுக்கொன்றதாக வழக்கு நடந்து,
அவருக்கு எதிரான சந்தர்ப்ப சாட்சியங்கள் வலுவாக ,இருந்தமையால் செய்யாத குற்றத்திற்கு இரண்டு ஆயுள் தண்டனைகளை அடுத்தடுத்து அனுபவிக்க ஷஷாங்க் சிறைச்சாலைக்கு வருகிறார்.

அங்கு "ரெட் "(morghan freeman)என்னும் 20 வருட தண்டனையை அங்கு கழித்த சக கைதி யுடன் நண்பனாகிறார்.
இவருக்கு சிறையில் உள்ள சந்து பொந்து,மற்றும் என்ன பொருள் கேட்டாலும் வெளியில் இருந்து வரவழைத்து தன் கமிஷன் 20 சதம் மேலே வைத்து விற்க்கும் தந்திரமும் அத்துப்படி.
இவரிடம் டூப்ரேன் பத்து டாலர் தந்து ஆறு அங்குலம் உயரமுள்ள சிறிய "ஜாக் ஹம்மேர்"கேட்டு வரவழைக்கிறார்.
தனது சிற்பம் குடையும் வடிக்கும் பொழுது போக்கிற்கு என்று சொல்லுகிறார்.
பல அறிய கல்லால் ஆன பொக்கிஷங்களை வடிக்கிறார்.
பின்னர் அப்போது ஹாலிவூட்டில் மிக பிரபலமான கவர்ச்சிக்கன்னி "rita hayworth" இன் "a0" அளவு போஸ்டரும் வரவழைக்கிறார்.
அதை சுவற்றில் ஒட்டிக்கொள்கிறார்.
ஓய்வு நேரங்களில் சிறையில் தரப்பட்ட பைபிளை படிக்கிறார்.
பைபிளும் கையுமாகவே காணப்படும் இவரை சிறை அதிகாரிகளுக்கும் பிடிக்கிறது.
1949 ஆம் வருடம் சிறைக்கு உள்ளேயே இருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு கூரையில் தார் பூசும் வேலைக்கு போகையில்,
சிறை அதிகாரி "hadley" நாட்டின் வருமான வரியை குறை கூறி அங்கலாய்த்து பேசுவதை காண நேரிடுகிறது.
இவருக்கு வரி ஏய்ப்பு கைவந்த கலை ஆதலால்
இலவசமாக வலிய போய் வரி ஏய்ப்பு ஐடியா கொடுத்து மயிரிழையில் உயிர் பிழைக்கிறார்.
இதற்கு பலனாக அவர்கள் சகா அனைவருக்கும் பீரும் ,
சிறிது சுதந்திரமும் கிடைக்க செய்கிறார்.
இதன் மூலம் இவரின் நட்பு வட்டம் மேம்படுகிறது.
இவர் தான் குடிப்பதை விட்டு விட்டதால் தன பங்கு பீரையும் சகாக்களுகே கொடுக்கிறார்.
ஆனால் சிறை வாழ்வில் ஒரு அவமானமாக அங்கு உலவும் ஒரு "ஓரின சேர்க்கையாளர் "குழுவான "சிஸ்டேர்ஸ் கேங் கிடம் அவ்வபொழுது மாட்டி குதப் புணர்ச்சிக்கு ஆளாகிறார்.
வாய்ப் புணர்ச்சிக்கும் ஆளாக்கப்படுகிறார்.
ஒரு சமயம் இவர் அவர்களை எதிர் தாக்குதல் செய்தும் பயனின்றி கடுமையாக தாக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற.
இவர் மேல் மனிதாபிமானம் கொண்ட சிறை அதிகாரி "hadley" அந்த "சிஸ்டேர்ஸ் கேங் " தலைவன் "பாப்" ஐ அவன் இருக்கும் வெளிச்சமில்லா சிறைக்கு சென்று இரும்புத்தடியால்.அடித்து நொறுக்கி
அவன் மொத்த உடம்பையே செயலிழக்க செய்து
நடை பிணமாக்கி மாநில மருத்துவமனைக்கு அனுப்ப,
சிறையில் இவருக்கு செல்வாக்கு கூடுகிறது.
அனைவருக்கும் நிம்மதி பிறக்கிறது.
இவர் தொடர்ந்து சிறை அதிகாரிகளுக்கு வருமான வரி கணக்கு தாக்கல்,
இதர விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல்,
இலவச வரி ஏய்ப்பு சட்ட உதவி என்று இரவு பகல் பாராமல்
பணி செய்து தர,
இவருக்கு தனி அறை,நூலகர் பதவி.சிறையின் வார்டன் "norton"இன் கணக்கு வழக்கை பார்க்கும் வேலை,
மற்றும் அளவுக்கு அதிகமான சேமிப்பு பொருட்கள் (personnel items)வைத்துக்கொள்ள அனுமதி என கிடைக்கிறது.
காலம் உருண்டோட இப்போது ஹாலிவூட்டில் மிக பிரபலமான கவர்ச்சிக்கன்னி "மர்லின் மன்றோவின் " "a0" அளவு போஸ்டரும் வரவழைக்கிறார்.
அதை சுவற்றில் ஒட்டிக்கொள்கிறார்.
இவர் சிறை நூலகத்திற்கு உதவி கேட்டு அரசு மற்றும் இதர மாகான நூலகங்களுக்கு சிறை அதிகாரியின் அனுமதியுடன் வாரத்திற்கு ஆறு கடிதங்களாவது எழுத ,
அவருக்கு மலை போல பழைய புத்தகங்கள் இசைத்தட்டுகள் மற்றும் பண உதவிகள் வந்துசேர்கின்றன.
சிறையில் நூலகத்தை அருமையாக நிர்மாணித்து பாராட்டுக்களும் விருதுகளும் பெறுகிறார்.
இதற்கிடையில் சிறை வார்டன் "norton" சிறைக்கைதிகளை அரசு பொதுப்பணித்துறையில் வேலைக்கு அனுப்பி,அதில் பெரும் பங்கை ஒப்பந்த தாரர்களிடமிருந்து லஞ்சமாக பெறுகிறார்.
அதற்கும் இவரே கணக்கர்."randel stephens" என்னும் பெயரில் தானே கையொப்பமிட்டு ஒரு பொய்க் கணக்கை ஆரம்பித்து
(அதற்க்கு போலி ஓட்டுனர் உரிமம் ,போலி பிறப்பு சான்று தரப்படுகிறது)அதில் வரி ஏய்ப்பு செய்து லஞ்சப் பணத்தை கணக்கு வைத்து தினமும் டெபாசிட் செய்யப்படுகிறது.
வார்டனுக்கு இவனின்றி ஒரு அணுவும் அசையாமல் போகிறது.
இருந்தும் அந்த கொடுங்கோல் வார்டன் இவரிடம் தன் ஷூவுக்கு கூட பாலீஷ் போட்டு வாங்கிக்கொள்கிறார்.
அவ்வப்பொழுது தன் கோட்டு சூட்டுகளையும் துவைத்து அயன் செய்து வாங்கிக் கொள்கிறார்.

நாட்கள் உருண்டோட 1965 ஆம் வருடம் ,
இப்போது ஹாலிவூட்டில் மிக பிரபலமான கவர்ச்சிக்கன்னி ""raquel welch"இன் "a0" அளவு போஸ்டரும் வரவழைக்கிறார்.
அதை சுவற்றில் ஒட்டிக்கொள்கிறார்.
துடிப்பான இளம் திருட்டு குற்றவாளி "tommy williams" என்பவன் சிறைக்கு வருகிறான்.
இவரிடம் நட்புடன் பழகுகிறான்.
தன் கர்ப்பிணியான காதலியை விட்டு வந்தவன் இனி திருந்தி வாழ்வது என்ற முடிவில் ,
இவரிடம் தனக்கு கல்வி கற்றுத்தரச் சொல்லும் படி கேட்டு ஆர்வமாக படித்து பரிட்சையும் எழுதுகிறான்.
ஒரு நாள் சக சிறைக்கைதிகளுடன் பேசிக்கொண்டிருக்கையில் டூப்ரேன் சிறைக்கு வந்த காரணத்தை கேட்க ,
ரெட் சொன்னவுடன் கேட்டு அதிர்கிறான்.
தன் முன்னாள் சக சிறைக்கைதி "elmo blatch" என்பவன் தன்னிடம் குடித்து விட்டு தான் செய்த கொலை ,கொள்ளை கற்பழிப்புகளை பற்றி பெருமை பொங்க
விவரிப்பான் என்றும்,அவன் கிளப் காவலாளியாக இருந்த போது அறைகதவை உடைத்து உள்ளே சென்று அங்கே சல்லாபம் செய்து கொண்டிருந்த கள்ளக் காதலர் இருவரை பணத்திற்க்காக சுட்டுக் கொன்றதையும்,
அதில் ஒரு வங்கி அதிகாரி மாட்டிக்கொண்டதையும் விவரித்ததை சொல்கிறான்.
டூப்ரேன் குற்றமற்றவர் என்று சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறான்.
இதை அனைவரும் டூப்ரேன் வந்ததும் சொல்ல இவருக்கு தலை சுற்றுகிறது.
பத்தொன்பது வருடங்கள் கழிந்த பின்னா?இந்த செய்தி வர வேண்டும் என்று கண்ணீர் விடுகிறார்.
நம்பிக்கையுடன் சிறை வார்டன் "norton" இடம் சென்று உண்மைகளை விளக்கி தனக்காக பரிந்துரை செய்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உதவுங்கள் என்று கெஞ்ச,
அவர் சிறிதும் ஆர்வமில்லாமல்,அவன் சின்ன பையன் எதோ உளருகின்றான்.
அதை நம்பாதே.இன்றைய கணக்கை எழுது. என்று ஏவ,
இவன் ஆத்திரமாகி கத்த,
அவர் உன் நிலைமை மறந்து பேசாதே என்று மிரட்டுகிறார்.
இவன் மேலும் அவரிடம் என்னை வெளியே விட்டால் உங்களைபற்றியும் உங்கள் பினாமி பணம் பற்றியும் மூச்சு கூட விட மாட்டேன் என்று சொல்ல,
இவர் கடும் சினத்துக்கு உள்ளாகி,பணம் என்னும் சொல்லை இனி ஒரு முறை உச்சரித்தால் அவனை தான் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் ,
இவனை ஒரு மாதம் தனிமை-இருட்டு சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார்.இதற்கிடையில் இளம் சிறைக்கைதி
"tommy williams" க்கு பரீட்சை முடிவுகள் வருகிறது,
தொலை தூர பள்ளி இறுதியில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற
சான்றிதழும் வருகிறது.
இவனுக்கு இருட்டு சிறைக்கு சாப்பாடு வருகையில் இந்த செய்தியும் வர இவர் உயரே பறக்கிறார்.
வாழ்வில் தான் கூட ஒரு நல்ல விஷயம் சாதித்து விட்டதாக பெருமை கொள்கிறார்.
அன்று இரவே "tommy williams" ஐ வார்டன் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கூறி ,
சிறை காம்பவுண்டுக்கு வெளியே கூட்டிவரச் செய்து அவனுக்கு அன்பான வார்த்தைகளை பேசி ,
இவனுக்கு சிகரட் கொடுத்து பற்ற வைத்து ,
இவன் டூப்ரேன் குற்றமற்றவர் என்று சொன்னது உண்மையா?
அதை எங்கு எந்த கோர்ட்டில் கேட்டாலும்,
எந்த நீதி பதி முன் கேட்டாலும் சொல்ல முடியுமா?
பின் வாங்க மாட்டாயே?
என்று கேட்க,இவன் அவ்வளவும் கடவுள் மேல் ஆணையாக உண்மை,
அதை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்ல தயாராக இருக்கிறேன் என்று சொல்ல,
இவர் ஆர்வமாக அவனை தட்டிகொடுத்து ரொம்ப மகிழ்ச்சி என்று சொல்லிக்கொண்டே மேலே பாதுகாப்பு கோபுரத்தில் நின்ற சிறை காவலாளிக்கு கண்ணைக் காட்ட,
இவனை அவர்கள் சரமாரியாக சுட்டு கொல்கின்றனர்.
மறுநாள் டூப்ரேன் இருட்டு சிறைக்கு வார்டன் வந்து "tommy williams" சிறையில் இருந்து தப்பிக்கும் போது காவலர்கள் சுட்டதில் இறந்து விட்டான்,என்று சொல்ல ,
மேலும் இவன் தன்னிடம் பழையபடி வந்து கணக்கு எழுதினால் தொடர்ந்து தனி அறை,பாதுகாப்பு, நூலகர் பதவி,கிடைக்கும்,இல்லையேல் மரண அடி, கக்கூசு கழுவும் வேலை,இவன் நூலகம் கொளுத்தப்படும் ,
என்று மிரட்ட ,இவன் பூனையாக பணிகிறான்.
பழையபடி கணக்கு எழுதும் வேலை செய்கிறான் ,
நாற்பது வருடங்களை சிறையில் கழித்த தன் நண்பன் ரெட்டிடம் பேசுகையில் தான்
இந்த சிறையை விட்டு வெளியேறினால் மெக்சிகோவின் அருகே உள்ள "zihuantanejo"என்னும் கடற்கரை கிராமத்தில் போய் நிரந்தரமாக தங்கி உல்லாசக்கப்பலுடன் ஓட்டல் வைத்து பிழைக்க திட்டமிட்டிருக்கிறேன். என்று சொல்ல ,
ரெட் சிரிக்கிறார்,
அது ஒரு போதும் நடவாது,நம்பிக்கைகளே வீண்.அது ஒரு மணல் கோட்டை எளிதில் தகர்ந்து விடும் என்று சொல்கிறார்.
இவர் பயம் மனிதனை சிறை வைக்கும் ,
வாழும் போதே கொன்று விடும்.
ஆனால் நம்பிக்கை ஒருவனை சிறையில் இருந்து விடுதலை ஆக்கிவிடும் என்று கூற ,
மேலும் நீ எப்போது விடுதலை ஆனாலும் "பக்ஸ்டன்"என்னும் ஒரு சிற்றூரில் வடக்கே சென்றால் ஒரு வயல் வரும்,
அதில் உள்ளே நடந்து போனால் தனியாக ஒரு பெரிய மரம் காணப்படும்,
அங்கே பலவித கற்களானால் ஆன ஒரு குட்டி சுவர் உண்டு ,
அங்கே மரத்தினருகே "எரிமலை"கல் ஒன்று இருக்கும்,
பளபளப்பை வைத்து நீ அதை உணர்வாய்.
அதை தூக்கி பார்த்தால்,ஒரு தகர பெட்டியும்,அதில் பிளாஸ்டிக் பையில் உள்ளே நான் உனக்கு எழுதிய கடிதமும்,
இருநூறு டாலர் பணமும் இருக்கும்.
அதை எடுத்துக் கொண்டு "zihuantanejo" அவசியம் வரவேண்டும்
வந்து விடுவேன் என்று இந்த நண்பனுக்கு சத்தியம் செய் என்று ,
சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.
இவர் அதை ஏற்கவில்லை,
ஏமாற்றத்திலும் விரக்தியிலும் இருக்கும் ஒருவனின் வார்த்தைகளின் வெளிப்படாகேவே கருதி விட்டு நகர.
அன்று வழக்கம் போல சிறை வார்டனுக்கு கணக்கு எழுத ,
இவரிடன் வார்டன் தன் ஷூவிற்கு நன்கு பாலீஷ் போட்டு வைக்கும் படியும்,
தன் கோட்டு சூட்டுகளை நன்கு அயன் செய்து வைக்கும் படியும் சொல்லிவிட்டு ,
இவரிடமிருந்து கணக்கு புத்தகத்தை (அது ஒரு பைபிளின் அட்டையைக் கொண்டிருக்கும்)வாங்கி
கூடவே இவர் தந்த சில காகிதங்களுடன் இவரை தன் முன்னாலே
"safe" இற்கு உள்ளே வைக்க விட்டு பூட்டி,
தன் மனைவி வரைந்த பெயிண்டிங்கை பெட்டக கதவை மறைத்து பழைய படி மாட்டிவிட்டு வீட்டுக்கு கிளம்ப,
டூப்ரேன் ஷூவுக்கு ரொம்ப நேரம் பாலீஷ் போட்டு மெருகேற்றுகிறார்.
வார்டுரோபை திறந்து கோட்டு சூட்டுகளை தடவிப் பார்க்கிறார்.
ரெட் இரவு உணவு நேரத்தில் சக கைதிகளுடன் உணவருந்த டூப்ரேன் மட்டும் காணவில்லை,
அதில் சக கைதி டூப்ரேன் தன்னிடம் ஆறடி நீளமுள்ள தாம்புக்கயிறு கேட்டதாகவும் தான் தந்ததாகவும்,
ஏன்? என்று தெரியாது என்றும் சொல்ல ,
ரெட்டிற்கு எங்கோ பொறி தட்டுகிறது.
இரவு எல்லோரும் அவர்கள் அவர்களின் சிறை கூடங்களுக்கு திரும்ப பெயர் வாசிக்கப்படுகிறது,
இவர் பெயர் பதிவாகிறது,
இரவு ரோந்து அதிகாரி வந்து ஒவ்வொரு அறையை சோதனையிட்டு பெயர் பட்டியல் சரிபார்க்க ,
இடியுடன் கூடிய
பலத்த மழை பெய்கிறது.
மறுநாள் இவர் சிறை அதிகாரிகள் பெயர் படிக்க அனைவரும் வெளியே வந்து அட்டன்டன்ஸ் கொடுக்கின்றனர்.
இவர் பெயர் படிக்க குரல் இல்லை.அதிகாரிகள் கீழிருந்த படி மிரட்டி வெளியே வுமாறு சொல்ல ,
இவர் வரவில்லை,பொறுமை இழந்த அதிகாரிகள் சிறை கதவை திறந்து பார்க்க அதிர்கின்றனர்.
ஒரு ஆள் வெளியே போனதற்க்குரிய எந்த சுவடும் இல்லாமல் தப்பித்திருக்கிறார்.எப்படி?
யாருக்கும் விளங்கவில்லை.
விஷயம் கேள்விப்பட்டவுடன் வார்டனுக்கு பேதி யாகி விட்டது .
நம்பாமல் நேரில் வந்து இவரது அறையில் ஒவ்வொரு பொருளாக துருவிப் பார்க்க,
சில கருங்கல் வேலைபாடுகளும்,அழகிகள் போஸ்டரும்,சில புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன.
கருவுகிறார்,
எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் பறக்க அவன் எனக்கு உயிருடன் வேண்டும் என்று கருவுகிறார்.
எப்படிடா?ஒரு மனிதன் ஒரு குசு போல காற்றில் கரைய முடியும் என்று ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று,
அங்கு இருந்த அழகியின் போஸ்டரைப் பார்த்து உனக்கு ஏதேனும் தெரியுமா?
என்று கேட்டு,கல்லை எடுத்து அந்த போஸ்டரை அடிக்க ,
அது போஸ்டரைக் கிழித்து உள்ளே சென்று விடுகிறது,
இவர் அரண்டு போய்
அந்த போஸ்டரை கிழித்து ஏறிய,
அங்கே ஒரு ஆள் மட்டுமே நுழையும் ஒரு துளை,
ஆறு அடி கணம் கொண்ட சுவற்றில்,ஆடிப்போகிறார்.
அங்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ரெட் அவர் எப்படி தப்பியிருக்கக்கூடும் என்றுமனக் கண்ணிலேயே காண்கிறார்.
ஐயோ அற்புதம்,
விவரிக்க வார்த்தை போதவில்லை.
என்ன நெஞ்சுரம்.?என்ன விவேகம்,?
பத்தொன்பது வருடம் சுவற்றை சிறிது சிறிதாய் குடைந்திருக்கிறார்,
அன்றாடம் அந்த மண்ணை தன் ஜீன்ஸ் பேண்டின் கால் மடிப்புகளில் கொட்டி அதை வெளியே கொண்டு போய் தள்ளி இருக்கிறார்.
வார்டனின் அறைக்கு சென்று கணக்கெழுதும் போது,
பாஸ் புக்கிற்கு பதில் வேறு ஒரு வெற்று அட்டை
(உரை இட்டது)கணக்கு புத்தகத்திற்கு பதிலாக தான் உபயோகிக்கும் பைபிள்) ,
ஆறு காசோலைகளுக்கு பதிலாக,
வேறு சில காகிதங்கள் என்று.
லாவகமாக வார்டன் அவசரமாக பூட்ட எத்தனிக்கும் போது,
அசல் புத்தகங்களை முதுகு பக்கம் பேன்ட்டில் சொருகி ,
போலி புத்தகங்களை அவர் கண் முன்னே வைப்பது போல பாவனை செய்து..அடடா.?
அதன் பின்னர்,பாலீஷ் போட்ட ஷூவை அணிந்துகொண்டு,
தன் ஷூவை அந்த ஷூ அலமாரியில் வைத்துவிட்டு ,
தன் சிறை கைதி உடைக்குள் கோட் ,சூட்டுகளை அணிந்து கொண்டு
தன் அறைக்கு பூனை போல வந்து தூங்கி,
மழை வரும் போது எழுந்து,
ஆறடி கயிறும் பிளாஸ்டிக் பையும் கொண்டு,
தன் பாஸ் புக்,மற்றும் காசோலைகள்,தான் வடித்த செஸ் போர்டும் ,காய்களும் ,எடுத்துக் கொண்டு காலில் கட்டிக் கொண்டு ,
திறம்பட அந்த சிறு துளைக்குள் ஊர்ந்து.
நான்கு மாடிகள் உயரம் பைப் பிடித்து இறங்கி ,
கீழே போகும் இரண்டடி விட்டம் கொண்ட ஸ்டோன் வார் கக்கூசு பைப்பை இடி இடிக்க காத்திருந்து இடிக்க,
கல்லை கொண்டு பைப்பை உடைக்க அது உடையாமல்.
மூன்றாவது இடிக்கு காத்திருந்து உடைக்க ,
கழிவு நீர் இவர் முகத்தில் கொப்பளிக்கிறது,
பின்னர் அந்த சாக்கடை குழாய்க்குள் இறங்கி மலம் நாற்றம்,சேறு,அருவருப்பு எதை பற்றியும் கவலை படாமல்,
ஒரு மைல் தூரம் ஒரு பெருச்சாளி,கரப்பாம் பூச்சியைப்போல ஊர்ந்து ஆற்றில் கலக்குமிடம் வந்ததும் ஆற்றில் குதித்து ,
மழையில் நனைந்து சுதந்திர தாகம் தீர மழை நீரை குடிக்கிறார்.
சிறை சீருடையை அவிழ்த்து வீசிவிட்டு அகல்கிறார்.
மறுநாள் போலீஸ் தேடும் முன் எல்லா வங்கிகளிலும் சென்று கணக்கை முடித்துக் கொண்டு ,
பணம் சுமார் 370000 டாலர் களை எடுத்துக் கொண்டு ,
ஒரு வங்கியில் ,
ஜெயில் அதிகாரியின் கணக்கு பேரேடு புத்தகத்தை "the portland"என்னும் நாளிதழுக்கு அனுப்பி விட சொல்லி விட்டு அகல,
அவர்கள் உடனே அனுப்ப அவர்கள் அதை தலைப்பு செய்தியாக வெளியிட,
அது "irs"மற்றும் "fbi" வசம் வலுவான குற்றமாக விசாரிக்க சொல்லி அதிகாரிகள் சிறையை நோக்கி புறப்பட்டு வந்து,
சிறை அதிகாரிகளை கைது செய்து,
வார்டனை நோக்கி அவர் அறைக்கு வர.
வார்டன் முன்பே நாழிதழில் வெளியான செய்தியை படித்திருந்த படியால்,தயாராக இருந்தார்.
கைத்துப்பாக்கியை லோடு செய்தார்.
கடைசி ஆசையாக அந்த லாக்கரில் என்ன தான் உள்ளது என பார்க்க திறக்க,
அவர் அந்த லாக்கரில் தான் உபயோகித்த பைபிளில் அந்த ஜாக் ஹம்மேரை புதைத்து பாதுகாத்து வந்திருக்கிறான்.
அட்டையில் இனி இது நீங்கள் உங்கள் தவறுகளை உணர்ந்து கம்பிக்கு பின்னே படிக்க உதவும்,
என்று அவர் எழுதியிருக்க.
தன் வேலை முடிந்ததும் அவர் வார்டனுக்கே கொடுத்து வெறுப்பேற்ற நினைத்திருக்கிறார்.
வார்டனுக்கோஅவமானத்தால். முகம் கருத்தது.
வார்டன் ஒரு நிமிடம் கூட தாமதிக்கவில்லை.
நாற்காலியில் வந்து அமர்ந்தார்.
தான் எடுத்த பெயரை கவுரவத்தை இனி ஒரு போதும் திரும்ப வாங்க முடியாதென்று தெரிந்து கொண்டார்.
போலீஸ் கதவை தட்டஇவரின் பேரை சொல்லி மிரட்ட.
இவர் துப்பாக்கியை தன் தாடைக்கு கீழே அழுத்தி ட்ரிக்கரை அழுத்த மூளை வெடித்து கண்ணாடி சன்னலையும் உடைத்து தோட்டா வெளியேறுகிறது.
ரெட் சொல்லுகிறார்.
துளைத்து வெளியேறியது தோட்டா அல்ல ..
ஆண்டி டூப்ரேன் என்னும் மாமனிதனின் நம்பிக்கை தான்..
பின்னர் ரெட் பத்து வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் விடுதலை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு விரக்தியுடனும் திமிராகவும் உண்மையை உரைக்க ,
அரண்டு போன குழு இவருக்கு விடுதலை அளிக்கிறது.
இவர் மிக மகிழ்ச்சியுடன் சிறையை விட்டு வெளியேறி,
வழக்கமாக சிறை தண்டனை கைதிகள் வேலைக்கு அமர்த்தப்படும் சூபெர் மார்க்கெட்டில் வெளிக்கு சேர,
அனுதினமும் முன்னாள் கைதி என்பதால் அவமானப்படுகிறார்.
தன் சகா தூக்கு மாட்டி செத்துப்போன அறையே தனக்கும் ஒதுக்கப்பட்டிருப்பதை நினைக்கிறார்.
.வெகுண்டு எழுகிறார்.தான் வாழ வேண்டும் என்று ஆசை கொள்கிறார்,
அச்சம் தவிர்த்து எல்லை தாண்டுகிறார்.
(முன்னாள் கைதி எக்காரணம் கொண்டும் எல்லை தாண்டக்கூடாது என்பது சட்டமாம் )
டூப்ரேன் தன்னிடம் சொன்னதும் தான் அவருக்கு செய்த சத்தியமும் நினைவுக்கு வர ஒரு திசை காட்டும் கருவி வாங்குகிறார்.
அவர் சொன்ன அந்த
"பக்ஸ்டன்"என்னும் ஒரு சிற்றூர் சென்று,
வடக்கே செல்ல ஒரு வயல் வர ,
அதில் உள்ளே நடந்து போக ,
தனியாக ஒரு பெரிய மரம் காணப்பட ,
அங்கே பலவித கற்களானால் ஆன ஒரு குட்டி சுவர் இருக்க ,
அங்கே மரத்தினருகே "எரிமலை"கல் ஒன்று தனித்துத் தெரிய ,
பளபளப்பை வைத்து அதை ரெட் உணர,.
அதை தூக்கி பார்த்தால்,
ஒரு தகர பெட்டியும்,அதில் பிளாஸ்டிக் பையில் உள்ளே இவர் ரெட்டுக்கு எழுதிய கடிதமும்,
இருநூறு டாலர் பணமும் இருக்கிறது ,
ஆனந்த கண்ணீருடன் தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொள்ள சுவரில் சாய்ந்து கொண்டு படிக்க,
ஆனந்தம் பீறிடுகிறது.
.அதை எடுத்துக் கொண்டு "zihuantanejo" செல்ல டிக்கேட் எடுத்து பஸ் ஏறி அந்த கடற்க்கரை கிராமம் வருகிறார்.
அங்கு ஒரு மைல் நடந்ததும் டூப்ரேன் தன் உல்லாச படகை நிர்மாணிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து இவர் மகிழ்ச்சியில் குரல் கொடுக்க,
டூப்ரேன் வந்து கட்டி தழுவிக் கொள்கிறார் ..
என்ன ஒரு படம்?
.இதை யாகூ குழு வாழ்வில் நிச்சயம் பார்க்க வேண்டிய நூறு படங்களில் ஒன்றாக குறிப்பிட்டதில் ஆச்சர்யம் இல்லை என்றே தோன்றியது.
அற்புதம்..
இவர்களின் நடிப்புக்கு இணை என்று எதை அளவுகோலாய் காண்பிப்பது?உலகத்தரம்...
இதில் குருதிப்புனலில் வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் உண்டு என்னும் வசனத்தை கேட்டேன்.(சிறை அதிகாரி நார்டன் டூப்ரேனை தேட ஆளை அனுப்பும் போது சொல்லுவார்)
நம்ம கமலகாசன் சுட சூட தூக்கிட்டாருன்னு நினைச்சு விட்டுட்டேன்.

Directed by
Frank Darabont
Produced by
Niki Marvin
Written by
Screenplay:
Frank Darabont
Novella:
Stephen King
Narrated by
Morgan Freeman
James Whitmore
Starring
Tim Robbins
Morgan Freeman
Bob Gunton
William Sadler
Clancy Brown
Gil Bellows
James Whitmore
Music by
Thomas Newman
Cinematography
Roger Deakins
Editing by
Richard Francis-Bruce
Studio
Castle Rock Entertainment
Distributed by
Columbia Pictures
Release date(s)
September 23, 1994
Running time
142 minutes
Country
United States
Language
English























திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இதோ.


நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகுள்
தாழ்மையான விண்ணப்பம் :-
இங்கு முழு படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி தந்திருக்கிறேன் என்று
நினைப்பவர்கள்,நினைப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.


காரணம்:-
முன்பு நான் ஆங்கில படத்தின் உச்சரிப்பு புரியாமல் அதை முழுமையாக புரிந்து ஊன்றி பார்க்க முடியாமல் போனது.அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்னும் சிறு முயற்சி. இதை குறை சொல்லி நான் எடுக்கும் இந்த நல்ல முயற்சியையும் கெடுக்க வேண்டாம்.எல்லாவற்றிர்க்கும் மேல் பாணி என்று ஒன்றிருக்கிறது.
இது என் பாணி.


இது எனக்கு எழுத்து பயிற்சியும் அளிக்கிறது.
imdb தளத்தில் விசிறிகள் ஒரு படத்தில் லயித்தால் அதை பற்றி "trivia" மற்றும்
faq,goofs,synopsis,plot எழுதி அந்த படத்தின் வெற்றிக்கு உதவுவதுண்டு.
அது போல ஒரு சிறு முயற்சி தான் இது.
ஒரு படத்தை விமர்சனம் படித்துவிட்டு போய் யாரும் கட்டாயம் பார்ப்பதில்லை.
நாம் லயித்ததை பிறருக்கு சொல்கிறோம் அவ்வளவே.
நன்றி

மைகேல் க்ளேடன் michael clayton (2007) (15+)

இந்த படம் நான் லீனியர் நேரேடிவ் வகையில்  வந்த ஒரு நல்ல விறுவிறுப்பான க்ரைம் ட்ராமா த்ரில்லர் என்று சொல்லலாம்.ஜார்ஜ் க்ளூனி தன் சீரியஸ் சைட் முகத்தை காண்பித்த படம்.


மைக்கேல் க்ளேட்டன் வல்லவனுக்கு வல்லவன் , 17 வருடங்களாக நகரின் பெரிய சட்ட நிறுவனத்தில் ஃபிக்ஸர் வேலை , எந்த பிரச்சனையையும் சமாளிக்க அரசாங்கம் மற்றும் எல்லா இடங்களிலும் அவனுக்கு நல்ல செல்வாக்கு, சட்டத்தின் அத்தனை மூலை முடுக்குகளும் அவனுக்கு அத்துப்படி, பாசக்காரன்,

சீக்கிரம் உணர்ச்சி வசப்படுபவன், அதை வைத்தே அவன் கம்பனி அவனை நன்கு பயன்படுத்தி காரியம் சாதிக்கிறது, அது அவனுக்கும் தெரியாமல் இல்லை, பார்ட் டைமில் சூதாடி உள்ளதையும் இழக்கிறான், இதனால் அவன் மனைவி மகனுடன் அவனை விட்டு பிரிகிறாள், தன் வேலை இல்லா ஊதாரி சகோதரனுக்காக ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க ,அதிலும் நஷ்டம், விரைவில் ரெஸ்டாரன்ட் ஏலத்திற்கு வருகிறது, மேலும் கடனாளியாகிறான், 


சட்ட நிறுவனத்தை விட்டு வெளியேறும் கனவு 
பலிக்காமலே போக, அவன் முதலாளியிடம் மேலும் 80 ஆயிரம் டாலர் கடன் வாங்கி, ரெஸ்டாரன்ட் கடனை அடைக்கிறான், மேலும் மூன்று வருட ஒப்பந்தம் அவன் சட்ட நிறுவனத்திலேயே நீட்டிப்புக்கு கையெழுத்தாகிறது, தம்பி பாசம் ஆயிற்றே, தன் மகன் சித்தப்பாவை பார்த்து கேலி செய்ய அதையும் கண்டிக்கிறான் , தன் போலிஸ் உயரதிகாரி அண்ணனுக்கு மரியாதை தந்து பணிந்து செல்கிறான், பெரிய குடும்பத்தில் அவ்வப்பொழுது சந்தித்து கொள்கிறார்கள்,


அவன் சட்ட நிறுவனத்தில் நடந்து வரும் பெரிய வழக்கு, திடீரென முடிவுக்கு வருகிறது,
அது ஒரு நஷ்ட ஈடு வழக்கு, ஒரு பூச்சிகொல்லி நிறுவனம், அதனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பனிரெண்டு வருடம் கழித்து, வழக்கு தீர்ப்பு வரும் வேளையில் பாதிக்கப்பட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்த , அந்த வழக்கை நடத்தி வரும் சீஃப் அட்டார்னி ஆர்தர் அந்த கட்சிக்கார நிறுவனத்தின் பூச்சி கொல்லி மருந்தில்,அரசால் தடை செய்யப்பட்ட நச்சுப்பொருள், அதீத விஷத்தன்மை, கலக்கப்படுவதையும், அது சுற்று சூழலை கெடுத்து,மனிதர்களுக்கு புற்று நோய் உண்டாக்கும் காரணி என கண்டுபிடித்து, முக்கிய ஆதாரத்தை திரட்டுகிறார், 


யாரும் எதிர்பாரா வகையில் பூச்சி கொல்லி நிறுவனத்திற்கு எதிராக திரும்புகிறார், பூச்சி மருந்தின் வீரியத்தால் புற்று நோய் கண்டு பெற்றோரை இழந்த  ஒரு இளம் பெண்ணிடம் திடீரென வழக்கு நடக்கயிலேயே சட்டை பேண்டுகளை களைந்து கதறி மன்னிப்பும் கேட்க, அந்த வழக்கில் பெரும் திருப்பம் ஏற்படுகிறது,இந்த செயலுக்காக காவல்துறை அவரை கைது செய்ய,மைக்கேல் சென்று அவரை பெயிலில் எடுத்து மருத்துவமனையில் சேர்க்கிறான்.


ஆர்தர் மருத்துவமனையிலிருந்து யாருக்கும் சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார்.

அவரை பலத்த சந்தேகத்துடன் பூச்சிகொல்லி நிறுவன பெண் உயர் அதிகாரி ஆள் அமர்த்தி பின்தொடர்ந்து உளவு பார்க்கிறார் , ஒரு கட்டத்தில் காரியம் எல்லை மீறிப் போக அவரை அழகாக திட்டம் தீட்டி அவர் ரத்தக் கொதிப்புக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரையின்  மூலப் பொருளை ஆராய்ந்து விஷம் செய்து அதை அவரின் அலமாரியில் வைத்து அவர் ஓவர் டோஸ் உட்கொண்டதாக செட்டப் செய்து கொலையும் செய்கிறார், சட்ட நிறுவனத்தில் நீண்ட நாள் நடந்த வழக்கு ஏறக்குறைய முடிந்து, பூச்சி கொல்லி நிறுவனம், பெரிய தொகையை சட்ட நிறுவனத்துக்கு ஃபீசாக கொடுக்கிறது,இதனால்  இவன் மனதில் சந்தேகம் எழ , தன் இறந்து போன சகாவின் ப்ரதான சாட்சியை  நீறைய தேடல்களுக்குப் பின் கண்டு பிடிக்கிறான், அவன் சகாவின் வீடு புகுந்து தடயம் சேகரித்து, வழக்கின் முக்கிய ஆதாரத்தை கண்டுபிடிக்கிறான், 

இப்போது இவன் தீவிரமாக உளவு பார்க்கப்படுகிறான்.பல வழிகளில் கொல்ல முயன்று முடியாமல்  ,அவனை கொல்ல டைம் பாம் அவன் காரில் வைக்கபடுகிறது, அதை வைத்தவன் ,அதை வைத்து முடிப்பதற்குள், இவன் போக்கர் சூதாட்டம் முடிந்து காருக்கு அருகே வந்து விட , குண்டு வைப்பவன் அரைகுறையாக இவனின் ஜிபிஎஸ் கருவியை முடுக்காமல் விட, இவன் தனக்கு வந்த ஒரு அவசர கேஸ் சம்மந்தமாக சென்று அது முடிந்து ,பாதை மாறி காட்டு வழியில் பயணித்து, அங்கு அவன் இரு குதிரைகளை கண்டு, எதோ உந்துதலால் காரை,விட்டு இறங்கி குதிரை அருகே வியப்புடன் செல்ல, கார் வெடித்து சிதறுகிறது, இவனும் எதிராளியின் திட்டத்தை புரிந்து கொண்டு , தான் இறந்தது போல நாடகமாட , அவன் இளைய &மூத்த சகோதர்களின் உதவியுடன் , 

பூச்சி மருந்து நிறுவனத்தில் பெரிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேர இடைவெளியில் நுழைந்து , பெண் உயர் அதிகாரிக்கு காத்திருந்து, அவள் உள்ளே வருகையில் அவளை ஆதாரத்தை காட்டி பேரம் பேச, அவள் உயிருடன் வந்தவனைப் பார்த்து அதிர்ந்து, பத்து மில்லியன் டாலர் தர சம்மதிக்க, அவளை திடீரென செல் போன் காமிராவால் போட்டோ எடுக்க , அவள் திகைக்க , அவன் அவளுக்கு தான் ரெகார்ட் செய்ததை போட்டு காட்ட , அவள் மயங்கி நிலை குலைந்து கீழே உட்கார, அவன் போலீஸ் உயர் அதிகாரி சகோதரன் உள்ளே வருகிறான், அவனிடம் அந்த ரெகார்டரையும் ,காமிராவையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறான், 


கொலைகார கார்பரட் பெண் தலைமை அதிகாரியை திட்டம் தீட்டி சட்டத்தின் துணையுடன் சந்தி சிரிக்க வைக்கிறான், படு கேஷுவலாக வெளியே வந்து டாக்ஸி ஏறி ஐம்பது டாலர் தந்து, இதற்குண்டான தூரம் போ , எனக்கூறி இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்து, நிம்மதி பெருமூச்சு விடுகிறான், காமிரா முகத்தில் ஃப்ரீஸ் செய்து நிற்கிறது.படம் சர வெடி.கண்டிப்பாக பார்க்கலாம்.

-------------------------------------------------------------------------------------------
இப்படத்தில் கோர்ட் சீன்களே  அதிகம் கிடையாது, ஆனால் நல்ல விறு விறு நடை. படு வேகமாக நகரும் திரைக்கதை, ஜார்ஜ் க்ளூனி,டாம் வில்கின்சன்,மற்றும் டில்டா ஸ்விண்டனின்  அற்புதமான நடிப்பு, உங்களை அப்படியே கட்டிப்போட்டு விடும் . (படம் முழுக்க உரையாடல் இருந்தாலும், காட்சி அமைப்பும் கதா பாத்திரங்களின் நடிப்பும்,உங்களை கவர்ந்திழுக்கும்)
வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு கூர்மை.

ஜார்ஜ் க்ளூனி ஒரு சிறந்த மனித உரிமை ,மற்றும் அமைதி பேச்சுவார்த்தை தூதுவரும் ஆவார்.சமீபத்தில் கூட ஜார்ஜ் க்ளூனி தனது புதிய படத்திற்கான ஷுட்டிங்கை இத்தாலியில் சமீபத்தில் நிலநடுக்கம் நடந்த பகுதியில்  நடத்தினாராம். அந்த  இடத்தில் ஷுட்டிங் நடத்துவதால் அந்த பகுதி மக்களுக்கு சிறிது உற்சாகமும் ஆறுதலும் கிடைக்கும். மேலும் பொருளாதாரமும் உயர வாய்ப்பு ஏற்படும் என க்ளூனி இங்கு ஷுட்டிங் நடத்துவதற்கான காரணத்தை கூறினாராம். இவர் மேற்கொண்ட அமைதிப் பயணங்கள் எண்ணிலடங்கா. 


டாம் வில்கின்சன் ஒரு பழுத்த நடிகர்,இவருக்கு இந்த படத்தில் நடித்ததற்கு ஆஸ்கார் கிடைக்க வேண்டியது கடைசியில் டில்டா ஸ்விண்டன் தட்டிச் சென்றாராம்.
டில்டா ஸ்விண்டன் என்ன?ஒரு கம்பீரமான அழகிய கார்பொரேட் பெண்மணி,ஒரு கார்பொரேட் உயரதிகாரியாகவும்,வில்லியாகவும் கன கச்சிதமாக பொருந்துகிறார்,இதே ஜார்ஜ் க்ளூனியுடன் பர்ன் ஆஃப்டர் ரீடிங் படத்தில் கள்ளக்காதலியாக வந்து விரச காமெடி செய்வார்.
இவருக்கு ஆஸ்கர் கிடைத்தது மிகப் பொருத்தம்.



எழுத்து இயக்கம் டோனி கில்ராய்  ,இயக்குனர்,தயாரிப்பாளர், நடிகர்,கதாசிரியர் .மிகபெரிய அளவில் பல வெற்றிப்படங்களுக்கு திரைக்கதைகள் எழுதியவர்,உதாரணமாக போர்ன் ஐடெண்டிடி சீரீஸ் படங்களை சொல்லலாம்.இந்த படத்தில் கடைசி காட்சியில் டாக்சி ட்ரைவராக வந்திருப்பார்.சமீபத்தில் வந்த டூப்ளிசிட்டி இவரின் படைப்பே.இந்த படத்தில் இவரும் ஆஸ்கரை கோட்டை விட்டவர்.

படத்தின் தயாரிப்பு சிட்னி பொல்லாக் இவர் சட்ட நிறுவனத்தின் முதலாளியாக மார்டி பாக் என்னும் பாத்திரம் செய்திருந்தார். நல்ல நடிகர்.


இசை ஜேம்ஸ் ந்யூடன் ஹாவர்ட்,மனிதர் கலக்கி விட்டார்,மொத்தம் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் 13 வகை போட்டிருக்கிறார்.இசை மூலம் கிட்டும் புதிரும்,ஸஸ்பென்ஸும் ப்ரமாதம்.

ஒளிப்பதிவு ராபர்ட் எல்ஸ்விட் விறுவிறுபாக நகரும் காட்சிகளை சுட்டுத்தள்ளிய விதமும்,காட்சிஅமைப்பும்,காமிரா கோணங்களும்,வண்ணத்த் தெரிவும் அபார ரசனையை பறை சாற்றும்.



------------------------------------------------------------------------------------------------------------------------------






Directed by
Tony Gilroy
Produced by
Sydney Pollack
Steve Samuels
Jennifer Fox
Kerry Orent
Written by
Tony Gilroy
Starring
George Clooney
Tom Wilkinson
Tilda Swinton
Sydney Pollack
Music by
James Newton Howard
Cinematography
Robert Elswit
Editing by
John Gilroy
Distributed by
Warner Bros. (USA)
Pathé (UK)
Release date(s)
October 5, 2007 (limited) October 12, 2007 (wide) September 28, 2007 (U.K.)
Running time
119 min.
Country
United States
United Kingdom
Language
English
Budget
$25,000,000
Gross revenue
$92,000,000

























திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இதோ.

நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகுள்
தாழ்மையான விண்ணப்பம் :-
இங்கு முழு படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி தந்திருக்கிறேன் என்று
நினைப்பவர்கள்,நினைப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.


காரணம்:-
முன்பு நான் ஆங்கில படத்தின் உச்சரிப்பு புரியாமல் அதை முழுமையாக புரிந்து ஊன்றி பார்க்க முடியாமல் போனது.அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்னும் சிறு முயற்சி. இதை குறை சொல்லி நான் எடுக்கும் இந்த நல்ல முயற்சியையும் கெடுக்க வேண்டாம்.எல்லாவற்றிர்க்கும் மேல் பாணி என்று ஒன்றிருக்கிறது.
இது என் பாணி.


இது எனக்கு எழுத்து பயிற்சியும் அளிக்கிறது.
imdb தளத்தில் விசிறிகள் ஒரு படத்தில் லயித்தால் அதை பற்றி "trivia" மற்றும்
faq,goofs,synopsis,plot எழுதி அந்த படத்தின் வெற்றிக்கு உதவுவதுண்டு.
அது போல ஒரு சிறு முயற்சி தான் இது.
ஒரு படத்தை விமர்சனம் படித்துவிட்டு போய் யாரும் கட்டாயம் பார்ப்பதில்லை.
நாம் லயித்ததை பிறருக்கு சொல்கிறோம் அவ்வளவே.
நன்றி

தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ?



கிளி போல பொண்டாட்டி இருக்க குரங்கு போல வைப்பாட்டி யைத் தேடும் பட்டியலில் தற்போது நல்ல நடிகர் என்ற பெயரை எடுத்து அதை காற்றுக்குமிழி போல உடைத்து கெடுத்தும் கொண்ட பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜா வும் இணைந்து கொண்டார்.தன் வீட்டு வேலைக்காரப் பெண்ணை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் எய்ட்ஸ் பிரச்சார விழிப்புணர்வு படங்கள்,லைப் இன் மெட்ரோ ,
மகேஷ் பட்டின் கேங்ஸ்டர், அய்ஷ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷைனி அகுஜா. திருமணம் ஆனவர். மும்பை ஓஷிவாரா பகுதியில் இவரது வீட்டில் 18 வயது இளம் பெண் வேலை செய்து வந்தார்.

வீட்டில் தனியாக இருந்த வேலைக்கார பெண்ணை நடிகர் ஷைனி கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் பெண்ணை கற்பழித்தது நடிகர் ஷைனிதான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை நடிகர் ஷைனி அகுஜா கைது செய்யப்பட்டார். மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஷைனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நடிகர் ஒருவர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தால் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.ஒரு வார கால தொடர் போலீஸ் விசாரணைக்குப் பிறகு
தன் வீட்டில் வேலைசெய்த பெண்ணை கற்பழித்ததை நடிகர் அகுஜா ஒப்புக் கொண்டுள்ளார். முதலில் கற்பழிப்பு குற்றச்சாட்டை மறுத்த அவர், மருத்துவபரிசோதனையில் உண்மை தெரியவந்ததை அடுத்து ஒப்புக் கொண்டிருக்கிறார். "கேங்ஸ்டர்' உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்தவர் நடிகர் ஷைனி அகுஜா. வீட்டில் வேலை செய்து வந்த இளம்பெண்ணை கற்பழித்தாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து, அகுஜாவின் வீட்டை போலீசார் "சீல்' வைத்தனர். மேலும், கற்பழிப்பு தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க, சிறப்பு தடயவியல் குழுவினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இது குறித்து, துணை கமிஷனர் நிகேத் கவுசிக் கூறுகையில், "மருத்துவப் பரிசோதனையில் அகுஜா, இளம்பெண்ணை கற்பழித்தது உறுதி செய்யப் பட்டுள்ளது. அதற்கான டாக்டர் சர்டிபிகேட் அதை தெளிவாக்கி இருக்கிறது' என்றார். கற்பழிப்பு குற்றத்தை முதலில் மறுத்து வந்த நடிகர் அகுஜா, பின்னர் அதை ஒப்புக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகர்களுக்கு தன்னடக்கம் மட்டும் போதாது தனி மனித ஒழுக்கமும் நிச்சயம் வேண்டும்.அவர் மட்டும் ஆசையை அடக்கி மனைவியை மட்டுமோ அல்லது வேறு திரைத் தோழிகளையோ,அல்லது இதற்கென்றே இருக்கும் எஸ்கார்ட் மங்கைகளையோ புணர்ந்திருந்தால் இந்த பிரச்சனை இருந்திருக்குமா?
ஏழை பெண் தானே ?இவளால் என்ன செய்து விட முடியும் ?என்ற பணத்திமிர் ,குடி வெறி.இப்படி ஆக்கி விட்டிருக்கிறது.
இதனால் தான் சொல்கிறேன்..மனிதனை மிருகமாய் மாற்றும் மதுவையும் இன்னபிற போதை வஸ்துக்களையும் ஒருவன் மறக்க வேண்டும். இவர் வாழும் சினிமா உலகிலேயே முன் மாதிரியாய் இருக்கும் நடிகர் சிவகுமாரை போல ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.இவரை தயவு செய்து பெயிலில் விட்டு அந்த பெண்ணுக்கு அநீதி கிடைக்கச் செய்யாதீர்கள் அரச எந்திரங்களே....
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)