சுஹாசினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுஹாசினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆடவல்லு மீகு ஜோஹார்லு | 1985 | கே.பாலசந்தர்| கடலோர கவிதைகள் | ஆராதனா





















இயக்குனர் கே.பாலசந்தரின் "ஆடவல்லு மீகு ஜோஹார்லு "(பெண்களே உங்களுக்கு வந்தனம்) தெலுங்கு திரைப்படம் 1981 ஆம் ஆண்டு வெளியானது.

அந்த ஊரின் முரட்டு படகோட்டி கிருஷ்ணம் ராஜு,தன் படகில் ஒற்றைக்கு பயணித்த டீச்சர் ஜெயசுதா பாடிய தத்துவப் பாடலில் மனம் கனிகிறான், காசுக்காக எதுவும் செய்யலாம் என்ற அளவுக்கு மனம் கல்லானவன் அவன்,

இவனது பால்யத்தில் கூத்துக்காரியான தாய் ஜெயமாலினி மனம் தடுமாறி ஜமீன்தார் சிரஞ்சீவியுடன் ஓரிரவு கழித்துவிட்டு தங்க மோதிரம் சன்மானம் பெற்று வந்தவள் தனக்கு இனிப்பூட்டுகிறாள் , அதை தின்னும் போதே கத்தியால் குத்தி கொலை செய்தவன், கொலைப்பழியை இவனது கூத்தாடி அப்பா கிருஷ்ண சைதன்யா ஏற்று சிறை சென்றுள்ளார்,இவன் பாறையில் முளைத்த மரமாக வளர்ந்திருக்கிறான்.

அப்படிப்பட்டவன் டீச்சர் ஜெயசுதா பாடலில்  மனம் கனிந்து அவருக்கு தான் பிடித்த பெரிய மீனை பரிசளிக்கிறான், 

இந்த காட்சி போலவே மிக அழகான காட்சி கடலோரக் கவிதைகள் (1986) படத்தில் வரும், சின்னப்பதாஸ் டீச்சருக்கு குருகாணிக்கையாக ஏதாவது தந்து கொண்டிருப்பவன், அன்று டீச்சரை கடற்கரை மணலில் நிறுத்தி விட்டு திரைகடலில் மூழ்கி பெரிய மீன் ஒன்றை பிடித்தவன் கலங்கி நிற்கும் டீச்சர் பின்னால் வெளிப்பட்டு வந்து முன்னால் எழும்பி அந்த பெரிய மீனைப் பரிசளிப்பான், 

நடிகர் சத்யராஜ் சின்னப்பதாஸாகவே மாறியிருப்பார், அத்தனை உயர ஆகிருதி  மணலில் எடுக்கும் விறுவிறு ஓட்டம் , அந்த பெரிய மீனை (அருவருப்பின்றி) பற்றி தூக்கி வரும் கம்பீரம்,அந்த கள்ளமில்லாத சிரிப்பு எல்லாம் அத்தனை அழகாக இருக்கும்,இவருக்கு மார்பில் முடி அதிகம் என்பதால் கை வைத்த பனியன் காஸ்ட்யூம்,  எனக்கு ஜென்னிஃபர் டீச்சர் என்றால் ரேகா மட்டுமே.

ஆராதனா படத்தில் சிரஞ்சீவி தான் சின்னப்பதாஸ் , அவர் நல்ல நடிகர், ஆனால் சின்னப்பதாஸ் என்றால் சத்யராஜ் தான், சிரஞ்சீவி மணலில் ஓடுகையில் அந்த கம்பீரம், படபடப்பு,வெள்ளந்தி இல்லை,
மீனை ஏந்துவதிலும் தயக்கம்.
 பெரிய மீனை கையில் ஏந்துகையில்  லாவகமும் இல்லை, ஆராதனா பார்த்தால் இதை ஒருவர் உணரலாம்.

#ஆடவல்லு_மீக்கு_ஜோஹார்லு,#கடலோரக்_கவிதைகள்,#ஆராதனா,#சத்யராஜ்,#ரேகா,#கிருஷ்ணம்_ராஜு,#ஜெயசுதா,#மீன்,#சிரஞ்சீவி,#சுஹாசினி,#பரிசு,#கே_பாலசந்தர்,#பாரதிராஜா,#BS_லோகநாத்,#B_கண்ணன்,#thanksgiving,#gratitude

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com

ஆதாமிண்ட வாரியெல்லு |1983 | (ஆதாமின் விலா எலும்பு ) | Adam's Rib

 ஆதாமிண்ட வாரியெல்லு |1983 |  (ஆதாமின் விலா எலும்பு ) | Adam's Rib








இத்திரைப்படத்தில் பெயரெடுத்த  சிவில் கான்ட்ராக்டர் மாமச்சன் (பரத்கோபி) ஊர் மேய்ந்து விட்டு நடுநிசிக்கு வீடு வந்து அலங்கார மேஜை முன்னர் அமர்ந்து அரிதாரம் கலைக்கும் மனைவி அலீஸ்ஸை (ஸ்ரீவித்யா) கண்டிக்கும் காட்சி இது,


மாமச்சன் : நாளைக் காலையில் வந்திருந்தால் போதுமே? 

மிகவும் எல்லை மீறுகிறாய், ஊரார் கண்டபடி பேச ஆரம்பித்துவிட்டனர், நான் வெளியே இறங்கி மானத்தோடு நடக்க வேண்டும், 


அலீஸ்: ஓ, இப்போது மாமச்சன் முதலாளி பெரிய மானஸ்தன் ஆகிவிட்டீர்கள் இல்லையா?


மாமச்சன் : அலீஸ்ஸே, பிள்ளைகள் பெரியவர்களாகின்றனர் அதையாவது நினைவில் கொள்.


அலீஸ்: பிள்ளைகளா? அவர்கள் உங்கள் பிள்ளைகள் தான் என்று உறுதியாக அறிவீர்களா?


மாமச்சன் : வார்த்தையை அடக்கிப் பேசு 


அலீஸ்: புதிய கான்ட்ராக்ட் கிடைக்கவேண்டியும், பில் பாஸ் ஆக்க வேண்டியும் என்னை மலம்புழா , பீச்சி ,கோவளம் என்று பல இடங்களுக்கு அழைத்துப் போனீர்களே,  ராமகிருஷ்ணன், விகே நாயர் ,கொச்சு வர்க்கி, தாணுப் பிள்ளை,வைரமூர்த்தி  இதில் யாருடையதாகவும் இருக்கலாமே பிள்ளைகள்,


பேசக்கூடாது, எதுவும் பேசக்கூடாது,போடா!!!


மாமச்சனுக்கு பாவமன்னிப்பே கிடையாது அவர் உறைந்து போய் நிற்கிறார்.


இயக்குனர்  K.G.ஜார்ஜ் இக்காட்சியில் எத்தனை வீர்யமுள்ள வசனங்கள் வைத்திருக்கிறார் பாருங்கள் , இந்த இருபது வருட  flashback ற்கு எந்த காட்சிவடிவமும் இல்லை, வெறும் எட்டு வரி வசனஙகள்

அலீஸ் கணவனிடம் இருந்து எதிர்கொண்ட உளவியல் வன்முறையை நமக்கு கடத்தி விடுகிறது , 


இயக்குனர் K.G.ஜார்ஜ் அவர்களின் இரகள் திரைப்படத்திலும் ஸ்ரீவித்யாவின் கதாபாத்திரப் பெயர் அலீஸ் தான்.


ஆதாமின் விலா எலும்பில் இருந்து இறைவன் பெண்ணைப் படைத்தான் என்று கூறி இச்சமூகம் பெண்ணை சுரண்டித்தின்று கொண்டே தான் இருக்கிறது அதில் யாரும் விதிவிலக்கல்ல, 


இப்படத்தில் வரும் அலீஸ் (ஸ்ரீவித்யா) , வாசந்தி (சுஹாசினி) , அம்மணி (சூர்யா) மூன்று பெண்கள் கதாபாத்திரங்களும் பெண்கள் மீதான ஆடவரின் சுரண்டலை, உளவியல் மற்றும் உடலியல் வன்முறைகளைச் 

சித்தரிக்கிறது, 


அலீஸ் தன் கணவனால் வஞ்சிக்கப்பட்டவள் இப்போது கணவனை வஞ்சித்து வருகிறாள், பகலில் குடிக்கிறாள், மாதர் சங்கம் செல்கிறேன் என்று ஆர்கிடெக்ட் மம்மூட்டி அலுவலகத்தில் சென்று தினமும் அவரை சம்போகித்து வருகிறாள்.


அலீஸ் வீட்டு வேலைக்காரி அம்மணி முதலாளி மாமச்சனுக்கு நடுநிசியில் முந்தி விரிக்கிறாள், "ஓத்தாருக்கு ஒருநாள் இன்பம் பொறுத்தார்க்குப் பத்து மாதம் தொல்லை" என்ற சொலவடை மெய்யாகி ,அவள் கர்ப்பமாகிறாள் அப்போது மாமச்சன் தன் ஜீப் டிரைவர் / அடியாளை அழைத்து அவன் மேற்பார்வை பார்க்கும் அணைக்கட்டு கட்டுமான தொழிலாளர் குடியிருப்பில் தங்க வைக்கிறார், பிள்ளைப்பேறின் போது அவன் இவளை அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு போகிறான், குழந்தை அப்பன் பெயர் தெரியாமல் பிறந்ததால், அம்மணி அதை அனாதை இல்லத்தில் விடுகிறாள், இவளை இரவில் இரு ஆடவர் துரத்த, காப்பாற்றிய போலீசார் அம்மணியை அபலைகள் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர்., அங்கு லேசாக மனநிலை பிழர்ந்த அம்மணி ஒருநாள் அபலைக் கூட்டத்துடன் தப்புகிறாள்.


வாசந்தி திருவனந்தபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில்  எழுத்தர், தாய்மாமன் மகனை மணந்தவள், மாமனார் இறந்து போன பிறகு மாமியார் கொடுமை சகிக்கவில்லை,மகனுக்கு தாதி, சமையல்காரி, வேலைக்காரி, சம்பாதிக்கும் எந்திரம், பாலியல் இச்சை தீர்க்கும் எந்திரம்  என பல பல பணிகள், 


கணவன் பல வேலைகள் மாறியவன், கடைசியாக சேர்ந்த தினப்பத்திரிக்கை பணியையும் பிடிக்காமல் விட்டு வந்தவன், தினமும் பகலில் அப்படி தூங்குகிறான், உணவு உண்ண அழைக்கும் நேரத்தில்  குடித்துவிட்டு வர மாதக்கடைசியிலும்  இருபத்தைந்து ரூபாய் கேட்கிறான், 


நடுநிசியில் வாசந்தியை  எழுப்பி கட்டாய உறவு கொள்கிறான், இவர்கள் நால்வர் வயிறு போற்ற வேலைக்குச் செல்லும் வாசந்தியை சந்தேகித்து அடிக்கிறான், 


இவளுக்கு முதலில் மறதி நோய் பீடிக்கிறது,வேலைக்கு விடுப்பெடுக்கிறாள்,  magical realism போல சுவற்றில் சட்டமிட்ட படத்தில் இருந்து இறங்கி வந்த வாசந்தியின் மாமனார் இவளுக்குள் புகுந்து மாமியாரை புருஷனை கண்டிக்கிறார், புத்தி சொல்கிறார்.


கணவன் வேணு நாகவல்லிக்கு எதைப்பற்றியும் கவலையில்லை, மனைவியை அடித்து உதைக்கிறார், இறுதியில் வாசந்தி மனம் பிழர்ந்த நிலையில் அரசு மனநோய் மருத்துவமனையில் கணவனால் கொண்டுபோய் சேர்க்கப்படுகிறாள்.


அலீஸ்ஸின் பதின்ம வயது மகள் விரும்பியவனுடன் பள்ளியில் இருந்து ஒளித்தோடிப் போகிறாள், பெரிய இடத்து தொடர்புகள் பலவும் கொண்ட மாமச்சன் தன் எம் எல் ஏ நண்பர் திலகன் உதவியால் அன்று இரவே ஒரு லாட்ஜில் அறை எடுத்த மகளை புஷ்பம் போல மீட்டுக் கொண்டு வருகிறார்.


அலீஸ் கணவனை பிரியக் கேட்கிறாள், ஆனால் மாமச்சன் மனைவிக்கு விவாகரத்து தருவதில்லை, பள்ளி பாதிரியாரை அலீஸ் வீட்டிற்கு மத்தியஸ்தம் செய்யக் கூட்டி வருகிறார்,பாதிரியார் மணமுறிவு மதத்தின் படியும் பள்ளியின் திருமண சட்டத்தின் படியும் எதிரானது என்கிறார், 


 அலீஸின் அண்ணன் அண்ணி அம்மா அப்பா யாரும் இவளை பிறந்த வீட்டில் வாழ விடுவதில்லை, வேறு போக்கிடமின்றி அவனுடன் வீடு வருகிறாள் அலீஸ், தன் காதலன் மம்மூட்டியிடம் தஞ்சம் கேட்டு அவராலும் புறக்கணிக்கப்படுகிறாள்.


இரவு எப்போதும் உண்ணும் தூக்கமாத்திரைகளை டாக்டர் சீட்டு கொண்டு பல கடைகள் ஏறி அதிக அளவு வாங்கியவள், அதை விழுங்கி வீட்டில் உலாத்துகிறாள், காதலனுக்கு போன் செய்ய ரிசீவர் எடுத்து பிடிமானம் இன்றி விட்டுவிடுகிறாள், வாசலுக்கு வந்து அப்படியே சரிந்து விடுகிறாள், அவளின் இரு வளர்ப்பு நாய்களும் குரைத்து மனிதர்களை அழைத்தபடி இருக்கின்றன.


இந்த மூன்று பெண்களும்  வாழ்நாள் முழுதும் பல்வேறு வகையான ஆணாதிக்கத்திற்கும் சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள், அவர்கள் எவ்வாறு அதிலிருந்து விடுபட முயற்சித்து தோற்கிறார்கள் என்பது தான் இப்படம் சொல்லும் பாடம் , இது போல பொட்டில் அடித்தது போல இங்கே தமிழில் படம் செய்ய முடியாது.


ஆதாமிண்டே வாரியெல்லு அனைவரும் பாருங்கள், the great Indian kitchen ,பிரியாணி படங்கள் மலையாளத்தில்  வருவதற்கு பாதை அமைத்துத் தந்த படம் என்றால் மிகை இல்லை.இப்படத்தின் ஒளிப்பதிவு ராமசந்திரபாபு, இசை M.B.சீனிவாசன் , இப்படத்தின் மூலக்கதை கள்ளிக்காடு ராமசந்திரன், இப்படத்திற்கு சிறந்த திரைப்படத்துக்கான கேரள அரசு விருதும் , சிறந்த திரைக்கதைக்கு இயக்குனர் K.G. ஜோர்ஜுக்கு கேரள அரசு விருதும் கிடைத்தது,சிறந்த பாடலுக்கான கேரள அரசு விருது கவிஞர் onv குருப் அவர்களுக்கும் கிடைத்தது.


கண்ணீராற்றில் முங்கி என்ற ஒரு அருமையான பாடல் படத்தில் இடம் பெறுகிறது, கவிஞர் onv குருப் இயற்றி, பாடகி செல்மா ஜோர்ஜ் பாடியது.

https://youtu.be/RV7ovNWii-g


#KG_ஜார்ஜ், #KG_ஜோர்ஜ்,#ஸ்ரீவித்யா,#பரத்கோபி,#அலைஸ்,#மாமச்சன்,#சிவில்_கான்ட்ராக்டர்

அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் பங்களிப்பு


கமல்ஹாசன் அவள் ஒரு தொடர்கதையின் ஐந்து மறு ஆக்கங்களில் நான்கில் பங்களித்திருக்கிறார்.

1.தமிழில் அவள் ஒரு தொடர்கதை 1974 மாடி வீட்டு விகடகவி
2.தெலுங்கில் அந்துலேனிகதா 1976 நல்லுள்ளம் கொண்ட அலுவலக முதலாளி
3.வங்காளத்தில் கொபிதா 1977 மாடி வீட்டு விகடகவி
4.ஹிந்தியில் ஜீவன் தாரா 1982 கால்ஷீட் கெடுபிடியால ஒருகதாபாத்திரமும் செய்ய இயல வில்லை
5.கன்னடத்தில் பெங்கியாலி ஹரலிட ஹூவு 1983 பேருந்து நடத்துனர் கதாபாத்திரம்.

பெங்கியாலி ஹரலிட ஹூவு [Benkiyalli Aralida Hoovu] [1983]அவள் ஒரு தொடர்கதை [1974] வெளியாகி சுமார் 9 வருடம் கழித்து கன்னடத்தில் கவிதா என்னும் பிரதான கதாபாத்திரத்தில் நடிகை சுஹாசினியை வைத்து கே.பாலசந்தர் இயக்கிய படம், 

இதில் தமிழில் திடீர் கண்ணையா செய்த 23 பி பேருந்து நடத்துனர் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்தார். கமல்ஹாசனும் சுஹாசினியும் சிற்றப்பா, மகள் உறவு முறை என்று நமக்குத் தெரியும், இந்திய சினிமாவில் இப்படத்தில் தான் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் கவிதா [சுஜாதா] நடத்துனரிடம் ஒரு ஜெமினி ப்ளீஸ் என்பார்,கன்னடத்தில் பெங்களூருவின் 14 ஆம் நம்பர் பேருந்தில் பயணிக்கும் கவிதா [சுஹாசினி] ,பேருந்து நடத்துனரிடம் ஒரு விதான் சவுதா [Vidhana Soudha ] ப்ளீஸ்!!! என்று கண்டிப்புடன் கேட்பார்,

அதிகப்பிரசங்கி நடத்துனர் அத்துடன் தன் எல்லையை உணர்ந்தவர் பேச்சை நிறுத்திவிட்டு டிக்கட் கொடுத்து விட்டு நகர்வார்.

கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை நாயகி கவிதா கதாபாத்திரத்தின் பரினாமங்கள்



கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை நாயகி கவிதா கதாபாத்திரத்தின் வெவேறு காலகட்டம் மற்றும் வெவேறு மொழியில் மறு ஆக்கம் செய்கையில் அடைந்த பரினாமங்கள் இங்கே

1.தமிழில் அவள் ஒரு தொடர்கதை(1974) நடிகை சுஜாதா

2.தெலுங்கில் அந்துலேனிகதா(1976) நடிகை ஜெயப்ப்ரதா

3.வங்காளத்தில் கொபிதா [Kabita ](1977) நடிகை மாலா சின்ஹா

4.ஹிந்தியில் ஜீவன் தாரா[1982] நடிகை ரேகா

5.கன்னடத்தில் பெங்கியாலி ஹரலிட ஹூவு[1983] நடிகை சுஹாசினி

இதில் சுஜாதா தவிர நான்கு நடிகைகளுமே உயிரோடு உள்ளனர்,மாலா சின்ஹா 90களுடன் திரைவாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டார்,மாலா சின்ஹா இந்தி மற்றும் வங்காள சினிமாவின் தேர்ந்த நிரூபனமான நடிகை,இந்த எல்லா ஹீரோயின்களை விடவும் அவர் தான் வயதிலும் மூத்தவர் இப்போது 78 வயதாகிறது.

1971 ஆம் ஆண்டில்  ஹிந்தியில் வெளியான சஞ்சோக் கே.பாலசந்தரின் இருகோடுகள் படத்தின் மறு ஆக்கம்,அப்படத்தில்  மாலா சின்ஹா தான் சவுகார் ஜானகி செய்த முக்கிய பாத்திரம் செய்தவர், அதை பாலசந்தர் இயக்க வில்லை, மறைந்த விகடன் குழும சேர்மன் எஸ்.எஸ்.பாலன் அவர்கள்  இயக்கியுள்ளார்,

கே.விஸ்வநாத் இயக்கத்தில் ஜீவனஜோதி 1975 தெலுங்கு வெற்றிப் படம்,அதை அவரே சஞ்சோக் என்று ஹிந்தியில் நடிகர் அமிதாப் பச்சனையும் ஆஸ்தான நடிகை ஜெயப்ரதாவுடன் வைத்து 1985 ஆம் ஆண்டு  ரீமேக் செய்தார்.அதனால் மிகவும் பெயர்க்குழப்பம் விளைந்தது

இதனால் தான் நான் களாஸிக்குகளின் பெயரை மறு உபயோகம் செய்யக்கூடாது என்கிறேன், அது ஆவணக்காப்பு செய்கையில் முதலில் வந்த படத்தை மறக்கடித்துவிடும். அது எத்தனையோ திரைப்படங்களுக்கு நிகழ்ந்திருக்கிறது.


நடிகை சுஜாதா
நடிகை ஜெயப்ரதா

நடிகை மாலா சின்ஹா

நடிகை ரேகா

நடிகை சுஹாசினி

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (157) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)