ப்ளாக் ஃப்ரைடே ब्लैक फ्राईडे [ஹிந்தி][Black Friday] [2004]


ப்ளாக் ஃப்ரைடே படம் இன்று தான் சப்டைட்டிலோடு மறுமுறை பார்த்தேன், அட்டகாசமான ஒரு டாகுமெண்டரி+இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர், எழுத்தாளர் எஸ்.ஹூசைன் சைதி எழுதிய ப்ளாக் ஃப்ரைடே என்ற புத்தகத்தை தழுவி மிட் டே பத்திரிகை தயாரித்து வெளியிட்டுள்ளனர். தேவ்.டி கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர் புகழ்- அனுராக் காஷ்யப் இயக்கியிருக்கிறார். எந்தவிதமான காம்ப்ரமைசோ, அரசியல் கட்சிகளுக்கு சொம்போ இல்லாமல் எடுக்கப்பட்ட படம். மிகுந்த நெஞ்சுரத்துடன் கருப்பு வெள்ளி நிகழ மூல காரணிகளான அரசியல்வாதிகள் அத்வானி,பால்தாக்கரே போன்றோர் பெயர்களை படத்தின் அநேக காட்சிகளில் ம்யூட் செய்யாமல் சொன்ன ஒரே படம், புகழ் பெற்ற உலக சினிமாவான ’The Battle of Algiers" க்கு நிகரான ஓர் இந்திய சினிமா ஆனால் இப்படம் வெளியான போது எத்தனை பேர் பார்த்திருப்பார்?என்னும் கேள்வி தொக்கி நிற்கிறது.

இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கி அதிகாரபூர்வமாக வெளியான முதல் படம்,அவரின் முந்தைய வெளிவராத படமான பாஞ்ச் தந்த அனுபவங்களில் இருந்து பாடம் கற்காமல் மீண்டும் இத்தனை வீர்யமான கதைக்களனில் இறங்கியதற்கே நன்றி சொல்ல வேண்டும். படம் இயக்குகையில் வந்த எத்தகைய மிரட்டலுக்கும் தன்னை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை. படத்தை குவெண்டின் படங்களில் வருவது போல அழகாக அத்யாயமாக ஒவ்வொரு கட்டத்தையும் பிரித்து வழங்கியிருக்கிறார், நாம் இர்ரிவர்சிபிள் படம் பார்த்திருப்போம்,

 அதே போலவே சம்பவம் நடக்கும் காலம் துவங்கி அதன் பின் விளைவுகள், விசாரணைகள், பின்னர் அதன் ஊற்றுக்கண் என்று மிக அற்புதமாக நான் லினியரில் சொன்னப்படம்.படத்தின் ஒளிப்பதிவு நம் ஊர் நட்ராஜ் சுப்ரமணியம்,மிக அற்புதமான ஒளிப்பதிவு.இதை திரையரங்கில் பார்க்க கொடுத்து வைக்கவில்லை என நினைக்க வைத்தது,அந்த சேஸிங் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் மேட்ச் செய்து இழைத்த இடங்கள்,மிகவும் தரமாக இருந்தது,பல காட்சிகள் வெறும் கண்களுக்கும்,முகத்துக்கும்,கால்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தன.

மும்பாய்,பம்பாய் என்று அழைக்கப்பட்டபோது நடந்த மனித குலத்தின் மிக அசிங்கமான செயல் கருப்பு வெள்ளி-12 மார்ச் 1993. அதற்கு 4 நாட்களுக்கு முன்பே டைகர் மேமன் என்னும் அயோக்கியனால் உருவாக்கப்பட்ட போராளிகளில்  ஒருவன் போலீசிடம் மாட்டிக் கொள்வதில் இருந்து படம் துவங்குகிறது, இன்னும் 3 நாட்களில் மும்பையின் பல முக்கிய இடங்களில் ஆர்டிஎக்ஸ் வகை டைம் பாம்கள் வெடிக்கப் போகின்றன என்ற தகவலை போலீசார் கேட்காமலேயே கக்குகிறான். அவனை மும்பை போலீசார் சீரியஸாக எடுத்துக்கொள்ளவேயில்லை,எள்ளி நகையாடி மேலும் அடித்து துவைக்கின்றனர்.

கருப்பு வெள்ளி-12 மார்ச் 1993,அன்றைய தினம் மதியம் 1:30முதல் 3:40 மணியிடையே ஸாவேரி பஸார், ப்ளாசா சினிமா,சென்சுரி பஸார்,கதா பஸார், ஸீராக் ஹோட்டல்,சாஹர் ஏர்போர்ட்,ஏர் இந்தியா பில்டிங்,ஜூஹு செண்டார் ஹோட்டல்,ஒர்லி,பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்,பாஸ்போர்ட் அலுவலகம் , என 11 இடங்களில், ரிசர்ச் டெவலப்டு எக்ஸ்ப்ளோசிவ் என அழைக்கப்படும் RDX டைம் பாம்கள் மேற்சொன்ன 11 இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஸ்கூட்டர்களில் இருந்து பயங்கர சத்தம் மற்றும் தீஜுவாலையுடன்  வெடித்தன, மாஹிம் மீனவர் காலனி குடியிருப்பு பகுதியில் மட்டும் ஸ்பெஷலாக 10க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த கையெறி குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் தீக்கிறையாக்கப்பட்டன, ஆக மொத்தம் உயிரிழப்பு அரசின் கணக்குப்படி 257, படுகாயமடைந்து கைகால்கள் இழந்தோர் எண்ணிக்கை சுமார் 713.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 காங்கிரஸ் -நர்சிம்மராவ் ஆட்சிக்காலத்தில், அயோத்தியில் 400 வருடங்களுக்கும் மேலாய் இருந்த பாபர் மசூதி சுமார் 6முதல் 8மாத கரசேவகர்களின் தீவிர திட்டத்தினாலும், அத்வானி போன்ற அரசியல்வாதிகளின் தூண்டுதலாலும் தரைமட்டமானது,நாம் வாழும் காலத்தில் நிகழ்ந்த மாபெரும் தலைகுனிவு அது, அதன் பின்னர்  இந்து முஸ்லிம் மதக்கலவரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறியது, அதில் மும்பையில் 1992 டிசம்பரில் நடந்த முஸ்லீம்களின் வன்முறையில் சுமார் 275 பேர் பலியாயினர்,

அதற்கு பதில் அளிக்கும் வண்ணம் பால்தாக்கரேவின் சிவசேனா கட்டவிழ்த்த கலவரமும் மனித குலத்திற்கே வெட்கக்கேடான செயல்,அதில் சிவசேனா நடத்திய கோர தாக்குதலில் மாஹிம் பகுதியைசேர்ந்த சுமார் 575பேர் பலியாயினர்,நூற்றுக்கும் அதிகமான பெண்கள் தெருக்களுக்கு இழுத்து வந்து வன்புணர்வு செய்யப்பட்டனர். போலீசாரும் சிவசேனாவுடன் கைகோர்த்து கலவரத்தில் முஸ்லீம் இளைஞர்களை சுட்டுக்கொன்றனர். சரத் பவார் தலைமையிலான மஹாராஷ்டிர அரசு இப்படுகொலைகளை கண்டுகொள்ளவில்லை,

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் ஐ எஸ் ஐ ரத்தத்துக்கு ரத்தம் என்னும் பழிவாங்கலுக்கு திட்டமிடுகிறது,மாஹிமில் நடந்த கலவரத்தில் அங்கே கள்ளக்கடத்தல், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வந்த டைகர் மேமனின்[பவன் மல்ஹோத்ரா] அலுவலகம் தீக்கிறையாக்கப்படுகிறது, அடிப்படையிலேயே டைகர் மேமன் மிகவும் மூர்க்கன்.தன் கார் கண்ணாடியை கிரிக்கட் ஆடி உடைத்தான் என்ற காரணத்துக்காக சிறுவனையே கதிகலங்க அடிக்கும் ஒரு மேனியாக்,

ஒரே இரவில் அவனின் அலுவலகம் தீக்கிரையான கோபத்தில் ஐஎஸ் ஐ மற்றும் மத சார்புடைய வன்முறை இயக்கங்களின் கட்டமைப்பு குழுவுடன் ஐக்கியமாகிறான்,பழிக்கு பழி வாங்க மிகுந்த பொருட்செலவு ஆகும் என்று அங்கே வைத்து மதிப்பீடு செய்யப்படுகிறது,அதற்கு யார் யார் ஸ்பான்சர் என்று தெரிவு செய்கிறான்,டைகர் மேமனுக்கு துபாயில் நிறைய கள்ளக்கடத்தல், மற்றும் ஏற்றுமதி,இறக்குமதி வியாபாரங்களும்,அலுவலகங்களும்,நிறைய குடியிருப்பு வீடுகளும் உள்ளன,அங்கே ஒரு பெரும்புள்ளி,

மத சார்புடைய வன்முறை இயக்கங்களின் கட்டமைப்பில் முதலில் அத்வானியையும்,பால்தாக்கரேவையும் டைம்பாம் வைத்து சிதறடித்துக்கொல்லவே திட்டம் தீட்டப்படுகிறது,ஆனால் டைகர் மேமன் அதை மட்டும் விரும்பவில்லை, இந்த அரசியல்வாதிகள் கொல்லப்படுதல் மிகவும் ஆபத்தானது, அது அவர்களுக்கு தேசத்தியாகிகள் என்னும் பட்டத்தை பெற்றுத் தந்துவிடும், அது கூடாது, இசுலாமியர்களின் உயிர்களுக்காகவும், பறிபோன சகோதரிகளின் கற்புக்காகவும் ஒவ்வொரு இந்துவும் தண்டிக்கப்படவேண்டும், மும்பை பற்றி எரிய வேண்டும் என்கிறான், அதற்கு மும்பையின் மிகப்பெரிய கடத்தல்காரனான தாவூத் இப்ராஹிமுடன் மத சார்புடைய வன்முறை இயக்கங்களின் கட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறது,

இதற்கு நான் ஏன் உதவ வேண்டும் என இருமாந்திருந்தவருக்கு உடனடி அதிர்ச்சியாக ஐஎஸ் ஐ அமைப்பால் இந்திய பாகிஸ்தான் கடல் எல்லையில் வைத்து தாவூத் இப்ராஹீமின் கடத்தல் வெள்ளிக்கட்டிகள் திருடப்படுகிறது , அவன் ஆட்களும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர், இத் தகவலை அவனுக்கு தொலைபேசியிலும் தெரிவிக்கின்றனர்,அதே நேரத்தில் அவனுக்கு ஒரு குரியரும் வருகின்றது, அதை பிரித்துப் பார்க்கிறான் தாவூத், அதில் மாஹிம் பகுதியில் மதக்கலவரத்தில் வன்புணர்ந்து கொல்லப்பட்ட இசுலாமிய சகோதரிகளின் உடைந்த வளையல் துண்டுகள்,ஒரு வெற்றிலை பெட்டி போன்ற ஒன்றில் அடைக்கப்பட்டு இருக்கின்றன, கூடவே ஒரு கடிதத்தில் இதற்கு பழிவாங்க நீ என்ன துரும்பை கிள்ளிப்போடப்போகிறாய்?!!! என்று எழுதியிருக்கிறது.

இப்போது தாவூத் இப்ரஹீமின் நேரடி தலையீட்டால் டைகர் மேமனுக்கு மும்பையின் திறக்காத கதவுகள் கூட மரியாதையோடு திறக்கின்றன, இப்போது கருப்பு சோப்பு என்ற பேரில் ஆர்டிஎக்ஸ் கட்டிகள் டன் கணக்காக மும்பையின் ஜனசந்தடி மிக்க ஒரு கட்டிட நிறுவனத்துக்கு சொந்தமான கோடவுனிலும், மற்றொரு குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிலும் கருவாட்டுக்கூடைகளுக்கிடையே அடுக்கப்படுகின்றன, இந்த கடத்தல் இறக்குமதியில் போலீசாருக்கும், சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் பெரும்பணம் கைமாறுகிறது, தாவூத் இப்ராஷீமை அன்னதாதாவாக கருதி சலாம் போடும் அதிகாரிகள் மும்பையில் மிக அதிகம்.

இப்போது டைகர் மேமன் துபாயில் வேலை வாங்கித்தருவதாக நெருக்கமான கூட்டாளிகளிடம் சொல்லி நம்பகமான மாஹிம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி முஸ்லிம் இளைஞர்களை தான் நடத்தும் இரவுப் பார்ட்டி ஒன்றிற்கு அழைக்கிறான்.அங்கே கூடும் 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களிடம் தனித்தனியாக நேர்முக மூளைச்சலவை செய்கிறான் டைகர் மேமன்,கூடவே மதரீதியான வாசகங்களை மூளைச்சலவைக்கு தூவி மெருகேற்றுகிறான், இப்போது அனைவரையும் அறைக்குள் கூட்டி முழக்கமிடுகிறான், மும்பைக்கு நாம் யார் என்று காட்டவேண்டும் என்கிறான்,

இரண்டாம் குடிமக்களாக நடத்தப்படும் நம்மை எந்த இந்துவும் இனி கண்ணைப்பார்த்து பேச பயப்படவேண்டும், நம் பெயரைக்கேட்டாலே வேட்டியில் மூத்திரம் இருக்க வேண்டும் என்கிறான், இந்த ஜிஹாத்தைப் பற்றி வீட்டார் உட்பட, யாரிடமும் மூச்சு விடக்கூடாது ,அப்படி வாயை விட்டால் முதலில் அவன் குடும்பத்தார் கொல்லப்படுவர்,பின்னர் துரோகிகள் கொல்லப்படுவர் என்கிறான், அனைவரிடமும் சத்தியமும் வாங்குகிறான், அடுத்த ஓரிரு  வாரங்களிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிகாதிகள் அனைவரின் பாஸ்போர்டையும் பெற்றுக் கொண்டு துபாய்க்குள் அழைக்கிறான் டைகர் மேமன்.
அங்கேயிருந்து பாகிஸ்தானுக்குள் எந்தவிதமான விசா கெடுபிடிகள் இல்லாமலே நுழையும் ஜிகாதிகளுக்கு மேலும் மூளைச்சலவை செய்யப்படுகிறது, ஓட்டம்,துப்பாக்கி சுடுதல்,ஆர்டிஎக்ஸ் கட்டியுடன் டெட்டனேட்டரை இணைத்தல்,டைமரை உயிரூட்டுதல் போன்ற இன்றியமையாத பயிற்சிகள் அளிக்கப்பட்டு மீண்டும் துபாய் அழைக்கப்பட்டு பின்னர் மும்பைக்குள் கூட்டி வரப்படுகின்றனர்,ஜிகாதிகளின் பாஸ்போர்டை யாருக்கும் திரும்பத் தரவில்லை டைகர் மேமன்,யாரும் அறியா வண்ணம் அவற்றை தீக்கிறையாக்குகிறான்,

இப்போது துரித கதியில் மாஹிம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெகு அருகாமையில் இருக்கும்  ஒரு கட்டிடத்தின் பாதுகாப்பான பேஸ்மெண்டில் வைத்து ஜிகாத்திகளின் தீவிரமான உழைப்பில் 13க்கும் மேற்பட்ட ஆர்டிஎக்ஸ் டைம் பாம்கள் இரவு பகலாக செய்யப்படுகின்றன,அவற்றை திருடிக்கொண்டு வரப்பட்ட மாருதி கார்,வேன்கள்,ஸ்கூட்டர்களில் நிறுவுகின்றனர்,

அவற்றை தலா நான்கு பேர்களாக பிரித்து மும்பையின் மிகுந்த ஜனநெரிசல் பகுதிகளான ,ஸாவேரி பஸார்,ப்ளாசா சினிமா,சென்சுரி பஸார்,கதா பஸார்,ஸீராக் ஹோட்டல்,சாஹர் ஏர்போர்ட்,ஏர் இந்தியா பில்டிங்,ஜூஹு செண்டார் ஹோட்டல்,ஒர்லி,பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்,பாஸ்போர்ட் அலுவலகம் என சந்தேகத்துக்கு இடமின்றி நிறுத்திவிடுகின்றனர்.அது ஒன்றன் பின் ஒன்றாக மதியம் 1-30 மணி முதல் 3-40 மணி வரை வெடிக்க ஆரம்பிக்கின்றன,அதில் 12ஆவதாக மந்த்ராலயம் கட்டிடத்தை தகர்க்க கொண்டு போன சிகப்பு மாருதி கார் டைகர் மேமனின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டது,இந்த காரை டைகர் மேமன் பயன் படுத்தாமல் விட்டிருந்தால் மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமான டைகர் மேமனையும்,அவன் ஜிகாதிக்களையும்,தாவூத்தையும் போலீசாரால் நெருங்கியே இருக்க முடியாது என்பது இவ்வழக்கை விசாரித்த போலீசாரின் பலமான கணிப்பு,

அந்த மாருதி வேனில் நிறுவப்பட்ட 50கிலோ ஆர்டிஎக்ஸ் அன்று வெடித்திருந்தால் குறைந்தது 200 பேர் பலியாகியிருக்கக்கூடும்,ஜிகாதிகள் நால்வரில் ஒருவன் ,காரை வெடிக்கவேண்டி பார்க் செய்ய மந்த்ராலயம் செல்லும் வழியிலேயே டெட்டனேட்டரை சோதிக்க அந்த பாரமானி,வெள்ளை சிகப்பு என ஏறுமுகமாயிருக்கிறது, இவர்களில் டெட்டனேட்டரில் திறம்பட தேர்ந்த ஒரு எலக்ட்ரீஷியன் மிகவும் பயந்தவன், காரை நிறுத்து ,டெட்டனேட்டரில் பழுது, நமக்கு ஆபத்து என்று கத்துகிறான், அந்நேரம் பார்த்து இவர்களின் மற்றொரு குழு பாஸ்போர்ட் அலுவலகத்தில் நிறுத்திவிட்டு வந்த காரில் இருந்த டைம் பாம் வெடித்து சிதற,ஒரு குண்டு வெடிப்பு எப்படி இருக்கும்,என்பதை நிஜமாக கண்ணுறுகின்றனர்,
அருகே ஒரு வழிப்போக்கனின் பாதம் மட்டும் பெயர்ந்து வந்து விழுகிறது, சில்லிடுகிறது,உலகே ஒரு கனம் நின்றிருக்க,அந்த நால்வரில் ஒருவன் மட்டும் கத்துகிறான், போதும்,ஆணியே புடுங்க வேண்டாம் போதும், வண்டியை ஓரம் கட்டு டாக்ஸி பிடி,நாம் வெளியேறுவோம் என்று வெளியேறுகின்றனர். அதே நேரத்தில் மற்றொரு காரில் செல்லும் நால்வர் மாஹிம் மீனவர்காலனி குடியிருப்பு பகுதியில் இறங்குகின்றனர், அங்கே 10க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த கையெறி குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் தீக்கிறையாக்குகின்றனர், இது டைகர் மேமனின் அலுவலகம் எரிக்கப்பட காரணமாக இருந்த மாஹிம்வாசிகளுக்கு டைகர் மேமனின் அன்புப்பரிசு என்று நாம் அறிய வருகிறோம்.

மறுநாள் அந்த சிகப்பு மாருதி வேன் அனாதையாக நிற்பதை உணர்ந்த ஒரு முதியவர் போலீசாருக்கு சொல்ல,பாம் ஸ்குவாடுகள் ஆர்டிஎக்ஸை கைப்பற்றுகின்றனர். அங்கே தான் அல்லா நல்லவர் வசம் தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை போலீசாருக்கு துளிர்விடுகிறது, எப்பேற்பட்ட ஒரு க்ளூ அது? இதை போலீஸ் அதிகாரி ராகேஷ் மரியா [கேகே மேனன்] பாதுஷா கான் என்னும் விசாரணை கைதி இவரிடம் தங்கள் ஜிகாத் வெற்றி பெற்றது குறித்து பெருமையுடன் பேசுகையில் பதிலடியாகக் கொடுப்பார், அல்லா ஜிகாத்தை எப்போதும் விரும்பியதில்லை, தனி நபர் விரோதத்துக்காக ஒட்டு மொத்த மதத்தையே அழிக்க நினைப்பவருக்கு அல்லா துணையிருப்பதில்லை, அதனால் தான் அவர் அந்த சிகப்பு மாருதி வேனை வெடிக்காமல் செய்துவிட்டார், என்று உரைக்கும் இடம் மிக அருமையான ஒன்று.

குண்டு வெடிப்புகளுக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே டைகர் மேமன் குடும்பத்தாருடன் துபாய்க்கு சென்றுவிடுகிறான், அங்கிருந்த படியே ஜிகாதிகள் ஒவ்வொருவரையும் அடுத்தடுத்து இயக்குகிறான், ஒவ்வொரு ஜிகாதியையும் முதலில் ராம்பூர், ராஜஸ்தானின் டோங், அங்கிருந்து ஜெய்பூர், அங்கிருந்து கொல்கத்தா என்று போனிலேயே கட்டளையிட்டு இடம் மாற்றுகிறான், ஒவ்வொருவரும் சேர்ந்து தங்காமல் பிரிந்து தங்க கட்டளையிடுகிறான், அதில் போலீசார் எப்படி ஒவ்வொருவரையும் சுற்றி வளைத்தனர் என்று நமக்கு காட்ட உதாரணமாக பாதுஷா கான் [ஆதித்ய ஸ்ரீவத்சவா] என்பவனின் பின்னால் மட்டும் நாம் பயணிக்கிறோம்,

அவனுடனே அவன் கிராமமான ராம்பூர்,ராஜஸ்தானின் டோங், ஜெய்பூர், கொல்கத்தா என்று நாமும் உடன் அலைகிறோம்,ஜெய்பூரில் வைத்து சகாக்களை சந்திக்கும் அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்சியாக கிடைக்கிறது, ஜிகாதிகளுக்கு துபாயில் வேலை என்பது கனவு ,ஏமாற்று வேலை என்பது தெரிகிறது,அடுத்ததாக பங்கெடுத்த ஜிகாதிகள் ஒவ்வொருவருக்கும் வெறும் 10ஆயிரம் கூலியாக தரச்சொல்லி டைகர் மேமன் சொன்னதும் தெரிகிறது, அனாதை போல அலைகிறான், ஒவ்வொரு ஊருக்கும் போகும் போதும் இவனும் அவன் கூட்டாளியும் டைகர் மேமனுக்கு அழைக்கின்றனர், இரவோடு இரவாக இவனது கூட்டாளி இவனிடமிருக்கும் பணத்தில் பாதியை எடுத்துக்கொண்டு வேறிடம் சென்று விடுகிறான், பின்னர் கொல்கத்தாவில் சென்று முதலில் ஒரு லாட்ஜில் தங்கியவன்,பணம் கரைந்த நிலையில் வேறொரு மலிந்த லாட்ஜில் முன் பின் தெரியாத ஐவருடன் தங்குகிறான்,அப்படி ஒருநாள் போலீசாரிடம் வசமாக மாட்டுகிறான்.

போலீசார் விசாரணையின்போது  போலீசார் மிகவும் மிருகத்தனமாக நடந்து கொள்கின்றனர், மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்புகள் டிசிபி ராகேஷ் மரியாவை எள்ளளவும் அசைத்துவிடவில்லை, போலீசார் இப்படி 24 மணிநேரமும் எந்திரமாக உழைக்க வித்திட்ட அந்த விசாரணை கைதிகளை அடியோடு வெறுக்கிறார், அதில் நல்லவன் கெட்டவன், முஸ்லீம் இந்து என எதுவுமே பார்ப்பதில்லை, விசாரணைக் கைதிகளை விசாரிக்கையில் பலசமயம் அவர்களின் வீட்டாருமே பார்வையாளர்களாக இடம் பெற்றிருக்கின்றனர், அதில் வீட்டு பெண்டிர் பலரும் போலீசாரின் பாலியல் ரீதியான துன்புருத்துதல்களுக்கு ஆளாகின்றனர்,அங்கே பெண்களின் மார்புகளை தடவுதல்,ஆடை உரித்தல், குடும்பத்தையே கேவலப்படுத்தும் மிக அசிங்கமான வசவுகள் என ஏகப்பட்ட வக்கிரங்களுக்கு விசாரணைக் கைதிகளின் குடும்பத்தார் உள்ளாகின்றனர்,

அதில் ஒரு விசாரனை கைதியாக ராஜ்குமார் குரானா என்பவர் போலீசாரால் லாக் அப்பில் வைத்து மிகக் கொடூரமாக விசாரிக்கப்படுகிறார், அவர்  ஸ்டமக் என்னும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர், அவருடனான விசாரணையின் போது அவரின் மனைவி மகள்களிடம் போலீசார், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்கின்றனர், பெயிலில் வீட்டுக்கு திரும்பிய அவர் வீட்டாரையும் சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்து கொள்கிறார். போலிசாரின் நான்காம் தரமான விசாரணை எத்தனை கொடூரமாயிருந்தது என்று இங்கே ஒருவர் மன தைரியம் இருப்பின் பொறுமையாகப் படிக்கலாம்.

இச்சம்பவம் மும்பை போலீசாருக்கு மிகுந்த அவப்பெயரை உண்டாக்குகிறது, பின்னர் இந்த வழக்கு விசாரணையை சடுதியில் சிபிஐ  ஏற்று விசாரிக்கின்றது, அதில் மொத்தம் 122 பேர்களைத் தவிர ஆயுதங்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஊழல் அரசு அதிகாரிகள் சுமார் 60 பேர்களின் பெயர்களும் சேர்க்கப்படுகிறது, 13 ஆண்டுகள் வழக்கு விசாரனை நடந்து 122 விசாரணைக் கைதிகளில் 100க்கும் மேற்பட்டோர் தண்டிக்கப்படுகின்றனர், 29க்கும் மேற்பட்டோர் இன்னமும் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர், என்று எண்ட் க்ரெடிட் கார்ட் போடுகையில் சொல்கின்றனர். கடைசியாக டைகர் மேமனின் தம்பி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்து சரணடைகின்றான். அங்கே அவர்கள் குடும்பம் பாகிஸ்தானில் இரண்டாம் தர குடிமக்களாக வசிப்பதாகச் சொல்கிறான். அவனது பேட்டியும், பாகிஸ்தான் தூதுவரின் பேட்டியும் அப்படியே காட்டப் படுகின்றன.படத்தில் 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உண்டு,அதில் டைகர் மேமனாக தோன்றிய பவன் மல்ஹோத்ராவின் நடிப்பை ஒருவர் மறக்கவே முடியாது,பாலிவுட்டின் அண்டர்ரேட்டட் நடிகர், இவரின்Salim Langde Pe Mat Ro படம் தமிழில் கமல்ஹாசன் நடித்து வெளியான சத்யா கதாபாத்திரத்தை ,ஹிந்தியில் மிக அழகாக செய்திருப்பார்,பாலிவுட்டின் சோதனை முயற்சி சினிமாக்களில் இவரை நாம் பார்க்க முடியும்,

கண்ணுக்கு கண் என்னும் சித்தாந்தம் உலகையே குருடாக்கிவிடும் ["An eye for an eye will make the whole world blind." ] என்னும் காந்தியின் வாசகத்துடன் படம் முடிகிறது.அதை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் இனி இது போல் அவலங்கள் நிகழாமல் தடுக்கமுடியும்

இதே போல நாம் வாழும் காலத்திலேயே நிகழ்ந்த  துக்கவரலாற்று சம்பவமான  26 நவம்பர் 2008 மும்பை தீவிரவாதத் தாக்குதலை வெளிச்சம் போட்டு காட்டிய ராம் கோபால் வர்மாவின் The Attacks of 26-11 என்னும் படமும் ஒருவர்  நிச்சயம் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்த வரை தேவ்-டி, கேங்ஸ் ஆஃப் வாசேபூரில் கிடைத்த புகழும் பெருமையும் அனுராக்கிற்கு 2007 வருடமே இப்படத்திற்கு கிடைத்திருக்க வேண்டும் என்பேன், அத்தனை நெஞ்சுரமான படம். படத்தை சப்டைட்டில் இல்லாமல் பார்ப்பது தூக்கம் வரவழைக்கும், ஒரு இழவும் புரியாது, இவன் யார்? அவன் யார்? என்று குழப்பும்,சப் டைட்டிலுடன் பார்த்தால் முக்கியமான படத்தை பார்க்கிறோம்  என்ற எண்ணம் ஆட்கொள்வதை ஒருவர் உணரலாம்.
"An eye for an eye will make the whole world blind."

- See more at: http://www.merinews.com/article/iblack-fridayi-avant-garde-rarity/124251.shtml#sthash.TIqwzmdR.dpuf

.
படத்தின் முக்கிய காட்சியின் காணொளி யூட்யூபில் இருந்து:-
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)