
நம் நாட்டில் முதியவர் இருவர் காதலித்தாலோ, கைப்பிடித்து நடந்தாலோ, அல்லது தனிமையில் தங்கள் அறைக் கதவை தாழிட்டுக் கொண்டாலோ கிழங்கள் அடிக்கும் கூத்தைப்பார் என குடும்பத்தாரே ஏசும் அவலம் இருக்கிறது. அது எவ்வளவு கிழ்தரம் என்று நினைத்திருப்போமா? நமக்கு கூடிக்குலவ தனியறை எவ்வளவு முக்கியமோ? அதே போன்று அவர்களுக்கும் தனியறை முக்கியமே, எத்தனையோ 50களைக் கடந்த மனைவிகள் வயதான கணவனிடம் பிள்ளைங்க வளர்ந்தாச்சு,விவரம் தெரிஞ்சாச்சு, வயசாச்சு,அதான் எனக்கு நாளே வர்ரதில்லையே, இன்னும் என்ன ”இது “ வேண்டியிருக்கு? என்று தவிர்க்கும் நிலை நம் நாட்டில் இயல்பான ஒன்று. உடம்புக்கு தான் முதுமையே தவிர உள்ளத்துக்கு அல்ல , அதை நினைவில் கொண்டு செயல்பட்டால் என்றும் 16 தான்.இதை உச்சந்தலையில் அடித்து சொன்ன படம், இந்த உற்சாகம் தரும் படம் ஒவ்வொரு மகனும்,மகளும், வயதான தம்பதியரும் வாழ்நாளில் காணவேண்டிய ஒன்று.பார்த்தவர்கள் முதுமையை/முதிவர்களை அலட்சியப்படுத்த மாட்டார்கள். துச்சமாய் நினைத்து ஒதுக்க மாட்டார்கள், காதலுக்கு கண் மட்டும் இல்லை, வயதும் கூட இல்லை தான்.உண்மையில் மிகவும் கொண்டாட வேண்டிய படம் இது
என் நண்பர்களில் பலர் தம் வயதான தாய் தந்தையரை பிரித்து விடுகின்றனர்
எப்படி?
1.அம்மா இது அனுவுக்கு 7ஆம் மாசம் நீ இங்கே நியூஜெர்சி வந்துவிடு,ஆறு மாசம் தானே,அப்பா சமாளிச்சுக்குவார்,
2.பல நண்பர்கள் தாயை மகன் வீட்டில் 3 மாதம் மும்பையிலும்,தந்தையை மகள் வீட்டில் பெங்களூரில் 3 மாதம் என்றும் தங்களுக்குள் ஷெட்யூல் போட்டுக்கொண்டு பந்தாடுகின்றனர். கூப்பிடுவது தான் கூப்பிடுகின்றனர், பணமும்,விசாவும்,டிக்கெட்டும் செலவானாலும் போகிறது என்று இருவரையும் கூப்பிடலாமே? பேருந்தில், ரயிலில் அலைக்கழிக்காமல் விமானத்தில் அனுப்பலாமே? யோசிப்பார்களா? வயதானவர்களும் குழந்தைதான், அவர்களுக்கே அதிக அரவணைப்பு தேவை என உணர்வார்களா?
=================
How long would you wait for love?
உன் காதலிக்காக(காதலனுக்காக) எவ்வளவு நாள் காத்திருப்பாய்?
இது தான் படத்தின் திரி,டேக் லைன்.
இதில் நாயகன் ஃப்லோரெண்டினோ அரிசோ காத்திருந்தது 57 வருடங்கள். உங்கள் பதின்ம வயது முதல் காதலை உங்களால் மறக்க முடியுமா?!!!
போரும், காலரா நோயும் எண்ணற்ற மக்களை பலிகொண்ட 1800களின் பிற்பாதிகளில் ஸ்பெயினிடமிருந்து விடுதலையான கொலம்பியா நாட்டில் துவங்குகிறது படம்.
இதில் நாயகன் தபால் காரன் - ஃப்லோரெண்டினோ குமரனாய் இருந்த போது நாயகி ஃபெர்மினாவைப் [ஜியோவ்ன்னா] பார்த்து தன் காதலை கடிதமாய் எழுதி பரிமாறிக் கொண்டு, இருவரும் திருமணம் செய்ய எண்ணுகையில் அவளின் கோவேறு கழுதை வியாபாரியான செல்வந்த தந்தை,அவளை வேறு ஊருக்கு இடம் மாற்றி,மூளைச்சலவை செய்து,சிலகாலம் கழித்து வரவழித்தவர்,அவளை வேறொரு மருத்துவருக்கு மணம் முடித்து வைத்த பின்னரும், ஃப்லோரொண்டினோ [ஜேவியர் பர்டம்] அவள் மீது மையலுற்றிருக்கிறார். மாற்றான் மனை என்றும் பாராமல் கடிதங்களாய்,கவிதைகளாய் எழுதித்தள்ளுகிறார். ஒன்றுக்கும் பதிலில்லை. ஃபெர்மினாவோ கணவனுடன் தேன்நிலவுக்கு ஒரு வருடம் பாரீஸ் போகிறாள். புதிய மண வாழ்க்கைக்கே தன்னை அற்பணித்துக்கொண்டாள், ஃப்லோரெண்டினாவின் கடிதங்களை நிராகரிக்கிறாள்.
திருமணமே செய்யாமல் அவள் நினைவாய் காதல்தோல்வியில் கற்புடன் இருந்தவர், இவளின் அம்மா தன் சொந்தமாய் கப்பல் வைத்திருக்கும் செலவந்த சகோதரனிடம்

இனி தான் ஃப்லோரெண்டினோவின் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்:-
போரில் கணவனை இழந்த கைம்பெண்ணை இவரின் அம்மாவே ஃப்லோரெண்டினோவின் காதல் தோல்வியை மறக்க இவரது அறையில் தங்கவைத்து கூட்டித்தர-2ஆம் பெண்ணுடனும் காமம் சுவைதாயிற்று.ஆனால் அப்பெண்ணோ இறந்த கணவனையே நினைத்து இவரை கூடுகிறாள்.

இப்போது 20ஆம் நூற்றாண்டு பிறக்கிறது,கார் வாங்குகிறார்,நகரெங்கும் மின் சார விளக்குகள் வருகின்றன,

ஃப்லோரெண்டினோ,தன் காதலி திருமணம் செய்து கொண்டால் என்ன? பிள்ளைகள் பெற்றுக்கொண்டால் என்ன?அவள் கணவன் சாவதற்கு இலவு காத்த கிளியாக காத்திருந்தவர், ஃபெர்மினோவின் கணவர் ஜுவேனல் [பெஞ்சமின் ப்ராட்] மரத்தில் செல்லக் கிளி பிடிக்க ஏறியவர் தவறி விழுந்து இறக்கிறார். அவர் இறந்த அன்றே ஃபெர்மினாவின் முன் ஃப்லோரெண்டினோ போய் நிற்கிறார்.மீண்டும் தன் ப்ரொபோசலை துவங்குகிறார். முன்பு காதலின் உச்சகட்ட பித்தநிலையில் இருந்தவர் , இப்போது நீண்ட காலம் பக்குவப்பட்டதால் ஃபெர்மினாவிடம் அவளை அடிக்கடி வந்து பார்க்க அனுமதி கேட்கிறார். எறும்பு ஊற தான் கல்லும் தேயுமே.
- அந்த ஃபெர்மினா என்னும் கல் மனம் கனிந்ததா?,
- ஃப்லோரெண்டினோ காதல் நிறைவேறியதா?போன்ற கேள்விகளுக்கு
டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
=============0000==============
=============0000==============
=============0000==============
ஜேவியர் பர்டம் என் மனம் கவர்ந்த நடிகர், இவரின் விக்கி க்ரிஸ்டினா பார்சிலோனாவை ரொம்ப தயக்கத்துடன் போன வருடம் பார்த்தேன் தயக்கத்தின் காரணம்:-என் உள் மனதில் கொடூர வில்லனாய் வாழும் நோ கண்ட்ரி ஃபார் ஒல்டு மென் -ஜேவியரை எப்படி காதல் கதையின் நாயகனாய் காண்பது என்பதே!!ஜேவியர் பர்டெம் கோய்ன் சகோதரர்களுக்கு ஆஸ்கர் பெற்றுத்தந்த நோ கண்ட்ரி ஃபார் ஓல்டு மென் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றவர். இதே விருதை அவரது புதிய மனைவி பெனலோப் குரூஸும் பெற்றிருக்கிறார். விருதுகளை குவிப்பதில் பெனலோப் குரூஸ், ஜாவியர் பர்டெம் இவர்கள்தான் சிறந்த நட்சத்திர ஜோடி.
ஆனால் மனிதர் அந்த படத்திலும் அதகளம் செய்திருந்தார். இந்த படத்திலும் ஃப்லோரெண்டினோவாகவே அவதாரமெடுத்திருந்தார். இவரை வெவ்வேறு வயது தோற்றத்தில் பார்க்கையில் ஹேராம் பட கமல்ஹாசனின் 10க்கும் மேற்பட்ட தோற்றங்கள் தான் மனதுக்குள் தோன்றி மறைந்தன.என்ன ரசனை நம்மவருக்கு, ஸ்பானியர்கள் இதை சிந்திக்கும் 10 வருடம் முன்பே ஹேராமை உலகத்தரமாய் சிந்தித்திருக்கிறாரே?
1800 களின் கலைப் படைப்புகள் படத்தில் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. அப்போதைய சிற்பங்கள், ஓவியங்கள்,கலங்கரை விளக்கங்கள், தந்தி உறைகள்,மிக அழகிய குதிரை வண்டிகள்,இசைக்கோவைகள் என கலை ஆங்காங்கே ஆரவாரம் செய்துகொண்டே இருக்கிறது. முதல் காட்சியான சர்ச்சில் சாவுமணி அடிக்கும் போது ஃப்லோரொண்டின்னோ தன் 20வயது புதிய கல்லூரிப்பெண் காதலியுடன் ஹம்மாக்கில் கொஞ்சி குலவுகையில் மேலே உள்ள 1900 களின் சீலிங் ஃபேன்களும்,மர லூவர் சன்னலும், வீட்டின் உள் அலங்காரம் முதலே படத்தில் கலையின் ஆக்கிரமிப்பு தொடங்குகிறது.எங்கும் கலைமயம்.
குறிப்பாக தென் அமெரிக்க /ஸ்பானிய படங்களின் சாயலிலேயே அமைந்த மஞ்சள் சேஃபியா வண்ண ஒளிப்பதிவும், ஸ்பானிய மூங்கில் இசைக் கருவிகளும் மனதில் ரொம்ப நேரம் விட்டு அகலாமல் மாய்மாலம் செய்கின்றன. உடை அலங்காரம் பற்றி ஒரு வரியில் சொல்லக்கூடாது, ப்ரேவோ!!!!! ஃபெண்டாஸ்டிக், அதுவும் ஃப்லோரெண்டீனோவின் ஒப்பனை, ரம்மியம், அவரின் கண்ணாடி ஃப்ரேம்கள் ஒன்றே இதற்கு சாட்சி, இவர்களின் ரசனைக்கு.
ஆர்ப்பரிக்கும் ஆறும்,அதில் பயணிக்கும் சரக்கு கப்பலும் ,அலற வைக்கும் காலரா நோயும், கொலம்பிய கிராமம், எங்கும் காணமுடியாத அரிய கலைப்பொருட்கள், பசுமை போர்த்திய மலை வாசஸ்தலம் என்று இயக்குனர் மைக் ந்யூவெல் ஒரு கலக்கு கலக்குகிறார். காதலையும் காலரா நோயையும் ஒப்பிட்டு இந்த அற்புதமான படைப்பை தந்த படக்குழுவையே பாராட்டத் தோன்றுகிறது. நாவலை படமாக்க ஒரு பக்குவம் வேண்டும், அது இப்படத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
படத்தில் என்னை மிகவும் பாதித்த வசனம்:-
தன் 72 வயது காதிலியிடம் ,மீண்டும் காதலைச் சொல்கையில் பேசுவது.
Florentino Ariza: Please allow me to wipe the slate clean. Age has no reality except in the physical world. The essence of a human being is resistant to the passage of time. Our inner lives are eternal, which is to say that our spirits remain as youthful and vigorous as when we were in full bloom. Think of love as a state of grace, not the means to anything, but the alpha and omega. An end in itself.
1800 களின் கலைப் படைப்புகள் படத்தில் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. அப்போதைய சிற்பங்கள், ஓவியங்கள்,கலங்கரை விளக்கங்கள், தந்தி உறைகள்,மிக அழகிய குதிரை வண்டிகள்,இசைக்கோவைகள் என கலை ஆங்காங்கே ஆரவாரம் செய்துகொண்டே இருக்கிறது. முதல் காட்சியான சர்ச்சில் சாவுமணி அடிக்கும் போது ஃப்லோரொண்டின்னோ தன் 20வயது புதிய கல்லூரிப்பெண் காதலியுடன் ஹம்மாக்கில் கொஞ்சி குலவுகையில் மேலே உள்ள 1900 களின் சீலிங் ஃபேன்களும்,மர லூவர் சன்னலும், வீட்டின் உள் அலங்காரம் முதலே படத்தில் கலையின் ஆக்கிரமிப்பு தொடங்குகிறது.எங்கும் கலைமயம்.
குறிப்பாக தென் அமெரிக்க /ஸ்பானிய படங்களின் சாயலிலேயே அமைந்த மஞ்சள் சேஃபியா வண்ண ஒளிப்பதிவும், ஸ்பானிய மூங்கில் இசைக் கருவிகளும் மனதில் ரொம்ப நேரம் விட்டு அகலாமல் மாய்மாலம் செய்கின்றன. உடை அலங்காரம் பற்றி ஒரு வரியில் சொல்லக்கூடாது, ப்ரேவோ!!!!! ஃபெண்டாஸ்டிக், அதுவும் ஃப்லோரெண்டீனோவின் ஒப்பனை, ரம்மியம், அவரின் கண்ணாடி ஃப்ரேம்கள் ஒன்றே இதற்கு சாட்சி, இவர்களின் ரசனைக்கு.
ஆர்ப்பரிக்கும் ஆறும்,அதில் பயணிக்கும் சரக்கு கப்பலும் ,அலற வைக்கும் காலரா நோயும், கொலம்பிய கிராமம், எங்கும் காணமுடியாத அரிய கலைப்பொருட்கள், பசுமை போர்த்திய மலை வாசஸ்தலம் என்று இயக்குனர் மைக் ந்யூவெல் ஒரு கலக்கு கலக்குகிறார். காதலையும் காலரா நோயையும் ஒப்பிட்டு இந்த அற்புதமான படைப்பை தந்த படக்குழுவையே பாராட்டத் தோன்றுகிறது. நாவலை படமாக்க ஒரு பக்குவம் வேண்டும், அது இப்படத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
படத்தில் என்னை மிகவும் பாதித்த வசனம்:-
தன் 72 வயது காதிலியிடம் ,மீண்டும் காதலைச் சொல்கையில் பேசுவது.
Florentino Ariza: Please allow me to wipe the slate clean. Age has no reality except in the physical world. The essence of a human being is resistant to the passage of time. Our inner lives are eternal, which is to say that our spirits remain as youthful and vigorous as when we were in full bloom. Think of love as a state of grace, not the means to anything, but the alpha and omega. An end in itself.

Fermina Urbino: The only thing that hurts me is that I don't have enough strength to give you the beating that you deserve for being so insolent and evil-minded. But you will leave this house right now and I swear to you on my mother's grave that you will not set foot in it again as long as I live. Life crippled that poor man 50 years ago, because he was too young and now you want to do it because we are too old.
=============0000==============