அண்ட் காட் க்ரியேட்டெட் வுமன் (Et Dieu... créa la femme) 1956


'அண்ட் காட் க்ரியேட்டெட் வுமன்' (Et Dieu... créa la femme) என்ற 1956 ஆம் ஆண்டு வெளியான  பிரெஞ்சுத் திரைப்படம், உலக சினிமா வரலாற்றில் ஒரு கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்திய முக்கியமான மைல்கல் ஆகும்.

 இதன் இயக்குநர் ரோஜர் வாடிம், பிரெஞ்சு சினிமாவில் மட்டுமல்லாமல், உலக அரங்கிலும் பாலியல் உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தை அடியோடு மாற்றியமைத்தார். 

இது ஒரு காதல் நாடகம் என்ற போர்வையில், ஐரோப்பாவின் போர் பிந்தைய சமூகத்தில் பெண்களின் ஆதிக்கம் நிறைந்த சுதந்திரத்தையும், சமூகக் கட்டுப்பாடுகளின் வீழ்ச்சியையும் ஆழமாகப் பதிவு செய்தது.

இது இயக்குநர் ரோஜர் வாடிமின் முதல் திரைப்படமாகும். ஒரு புதிய இயக்குநர் என்றபோதிலும், அவர் கையாண்ட விதம் மிகவும் துணிச்சலானது.

 ஜூலியட் என்ற கதாபாத்திரத்தை அவர் சித்தரித்த விதம், அக்காலப் பார்வையாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. வாடிம் சயிண்ட்-ட்ரோபேஸின் தட்பவெப்பத்தைப் பயன்படுத்திய விதம் அற்புதம். கடற்கரைகள், சூடான காற்று, சூரிய ஒளி ஆகியவற்றைக் கதை சொல்லலுக்கான ஒரு கவர்ச்சியான பின்னணியாக மாற்றினார் இயக்குனர். 

இந்தக் கதைக்களம், ஜூலியட்டின் கட்டுக்கடங்காத உணர்வுகளுக்கும், ஊரின் இறுக்கமான சமூக அமைப்புக்கும் இடையே உள்ள முரண்பாட்டைத் தெளிவாகக் காட்டியது.

 பாலியல் உணர்வுகளை வெளிப்படையாகப் பேசும்போதும், அவர் அதை கலைநயத்துடனும், கவிதை ரீதியாகவும் படமாக்கினார். இந்தத் துணிச்சல் தான் பிற்காலத்தில் பிரெஞ்சு ‘புதிய அலை’ சினிமாவுக்குக் கூட மறைமுகமாக வழி வகுத்தது.

இந்தப் படம்தான் நடிகை பிரிகிடே பார்டோட்டின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. ஜூலியட் கதாபாத்திரத்தில் பார்டோட்டின் நடிப்பு, வெறுமனே ஒரு நடிப்பு மட்டுமல்ல; அது ஒரு கலாச்சார நிகழ்வு. ஜூலியட் - கவர்ச்சி, கள்ளங்கபடமற்ற தன்மை, மற்றும் அழிக்கும் சக்தி ஆகியவற்றுடன் கலந்த ஒரு கலவை. 

பார்டோட் இந்த ஜூலியட் கதாபாத்திரத்தை அசத்தலாகச் சுமந்திருந்தார். அவள் நிர்வாணமாக வெயில் காய்வதிலும், வெற்றுக்காலுடன் நடப்பதிலும், ஆவேசமாக நடனமாடுவதிலும் வெளிப்படும் இயல்பான, கட்டுப்படுத்த முடியாத உணர்வுகள், உலக சினிமா ரசிகர்கள் அதுவரை திரையில் கண்டிராத ஒரு புரட்சிகரமான பெண்மையைச் சித்தரித்தது.

 பார்டோட் திரையில் ஒரு 'கவர்ச்சி அணுகுண்டாக'  வெடித்தார், அதன் விளைவாகவே அவருக்கு 'செக்ஸ் கிட்டன்'  என்ற புனைப்பெயர் உருவானது. மற்ற நடிகர்களான கர்டென் ஜாக், ஜீன்-லூயிஸ் ட்ரிண்டிக்னன்ட் ஆகியோரின் பங்களிப்பும் கதையின் அழுத்தத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியது.

ரோஜர் வாடிம் எழுதிய திரைக்கதை, அந்தக் காலகட்டத்தின் சமூக மரபுகளை நேரடியாகப் பார்த்துச் சவால் விட்டது. கதைக்களம் ஒரு சாதாரண காதல் முக்கோணம் போலத் தோன்றினாலும், அதன் ஆழமான உட்கருத்து - சமூக அமைப்பால் கட்டமைக்கப்பட்ட புனிதமான திருமண பந்தத்திற்கு வெளியே ஒரு பெண் தனது உரிமையையும், பாலுணர்வுக்கான தேவையையும் நிலைநாட்டுவது  என்பதாக இருந்தது. 

ஜூலியட் ஒருவிதமான தார்மீகத் தீர்ப்புக்குள் அடைக்கப்படவில்லை. அவள் செய்யும் துரோகங்கள் கூட, அவளது அடிப்படை சுதந்திர உணர்வின் வெளிப்பாடாகவே சித்தரிக்கப்படுகிறது. இந்த விதமான சிக்கலான, தார்மீகத் தெளிவற்ற கதாபாத்திரச் சித்தரிப்பு அக்காலத் திரைப்படங்களில் மிகவும் புதியதாகும்.

படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டவர் ஆர்மாண்ட் திர்ராட் . அவர் செயிண்ட்-ட்ரோபேஸ் நகரின் சூரிய ஒளியையும், கடல் அழகையும் மிக நேர்த்தியாகப் பயன்படுத்தினார். இப்படமானது டெக்னிகலர் (Technicolor) முறையில் படமாக்கப்பட்டது.

 நிறங்களின் பயன்பாடு, படத்தின் கவர்ச்சியையும், உணர்வுப்பூர்வமான வெப்பத்தையும் அதிகரித்தது. குறிப்பாகக் கடற்கரைக் காட்சிகள், நடனக் காட்சிகள் மற்றும் நெருக்கமான தருணங்களில் ஒளிப்பதிவு, கதையின் உணர்வுக்கு மேலும் உயிரூட்டியது.

இப்படத்திற்கு இசையமைத்தவர் பால் மிஸ்ராக்கி (Paul Misraki). அவரது இசைப் பின்னணி, ஒருபக்கம் தென் பிரான்ஸின் லேசான, ரொமான்டிக் சூழ்நிலையையும், மறுபக்கம் ஜூலியட்டின் கொந்தளிப்பான மனநிலையையும் பிரதிபலித்தது. 

குறிப்பாக, ஜூலியட் மதுக்கடையில் ஆடும் அந்த ஆவேச நடனக் காட்சியின் இசை இன்றளவும் மறக்க முடியாத ஒரு பகுதியாகும். இந்த இசை, அந்தக் காலகட்டத்தின் திரைப்பட இசையின் போக்கிலிருந்து மாறுபட்டு, படத்தின் மையமான கிளர்ச்சி உணர்வை அழுத்தமாகத் தாங்கி நின்றது.

இந்தப் படத்திற்குக் குறிப்பிடத்தக்க முக்கியமான விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், இது விருதுகளை விடப் பெரிய ஒன்றைப் பெற்றது  அதுதான் உலகளாவிய கலாச்சாரத் தாக்கம். இந்தப் படம் பிரிகிடே பார்டோட்டை உலக நட்சத்திரமாக்கியதன் மூலம், பிரெஞ்சு சினிமாவிற்கான ஒரு புதிய சர்வதேசப் பாதையைத் திறந்தது. அமெரிக்காவில் பெரும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டாலும், இது அமெரிக்கத் திரைப்படத் துறையில் நடைமுறையில் இருந்த பழமையான 'ஹேஸ் கோட்' போன்ற தணிக்கை விதிகள் மீதான சமூக விவாதத்தைத் தூண்டி, அதன் வீழ்ச்சிக்கு மறைமுகக் காரணமாக அமைந்தது.

 இத்திரைப்படம் அடைந்த சர்வதேச வெற்றி, பிரான்ஸில் புதிய அலை திரைப்படத் தயாரிப்பாளர்கள் (New Wave Filmmakers) தங்கள் கருத்துக்களைத் துணிச்சலாக வெளிப்படுத்த ஒரு தைரியமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

 'அண்ட் காட் க்ரியேட்டெட் வுமன்' ஒரு திரைப்படமாக மட்டுமல்லாமல், பாலியல் புரட்சியின் தொடக்கப் புள்ளியாகவும், சமூக விவாதத்துக்கான ஒரு கருவியாகவும் உலக சினிமா வரலாற்றில் நிலைபெற்றுள்ளது.

படத்தின் கதை:-

ஜூலியட் ஒரு அனாதை, கட்டுக்கடங்காத பெண் குதிரை போன்றவள், நினைத்த இன்பத்தை உடனே துய்ப்பவள். 
இக்கதை 1956 ஆம் ஆண்டின் அழகிய கோடை காலத்தில், பிரான்சின் தெற்குக் கடற்கரையில் உள்ள புகழ்மிக்க செயிண்ட்-ட்ரோபேஸ்  நகரில் தொடங்குகிறது.  அவள் கவர்ச்சி, அழகு, மற்றும் அச்சுறுத்தாத சுதந்திரம் ஆகியவற்றின் முழு வடிவம்.
ஜூலியட் ஒரு சுகவாசி வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் அவளது ஒரே விதி. 

அவளது இயல்பான உடல் கவர்ச்சியை எந்தவித முயற்சியும் செய்யாமல் அவள் ஊரில் வெளிப்படுத்துகிறாள்.
வீட்டில் அவள் தன் ஆடைகளைக் களைந்துவிட்டு, நிர்வாணமாகத் தன் கொல்லைப்புறத்தில் படுத்து வெயில் காய்வாள்.

பெரும்பாலான நேரங்களில், செருப்பைக் கழற்றிவிட்டு, மண்ணில் வெறும் கால்களுடன் அலைவாள்.
சமூகத்தின் எந்தக் கட்டுப்பாடுகளையும், மற்றவர்கள் தன்னைப் பற்றிக் கூறும் விமர்சனங்களையும் அவள் முற்றிலும் புறக்கணிக்கிறாள். 

இவளது இந்தத் துணிச்சல் ஊரில் ஒரு பெரும் கொந்தளிப்பை உருவாக்குகிறது. ஊரில் உள்ள ஒவ்வொரு ஆணும் அவளது கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, அவள் பின்னால் அலைகின்றனர்; அதே சமயம், ஊர்ப் பெண்கள் அவளது கட்டுப்பாடற்ற சுதந்திரத்தைக் கண்டு கடுங்கோபம் கொள்கிறார்கள்.

ஜூலியட் பாலுணர்வு ரீதியாக மிகத் துடிப்புடன் இருக்கிறாள். அவளது இந்தத் துணிச்சலைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் எரிக் கரேடின் என்ற மிகவும் வயதான, பெரும் பணக்காரருடன் அவள் நெருங்கிப் பழகுகிறாள், ஊர் கட்டுப்பாடு காரணமாக இத்தனை வயது வித்தியாசம் கொண்ட பெண்ணை அவர் மணக்க முடியாது,எனவே அவளுக்கு மணமுடித்து வைத்து அவளை விரும்பிய  போதெல்லாம் அடைய திட்டமிடுகிறார் . சைக்கிளில் செல்லும் அந்த இளம்பெண்ணை மகிழ்விக்க, அவளுக்கு ஒரு புதிய காரை வாங்கிக் கொடுப்பதாக எரிக் வாக்குறுதி அளிக்கிறார்.
எரிக் சயிண்ட்-ட்ரோபேஸில் ஒரு பெரிய சூதாட்ட விடுதியைக் கட்ட விரும்புகிறார். ஆனால், அந்த வளர்ச்சித் திட்டத்துக்குத் தேவையான இடத்தில், பல ஆண்டுகளாக இருக்கும் டார்டியூ  குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு சிறிய கப்பல் கட்டும் தளம் தடையாக இருக்கிறது.

அந்தக் குடும்பத்தில் மூன்று சகோதரர்கள்:
 ஆன்டோயின் : மூத்தவன், கம்பீரமானவன்.
 மைக்கேல் : நடுவன், வெள்ளந்தியானவன்.
 கிரிஸ்டியன் (Christian): இளையவன்.

ஆன்டோயின்  அந்த புதிய கப்பல் தளத்தைக் குறித்து எரிக்கின் திட்டத்தைப் பற்றிக் கேட்பதற்கு, டூலான் நகரிலிருந்து வார இறுதி நாட்களில் இவ்வூருக்கு  வருகிறான்.

ஜூலியட், அந்த உயரமான, மனம் மயக்கும் ஆன்டோயினைத் தனக்குக் கிடைத்த ஒரு நல்ல துணையாகப் பார்க்கிறாள். அவனுடன் அவன் பணிபுரியும்  டூலான் நகரத்துக்கு தானும் போகக் காத்திருக்கிறாள். ஆனால், ஆன்டோயின் அவளிடம் உடல் ரீதியான இன்பத்தை மட்டுமே எதிர்பார்க்கிறான். இந்த உண்மையை அவள் ஒட்டுக்கேட்டு அறிகிறாள். என்றாலும், அவன் அவளைச் சமாதானப்படுத்தி, காலையில் பேருந்து நிலையத்தில் வைத்து சந்திப்பதாக உறுதியளிக்கிறான். இரவு அவளைச் சபலத்துக்கு உள்ளாக்கியவன், மறுநாள் காலையில், அவள் ஏக்கத்துடன் பேருந்தை நிறுத்த கையசைக்க, அந்தப் பேருந்தைத் நிறுத்தி ஏற்றாமல் கடந்து போக சொல்கிறான்.

ஜூலியட்டின் இந்த அடங்காத குணம் அவளைக் கவனித்துக்கொள்ளும் வயதான காப்பாளர்களுக்குப் பொறுமையை இழக்கச் செய்கிறது. அவர்கள் அவளிடம், "நீ உடனடியாக அடங்கவில்லை என்றால், உன்னைக் காப்பகத்துக்குத் திருப்பி அனுப்பி விடுவோம். அங்கே நீ இருபத்தி ஒரு வயது முடியும்வரை பூட்டப்பட்டிருப்பாய்," என்று அச்சுறுத்துகிறார்கள்.

ஜூலியட் ஊரை விட்டுச் செல்லக் கூடாது என்று விரும்பிய பணக்காரர் எரிக், ஆன்டோயினை ஜூலியட்டை திருமணம் செய்துகொள்ளும்படி கெஞ்சுகிறார். ஆன்டோயின் இதை கடுமையாக மறுத்துவிடுகிறான்.
ஆனால், மூன்று வருடங்கள் சிறைவாசம் போன்ற அவளது அனாதை காப்பக வாழ்க்கை, ஜூலியட்டைப் பாதிக்கும் என்பதை உணர்ந்த, அவளது காதலுக்கு ஏங்குபவனான  நடுச் சகோதரன் மைக்கேல், அவளை உடனே  திருமணம் செய்துகொள்ள முன்வருகிறான். 

தன் மனது முழுக்க ஆன்டோயின் மீது காதல் இருந்தாலும், வேறு வழியில்லை என்பதால், ஜூலியட், நேர்மையான மைக்கேலை மணமகனாக ஏற்றுக்கொள்கிறாள்.

மைக்கேலுக்கும் ஜூலியட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஒரு சிறிய தேவாலயத்தில் சடங்குகள் நடக்கின்றன. இந்தத் திருமணத்தில் அண்ணன் ஆன்டோயின் கலந்துகொள்ளவே இல்லை, அவன் திருமணத்தை முற்றிலும் அலட்சியம் செய்கிறான்.

திருமணத்துக்குப் பிறகு, ஒரு பொது இடத்தில் மைக்கேலும் ஜூலியட்டும் நிற்கும்போது, ஓர் உள்ளூர் ரவுடி மைக்கேலையும், ஜூலியட்டையும் இழிவுபடுத்திப் பேசுகிறான். ஆவேசமடைந்த மைக்கேல், தன்னுடைய மனைவியின் கண்ணெதிரே அவமானப்படுத்தப்பட்டதால், அந்த கோபத்துடன் அவனைத் தாக்குகிறான். ஆனால், வலுவான அந்த ரவுடியால் மைக்கேல் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு, வாய் உடைக்கப்பட்டு தெருவில் அவமானப்படுகிறான்.
திருமணம் முடிந்ததும், குடும்ப வீட்டில் வரவேற்பு விருந்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், ஜூலியட், விருந்துக்காகக் காத்திருக்கும் எல்லோரையும் அலட்சியம் செய்துவிட்டு, மைக்கேலுடன் தங்கள் அறைக்குச் செல்கிறாள். அங்கே இருவரும் ஆழ்ந்த, உணர்ச்சிப்பூர்வமான அன்பைப் பரிமாறிக்கொண்டு கதவைத் திறந்து வைத்து உறவு கொள்கிறார்கள். தாம்பத்திய உறவு முடிந்த பிறகு, ஜூலியட் வரவேற்பு அறையில் இருந்தவர்களைக் கொஞ்சமும் மதிக்காமல், கீழே இறங்கி வந்து, விருந்துக்கு வந்தவர்களின் உணவுத் தட்டுகளைச் சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறாள்; முடித்ததும் , ஒரு பாட்டில் ஒயினையும் தன்னுடன் எடுத்துக்கொண்டு பாடிக்கு செல்கிறாள்,சிறு நாணம் இல்லை. அவளது இந்தக் கண்ணியமற்ற, துடுக்கான செயல் அங்கே இருந்த விருந்தினர்களைத் திகைப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்துகிறது.

இதற்கிடையில், பணக்காரரான எரிக் கரேடின் அந்தப் பெரிய துறைமுகத்தை  முழுவதுமாக விலைக்கு வாங்கிவிடுகிறார். அவர் டார்டியூ சகோதரர்களின் குடும்பத்துக்கு அந்தத் துறைமுகத்தில் 30% லாபப் பங்குகளைக் கொடுத்து, அந்தப் பங்களிப்புக்கு ஈடாக, துறைமுகத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பை அண்ணன் ஆன்டோயினிடமே ஒப்படைக்கிறார். இதனால், ஆன்டோயின் நிரந்தரமாகச் சயிண்ட்-ட்ரோபேஸுக்கே திரும்பி வந்து தங்க வேண்டியதாகிறது.
ஆன்டோயின் அருகில் இருந்ததால், ஜூலியட்டின் நடவடிக்கைகள், கணவன் மைக்கேல் மீது மேலும் மேலும் மரியாதைக் குறைவாக மாறுகிறது. ஜூலியட்டின் மனம் மீண்டும், தன் முதல் காதலான ஆன்டோயினை நாடத் தொடங்குகிறது.

ஒருநாள், மைக்கேல் வணிக ரீதியான வேலைக்காக ஊரை விட்டுச் சென்ற சமயம். ஜூலியட், ஆன்டோயினுக்குச் சொந்தமான துறைமுகத்தின் படகுகளில் ஒன்றைத் திருடிச் செல்கிறாள். ஆனால், படகின் என்ஜினில் திடீரெனக் கோளாறு ஏற்பட்டு, படகு தீப்பிடிக்க ஆரம்பிக்கிறது.
ஜூலியட்டைக் காப்பாற்றுவதற்காக, ஆன்டோயின் நீந்திக் கடலுக்குள் சென்று, அவளைக் காப்பாற்றுகிறான். இருவரும் நீந்தி, ஒரு மக்கள் நடமாட்டமில்லாத, ஒதுக்குப்புறமான கடற்கரையில் கரை சேர்கிறார்கள். அங்கே, அந்தச் சூழ்நிலையின் தளர்வு, பழைய ஈர்ப்பு, மற்றும் ஜூலியட்டின் சபலத்தால், அவள் ஆன்டோயினைச் சம்மதிக்க வைத்து, அவனுடன் திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்ட உடல் உறவை  அந்ததீவில் வைத்துக்கொள்கிறாள்.

அந்த நெருக்கத்துக்குப் பிறகு, ஜூலியட் காய்ச்சல் கண்டு, தன் படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கிறாள். அவள் தன் மனதில் உள்ள பாரத்தைத் தாங்க முடியாமல், தன் கணவனின் இளைய சகோதரனான கிரிஸ்டியனிடம், ஆன்டோயினுடன் தான் கொண்ட உறவைப்பற்றிய உண்மையை ஒப்புக்கொள்கிறாள்.
இதற்கிடையில், ஜூலியட்டை எப்போதும் வெறுத்து வந்த, மைக்கேலின் தாயார், மேடாம் டார்டியூவுக்கு இந்தத் துரோக விஷயம் எப்படியோ தெரிய வருகிறது. அவள் ஆத்திரமடைந்து, மகன் மைக்கேலிடம், "உன் மனைவி உனக்குத் துரோகம் செய்துவிட்டாள். நீ அவளைச் சற்றும் தாமதிக்காமல் வீட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்" என்று உத்தரவிடுகிறாள்.
அவளைச் சந்தித்துப் பேச மைக்கேல் அவளது அறைக்குச் செல்லும்போது, ஜூலியட் அங்கிருந்து மறைந்திருந்தாள். மைக்கேலின் குழப்பம் அதிகரிக்கிறது.

மைக்கேல், தன் மனைவி ஜூலியட் மாயமானதைக் கண்டு பெரும் குழப்பத்தில் இருக்கிறான். அவளை நகரம் முழுவதும் தேடி அலைகிறான். தன் தாய் சொன்ன துரோகச் செய்தியாலும், மனைவி காணாமல் போனதாலும் அவன் ஆத்திரத்தின் உச்சியில் இருக்கிறான்.
அவன், தன் மனைவிக்குத் துரோகம் செய்த அண்ணன் ஆன்டோயினைத் தேடி, கப்பல் கட்டும் தளத்துக்குச் செல்கிறான். ஆத்திரத்தில் அங்கே சென்ற மைக்கேல், தன் கையில் ஒரு துப்பாக்கியை எடுக்கிறான்.
ஆனால், ஜூலியட் செய்த துரோகத்துக்கு, தன் அண்ணனைச் சுட்டுக் கொல்வது சரியான தீர்வு அல்ல என்று அவனது மனசாட்சி தடுக்கிறது. எனவே, துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு, அவன் ஆன்டோயினை நோக்கிப் பாய்ந்து, ஆக்ரோஷமாகச் சண்டையிடத் தொடங்குகிறான். மைக்கேலின் ஆத்திரமான தாக்குதலில், எதிர்பாராத விதமாக ஆன்டோயின் தலையில் அடிபட்டு, அவன் நிலை குலைந்து கீழே மயங்கி விழுகிறான்.

இதற்கிடையில், ஜூலியட் நகரத்தில் உள்ள ஒரு மதுக்கடைக்கு  வந்துவிடுகிறாள். அவள் தன் மனதில் உள்ள கொந்தளிப்பை மறப்பதற்காக, இரட்டைப் பிராண்டிகளை  அதிக அளவில் குடிக்கத் தொடங்குகிறாள். அவள் அங்கிருக்கும்போது, அவளது தோழி லூசியன் அங்கே வந்து, ஜூலியட் கட்டுப்பாடில்லாமல், ஊரறிய ஒரு வேடிக்கையாக மாறி வருவதை எரிக் கரேடின்னுக்குத் தெரிவிக்கிறாள்.
ஜூலியட்டைக் காப்பாற்ற நினைத்த எரிக் அங்கே விரைந்து வருகிறார். அவர் அவளிடம், "என்னுடன் வா! உன்னை உலகம் முழுவதற்கும் அழைத்துச் சென்று, நான் உனக்குச் சிரிப்பையும், மகிழ்ச்சியையும் தருகிறேன்" என்று கெஞ்சுகிறார். ஆனால், ஜூலியட் அவருடைய சலுகையை அலட்சியமாக மறுக்கிறாள்.
இதற்கிடையில், அங்கிருந்த கரீபியன் இசைக் கலைஞர்கள் தங்கள் இசையை இசைக்க, ஜூலியட் தன் மனக் கொந்தளிப்பை வெளிப்படுத்த, அங்கே கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே சென்று, எல்லை மீறிய, பாலுணர்வைத் தூண்டும் விதமான நடனத்தை ஆடத் தொடங்குகிறாள்.

ஜூலியட் நடனமாடிக் கொண்டிருக்கும்போதே, துப்பாக்கியை எடுத்தவாறு மைக்கேல் ஆவேசமாக அந்தக் கடைக்குள் நுழைகிறான். தன் கணவன் துப்பாக்கியுடன் நிற்கிறான் என்பதைக் கண்டும் ஜூலியட் அவனைச் சற்றும் பொருட்படுத்தாமல், தன் அநாகரிகமான நடனத்தைத் தொடர்கிறாள்.
நிலைமையைப் புரிந்துகொண்ட எரிக், மைக்கேலிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முயற்சிக்கிறார். அந்த இழுபறியில், துப்பாக்கி வெடித்து, எரிக் காயமடைகிறார்.
உள்ளூர் போலீஸ் இந்த விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று விரும்பிய எரிக், மயக்கமடைந்த ஆன்டோயினை எழுப்பி, தன்னை நைஸ் (Nice) நகரில் இருக்கும் தன் நண்பரும் அறுவை சிகிச்சை நிபுணருமான ஒருவரிடம் அழைத்துச் செல்லும்படி கேட்கிறார்.
காயமடைந்த நிலையில் காரில் பயணிக்கும்போது, எரிக் தன் மனதின் ஆழத்தில் ஜூலியட் மீது வைத்திருந்த தீவிரமான காதலை ஆன்டோயினிடம் வெளிப்படுத்துகிறார். ஆனால், அவளது இயல்பைக் குறித்துப் பேசும்போது, "அந்தப் பெண், ஆண்களின் வாழ்க்கையை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவள்" என்று ஒரு கசப்பான உண்மையைப் போல் தெரிவிக்கிறார். மேலும், ஆன்டோயினிடம், "இந்தத் துறைமுகத்தின் முதலாளி யார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதே," என்று ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்து, அவனை வேறு ஊருக்குப் பணியிடமாற்றம் செய்வதாகவும் அறிவிக்கிறார்.

துப்பாக்கிச் சூடு சத்தம் அடங்கி, எரிக் அங்கிருந்து சென்ற பிறகு, மைக்கேல் அந்த மதுக்கடையிலேயே இருக்கும் ஜூலியட்டைக் கோபத்துடன் எதிர்கொள்கிறான்.
மைக்கேல், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று, அவளது கன்னத்தில் பலமாக, தொடர்ந்து நான்கு முறை அறைகிறான்.
கணவனால் அவ்வாறு தாக்கப்பட்ட ஜூலியட், வலியில் கூச்சல் போடுவதற்குப் பதிலாக, தான் எதிர்பார்த்தது இதுதான் என்பது போல, தன் முகத்தில் ஒரு விசித்திரமான சிரிப்பை வரவழைத்துக் கொள்கிறாள். "இவ்வளவு தீவிரமாக, ஆழமாக, நான் உன்னைச் செயல்படத் தூண்டிவிட்டேனே" என்ற ஒருவித திருப்தி அவளது கண்களில் தெரிகிறது.

கடைசியில், கணவன் மைக்கேலும், மனைவி ஜூலியட்டும் கைகோர்த்துக்கொண்டு, அமைதியாகத் தங்கள் வீட்டை நோக்கி நடக்கிறார்கள். ஜூலியட்டின் கட்டுக்கடங்காத சுதந்திரம், இறுதியில், அன்பின் ஆதிக்கத்திற்கு அல்லது மைக்கேலின் ஆத்திரத்தின் மூலம் வெளிப்பட்ட அவளது அன்பின் மீதான தேவைக்கு அடிபணிந்தது போன்ற ஒரு தருணர்தில் படம் நிறைவடைகிறது.

லியோ டால்ஸ்டாய்யின் மனைவி சோஃபியா டால்ஸ்டாயா


உலகின் மிகச் சிறந்த இலக்கிய மேதையான லியோ டால்ஸ்டாய்யின் மனைவி சோஃபியா டால்ஸ்டாயா 
(Sofia Tolstaya, 1844-1919), வரலாற்றில் மறைக்கப்பட்ட அவரது மகத்தான பங்களிப்புகள் மற்றும் தியாகங்கள் 

லியோ டால்ஸ்டாய் "போரும் அமைதியும் (War and Peace)" மற்றும் "அன்னா கரேனினா (Anna Karenina)" போன்ற அழியாப் படைப்புகளுக்காக இலக்கிய உலகின் பிதாமகனாகப் போற்றப்படுகிறார். 
ஆனால் டால்ஸ்டாய் சோஃபியாவிடம் "போரும் அமைதியும்" புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்தபோது, அது ஒரு காவியமாக இருக்கவில்லை; மாறாக அது கிறுக்கப்பட்ட, கலைந்த பக்கங்கள், புரிந்துகொள்ள முடியாத கையெழுத்து, சீரற்ற எண்ணங்கள் மற்றும் திருத்தங்களின் குவியலாக இருந்தது. சோஃபியா டால்ஸ்டாயா தான் அந்த ஒழுங்கற்ற கோர்வையைப் பெற்று அதைச் செம்மைப்படுத்தி இலக்கியமாக மாற்றினார். பதிப்பாளர்கள் சுத்தமான பிரதியை எதிர்பார்க்க, டால்ஸ்டாயின் கையெழுத்து அச்சுக்கோர்ப்பவர்களுக்கே புரியாமல் இருந்ததால், அவர் "போரும் அமைதியும்" புத்தகத்தை ஏழு முறை கையால் நகலெடுத்து எழுதினார். இதுவே ஒரு மில்லியன் வார்த்தைகளுக்கும் மேலானது.

சோஃபியா டால்ஸ்டாயா செய்தது வெறும் நகலெடுத்தல் வேலை மட்டுமல்ல. டால்ஸ்டாயின் அனைத்துப் படைப்புகளுக்கும் அவரே நகல் எழுதுபவர், முதல் வாசகர், ஆசிரியர் (Editor) மற்றும் வெளியீட்டிற்குத் தயார்ப்படுத்தும் பொறுப்பாளராக இருந்தார். முரண்பாடுகளைக் கண்டறிந்து, மேம்பாடுகளைப் பரிந்துரைத்து, கையெழுத்துப் பிரதிகளைச் செம்மைப்படுத்தினார். அதே சமயத்தில், அவர் பதின்மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்க்கவும் செய்தார். குடும்பத்தின் நிதி நிர்வாகத்தைக் கவனித்து, கணக்குகளை நிர்வகித்து, பண்ணையின் வருமானத்தை உறுதி செய்தார். நிதி விவகாரங்களில் டால்ஸ்டாய்க்கு விருப்பமும் திறமையும் இல்லாததால், சோஃபியாவே பதிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, சிறந்த ஊதிய விதிமுறைகளைப் பெறுவது, டால்ஸ்டாயின் இலக்கிய உரிமைகளைப் பாதுகாப்பது என அவரது வணிக மேலாளராகவும் செயல்பட்டார். இந்தப் பணிகள் அனைத்தையும் டால்ஸ்டாயின் ஆன்மீக நெருக்கடிகள் மற்றும் அவரது மாறிவரும் நடத்தையைச் சமாளித்துக் கொண்டே செய்தார்.

1870-களில் டால்ஸ்டாய் கிறிஸ்தவத் துறவுக்கோட்பாட்டில் ஆழ்ந்து, பொருள் உடைமைகள் தீயவை என்றும், குடும்பம் அனைத்தையும் கைவிட்டு வறுமையில் வாழ வேண்டும் என்றும் தீர்மானித்தார். டால்ஸ்டாயின் ஆன்மீகத் துறவைப் பிரசங்கிக்கும் அதே நேரத்தில், சோஃபியா தான் குடும்பத்தின் நிதி ஆதாரத்தை நிர்வகிக்கவும், குழந்தைகளுக்கு உணவளிக்கவும், தோட்டத்தைப் பராமரிக்கவும், அதேசமயம் டால்ஸ்டாய் இலவசமாக வழங்க விரும்பிய அவரது புதிய எழுத்துக்களை நகலெடுத்து பிரசுரிக்கவும் வேண்டியிருந்தது. பொருள் பற்றின்மையைப் பற்றி டால்ஸ்டாய் பிரசங்கம் செய்ய, அவரது அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் கவனித்து, அவரது துறவு சாத்தியமாவதற்கான அனைத்து உலகியல் பணிகளையும் சோஃபியா கையாண்டார். அவர் பதிப்புரிமையைத் துறக்க முயன்றபோது, குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்புடன் சோஃபியா போராடினார்.

1910 ஆம் ஆண்டில், 82 வயதில், டால்ஸ்டாய் தனது குடும்பத்தைத் துறந்து, ஒரு துறவியாக வாழ முடிவு செய்து இரவோடு இரவாக யாஸ்னயா போல்யானாவை விட்டு வெளியேறினார். சில நாட்களுக்குப் பிறகு அவர் ஒரு சிறிய ரயில் நிலையத்தில் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கும் தருவாயில் இருந்தார். சோஃபியா அவரைப் பார்க்க விரைந்தார். ஆனால், டால்ஸ்டாயின் சீடர்கள், சோஃபியாவின் இருப்பு அவரது இறுதி நேரத்தை தொந்தரவு செய்யும் எனக் கூறி, அவரை அறைக்குள் விடாமல் தடுத்தனர். அரை நூற்றாண்டு காலம் அவர் ஆதரித்த மனிதர், அவர் இல்லாமல் இறந்துபோனார். ஜன்னல் வழியாகப் பார்க்க மட்டுமே சோஃபியாவுக்கு அனுமதி கிடைத்தது. டால்ஸ்டாய் நவம்பர் 20, 1910 அன்று இறந்தபோது, சோஃபியா அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.

பல தசாப்தங்களாக, சோஃபியா டால்ஸ்டாயா "டால்ஸ்டாயின் மனைவி" என்ற அடிக்குறிப்பாக மட்டுமே பார்க்கப்பட்டார். அவரது நாட்குறிப்புகள் சமீபத்தில் தான் விரிவாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. அவை, தனது கணவரின் படைப்பின் மதிப்பைப் புரிந்து கொண்ட, ஆனால் அவர் இட்ட கடினமான நிலையில் இருந்தும் அவரை நேசித்த ஒரு திறமையான, புத்திசாலிப் பெண்ணை வெளிப்படுத்துகின்றன. அவர் வெறுமனே ஒரு அடிக்குறிப்பு அல்ல. லியோ டால்ஸ்டாயின் படைப்புகளைச் சாத்தியமாக்கிய கட்டமைப்பு அவர்தான். பிரகாசமான, ஆனால் குழப்பமான கையெழுத்துப் பிரதிகளை வெளியிடப்பட்ட தலைசிறந்த படைப்புகளாக மாற்றிய கையால் செய்யும் உழைப்பு அவருடையது. டால்ஸ்டாய் எழுதுவதில் கவனம் செலுத்த அனுமதித்த நிதி மேலாண்மைத் திறனும் அவருடையது. வரலாறு டால்ஸ்டாயை நினைவில் வைத்திருக்கிறது, ஆனால் சோஃபியா டால்ஸ்டாயா தான் மேதைமைக்கும் சாதனைக்கும் இடையிலான பாலமாக இருந்தார். நாம் "போரும் அமைதியும்" படிக்கும்போதெல்லாம் அவர் நினைவுகூரப்படத் தகுதியானவர்.

சோஃபியா டால்ஸ்டாயா என்ற பெயர்காரணம், ரஷ்ய குடும்பப்பெயர் விதி
ரஷ்ய மொழியின் இலக்கண விதிகளின்படி, குடும்பப் பெயர்கள்  பாலினத்தைக் குறிக்கும் வகையில் மாறுபடும். கணவரின் குடும்பப்பெயரில் ஆண் வடிவம் இருக்கும்போது, மனைவியின் குடும்பப்பெயரானது இலக்கணப்படி பெண் வடிவத்தை எடுக்கிறது. உதாரணமாக, லியோவின் குடும்பப்பெயர் 'டால்ஸ்டாய்'  என்று ஆண் வடிவத்தில் முடிவதால், அவரது மனைவி சோஃபியாவின் குடும்பப்பெயர் 'டால்ஸ்டாயா'  என்று பெண் வடிவத்தில் முடிவது சரியானதாகும். இது கணவரின் பெயரை மனைவி எடுத்துக் கொள்வதோடு, ரஷ்ய இலக்கணத்தின் பாலின வடிவத்தையும்  கடைப்பிடிக்கும் முறையாகும்.

சோஃபியா - லியோவின் திருமணமும் வயது வித்தியாசமும்
லியோ டால்ஸ்டாய், மாஸ்கோ நீதிமன்ற மருத்துவரின் மகள் சோஃபியா ஃபெர்ஸை திருமணம் செய்து கொண்டார். டால்ஸ்டாய் சோஃபியாவை விட 16 வயது மூத்தவர். இவர்கள் இரு குடும்பங்களும் மாஸ்கோவில் நண்பர்களாக இருந்ததால், சோஃபியாவும் அவரது சகோதரிகளும் டால்ஸ்டாயின் 'யாஸ்னயா போல்யானா' பண்ணை வீட்டிற்குச் சென்று வருவதுண்டு. 

1862 ஆம் ஆண்டு, 34 வயதான டால்ஸ்டாய், 18 வயதான சோஃபியாவிடம் தனது நாட்குறிப்பைக் காட்டி, மறைமுகமாகக் காதலை வெளிப்படுத்தினார். அவரது படைப்புகளைப் போற்றிய சோஃபியா, உடனடியாக திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தார். 

அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் எளிமையாக இவர்களது திருமணம் நடைபெற்றது. சோஃபியா திருமணத்திற்குப் பிறகு முழு மனதுடன் டால்ஸ்டாயின் எழுத்துப் பணிகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

சோஃபியாவும் லியோவும் தங்களது 48 ஆண்டு திருமண வாழ்வில் மொத்தம் 13 குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். துரதிர்ஷ்டவசமாக, இவர்களில் நான்கு குழந்தைகள் இளம் வயதிலேயே உயிரிழந்தனர். எஞ்சிய ஒன்பது குழந்தைகள் மட்டுமே இளமைப் பருவம் வரை பிழைத்தனர். இந்த ஒன்பது குழந்தைகளும் டால்ஸ்டாயின் கலைக்கும் (சோஃபியாவின் நிலைப்பாடு) அவருடைய ஆன்மீகத் தத்துவத்திற்கும் (லியோவின் நிலைப்பாடு) இடையே பிளவுபட்டிருந்தனர். 

மூத்த குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் தாயைப் போலவே உலகியல் மற்றும் குடும்ப நிர்வாகத்தில் ஆர்வம் காட்டினர். ஆனால் இளைய குழந்தைகள் தந்தையின் துறவு மற்றும் எளிமையான வாழ்வுக் கொள்கைகளை ஆதரித்தனர்.

 டால்ஸ்டாயின் மரபு மற்றும் அவரது படைப்புகளைப் பாதுகாப்பதில், குறிப்பாக மகள் அலெக்ஸாண்டிரா, முக்கியப் பங்கு வகித்தார். இந்தப் பிழைத்த குழந்தைகளின் சந்ததியினர் இன்றும் உலகெங்கிலும் வாழ்ந்து வருகின்றனர்.

கில் பில்: பாகம் 1 (Kill Bill: Volume 1) 2003 | 2004


கில் பில்: பாகம் 1 (Kill Bill: Volume 1) திரைப்படம் அமெரிக்காவில் அக்டோபர் 10, 2003 அன்று வெளியானது.
 இத்திரைப்படம் வெளியாகி  22 ஆண்டுகள் ஆகிறது.

இயக்குனர் க்வென்டின் டாரண்டினோவின் இயக்கத்தில் உருவான கில் பில் பாகம் 1 மற்றும் 2 திரைப்படங்கள்,  ஒரு சாதாரண பழிவாங்கல் கதையைத் தாண்டி, உலக சினிமாவின் பல்வேறு வகைகளுக்கும் ஒரு பிரம்மாண்டமான புகழாரமாக நிற்கிறது. இது ஜப்பானியச் சமுராய், கிளாசிக் குங்ஃபூ, இத்தாலிய ஸ்பேகெட்டி வெஸ்டர்ன் மற்றும் அமெரிக்க க்ரைம் ஃபிக்‌ஷன் ஆகிய பாணிகளைத் தன் பாத்திரங்களில் கலந்து உருவாக்கிய ஒரு சினிமா காவியமாகும். இந்தப் படத்தை உருவாக்குவதில் அவர் வெளிப்படுத்திய ஆழமான திரைப்பட அறிவும் நுணுக்கமும், கில் பில்லை ஒரு கலைப் படைப்பாக உயர்த்தியது. டாரண்டினோ கதையை அத்தியாயங்களாகப் பிரித்து, காலவரிசையை மாற்றி அமைத்து, பார்வையாளர்களைப் பழிவாங்கும் பாதையில் தீவிரமாக ஈடுபட வைக்கிறார். ஓ-ரென் இஷியின் பின்னணியை அனிமேஷனாகச் சித்தரித்ததும், மருத்துவமனைக் காட்சிகளை கருப்பு வெள்ளையில் படமாக்கியதும், வெவ்வேறு சினிமா ஊடகங்களின் வீரியத்தை ஒரே படத்திற்குள் கொண்டு வந்த அவரது தைரியமான முடிவுகளுக்குச் சான்றாகும். உமா தர்மன், பிரைட் கதாபாத்திரத்தை வெறும் உடல் வலிமை கொண்டவராக அல்லாமல், உணர்ச்சிப்பூர்வமான ஆழம் கொண்ட ஒருவராக நிலைநிறுத்தினார்; ஒரு தாய் தன் குழந்தையை இழந்த துயரமும், நியாயத்திற்காகப் போராடும் அவளது மன உறுதியும், ஆக்‌ஷன் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களுக்கான ஒரு புதிய இலக்கணத்தை வகுத்தது. டேவிட் காரடைன், பில்லாக, மையக் கதாபாத்திரத்தின் உணர்ச்சி மோதலுக்கான ஒரு வலுவான மையமாக விளங்கினார்; அவர் ஒரு சிதைந்த தத்துவத்தைக் கொண்ட வில்லனாக மட்டுமல்லாமல், பிரைடின் காதலனாகவும் மகளின் தந்தையாகவும் சித்தரிக்கப்பட்டு, அவர்களது துயரமான இறுதிக் கதைக்கு ஒரு ஷேக்ஸ்பியர் நாடக உணர்வை அளித்தது. துணை நடிகர்களான லூசி லியு மற்றும் டேரில் ஹன்னா ஆகியோரின் தனித்துவமான நடிப்பும், பிரைடின் பழிவாங்கும் பயணத்திற்குப் பலவிதமான வில்லத்தனமான சவால்களைக் கொடுத்தன. ராபர்ட் ரிச்சர்ட்சனின் ஒளிப்பதிவு, டோக்கியோவின் சண்டைக் காட்சிகளில் ரத்தத்தின் துடிப்பான சிவப்பு நிறத்தை அதிகப்படுத்துதல் போன்ற நுட்பங்களால், படத்தின் காட்சிக் கவர்ச்சியைத் தீர்மானித்தது. டாரண்டினோவின் திரைக்கதை, 'ஐந்து விரல் உள்ளங்கை இதயத்தை வெடிக்கும் நுட்பம்' போன்ற புனைகதைக் கூறுகளை இணைப்பதிலும், பில்லுடனான இறுதிக் காட்சியில் 'சூப்பர்மேன்' பற்றிய ஒரு ஆழமான தத்துவ உரையாடலை வைப்பதிலும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் பின்னணி இசை ஒரு முக்கிய பேசுபொருளாகும்; அவர், நான்சி சினாட்ராவின் "பேங் பேங்" போன்ற கிளாசிக் பாடல்களையும், என்ன்னியோ மோரிகோன் இசையமைத்த வெஸ்டர்ன் படங்களின் பதற்றம் நிறைந்த இசையையும், ஜப்பானியப் பாரம்பரிய இசையையும் கலந்து பயன்படுத்தினார். இந்த இசைக் கலவை, ஒவ்வொரு காட்சியின் உணர்ச்சிக்கும் பொருத்தமாக அமைந்து, படத்திற்கு ஒரு தனித்துவமான காவிய உணர்வைக் கொடுத்தது. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்தப் படம், உமா தர்மனுக்கு கோல்டன் குளோப் பரிந்துரை உட்படப் பல பாராட்டுகளைப் பெற்றதுடன், தனது தனித்துவமான பாணி மற்றும் கதை சொல்லும் முறைக்காக, 21 ஆம் நூற்றாண்டின் சினிமா மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் நிலைத்திருக்கிறது.
​கில் பில்லின் இந்தப் பிரம்மாண்டமான சினிமாத் தாக்கம், அதன் பாணியை நகலெடுக்க முயன்ற பல ஆக்‌ஷன் படங்களுக்கு வழிவகுத்ததுடன், உலகத் திரைப்பட விழாக்களில் டாரண்டினோவுக்கு ஒரு தவிர்க்க முடியாத மாஸ்டர் இயக்குநராக அங்கீகாரத்தையும் வழங்கியது.

படத்தின் கதை

வெர்னிடா கிரீன்: 
பழிவாங்கல் பட்டியலில் பிரைடின் முதல் குறிக்கோள் வெர்னிடா கிரீன்,  இவள் ஒருகாலத்தில் 'டெட்லி வைப்பர்' உறுப்பினராக இருந்து, இப்போது ஒரு சாதாரணப் புறநகர் இல்லத்தில் ஒரு மனைவியாகவும் தாயாகவும் வாழ்ந்து வருகிறாள். பிரைட் அவளது வீட்டிற்குச் சென்று, உடனடியாக வெர்னிடாவைச் சண்டைக்கு அழைக்கிறார்.

 இருவரும் கையிலும் சமையலறை உபகரணங்களிலும் இருந்த கத்திகளை எடுத்துக்கொண்டு, அவர்களின் சமையலறையில் ஒரு குறுகிய கடுமையான சண்டையில் ஈடுபடுகின்றனர்.
இந்தச் சண்டை உச்சத்தில் இருக்கும்போது, வெர்னிடாவின் இளம் மகள் நிக்கி பள்ளியிலிருந்து திரும்பி வந்துவிடுகிறாள். குழந்தைக்கு முன்னால் சண்டையிட விரும்பாத பிரைட் சண்டையை நிறுத்துகிறார். நிலைமை அமைதியாகிவிட்டதாக எண்ணியபோது, வெர்னிடா சற்றும் யோசிக்காமல்,சீரியல் உணவு அட்டைப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த ஒரு துப்பாக்கியால் பிரைடைச் சுட முயற்சிக்கிறார். ஆனால், பிரைட் மின்னல் வேகத்தில் ஒரு வீசும் கத்தியை எடுத்து, வெர்னிடாவின் நெஞ்சில் வீசியவர், உடனடியாகக் கொன்றும் விடுகிறார். நிக்கி, தன் தாயின் மரணத்தை அநியாயமாகப் பார்க்க நேரிடுகிறது. பிரைட், நிக்கியிடம், "இது என் பழிவாங்கலுக்கு நடுவில் நடந்த ஒரு செயல், நீ பெரியவளாகி உனது தாய்க்குப் பழிவாங்க விரும்பினால், நான் காத்திருப்பேன்" என்று கூறிவிட்டு, தனது பயணத்தைத் தொடர்கிறார்.

நான்கு வருடங்களுக்கு  முன்பு

எல் பாசோ படுகொலை (The El Paso Massacre)

1999-ம் ஆண்டு, தி பிரைட் (The Bride) – அவரது உண்மையான பெயர் இன்னும் வெளிப்படுத்தப்படுவதில்லை.
 டெக்சாஸின் எல் பாசோவில் உள்ள சிறு தேவாலயத்தில்  தனது காதலன் டாமி ப்ளிம்ப்டனைத் திருமணம் செய்துகொள்ள கர்ப்பிணியாக திருமண உடையில் ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறார் ப்ரைட் . இந்த பிரைட் ஒருகாலத்தில் பில்லின்  தலைமையில் இயங்கிய 'டெட்லி வைப்பர்ஸ் அசாசினேஷன் ஸ்குவாட்'டின்  மிக முக்கியமான உறுப்பினராக பில்லின் அந்தரங்க தோழியாகவும் இருந்தவர். வன்முறை நிறைந்த தன் வாழ்க்கையைத் துறந்து, ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ அவர் தீர்மானித்து இந்த நான்கைந்து மாத காலங்களாக எல்பாசோ என்ற பாலைவன சிற்றூரில் சிறிய பழைய ரெகார்ட் கடையில் பணிபுரிகிறார், வரித்துக் கொண்ட புதிய காதலனை கரம் பிடிக்கவே இந்த திருமண ஒத்திகை . ஆனால், இந்த மகிழ்ச்சியான தருணம் எதிர்பாராத விதமாக முடிவுக்கு வருகிறது. திருமண ஒத்திகை நடந்துகொண்டிருக்கும்போதே, பில் தலைமையிலான 'டெட்லி வைப்பர்ஸ்' குழு திடீரென அங்குத் எந்திரத் துப்பாக்கி தாக்குதல் நடத்துகிறது. ,டாமி,அவன் பெற்றோர், உறவினர், பினானிஸ்ட், பாதிரியார் மற்றும் அங்கிருந்த அனைவரும் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
கடுமையான காயங்களுடன், மரணத்தின் விளிம்பில் இருந்தபோது, பிரைட் தன் முன்னாள் காதலனும் தலைவனுமான பில்லிடம், அவன்தான் குழந்தையின் தந்தை என்றும் கடைசி மூச்சில் கூறுகிறார். இருந்தும், பில் இரக்கமின்றி அவள் தலையில் சுட்டு விட்டு, அங்கிருந்து சென்றுவிடுகிறான். 
இந்தச் சம்பவம் பின்னர் 'எல் பாசோ படுகொலை' என்று அழைக்கப்படுகிறது. காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்கையில், பிரைட் மட்டும் உயிருடன் இருக்க அவளை கிண்டல் செய்த ஷெரீஃபின் முகத்தில் உமிழ்ந்த பின்,  ஆழமான கோமா நிலையில் சென்றுவிட்டதை அறிகிறோம்.

பிரைட் மருத்துவமனையில் கோமாவில் இருந்தபோது, 'டெட்பி வைப்பர்ஸ்' குழுவினர் அவளை முழுமையாகக் கொல்ல முயல்கின்றனர். எல்லே டிரைவர் (Elle Driver) என்ற மற்றொரு முன்னாள் குழு உறுப்பினர், செவிலியர் போல மாறுவேடம் அணிந்து வந்து, அவளுக்கு நஞ்சு செலுத்தி கருணைக் கொலை செய்ய முயற்சிக்கிறார். ஆனால், கடைசி நிமிடத்தில், பில் தொலைபேசியில் எல்லேயைத் தொடர்புகொண்டு, ஒரு தற்காப்பற்ற நிலையில் இருப்பவரைக் கொல்வது மரியாதைக்குரியதல்ல என்று கூறி, அந்தத் திட்டத்தை ரத்து செய்கிறான்.

நான்கு ஆண்டுகள் கழித்து,

ஒரு கொசுக்கடியில், பிரைட் கோமாவில் இருந்து திடீரென விழித்தெழுகிறார். அடி வயிற்றை தடவியவர்,தான் இப்போது கர்ப்பமாக இல்லை, தனது குழந்தை பறிபோய்விட்டது என்பதை அறிந்ததும் அவர் அடைந்த துயரமும் கோபமும் அளவிட முடியாததாகிறது. அந்தச் சமயத்தில், ஒரு மருத்துவமனை ஊழியனும், ஒரு பாலியல் வாடிக்கையாளனும்  அவளைப்  வல்லுறவு செய்ய எண்ணி அவள் அறைக்குள் நுழைகின்றனர், மருத்துவமனை ஊழியன் அவளை டாலருக்கு கூட்டித் தந்தபின் வேசலின் டப்பா தந்து விட்டு கடிக்க கீற கூடாது என நிபந்தனை விதித்தவன் 25 நிமிடத்தில் வருகிறேன் என அகல்கிறான்  . பீட்ரிக்ஸ்  தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி, முதலில் வன்முறையாளரின் நாக்கைப் பிடுங்கி தன் பற்களால் உருவியவள் பின்னர் அவனின் கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் கொல்கிறார். அடுத்ததாக, அவளது உடலைக் கோமா நிலையில் விற்றுவந்த மருத்துவமனை ஊழியன் உள்ளே நுழைய அவனின் கால் நரம்பை அறுத்து விழ வைத்தவள் அவன் தலையை அறையின் கதவால் பல முறை மோதி மத்டையை நசுக்கிக்  கொல்கிறார். பிரைட் அந்த ஊழியரின் டிரக்கை எடுத்து கொண்டு, பில் மற்றும் மற்ற 'டெட்பி வைப்பர்ஸ்' குழுவினரைக் கொன்று பழிவாங்கச் சபதம் ஏற்கிறார்.

வெர்னிடாவைக் கொன்ற இரண்டு மாதங்களுக்குப் முன்பு நடந்தது , 

பிரைட் வாள் ஒன்றை தனக்கென பெறுவதற்காக ஜப்பானின் ஓகினாவாவுக்கு  பயணிக்கிறார். அங்கு, புராணக்கதைகளில் வருவது போன்ற புகழ்பெற்ற வாள் தயாரிப்பாளரும், கலைஞருமான ஹட்டோரி ஹன்ஸோவைக்  அவரது சுஷி உணவகத்தில் காணச் செல்கிறார். பில்லுக்கு வாள் செய்துகொடுத்ததற்கான குற்ற உணர்ச்சியால், ஹன்ஸோ வாள் செய்வதை நிறுத்திவிட்டவர்,இந்த புதிய தனக்கு பழக்கமில்லாத சுஷி உணவகத்தை வேடிக்கையாக நடத்தி வருகிறார்.

பிரைட், தான் பழிவாங்கத் துடிக்கும் இலக்கு வேறு யாருமல்ல, தன் முன்னாள் மாணவன் பில்தான் என்று ஹன்ஸோவிடம் கூறுகிறார். பில்லின் அநீதியான செயல்களை அறிந்த ஹன்ஸோ, தன் முன்னாள் சபதத்தை மீறி, பிரைடுக்கு உலகிலேயே மிகச்சிறந்த, கூர்மையான ஒரு சமுராய் வாளை  உருவாக்குவதாக உறுதியளிக்கிறார்.
 ஹன்ஸோ வாள் தயாராகிறது; பிரைட் அடுத்ததாக, தனது பழிவாங்கலை முடிப்பதற்காக டோக்கியோவுக்குப் பயணிக்கிறார்.

பழி வாங்கும் பட்டியலில் முதல் பெயர் ஓ-ரென் இஷி
வெர்னிடா கிரீனைக் கொல்லும்  முன்பு  நடக்கும் பழிவாங்குதல் இது,  
  
அந்த பெருமைமிகு வாளுடன், பிரைட்  தனது முதல் இலக்கைக் குறிக்கிறார்: முன்னாள் 'டெட்லி வைப்பர்' உறுப்பினரான ஓ-ரென் இஷி . சிறு வயதில் தனது பெற்றோரை யக்குஸா  கொன்றதைக் கண்ணால் கண்ட ஓ-ரென், பிற்காலத்தில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு, அந்தக் பீடோஃபைல் கொலையாளியைப் பழிவாங்கிக் கொன்று, தானே டோக்கியோ யக்குஸா தலைவராக உயர்ந்தவர்.(இந்த காட்சிகள் ரத்த களரி காரணமாக காமிக்ஸாக சித்தரிக்கப்பட்டன, ஆளவந்தான் திரைப்படம் பார்த்து உந்துதல் பெற்றிருந்தார் இயக்குனர் குவென்டின் டாரண்டினோ.)
பிரைட் டோக்கியோவுக்குச் சென்று ஓ-ரென்னைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். ஓ-ரென் அப்போது ஒரு பிரபல உணவகத்தில் இருந்தார். அங்குச் சென்ற பிரைட், மின்னல் வேகத்தில் ஓ-ரென்னின் உதவியாளரும் வழக்கறிஞருமான சோஃபி ஃபாடேல்லின்  கையைத் துண்டிக்கிறார். இதைத் தொடர்ந்து, பிரைட், ஓ-ரென்னின் சிறப்புப் படையான கிரேஸி 88 என்றழைக்கப்படும் ஏராளமான வாள்வீரர்களை வாட்போரில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடுமையான இரத்தக் களரியில், பிரைட் அந்த 88 பேரையும் தனி ஒருவராக எதிர்கொண்டு வீழ்த்துகிறார். பின்னர், ஓ-ரென்னின் தனிப்பட்ட மெய்க்காவலராக இருக்கும் பள்ளிச் சீருடை அணிந்த, சங்கிலிக் முட்கள் குண்டு ஏந்திய கோகோ யுபாரியையும்  வென்று கொல்கிறார்.
இதையடுத்து, ஓ-ரென்னும் பிரைடும் அந்த உணவகத்தின் ஜப்பானியத் தோட்டத்தில் நட்சத்திரங்களுக்கு கீழே நேருக்கு நேர் வாள் சண்டையிடுகின்றனர். பனி பொழியும் அந்தத் தோட்டத்தில் நடந்த சண்டையின் முடிவில், பிரைட் ஓ-ரென்னின் தலையின் மேற்பகுதியையே உரித்து  அவரை வீழ்த்துகிறார். கடைசி மூச்சின்போது, ஓ-ரென் பிரைடின் வாளின் தரத்தைப் புகழ்ந்துவிட்டு இறந்துபோகிறார்.

சண்டைக்குப் பிறகு, பிரைட் காயமடைந்த சோஃபி ஃபாடேலைக் கட்டி, ஒரு காரின் டிக்கியில் அடைக்கிறார். பில் மற்றும் மற்ற குழு உறுப்பினர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக, சோஃபியின் எஞ்சியிருந்த கையையும் வெட்டிவிடுகிறார். ஒரு எச்சரிக்கையாகவும் தலைவன் பில்லுக்கு செய்தி சொல்வதற்கும் சோஃபியை உயிருடன் விடுகிறார். கடைசியில், பில், சோஃபியைக் கண்டறிந்து, பிரைடின் மகள்  உயிருடன் இருக்கிறாள் என்று பிரைடுக்குத் தெரியுமா என்று சோஃபியிடம் கேட்கிறார்.

இதற்கு பிறகான அடுத்த பழிவாங்கலில் தான் வெர்னிடா கிரீனை கொன்றதை நாம் இங்கே நினைவு கூற வேண்டும்.

இப்போது கில்பில் இரண்டாம் பாகம் மீண்டும் எல்பாஸோ பாலைவன சிற்றூர் தேவாலயத்தில் துவங்குகிறது.

பிரசவத்திற்குத் தயாராக இருந்த பிரைட், அவரது காதலன் ஆகியோரின் திருமண ஒத்திகையை காண்கிறோம். அங்கு பில் வந்து பிரத்யேக நீண்ட புல்லாங்குழலை இசைக்கிறான்  , ப்ரைட் அவனைக் கண்டு ஆச்சர்யமுற்றவள் ,அவனை மோசமாக நடந்து கொள்ளக் கூடாது என வேண்டுகிறாள், தன் தந்தை என மணமகன் டாம்மியிடம் அறிமுகப் படுத்துகிறாள், அங்கு மீண்டும் திருமண ஒத்திகை விட்ட இடத்திலிருந்து துவங்க நால்வர் குழு உள் நுழைந்து  அனைவரையும் எந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்கிறது,  பில் பிரைடை சுட்டாலும், அவளின் ஜீவ மரணப் போராட்டத்தால்  உயிருடன் இருக்கிறாள், இந்த கொடிய ஐவரை பழிவாங்க சபதம் செய்கிறாள்.

ஓ-ரென் இஷி மற்றும் வெர்னிடா கிரீன் ஆகியோரின் மரணத்திற்குப் பிறகு, பிரைட் அடுத்ததாக பில்லின் இளைய சகோதரனும், மற்றொரு 'டெட்லி வைப்பர்' உறுப்பினருமான பட்டைத்  தேடிச் செல்கிறார். பட் கர்ப்பிணியை மணமகன் வீட்டாரைக் கொன்று கோமாவில் ஆழ்த்திய குற்ற உணர்வால் இப்போது ஒரு  அழுக்குபிடித்த டிரெய்லரில் மிகவும் சாதாரண தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். பிரைட் பட்-ஐ பதுங்கியிருந்து கதவை உடைத்து நுழைந்து தாக்கத் திட்டமிடுகிறார். ஆனால், பில் ஏற்கனவே பட்-ஐ நேரில் எச்சரித்திருந்தான். பட், பிரைட் வருவதை அறிந்தே, அவளைத் தனது டிரெய்லருக்குள் ஒயிலாக காத்து வரவேற்றவன்,  நேருக்கு நேர் சண்டையிடுவதற்குப் பதில், அவர் பிரைடை உப்புக்கற்களால் (rock salt) நிரப்பப்பட்ட இரட்டைக் குழல் ஷாட்கன் குண்டுகளால் இரு மார்பகங்களில் சுட்டு வீழ்த்துகிறான், அவளைச் செயலற்றவளாக ஆக்குகிறான்,விஷக் கொடுக்கு தீண்டியது போன்ற வலியில் துடிக்க விடுகிறான்.
அவளைக் கை கால்களை கட்டிப் போட்ட பிறகு, பட், மற்றொரு முன்னாள் 'டெட்பி வைப்பர்' உறுப்பினரான எல்லே டிரைவரைத்  தொடர்புகொண்டு,
கைப்பற்றிய பிரைடின் வாளை ஒரு மில்லியன் டாலருக்கு விற்கப் பேரம் பேசுகிறான். விடியலில் பணத்தை எடுத்துக்கொண்டு வருவதாக எல்லே உறுதியளிக்கிறாள். அதற்கு முன், பட் ஒரு குள்ள அடியாள் உதவியுடன் இடுகாட்டில் மண்ணைத் தொண்டியவன் பிரைடைச் செயலற்ற நிலையில் ஒரு சவப்பெட்டிக்குள் டார்ச் லைட் உடன் வைத்து . பின்னர், அந்தச் சவப்பெட்டியை ஆணிகளால் அறைந்து புதைக்கின்றான். 
சவப்பெட்டிக்குள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் பிரைட், 

ஒரு பயங்கரமான கடந்த கால நினைவுக்குள் செல்கிறார். பல ஆண்டுகளுக்கு முன், பில் தான் விருப்பத்திற்குரிய தற்காப்புக் கலை குருவான பாய் மேய்யை ப்ரைடுக்கு நேரில் அவர் பள்ளி அடிவாரத்தில் கொண்டு விட்டு அவரிடம் பேசி வந்து வழியனுப்புகிறார். 

பாய் மேய் ஒரு மிருகத்தனமான  புகழ்பெற்ற மாஸ்டர் ஆவார். அவர் "ஐந்து விரல் கொண்டு உள்ளங்கையால் தாக்கி இதயம் நொறுக்கும் இதய நுட்பம்" (Five Point Palm Exploding Heart Technique) என்ற ஒரு மரண அடியை மட்டும், ஒருபோதும் தன் மாணவர்களுக்குக் கற்றுத்தர மறுத்து வந்தவர். அந்த அடிபட்டால், ஐந்து அடிகள் மட்டுமே வைத்து உயிரிழக்க முடியும் என்று நம்பப்படுகிறது. . பாய் மேய், பிரைடை ஆரம்பத்தில் கேலி செய்தும், சித்திரவதை செய்வது போலவும் கடுமையான பயிற்சிகளைக் கொடுக்கிறார். ஆனால் பிரைட் சளைக்காமல் பயிற்சி செய்து, இறுதியில் தனது விடாமுயற்சியால் பாய் மேயின் மரியாதையை மெச்சுதலைப் பெறுகிறார்.
தற்போது, புதைக்கப்பட்ட சவப்பெட்டிக்குள், பிரைட், பாய் மேய்யிடம் கற்றுக்கொண்ட நுட்பங்களில் கல் போன்ற மரப்பலகையை முஷ்டி கொண்டு துளை இடுவதை  பயன்படுத்துகிறார். அவர் தனது கைகளுக்கு அபரிமிதமான பலத்தைக் கொடுத்து, சவப்பெட்டியின் மூடியை உடைத்து, மண்ணை விலக்கி நீக்கி மேலேறி,  உயிருடன் புதைக்கப்பட்டதில் இருந்து தப்பித்து மறு ஜென்மம் எடுத்ததைப் போல வெளியேறுகிறார்.

பிரைட், உயிருடன் புதைக்கப்பட்டதன் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்த சில நிமிடங்களில் மோட்டல் ஒன்றில் நுழைந்து நீர் வாங்கி அருந்தி ஆசுவாசம் அடைகிறாள், ஒரு மலை மீது நின்று பட் ட்ரெய்லரை வேவு பார்க்கையில், எல்லே டிரைவர் பட்-இன் டிரெய்லருக்குள் நுழைவதைப் பார்க்கிறார். எல்லே, பிரைடின் ஹன்ஸோ வாளை பட்-இன் கையில் இருந்து வாங்க ஒரு மில்லியன் டாலர் பணத்தைக் கொண்டு வந்திருந்தாள். பணம் கைமாறியவுடன்,பட் தயாரித்து குடிக்கத்தந்த வோட்கா ஸ்க்ரூ ட்ரைவர் பானத்தை குடித்தபடியே எல்லே, பட்-க்கு ஒரு துரோகம் இழைக்கிறாள். அவர் பணப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மிகவும் ஆபத்தான பாம்பான ப்ளாக் மாம்பாவை  ஏவிவிட்டு, பட்-ஐக் கன்னத்தை கடிக்க விட்டுக் கொல்கிறார். பட் வலியால் துடிதுடித்து இறக்கிறான்.
பட் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திய எல்லே, பில்லுக்கு ஃபோன் செய்தவள், பிரைட்  பட்-ஐக் கொன்றுவிட்டாள் என்றும், அதற்குப் பழிவாங்கத் தான் பிரைடையும் கொன்றுவிட்டதாகவும் பொய் கூறுகிறாள்,அவள் புதைக்கப்பட்ட கல்லறை கல்லை அடையாளம் சொல்கிறாள். இந்த உரையாடலின்போதுதான் பிரைடின் உண்மையான பெயர் வெளிப்படுகிறது: பீட்ரிக்ஸ் கிட்டோ . எல்லே டிரெய்லரை விட்டு வெளியேற முற்படுகையில், பீட்ரிக்ஸ் திடீரென அவளை கதவு திறந்து  வழிமறித்துத் தாக்குகிறார். இரு முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையே ஒரு கடுமையான  சண்டை வெடிக்கிறது, .

 எல்லேயும் பாய் மேய்யிடம் பயிற்சி பெற்றவர் என்பதால், சண்டை உச்சக்கட்ட வேகத்தில் செல்கிறது.
பில் தம்பி பட்டிற்கு தந்த ஹன்ஸோ வாளை ப்ரைட் எடுத்து அது இன்னும் பட்டிடம் இருப்பதையும், பட் அதை  அடமானம் வைத்தேன் என பொய் சொன்னதையும் எல்லேயிடம் உரைக்கிறாள், இருவருக்கும் கடுமையான வாள் போர் நடக்கிறது.

 சண்டையின்போது, எல்லே, ஒரு அதிர்ச்சி தரும் இரகசியத்தை வெளிப்படுத்துகிறாள்: அவர் தான் பாய் மேயை உணவில் விஷம் வைத்துக் கொன்றவள் என்பதே அது. "அந்தப் பயங்கரமான கிழவனுக்கு" (a miserable old fool)  ஏனெனில் பாய் மேய் தன்னுடைய ஒரு கண்ணைப் பிடுங்கியதற்காகப் பழிவாங்க இவ்வாறு செய்ததாகவும் எல்லே கேலி செய்கிறார். இந்த செயல் பீட்ரிக்ஸை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது. ஆவேசமடைந்த பீட்ரிக்ஸ், எல்லேயின் மிச்சமிருந்த மற்றொரு கண்ணையும் பிடுங்கி தரையில் இட்டு மிதித்து கூழாக்கி விடுகிறார். இரண்டு கண்களும் பறிபோன எல்லே, கத்தலுடன் டிரெய்லருக்குள் அரற்றுகிறாள், பீட்ரிக்ஸ், பட்-ஐக் கொன்ற அதே கருப்பு மாம்பா பாம்பு எல்லேயை பார்த்து அங்கேயே சீறிக்கொண்டிருக்கும் நிலையில் அவளைத் தனியே விட்டுவிட்டுச் செல்கிறார்.

தனது இறுதி இலக்குக்காக, பீட்ரிக்ஸ் மெக்சிகோவுக்குச் செல்கிறார். அங்கு ஓய்வுபெற்ற விபச்சாரத் தரகர் எஸ்தெபன் விஹாயோவை சந்தித்து, பில் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டறிய உதவி கேட்கிறார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், பீட்ரிக்ஸ் பில்லின் ஆடம்பரமான வீட்டைக் கண்டறிகிறார், அவரை காவலர்கள் தடுப்பதில்லை.
அந்த வீட்டின் அறையின் கதவை திறக்க, பில்லுடன் ஒரு குழந்தையைப் பார்க்கிறார். அந்தக் குழந்தை வேறு யாருமல்ல, பீட்ரிக்ஸின் மகள்தான்! அவள் பெயர் பி.பி.  என்பதும், நான்கு வயதான அந்தக் குழந்தை உயிருடன் இருப்பதும்தான் பில், சோஃபியிடம் கேட்ட இரகசியம் என அறிகிறோம். 

தனது மகள் உயிருடன் இருப்பதை அறிந்த பீட்ரிக்ஸ், அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைகிறார். அந்த மாலைப்பொழுதை அவர் பில் மற்றும் பி.பி-உடன் அமைதியாக  சொர்க்க தருணம் போல செலவிடுகிறார்.

பி.பி-யைத் தூங்க வைத்த பிறகு, பில், வாள் போரை இரவு கடற்கரையில் வைத்துக்கொள்ளலாமா அல்லது பாரம்பரிய குங்ஃபூ பள்ளி போல விடியலில் வைத்துக் கொள்ளலாமா என்கிறான்.திமிரி புறப்பட்ட ப்ரைடின் முன்பாக இருந்த பழத்தட்டில் இருந்த பழங்களை  துப்பாக்கியால் சுட்டு ப்ரைடை பழச்சாற்றால் குளிப்பாட்டி மகிழ்கிறான், இடது கால் மூட்டில் 
ஒரு உண்மை சொல்லும் மருந்து (truth serum) கலந்த அம்பை பீட்ரிக்ஸின் உடலில் செலுத்தியவன், அது என்ன இழவு என வலியில் 
துடிக்கையில் கேட்க அது பான்தடால்  என்ற மனோதத்துவ மருந்து (குணா ) என்கிறான், அவளைக் கேள்விகள் கேட்டு உண்மைகளை ஆழ்மனதில் இருந்து வெளிக்கொணரத்  தொடங்குகிறான் பில். பீட்ரிக்ஸ், லிசா வாங்கை கொல்ல செல்கையில் அவளின் பெண் பாதுகாவலர் இவள் இருப்பிடத்தை உளவறிந்து ஷாட்கன்னால் கொல்ல வந்த தருணத்தை விவரிக்கிறாள், விமானத்தில் மசக்கை வாந்தி எடுத்தவள், பரிசோதனை கருவி வாங்கி பரி சோதனை செய்து அது நீல நிறமாக மாறி தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்த தருணத்தை அழுதபடி உண்மை விளம்புகிறாள், தனது குழுவினர் மற்றும் வன்முறை வாழ்க்கையை விட்டுவிட்டு, பி.பி-க்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் தரவே வெளியேறியதாக அரற்றிப்  புலம்புகிறார். பில், அவள் இறந்துவிட்டதாகவே நினைத்ததாகவும், மூன்று மாதங்கள் துக்கம் அனுஷ்டித்ததாகவும், ஆனால் அவள் உயிருடன் இருப்பதும், தன் குழந்தை பிறக்கப்போகும் நிலையில், அவளது தந்தை என்று தன்னை தவறாக நினைத்த ஒரு 'முட்டாள்' மனிதரைத் திருமணம் செய்யத் தயாரானதும் தெரிந்தே, அவளைக் கொல்ல உத்தரவிட்டதாகவும் பில் கூறுகிறான்.

அவர்கள் இருவரும் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே வாள் சண்டையிடத் தொடங்குகின்றனர். ஆனால், பீட்ரிக்ஸ் தனது ஹன்ஸோ வாளை பில் தன் கழுத்தை துண்டாக்க பிரயோகிக்க , அந்த வாளை பில்லின் வாள் உறையில் லாவகமாகப் பிடித்துச் சிக்க வைக்கிறார். அந்தச் சமயத்தில், துரிதமாக பாய் மேய் அவருக்கு மட்டும் கற்றுக்கொடுத்த, ஐந்து விரல் உள்ளங்கை இதயம் நொறுக்கும்  நுட்பத்தால் பில்லின் மார்பில் ஒத்தி அடிக்கிறார். பாய் மேய் இவளுக்கு இதைச் சொல்லித் தந்துவிட்டாரா என்று ஆச்சரியத்துடன் உணர்ந்த பில் இதை கேட்க அவள் ஆமோதிக்கிறாள்,ஏன் முன்பே சொல்லவில்லை ? என கேட்க , தெருயவில்லை , நான் ஒரு பேட் பெர்சன், என்கிறாள், அதற்கு , பில் யு ஆர் நாட் ய பேட் பெர்சன், யூ ஆர் ய டெர்ரிஃபிக் பெர்சன் , மை ஃபேவரிட் பெர்சன் என்றவன், தன்னை உடையை சீர்ப்படுத்திக் கொண்டு , வாயில்  வழியும் ரத்தத்தை துடைத்துக் கொண்டவன், தான் பார்க்க எப்படி இருக்கிறேன் எனக் கேட்கிறான், விடைபெற தயாராக உள்ளதாக தோற்றமளிக்கிறாய் என்கிறாள், நாற்காலியை விட்டு எழுந்து பின்னே செல்கிறான் பில், 
 பீட்ரிக்ஸுடன் இப்படி அழகாக சமாதானமாகிறான் பில், அவளிடமிருந்து விடைபெற்று, ஐந்து அடிகளை எடுத்து வைக்கிறான் ஆறாவது அடியில், ரத்தம் வெளியேறி, பில் நிலத்தில் சாய்ந்து இறந்துபோகிறான்.

தன் ஐந்தாம் பழிவாங்கலை முடித்த பீட்ரிக்ஸ் கிட்டோ, தனது மகள் பி.பி-யுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காகப் பயணிக்கையில் கில் பில் இரண்டாம் பாகம் நிறைவடைகிறது.

கில் பில் திரைப்படத்தின் இரு பாகங்களையும் நம் வீட்டுப் பெண்களைப் பார்க்கச் செய்ய வேண்டியதன் காரணம் உண்டு, அது பழிவாங்கலைத் தாண்டிய பெண்ணிய வலிமையின்  ஒரு தீவிரமான சித்திரத்தை வழங்குவதாலே ஆகும்.

பிரைட் என்ற பீட்ரிக்ஸ் கிட்டோ கதாபாத்திரம், அநீதி, துரோகம் மற்றும் உடல் ரீதியான வன்முறை ஆகியவற்றால் அழிக்கப்பட்ட ஒரு பெண்ணாக ஆரம்பித்து, தனது சொந்த ஆற்றலால் மறுபிறவி எடுத்து, தனது வாழ்வை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தின் சின்னமாக இருக்கிறாள். 

அவள் தனது தாய்மை உரிமைக்காகவும், தன் மீதான வன்முறைக்காகவும் தனி ஒருவராக எழுந்து, உலகிலுள்ள வலிமையான எதிரிகளை எதிர்கொள்கிறாள். இந்தப் படம், பெண்கள் தங்கள் உணர்ச்சிக் கோபத்தையும், மன உறுதியை வெளிப்படுத்தவும், இலக்குகளை அடையப் பயன்படுத்தவும் முடியும் என்பதைக் காட்டுகிறது.

 பிரைடின் கதை, பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், அமைதியான மற்றும் சமரசமான முடிவுகளுக்குப் பதிலாகத் தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக எதிர்த்துப் போராடவும் தயங்கக்கூடாது என்ற செய்தியை வலுவான ஆக்‌ஷன் பாணியில் கடத்துகிறது. இது, பாலினப் பாகுபாடுகளை உடைத்து, ஒரு பெண் தனக்கான நீதியை தானே நிலைநாட்ட முடியும் என்று கூறுவதன் மூலம், பெண்களுக்கு ஒரு அசாதாரணமான உத்வேகத்தை  அளிக்கிறது.

வீட்டின் அறைக்குள் வளர்க்க ஏற்ற ஆர்கிட் மலர்கள் ஃபெங்ஷூய் வழிகாட்டி


ஆர்க்கிட் பூச்செடிகள், ஃபெங்ஷூய் தத்துவத்தில் மிகவும் அதிர்ஷ்டமான மற்றும் சக்திவாய்ந்த தாவரங்களாகக் கருதப்படுகின்றன. 

படத்தில் உள்ள ஆன்கிடியம் ஆர்க்கிட் ட்விங்கிள் போன்ற ஆர்க்கிட்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும், வாழ்க்கையில் பல்வேறு நன்மைகளைக் கொண்டுவரவும் உதவுகின்றன. 

ஆர்க்கிட் செடிகள், குறிப்பாக அவற்றின் மென்மையான மற்றும் அழகிய மலர்கள், அன்பு, நேர்த்தி மற்றும் இணக்கமான உறவுகளை ஈர்க்கும் குறியீடாகக் கருதப்படுகின்றன. 

இது ஒரு இணக்கமான துணையைத் தேடுபவர்களுக்கும், ஏற்கனவே உள்ள உறவுகளை பலப்படுத்த விரும்புபவர்களுக்கும் சிறந்தது. இது கருவுறுதல் மற்றும் செழிப்பையும் குறிக்கிறது. 

ஆர்க்கிட்கள் வீட்டில் அதிர்ஷ்டம், மிகுதி மற்றும் செல்வச் செழிப்பைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. தங்க நிறம் கலந்த மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பூக்களைக் கொண்ட ஆன்கிடியம் ட்விங்கிள், குறிப்பாக செல்வத்தை ஈர்க்க உதவும். இந்த பூச்செடிகள், சுற்றுப்புறத்தில் ஒரு அமைதியான, நேர்த்தியான மற்றும் நேர்மறை அதிர்வை உருவாக்குகின்றன. 

இது வீட்டிற்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். ஆர்க்கிட் அதன் உன்னதமான அழகு மற்றும் மென்மைக்கு பெயர் பெற்றது. இது வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதுடன், ஒரு நேர்மறை மற்றும் மகிழ்ச்சியான உணர்வை அளிக்கிறது. 

ஃபெங்ஷூய் படி, ஆர்க்கிட் செடியின் நிறம் மற்றும் நீங்கள் பெற விரும்பும் பலனுக்கு ஏற்றவாறு அதை சரியான திசையில் வைப்பது அதன் நன்மைகளை அதிகரிக்கும். 

அன்பு மற்றும் உறவு மேம்பாட்டிற்காக தென்மேற்கு திசையிலும், தொழில் வளர்ச்சி மற்றும் பயணத்திற்காக வடக்கு திசையிலும், செல்வம் மற்றும் செழிப்புக்காக தென்கிழக்கு திசையிலும் வைக்கலாம். நுழைவு வாயில் அல்லது வரவேற்பு அறையிலும் வைக்கலாம்.

 படுக்கையறையில் வைப்பது உறவுகளில் அமைதி மற்றும் அன்பை மேம்படுத்தும். ஆன்கிடியம் ட்விங்கிள் செடியில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் பூக்கள் இருப்பதால், இது பொதுவாக அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் அமைதி ஆகிய பலன்களுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

வீட்டின் உள்ளே இந்த ஆர்க்கிட்டை வளர்க்கும் போது, அதற்கு பிரகாசமான, ஆனால் நேரடி சூரிய ஒளி இல்லாத வெளிச்சம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். 

பொதுவாக கிழக்கு நோக்கிய ஜன்னல் ஓரத்தில் வைப்பது சிறந்தது, அங்கு காலையில் மென்மையான சூரிய ஒளி கிடைக்கும். அதிகபட்ச வெளிச்சம் அதன் இலைகளை எரிக்காமல் இருக்க வடிகட்டப்பட்ட ஒளியாக இருக்க வேண்டும். 

இதற்கு 18°C முதல் 24°C வரையிலான மிதமான வெப்பநிலை தேவை. குளிர்ச்சியான தரைகள் அல்லது ஏசி காற்று நேரடியாகப் படும் இடங்களைத் தவிர்க்கவும்.

 இதற்குத் தண்ணீர் வடியக்கூடிய ஊடகமான மரப்பட்டை, பெர்லைட் கலவை அல்லது ஸ்பேக்னம் பாசியைப் பயன்படுத்த வேண்டும். இந்த ஆர்க்கிட், நீரை அதிகம் சேமிக்கும் திறன் கொண்ட சிறிய, உருண்டையான தண்டுகளைக் கொண்டுள்ளது. 

எனவே, இதற்குத் தண்ணீர் அதிகமாக ஊற்றக் கூடாது. பொதுவாக, கோடை மற்றும் வசந்த காலங்களில் வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை நீர் வார்க்க வேண்டும். அடுத்த முறை நீர் வார்க்கும் முன், தொட்டியில் உள்ள ஊடகம் முழுவதுமாக காய்ந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

இதை உங்கள் விரலை ஊடகத்தில் சுமார் ஒரு அங்குலம் வரை நுழைத்து சோதிக்கலாம் அல்லது தொட்டியின் எடையைத் தூக்கிப் பார்க்கலாம்.

 குளிர்காலத்தில் செடியின் வளர்ச்சி குறையும் போது, நீர்ப்பாசன இடைவெளியை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை என மேலும் குறைக்கலாம். ஆன்கிடியம் ட்விங்கிள் ஆர்க்கிட் ஆண்டு முழுவதும் பூக்கும் திறன் கொண்டது என்றாலும், பொதுவாக இது இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தின் ஆரம்பத்தில் மிக அதிகமாகப் பூக்கும்.

 போதுமான ஒளியும், இரவில் வெப்பநிலை லேசாகக் குறைவதும் புதிய பூக்களை உருவாக்கத் தூண்டும் முக்கிய காரணங்களாகும். பூக்கள் பொதுவாக பல வாரங்கள் வரை நீடிக்கும். ஆன்கிடியம் ட்விங்கிள் ஆர்க்கிட் அதன் கவர்ச்சியான நறுமணத்திற்காக மிகவும் விரும்பப்படுகிறது. 

இதன் வாசனையானது இனிமையாகவும், வெண்ணிலா போன்ற வாசனையுடனும் இருக்கும். பொதுவாக, இதன் நறுமணம் பகல் நேரங்களில் குறிப்பாக காலையில் பிரகாசமான ஒளி இருக்கும்போது மிக அதிகமாக உணரப்படும். லேசான சாக்லேட் கலந்த வெண்ணிலா போன்ற இனிப்பு வாசனையை இது அளிக்கும், இது வீட்டிற்குள் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் இனிமையான சூழலைக் கொடுக்கும்.

Orchid flowering plants are considered highly auspicious and powerful plants in the philosophy of Feng Shui.

Orchids, like the Oncidium Orchid Twinkle shown in the image, help to attract positive energy into the home and bring various benefits to life.

Orchid plants, particularly their delicate and beautiful flowers, are seen as a symbol of attracting love, elegance, and harmonious relationships.

This is excellent for those seeking a harmonious partner and for those wishing to strengthen existing relationships. It also symbolizes fertility and prosperity.
Orchids are believed to bring good fortune, abundance, and wealth to the home. The Oncidium Twinkle, with its golden-tinged yellow and white flowers, is especially helpful in attracting wealth. These flowering plants create a peaceful, elegant, and positive vibration in the surrounding environment.
This can help establish harmony inside the home and reduce stress. The Orchid is renowned for its classic beauty and delicacy. It enhances the home's decor and imparts a positive and joyful feeling.

According to Feng Shui, placing the orchid plant in the correct direction corresponding to the color of the plant and the desired benefit will maximize its advantages.

It can be placed in the Southwest direction for love and relationship enhancement, the North direction for career growth and travel, and the Southeast direction for wealth and prosperity. It can also be placed near the entrance or in the reception room.

Placing it in the bedroom will enhance peace and love in relationships. Since the Oncidium Twinkle plant has white and yellow flowers, it is generally considered suitable for the benefits of luck, prosperity, and peace.

When growing this orchid indoors, ensure it receives bright, but not direct, sunlight.

Placing it near an East-facing window is generally best, where it gets gentle morning sun. The maximum light should be filtered so as not to burn its leaves.
It requires a moderate temperature between 18°c and 24°c  Avoid cold floors or areas where A/C air blows directly onto it.

It should be potted in a well-draining medium like a bark and perlite mix or sphagnum moss. This orchid has small, rounded pseudobulbs that store water.

Therefore, it should not be overwatered. Generally, water once or twice a week during the summer and spring. Before watering next time, ensure the medium in the pot is completely dry.
You can test this by inserting your finger about an inch into the medium or by lifting the weight of the pot.

During winter, when the plant's growth slows down, you can further reduce the watering frequency to about once every two weeks. Although the Oncidium Twinkle orchid can bloom throughout the year, it generally flowers most profusely in autumn and early winter.

Sufficient light and a slight temperature drop at night are the key factors that stimulate the production of new flowers. The flowers typically last for several weeks. The Oncidium Twinkle orchid is highly valued for its attractive fragrance.

Its scent is sweet and vanilla-like. Generally, its fragrance is felt most strongly during the day, especially in the morning when the light is bright. It gives a sweet fragrance with a hint of chocolate and vanilla, creating a refreshing and pleasant atmosphere indoors.

#DFD
#Collaborative_Design
#Bespoke_planning
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 
#Reclaimed_Architecture
#reclaimedart 
#reclaimedfurniture 
#spritualcure
#commonsense_architecture 
#bioclimaticarchitecture 

Engr. KARTHIKEYAN .V
(Alias GEETHAPPRIYAN)
DMC , DCE , D•ARCH, D•ID , D•VASTHU,D•FENGSHUI, AMIE•ARCH•ENGG.

DfD| Let's Design Online | Dial for Design | dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

Traditional Indian architecture of Sthapatya Veda well known as Vaastu shastra is losing its authenticity due to the rising number of false practitioners. People should understand the scientific value behind the spatial organisation of buildings designed as per Vaastu. It is pity that this shastra is sometimes looked down as a superstitous or religious belief. Through our works we aim to promote healthy living spaces for the well being of humanity in both physical and spiritual sense.

வாஸ்து சாஸ்திரம் என அறியப்படும் ஸ்தபத்ய வேதத்தின் பாரம்பரிய இந்திய கட்டிடக்கலை, அதிகரித்து வரும் தவறான பயிற்சியாளர்களின் எண்ணிக்கையால் அதன் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது.  வாஸ்து படி வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களின் இடஞ்சார்ந்த அமைப்புக்கு பின்னால் உள்ள அறிவியல் மதிப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த சாஸ்திரம் சில சமயங்களில் மூடநம்பிக்கை அல்லது மத நம்பிக்கையாக பார்க்கப்படுவது பரிதாபத்திற்குரியது.  எங்கள் படைப்புகள் மூலம் உடல் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டிலும் மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கான ஆரோக்கியமான வாழ்க்கை இடங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

வின்சென்ட் வான்கோ இறப்புக்கு பிப் கிடைத்த இறவாப்புகழ்

வின்சென்ட் வான்கோவின் (Vincent van Gogh) ஓவியங்களை அவர் எழுதிய கடிதங்களைப் பயன்படுத்தி உலகப் புகழடையச் செய்ததில் அவரது அண்ணன் மனைவி ஜோஹன்னா வான் கோ-போங்கரின் (Johanna van Gogh-Bonger) பங்கு உண்மையிலேயே ஒரு மகத்தான சாதனை ஆகும்.

வின்சென்ட் வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு ஓவியத்தை மட்டுமே விற்றிருந்தார். 1890-ல் வின்சென்ட் இறந்த பிறகு, அவரது சகோதரரும் ஆதரவாளருமான தியோ வான் கோவும் (Theo van Gogh) ஆறு மாதங்களுக்குப் பிறகு இறந்துவிட்டார்.

 கைக்குழந்தையுடன் விதவையான ஜோஹன்னாவிடம், வின்சென்டின் நூற்றுக்கணக்கான ஓவியங்களும், தியோவுடன் வின்சென்ட் பரிமாறிக்கொண்ட முக்கியமான கடிதங்களும் இருந்தன. 

அந்தக் கடிதங்களில் வின்சென்ட் தனது கலைப் பார்வை, எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருந்தார்.
வின்சென்டின் ஓவியங்கள் ஆரம்பத்தில் கலை விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டபோது, ஜோஹன்னா ஒரு விவேகமான உத்தியைப் பயன்படுத்தினார்.

 வின்சென்டின் ஓவியங்களை மட்டும் காட்டாமல், அந்தக் கடிதங்களையும் சேர்த்துப் படிக்கச் சொன்னார். ஓவியத்தில் உள்ள உணர்ச்சி ஆழத்தையும், கலைப்படைப்பின் பின்னணியில் உள்ள பார்வைகளையும் இந்தக் கடிதங்கள் தெளிவாக விளக்கின.
கடிதங்களின் மூலம், வின்சென்டின் கலை மேதைமை மட்டுமின்றி, அவரது தனிப்பட்ட போராட்டங்கள் மற்றும் மனக்கிளர்ச்சியூட்டும் கதை ஆகியவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 
இது கலைஞரைப் பற்றி ஆழமான மனிதாபிமான தொடர்பை ஏற்படுத்தி, அவரது வேலையைப் புறக்கணித்தவர்களைக் கூட மனதை மாற்ற உதவியது.

 வின்சென்ட் மற்றும் தியோவின் கடிதங்களை ஜோஹன்னா தொகுத்து 1914 இல் டச்சு மொழியில் வெளியிட்டார். இந்தக் கடிதங்கள் வின்சென்டின் புகழை நிலைநாட்டுவதில் மிகவும் முக்கியப் பங்காற்றின.
ஜோஹன்னா ஒரு விடாமுயற்சியுள்ள கலைஞரின் ஆதரவாளராகவும், புத்திசாலித்தனமான கலை முகவராவும் செயல்பட்டார்.
 முதலில் நெதர்லாந்தில் உள்ள தன்னுடைய வீட்டின் சுவர்களில் ஓவியங்களைத் தொங்கவிட்டு, உள்ளூர் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுடன் பழகி, சிறிய விற்பனை மற்றும் கலை விமர்சகர்களுக்கான காட்சிகளை ஏற்பாடு செய்தார்.

 ஓவியங்களை ஒரே நேரத்தில் மொத்தமாக விற்காமல், சந்தை தேவையை அறிந்து, பொதுமக்கள் பார்க்கக்கூடிய முக்கிய அருங்காட்சியகங்களுக்கும், வெளிநாட்டுக் கலைச் சேகரிப்பாளர்களுக்கும் வின்சென்டின் படைப்புகளை மெதுவாக, ஆனால் திட்டமிட்டுக் கொடுத்தார். இது வின்சென்டின் கலைப்படைப்புகள் உலகம் முழுவதும் பரவ உதவியது.

1905 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஸ்டெட்லிக் அருங்காட்சியகத்தில் (Stedelijk Museum) வின்சென்டின் படைப்புகளின் மிகப்பெரிய கண்காட்சியை (சுமார் 484 படைப்புகள்) ஏற்பாடு செய்தார். இது வின்சென்டின் மதிப்பை நிலைநாட்டுவதில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
 ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலும், பின்னர் அமெரிக்காவிலும் கூட வின்சென்டின் கலையை கொண்டு செல்ல அயராது உழைத்தார்.

ஜோஹன்னா, தன் கணவர் தியோ, தன் அண்ணன் வின்சென்டின் கலையின் மீது வைத்திருந்த ஆழமான நம்பிக்கையை நிறைவேற்றுவதையே தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டார். தனது மறைவு வரை (1925), வின்சென்டின் புகழை உறுதிசெய்யும் பணியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டார்.
ஜோஹன்னாவின் அயராத முயற்சிகள், விடாமுயற்சி மற்றும் வின்சென்டின் கலையின் மீதும், அவரது கதையின் மீதும் அவர் கொண்ட ஆழமான நம்பிக்கை ஆகியவை, வின்சென்ட் வான் கோவை இன்று உலகமே போற்றும் "துன்பப்படும் மேதை"யாகவும், வரலாற்றின் மிகப் பெரிய ஓவியர்களில் ஒருவராகவும் மாற்றியது.

வின்சென்ட் வான் கோவின் கடிதங்கள் அவரது கலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷம். இவை வெறும் தகவல் பரிமாற்றங்கள் அல்ல; அவை வின்சென்டின் ஆழமான சிந்தனைகள், கலைக் கோட்பாடுகள், மற்றும் உணர்ச்சிப் போராட்டங்களின் நேரடிப் பதிவுகள்.

1. கலைக் கோட்பாடுகள் மற்றும் நுட்பம்
வின்சென்ட் தனது கடிதங்களில் தனது ஓவியங்களைப் பற்றி விரிவாக எழுதினார்.

 வண்ணக் கோட்பாடு (Color Theory): 

ஒரு குறிப்பிட்ட வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன், அந்த வண்ணம் எந்த உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் விளக்கினார். உதாரணமாக, ஆரஞ்சு நிறத்தை நீலத்துடன் இணைக்கும்போது ஏற்படும் அதிர்வு பற்றிய தனது ஆய்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.

 வெளிப்பாடு (Expression):

 அவர் தனது ஓவியங்கள் வெறும் பிரதிபலிப்புகள் அல்ல, அவை தனது உணர்ச்சிகளின் நேரடி வெளிப்பாடு என்று வலியுறுத்தினார். ஒரு ஓவியத்தில் உள்ள பொருட்களை எப்படிப்பட்ட உணர்வுடன் பார்க்க வேண்டும் என்பதை அவர் விளக்குவார்.

 படைப்பு செயல்முறை: 

ஒரு ஓவியத்தை எப்படிக் கருக்கொண்டார், அதை எப்படித் திட்டமிட்டார், எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன போன்ற தனது அன்றாடப் படைப்பு செயல்முறைகளை அவர் ஆவணப்படுத்தினார்.

2.தியோ உடனான ஆழமான பிணைப்பு

சுமார் 650 கடிதங்கள் வின்சென்ட் தன் சகோதரன் தியோ வான் கோவுக்கு எழுதியவை. இந்த கடிதங்கள் வின்சென்டின் வாழ்க்கையின் அச்சாணியாக இருந்தன.
 வின்சென்டிற்கு தியோ தொடர்ந்து பணம் அனுப்பினார், மேலும் அவர் வரைவதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் தங்குமிடத்திற்கு உதவி செய்தார். இந்த கடிதங்கள் இந்த உதவிகளுக்கு வின்சென்ட் காட்டிய நன்றியையும், எதிர்காலத்தைப் பற்றிய அவரது கவலைகளையும் பிரதிபலிக்கின்றன.
 வின்சென்ட் தனது புதிய ஓவியங்களைப் பற்றி தியோவிடம் விவாதிப்பார், அவற்றை தியோவுக்கு அனுப்புவார், மேலும் தியோவின் கருத்துக்களையும், பாராட்டுக்களையும் ஆவலுடன் எதிர்நோக்குவார். தியோவே வின்சென்டின் முதல் மற்றும் மிக முக்கியமான விமர்சகராக இருந்தார்.

வின்சென்ட் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில் தீவிர மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.
 இந்த கடிதங்கள் அவரது மன அழுத்தத்தின் உச்சக்கட்டத்தையும், தனிமையின் வேதனையையும், அத்துடன் பிழைக்க வேண்டும் என்ற அவரது தீராத ஆசையையும் வெளிப்படுத்துகின்றன.

 ஆரம்ப காலங்களில் ஒரு பிரசங்கியாகவோ அல்லது கலைஞனாகவோ தான் சாதிக்க நினைத்தவற்றில் தோல்வியுற்றதால் ஏற்பட்ட ஏமாற்றங்கள் பற்றிய சுய பரிசோதனைகளும் இதில் அடங்கும்.

இந்தக் கடிதங்கள் புத்தகமாக வெளியிடப்பட்டபோது, வின்சென்ட் ஓவியத்தை வரைய 'ஏன்' வரைந்தார் என்பதை உலகிற்கு உணர்த்தியது. அவரது ஓவியங்களில் காணப்படும் தீவிரமான உணர்ச்சி வெளிப்பாட்டின் பின்னால் இருந்த ஆழமான மனிதனைப் புரிந்துகொள்ள இந்தக் கடிதங்கள் உதவின.

இந்தக் கடிதங்கள் இல்லையென்றால், வின்சென்ட் வெறும் "பைத்தியக்காரக் கலைஞன்" என்று மட்டுமே அறியப்பட்டிருக்கலாம்.
 ஆனால், ஜோஹன்னா வெளியிட்ட கடிதங்கள் அவரை ஒரு தத்துவவாதி, தீவிரமான சிந்தனையாளர், மற்றும் ஒரு தூய கலை மேதை என்று உலகுக்கு அறிமுகப்படுத்தின.
இவ்வளவு ஆழமான தனிப்பட்ட மற்றும் கலை ரீதியான ஆவணங்களை வேறெந்தக் கலைஞரும் வழங்கியதில்லை. இப்படியாக வான் கோவின் கலையை உலகப் புகழடையச் செய்ததில் ஜோஹன்னாவுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது.

வின்சென்ட் வான் கோவின்  ஓவியங்கள் அவரது தனிப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் இயற்கையின் மீது அவர் கொண்டிருந்த பிணைப்பின் நேரடி வெளிப்பாடுகளாகும். 
வான் கோவின் தனித்துவமான ஓவியப் பாணி
வான் கோவின் படைப்புகளை வேறுபடுத்தும் முக்கிய அம்சங்கள்:

தீவிரமான வண்ணப் பயன்பாடு (Intense Coloration):

 அவரது ஓவியங்களில் வண்ணங்கள் பொதுவாக அதீத பிரகாசத்துடன், சில சமயங்களில் இயற்கையான நிறங்களுக்கு முரணாகப் பயன்படுத்தப்படும். இது ஓவியத்தின் உணர்ச்சி மற்றும் வெளிப்பாட்டுத் தன்மையை அதிகரிக்கும்.

 தெளிவான, தடித்த தூரிகை வேலை (Visible, Thick Brushstrokes): 

வான் கோவின் கையொப்பமே அவரது அடர்த்தியான மற்றும் தெளிவாகப் புலப்படும் தூரிகைத் தடங்கள்தான். இது ஓவியத்தின் மேற்பரப்புக்கு ஒருவிதமான இயக்கம் (Movement) மற்றும் உயிரோட்டம் (Vibrancy) கொடுக்கிறது.

 சுழல் மற்றும் அலைகள் (Swirls and Waves): 

அவர் வானம், நட்சத்திரங்கள், மரங்கள் போன்ற இயற்கை வடிவங்களை சுழல் வடிவிலும், அலை போன்ற கோடுகளிலும் வரைந்தார். இது பார்ப்பவருக்கு ஒருவிதமான ஆற்றலை உணர்த்தும்.

முக்கியமான ஓவியங்கள் மற்றும் அவற்றின் விளக்கம்

1. ஸ்டாரி நைட் (The Starry Night - 1889)
  இது அவரது மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. ஓவியத்தில் இரவு வானம் சுழலும் சக்தி வாய்ந்த சக்தியாக வரையப்பட்டுள்ளது. நட்சத்திரங்கள் பிரகாசமான, சுழலும் ஒளி வட்டங்களாக உள்ளன. வானத்தின் சுழற்சி ஆற்றலும், கீழே உள்ள அமைதியான கிராமத்தின் நேர் கோடுகளும் ஒரு தீவிரமான மாறுபாட்டைக் காட்டுகின்றன. ஓவியத்தின் இடதுபுறத்தில் உள்ள சைப்ரஸ் மரம் (Cypress Tree) தீப்பிழம்பு போல வானத்தை நோக்கி எழுந்து நிற்கிறது. இது மனக்கிளர்ச்சி மற்றும் பிரபஞ்சத்தின் அசாத்திய சக்தி பற்றிய வான் கோவின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

2. சூரியகாந்திப் பூக்கள் (Sunflowers - 1888-1889)

 வான் கோ இந்தத் தொடர் ஓவியங்களை (Vase of Sunflowers) பிரகாசமான மஞ்சள் நிறத்தின் மீதான தனது அன்பின் வெளிப்பாடாக வரைந்தார். அவர் மஞ்சள் நிறத்தை நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியின் நிறமாகக் கருதினார். இந்த மலர்கள் வெவ்வேறு நிலைகளில் (பூத்தவை, உதிர்ந்தவை) வரையப்பட்டிருக்கும். இந்த ஓவியங்கள் வாழ்க்கைச் சுழற்சியையும், தற்காலிக அழகையும் கொண்டாடுகின்றன. அர்ல்ஸ் (Arles) நகரில் உள்ள தனது "மஞ்சள் வீட்டில்" சக கலைஞரான பால் கோகினுக்காக இந்த ஓவியங்களை அவர் வரைந்தார்.

3. உருளைக்கிழங்கு உண்பவர்கள் (The Potato Eaters - 1885)

வான் கோவின் ஆரம்பகால, இருண்ட படைப்புகளில் இது முக்கியமானது. நெதர்லாந்தில் உள்ள ஏழை விவசாயிகளின் வாழ்க்கையை இது சித்தரிக்கிறது. மங்கிய விளக்கு வெளிச்சத்தில், குடும்பத்தினர் தங்கள் கடின உழைப்பால் விளைவித்த உருளைக்கிழங்கை உண்கின்றனர். இவர்களின் முகங்கள் மற்றும் கரங்கள் கடினமான உழைப்பைக் குறிக்கும் வகையில் கோணலாகவும், கரடுமுரடாகவும் வரையப்பட்டுள்ளன. இது அவர்களின் எளிய மற்றும் உண்மையான வாழ்க்கைக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் வரையப்பட்டது.

4.  அர்ல்ஸில் படுக்கையறை (Bedroom in Arles - 1888)

 இந்த ஓவியம் வான் கோவின் "மஞ்சள் வீட்டில்" உள்ள அவரது படுக்கையறையின் அமைதியான காட்சியைப் படம்பிடிக்கிறது. அவர் தனது மன அமைதி தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் பிரகாசமான,  அமைதியான வண்ணங்களைப் பயன்படுத்தினார். 
சுவர்கள் மற்றும் தரையின் கோடுகள் சற்றே கோணலாக இருந்தாலும், இந்த ஓவியம் ஓய்வு, எளிமை மற்றும் தனிப்பட்ட ஆறுதல் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் வான் கோவின் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களையும், வெவ்வேறு மனநிலைகளையும், கலை மீதான அவரது தொடர்ச்சியான சோதனைகளையும் பிரதிபலிக்கின்றன.

"சாதிஞ்செனே ஓ மனஸா"

"சாதிஞ்செனே ஓ மனஸா" என்ற பஞ்சரத்னக் கீர்த்தனையின் தெலுங்கு கீர்த்தனையின் தமிழ் வரிகள் இவை . இதில் ஒவ்வொரு வரியும் தமிழில் சரியாக உச்சரிக்கும் விதமாகப் பிரித்துத் தரப்பட்டுள்ளது.

சாதிஞ்செனே ஓ மனஸா 
ராகம்: ஆரபை, தாளம்: ஆதி

பல்லவி

ஸாதிஞ்செனே ஓ மநஸா

அனுபல்லவி

போதிஞ்சின ஸந்மார்க வஸநமுல
பொங்கு ஜேஸி தா ப்டிந பட்டு

ஸ்வர ஸாஹித்யம்
ஸமயானிகி தகு மாட்டலாடேனே,

 1. தேவகி வஸுதேவுல நெகிடிஞ்சினடு

 2. ரங்கேஸுடை ஸத்கங்கா ஜநகுடை
   ஸங்கீத ஸம்ப்ரதாயகுடை

 3. கோபீ மநோரத மொஸங்க லேகன
   கெலியு ஜேஸே வாடு

 4. வநிதலு ஸதா ஸொக்கிஞ்சுனு
   மரோக்க ஜேஸே பரமாத்மு டதியுகக்க
   யஸோதா தநயுடஞ்சு முதம்புநநு
   முது பெட்ட நவ்வுச்சுண்டு ஹரி

 5. பரம பக்த வத்ஸலுடு ஸுகுண
   பாராவருமு டஜ ஜந்மமுல
   நகூடீ கலிபதலா தீர்வுவடு நநுச்சானே
   ஹ்ருதாம்புஜமுந ஜூச்சுச்சுண்டக

 6. ஹரே ராமசந்த்ர ரகுலேஸ ம்ருது பாஷா
   ஸேஸ ஸயந பர நாரீ ஸோதர ராஜ விராஜ துரக
   ராஜ ராஜ விநுத நிராமயவ கந ஸரஸீருஹ தளாக்ஷ,
   யநுச்சு வேடு கொந்நநு தா ப்ரோவு காநு

 7. ஸ்ரீ வேங்கடேஸ ஸுப்ரகாஸ ஸர்வோந்நத ஸஜ்ஜந மநஸ
   நிகேதந கநகாம்பரஶர லஸந் மகர குண்டல விராஜித
   ஹரே, யந்நுச்சு நீ பொகடகா த்யாகராஜ கேயுடு
   மாநவேந்த்ருடயின ராமசந்த்ருடு

சரணம்

 1. ஸமயானிகி தகு மாட்டலாடேனே,
   ஸத் பக்துல நடத லிட்காநந,
   அமரிககா நா பூஜ காநேந
   அலுகவதநநே
 
2. விமுகுலு தோ ஜேர போக்கு மநநே
   வேத கல்லிந த்ளுகே மநநே
   தம ஸமாதி ஸுக த்யாகுடக்கு
   ஸ்ரீ த்யாகராஜ நுதுடு செந்த ராகனே

 தியாகராஜரின் "சாதிஞ்செனே ஓ மனஸா" என்ற தெலுங்கு கீர்த்தனையின் தமிழ்  வடிவம்  மற்றும் அதற்குக் கீழே ஒவ்வொரு வரியின் தமிழ் அர்த்தமும் கொடுக்கப்பட்டுள்ளது.

பல்லவி
ஸாதிஞ்செனே ஓ மநஸா
(சாதனை செய்துவிட்டான்/வென்றுவிட்டான் ஓ மனமே)

அனுபல்லவி

போதிஞ்சின ஸந்மார்க வஸநமுல
(நான் உபதேசித்த நல்ல வழியின் வார்த்தைகளை)

பொங்கு ஜேஸி தா ப்டிந பட்டு
(பொய்யாக்கி, அவன் தான் பிடித்த பிடிவாதத்தை/கொள்கையை)

ஸ்வர ஸாஹித்யம்

ஸமயானிகி தகு மாட்டலாடேனே,

(சமயத்திற்கு ஏற்றவாறு பேசுபவனல்லவா அவன்)

 1. தேவகி வஸுதேவுல நெகிடிஞ்சினடு

   (தேவகி வசுதேவர்களையும் கேலி செய்தது போல)

 2. ரங்கேஸுடை ஸத்கங்கா ஜநகுடை

   (ரங்கநாதனாக, நல்ல கங்கைக்குத் தந்தையாகவும்)

   ஸங்கீத ஸம்ப்ரதாயகுடை
   (ஸங்கீதத்தின் மரபை அறிந்தவனாகவும் இருந்தும்)

 3. கோபீ மநோரத மொஸங்க லேகன

   (கோபியரின் ஆசையைப் பூர்த்தி செய்ய இயலாமல்)

   கெலியு ஜேஸே வாடு
   (வெற்றி பெற்றுவிட்டதாகக் காட்டுபவன்)

 4. வநிதலு ஸதா ஸொக்கிஞ்சுனு

   (பெண்களை எப்போதும் மயங்க வைப்பான்)

   மரோக்க ஜேஸே பரமாத்மு டதியுகக்க

   (வணங்கச் செய்யும் பரமாத்மாவாக இருந்தும்)

   யஸோதா தநயுடஞ்சு முதம்புநநு

   (யசோதையின் மகன் என்று சந்தோஷத்துடன்)

   முது பெட்ட நவ்வுச்சுண்டு ஹரி

   (முத்தம் கொடுத்தால் சிரிப்பவனல்லவா ஹரி)

 5. பரம பக்த வத்ஸலுடு ஸுகுண

   (உயர்ந்த பக்தர்களை நேசிப்பவன், நல்ல குணங்கள்)

   பாராவருமு டஜ ஜந்மமுல
   (நிறைந்த கடல்; பிறப்பில்லாதவன்)

   நகூடீ கலிபதலா தீர்வுவடு நநுச்சானே

   (சேர்ந்து கலியுகத்தின் துன்பங்களைப் போக்குபவன் என்று)

   ஹ்ருதாம்புஜமுந ஜூச்சுச்சுண்டக

   (என் தாமரை மனதிலே பார்த்துக் கொண்டிருக்கையில்)

 6. ஹரே ராமசந்த்ர ரகுலேஸ ம்ருது பாஷா

   (ஹரே ராமசந்திரா, ரகு குலத் தலைவா, மென்மையான பேச்சாளா)

   ஸேஸ ஸயந பர நாரீ ஸோதர ராஜ விராஜ துரக

   (ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவனே, அடுத்த பெண்களை சகோதரியாகப் பார்க்கும் அரசே, பிரகாசிக்கும் குதிரையையுடையவனே)

   ராஜ ராஜ விநுத நிராமயவ கந ஸரஸீருஹ தளாக்ஷ,

   (மன்னர்கள் மன்னனால் வணங்கப்பட்டவனே, நோயில்லாதவனே, பெரிய தாமரை இதழ் போன்ற கண்களையுடையவனே,)

   யநுச்சு வேடு கொந்நநு தா ப்ரோவு காநு

   (என்று நான் வேண்டிக் கொண்டாலும், அவன் காப்பாற்ற வரவில்லையே)

 7. ஸ்ரீ வேங்கடேஸ ஸுப்ரகாஸ ஸர்வோந்நத ஸஜ்ஜந மநஸ

   (ஸ்ரீ வேங்கடேசா, பேரொளியே, எல்லாவற்றிலும் உயர்ந்தவனே, நல்லவர்களின் மனமே)

   நிகேதந கநகாம்பரஶர லஸந் மகர குண்டல விராஜித

   (வீடாகக் கொண்டவனே, பொன்னாலான ஆடையை அணிந்தவனே, பிரகாசிக்கும் மகரக் குண்டலங்களால் ஒளிவீசுபவனே)

   ஹரே, யந்நுச்சு நீ பொகடகா த்யாகராஜ கேயுடு

   (ஹரே! என்று உன்னைப் புகழும்போது தியாகராஜனால் பாடப்பட்டவன்)

   மாநவேந்த்ருடயின ராமசந்த்ருடு

   (மனிதர்களில் சிறந்தவனான இராமச்சந்திரனே!)

சரணம்

 1. ஸமயானிகி தகு மாட்டலாடேனே,

   (சமயத்திற்கேற்றவாறு பேசுபவனல்லவா அவன்)

   ஸத் பக்துல நடத லிட்காநந,

   (நல்ல பக்தர்களின் நடத்தை இப்படி இருக்கிறதா என்று, ஆச்சரியமாக)

   அமரிககா நா பூஜ காநேந

   (அழகாக என்னுடைய பூஜைகளை ஏற்றுக் கொள்ளவில்லையா?)

   அலுகவதநநே

   (கோபம் கொள்ளாதே என்றல்லவா சொன்னான்?)

 2. விமுகுலு தோ ஜேர போக்கு மநநே

   (எதிர்ப்பவர்களுடன் சேர வேண்டாம் என்றல்லவா சொன்னான்?)

   வேத கல்லிந த்ளுகே மநநே
   (துன்பம் வந்தபோது/கிடைத்தபோது, அந்த நினைவே வேண்டாம் என்றல்லவா சொன்னான்?)

   தம ஸமாதி ஸுக த்யாகுடக்கு

   (அடக்கம், மனதை அடக்கும் சுகத்தைக் கொடுப்பவன்)

   ஸ்ரீ த்யாகராஜ நுதுடு செந்த ராகனே

   (ஸ்ரீ தியாகராஜனால் வணங்கப்படும் அவன் பக்கத்தில் வரவில்லையே)

 தியாகராஜரின்

 "சாதிஞ்செனே ஓ மனஸா" கீர்த்தனையின் அர்த்தம் மட்டும், எந்தப் பாடல் வரிகளும் இல்லாமல், இங்கே தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

பல்லவி

ஓ மனமே! அவன் (ராமன்/கிருஷ்ணன்) தான் நினைத்ததைச் சாதித்துவிட்டான்/வென்றுவிட்டான்.

அனுபல்லவி

நான்  அவனுக்கு உபதேசித்த நல்லொழுக்கம் மற்றும் சன்மார்க்க வழிகளைப் பற்றிய வார்த்தைகளைப் பொய்யாக்கிவிட்டு, தான் பிடித்த பிடிவாதமான கொள்கையை நிலைநாட்டிவிட்டான்.
ஸ்வர சாஹித்யம்
சமயத்திற்கேற்றவாறு பேசுபவனல்லவா அவன்?

 * தேவகி மற்றும் வசுதேவர்களையும் கேலி செய்தது போல (அவர்களைச் சிறையில் வைத்துவிட்டு யசோதையைத் தாயாக ஏற்றது) செயல்பட்டான்.

 * அவன் ரங்கநாதனாக, கங்கைக்குத் தந்தையாக, மற்றும் ஸங்கீத மரபை அறிந்தவனாக இருந்தும்.

 * கோபியரின் ஆசையைப் பூர்த்தி செய்ய இயலாமல், தான் வெற்றி பெற்றுவிட்டதாகக் காட்டுபவன்.

 * பெண்களை மயங்க வைப்பான்; அனைவராலும் வணங்கப்படும் பரமாத்மாவாக இருந்தும், யசோதையின் மகன் என்று சந்தோஷத்துடன் முத்தம் கொடுத்தால் சிரிப்பவனல்லவா ஹரி.

 * பக்தர்களை நேசிப்பவன், நல்ல குணங்கள் நிறைந்தவன், பிறப்பில்லாதவன், பல அவதாரங்கள் எடுத்து கலியுகத்தின் துன்பங்களைப் போக்குபவன் என்று நான் என் மனதிலே பார்த்துக் கொண்டிருக்கையில்,

 * அவனைப் புகழ்ந்து, "ஹரே ராமசந்திரா, ரகு குலத் தலைவா, மென்மையான பேச்சாளா, ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவனே, அனைவராலும் வணங்கப்பட்டவனே, நோயில்லாதவனே, தாமரைக் கண்ணனே" என்று நான் வேண்டிக் கொண்டாலும், அவன் என்னைக் காப்பாற்ற வரவில்லையே.

 * ஸ்ரீ வேங்கடேசா, பேரொளியே, உயர்ந்தவனே, நல்லவர்களின் மனமே வீடாகக் கொண்டவனே, பொன்னாலான ஆடை மற்றும் ஆபரணங்களால் ஒளிவீசுபவனே, "ஹரே!" என்று உன்னைப் புகழும்போது தியாகராஜனால் பாடப்படும், மனிதர்களில் சிறந்தவனான இராமச்சந்திரனே!

சரணம்

 * அவன் சமயத்திற்கேற்றவாறு பேசுபவன்தான். "நல்ல பக்தர்களின் நடத்தை இப்படி இருக்கிறதா?" என்று ஆச்சரியமாக, என்னுடைய பூஜைகளை அவன் ஏற்றுக் கொள்ளவில்லையா? "கோபம் கொள்ளாதே" என்றல்லவா என்னிடம் சொன்னான்?

 * "எதிர்ப்பவர்களுடன் சேர வேண்டாம்" என்றல்லவா சொன்னான்? துன்பம் வந்தபோது/கிடைத்தபோது, "அந்த நினைவே வேண்டாம்" என்றல்லவா சொன்னான்?
 அடக்கம் மற்றும் மன அமைதியைத் தருபவன், ஸ்ரீ தியாகராஜனால் வணங்கப்படும் அவன் பக்கத்தில் வரவில்லையே.

தி ஹேட்ஃபுல் எய்ட்" (2015)

குவென்டின் டாரன்டினோவின் "தி ஹேட்ஃபுல் எய்ட்"(2015), உலக சினிமா மேதைகளின் வரிசையில் ஒரு தனித்துவமான படைப்பாக நிற்கிறது.

 ஒரு பாரம்பரிய வெஸ்டர்ன் திரைப்படத்தின் வெளிப்புறப் பிரம்மாண்டத்தை, ஒரு துப்பறியும் நாடகத்தின் இறுக்கமான, ஒற்றை அறை வடிவத்திற்குள் சுருக்கி, அரசியல், இனவெறி மற்றும் மனித இயல்பின் இரக்கமற்ற தன்மையை ஆழமாக ஆராயும் ஒரு சவாலான முயற்சியை இது மேற்கொண்டது.

 படத்தின் பெரும்பகுதி, உறைபனியால் சூழப்பட்ட ஒரு மவுனப் பேழையைப் போன்ற விடுதிக்குள் நடக்கும்போதும், அதன் உரையாடல்கள், வெளிப்புறப் பனிப்புயலை விடக் கொடூரமான உணர்ச்சிப் புயலைக் கிளப்பின. 

டாரன்டினோ, அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய, இன்னும் ஆறாத காயங்கள் மற்றும் பகைமைகளால் சிதைந்துபோன சமூகத்தின் ஒரு சிற்றுருவத்தை, இந்த எட்டு மனிதர்கள் வழியாகக் காட்டினார். 

இதில், ஆபிரகாம் லிங்கனின் போலியான கடிதம் ஒரு குறியீடாகச் செயல்பட்டு, கறுப்பின மேஜருக்கும் வெள்ளைக்கார பவுண்டி ஹண்டருக்கும் இடையில் ஒரு பொய்யான நம்பிக்கைப் பிணைப்பை உருவாக்கியது.

 இந்தத் தந்திரமே, வெள்ளையினச் சமூகத்தில் பிழைக்க ஒரு கறுப்பின மனிதன் பயன்படுத்தும் உத்தி என்பதை வெளிப்படையாகப் பேசியது.

இந்தப் படத்தின் திரைக்கதை, அதன் நாடகத்தன்மை, நுட்பமான நகைச்சுவை மற்றும் திடீர் வன்முறைக்கான நேரத்தைக் கனகச்சிதமாகப் பயன்படுத்தியது. வழக்கமான நேர்கோட்டுக் கதையைக் கைவிட்டு, இடை நடுவே ஒரு விரிவான ஃப்ளாஷ்பேக் மூலம், விடுதிக்குள் இருந்த ரகசியம் முழுவதையும் வெளிப்படுத்தியது ஒரு புத்திசாலித்தனமான உத்தி.

 இது பார்வையாளர்களை, வெறும் பார்வையாளராக இருக்க விடாமல், நடந்த கொடூரங்களுக்குச் சாட்சியாக மாற்றியது. சாம்வெல் எல். ஜாக்சன், கர்ட் ரஸ்ஸல், மற்றும் ஜெனிஃபர் ஜேசன் லீ ஆகியோரின் நடிப்பு, இந்தக் கதாபாத்திரங்களின் சிக்கலான,  வினோதமான உணர்ச்சிகளைக் கச்சிதமாகக் கொண்டு வந்தது. 

குறிப்பாக, கைவிலங்கிடப்பட்டு ஒரு சடலத்துடன் பிணைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், தனது சதித்திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் டெய்ஸி டொமெர்குவின் கதாபாத்திரம், அற்புதம் மற்றும் அருவருப்பின் கலவையாக இருந்தது.

ராபர்ட் ரிச்சர்ட்சனின் ஒளிப்பதிவு, ஒரு கலைப் படைப்பின் பிரம்மாண்டத்தை அளித்தது. இது பனிப்புயலின் தனிமையையும், விடுதியின் நெருக்கமான, அழுத்தம் நிறைந்த உட்புறத்தையும் சமமாக அணுகியது.  என்னியோ மொரிக்கோனின் ஆஸ்கார் வென்ற பின்னணி இசை, படம் முழுவதும் நீடித்த ஒரு பயங்கரமான, தீர்க்கப்படாத பதற்றத்தை உருவாக்குகிறது. 

மொரிகோன் மற்றும் டாரன்டினோவின் இந்தச் சங்கமம், ஒரு நவீன வெஸ்டர்னுக்குத் தேவையான கிளாசிக்கல் மர்மத்தையும், வலிமையையும் அளித்தது. முடிவில், இந்தப் படம் வெறும் வெஸ்டர்ன் அல்ல, மாறாக, வெறுப்பு, துரோகம் மற்றும் பழிவாங்கல் என்ற அமெரிக்கச் சிதைவுகளை  அலசும், ஒரு முக்கியமான மற்றும் மறக்க முடியாத உலக சினிமா அனுபவமாகும்.

இயக்குனர் க்வென்டின் டாரன்டினோ, தனது வழக்கமான தனித்துவமான பாணியில் இந்த வெஸ்டர்ன் திரைப்படத்தை அளித்துள்ளர். இது அதிக உரையாடல்கள், வன்முறை மற்றும் கருப்பு நகைச்சுவை ஆகியவற்றைக் ஒருங்கே கொண்டிருந்தது. பிற்பாதி கதை ஒரு அறையில் நடக்கும் மர்மக் கதையாக அமைக்கப்பட்டிருந்தாலும், டாரன்டினோவின் இயக்கம் அதன் நாடகத்தன்மையைக் கூர்மைப்படுத்துகிறது. 

அவர் கதைக்களத்தை நேர்கோட்டில் சொல்லாமல், நடுவில் ஒரு விரிவான ஃப்ளாஷ்பேக்கைப் பயன்படுத்தி, விடுதிக்குள் நடந்த படுகொலை மற்றும் சதித்திட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

 அமெரிக்க உள்நாட்டுப் போரின் வடுக்கள், இனப் பகைமை, மற்றும் துரோகம் ஆகியவை இந்த இயக்கத்தின் மையக் கருப்பொருளாக உள்ளன.
திரைக்கதையை எழுதியவரும் டாரன்டினோ தான். இந்தப் படத்தின் முக்கிய பலமே, ஒரு சிறிய இடத்தில் சிக்கிய எட்டு மனிதர்களுக்கு இடையேயான சிக்கலான, அரசியல் ரீதியாகச் சூடான உரையாடல்கள்தான். சாமுவேல் ஜாக்ஸன்(மேஜர் Warren), கர்ட் ரஸ்ஸல் (ஜான் ரூத்), மற்றும் ஜெனீஃபர் ஜேஸன் லெய்ஹ்  (டெய்ஸி டோமர்கூ) உட்பட நடிகர்கள் அனைவரும் தங்கள் வேடங்களுக்குப் பொருத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் நடித்தனர். 

குறிப்பாக, ஜெனீஃபர் ஜேஸன் லெய்ஹ்கின் நடிப்பு, வன்முறைக்கு ஆளான ஒரு குற்றவாளியின் மாறுபட்ட கோணங்களைக் காட்டி, அவருக்குச் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் பரிந்துரையைப் பெற்றுத் தந்தது.

 ஒவ்வொரு நடிகரும், தங்கள் கதாபாத்திரங்களின் இருண்ட பக்கங்களை மிக அழுத்தமாக வெளிப்படுத்தினர்.
இப்படத்தின் ஒளிப்பதிவை ராபர்ட் ரிச்சர்ட்சன் அற்புதமாக செய்தார். அல்ட்ரா பேனவிஷன் 70எம்எம் பாணியில் படமாக்கப்பட்டதால், படத்தின் வெளிப்புறக் காட்சிகள், குறிப்பாகப் பனிப்புயலின் பிரமாண்டம் மற்றும் தீவிரத் தன்மையை மிகத் துல்லியமாகக் காட்ட முடிந்தது. 

உட்புறக் காட்சிகளில் கூட, இந்த வகை ஒளிப்பதிவு அறையின் நெருக்கமான அமைப்பையும், மரவேலைப்பாடுகளின் சூடான நிறத்தையும், வெளியேயுள்ள குளிரான வெள்ளை நிறத்துடன் ஒப்பிட்டுக் காட்டி, ஒரு காட்சிப் புலன் உணர்வை உருவாக்குகிறது. 

இந்தப் பிரம்மாண்டமான ஒளிப்பதிவு, ஒரு தனி அறையில் நடக்கும் காட்சிகளுக்குக் கூட அதிகத் தனித்துவத்தை அளித்தது.
இப்படத்திற்கு இசையமைத்தவர், வெஸ்டர்ன் படங்களுக்கு இசையமைப்பதில் முன்னோடியான என்னியோ மொரிக்கோன் அவர்கள். டாரண்டினோவின் படங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மீள் உபயோக இசைத் தொகுப்புகளுக்கு மாறாக, மொரிக்கோன் அவர்கள் பிரத்யேகமாக அபாரமான புதிய இசையை உருவாக்கினார். 

 பின்னணி இசை, படம் முழுவதும் நீடித்த சஸ்பென்ஸ், தனிமை மற்றும் பனி நிறைந்த காட்சியின் அச்சுறுத்தும் அமைதியை வன்முறையின் அழகியலைப் பிரதிபலித்தது.

 இந்தப் படத்திற்காக மொரிக்கோன் தனது முதல் ஆஸ்கர் விருதைச் சிறந்த அசல் இசைக்கான பிரிவில் வென்றார். ,அவர் கோல்டன் குளோப் மற்றும் பாஃப்டா போன்ற விருதுகளையும் பெற்றார்.

படத்தின் கதை:-

1877 ஆம் ஆண்டு . அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவடைந்திருந்தாலும், அதன் வடுவும், அரசியல் ரீதியிலான பிளவுகளும், குறிப்பாக வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையேயான இனப் பகைமைகளும் நீங்காமல் இருந்த காலகட்டத்தின் இறுதிக் கட்டம் அது. 

இந்தக் கதை, வ்யோமிங் பிரதேசத்தின் கடும் குளிரும், உறைபனிக் காற்றும் நிறைந்த பகுதியில் நிகழ்கிறது.
கதையின் முக்கியப் பாத்திரமான, யூனியன் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற குதிரைப்படை மேஜர்  மார்க்விஸ் வாரன், தான் வேட்டையாடிய மூன்று கொடூர கொலையாளிகளின்  சடலங்களைச் சுமந்து கொண்டு, ரெட்ராக் நகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில், அவரது குதிரை முற்றிலும் செயலிழந்துபோக, அந்தப் பயணத்தைத் தொடர முடியாமல், வாரன் தனியாகக் கடும் பனிப்புயலை  எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

அப்போது, அந்தப் பனிபடர்ந்த வெட்டவெளியில், ஓ.பி.ஜாக்ஸன் என்ற அனுபவம் வாய்ந்த ஓட்டுநரால் இயக்கப்படும் ஒரு கனமான மரத்தாலான ஸ்டேஜ்கோச்  குதிரை வண்டி வந்து சேர்கிறது. வாரன், ஒரு விபரீத நம்பிக்கையுடன் அதன் கூரையில் பவுண்டி பிணங்களை கட்டியவர் ,பயணியருடன் பயணியாகிறார்.

அந்த வண்டிக்குள் ஏற்கனவே இன்னொரு பவுண்டி ஹண்டர் என்ற பரிசு வேட்டைக்காரன் இருந்தார். அவர்தான் ஜான்ரூத், தன் பிரத்யேக பாணிகாகப் புனைப்பெயர் பெற்றவர் , அது "த ஹாங்மேன்" தூக்கு தூக்கி. அவர், ஒரு கொடூரமான குற்றவாளியான "க்ரேஸி" டெய்ஸி டோமர்கூ என்பவளை உயிருடன் பிடித்து, அவளது தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக ரெட்ராக் நகருக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

 டெய்ஸியைக் கண்காணிக்க, ரூத், அவளது கையில் தனது கையையும் இணைத்து கைவிலங்கிட்டுப் பிணைத்திருந்தார்.

வார்ரன் உள்ளே நுழைகிறார். ரூத், கறுப்பினத்தவரான வாரன் மீது உடனடியாக நம்பிக்கை வைக்கிறார். இதற்குக் காரணம், வார்ரன் எப்போதும் தன்வசம் வைத்திருக்கும் ஒரு பொக்கிஷம். அது, தான் யூனியன் இராணுவத்தில் இருந்தபோது, முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனிடம் இருந்து பெற்றதாகச் சொல்லப்படும் ஒரு தனிப்பட்ட பேனாநட்பு கடிதம். 

இந்த நம்பிக்கைக் குறியீடு, இரு வேறு துருவத்தைச் சேர்ந்த இந்த மனிதர்களை ஒன்றிணைக்கிறது.
வண்டி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்க, பாதையில் மேலும் ஒரு நபர் இணைகிறார். அவர், க்ரிஸ் மேனிக்ஸ், தன் தந்தை எர்ஸ்கின், மானிக்ஸ் மௌராடர்ஸ்  என்றழைக்கப்பட்ட லாஸ்ட் காசர் தெற்கு போராளிக் குழுவை வழிநடத்தியவர்.

 மானிக்ஸ், தான் தான் ரெட்ராக்கின் புதிய ஷெரிஃப் என்று கூறிக்கொண்டு அவர்களுடன் பயணிக்க இணைகிறார். ஒரு முன்னாள் கான்ஃபெடரேட் வீரரின் மகன், ஒரு யூனியன் மேஜருடன் பயணிக்க நேரிடுவது, அந்தச் சூழலில் நிலவிய இன மற்றும் அரசியல் பதற்றத்தை உணர்த்துகிறது.

பனிப்புயல் தீவிரமடைய, குதிரைகள் ஆவியைக் கக்கியபடி ஓடுகுறது, வண்டியின் சக்கரங்கள் பனியை இறுக்கிக் கிழித்துச் செல்கின்றன. இந்த இடத்தில்தான், ஒரு முக்கியமான தகவல் வெளிப்படுகிறது: வார்ரன், உள்நாட்டுப் போரின்போது ஒரு போர்க் கைதிகள் முகாமை உடைத்துத் தீ வைத்ததற்காக, அவர் தலையின் மீது கான்ஃபெடரேட் படைகள் ஒரு பெரிய பரிசை வைத்திருப்பதை ரூத் தெரிந்துகொள்கிறார். 

இது, வார்ரனின் கடந்த காலம், அவர் மீதுள்ள ரூத்தின் நம்பிக்கைக்கு ஒரு சிறிய அச்சுறுத்தலாக அமைகிறது.
கடும் பனிப்புயலைக் கிழித்துக்கொண்டுச் சென்ற குதிரை வண்டி, ஓ.பி.ஜாக்ஸனின் அனுபவத்தால், "செம்மஞ்சள் மரப் பஸ்ஸல்கள்" (Red Pine Needles) என்றழைக்கப்படும் பகுதிக்கு நடுவில் அமைந்திருக்கும், ஒரே தங்குமிடமான மின்னியின் ஹாபர்தேஷரி என்ற உணவு மதுபானம் ஆடை விடுதியை இறுதியாகச் சென்றடைகிறது.

வண்டியை விடுதி வாசலில் நிறுத்தியதும், ஓட்டுநர் ஓ.பி.ஜாக்ஸனின் பொறுப்பான பணி தொடங்குகிறது. உறைபனிக் காற்றில் விரைந்து சென்று, குளிரால் களைத்துப்போன குதிரைகளை, விடுதியின் பின்னால் இருக்கும் பனிக் காப்பு கொட்டகைக்குள் பத்திரமாகக் கட்டி, அவற்றின் தாகத்தையும் பசியையும் போக்க வைக்கோலும் தண்ணீரும் அளிக்கிறார்.

உள்ளே நுழைந்த பிறகு, அங்கிருந்த வெளிச்சம் மற்றும் பாதுகாப்பான உணர்வு நீடிக்கவில்லை. வெளியே ஓலமிடும் பனிக்காற்று, விடுதியின் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழையப் பார்க்கிறது. உள்ளே இருக்கும் சூட்டையும், அடைக்கலத்தையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

 உடனடியாகச் செயல்படும் ஓ.பி.ஜாக்ஸன் அந்தக் கனமான மரக் கதவை முழுமையாக இழுத்து மூடி, கதவு மீண்டும் திறக்காமல் இருக்க, தரையிலிருந்து ஒரு பெரிய, உறுதியான இரும்பு  குறியைத் தேடி எடுத்து, அதை கதவின் சட்டத்திற்குப் பின்னால் குறுக்காகத் தட்டி, கதவை இறுக்கிப் பூட்டி விடுகிறார். இதன் மூலம், வெளியில் உள்ள மிருகத்தனமான பனிப்புயலுக்கும், உள்ளே உள்ள இந்தச் சிறிய அடைக்கலத்துக்கும் இடையேயான தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்படுகிறது.

இந்த விடுதிக்குள், ஏற்கனவே சில மனிதர்கள் தங்கியிருந்தனர், அவர்களை இந்த ஸ்டேஜ்கோச் வண்டிக் குழு சந்திக்கிறது.

விடுதிக்குள் நுழைந்த வண்டிக் குழு, ஏற்கெனவே அங்குத் தங்கியிருந்த நான்கு நபர்களைச் சந்திக்கிறது. விடுதியின் உரிமையாளர்களான மின்னீ மற்றும் அவள் கணவர் ஸ்வீட்டேவ் ஆகியோர் இல்லாததால், மெக்சிகன் ஆன பாப், கடையைப் பார்த்துக்கொள்வதாகக் கூறுகிறார். 

மற்றவர்கள், ரெட்ராக்கின் உள்ளூர் தூக்கிலிடுபவர் ஆஸ்வால்டோ மோப்ரே, அமைதியாக அமர்ந்திருக்கும் கௌபாய் ஜோ கேஜ்,  தன் காணாமற் போன மகன் செஸ்டர் சார்லஸிற்க்கு ஒரு நினைவுச் சின்னம்  எழுப்பத் திட்டமிட்டுக் காத்திருக்கும் முன்னாள் கான்ஃபெடரேட் தளபதி  சான்ஃபோர்ட் ஸ்மித்தர்ஸ் ஆகியோர் ஆவர்.

உள்நாட்டுப் போரின் போது கிடைத்த மோசமான அனுபவங்கள் காரணமாக, ஜான்ரூத் சக மனிதர்களை நம்புவதில்லை. குறிப்பாக, டெய்ஸி டோமர்கூவை எப்படியாவது மீட்க அவளுடைய ஆட்கள் திட்டமிட்டிருக்கலாம் என்ற அச்சத்தில், அவர் உடனடியாகச் செயல்படுகிறார். 

ஒரு கணம் கூடத் தாமதிக்காமல், அவர் மேஜர் வார்ரனைத் தவிர, அங்கிருந்த மற்ற அனைவரின் துப்பாக்கிகளையும் மற்றும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விடுகிறார். வார்ரன் மீது அவருக்குள்ள நம்பிக்கை, அவர் வைத்திருக்கும் லிங்கனின் கடிதத்தின் அடிப்படையிலானது.

உள்நாட்டுப் போரின் அரசியல் பகைமை உடனடியாகத் தீப்பிடித்தது. க்ரிஸ் மேன்னிக்ஸ் தளபதி ஸ்மித்தர்ஸை ஒரு போர்க் கதாநாயகனாக மதிக்க, வார்ரனுக்கு அவர் ஒரு கொடூரமான எதிரியாகத் தோன்றுகிறார். பேட்டன் ரவுஜ் என்ற இடத்தில், Smithers உத்தரவின் பேரில் கறுப்பினப் போர்க் கைதிகள் தூக்கிலிடப்பட்டதை நினைவுகூர்ந்த வார்ரன், அவரைக் கொன்று பழிவாங்கத் துடிக்கிறார்.
இரவு உணவின்போது, மேன்னிக்ஸ  அந்த லிங்கன் கடிதம் போலியானது என்று யூகித்து, வார்ரனை நோக்கிப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்புகிறான். ரூத்தின் ஏமாற்றத்தைப் புரிந்துகொண்ட வார்ரன், அந்தக் கடிதம் வெள்ளைக்காரர்களிடம் தனக்குச் சலுகை வாங்கிக் கொடுக்கும் ஒரு பொய் என்று சற்றும் தயக்கமின்றி ஒப்புக்கொள்கிறார். இந்தத் தருணம், வார்ரனின் கூரிய அறிவையும், நிலைமையைச் சமாளிக்கும் திறனையும் காட்டுகிறது.
உடனடியாக, வார்ரன் தன் பழிவாங்கும் திட்டத்தைத் தொடங்குகிறார். அவர் தன் துப்பாக்கிகளில் ஒன்றை எடுத்து, தளபதி Smithers-ன் அருகில் வைக்கிறார். தன்னுடைய பரிசை வேட்டையாட முயன்ற ஸ்மித்தர்ஸின் மகனைத் தானே கொன்றேன், அதுவும் கடுங் குளிரில் நான்கு கால்களில் நாய் போல தவழ விட்டு வாய்ப்புணர்ச்சி வன்கொடுமை செய்து அதன் பின் சுட்டுக் கொன்றதாக ஆத்திரமூட்டும் பொய்களைச் சொல்கிறார். இந்த அவமானமும் மகனின் பெயரும் ஸ்மித்தர்ஸின் உணர்ச்சிகளைத் தூண்ட, அவர் ஆத்திரத்தில் அந்தத் துப்பாக்கியை எடுக்க விரைந்தபோது, வார்ரன் சற்றும் தாமதிக்காமல் தற்காப்புக்கு என்றெசுட்டு அவரைக் கொல்கிறார்.

 இந்தக் கொலை, விடுதிக்குள் அமைந்திருந்த சண்டையற்ற சூழலைக் குலைத்து, மேலும் வன்முறைக்கான கதவைத் திறக்கிறது.
இந்தச் சண்டை மற்றும் குழப்பமான தருணத்தின்போதுதான், விடுதியின் மூலையில், காபி கொதித்துக்கொண்டிருந்த பாத்திரத்தில் விஷம் கலக்கப்பட்டது என்ற கொடூரமான உண்மை நிகழ்கிறது. இந்தக் கலப்பைப் பிணைக்கப்பட்டிருந்த டெய்ஸி மட்டுமே மௌனமாகக் கண்ணால் காண்கிறாள்.
சண்டையின் சத்தம் அடங்க, ஜான்ரூத் மற்றும் ஓ.பி.ஜாக்ஸன் இருவரும் அந்த விஷம் கலந்த காபியைக் குடிக்கிறார்கள்.

 சில நிமிடங்களில், O.B. துடித்து இறந்து போகிறார். மரணப் போராட்டத்தில் இருந்த ரூத், தன் வலியில் துடித்துக்கொண்டிருக்கும்போதே, டெய்ஸி தன் கையில் விலங்கிடப்பட்டிருந்த சங்கிலியைப் பயன்படுத்தி, ரூத்தின் துப்பாக்கியை இழுத்து எடுத்து, அவரைச் சுட்டுக் கொன்றுவிடுகிறாள். இதன் மூலம், அவளுடைய கும்பலின் முதல் திட்டம் நிறைவேறுகிறது.
சற்று தாமதித்து நிலைமையைப் புரிந்துகொண்ட வார்ரன், டெய்ஸியை நிராயுதபாணியாக்கி, அவள் கையில் இருந்த கைவிலங்கைத் துண்டிக்காமல், ரூத்தின் பிணத்துடன் பிணைத்து ஒரு மூலையில் அமர வைக்கிறார். விஷத்தின் மர்மம் அவிழ்க்கப்பட, மேன்னிக் காபியில் விஷம் கலந்தது ஜோ கேஜ் ஆக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறான்.

 ஆனால் வார்ரனின் கவனம் வேறு திசையில் செல்கிறது.
அவர் பாப் ன் கதையில் முரண்பாடுகளைக் கண்டறிகிறார். பாப்  மின்னியின் உண்மையான் பணியாள் இல்லை என்று ஆதாரங்களுடன் கண்டுபிடித்துக் கொல்கிறார்.

 அதன் பிறகு, வார்ரன், டெய்ஸியைக் கொல்வதாக அச்சுறுத்தும்போது, ஜோ கேஜ் தான் காபியில் விஷம் கலந்ததை ஒப்புக்கொள்கிறான். 

விஷம் கலந்தது யார் என்று தெரிந்த ஒரு சில கணங்களில், யாரும் எதிர்பார்க்காத விதமாக, கீழே உள்ள தரைப்பலகைகளுக்கு அடியில் மறைந்திருந்த ஓர் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் வார்ரனின் விரைப்பையில் சுடுகிறான். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, மோப்ரே மற்றும் மேன்னிக்ஸ் இருவரும் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு, தாங்களும் காயமடைகிறார்கள்.

வார்ரனின் விரைப்பகுதியில் துப்பாக்கிச் சூடு விழுந்தவுடன், கதை உடனடியாகச் சற்று நேரம் பின்னோக்கிச் செல்கிறது. அந்தப் பனிப்புயலுக்குச் சற்று மணி நேரங்களுக்கு முன்னால், விடுதியில் உண்மையில் என்ன நடந்தது என்பதை ஃப்ளாஷ்பேக் காட்சியில் காண்கிறோம்.
Daisy-இன் சகோதரனும் இந்தக் கும்பலின் தலைவனுமான ஜோடி, 
பாப் உண்மையில், இவன் மார்கோ "த மெக்ஸிகன்"), மோப்ரே உண்மையில், இவன் "இங்லிஷ்" பீட் ஹுக்காஸ்), மற்றும் கேஜ். உண்மையில், இவன் "க்ரூச்" டக்ளஸ் ஆகியோர் மின்னீ ஹேபர்டேஷரி வந்தடைந்தனர். அவர்கள் உடனடியாக விடுதிக்குள் இருந்த அனைவரையும் கொடூரமாகப் படுகொலை செய்தனர். விடுதியின் உரிமையாளர்களான மின்னீ, ஸ்வீட்டேவ், மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் அனைவருமே கொல்லப்பட்டனர். ஆனால், அங்கு ஏற்கெனவே தங்கியிருந்த முன்னாள் கான்ஃபெடரேட் தளபதி சான்ஃபோர்ட் ஸித்தர்ஸை மட்டும் அவர்கள் உயிரோடு விட்டனர். அதன் காரணம், ஸ்மித்தர்ஸ் தன் மகனான செஸ்டர் சார்லஸக்கு கட்டத் திட்டமிட்டிருந்த நினைவுச் சின்னம்  ஒன்றிற்காகக் காத்திருந்தார். இந்தக் கும்பல், அவர் வாய் திறக்காமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அவரை ஒரு பார்வையற்ற சாட்சியாக இருக்க அனுமதித்தது. இந்தக் கும்பல், கொலை செய்யப்பட்ட உடல்கள் அனைத்தையும் மறைத்து, விடுதியைச் சுத்தம் செய்து, Bob வெளியே இருந்து வந்த விருந்தினர்களிடம் பொய் சொல்லத் தயார் செய்கிறது. மேலும், ரூத் மற்றும் பிறர் வந்தால், அவர்களை எதிர்கொள்ளத் தேவையான ஆயுதங்களை மறைத்து வைக்கின்றனர். இந்த ஏற்பாடுகள் முடிந்த பிறகு, Jody இந்தத் திட்டத்தின் தலைமை மூளையாகச் செயல்பட, தரைப்பலகைகளுக்கு அடியில் உள்ள பாதாள அறையில் ஒளிந்துகொள்கிறான்.
நிகழ்காலத்திற்குத் திரும்புகையில், மேஜர்வார்ரன் மற்றும் க்ரிஸ் மேனிக்ஸ் இருவரும் தங்கள் காயங்களால் பலவீனமடைந்த நிலையில், எஞ்சியிருக்கும் டெய்ஸி, மோப்ரே, மற்றும் கேஜ் ஆகியோரைத் தங்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி வைத்திருக்கிறார்கள். ரூத் மற்றும் ஓ.பியின் மரணத்திற்குப் பழிவாங்க, அவர்கள் டெய்ஸியைக் கொல்வதாக அச்சுறுத்துகிறார்கள். இந்தக் கட்டத்தில்தான், தலைவனான ஜோடி, தனது குழுவினரைக் காக்க, பாதாள அறையில் இருந்து வெளியே வந்து சரணடைகிறான். 

ஆனால், வார்ரன் ஒரு கணம் கூடத் தாமதிக்காமல், துப்பாக்கியால் சுட்டு ஜோடியை உடனடியாகக் கொன்றுவிடுகிறார்.
தலைவன் கொல்லப்பட்ட நிலையில், எஞ்சியிருக்கும் கும்பல் உறுப்பினர்கள் வேறு வழியின்றித் தங்கள் திட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் ரெட்ராக்கில் சுமார் பதினைந்து கூலிப்படையினர் காத்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் டெய்ஸியை உயிருடன் மீட்பதற்காகவே காத்திருப்பதாகவும் கூறுகின்றனர். அவர்கள் மின்னிக்ஸுக்கு ஒரு சலுகை அளிக்கிறார்கள்: மேன்னிக்ஸ், வார்ரன்னைக் கொன்றால், அவர்கள் அவரைக் காப்பாற்றுவார்கள், மேலும் இறக்கும் நிலையில் இருக்கும் மோப்ரே (ஹைகாக்ஸ்) மற்றும் கொல்லப்பட்ட பாப் (மார்கோ) மீதுள்ள பவுண்டி பரிசை அவர் வசூலிக்கலாம் என்று ஆசை காட்டுகிறார்கள்.

மேன்னிக்ஸை சமாதானப்படுத்த ஹைகாக்ஸ் (மோப்ரே) முயற்சிக்கும்போது, வார்ரன் அவருக்குப் பேச வாய்ப்பளிக்காமல், அவரைச் சுட்டுக் கொல்கிறார். அதன் பிறகு, கேஜ் (டக்லஸ்) ஒரு இறுதி முயற்சியாக, மேசையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை எடுக்க விழைந்த போது, மேன்னிக்ஸ் மற்றும் வார்ரன் இருவரும் ஒரே நேரத்தில் சுட்டு அவரைக் கொல்கிறார்கள்.

இப்போது, டெய்ஸி டோமர்கூ மட்டுமே எஞ்சியிருக்கிறாள். மேன்னிக்ஸ் அவளுடைய சலுகைகளையும் கேட்கிறார், ஆனால் அது ஒரு பொய் என்று அவர் உடனடியாகப் புரிந்துகொள்கிறார். மேன்னிக்ஸுக்கு இரத்தம் அதிகமாக வெளியேறியதால், அவர் சிறிது நேரம் மயக்கமடைகிறார். 

இதுதான் டெய்ஸியின் இறுதி வாய்ப்பு. அவள், தன் வலது கையில் விலங்கிடப்பட்டிருந்த ஜான் ரூத்தின் சடலத்தின் கையை, அங்கு இருந்த ஒரு கோடாரியைப் பயன்படுத்தி வெட்டி வீசிவிட்டு, கைவிலங்குடன் தப்பித்து ஒரு துப்பாக்கியை எடுக்க முயல்கிறாள். 

ஆனால், மேன்னிக்ஸ் மீண்டும் விழித்தெழுந்து, துப்பாக்கியால் சுட்டு டெய்ஸியைக் காயப்படுத்துகிறார்.
டெய்ஸியின் கொடூரமான முயற்சி தோல்வியடைகிறது. ஜான் ரூத், தான் வேட்டையாடியவர்களை எப்போதுமே உயிருடன் தூக்கு மேடைக்கே கொண்டு வந்து தூக்கிலிடுபவர்  அவரது மரணத்திற்கு ஒரு கவுரவம் அளிக்கும் விதமாக, மேன்னிக்ஸ் மற்றும் வார்ரன் இருவரும், தங்கள் காயங்களின் உச்சகட்ட வலிக்கு மத்தியிலும், தங்கள் கடைசி பலத்தைப் பயன்படுத்தி, Daisy-ஐ விடுதியின் விட்டத்திலிருந்து தூக்கிலிட்டு விடுகிறார்கள்.
இறுதியில், வார்ரன் மற்றும் மேன்னிக்ஸ் இருவரும் தங்கள் கடுமையான காயங்களால் மெதுவாக மரணத்தை நோக்கிச் செல்கிறார்கள். மேன்னிக்ஸ், வார்ரன் பையில் இருந்த போலியான லிங்கன் கடிதத்தை எடுத்து, அதைச் சத்தமாகப் படிக்கிறார். அது போலியானது என்று தெரிந்தபோதிலும், அந்தக் கடிதம் மிகவும் நுணுக்கமாகவும், விவரத்துடனும் எழுதப்பட்டிருந்ததை மேன்னிக்ஸ் வியந்து பாராட்டுகிறார். இந்தக் கடிதம், இறுதியில், ஒரு பிணைப்புச் சங்கிலியாக மாறி, இருவரும் சாகும் நிலையில் படுத்திருக்கும்போது கூட, அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு உணர்வுப்பூர்வமான நட்பை ஏற்படுத்துகிறது. அவர்கள் இருவரும் அதே அறையில் தங்கள் மரணத்தை எதிர்கொள்கையில் படம் நிறைகிறது.

இந்தப் படம் பெற்ற மிக முக்கியமான கௌரவம், புகழ்பெற்ற இத்தாலிய இசையமைப்பாளர் என்னியோ மொரிகோன் அவர்களுக்குச் சிறந்த அசல் இசைக்காகக் கிடைத்த ஆஸ்கர் விருது ஆகும். அவருக்கு 87 வயதாக இருந்தபோது இந்த விருது வழங்கப்பட்டது, இது மொரிகோனுக்குக் கிடைத்த முதல் போட்டி ஆஸ்கர் விருதாகும். மேலும், மொரிகோன் இந்த இசைக்காக கோல்டன் குளோப் மற்றும் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது (BAFTA) ஆகிய உயரிய விருதுகளையும் வென்றார். நடிகை ஜெனீஃபர் ஜேஸன் லெய்ஹ், தனது கொடூரமான மற்றும் சிக்கலான டெய்ஸி டோமர்கூ பாத்திரத்திற்காகச் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

 இருப்பினும், மொரிகோனின் இசை ஆதிக்கம் செலுத்தியதால், படத்தின் மற்ற துறைகளான திரைக்கதை மற்றும் இயக்கம் போன்ற பிரிவுகளில் இது கூடுதல் ஆஸ்கர் வெற்றிகளைப் பெறவில்லை.
​இந்தப் படத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் பல சுவாரஸ்யமான ட்ரிவியா தகவல்கள் உள்ளன. இந்தப் படம் முழுவதுமாக அல்ட்ரா பேனவிஷன் 70எம்எம் பாணியில் படமாக்கப்பட்டது ஒரு முக்கியமான அம்சமாகும். இது 1960களுக்குப் பிறகு அரிதாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பாணி ஆகும். டாரன்டினோ இந்தக் கதைக்கு ஒரு பிரம்மாண்டமான உணர்வை அளிக்க விரும்பியதால், இந்தக் கடினமான தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்தார். மேலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு சிறிய அறையிலேயே நடந்தாலும், இந்தக் காட்சியமைப்புகள் ஹாலிவுட்டில் உள்ள ஒரு சவுண்ட்ஸ்டேஜில் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பின்போது நடிகர்களின் மூச்சுத் தெரிவதற்காக, அந்த அரங்கம் செயற்கையாக 30° பாரன்ஹீட் (-1° செல்சியஸ்) குளிரூட்டப்பட்டு வைக்கப்பட்டது. இது, நடிகர்கள் கதாபாத்திரத்தின் சூழலை இயல்பாக உணர்வதற்கும், காட்சிகளின் நம்பகத்தன்மைக்கும் உதவியது. 

ஆரம்பத்தில், டாரன்டினோ இந்தப் படத்தைத் திரைக்கதையாக மட்டுமே வெளியிடும் எண்ணத்தில் இருந்தார், திரைக்கதை கசிந்த பிறகுதான், அவர் முடிவை மாற்றி அதைத் திரைப்படமாக எடுக்கத் தீர்மானித்தார். 

இந்தப் படம், டாரன்டினோவின் மற்ற படங்களைப் போலவே, உள்நாட்டுப் போர் காலத்து அமெரிக்காவின் இருண்ட பக்கங்களை ஆழமாக அலசியது குறிப்பிடத்தக்கது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (207) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) இசைஞானி (44) கலை (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) ஓவியம் (21) மனையடி சாஸ்திரம் (21) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) இலக்கியம் (14) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)