ஹாலிவுட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹாலிவுட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

த நேம் ஆஃப் த ரோஸ்' The Name of the Rose 1986

1986 ஆம் ஆண்டு வெளியான 'த நேம் ஆஃப் த ரோஸ்' The Name of the Rose , இடைக்கால ஐரோப்பாவின் இருண்ட காலத்தை பின்னணியாகக் கொண்ட விறுவிறுப்பான மர்மத் திரைப்படம்.

1327-ஆம் ஆண்டில், ஒரு அத்துவான மடாலயத்தில் மர்மமான முறையில் இறந்து கிடக்கும் துறவிகளின் மரணங்களைப் புலனாய்வு செய்ய வரும் வில்லியம் ஆஃப் பாஸ்கர்வில் என்ற புத்திஜீவி துறவியைச் சுற்றி கதை நகர்கிறது.

மத அடிப்படைவாதம், அறிவுத் தேடல் மற்றும் அதிகார மையங்களுக்கு இடையிலான மோதலை, ஒரு த்ரில்லர் பாணியில் இத்திரைப்படம் காட்சிப்படுத்துகிறது.

வில்லியம் தனது கூர்மையான தர்க்க அறிவைக் கொண்டு அந்த மடாலயத்தின் ரகசியங்களை எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் சாராம்சம். குறிப்பாக, சீன் கானரியின் கம்பீரமான நடிப்பும், மடாலயத்தின் மர்மமான சூழலும் பார்வையாளர்களைக் கதையோடு ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்தத் திரைப்படத்தின் அடிநாதம் அதிகாரத்திற்குத் தலைவணங்க மறுக்கும் அறிவுத்தேடலுக்கும், மதத்தின் பெயரால் உண்மையை மூடி மறைக்கும் அதிகார மையங்களுக்குமான மோதல் ஆகும்.

உண்மையைத் தேடும் பகுத்தறிவுக்கும் (Reason), அச்சத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட மதக் குருட்டுத்தனத்திற்கும் (Fanaticism) இடையிலான இந்தப் போராட்டம், மனிதனின் அறிவுச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

ஒரு நூலகத்தையே போர்க்களமாக மாற்றி, "அறிவே ஆபத்து" என்று கருதும் மூடநம்பிக்கைக்கு எதிராக, "கேள்வி கேட்பதே மனித வாழ்வின் அறம்" என்பதை வில்லியம் ஆஃப் பாஸ்கர்வில் கதாபாத்திரம் உரக்கச் சொல்வதே இப்படத்தின் ஆன்மா.

இத்திரைப்படத்தை செவ்வியல் படைப்பாக மாற்றியதில் அதன் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு அளப்பரியது.

நாவலின் அடர்த்தியான தத்துவத் தேடலைத் துப்பறியும் களத்திற்குள் கொண்டு வந்த திரைக்கதை, பார்வையாளர்களைப் படத்தோடு இறுக்கமாகப் பிணைத்தது.

வில்லியம் கதாபாத்திரத்தில் நடிக்க சீன் கானரி தேர்வானது ஒரு அற்புத முடிவாக அமைந்தது, அந்தப் பாத்திரத்தின் கம்பீரத்தையும், அதன் அறிவுசார் மென்மையையும் அவர் தனது கண்கள் வழியாகவே கடத்தினார்.

ஜீன்-ஜாக் அன்னாட்டின் இயக்கத்தில் மடாலயத்தின் ஒவ்வொரு கல்லும் ஒரு மர்மத்தைப் பேசுவது போல் அமைக்கப்பட்டிருந்தது படத்தின் மிகப்பெரிய வெற்றி.

ஒளிப்பதிவில், டோனினோ டெல்லி கோலியின் கேமரா நுணுக்கம் அபாரமானது; மெழுகுவர்த்தி மற்றும் தீப்பந்தங்களின் ஒளியில் மட்டுமே படம்பிடிக்கப்பட்ட காட்சிகள், 14-ஆம் நூற்றாண்டின் இருண்ட காலத்தை அப்படியே நம் கண்முன் நிறுத்தின.

ஜேம்ஸ் ஹார்னரின் இசை, கதையின் மர்மத்தையும் மதத்தின் புனிதத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்கியது.

மேக்கப் கலைஞர் துறவிகளின் தோற்றத்தை மிகவும் தத்ரூபமாகக் காட்டியது, பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு வரலாற்று ஆவணப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது.

சிறந்த ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பிற்காக பாஃப்டா (BAFTA) உள்ளிட்ட உயரிய விருதுகளைப் படம் வென்றது.

படத்தின் பிரம்மாண்டமான நூலக அரங்கு, நவீன தொழில்நுட்பங்கள் இன்றி மிக நுணுக்கமாகக் கட்டப்பட்ட ஒரு கலைப்படைப்பு. கடும் குளிரிலும், பல மாதங்கள் தொடர் படப்பிடிப்பில் ஈடுபட்டுப் பணியாற்றிய கலைஞர்களின் அர்ப்பணிப்பு, இன்றுவரை இத்திரைப்படத்தை உலகத் தரமான ஒரு மர்மக் காவியமாகத் தக்கவைத்துள்ளது.

இந்தத் திரைப்படத்தின் பெயர், கதையின் இறுதியில் வில்லியம் ஆஃப் பாஸ்கர்வில் சொல்லும் லத்தீன் மொழியிலான ஒரு பழமொழியிலிருந்து உருவானது: "Stat rosa pristina nomine, nomina nuda tenemus". இதன் பொருள், "பழைய ரோஜா அதன் பெயரில் மட்டுமே வாழ்கிறது, நம்மிடம் இருப்பது பெயர்கள் மட்டுமே" என்பதாகும்.

இதன் ஆழமான அர்த்தம் என்னவென்றால், காலம் மாறும்போது ஒரு விஷயத்தின் உண்மையான வடிவம், சாராம்சம் மற்றும் அதன் இருப்பு அழிந்து விடுகிறது; இறுதியில் நம்மிடம் எஞ்சுவது அந்தப் பொருளைக் குறிக்கும் ஒரு வெறும் 'பெயர்' மட்டுமே. அழிந்துபோன அந்தப் பிரம்மாண்டமான நூலகம், மறைந்துபோன பண்டைய ஞானம் மற்றும் வில்லியம் கண்டறிந்த உண்மைகள் அனைத்தும் காலப்போக்கில் மறைந்து போகக்கூடும், ஆனால் அதைப் பற்றிய நினைவும், அந்தப் பெயரும் மட்டுமே வரலாற்றில் எஞ்சியிருக்கும் என்பதை இது உணர்த்துகிறது. சுருக்கமாகச் சொன்னால், மனித அறிவு மற்றும் வரலாற்றின் தற்காலிகத் தன்மையைச் சுட்டிக்காட்டவே உம்பெர்டோ ஈக்கோ இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தார்.

============================
படத்தின் கதை:-

14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தர்க்க அறிவும் கூர்மையான புலனாய்வுத் திறனும் கொண்ட பிரான்சிஸ்கன் துறவி வில்லியம் ஆஃப் பாஸ்கர்வில் (சீன் கானரி) மற்றும் அவரது சீடர் அட்சோ ஆஃப் மெல்க் (கிறிஸ்டியன் ஸ்லேட்டர்) ஆகியோர், வடக்கு இத்தாலியிலுள்ள ஒரு செல்வாக்கு மிக்க பெனடிக்டின் மடாலயத்தை அடைகின்றனர்.

அந்த மடாலயத்தில் ஒரு முக்கியமான திருச்சபை மாநாடு நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இளம் ஓவியர் ஒருவரின் மர்மமான மரணம் நிகழ்ந்திருந்தது.

அது தற்கொலை என்று மடாலய நிர்வாகம் நம்பினாலும், வில்லியம் தனது அறிவியல்பூர்வமான பார்வையால் அது கொலை என்பதை உறுதி செய்கிறார்.

மடாலயத்தின் அபாட் (மைக்கேல் லான்ஸ்டேல்) இக்கொலைகளை விசாரிக்க வில்லியமிற்கு அனுமதி வழங்குகிறார்.

விசாரணை தொடரும் நாட்களில், மடாலயத்தில் மேலும் சில விசித்திரமான மரணங்கள் நிகழ்கின்றன.

வில்லியமும் அட்சோவும் சால்வடோர் (ரான் பெர்ல்மேன்) என்ற கூனல் விழுந்த துறவியையும், அவரது பாதுகாவலர் ரெமிஜியோ டா வராகினையும் (ஹெல்முட் குவால்டிங்கர்) சந்திக்கின்றனர்.

சால்வடோரின் பேச்சில் வெளிப்பட்ட ‘பெனிடென்சியாஜிட்’ (Penitenziagite) என்ற சொல்லை வைத்து, அவர்கள் இருவரும் ஒரு காலத்தில் மதத்துரோகக் குழுவில் இருந்தவர்கள் என்பதை வில்லியம் கண்டறிகிறார்.

அதே சமயம், மடாலயத்திற்குள் உணவிற்காகப் புகுந்த ஒரு இளம் பெண்ணுடன் (வலென்டினா வர்காஸ்) அட்சோ சந்திக்கும் சூழல் ஏற்பட்டு, அவன் அவளுடன் உடலுறவு கொள்கிறான்.

இது அட்சோவின் ஆன்மீகப் போராட்டத்திற்குத் தொடக்கமாக அமைகிறது.

கொல்லப்பட்ட துறவிகளின் விரல்களும் நாவுகளும் கருப்பாக இருப்பதை உற்று நோக்கும் வில்லியம், ஏதோ ஒரு மர்மமான புத்தகம் மரணங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதை ஊகிக்கிறார்.

கொலைகளைச் செய்பவன் ‘சாத்தான்’ என்று பிறர் நம்பியிருக்க, வில்லியமும் அட்சோவும் மடாலயத்தின் கோபுரத்தில் அமைந்துள்ள சிக்கலான, பிரம்மாண்டமான ரகசிய நூலகத்திற்குள் நுழைகிறார்கள்.

அங்கு அரிஸ்டாட்டில் போன்ற மேதைகளின் பல அறிய நூல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியக்கிறார்கள்.

ஆனால், இந்தக் கலை, நகைச்சுவை மற்றும் தர்க்கம் சார்ந்த அறிவு கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளுக்கு ஆபத்தானது என்று கருதி அவை மறைக்கப்படுகின்றன.

அதே நேரத்தில், திருச்சபையின் விசாரணையாளரான பெர்னார்டோ குய் (எஃப். முர்ரே ஆபிரகாம்) மடாலயத்திற்கு வருகை தருகிறார்.

அவர் கொலைகளுக்குப் பின்னால் இருப்பவர்களை விட, மதத்துரோகிகளைக் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.

சால்வடோர் மற்றும் அந்தப் பெண்ணைப் பிடித்து, ஒரு கறுப்புப் பூனை மற்றும் கோழியை வைத்துக் கொண்டு, அவர்கள் சாத்தானுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சித்திரவதை செய்கிறார்.

சால்வடோர் வலி தாங்க முடியாமல் தவறான ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்.

விசாரணை மன்றத்தில், வில்லியம் அந்தப் படுகொலை செய்பவர் கிரேக்க மொழி தெரிந்தவராகத்தான் இருக்க முடியும் என்றும், கல்வி அறிவற்ற ரெமிஜியோவால் அது முடியாது என்றும் வாதிடுகிறார்.

இருப்பினும், பெர்னார்டோ குய் ரெமிஜியோவைத் துன்புறுத்தி வில்லியமுக்கு எதிராக வாக்குமூலம் பெறுகிறார்.

இறுதியில், நூலகத்தின் ரகசியத்தைத் துப்புத்துலக்கும் வில்லியம், மடாலயத்தின் மிக மூத்த துறவியான ஜார்ஜ் ஆஃப் பர்கோஸை (ஃபியோடர் ஷாலியாபின் ஜூனியர்) சந்திக்கிறார்.

ஜார்ஜ் தான் அந்தத் தொடர் கொலைகளுக்குக் காரணம். அவர் அரிஸ்டாட்டிலின் 'கவிதை இயல்' இரண்டாம் பாகத்தை வைத்திருக்கிறார்.

அதில் சொல்லப்பட்டுள்ள பகடி நகைச்சுவை, மனிதர்களை இறைபக்தியில் இருந்து திசைதிருப்பும் என்று அவர் தீவிரமாக நம்புகிறார்.

அந்தப் புத்தகத்தின் பக்கங்களில் கடும் விஷத்தைத் தடவி வைத்திருப்பதால், அதைத் தொட்டுப் படிப்பவர்கள் விரலை எச்சில் தொட்டு திருப்புகையில் விஷம் உட்சென்று உயிரிழக்கிறார்கள்.

உண்மையைச் சொல்ல வில்லியம் வற்புறுத்தும்போது, குட்டு வெளிப்பட்டதை அறிந்து கலவரமுற்ற ஜார்ஜ் கோபமடைந்து கையில் இருந்த மெழுகுவர்த்தியை வீச, தீ மளமளவென நூலகம் முழுவதும் பரவுகிறது.

வில்லியம் முக்கியமான சிலநூல்களை தீயிலிருந்து காப்பாற்றுகிறார்,

ஆனால் அந்த விஷம் தோய்ந்த புத்தகமும் ஜார்ஜும் நூலகத்தோடு அழிந்து போகின்றனர்.

அதே நேரத்தில், சால்வடோர் மற்றும் ரெமிஜியோ தீயில் எரிக்கப்படுகிறார்கள்.

அந்தப் அடைக்கலம் புகுந்த பெண் தீயில் ஜார்ஜ் ஆதரவாளர்களால் எரிக்கப்படவிருந்தபோது, குழப்பத்தைப் பயன்படுத்தி உள்ளூர் விவசாயிகள் புகுந்து அவளை மீட்கின்றனர்.

பெர்னார்டோ குய் தீயில் இருந்து தப்பித்துச் செல்லும்போது மக்கள் அவரது வண்டியைப் பள்ளத்தாக்கில் தள்ளி அவரை கொல்கின்றனர்.

வில்லியமும் அட்சோவும் அங்கிருந்து புறப்படுகிறார்கள். வழியில் அந்தப் பெண் அட்சோவை மீண்டும் காண, அட்சோ அவளைத் தன்னுடனேயே வர அழைக்க நினைத்தாலும், வில்லியமுடன் தனது பயணத்தைத் தொடர்கிறான்.

பல ஆண்டுகள் கழித்து, முதியவரான அட்சோ, வில்லியமிடமிருந்து தான் கற்ற பாடங்களே தன் வாழ்வின் சிறந்த அறிவு என்றும், அந்தப் பெண் தன் வாழ்வின் ஒரே காதல் என்றும் நினைவுகூருகிறான்.

அறிவை ஒடுக்க நினைக்கும் மதவெறி கண்மூடித்தனத்தை விட, உண்மையை நோக்கிச் செல்லும் பகுத்தறிவே மேலானது என்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது.

உம்பெர்டோ ஈக்கோவின் இந்த நாவலும் அதன் திரை வடிவமும் மனித வரலாற்றின் அறிவுசார் போராட்டத்தை வெவ்வேறு தளங்களில் பதிவு செய்துள்ளன. நாவலின் அடிநாதமாக விளங்கும் செமிட்டிக் குறியீட்டியல் (Semiotics) ஆய்வுகள், இடைக்கால மத-அரசியல் அதிகாரப் போட்டிகள் மற்றும் வில்லியமின் தத்துவார்த்த தேடல்கள், வாசகனை ஒரு தனி உலகத்திற்கே அழைத்துச் செல்லும்.

நாவல் என்பது ஒரு மனிதனின் ஆன்மீக மற்றும் அறிவுப்பூர்வமான பரிணாம வளர்ச்சியாக விரிகிறது. அட்சோவின் முதுமைக்கால நினைவுகள், தான் வில்லியமிடமிருந்து கற்ற தர்க்க அறிவு மற்றும் வாழ்வின் மீதான பார்வை, காலத்தை வென்று நிற்கும் ஒரு அனுபவமாக நாவலில் செதுக்கப்பட்டிருக்கும்.

திரைப்படம் நாவலின் இந்த அதீத அறிவுத்தளத்தை மர்மம் மற்றும் த்ரில்லர் என்ற சுவாரஸ்யமான சட்டகத்திற்குள் சுருக்கி, ஒரு காட்சி விருந்தாக வழங்குகிறது.

தத்துவ விவாதங்களின் ஆழம் குறையக்கூடும் என்றாலும், காட்சிப்படுத்தப்பட்ட ஒளிப்பதிவு, இசை மற்றும் கதாபாத்திரங்களின் அசாத்திய நடிப்பு நாவலின் உயிர்நாடியை அப்படியே பிரதிபலிக்கிறது.

மூலநாவல் ஆங்கிலத்தில் வாசிப்பவருக்குப் புதிய புதிய சிந்தனைகளையும், ஆழமான தத்துவப் பயணத்தையும் பரிசளிக்கிறது என்றால், திரைப்படம் அதன் மர்மமான முடிச்சுகளையும் விறுவிறுப்பையும் உலகளாவிய பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறது.

மூல ஆங்கில நாவல் ஒரு அறிவுப்பூர்வமான தேடல், திரைப்படம் ஒரு அதிரடியான அனுபவம்,இவை இரண்டுமே "அறிவே பேராயுதம்" என்பதை வெவ்வேறு மொழிகளில் உலகிற்கு உரக்கச் சொல்லும் உன்னதமான படைப்புகள்.

#கீதப்ப்ரியன்இங்லிஷ்க்ளாஸிக்க்

டெண்டர் இஸ் த நைட் Tender Is the Night 1962

1962-ஆம் ஆண்டு வெளியான 'டெண்டர் இஸ் த நைட்' திரைப்படம், எஃப். ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, ஒரு மேதையான மருத்துவரின் வீழ்ச்சியைப் பேசும் ஒரு மிகச்சிறந்த படைப்பாகும்.

இதில் டிக் டைவராக நடித்த ஜேசன் ரோபட்ஸ், ஒரு மனிதன் தனது லட்சியங்களையும் அடையாளத்தையும் மெல்ல மெல்ல இழக்கும் அந்தத் துயரமான மாற்றத்தை தனது கண்களிலும் உணர்ச்சிகளிலும் மிகத் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருந்தார்.

நிகோல் டைவராக நடித்த ஜெனிபர் ஜோன்ஸ், ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலையிலிருந்து மீண்டு வந்து, ஒரு அதிகாரமிக்க பெண்ணாக மாறும் அந்தப் பரிமாணத்தை மிகச் சரியாகச் சித்தரித்திருந்தார்.

பேபி வாரனாக வரும் ஜோன் ஃபான்டைன், அந்தப் பணக்கார வர்க்கத்தின் அதிகாரத் தோரணையைத் தனது நடிப்பின் மூலம் மிகத் துல்லியமாகப் பிரதிபலித்திருந்தார்.

திரைக்கதையை, நாவலின் சிக்கலான காலவரிசையை, நிகழ்காலத்தின் ஆடம்பரத்தையும், கடந்த காலத்தின் இருண்ட ரகசியங்களையும் கோர்வையாக இணைத்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

படத்தின் இயக்கம் ஹென்றி கிங்கின் நேர்த்தியான கைவண்ணத்தில் அமைந்துள்ளது.

ஒரு தனிமனிதனின் உளவியல் சிதைவை, சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தின் சலசலப்புகளுக்குப் பின்னால் அவர் மிக நுட்பமாகப் படம்பிடித்திருப்பார்.

படத்தின் ஒளிப்பதிவு, 1920-களின் பிரெஞ்சு ரிவியராவின் வெயில் கொதிக்கும் கடற்கரை ஓரங்களையும், பாரிஸின் ஆடம்பர விடுதிகளையும், கதாபாத்திரங்களின் மனமாற்றங்களுக்கு ஏற்ப மிகச் சிறந்த வண்ண அமைப்பில் படமாக்கியிருக்கும்.

பின்னணி இசையானது, படத்தின் சோகமான அடிநாதத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

குறிப்பாக, டிக் டைவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியாகத் தொலைக்கும் தருணங்களில் வரும் இசை, பார்வையாளர்களின் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

விருதுகளில், இந்தப் படம் பல விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது. குறிப்பாக, இதற்காக உருவாக்கப்பட்ட 'டெண்டர் இஸ் த நைட்' என்ற தலைப்புப் பாடல், அக்காலகட்டத்தில் மிகவும் பிரபலமடைந்து, சிறந்த இசைக்கான அகாடமி விருது பரிந்துரையையும் பெற்றது.

ஒட்டுமொத்தமாக, ஒரு காதலின் வலி, செல்வத்தின் மாயை, மற்றும் ஒரு மனிதனின் தவிர்க்க முடியாத வீழ்ச்சி ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் மிகச்சிறந்த முறையில் இணைத்த படைப்பாக இது திகழ்கிறது.

'Tender Is the Night' (இரவு மென்மையானது) என்ற தலைப்பு, ஜான் கீட்ஸ் எழுதிய புகழ்பெற்ற 'Ode to a Nightingale' என்ற கவிதையிலிருந்து எடுக்கப்பட்டது.

1920-களின் பிரெஞ்சு ரிவியராவில் சொகுசு வாழ்க்கையின் உச்சத்தில் வசிக்கும் ஒரு வெற்றிகரமான மனநல மருத்துவர் மற்றும் அவரது செல்வந்தர் மனைவி, ஒரு இளம் நடிகையின் வருகையால் வெளிப்படும் தங்களின் திருமண வாழ்க்கையின் விரிசல்கள், மற்றும் அந்த உறவைப் பாதுகாக்கும் முயற்சியில் மெல்லத் தனது ஆளுமையையும் லட்சியத்தையும் இழந்து வீழ்ச்சியடையும் ஒருவனின் உளவியல் போராட்டத்தை இப்படைப்பு நுட்பமாக பேசுகிறது.

தன்னைக் கரைத்துக்கொண்டு அடுத்தவரின் வாழ்க்கையைச் செதுக்க நினைக்கும் ஒரு மேதை, அந்த முயற்சியிலேயே தன் அடையாளத்தைத் தொலைத்து, தியாகத்தின் விளிம்பில் நின்றுகொண்டு, இறுதியில் தான் உருவாக்கிய அந்த உறவாலேயே கைவிடப்படும் ஒருவனின் கையறு நிலையே இத்திரைப்படத்தின் அடிநாதம்.

பிரெஞ்சு ரிவியரா ழ பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சொர்க்கபுரியாகும். மெடிட்டரேனியன் கடலின் நீல நிற நீர், தங்க நிற மணற்பாங்கான கடற்கரைகள் மற்றும் மலைகளின் சரிவில் அமைந்துள்ள அழகிய நகரங்களைக் கொண்ட இது, உலகின் மிக ஆடம்பரமான மற்றும் வசீகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஒரு காலத்தில் பிரபுக்களும் கலைஞர்களும் தஞ்சம் புகுந்த இடமான இது, இன்று கோடீஸ்வரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் உயர்குடி மக்கள் ஒன்றுகூடும் புகழ்பெற்ற புகலிடமாகத் திகழ்கிறது. பளபளக்கும் சொகுசுப் படகுகள், விலையுயர்ந்த ஹோட்டல்கள் மற்றும் இரவு நேர கேளிக்கைகளுக்குப் புகழ்பெற்ற இது, வாழ்வின் அதீத ஆடம்பரத்தையும் கவித்துவமான அழகையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒரு பூமியின் சொர்க்கமாகும், இந்த நகரே இப்படத்தின் கதைக்களம்.

படத்தின் கதை:-

1920-களின் பிரெஞ்சு ரிவியராவில், டிக் டைவர் மற்றும் நிகோல் டைவர் தம்பதியினர் சொகுசு வாழ்க்கையின் அடையாளமாகத் திகழ்கின்றனர்.

அவர்கள் தங்கியிருக்கும் வில்லாவைச் சுற்றி எப்போதும் அமெரிக்க வெளிநாட்டவர்கள் மற்றும் நண்பர்களின் கூட்டம் சூழ்ந்திருக்கிறது.

அந்த விடுமுறை காலத்தில், 17 வயது நடிகையான ரோஸ்மேரி ஹோய்ட் மற்றும் அவரது தாயார் அங்கு வருகை தருகிறார்கள்.

இளம் ரோஸ்மேரி, டிக் டைவரின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் நெருக்கம் காட்டுகிறாள், அதேசமயம் நிகோலுடனும் நட்பு கொள்கிறாள்.

ரோஸ்மேரி இந்தத் தம்பதியின் ஆடம்பர வாழ்க்கைக்குப் பின்னால் ஏதோ ஒரு ரகசியம் இருப்பதை உணர்கிறாள்.

ஒரு விருந்தின் போது, நிகோல் கழிவறையில் ஒரு நரம்புத்தளர்ச்சி தொடர்பான பாதிப்புக்கு உள்ளாவதை வயலட் மெக்கஸ்கோ கவனிக்கிறார்.

இதைத் தொடர்ந்து ஏற்படும் மோதலில், வயலட்டின் கணவர் ஆல்பர்ட், நிகோலைப் பாதுகாக்கும் டாமி பார்பனுடன் கடற்கரையில் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுகிறார்.

அந்த நிகழ்வுகளுக்குப் பிறகு அனைவரும் பிரெஞ்சு ரிவியராவிலிருந்து வெளியேறுகிறார்கள்.

சிறிது காலம் கழித்து, பாரிஸில் ரோஸ்மேரி, டிக் மற்றும் நிகோலின் நெருங்கிய துணையாக மாறுகிறாள். அவள் டிக் மீது காதலை வெளிப்படுத்தி அவரை வசப்படுத்த முயற்சி செய்தாலும், அவர் அவளது காதலை நிராகரிக்கிறார்.

இதற்கிடையில், ரோஸ்மேரியின் ஹோட்டல் அறையில் ஜூன பீட்டர்சன் என்ற கறுப்பினத்தவர் கொலை செய்யப்பட்டு கிடப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

இது ரோஸ்மேரியின் சினிமா வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால், அவர் மீதான வீண் சந்தேகங்களைத் தவிர்க்க டிக், அந்த ரத்தக் கறை படிந்த உடலை ஹோட்டல் அறையிலிருந்து அப்புறப்படுத்தி மறைக்கிறார்.

இக்கட்டத்தில் கதை பின்னோக்கிச் செல்கிறது. 1917-ஆம் ஆண்டு வசந்த காலத்தில், டிக் டைவர் இளம் மருத்துவர் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் பிரான்ஸ் கிரிகோரோவியஸ் என்ற மனநல மருத்துவரைச் சந்திக்கிறார்.

அங்கு நோயாளியாக இருக்கும் நிகோல் வாரனை அவர் பார்க்க நேர்கிறது. தந்தையினால் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட நிகோலின் மனநிலை சிதைந்து கிடக்கிறது.

தொடர் கடிதப் பரிமாற்றங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையின் மூலம் நிகோல் டிக் மீது காதல் கொள்கிறாள்.

நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையிலான 'புளோரன்ஸ் நைட்டிங்கேல் சிண்ட்ரோம்' என்ற நிலைக்கு ஆளாகும் டிக் (ஜேசன் ரோபட்ஸ்), நிகோலின் மனநலத்தை மேம்படுத்த அவளைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு, பிரான்ஸ் கிரிகோரோவியஸின் கிளினிக்கில் டிக் பங்குதாரராக சேர்கிறார்.

நிகோலின் பெரும் செல்வம் அந்த நிறுவனத்திற்கு முதலீடாகப் பயன்படுகிறது. தந்தையின் மறைவுக்குப் பிறகு, டிக் அமெரிக்கா சென்றுவிட்டு, ரோஸ்மேரியைச் சந்திக்க ரோமுக்குச் செல்கிறார்.

அங்கு அவர்களுக்கிடையிலான குறுகிய காலக் காதல் வலியுடன் முடிகிறது.

மனமுடைந்த டிக், இத்தாலிய போலீசாருடன் மோதலில் ஈடுபட்டு அடிவாங்க, நிகோலின் சகோதரி அவரைச் சிறையிலிருந்து மீட்கிறார்.

இந்தச் சம்பவம் டிக்கின் கௌரவத்தைச் சிதைக்க, அவர் மதுவுக்கு அடிமையாகிறார்.

இதனால் அவரது மருத்துவத் தொழில் பாதிக்கப்பட்டு, கிளினிக்கின் பங்குகளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

காலப்போக்கில், ரோஸ்மேரியின் மீதான ஏக்கம் டிக்கின் வாழ்க்கையைச் சிதைக்கிறது.

ரோஸ்மேரி ஹாலிவுட்டில் வெற்றிகரமான நட்சத்திரமாக வளர, டிக் தனது சுயநம்பிக்கையை இழந்து, அனைவரிடமும் எகத்தாளமாகவும் முரட்டுத்தனமாகவும் மாறுகிறார்.

அவரது மதுப்பழக்கம் சமூக சூழலில் அவரை ஒரு கேலிப்பொருளாக மாற்றுகிறது.

டிக் தன்னை இழந்த நிலையில், நிகோல் டாமி பார்பனுடன் காதல் வயப்படுகிறாள்.

இறுதியில், நிகோல் டிக்கை விவாகரத்து செய்துவிட்டு, டாமி பார்பனைத் திருமணம் செய்துகொள்கிறாள்.

ஒரு மேதையான மருத்துவர், தான் காப்பாற்றிய நோயாளியின் அன்பு மற்றும் தனது சொந்தப் பலவீனங்களுக்கிடையில் சிக்கித் தன் அடையாளத்தை இழந்த துயரமான தருணத்தில் படம் நிறைகிறது.

அளவற்ற அன்பும், தியாகமும், பெரும் செல்வமும் ஒரு மனிதனின் ஒழுக்கத்தையும், லட்சியங்களையும் கூட மெல்ல மெல்ல சிதைத்து, இறுதியில் அவனைத் தன் சொந்த அடையாளத்தையே இழக்கச் செய்துவிடும் என்ற கசப்பான யதார்த்தத்தை இத்திரைப்படம் எச்சரிக்கையாக முன்வைக்கிறது.

#கீதப்ப்ரியன்இங்லிஷ்க்ளாஸிக்

The Unbearable Lightness of Being தி அன்ப்யரபிள் லைட்னெஸ் ஆஃப் பீயிங் 1988

எழுத்தாளர் மிலன் குந்தேராவின் உலகப் புகழ்பெற்ற நாவலைத் தழுவி, பிலிப் காஃப்மேன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளியான "The Unbearable Lightness of Being" 
"தி அன்ப்யரபிள் லைட்னெஸ் ஆஃப் பீயிங்" (தாங்கமுடியாதபடிக்கு விட்டேர்த்தியாக வாழ்தல் ) திரைப்படம், காதலின் ஆழத்தையும் வாழ்வின் தத்துவார்த்த முரண்பாடுகளையும் பேசும் ஒரு உன்னதமான படைப்பு.

1968 ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'பிராக் வசந்தம்' மற்றும் சோவியத் ஆக்கிரமிப்பின் பின்னணியில், மனித சுதந்திரம், அரசியல் ஒடுக்குமுறை மற்றும் பாலியல் உறவுகள் ஆகியவற்றை இப்படம் மிக நுட்பமாக ஆராய்கிறது.

எந்தப் பொறுப்புகளும் இல்லாத இலேசான வாழ்க்கையை விரும்பும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர், காதலை ஒரு 'பளுவாக' நினைக்கும் எளிய பெண் மற்றும் துரோகங்களையே சுதந்திரமாக எண்ணும் ஒரு பெண் கலைஞர் ஆகியோருக்கு இடையிலான உணர்வுப் போராட்டமே இப்படத்தின் தொடக்கப் புள்ளியாக அமைகிறது.

டேனியல் டே-லூயிஸ், ஜூலியட் பினோச் மற்றும் லினா ஒலின் ஆகியோரின் அசாத்திய நடிப்பில் உருவான இத்திரைப்படம், வாழ்வின் நிலையாமையைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தி, உலக சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.

மனித வாழ்க்கையின் தேடல்களும் முடிவுகளும் எவ்வளவு 'பளுவானவை' அல்லது எவ்வளவு 'இலேசானவை' என்ற தத்துவப் போராட்டமே இத்திரைப்படத்தின் அடிநாதமாகும்.

காதலையும் உடலுறவையும் பிரித்து, எந்தப் பொறுப்பும் இல்லாத இலேசான வாழ்க்கையை  விரும்பும் தோமாஸ் மற்றும் சபினா ஒருபுறம்,காதல், அர்ப்பணிப்பு, பொறாமை என அனைத்தையும் வாழ்வின் பிரிக்க முடியாத பளுவாக  நினைக்கும் தெரெஸா மறுபுறம் என இரு துருவங்களுக்கு இடையிலான மோதலாக இக்கதை நகர்கிறது.

வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறை மட்டுமே வாழக்கூடியது என்பதால், நாம் எடுக்கும் முடிவுகள் சரியானவையா தவறானவையா என்று ஒப்பிட்டுப் பார்க்க நமக்கு மறுவாய்ப்பு கிடைப்பதே இல்லை.

இதனால் மனிதனின் அத்தனை செயல்களும் தார்மீக எடையை இழந்து 'தாங்க முடியாத அளவுக்கு இலேசாகிவிடுகின்றன' என்பதை அரசியல் ஒடுக்குமுறை மற்றும் காதலின் பின்னணியில் படம் பேசுகிறது.

இறுதியில், அனைத்து சுதந்திரங்களையும் இழந்த பிறகுதான், ஒருவருக்காக நம்மை அர்ப்பணிப்பதில் உள்ள அந்தப் 'பளுவே' வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்பதைத் தோமாஸ் உணர்வதோடு படம் இந்த தத்துவ உண்மையை நிலைநாட்டுகிறது.

பிலிப் காஃப்மேனின் அசாத்திய இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், மிலன் குந்தேராவின் தத்துவார்த்த நாவலைத் திரைக்கு ஏற்றவாறு மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியதில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.

நாவலின் பக்கங்களில் இருந்த சிக்கலான தத்துவக் கோட்பாடுகளையும், மனித மனங்களின் முரண்பாடுகளையும் சிதைத்துவிடாமல், சுவாரசியமான ஒரு திரைக்கதையாக மாற்றி அமைத்ததில் இயக்குநரின் பங்கும் திரைக்கதை ஆசிரியர் ஜான்-கிளாட் காரியரின் பங்கும் அளப்பரியது.

1968-ன் பிராக் வசந்த காலத்தின் அரசியல் எழுச்சியையும், அதைத் தொடர்ந்து வந்த சோவியத் ராணுவத்தின் கொடூரமான ஆக்கிரமிப்பையும், கதாபாத்திரங்களின் அந்தரங்க உணர்வுகளோடு பிணைத்து நகரும் திரைக்கதை, படத்தின் நீளத்தை மறக்கடித்து ரசிகர்களைக் கதைக்குள் ஈர்க்கிறது.

இப்படத்தின் ஆகப்பெரும் பலம் அதன் நடிகர்களின் அசாத்தியமான நடிப்புத் திறனாகும். தோமாஸ் என்ற பெண் பித்தராகவும், பின்னர் காதலுக்காகத் தன் வாழ்வையே இழக்கும் அறுவை சிகிச்சை நிபுணராகவும் டேனியல் டே-லூயிஸ் வாழ்ந்திருக்கிறார்.

அவரது அலட்சியமான பார்வையும், பின்னர் ஏற்படும் அகமாற்றமும் அற்புதம். அவருக்கு இணையாக, தெரெஸா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜூலியட் பினோச், கணவனின் துரோகத்தால் ஏற்படும் வலியையும், தவிப்பையும், ஏமாற்றத்தையும் தனது கண்கள் மூலமாகவே கடத்தி ஒட்டுமொத்தப் பாராட்டுகளையும் அள்ளுகிறார்.

சுதந்திரப் பறவையாக, துரோகங்களை ரசிக்கும் சபினா பாத்திரத்தில் லினா ஒலின் காட்டியிருக்கும் மிடுக்கும் கவர்ச்சியும் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன.

இப்படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்டிய பெருமை ஒளிப்பதிவாளர் ஸ்வென் நிக்விஸ்ட்டையே சாரும்.

புகழ்பெற்ற இயக்குநர் இங்மார் பெர்க்மேனுடன் பணியாற்றிய இவர், இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஒரு ஓவியம் போல செதுக்கியுள்ளார்.

பிராக் நகரத்தின் அழகையும், போரின் கொடூரத்தையும், காதலின் நெருக்கத்தையும் வண்ணங்களின் வழியே அவர் கடத்திய விதம் அசாத்தியமானது.

லியோஸ் ஜனசெக்கின் கிளாசிக்கல் இசையும் படத்தொகுப்பும் படத்தின் தத்துவார்த்தத் தன்மைக்கு மேலும் ஒரு ஆழமான பரிமாணத்தை வழங்குகின்றன.

இந்த ஒட்டுமொத்தக் கூட்டுமுயற்சியின் காரணமாக, இத்திரைப்படம் சிறந்த தழுவல் திரைக்கதை மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், புகழ்பெற்ற பிரிட்டிஷ் அகாடமி விருதுகளில் (BAFTA) சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை வென்றதுடன், உலகளவில் பல மதிப்புமிக்க விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுச் சாதனை படைத்தது.

படத்தின் கதை:-

கம்யூனிச செக்கோஸ்லோவாக்கியாவின் பிராக் நகரில் வாழும் வெற்றிகரமான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான தோமாஸ் (டேனியல் டே-லூயிஸ்), தன்னைப்போலவே எதற்கும் கட்டுப்படாத சுதந்திர சிந்தனை கொண்ட ஓவியரான சபினா (லினா ஒலின்) என்ற பெண்ணுடன் காதல் மற்றும் பாலியல் உறவு வைத்துள்ளார்.

காதலையும் உடலுறவையும் பிரித்துப் பார்க்கும் தோமாஸ், ஒரு பிரத்யேக அறுவை சிகிச்சைக்காக ஒரு நகரின் தங்குவிடுதிக்கு செல்ல நேரிடுகிறது.

அங்கு, தன் தற்போதைய வாழ்க்கையில் திருப்தியில்லாத, அறிவுசார்ந்த தேடல்களைக் கொண்ட தெரெஸா (ஜூலியட் பினோச்) என்ற எளிய பணிப்பெண்ணைச் சந்திக்கிறார்.

அவளது அப்பாவித்தனத்தால் ஈர்க்கப்படும் தோமாஸ் அவளுடன் பழகுகிறார். பின்னர், தெரெஸா தன் கிராமத்து வாழ்க்கையைத் துறந்து தோமாஸைத் தேடி பிராக் நகரிற்கே வந்து அவருடன் குடியேறுகிறாள்.

இது தோமாஸின் வழக்கமான பல பெண் தொடர்புகளுக்குப் பெரும் சவாலாக மாறுகிறது.

தெரெஸாவுக்கு ஒரு வேலை தேடித்தர நினைக்கும் தோமாஸ், சபினாவின் உதவியோடு அவளுக்குப் புகைப்படக் கலைஞர் வேலையைப் பெற்றுத் தருகிறார்.

சபினாவும் தோமாஸையும் காதலர்கள் என்பதைத் தெரெஸா புரிந்துகொள்ளும்போது அவளுக்குள் பொறாமையும் தவிப்பும் ஏற்பட்டாலும், இரு பெண்களுக்கு இடையே ஒரு ஆழமான நட்பு மலர்கிறது.

தோமாஸ் தன் பழைய பழக்கங்களை மாற்றிக்கொள்ளாவிட்டாலும், தெரெஸாவின் நிபந்தனையற்ற அன்பிற்காக அவளை ஒரு எளிய சடங்குடன் திருமணம் செய்துகொள்கிறார்.

அந்தத் திருமண நிகழ்வின்போது இருவரும் இடைவிடாமல் சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இருப்பினும், தோமாஸின் தொடர் பெண் பித்தத்தனம் தெரெஸாவைத் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.

அவள் அவரை விட்டுப் பிரிய நினைத்தாலும், அதே காலகட்டத்தில் செக்கோஸ்லோவாக்கியா மீது சோவியத் ராணுவம் தொடுக்கும் ஆக்கிரமிப்புப் போர் அவளைத் தோமாஸுடன் மேலும் பிணைக்கிறது.

இந்த அரசியல் குழப்பங்களுக்கு நடுவே, சோவியத் படைகளுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களைத் தெரெஸா தன் கேமராவில் துணிச்சலாகப் படம் பிடித்து, அந்த ஃபிலிம் சுருள்களை மேற்கத்திய நாடுகளுக்குக் கடத்துவதற்காக வெளிநாட்டினரிடம் ஒப்படைக்கிறாள்.

பிராக் வசந்த காலத்தின் சுதந்திரத்தை நசுக்கி, அங்கு உருவாகும் அடக்குமுறை போலீஸ் ஆட்சியில் வாழ விரும்பாமல், தோமாஸ், தெரெஸா மற்றும் சபினா ஆகிய மூவரும் நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்திற்குத் தப்பிச் செல்கிறார்கள்.

இதில் சபினா முதலாவதாக வெளியேற, அவரைத் தொடர்ந்து தயக்கத்துடனே தோமாஸும் தெரெஸாவும் புறப்படுகிறார்கள்.

முதலில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்கு வரும் சபினா, அங்கு பிரான்ஸ் (டெரெக் டி லின்ட்) என்ற திருமணமான பல்கலைக்கழகப் பேராசிரியரைச் சந்தித்துக் காதலில் விழுகிறாள்.

பிரான்ஸ் அவளுக்காகத் தன் மனைவி மற்றும் குடும்பத்தையே கைவிடத் துணிகிறான்.

ஆனால், அவனது இந்த அர்ப்பணிப்பும் தீவிரமான காதலும் தன் உணர்வுகளுக்கு ஒரு பெரிய பளுவாக  மாறித் தன்னை முடக்கிவிடுமோ என்று அஞ்சும் சபினா, அவனது திட்டத்தைக் கேட்டதும் அவனுக்குத் தெரியாமல் அவனை விட்டு விலகி ஓடுகிறாள்.

இதற்கிடையில், சுவிட்சர்லாந்து வாழ்க்கையோடு ஒத்துப் போக முடியாமல் தெரெஸா தவிக்கிறாள், அங்குள்ள சுவிஸ் மக்கள் அவளை அன்போடு நடத்தவில்லை.

மேலும், புதிய நாட்டிலும் தோமாஸ் தன் பெண் பித்தத் தனத்தைத் தொடர்வதைக் கண்டு முற்றிலும் விரக்தியடையும் தெரெஸா, சோவியத் ஆக்கிரமிப்பில் இருக்கும் தன் தாயகமே பரவாயில்லை என்று முடிவெடுத்து, தோமாஸிற்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு பிராக் நகரிற்கே தனியாகத் திரும்புகிறாள்.

அவள் சென்றதால் கடுமையான வருத்தமடையும் தோமாஸ், அவளைத் தேடி மீண்டும் தாயகம் வருகிறார்.

ஆனால், எல்லையில் கம்யூனிச அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டைப்  பறிமுதல் செய்வதால், அவரால் மீண்டும் நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது.

தன் பொருட்டே அவர் எல்லாவற்றையும் துறந்து தாயகம் திரும்பினார் என்பதை அறியும் தெரெஸா பெருமகிழ்ச்சி அடைந்து, இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.

பிராக் நகரில் தோமாஸ் மீண்டும் மருத்துவப் பணியைத் தொடர முயல்கிறார்,ஆனால் சோவியத் படையெடுப்பிற்கு முன்பு கம்யூனிச அரசை விமர்சித்து அவர் எழுதிய ஒரு காரசாரமான கட்டுரை அவரை ஒரு அரசியல் எதிரியாக மாற்றியிருக்கிறது.

அந்த உளவு அரசு, தன் கட்டுரை கம்யூனிச எதிர்ப்பு உணர்வைத் தூண்டியதாக ஒப்புக்கொண்டு தோமாஸை ஒரு மன்னிப்புக் கடிதத்தில் கையெழுத்திடச் சொல்லி வற்புறுத்துகிறது.

தன் தார்மீகக் கொள்கைகளை விற்க மறுத்து தோமாஸ் கையெழுத்திட மறுப்பதால், அவர் மருத்துவம் பார்க்க முடியாதபடி கறுப்புப் பட்டியலில் வைக்கப்படுகிறார்.

பிழைப்பிற்காக அவர் ஜன்னல் துடைக்கும் தொழிலாளியாக மாறுகிறார்; அப்போதும் ஒரு உயர் கம்யூனிச அதிகாரியின் மகளால் ஈர்க்கப்பட்டுத் தன் பாலியல் லீலைகளைத் தொடர்கிறார்.

அந்தப் பெண் அவரை ஏற்கனவே யாரென்று அடையாளம் தெரிந்தவள் போலப் பழகுகிறாள்.

மறுபுறம், ஒரு உணவகத்தில் பணிபுரியும் தெரெஸாவை ஒரு பொறியாளர் (ஸ்டெல்லான் ஸ்கார்ஸ்கார்ட்) தவறான நோக்கோடு அணுகித் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறான்.

தோமாஸின் தொடர் துரோகங்களால் வேதனையடையும் தெரெஸா, உணர்ச்சியற்ற ஒரு ஒற்றை உடலுறவில் அந்தப் பொறியாளருடன் ஈடுபடுகிறாள்.

ஆனால், அடுத்த கணமே கடுமையான குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அவள், அந்தப் பொறியாளர் தங்களை உளவு பார்க்கும் ரகசிய போலீஸ் (StB) அமைப்பின் ஆளாக இருப்பானோ என்றும், தங்களையும் தோமாஸையும் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்றும் மரண பயம் கொள்கிறாள்.

இந்தத் தவிப்பைத் தாங்க முடியாமல் ஒரு கால்வாய்க் கரையில் அவள் தற்கொலை செய்ய முற்படும்போது, தற்செயலாக அந்தப் பாதையைக் கடந்து செல்லும் தோமாஸ் அவளைக் காப்பாற்றி, ஆறுதல் கூறித் தன் காதலால் அவளை மீட்டெடுக்கிறார்.

நகர வாழ்க்கையின் இந்த அரசியல் நெருக்கடிகளாலும் சந்தேகங்களாலும் சோர்வடையும் தெரெஸா, பிராக் நகரை விட்டு வெளியேறும்படி தோமாஸை வற்புறுத்துகிறாள்.

கடவுச்சீட்டு இல்லாத நிலையைத் தோமாஸ் நினைவூட்டினாலும், தெரெஸா ஒரு யோசனை கூறி அவரை கிராமப்புறத்திற்கு அழைத்துச் செல்கிறாள்.

அங்கு தோமாஸின் பழைய நோயாளி ஒருவரான பவெல் (பவெல் லாண்டோவ்ஸ்கி) அவர்களை வரவேற்றுத் தன் கிராமத்தில் தங்க வைக்கிறார்.

அந்த கிராமத்தில், பிராக் நகரின் அரசியல் உளவு வேலைகளும், பாலியல் சலனங்களும் இல்லாத ஒரு அமைதியான, அழகான வாழ்க்கையை அவர்கள் வாழத் தொடங்குகிறார்கள்.

அவர்களுக்கு நேர்மாறாக, அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த சபினா, எதற்கும் கட்டுப்படாத தன் பழைய போஹிமியன் வாழ்க்கை முறையையே தொடர்ந்து வாழ்கிறாள்.

ஒரு நாள், தோமாஸும் தெரெஸாவும் ஒரு கிராமத்துப் பாதையில் நடந்த கார் விபத்தில் ஒன்றாக உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சிகரமான செய்தி ஒரு கடிதம் மூலம் சபினாவை வந்தடைகிறது.

அது அவளைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
அவர்கள் விபத்தில் மடிவதற்குச் சற்று முன்பாக நடக்கும் காட்சியோடு இத்திரைப்படம் முடிகிறது.

ஒரு மழை நாளில் தங்களது பண்ணை டிரக் வண்டியை ஓட்டிக்கொண்டு கிராமத்துப் பாதையில் செல்லும்போது, தோமாஸ் தெரெஸாவிடம், இத்தனை காலப் போராட்டங்களுக்குப் பிறகு தனக்குள் இருக்கும் அத்தனை சுமைகளும் நீங்கி, தான் எவ்வளவு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் என்று அமைதியாகக் கூறுவதோடு வாழ்வின் அத்தனை தத்துவார்த்தப் பக்கங்களுடன் இக்கதை நிறைவடைகிறது.

வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறை மட்டுமே வாழக்கூடியது என்பதால், நாம் எடுக்கும் எந்த ஒரு முடிவும் நிரந்தரமானதோ அல்லது மறுபரிசீலனைக்கு உரியதோ அல்ல.

எனவே, வாழ்வின் தருணங்களை அதன் போக்கிலேயே பாரமின்றி ஏற்கும்போதே மனிதன் அமைதி காண்கிறான் என்பதே இத்திரைப்படம் வழங்கும் முக்கிய செய்தியாகும்.

பொறுப்புகளற்ற சுதந்திரமும், தப்பியோடும் எண்ணமும் மனிதனை இலேசாக மாற்றினாலும், அது ஒருகட்டத்தில் அவனுக்குத் தாங்க முடியாத தத்துவார்த்தச் சூனியத்தையே பரிசாகத் தருகிறது.

மாறாக, உண்மையான காதலும், ஒருவருக்காக நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ளும் பொறுப்பும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமுள்ள பளுவைத் தருகின்றன.

அரசியல் அடக்குமுறையோ, தனிமனித துரோகங்களோ எதுவாக இருந்தாலும், இறுதிவரை ஒருவருக்கொருவர் துணையாக நின்று அன்பைப் பகிர்வதில்தான் வாழ்வின் ஆகச்சிறந்த மகிழ்ச்சி அடங்கியுள்ளது என்பதை இப்படம் உணர்த்துகிறது.

#கீதப்ப்ரியன்இங்லிஷ்க்ளாஸிக்

தி ப்ரெஸ்டீஜ் The Prestige 2006

"தி பிரஸ்டீஜ்"  உங்களை விசித்திரமான ஒரு மந்திர உலகிற்குள் இழுத்துச் செல்லும் அசாத்தியமான உளவியல் திரில்லர் திரைப்படமாகும். 

2006 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம், வெறும் சாதாரண மாயாஜால சாகசக் கதை அல்ல. 1800-களின் பிற்பகுதியில் விக்டோரியன் லண்டன் பின்னணியில், ராபர்ட் ஆங்கியர் (ஹியூ ஜேக்மேன்) மற்றும் ஆல்ஃபிரட் போர்டன் (கிறிஸ்டியன் பேல்) ஆகிய இரு திறமையான மாயாஜால நிபுணர்களுக்கு இடையே ஏற்படும் கடுமையான பகை, அனல் பறக்கும் போட்டி, சூழ்ச்சிகள் மற்றும் தியாகங்களை மையமாகக் கொண்டு இக்கதை நகர்கிறது.

எழுத்தாளர் கிறிஸ்டோபர் ப்ரீஸ்ட் எழுதிய நாவலைத் தழுவி, புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனும் அவருடைய சகோதரர் ஜொனாதன் நோலனும் இணைந்து இதற்குத் திரைக்கதை அமைத்துள்ளனர்.

 ஒரு மாயாஜாலக் காட்சி எப்படி உறுதிமொழி, திருப்பம், மற்றும் நிறைவுப் பகுதி என மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்படுகிறதோ, அதே போலத்தான் இந்தத் திரைப்படத்தின் கதையும் மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

ஒரு மேஜிக்கைப் பார்த்து வியப்பது போலவே, படத்தைப் பார்க்கும் ரசிகர்களும் இறுதிவரை இருக்கையின் நுனியில் அமர்ந்து ஆச்சரியப்பட வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் கலைப்படைப்பே இந்தத் திரைப்படம்.

"தி பிரஸ்டீஜ்" திரைப்படத்தின் அடிநாதம் , ஒரு கலையின் மீதான அதீத மோகமும், எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற பழிவாங்கும் வெறியும் ஒரு மனிதனை எந்த அளவிற்கு சுயநினைவற்ற பைத்தியக்காரத்தனத்திற்கும் அழிவிற்கும் கொண்டு செல்லும் என்பதாகும். 

இங்கு மாயாஜாலம் என்பது வெறும் மேடை வித்தை மட்டுமல்ல,அது இரு மனிதர்களின் அகம்பாவம், ரகசியம் மற்றும் தியாகங்களின் உச்சக்கட்டம். தனது கலையில் சிறந்தவனாகக் காட்டிக்கொள்ளவும், எதிரியின் ரகசியத்தை உடைக்கவும் இருவருமே தங்களின் அன்பு, குடும்பம், நேர்மை என ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே பலி கொடுக்கிறார்கள். 

ஒருவன் தனது அடையாளத்தை இழந்து, தன் வாழ்நாளைப் பாதியாகப் பகிர்ந்து வாழ்கிறான்.

மற்றொருவன் ஒவ்வொரு இரவும் மேடையில் புது மனிதனாகப் பிறக்க, அசல் மனிதனாகிய தன்னைத்தானே கொடூரமாகக் கொலை செய்து கொள்கிறான். 

"ஒரு கலைக்காக ஒரு மனிதன் எவ்வளவு தூரம் செல்வான்?" என்ற கேள்வியே படத்தின் மையக்கரு. 

இறுதியில், மேடையில் பார்வையாளர்களை ஒரு நொடி ஆச்சரியப்படுத்த, நிஜ வாழ்க்கையையே நிரந்தர நரகமாக்கிக் கொண்ட இரு மனிதர்களின் வெறித்தனமான உளவியல் போர்தான் இத்திரைப்படத்தின்  அடிநாதம்.

"தி பிரஸ்டீஜ்" திரைப்படம் நடிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, இசை என அனைத்துத் துறைகளிலும் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு உலகத்தரம் வாய்ந்த கலைப்படைப்பாகும்.

இத்திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு முதன்மை காரணமாக அமைந்தது ஹியூ ஜேக்மேன் மற்றும் கிறிஸ்டியன் பேல் ஆகிய இருவரின் அசாத்தியமான நடிப்பாகும்.

 ஒருவரை ஒருவர் வீழ்த்தத் துடிக்கும் வெறி, ரகசியங்களைக் காப்பதில் காட்டும் பிடிவாதம், அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி மற்றும் மனப் போராட்டங்களை இருவரும் தங்களின் கண்கள் மூலமாகவும் உடல்மொழி மூலமாகவும் மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருந்தனர்.

 அவர்களுக்குப் பக்கபலமாக மைக்கேல் கெய்ன் மற்றும் ஸ்கார்லெட் ஜோஹான்சன் ஆகியோர் தங்களின் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருந்தனர். 

குறிப்பாக, விஞ்ஞானி நிகோலா டெஸ்லாவாக நடித்த டேவிட் போவியின் நடிப்பு படத்திற்கு ஒரு தனித்துவமான மர்மத் தன்மையைக் கொடுத்தது.

கதையைப் பொறுத்தவரை, இது வெறும் இரண்டு மாயாஜாலக்காரர்களின் போட்டி மட்டுமல்லாமல், மனிதனின் பேராசை மற்றும் பழிவாங்கும் உணர்ச்சி ஒருவனை எந்த எல்லைக்குக் கொண்டு செல்லும் என்பதை ஆராயும் ஆழமான உளவியல் கதையாகும்.

 இந்தக் கதையை நேர்க்கோட்டில் சொல்லாமல், கால மாற்றங்களை முன்னும் பின்னுமாக மாற்றி அமைத்து, பார்வையாளர்களைக் குழப்பாமல் அதே சமயம் சுவாரசியத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றதில் திரைக்கதையின் பங்கு மிக முக்கியமானது. 

படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒவ்வொரு சாதாரணக் காட்சியும், இறுதிக் காட்சியின் பிரம்மாண்ட திருப்பங்களுக்குக் குறிப்புகளாக அமையும் வண்ணம் திரைக்கதை மிக புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருந்தது.

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தனது அசாத்தியமான கற்பனைத் திறனாலும் தனித்துவமான இயக்க பாணியினாலும் இத்திரைப்படத்தை ஒரு புதிரான மாயாஜால அனுபவமாக மாற்றியிருந்தார். 

விக்டோரியன் காலத்து லண்டன் நகரை நம் கண்முன்னே நிறுத்துவதிலும், அறிவியல் மற்றும் மந்திரக் கலைக்கு இடையே உள்ள மெல்லிய கோட்டை மிக நேர்த்தியாகக் கையாள்வதிலும் அவரது இயக்கம் சிறந்து விளங்கியது.

 மேடையில் நடக்கும் மாயாஜாலக் காட்சிகளைப் படமாக்கிய விதம், பார்வையாளர்களையும் அந்த நாடகக் கொட்டகைக்குள் அமர வைத்த உணர்வைத் தந்தது.

இப்படத்தின் ஒளிப்பதிவு வாலி பிஸ்டரால் கையாளப்பட்டது. அவர் விக்டோரியன் காலத்து லண்டனின் இருண்ட, மர்மமான சூழலைத் தனது கேமரா கோணங்கள் மூலம் கச்சிதமாகப் பிரதிபலித்தார். 

பெரும்பாலான காட்சிகளில் செயற்கை விளக்குகளைத் தவிர்த்து, மெழுகுவர்த்தி மற்றும் இயற்கை ஒளிகளையே பயன்படுத்திய விதம் படத்திற்கு ஒரு பழமையான மற்றும் நிஜமான தோற்றத்தைக் கொடுத்தது. 

வேகமாக நகரும் கையில் பிடிக்கும் கேமராக்கள் கதாபாத்திரங்களின் பதற்றத்தையும், மன உளைச்சலையும் பார்வையாளர்களுக்குக் கடத்த உதவின.

படத்தின் பின்னணி இசையை டேவிட் ஜூலியன் அமைத்திருந்தார். 
நோலனின் முந்தைய படங்களுக்கும் இசையமைத்த இவர், இப்படத்தின் மர்மம் மற்றும் திகில் சூழ்நிலையைத் தனது இசையால் மேலும் கூட்டினார். 

கதையின் மூன்று அங்கங்களான உறுதிமொழி, திருப்பம் மற்றும் நிறைவுப் பகுதிக்கு ஏற்ப இசையிலும் மாறுபட்ட வடிவங்களைக் கையாண்டு, படத்தின் விறுவிறுப்பை இறுதிவரை தக்கவைக்கச் செய்தார்.

விருதுகளில் , இத்திரைப்படம் அதன் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த கலை இயக்கம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் மதிப்புமிக்க ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 

இது தவிர, சிறந்த அறிவியல் புனைகதைத் திரைப்படத்திற்கான சாட்டிலைட் விருது, சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான எம்பயர் விருதுகள் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளையும், பாராட்டுகளையும் அள்ளிக் குவித்தது. 

விமர்சகர்கள் மற்றும் உலக சினிமா ரசிகர்களால் எக்காலத்திற்கும் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றும் இத்திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

===============================
படத்தின் கதை:-

1800-களின் பிற்பகுதியில் லண்டன் மாநகரில், ராபர்ட் ஆங்கியர் (ஹியூ ஜேக்மேன்) மற்றும் ஆல்ஃபிரட் போர்டன் (கிறிஸ்டியன் பேல்) ஆகிய இரு இளைஞர்களும் ஒரு வயதான மூத்த மாயாஜால நிபுணரான மில்டன் (ரிக்கி ஜே) என்பவரிடம் உதவியாளர்களாகப் பணிபுரிந்து, அவரிடமிருந்து மாயாஜாலக் கலைகளைக் கற்றுக்கொண்டிருந்தார்கள்.

 இவர்களுடன் மேடை வடிவமைப்புப் பொறியாளரான ஜான் கட்டர் (மைக்கேல் கெய்ன்) என்பவரும் இணைந்து பணியாற்றினார். 

அப்போது, ஜூலியா மெக்கல்லோ (பைப்பர் பெராபோ) என்ற பெண் அந்த மாயாஜால நிபுணரின்  உதவியாளராகவும், ராபர்ட் ஆங்கியரின் மனைவியாகவும் இருந்தார். 

ஒரு நாள் மேடையில் பார்வையாளர்கள் முன்னிலையில் அவர்கள் தண்ணீர்த் தொட்டிக்குள் இருந்து தப்பிக்கும் ஒரு ஆபத்தான மாயாஜாலத் தந்திரத்தைச் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு விபத்து ஏற்பட்டு, ஆங்கியரின் மனைவி ஜூலியா தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக இறந்துவிடுகிறார்.

 இந்தச் சோகமான சம்பவத்திற்கு மேடையில் முடிச்சுப் போட்ட ஆல்ஃபிரட் போர்டன்தான் காரணம், அவர் கட்டிய தவறான முடிச்சினால்தான் தன் மனைவி இறந்தார் என்று ஆங்கியர் உறுதியாக நம்புகிறார்.

 இதன் காரணமாக, அதுவரை மிக நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்த ஆங்கியரும் போர்டனும், ஒருவரையொருவர் கண்டாலே வெறுக்கும் கடுமையான பகைவர்களாக மாறுகிறார்கள். 

ஒருவரை ஒருவர் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும், உலகிற்குத் தன்னைச் சிறந்த மாயாஜாலக்காரனாகக் காட்ட வேண்டும், எதிரி செய்யும் வித்தையை விடத் தான் செய்யும் வித்தை பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்ற வெறி இருவருக்குள்ளும் மிக ஆழமாகப் பற்றி எரிகிறது.

இந்தக் கடுமையான போட்டிக்கு நடுவில், ஆல்ஃபிரட் போர்டன் தனியாகச் சென்று "இடம்பெயரும் மனிதன்" என்ற ஒரு அசாத்தியமான, அற்புதமான மாயாஜால வித்தையை மேடையில் செய்து காட்டுகிறார். 

இந்தத் தந்திரத்தில், போர்டன் மேடையின் ஒரு பக்கத்தில் இருக்கும் ஒரு பெட்டிக்குள் செல்வார், அடுத்த கணமே கண் இமைக்கும் நேரத்தில் மேடையின் மறுமுனையில் இருக்கும் மற்றொரு பெட்டியில் இருந்து ஆச்சரியப்படும்படி தோன்றிவிடுவார். 

இதைப் பார்க்கும் ஆங்கியர் முற்றிலும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் மூழ்குகிறார்.

 போர்டன் எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல், மிகக் கச்சிதமாக எப்படி இந்த வித்தையைச் செய்கிறார் என்று ஆங்கியர் தீவிரமாக யோசிக்கத் தொடங்குகிறார். 

இதன் விளைவாக, போர்டனைப் போலவே தானும் ஒரு தந்திரத்தைச் செய்ய ஆங்கியர் முயல்கிறார். 

ஆனால், ஆங்கியர் செய்யும் தந்திரம் போர்டனின் தந்திரத்தைப் போல அசல் தன்மையுடன் அமையவில்லை.

 அவர் தனக்கு நிகராக இருக்கும் ஜெரால்ட் ரூட் என்ற ஒரு நபரைத் தன் இரட்டையராகப் பயன்படுத்தி, மேடைக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் ஒரு சாதாரண தந்திரமாகவே அதைச் செய்கிறார். 

இதனால் திருப்தியடையாத ஆங்கியர், எப்படியாவது போர்டனின் அசல் ரகசியத்தை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மேடையில் தனக்கு உதவியாளராக இருந்த ஒலிவியா வென்ஸ்கோம்ப் (ஸ்கார்லெட் ஜோஹான்சன்) என்ற பெண்ணை, போர்டனிடம் உளவு பார்க்க அனுப்பி வைக்கிறார். 

ஆனால், அங்கு சென்ற ஒலிவியா, நாளடைவில் ஆங்கியரின் எண்ணத்திற்கு மாறாக போர்டனின் மீது காதல் வயப்பட்டு, அவரோடே சேர்ந்து விடுகிறார்.

தோல்வியாலும் ஏமாற்றத்தாலும் விரக்தியடைந்த ஆங்கியர், எப்படியாவது போர்டனின் வித்தையை விடச் சிறந்த ஒன்றைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

 இதற்காக அவர், கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில் மின்சக்தி சோதனைகளை ஆய்வு செய்து வரும் புகழ்பெற்ற விஞ்ஞானியான நிகோலா டெஸ்லா (டேவிட் போவி) என்பவரைச் நேரில் சென்று சந்திக்கிறார். 

போர்டன் செய்யும் தந்திரத்தைப் போலவே, ஒரு நபரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு உண்மையாகவே மாற்றும் ஒரு இயந்திரத்தை உருவாக்கித் தருமாறு அவரிடம் கேட்கிறார். 

டெஸ்லாவின் உதவியாளரான மிஸ்டர் அலி (ஆண்டி செர்கிஸ்) என்பவரின் முன்னிலையில், டெஸ்லா பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அந்த விசித்திரமான இயந்திரத்தை ஆங்கியருக்காக உருவாக்குகிறார். 

ஆனால், அந்த இயந்திரத்தை ஆங்கியரிடம் ஒப்படைக்கும் போது, இதனால் நல்லது மட்டுமே நடக்காது, இதன் பின்னால் பல துன்பங்களும் பேரழிவுகளும் வரும் என்று டெஸ்லா அவரை எச்சரிக்கிறார். 

இந்த இயந்திரத்தை லண்டனுக்குக் கொண்டு வரும் ஆங்கியர், மவுண்ட் வில்சன் அப்சர்வேட்டரியின் பார்க்கிங் லாட்டில் டெஸ்லாவின் கண்டுபிடிப்புக்கான காட்சிகளைப் படமாக்கியது போல, அதன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி "உண்மையில் இடம்பெயரும் மனிதன்" என்ற முற்றிலும் புதிய, பிரம்மாண்டமான மாயாஜால வித்தையை மேடையில் அரங்கேற்றுகிறார். 

இந்தத் தந்திரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய புகழையும் ஆச்சரியத்தையும் ஆங்கியருக்குப் பெற்றுத் தருகிறது.

ஆங்கியரின் இந்த அசாத்தியமான வளர்ச்சியைப் பார்க்கும் போர்டன், இதில் ஏதோ ஒரு பெரிய மர்மம் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறார். 

இந்தத் தந்திரத்தின் ரகசியத்தை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற வெறியில், ஒரு நாள் ஆங்கியர் மேடையில் வித்தை காட்டும் போது, போர்டன் யாருக்கும் தெரியாமல் மேடைக்கு அடியில் இருக்கும் பகுதிக்கு பதுங்கிச் செல்கிறார்.

 அங்கே அவர் ஒரு பயங்கரமான காட்சியைக் கண்டு உறைந்துபோகிறார்.
மேடையின் மேலிருந்து விழும் ஆங்கியர், அங்கே வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டிக்குள் பூட்டப்பட்டு, தப்பிக்க முடியாமல் மூழ்கி இறந்துவிடுவதைக் காண்கிறார். 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆங்கியரின் மரணத்திற்குக் காரணம் போர்டன்தான் என்று குற்றம் சாட்டப்பட்டு, போர்டன் கைது செய்யப்படுகிறார்.

 நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி (டேனியல் டேவிஸ்) போர்டனுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கிறார். 

சிறையில் தூக்கு மேடையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் போர்டனைச் சந்திக்க, லார்ட் கால்ட்லோ என்ற ஒரு செல்வந்தர் வருகிறார். 

அவர் வேறு யாருமல்ல, இறந்துபோனதாகக் கருதப்பட்ட ராபர்ட் ஆங்கியர்தான் என்பதை போர்டனுக்கு வெளிப்படுத்துகிறார். 

அதாவது, ஆங்கியர் உண்மையில் இறக்கவில்லை, அது போர்டனைப் பழிவாங்க ஆங்கியர் போட்ட ஒரு மிகப்பெரிய சதித் திட்டம் என்பது போர்டனுக்குத் தெரியவருகிறது.

படம் அதன் இறுதிப் பகுதியை எட்டும்போது, பார்ப்பவர்களை உலுக்கும் இரண்டு மிகப்பெரிய ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. 

முதலாவது ரகசியம், ஆல்ஃபிரட் போர்டன் என்பது ஒரு தனிமனிதன் அல்ல.
அவர்கள் ஒட்டிப்பிறக்காத, தோற்றத்தில் அச்சடித்தாற்போல் இருக்கும் இரு இரட்டைச் சகோதரர்கள்! 

இந்த உலகை ஏமாற்றித் தங்களின் "இடம்பெயரும் மனிதன்" வித்தையைச் சாத்தியமாக்குவதற்காக, அவர்கள் இருவரும் தங்களின் சொந்த அடையாளங்களைத் துறந்து, மாறி மாறி ஆல்ஃபிரட் போர்டன் என்ற ஒரே மனிதனாக வாழ்ந்து வந்தனர். 

இதில் ஒரு சகோதரன் பெர்னார்ட் ஃபாலன் என்ற பெயரில் உதவியாளராக நடித்து வந்தான். இவர்களில் ஒரு சகோதரன் சாரா போர்டன் (ரெபெக்கா ஹால்) என்ற பெண்ணை உண்மையாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டான்.

 மற்றொரு சகோதரன், ஆங்கியர் அனுப்பி வைத்த உதவியாளரான ஒலிவியாவை நேசித்தான்.

 இதனால், சாராவிடம் ஒரு நாள் காட்டும் அன்பை, மறுநாள் காட்ட முடியாமல் அவர்கள் தடுமாறினர்.

 தன் கணவனிடம் ஏதோ ஒரு பெரிய உண்மை மறைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து, அந்த மன உளைச்சலால் சாரா தற்கொலை செய்து கொள்கிறாள். 

தற்போது ஆங்கியரின் சூழ்ச்சியால் சிறையில் தூக்கிலிடப்படுவது ஒலிவியாவை நேசித்த ஒரு சகோதரன்.

 தப்பிப் பிழைத்து, தனது மகள் ஜெஸ் போர்டன் (சமந்தா மஹுரின்) என்பவளைத் தேடிச் செல்வது சாராவை நேசித்த மற்றொரு சகோதரன் ஆவான்.

இரண்டாவது அதிர்ச்சியூட்டும் ரகசியம் , விஞ்ஞானி நிகோலா டெஸ்லா உருவாக்கிய இயந்திரம் ஒரு மனிதனை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றும் போது, அந்த மனிதனை அப்படியே பிரதி எடுத்து, அவனுடைய இன்னொரு அசல் நகலை (குளோன்) உருவாக்குகிறது.

 இதன் காரணமாக, ஒவ்வொரு முறையும் ஆங்கியர் மேடையில் அந்த வித்தையைச் செய்யும் போது, இயந்திரத்திற்குள் இருக்கும் அசல் ஆங்கியர் அப்படியே கீழே இருக்கும் தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து, பூட்டப்பட்டு, மூழ்கி இறந்துவிடுவார். 

அதே விநாடியில், அந்த இயந்திரம் உருவாக்கிய புதிய ஆங்கியர் மேடையின் மறுபுறத்தில் தோன்றி கைதட்டல் பெறுவார். 

தன் எதிரியான போர்டனை வீழ்த்திப் பழிவாங்க வேண்டும் என்ற ஒற்றை வெறிக்காக, ஆங்கியர் ஒவ்வொரு இரவும் வித்தை காட்டும் போதும் தன்னைத்தானே கொடூரமாகக் கொலை செய்துகொண்டிருக்கிறார் என்ற பயங்கரமான உண்மை தெளிவாகிறது. 

இறுதியாக, ஓவன்ஸ் (ரோஜர் ரீஸ்) என்ற வழக்கறிஞர் மற்றும் Merritt (டபிள்யூ. மார்கன் ஷெப்பர்ட்) என்ற நாடகக் கொட்டகையின் உரிமையாளர் ஆகியோரது தொடர்புகளோடு ஆங்கியரின் நாடக அரங்கம் தீப்பற்றி எரியும் போது, அங்கே வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் பல தண்ணீர்த் தொட்டிகளுக்குள், ஆங்கியர் ஒவ்வொரு நாளும் கொன்றுகொண்ட அவருடைய சொந்த நகல்களின் பிணங்கள் மிதப்பதைக் காட்டி, படம் ஒரு மர்மமான மாயாஜாலப் புதிராக நிறைவடைகிறது.

"தி பிரஸ்டீஜ்" திரைப்படம் நமக்கு உணர்த்தும் முதன்மையான செய்தி, பழிவாங்கும் வெறியும் பேராசையும் ஒரு மனிதனைத் தற்கொலைக்கு நிகரான அழிவுப் பாதைக்கே கொண்டு செல்லும் என்பதாகும். 

மேடையில் கைதட்டல் பெறவும், எதிரியை வீழ்த்தித் தன்னைச் சிறந்தவனாகக் காட்டவும் இரு மனிதர்கள் எடுக்கும் உத்திகள் அவர்களின் சொந்த வாழ்க்கையையே சுடுகாடாக்குகின்றன. 

போர்டன் தனது அடையாளத்தை இழந்து, தன் வாழ்நாளைப் பாதியாகப் பகிர்ந்து வாழ நேரிடுகிறது; ஆங்கியோ எதிரியை வெல்லும் வெறியில் தினமும் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் நரகத்தில் விழுகிறான்.

 உலகத்தையே ஏமாற்றும் மாயாஜாலக்காரர்கள், இறுதியில் தங்களின் வெறித்தனமான மோகத்தால் தங்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள். 

வெற்றிக்காக நாம் கொடுக்கும் விலை, நம்முடைய மனிதநேயத்தையும் அன்பையும் விடப் பெரியதாக இருக்கும்போது, அந்த வெற்றியே ஒரு மாபெரும் தோல்வியாக மாறிவிடும் என்ற கசப்பான உண்மையை இத்திரைப்படம்  நமக்குச் சொல்கிறது.

#கீதப்ப்ரியன்இங்லிஷ்க்ளாஸிக்

வியட் நாம் போரின் பின்னணியில் உருவான ஹாலிவுட் திரைப்படங்கள்


வியட்நாம் போரின் கொடூரங்களையும் அமெரிக்கா சந்தித்த உளவியல் ரீதியான தோல்வியையும் உலகிற்கு உரக்கச் சொன்னதில் ஹாலிவுட் திரைப்படங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

 போர்க்களத்தில் நேரிட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும் அந்தப் போர் வீரர்களின் மனநிலையில் ஏற்படுத்திய சிதைவுகளையும் அமெரிக்க சமூகத்தில் நிலவிய கொந்தளிப்பையும் இந்தத் திரைப்படங்கள் மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளன. 

குறிப்பாக பிரான்சிஸ் ஃபோர்டு கோப்போலா இயக்கத்தில் உருவான "அபோகாலிப்ஸ் நவ்" (Apocalypse Now) திரைப்படம் போரின் அர்த்தமற்ற தன்மையையும் மனித மனதின் இருண்ட பக்கங்களையும் ஒரு பயணத்தின் வழியாகச் சித்தரித்தது. 

வியட்நாமின் அடர்ந்த காடுகளுக்குள் நிலவிய குழப்பமும் அதிகாரிகளின் மனப்பிறழ்வும் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாடற்ற நிலையைக் கண்முன் நிறுத்தின.

இயக்குநர் ஆலிவர் ஸ்டோன் தானே ஒரு வியட்நாம் போர் வீரராக இருந்தவர் என்பதால் அவர் இயக்கிய "பிளாட்டூன்" (Platoon) திரைப்படம் போர்க்களத்தின் நிதர்சனமான வலியைப் பதிவு செய்தது. அமெரிக்க வீரர்களிடையே நிலவிய உட்பூசல்கள் அப்பாவி வியட்நாம் மக்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மற்றும் போரின் பெயரால் இழைக்கப்பட்ட அநீதிகள் என அனைத்தையும் இந்தப் படம் ஒளிவுமறைவின்றி காட்டியது.

 இது அமெரிக்கா தனது சொந்தத் தவறுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. 

அதேபோல் "தி டீர் ஹண்டர்" (The Deer Hunter) திரைப்படம் போருக்குச் செல்லும் இளைஞர்களின் வாழ்க்கை எப்படிச் சிதைந்து போகிறது என்பதையும் போருக்குப் பின் திரும்பும் வீரர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களையும் உருக்கமாக விவரித்தது.

ஸ்டான்லி குப்ரிக் இயக்கத்தில் வெளிவந்த "ஃபுல் மெட்டல் ஜாக்கெட்" (Full Metal Jacket) திரைப்படம் ராணுவப் பயிற்சியின் போது வீரர்களின் தனித்தன்மை எப்படி அழிக்கப்படுகிறது என்பதையும் போர்க்களத்தில் அவர்கள் இயந்திரங்களாக மாற்றப்படுவதையும் அங்கதச் சுவையுடன் காட்டியது. 

மேலும் "பார்ன் ஆன் தி ஃபோர்த் ஆஃப் ஜூலை" (Born on the Fourth of July) திரைப்படம் போரில் முடமான ஒரு வீரர் எப்படிப் போருக்கு எதிரான போராட்டக்காரராக மாறுகிறார் என்பதைப் படம்பிடித்தது. 

இந்தப் படங்கள் அனைத்தும் அமெரிக்கா வியட்நாமில் ஈட்டியது வெற்றியை அல்ல மாறாக ஒரு தலைமுறையின் நிம்மதியையும் கௌரவத்தையும் தான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தன.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெற வியட்நாம் மேற்கொண்ட போராட்டமே இந்தப் போரின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. கம்யூனிசத் தலைவர் ஹோ சி மின் தலைமையில் வட வியட்நாம் உருவான நிலையில் தெற்குப் பகுதியை பிரான்ஸ் ஆதரித்தது. 

1954 ஆம் ஆண்டு நடைபெற்ற டீன் டீன் பூ போரில் பிரான்ஸ் வீழ்ந்த பிறகு வியட்நாம் வடக்கு மற்றும் தெற்கு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. கம்யூனிசம் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற கொள்கையோடு அமெரிக்கா தொடக்கத்தில் தெற்கு வியட்நாமிற்கு ராணுவ ஆலோசகர்களையும் நிதியுதவியையும் வழங்கியது.
காலப்போக்கில் தெற்கு வியட்நாமின் அரசியல் நிலைத்தன்மை சீர்குலைந்ததால் அமெரிக்கா நேரடியாகப் போரில் இறங்கத் தீர்மானித்தது.

 1964 ஆம் ஆண்டு டோன்கின் வளைகுடா பகுதியில் அமெரிக்கக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி அதிபர் லிண்டன் ஜான்சன் போருக்கான முழு அதிகாரத்தைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் வியட்நாம் மண்ணில் இறக்கப்பட்டனர். 

அடர்ந்த காடுகளும் மறைந்திருந்து தாக்கும் வியட் காங் வீரர்களின் கொரில்லா போர் முறையும் நவீன ஆயுதங்களைக் கொண்ட அமெரிக்கப் படைக்கு மிகப்பெரிய சவாலாக மாறின.

அமெரிக்கா வான்வழியாக டன் கணக்கில் குண்டுகளை வீசியும் ஏஜென்ட் ஆரஞ்சு போன்ற நச்சு ரசாயனங்களைப் பயன்படுத்தியும் காடுகளை அழித்தது. இருப்பினும் நிலத்தடி சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தி வியட் காங் வீரர்கள் அமெரிக்கப் படைகளுக்குத் தொடர் இழப்புகளை ஏற்படுத்தினர்.

 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற டெட் தாக்குதல் அமெரிக்காவின் வெற்றிக் கனவைச் சிதறடித்தது. போர்க்களத்தில் அமெரிக்கா வலுவாக இருப்பதாகச் சொல்லப்பட்ட பொய்கள் அம்பலமாகி அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தி உருவானது.

சொந்த நாட்டிலேயே போருக்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததால் அமெரிக்க அரசாங்கம் பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. ஆயிரக்கணக்கான இளம் வீரர்கள் உயிரிழப்பதையும் போருக்காகச் செலவிடப்படும் பெரும் தொகையையும் மக்கள் எதிர்த்தனர். இதனால் 1973 ஆம் ஆண்டு பாரிஸ் அமைதி உடன்படிக்கையின்படி அமெரிக்கப் படைகள் வியட்நாமில் இருந்து வெளியேறத் தொடங்கின.

 அமெரிக்க ஆதரவு இன்றித் தவித்த தெற்கு வியட்நாம் 1975 ஆம் ஆண்டு வட வியட்நாம் படைகளிடம் முழுமையாக வீழ்ந்தது.
இந்த போர் அமெரிக்க வரலாற்றில் ஒரு தீராத வடுவாக மாறியது. நவீனத் தொழில்நுட்பமும் அதிகப்படியான ராணுவ பலமும் மட்டும் ஒரு போரை வென்று தந்துவிடாது என்பதை உலகம் உணர்ந்த தருணம் அது. 

வியட்நாம் முழுவதும் கம்யூனிச ஆட்சியின் கீழ் ஒன்றிணைந்தது. பல பத்தாண்டுகள் நீடித்த இந்தப் போர் லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியதோடு அமெரிக்காவின் உலகளாவிய பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

ஏஜென்ட் ஆரஞ்சு என்பது வியட்நாம் போரின் போது அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய ஒரு சக்திவாய்ந்த களைக்கொல்லி மற்றும் ரசாயன கலவை ஆகும். வியட் காங் வீரர்கள் மறைந்திருந்து தாக்குவதற்குப் பயன்படுத்திய அடர்ந்த காடுகளை அழிப்பதற்கும் அவர்களுக்குக் கிடைக்கும் உணவு ஆதாரங்களை முடக்குவதற்கும் இந்த ரசாயனம் வான்வழியாகத் தெளிக்கப்பட்டது. 

1961 முதல் 1971 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 20 மில்லியன் கேலன் ரசாயனங்கள் வியட்நாம் கம்போடியா மற்றும் லாவோஸ் பகுதிகளில் வீசப்பட்டன.

இந்த ரசாயனத்தில் இருந்த டையாக்ஸின் எனப்படும் நச்சுப்பொருள் மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. போரின் போது இதனுடன் நேரடித் தொடர்பில் இருந்த அமெரிக்க வீரர்கள் மற்றும் வியட்நாம் மக்கள் இருதரப்பினருமே கடுமையான புற்றுநோய்கள் தோல் நோய்கள் மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.

 குறிப்பாக இந்த நச்சு மரபணுக்களைப் பாதிக்கும் தன்மை கொண்டதால் வியட்நாமில் பிறந்த அடுத்தடுத்த தலைமுறை குழந்தைகளுக்குப் பல்வேறு உடல் ஊனங்கள் மற்றும் பிறவிக் குறைபாடுகள் ஏற்பட்டன.

இயற்கை சூழலில் இந்த ரசாயனம் ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் மோசமானது. காடுகள் முழுமையாக அழிந்ததால் பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கப்பட்டதுடன் மண் மற்றும் நீர் நிலைகளில் இந்த நச்சு பல தசாப்தங்களாகத் தங்கியிருந்தது. 

வியட்நாமின் பல பகுதிகளில் இன்றும் விவசாயம் செய்ய முடியாத நிலை நீடிப்பதுடன் நச்சு படிந்த மீன்களை உண்பதன் மூலம் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.

 போருக்குப் பிந்தைய பல ஆண்டுகளில் அமெரிக்க அரசாங்கம் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்ட போதிலும் வியட்நாம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இன்றும் ஒரு தீர்க்கப்படாத மனிதாபிமானப் பிரச்சினையாகவே தொடர்கிறது.

வியட்நாம் போரின் இந்த ரசாயனத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் உயிரியல் ஆயுதங்கள் குறித்த விவாதங்களை முன்னெடுத்தன. 

அமெரிக்க ராணுவம் வியட்நாம் மண்ணில் சந்தித்தது வெறும் ராணுவ தோல்வி மட்டுமல்ல அது ஒரு உளவியல் ரீதியான பெரும் வீழ்ச்சியாகவும் அமைந்தது. உலகிலேயே மிக நவீனமான ஆயுதங்களைக் கொண்டிருந்த அமெரிக்க வீரர்களுக்கு வியட்நாம் காடுகளின் புவியியல் அமைப்பு மற்றும் வியட் காங் வீரர்களின் கொரில்லா போர் முறை ஆகியவை மரண அடியாக மாறின. 

அடர்ந்த காடுகளுக்குள் மறைந்திருந்து மின்னல் வேகத்தில் தாக்கிவிட்டு சுரங்கப்பாதைகளுக்குள் மறைந்து கொள்ளும் எதிரிகளை எதிர்கொள்ள முடியாமல் அமெரிக்க வீரர்கள் திணறினர். 

குறிப்பாக வியட் காங் வீரர்கள் உருவாக்கிய "புஞ்சி குச்சிகள்" (Punji Sticks) போன்ற எளிய ஆனால் கொடூரமான பொறிகள் அமெரிக்க வீரர்களின் கால்களைப் பதம்பார்த்து அவர்களை நிலைகுலையச் செய்தன.
அமெரிக்க வீரர்கள் எதிர்கொண்ட மற்றொரு மிகப்பெரிய சவாலாக 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற "டெட் தாக்குதல்" (Tet Offensive) அமைந்தது. 

போர் நிறுத்தக் காலத்தில் எதிர்பாராத விதமாக தெற்கு வியட்நாமின் பல நகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது.

 போர்க்களத்தில் தாங்கள் வெற்றி பெற்று வருவதாக நம்பிய அமெரிக்க வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இந்தத் தாக்குதல் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. காடுகளின் ஈரப்பதம் கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளின் தொடர் அச்சுறுத்தல் ஆகியவை வீரர்களின் மன உறுதியை முற்றிலுமாகச் சிதைத்தன.

போரின் முடிவில் சுமார் 58,000 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டனர்.

 போர்க்களத்தில் இருந்து திரும்பிய வீரர்களுக்கு அமெரிக்க மக்களிடையே கிடைத்த எதிர்ப்பு மற்றும் சமூகப் புறக்கணிப்பு அவர்களை மேலும் வேதனைக்குள்ளாக்கியது. பல வீரர்கள் போருக்குப் பிந்தைய மன அழுத்த பாதிப்பால் (PTSD) வாழ்நாள் முழுவதும் அவதிப்பட்டனர்.

 நவீன ஆயுதங்கள் இருந்தும் ஒரு சிறிய நாட்டின் கொரில்லாப் படைகளிடம் தோற்றுப் போனது அமெரிக்க ராணுவ வரலாற்றில் ஒரு மறக்க முடியாத கசப்பான பாடமாக இன்றும் நீடிக்கிறது.

அமெரிக்க ராணுவம் வியட்நாம் போரில் பயன்படுத்திய நவீன தொழில்நுட்பங்கள் அங்குள்ள அடர்ந்த காடுகளிலும் சதுப்பு நிலங்களிலும் முற்றிலுமாகத் தோல்வியடைந்தன.

 குறிப்பாக எதிரிகளைக் கண்டறிய அமெரிக்கா பயன்படுத்திய ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன ரேடார் கருவிகள் வியட் காங் வீரர்களின் தந்திரமான கொரில்லாப் போர்முறைக்கு முன்னால் பயனற்றுப் போயின. 

வானில் இருந்து குண்டுகளை வீசும் பி 52 ரக விமானங்கள் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தினாலும் நிலத்தடியில் நூற்றுக்கணக்கான மைல் நீளத்திற்கு அமைக்கப்பட்டிருந்த வியட் காங் சுரங்கப் பாதைகளை அவற்றால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

 எதிரிகள் எங்கே இருக்கிறார்கள் என்பதை உணரும் முன்பே அவர்கள் தாக்குதலை நடத்திவிட்டு மீண்டும் நிலத்தடிக்குள் மறைந்து விடுவது அமெரிக்க வீரர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தது.
அமெரிக்கா பயன்படுத்திய மற்றொரு முக்கிய தொழில்நுட்பமான மின்னணு சென்சார்கள் (Electronic Sensors) எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்டறிய காடுகளில் தூவப்பட்டன. ஆனால் வியட் காங் வீரர்கள் சிறுநீர் மற்றும் துணிகளைப் பயன்படுத்தி அந்த சென்சார்களை ஏமாற்றும் நுட்பங்களை மிக எளிதாகக் கையாண்டனர்.

 மேலும் அமெரிக்க வீரர்கள் அணிந்திருந்த கனமான ராணுவ ஆடைகளும் நவீன துப்பாக்கிகளும் வியட்நாமின் கடும் வெப்பம் மற்றும் ஈரப்பதமான சூழலுக்கு ஒத்துழைக்கவில்லை.

 சேற்றில் சிக்கிக் கொண்ட நவீன வாகனங்களை விடவும் வியட் காங் வீரர்கள் பயன்படுத்திய சாதாரண மிதிவண்டிகள் மற்றும் சிறிய படகுகள் போர் முனையில் அதிக வேகம் கொண்டவையாக இருந்தன.

காடுகளை அழிப்பதற்காகத் தெளிக்கப்பட்ட ஏஜென்ட் ஆரஞ்சு போன்ற ரசாயனங்கள் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தியதே தவிர உடனடி வெற்றியைத் தேடித் தரவில்லை. அமெரிக்காவின் ஒவ்வொரு தொழில்நுட்பத் தாக்குதலுக்கும் வியட் காங் வீரர்கள் மிகவும் எளிமையான ஆனால் புத்திசாலித்தனமான இயற்கை சார்ந்த தற்காப்பு முறைகளைக் கையாண்டனர்.

 நவீனத் தொழில்நுட்பம் என்பது ஒரு நாட்டின் புவியியல் மற்றும் மக்களின் மன உறுதியைக் காட்டிலும் வலிமையானது அல்ல என்பதை இந்தப் போர் அமெரிக்காவிற்கு உணர்த்தியது. இறுதியில் தொழில்நுட்பத்தை விடவும் களத்தில் இருந்த வீரர்களின் பொறுமையும் தியாகமுமே வெற்றியின் திசையைத் தீர்மானித்தன.

 வியட்நாம் போரில் அமெரிக்காவை ஈடுபடுத்திய மற்றும் அந்தப் போரைத் தொடர்ந்த நான்கு அமெரிக்க ஜனாதிபதிகள் தங்களது பதவிக்காலத்திலும் வரலாற்றிலும் ஈடுசெய்ய முடியாத அவமானத்தைச் சந்தித்தனர். 

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்காவின் அசைக்க முடியாத பிம்பம் இந்த ஜனாதிபதிகளின் தவறான முடிவுகளால் சர்வதேச அளவில் கேள்விக்குறியானது. குறிப்பாக ஜான் எஃப் கென்னடி போரின் தொடக்கப் புள்ளியாக ஆலோசகர்களை அனுப்பியதில் தொடங்கி அவருக்குப் பின் வந்த லிண்டன் ஜான்சன் போரை முழுவீச்சில் விரிவுபடுத்தியது வரை அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

 ஜான்சன் தனது உள்நாட்டுச் சீர்திருத்தத் திட்டங்களை விடவும் வியட்நாம் போரில் வீரர்களின் உயிரிழப்பிற்காகவே மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டார்.

 "ஏய் ஏய் எல்பிஜே இன்று எத்தனை குழந்தைகளைக் கொன்றாய்?" (Hey, Hey, LBJ, how many kids did you kill today?) என்ற கோஷங்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே ஒலித்தது அவருக்கு மிகப்பெரிய இழிநிலையை ஏற்படுத்தியது. 

இதனால் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஜான்சனுக்குப் பிறகு பதவிக்கு வந்த ரிச்சர்ட் நிக்சன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு கம்போடியா மற்றும் லாவோஸ் மீது ரகசியமாகப் போரை விரிவுபடுத்தினார்.

 இது அமெரிக்க இளைஞர்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன் கென்ட் மாநிலப் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு போன்ற துயரங்களுக்குக் காரணமாக அமைந்தது. 

நிக்சன் தனது அரசியல் வாழ்க்கையில் வாட்டர்கேட் ஊழல் புகாரால் பதவி விலக நேரிட்டாலும் வியட்நாம் போரின் தோல்வி அவரது வெளியுறவுக் கொள்கையின் மிகப்பெரிய கறையாகவே பார்க்கப்படுகிறது.

 அமெரிக்கா ஒரு சிறிய நாட்டிடம் மண்டியிட்டு வெளியேறியது நிக்சனின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாக அமைந்தது.
நிக்சனுக்குப் பிறகு தற்காலிகமாகப் பதவி ஏற்ற ஜெரால்ட் ஃபோர்டு காலத்தில் தான் சைகோன் நகரம் வட வியட்நாம் வசம் வீழ்ந்தது. அமெரிக்கத் தூதரகத்தின் கூரை மீது ஹெலிகாப்டர்கள் மூலம் அமெரிக்கர்கள் அவசரம் அவசரமாகத் தப்பிச் சென்ற காட்சிகள் ஒரு வல்லரசு நாடு சந்தித்த உச்சக்கட்ட இழிவாக உலக வரலாற்றில் பதிவானது. 

இந்த ஜனாதிபதிகள் அனைவரும் கம்யூனிசத்தை ஒடுக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததுடன் அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து பணவீக்கத்தை ஏற்படுத்தியதற்காகவும் வரலாற்றால் விமர்சிக்கப்படுகின்றனர். 

ஒரு தேவையற்ற போரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைப் பலிகொடுத்த ஜனாதிபதிகள் என்ற முத்திரை இவர்களின் அரசியல் வாழ்க்கையில் என்றும் அழியாத வடுவாக நிலைத்துவிட்டது.

வியட்நாம் போரில் உயிரிழந்த 58,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களின் உடல்கள் பெரும்பாலும் அவர்களது சொந்த ஊர்களில் உள்ள குடும்பக் கல்லறைகளிலும் அமெரிக்கா முழுவதும் பரவியுள்ள தேசிய ராணுவக் கல்லறைகளிலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

 இரண்டாம் உலகப் போர் அல்லது கொரியப் போரைப் போலன்றி வியட்நாம் போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை அவர்களது தாய்நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வந்து அடக்கம் செய்யும் வசதி அப்போது மேம்பட்டிருந்தது. 

இதனால் பெரும்பாலான வீரர்கள் அமெரிக்க மண்ணிலேயே அடக்கம் செய்யப்பட்டனர். அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு அருகில் உள்ள ஆர்லிங்டன் தேசியக் கல்லறை (Arlington National Cemetery) இதில் மிக முக்கியமானது. 

இங்கு போரில் மடிந்த ஆயிரக்கணக்கான வீரர்களுடன் போர் முனையில் உயிரிழந்த தளபதிகள் மற்றும் உயரிய விருது பெற்ற வீரர்களின் சமாதிகளும் அமைந்துள்ளன.

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள "வியட்நாம் போர் நினைவுச் சின்னம்" (Vietnam Veterans Memorial) என்பது உயிரிழந்த வீரர்களின் உடல்கள் உள்ள இடமல்ல அது அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஒரு நினைவிடமாகும்.

 58,000-க்கும் அதிகமான வீரர்களின் பெயர்கள் கருப்பு நிற கிரானைட் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சுவர் ஒரு திறந்த புத்தகத்தைப் போல நிலத்திற்கு அடியில் இறங்குவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

 இது போரில் அமெரிக்கா சந்தித்த வீழ்ச்சியையும் உயிரிழப்புகளையும் ஒருங்கே உணர்த்துவதாகக் கருதப்படுகிறது. இன்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இந்த இடத்திற்கு வந்து தங்கள் உறவினர்களின் பெயர்களைத் தொட்டுப் பார்த்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

இது தவிர போர்க்களத்தில் உடல் அடையாளம் காண முடியாத மற்றும் காணாமல் போன வீரர்களுக்காக ஆர்லிங்டன் கல்லறையில் "தெரியாத வீரரின் சமாதி" (Tomb of the Unknown Soldier) எனும் பகுதியில் ஒரு தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நவீன டி.என்.ஏ தொழில்நுட்பங்கள் மூலம் அங்கு இருந்த பல உடல்கள் அடையாளம் காணப்பட்டு இப்போதெல்லாம் அவை அந்தந்த குடும்பங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

 அமெரிக்க வரலாற்றில் ஒரு தோல்வியுற்ற போரில் உயிரிழந்த இந்த வீரர்களின் நினைவிடங்கள் இன்றும் அமெரிக்காவின் தவறான அரசியல் முடிவுகளுக்கான சாட்சிகளாகவும் மக்களின் ஆறாத துயரமாகவும் மௌனமாக நிலைகொண்டுள்ளன.

அமெரிக்கா வியட்நாம் போரின் தோல்வியிலிருந்து பாடம் கற்கத் தவறியதற்கு அதன் உலகளாவிய மேலாதிக்கக் கொள்கையும் ராணுவ வலிமையின் மீதான அதீத நம்பிக்கையுமே முதன்மைக் காரணங்களாகும். 

ஒரு நாட்டின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ராணுவ ரீதியான தாக்குதல்கள் மூலம் தீர்த்துவிடலாம் என்ற அமெரிக்காவின் எண்ணம் வியட்நாமிற்குப் பிறகு ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களிலும் எதிரொலித்தது. வியட்நாமில் கம்யூனிசத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நுழைந்த அமெரிக்கா அந்த நாட்டின் உள்ளூர் மக்களின் உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் கருத்தில் கொள்ளத் தவறியது போலவே பிற்காலப் போர்களிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாகக் கூறி அந்நிய மண்ணில் கால் பதித்தது. 

உள்ளூர் மக்களின் ஆதரவு இன்றி ஒரு வெளிநாட்டுப் படை ஒருபோதும் போரில் நிலையான வெற்றியைப் பெற முடியாது என்ற உண்மையை அமெரிக்க அரசியல் தலைவர்கள் மீண்டும் மீண்டும் மறந்தனர்.

மேலும் அமெரிக்காவின் பொருளாதார அமைப்பில் ராணுவத் தொழில் துறைக்கு (Military-Industrial Complex) இருக்கும் அதீத செல்வாக்கு இத்தகைய போர்கள் தொடர ஒரு காரணமாக அமைகிறது.

 ஆயுத உற்பத்தி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் ஈட்டப்படும் லாபம் போரை ஒரு வணிகமாக மாற்றியது. வியட்நாம் போருக்குப் பிறகு "வியட்நாம் சிண்ட்ரோம்" காரணமாகச் சில காலம் அமெரிக்கா நேரடியாகப் போர்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தாலும் 9/11 தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் அதே போன்ற நீண்ட காலப் போர்களில் சிக்கிக் கொண்டது. 

தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருந்தாலும் ஒரு நாட்டின் நிலப்பரப்பு மற்றும் மக்களின் கொரில்லா போர் முறையை எதிர்கொள்வது கடினம் என்பதை அமெரிக்கா வியட்நாமில் கற்ற போதிலும் ஈராக்கின் நகரப் போர்களிலும் ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதிகளிலும் அதே போன்ற சவால்களை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவியது.

அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்திருந்தாலும் அதிகார மாற்றங்கள் ஏற்படும் போது முந்தைய தோல்விகளிலிருந்து பாடம் கற்பதை விடத் தங்களது பலத்தை நிரூபிப்பதிலேயே ஜனாதிபதிகள் கவனம் செலுத்தினர். 

வியட்நாமில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் சென்ற அதே போன்ற காட்சிகள் 2021 ஆம் ஆண்டு காபூல் விமான நிலையத்தில் அரங்கேறியது அமெரிக்கா வரலாற்றிலிருந்து பாடம் கற்கவில்லை என்பதற்கான நேரடிச் சான்றாகும். 

ஒரு வல்லரசு நாடு தனது ராணுவ பலத்தை விடவும் ராஜதந்திரம் மற்றும் உள்ளூர் மக்களின் விருப்பங்களுக்கு மதிப்பளிப்பதன் மூலமே உண்மையான வெற்றியைப் பெற முடியும் என்பதைப் புரிந்துகொள்ளாத வரை இத்தகைய வரலாற்றுத் தவறுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

தி ஹேட்ஃபுல் எய்ட்" (2015)

குவென்டின் டாரன்டினோவின் "தி ஹேட்ஃபுல் எய்ட்"(2015), உலக சினிமா மேதைகளின் வரிசையில் ஒரு தனித்துவமான படைப்பாக நிற்கிறது.

 ஒரு பாரம்பரிய வெஸ்டர்ன் திரைப்படத்தின் வெளிப்புறப் பிரம்மாண்டத்தை, ஒரு துப்பறியும் நாடகத்தின் இறுக்கமான, ஒற்றை அறை வடிவத்திற்குள் சுருக்கி, அரசியல், இனவெறி மற்றும் மனித இயல்பின் இரக்கமற்ற தன்மையை ஆழமாக ஆராயும் ஒரு சவாலான முயற்சியை இது மேற்கொண்டது.

 படத்தின் பெரும்பகுதி, உறைபனியால் சூழப்பட்ட ஒரு மவுனப் பேழையைப் போன்ற விடுதிக்குள் நடக்கும்போதும், அதன் உரையாடல்கள், வெளிப்புறப் பனிப்புயலை விடக் கொடூரமான உணர்ச்சிப் புயலைக் கிளப்பின. 

டாரன்டினோ, அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய, இன்னும் ஆறாத காயங்கள் மற்றும் பகைமைகளால் சிதைந்துபோன சமூகத்தின் ஒரு சிற்றுருவத்தை, இந்த எட்டு மனிதர்கள் வழியாகக் காட்டினார். 

இதில், ஆபிரகாம் லிங்கனின் போலியான கடிதம் ஒரு குறியீடாகச் செயல்பட்டு, கறுப்பின மேஜருக்கும் வெள்ளைக்கார பவுண்டி ஹண்டருக்கும் இடையில் ஒரு பொய்யான நம்பிக்கைப் பிணைப்பை உருவாக்கியது.

 இந்தத் தந்திரமே, வெள்ளையினச் சமூகத்தில் பிழைக்க ஒரு கறுப்பின மனிதன் பயன்படுத்தும் உத்தி என்பதை வெளிப்படையாகப் பேசியது.

இந்தப் படத்தின் திரைக்கதை, அதன் நாடகத்தன்மை, நுட்பமான நகைச்சுவை மற்றும் திடீர் வன்முறைக்கான நேரத்தைக் கனகச்சிதமாகப் பயன்படுத்தியது. வழக்கமான நேர்கோட்டுக் கதையைக் கைவிட்டு, இடை நடுவே ஒரு விரிவான ஃப்ளாஷ்பேக் மூலம், விடுதிக்குள் இருந்த ரகசியம் முழுவதையும் வெளிப்படுத்தியது ஒரு புத்திசாலித்தனமான உத்தி.

 இது பார்வையாளர்களை, வெறும் பார்வையாளராக இருக்க விடாமல், நடந்த கொடூரங்களுக்குச் சாட்சியாக மாற்றியது. சாம்வெல் எல். ஜாக்சன், கர்ட் ரஸ்ஸல், மற்றும் ஜெனிஃபர் ஜேசன் லீ ஆகியோரின் நடிப்பு, இந்தக் கதாபாத்திரங்களின் சிக்கலான,  வினோதமான உணர்ச்சிகளைக் கச்சிதமாகக் கொண்டு வந்தது. 

குறிப்பாக, கைவிலங்கிடப்பட்டு ஒரு சடலத்துடன் பிணைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், தனது சதித்திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் டெய்ஸி டொமெர்குவின் கதாபாத்திரம், அற்புதம் மற்றும் அருவருப்பின் கலவையாக இருந்தது.

ராபர்ட் ரிச்சர்ட்சனின் ஒளிப்பதிவு, ஒரு கலைப் படைப்பின் பிரம்மாண்டத்தை அளித்தது. இது பனிப்புயலின் தனிமையையும், விடுதியின் நெருக்கமான, அழுத்தம் நிறைந்த உட்புறத்தையும் சமமாக அணுகியது.  என்னியோ மொரிக்கோனின் ஆஸ்கார் வென்ற பின்னணி இசை, படம் முழுவதும் நீடித்த ஒரு பயங்கரமான, தீர்க்கப்படாத பதற்றத்தை உருவாக்குகிறது. 

மொரிகோன் மற்றும் டாரன்டினோவின் இந்தச் சங்கமம், ஒரு நவீன வெஸ்டர்னுக்குத் தேவையான கிளாசிக்கல் மர்மத்தையும், வலிமையையும் அளித்தது. முடிவில், இந்தப் படம் வெறும் வெஸ்டர்ன் அல்ல, மாறாக, வெறுப்பு, துரோகம் மற்றும் பழிவாங்கல் என்ற அமெரிக்கச் சிதைவுகளை  அலசும், ஒரு முக்கியமான மற்றும் மறக்க முடியாத உலக சினிமா அனுபவமாகும்.

இயக்குனர் க்வென்டின் டாரன்டினோ, தனது வழக்கமான தனித்துவமான பாணியில் இந்த வெஸ்டர்ன் திரைப்படத்தை அளித்துள்ளர். இது அதிக உரையாடல்கள், வன்முறை மற்றும் கருப்பு நகைச்சுவை ஆகியவற்றைக் ஒருங்கே கொண்டிருந்தது. பிற்பாதி கதை ஒரு அறையில் நடக்கும் மர்மக் கதையாக அமைக்கப்பட்டிருந்தாலும், டாரன்டினோவின் இயக்கம் அதன் நாடகத்தன்மையைக் கூர்மைப்படுத்துகிறது. 

அவர் கதைக்களத்தை நேர்கோட்டில் சொல்லாமல், நடுவில் ஒரு விரிவான ஃப்ளாஷ்பேக்கைப் பயன்படுத்தி, விடுதிக்குள் நடந்த படுகொலை மற்றும் சதித்திட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

 அமெரிக்க உள்நாட்டுப் போரின் வடுக்கள், இனப் பகைமை, மற்றும் துரோகம் ஆகியவை இந்த இயக்கத்தின் மையக் கருப்பொருளாக உள்ளன.
திரைக்கதையை எழுதியவரும் டாரன்டினோ தான். இந்தப் படத்தின் முக்கிய பலமே, ஒரு சிறிய இடத்தில் சிக்கிய எட்டு மனிதர்களுக்கு இடையேயான சிக்கலான, அரசியல் ரீதியாகச் சூடான உரையாடல்கள்தான். சாமுவேல் ஜாக்ஸன்(மேஜர் Warren), கர்ட் ரஸ்ஸல் (ஜான் ரூத்), மற்றும் ஜெனீஃபர் ஜேஸன் லெய்ஹ்  (டெய்ஸி டோமர்கூ) உட்பட நடிகர்கள் அனைவரும் தங்கள் வேடங்களுக்குப் பொருத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் நடித்தனர். 

குறிப்பாக, ஜெனீஃபர் ஜேஸன் லெய்ஹ்கின் நடிப்பு, வன்முறைக்கு ஆளான ஒரு குற்றவாளியின் மாறுபட்ட கோணங்களைக் காட்டி, அவருக்குச் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் பரிந்துரையைப் பெற்றுத் தந்தது.

 ஒவ்வொரு நடிகரும், தங்கள் கதாபாத்திரங்களின் இருண்ட பக்கங்களை மிக அழுத்தமாக வெளிப்படுத்தினர்.
இப்படத்தின் ஒளிப்பதிவை ராபர்ட் ரிச்சர்ட்சன் அற்புதமாக செய்தார். அல்ட்ரா பேனவிஷன் 70எம்எம் பாணியில் படமாக்கப்பட்டதால், படத்தின் வெளிப்புறக் காட்சிகள், குறிப்பாகப் பனிப்புயலின் பிரமாண்டம் மற்றும் தீவிரத் தன்மையை மிகத் துல்லியமாகக் காட்ட முடிந்தது. 

உட்புறக் காட்சிகளில் கூட, இந்த வகை ஒளிப்பதிவு அறையின் நெருக்கமான அமைப்பையும், மரவேலைப்பாடுகளின் சூடான நிறத்தையும், வெளியேயுள்ள குளிரான வெள்ளை நிறத்துடன் ஒப்பிட்டுக் காட்டி, ஒரு காட்சிப் புலன் உணர்வை உருவாக்குகிறது. 

இந்தப் பிரம்மாண்டமான ஒளிப்பதிவு, ஒரு தனி அறையில் நடக்கும் காட்சிகளுக்குக் கூட அதிகத் தனித்துவத்தை அளித்தது.
இப்படத்திற்கு இசையமைத்தவர், வெஸ்டர்ன் படங்களுக்கு இசையமைப்பதில் முன்னோடியான என்னியோ மொரிக்கோன் அவர்கள். டாரண்டினோவின் படங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மீள் உபயோக இசைத் தொகுப்புகளுக்கு மாறாக, மொரிக்கோன் அவர்கள் பிரத்யேகமாக அபாரமான புதிய இசையை உருவாக்கினார். 

 பின்னணி இசை, படம் முழுவதும் நீடித்த சஸ்பென்ஸ், தனிமை மற்றும் பனி நிறைந்த காட்சியின் அச்சுறுத்தும் அமைதியை வன்முறையின் அழகியலைப் பிரதிபலித்தது.

 இந்தப் படத்திற்காக மொரிக்கோன் தனது முதல் ஆஸ்கர் விருதைச் சிறந்த அசல் இசைக்கான பிரிவில் வென்றார். ,அவர் கோல்டன் குளோப் மற்றும் பாஃப்டா போன்ற விருதுகளையும் பெற்றார்.

படத்தின் கதை:-

1877 ஆம் ஆண்டு . அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவடைந்திருந்தாலும், அதன் வடுவும், அரசியல் ரீதியிலான பிளவுகளும், குறிப்பாக வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையேயான இனப் பகைமைகளும் நீங்காமல் இருந்த காலகட்டத்தின் இறுதிக் கட்டம் அது. 

இந்தக் கதை, வ்யோமிங் பிரதேசத்தின் கடும் குளிரும், உறைபனிக் காற்றும் நிறைந்த பகுதியில் நிகழ்கிறது.
கதையின் முக்கியப் பாத்திரமான, யூனியன் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற குதிரைப்படை மேஜர்  மார்க்விஸ் வாரன், தான் வேட்டையாடிய மூன்று கொடூர கொலையாளிகளின்  சடலங்களைச் சுமந்து கொண்டு, ரெட்ராக் நகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில், அவரது குதிரை முற்றிலும் செயலிழந்துபோக, அந்தப் பயணத்தைத் தொடர முடியாமல், வாரன் தனியாகக் கடும் பனிப்புயலை  எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

அப்போது, அந்தப் பனிபடர்ந்த வெட்டவெளியில், ஓ.பி.ஜாக்ஸன் என்ற அனுபவம் வாய்ந்த ஓட்டுநரால் இயக்கப்படும் ஒரு கனமான மரத்தாலான ஸ்டேஜ்கோச்  குதிரை வண்டி வந்து சேர்கிறது. வாரன், ஒரு விபரீத நம்பிக்கையுடன் அதன் கூரையில் பவுண்டி பிணங்களை கட்டியவர் ,பயணியருடன் பயணியாகிறார்.

அந்த வண்டிக்குள் ஏற்கனவே இன்னொரு பவுண்டி ஹண்டர் என்ற பரிசு வேட்டைக்காரன் இருந்தார். அவர்தான் ஜான்ரூத், தன் பிரத்யேக பாணிகாகப் புனைப்பெயர் பெற்றவர் , அது "த ஹாங்மேன்" தூக்கு தூக்கி. அவர், ஒரு கொடூரமான குற்றவாளியான "க்ரேஸி" டெய்ஸி டோமர்கூ என்பவளை உயிருடன் பிடித்து, அவளது தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக ரெட்ராக் நகருக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

 டெய்ஸியைக் கண்காணிக்க, ரூத், அவளது கையில் தனது கையையும் இணைத்து கைவிலங்கிட்டுப் பிணைத்திருந்தார்.

வார்ரன் உள்ளே நுழைகிறார். ரூத், கறுப்பினத்தவரான வாரன் மீது உடனடியாக நம்பிக்கை வைக்கிறார். இதற்குக் காரணம், வார்ரன் எப்போதும் தன்வசம் வைத்திருக்கும் ஒரு பொக்கிஷம். அது, தான் யூனியன் இராணுவத்தில் இருந்தபோது, முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனிடம் இருந்து பெற்றதாகச் சொல்லப்படும் ஒரு தனிப்பட்ட பேனாநட்பு கடிதம். 

இந்த நம்பிக்கைக் குறியீடு, இரு வேறு துருவத்தைச் சேர்ந்த இந்த மனிதர்களை ஒன்றிணைக்கிறது.
வண்டி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்க, பாதையில் மேலும் ஒரு நபர் இணைகிறார். அவர், க்ரிஸ் மேனிக்ஸ், தன் தந்தை எர்ஸ்கின், மானிக்ஸ் மௌராடர்ஸ்  என்றழைக்கப்பட்ட லாஸ்ட் காசர் தெற்கு போராளிக் குழுவை வழிநடத்தியவர்.

 மானிக்ஸ், தான் தான் ரெட்ராக்கின் புதிய ஷெரிஃப் என்று கூறிக்கொண்டு அவர்களுடன் பயணிக்க இணைகிறார். ஒரு முன்னாள் கான்ஃபெடரேட் வீரரின் மகன், ஒரு யூனியன் மேஜருடன் பயணிக்க நேரிடுவது, அந்தச் சூழலில் நிலவிய இன மற்றும் அரசியல் பதற்றத்தை உணர்த்துகிறது.

பனிப்புயல் தீவிரமடைய, குதிரைகள் ஆவியைக் கக்கியபடி ஓடுகுறது, வண்டியின் சக்கரங்கள் பனியை இறுக்கிக் கிழித்துச் செல்கின்றன. இந்த இடத்தில்தான், ஒரு முக்கியமான தகவல் வெளிப்படுகிறது: வார்ரன், உள்நாட்டுப் போரின்போது ஒரு போர்க் கைதிகள் முகாமை உடைத்துத் தீ வைத்ததற்காக, அவர் தலையின் மீது கான்ஃபெடரேட் படைகள் ஒரு பெரிய பரிசை வைத்திருப்பதை ரூத் தெரிந்துகொள்கிறார். 

இது, வார்ரனின் கடந்த காலம், அவர் மீதுள்ள ரூத்தின் நம்பிக்கைக்கு ஒரு சிறிய அச்சுறுத்தலாக அமைகிறது.
கடும் பனிப்புயலைக் கிழித்துக்கொண்டுச் சென்ற குதிரை வண்டி, ஓ.பி.ஜாக்ஸனின் அனுபவத்தால், "செம்மஞ்சள் மரப் பஸ்ஸல்கள்" (Red Pine Needles) என்றழைக்கப்படும் பகுதிக்கு நடுவில் அமைந்திருக்கும், ஒரே தங்குமிடமான மின்னியின் ஹாபர்தேஷரி என்ற உணவு மதுபானம் ஆடை விடுதியை இறுதியாகச் சென்றடைகிறது.

வண்டியை விடுதி வாசலில் நிறுத்தியதும், ஓட்டுநர் ஓ.பி.ஜாக்ஸனின் பொறுப்பான பணி தொடங்குகிறது. உறைபனிக் காற்றில் விரைந்து சென்று, குளிரால் களைத்துப்போன குதிரைகளை, விடுதியின் பின்னால் இருக்கும் பனிக் காப்பு கொட்டகைக்குள் பத்திரமாகக் கட்டி, அவற்றின் தாகத்தையும் பசியையும் போக்க வைக்கோலும் தண்ணீரும் அளிக்கிறார்.

உள்ளே நுழைந்த பிறகு, அங்கிருந்த வெளிச்சம் மற்றும் பாதுகாப்பான உணர்வு நீடிக்கவில்லை. வெளியே ஓலமிடும் பனிக்காற்று, விடுதியின் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழையப் பார்க்கிறது. உள்ளே இருக்கும் சூட்டையும், அடைக்கலத்தையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

 உடனடியாகச் செயல்படும் ஓ.பி.ஜாக்ஸன் அந்தக் கனமான மரக் கதவை முழுமையாக இழுத்து மூடி, கதவு மீண்டும் திறக்காமல் இருக்க, தரையிலிருந்து ஒரு பெரிய, உறுதியான இரும்பு  குறியைத் தேடி எடுத்து, அதை கதவின் சட்டத்திற்குப் பின்னால் குறுக்காகத் தட்டி, கதவை இறுக்கிப் பூட்டி விடுகிறார். இதன் மூலம், வெளியில் உள்ள மிருகத்தனமான பனிப்புயலுக்கும், உள்ளே உள்ள இந்தச் சிறிய அடைக்கலத்துக்கும் இடையேயான தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்படுகிறது.

இந்த விடுதிக்குள், ஏற்கனவே சில மனிதர்கள் தங்கியிருந்தனர், அவர்களை இந்த ஸ்டேஜ்கோச் வண்டிக் குழு சந்திக்கிறது.

விடுதிக்குள் நுழைந்த வண்டிக் குழு, ஏற்கெனவே அங்குத் தங்கியிருந்த நான்கு நபர்களைச் சந்திக்கிறது. விடுதியின் உரிமையாளர்களான மின்னீ மற்றும் அவள் கணவர் ஸ்வீட்டேவ் ஆகியோர் இல்லாததால், மெக்சிகன் ஆன பாப், கடையைப் பார்த்துக்கொள்வதாகக் கூறுகிறார். 

மற்றவர்கள், ரெட்ராக்கின் உள்ளூர் தூக்கிலிடுபவர் ஆஸ்வால்டோ மோப்ரே, அமைதியாக அமர்ந்திருக்கும் கௌபாய் ஜோ கேஜ்,  தன் காணாமற் போன மகன் செஸ்டர் சார்லஸிற்க்கு ஒரு நினைவுச் சின்னம்  எழுப்பத் திட்டமிட்டுக் காத்திருக்கும் முன்னாள் கான்ஃபெடரேட் தளபதி  சான்ஃபோர்ட் ஸ்மித்தர்ஸ் ஆகியோர் ஆவர்.

உள்நாட்டுப் போரின் போது கிடைத்த மோசமான அனுபவங்கள் காரணமாக, ஜான்ரூத் சக மனிதர்களை நம்புவதில்லை. குறிப்பாக, டெய்ஸி டோமர்கூவை எப்படியாவது மீட்க அவளுடைய ஆட்கள் திட்டமிட்டிருக்கலாம் என்ற அச்சத்தில், அவர் உடனடியாகச் செயல்படுகிறார். 

ஒரு கணம் கூடத் தாமதிக்காமல், அவர் மேஜர் வார்ரனைத் தவிர, அங்கிருந்த மற்ற அனைவரின் துப்பாக்கிகளையும் மற்றும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விடுகிறார். வார்ரன் மீது அவருக்குள்ள நம்பிக்கை, அவர் வைத்திருக்கும் லிங்கனின் கடிதத்தின் அடிப்படையிலானது.

உள்நாட்டுப் போரின் அரசியல் பகைமை உடனடியாகத் தீப்பிடித்தது. க்ரிஸ் மேன்னிக்ஸ் தளபதி ஸ்மித்தர்ஸை ஒரு போர்க் கதாநாயகனாக மதிக்க, வார்ரனுக்கு அவர் ஒரு கொடூரமான எதிரியாகத் தோன்றுகிறார். பேட்டன் ரவுஜ் என்ற இடத்தில், Smithers உத்தரவின் பேரில் கறுப்பினப் போர்க் கைதிகள் தூக்கிலிடப்பட்டதை நினைவுகூர்ந்த வார்ரன், அவரைக் கொன்று பழிவாங்கத் துடிக்கிறார்.
இரவு உணவின்போது, மேன்னிக்ஸ  அந்த லிங்கன் கடிதம் போலியானது என்று யூகித்து, வார்ரனை நோக்கிப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்புகிறான். ரூத்தின் ஏமாற்றத்தைப் புரிந்துகொண்ட வார்ரன், அந்தக் கடிதம் வெள்ளைக்காரர்களிடம் தனக்குச் சலுகை வாங்கிக் கொடுக்கும் ஒரு பொய் என்று சற்றும் தயக்கமின்றி ஒப்புக்கொள்கிறார். இந்தத் தருணம், வார்ரனின் கூரிய அறிவையும், நிலைமையைச் சமாளிக்கும் திறனையும் காட்டுகிறது.
உடனடியாக, வார்ரன் தன் பழிவாங்கும் திட்டத்தைத் தொடங்குகிறார். அவர் தன் துப்பாக்கிகளில் ஒன்றை எடுத்து, தளபதி Smithers-ன் அருகில் வைக்கிறார். தன்னுடைய பரிசை வேட்டையாட முயன்ற ஸ்மித்தர்ஸின் மகனைத் தானே கொன்றேன், அதுவும் கடுங் குளிரில் நான்கு கால்களில் நாய் போல தவழ விட்டு வாய்ப்புணர்ச்சி வன்கொடுமை செய்து அதன் பின் சுட்டுக் கொன்றதாக ஆத்திரமூட்டும் பொய்களைச் சொல்கிறார். இந்த அவமானமும் மகனின் பெயரும் ஸ்மித்தர்ஸின் உணர்ச்சிகளைத் தூண்ட, அவர் ஆத்திரத்தில் அந்தத் துப்பாக்கியை எடுக்க விரைந்தபோது, வார்ரன் சற்றும் தாமதிக்காமல் தற்காப்புக்கு என்றெசுட்டு அவரைக் கொல்கிறார்.

 இந்தக் கொலை, விடுதிக்குள் அமைந்திருந்த சண்டையற்ற சூழலைக் குலைத்து, மேலும் வன்முறைக்கான கதவைத் திறக்கிறது.
இந்தச் சண்டை மற்றும் குழப்பமான தருணத்தின்போதுதான், விடுதியின் மூலையில், காபி கொதித்துக்கொண்டிருந்த பாத்திரத்தில் விஷம் கலக்கப்பட்டது என்ற கொடூரமான உண்மை நிகழ்கிறது. இந்தக் கலப்பைப் பிணைக்கப்பட்டிருந்த டெய்ஸி மட்டுமே மௌனமாகக் கண்ணால் காண்கிறாள்.
சண்டையின் சத்தம் அடங்க, ஜான்ரூத் மற்றும் ஓ.பி.ஜாக்ஸன் இருவரும் அந்த விஷம் கலந்த காபியைக் குடிக்கிறார்கள்.

 சில நிமிடங்களில், O.B. துடித்து இறந்து போகிறார். மரணப் போராட்டத்தில் இருந்த ரூத், தன் வலியில் துடித்துக்கொண்டிருக்கும்போதே, டெய்ஸி தன் கையில் விலங்கிடப்பட்டிருந்த சங்கிலியைப் பயன்படுத்தி, ரூத்தின் துப்பாக்கியை இழுத்து எடுத்து, அவரைச் சுட்டுக் கொன்றுவிடுகிறாள். இதன் மூலம், அவளுடைய கும்பலின் முதல் திட்டம் நிறைவேறுகிறது.
சற்று தாமதித்து நிலைமையைப் புரிந்துகொண்ட வார்ரன், டெய்ஸியை நிராயுதபாணியாக்கி, அவள் கையில் இருந்த கைவிலங்கைத் துண்டிக்காமல், ரூத்தின் பிணத்துடன் பிணைத்து ஒரு மூலையில் அமர வைக்கிறார். விஷத்தின் மர்மம் அவிழ்க்கப்பட, மேன்னிக் காபியில் விஷம் கலந்தது ஜோ கேஜ் ஆக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறான்.

 ஆனால் வார்ரனின் கவனம் வேறு திசையில் செல்கிறது.
அவர் பாப் ன் கதையில் முரண்பாடுகளைக் கண்டறிகிறார். பாப்  மின்னியின் உண்மையான் பணியாள் இல்லை என்று ஆதாரங்களுடன் கண்டுபிடித்துக் கொல்கிறார்.

 அதன் பிறகு, வார்ரன், டெய்ஸியைக் கொல்வதாக அச்சுறுத்தும்போது, ஜோ கேஜ் தான் காபியில் விஷம் கலந்ததை ஒப்புக்கொள்கிறான். 

விஷம் கலந்தது யார் என்று தெரிந்த ஒரு சில கணங்களில், யாரும் எதிர்பார்க்காத விதமாக, கீழே உள்ள தரைப்பலகைகளுக்கு அடியில் மறைந்திருந்த ஓர் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் வார்ரனின் விரைப்பையில் சுடுகிறான். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, மோப்ரே மற்றும் மேன்னிக்ஸ் இருவரும் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு, தாங்களும் காயமடைகிறார்கள்.

வார்ரனின் விரைப்பகுதியில் துப்பாக்கிச் சூடு விழுந்தவுடன், கதை உடனடியாகச் சற்று நேரம் பின்னோக்கிச் செல்கிறது. அந்தப் பனிப்புயலுக்குச் சற்று மணி நேரங்களுக்கு முன்னால், விடுதியில் உண்மையில் என்ன நடந்தது என்பதை ஃப்ளாஷ்பேக் காட்சியில் காண்கிறோம்.
Daisy-இன் சகோதரனும் இந்தக் கும்பலின் தலைவனுமான ஜோடி, 
பாப் உண்மையில், இவன் மார்கோ "த மெக்ஸிகன்"), மோப்ரே உண்மையில், இவன் "இங்லிஷ்" பீட் ஹுக்காஸ்), மற்றும் கேஜ். உண்மையில், இவன் "க்ரூச்" டக்ளஸ் ஆகியோர் மின்னீ ஹேபர்டேஷரி வந்தடைந்தனர். அவர்கள் உடனடியாக விடுதிக்குள் இருந்த அனைவரையும் கொடூரமாகப் படுகொலை செய்தனர். விடுதியின் உரிமையாளர்களான மின்னீ, ஸ்வீட்டேவ், மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் அனைவருமே கொல்லப்பட்டனர். ஆனால், அங்கு ஏற்கெனவே தங்கியிருந்த முன்னாள் கான்ஃபெடரேட் தளபதி சான்ஃபோர்ட் ஸித்தர்ஸை மட்டும் அவர்கள் உயிரோடு விட்டனர். அதன் காரணம், ஸ்மித்தர்ஸ் தன் மகனான செஸ்டர் சார்லஸக்கு கட்டத் திட்டமிட்டிருந்த நினைவுச் சின்னம்  ஒன்றிற்காகக் காத்திருந்தார். இந்தக் கும்பல், அவர் வாய் திறக்காமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அவரை ஒரு பார்வையற்ற சாட்சியாக இருக்க அனுமதித்தது. இந்தக் கும்பல், கொலை செய்யப்பட்ட உடல்கள் அனைத்தையும் மறைத்து, விடுதியைச் சுத்தம் செய்து, Bob வெளியே இருந்து வந்த விருந்தினர்களிடம் பொய் சொல்லத் தயார் செய்கிறது. மேலும், ரூத் மற்றும் பிறர் வந்தால், அவர்களை எதிர்கொள்ளத் தேவையான ஆயுதங்களை மறைத்து வைக்கின்றனர். இந்த ஏற்பாடுகள் முடிந்த பிறகு, Jody இந்தத் திட்டத்தின் தலைமை மூளையாகச் செயல்பட, தரைப்பலகைகளுக்கு அடியில் உள்ள பாதாள அறையில் ஒளிந்துகொள்கிறான்.
நிகழ்காலத்திற்குத் திரும்புகையில், மேஜர்வார்ரன் மற்றும் க்ரிஸ் மேனிக்ஸ் இருவரும் தங்கள் காயங்களால் பலவீனமடைந்த நிலையில், எஞ்சியிருக்கும் டெய்ஸி, மோப்ரே, மற்றும் கேஜ் ஆகியோரைத் தங்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி வைத்திருக்கிறார்கள். ரூத் மற்றும் ஓ.பியின் மரணத்திற்குப் பழிவாங்க, அவர்கள் டெய்ஸியைக் கொல்வதாக அச்சுறுத்துகிறார்கள். இந்தக் கட்டத்தில்தான், தலைவனான ஜோடி, தனது குழுவினரைக் காக்க, பாதாள அறையில் இருந்து வெளியே வந்து சரணடைகிறான். 

ஆனால், வார்ரன் ஒரு கணம் கூடத் தாமதிக்காமல், துப்பாக்கியால் சுட்டு ஜோடியை உடனடியாகக் கொன்றுவிடுகிறார்.
தலைவன் கொல்லப்பட்ட நிலையில், எஞ்சியிருக்கும் கும்பல் உறுப்பினர்கள் வேறு வழியின்றித் தங்கள் திட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் ரெட்ராக்கில் சுமார் பதினைந்து கூலிப்படையினர் காத்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் டெய்ஸியை உயிருடன் மீட்பதற்காகவே காத்திருப்பதாகவும் கூறுகின்றனர். அவர்கள் மின்னிக்ஸுக்கு ஒரு சலுகை அளிக்கிறார்கள்: மேன்னிக்ஸ், வார்ரன்னைக் கொன்றால், அவர்கள் அவரைக் காப்பாற்றுவார்கள், மேலும் இறக்கும் நிலையில் இருக்கும் மோப்ரே (ஹைகாக்ஸ்) மற்றும் கொல்லப்பட்ட பாப் (மார்கோ) மீதுள்ள பவுண்டி பரிசை அவர் வசூலிக்கலாம் என்று ஆசை காட்டுகிறார்கள்.

மேன்னிக்ஸை சமாதானப்படுத்த ஹைகாக்ஸ் (மோப்ரே) முயற்சிக்கும்போது, வார்ரன் அவருக்குப் பேச வாய்ப்பளிக்காமல், அவரைச் சுட்டுக் கொல்கிறார். அதன் பிறகு, கேஜ் (டக்லஸ்) ஒரு இறுதி முயற்சியாக, மேசையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை எடுக்க விழைந்த போது, மேன்னிக்ஸ் மற்றும் வார்ரன் இருவரும் ஒரே நேரத்தில் சுட்டு அவரைக் கொல்கிறார்கள்.

இப்போது, டெய்ஸி டோமர்கூ மட்டுமே எஞ்சியிருக்கிறாள். மேன்னிக்ஸ் அவளுடைய சலுகைகளையும் கேட்கிறார், ஆனால் அது ஒரு பொய் என்று அவர் உடனடியாகப் புரிந்துகொள்கிறார். மேன்னிக்ஸுக்கு இரத்தம் அதிகமாக வெளியேறியதால், அவர் சிறிது நேரம் மயக்கமடைகிறார். 

இதுதான் டெய்ஸியின் இறுதி வாய்ப்பு. அவள், தன் வலது கையில் விலங்கிடப்பட்டிருந்த ஜான் ரூத்தின் சடலத்தின் கையை, அங்கு இருந்த ஒரு கோடாரியைப் பயன்படுத்தி வெட்டி வீசிவிட்டு, கைவிலங்குடன் தப்பித்து ஒரு துப்பாக்கியை எடுக்க முயல்கிறாள். 

ஆனால், மேன்னிக்ஸ் மீண்டும் விழித்தெழுந்து, துப்பாக்கியால் சுட்டு டெய்ஸியைக் காயப்படுத்துகிறார்.
டெய்ஸியின் கொடூரமான முயற்சி தோல்வியடைகிறது. ஜான் ரூத், தான் வேட்டையாடியவர்களை எப்போதுமே உயிருடன் தூக்கு மேடைக்கே கொண்டு வந்து தூக்கிலிடுபவர்  அவரது மரணத்திற்கு ஒரு கவுரவம் அளிக்கும் விதமாக, மேன்னிக்ஸ் மற்றும் வார்ரன் இருவரும், தங்கள் காயங்களின் உச்சகட்ட வலிக்கு மத்தியிலும், தங்கள் கடைசி பலத்தைப் பயன்படுத்தி, Daisy-ஐ விடுதியின் விட்டத்திலிருந்து தூக்கிலிட்டு விடுகிறார்கள்.
இறுதியில், வார்ரன் மற்றும் மேன்னிக்ஸ் இருவரும் தங்கள் கடுமையான காயங்களால் மெதுவாக மரணத்தை நோக்கிச் செல்கிறார்கள். மேன்னிக்ஸ், வார்ரன் பையில் இருந்த போலியான லிங்கன் கடிதத்தை எடுத்து, அதைச் சத்தமாகப் படிக்கிறார். அது போலியானது என்று தெரிந்தபோதிலும், அந்தக் கடிதம் மிகவும் நுணுக்கமாகவும், விவரத்துடனும் எழுதப்பட்டிருந்ததை மேன்னிக்ஸ் வியந்து பாராட்டுகிறார். இந்தக் கடிதம், இறுதியில், ஒரு பிணைப்புச் சங்கிலியாக மாறி, இருவரும் சாகும் நிலையில் படுத்திருக்கும்போது கூட, அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு உணர்வுப்பூர்வமான நட்பை ஏற்படுத்துகிறது. அவர்கள் இருவரும் அதே அறையில் தங்கள் மரணத்தை எதிர்கொள்கையில் படம் நிறைகிறது.

இந்தப் படம் பெற்ற மிக முக்கியமான கௌரவம், புகழ்பெற்ற இத்தாலிய இசையமைப்பாளர் என்னியோ மொரிகோன் அவர்களுக்குச் சிறந்த அசல் இசைக்காகக் கிடைத்த ஆஸ்கர் விருது ஆகும். அவருக்கு 87 வயதாக இருந்தபோது இந்த விருது வழங்கப்பட்டது, இது மொரிகோனுக்குக் கிடைத்த முதல் போட்டி ஆஸ்கர் விருதாகும். மேலும், மொரிகோன் இந்த இசைக்காக கோல்டன் குளோப் மற்றும் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது (BAFTA) ஆகிய உயரிய விருதுகளையும் வென்றார். நடிகை ஜெனீஃபர் ஜேஸன் லெய்ஹ், தனது கொடூரமான மற்றும் சிக்கலான டெய்ஸி டோமர்கூ பாத்திரத்திற்காகச் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

 இருப்பினும், மொரிகோனின் இசை ஆதிக்கம் செலுத்தியதால், படத்தின் மற்ற துறைகளான திரைக்கதை மற்றும் இயக்கம் போன்ற பிரிவுகளில் இது கூடுதல் ஆஸ்கர் வெற்றிகளைப் பெறவில்லை.
​இந்தப் படத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் பல சுவாரஸ்யமான ட்ரிவியா தகவல்கள் உள்ளன. இந்தப் படம் முழுவதுமாக அல்ட்ரா பேனவிஷன் 70எம்எம் பாணியில் படமாக்கப்பட்டது ஒரு முக்கியமான அம்சமாகும். இது 1960களுக்குப் பிறகு அரிதாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பாணி ஆகும். டாரன்டினோ இந்தக் கதைக்கு ஒரு பிரம்மாண்டமான உணர்வை அளிக்க விரும்பியதால், இந்தக் கடினமான தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்தார். மேலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு சிறிய அறையிலேயே நடந்தாலும், இந்தக் காட்சியமைப்புகள் ஹாலிவுட்டில் உள்ள ஒரு சவுண்ட்ஸ்டேஜில் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பின்போது நடிகர்களின் மூச்சுத் தெரிவதற்காக, அந்த அரங்கம் செயற்கையாக 30° பாரன்ஹீட் (-1° செல்சியஸ்) குளிரூட்டப்பட்டு வைக்கப்பட்டது. இது, நடிகர்கள் கதாபாத்திரத்தின் சூழலை இயல்பாக உணர்வதற்கும், காட்சிகளின் நம்பகத்தன்மைக்கும் உதவியது. 

ஆரம்பத்தில், டாரன்டினோ இந்தப் படத்தைத் திரைக்கதையாக மட்டுமே வெளியிடும் எண்ணத்தில் இருந்தார், திரைக்கதை கசிந்த பிறகுதான், அவர் முடிவை மாற்றி அதைத் திரைப்படமாக எடுக்கத் தீர்மானித்தார். 

இந்தப் படம், டாரன்டினோவின் மற்ற படங்களைப் போலவே, உள்நாட்டுப் போர் காலத்து அமெரிக்காவின் இருண்ட பக்கங்களை ஆழமாக அலசியது குறிப்பிடத்தக்கது.

The Thin Red Line 1998 த தின் ரெட் லைன்


'தி தின் ரெட் லைன்' (1998) திரைப்படம், ஹாலிவுட் இயக்குநரான டெர்ரன்ஸ் மாலிக்கின் தனிச்சிறப்பான படைப்பாகும். டெர்ரன்ஸ் மாலிக் 1998 ஆம் ஆண்டு 'தி தின் ரெட் லைன்' திரைப்படத்தை இயக்கும் முன், 1978 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் இருபது ஆண்டுகள் எந்தத் திரைப்படத்தையும் இயக்காமல் இருந்தார். இந்த நீண்ட இடைவெளிக்குப் பின்னால் பல முக்கிய காரணிகள் இருந்தன. அவர் ஹாலிவுட்டின் பாரம்பரிய ஸ்டுடியோ முறைகள் மற்றும் வணிக அழுத்தங்களுக்கு கட்டுப்பட விரும்பாத ஒரு தீவிர படைப்பாளி. அவரது முந்தைய படங்களின் வெளியீட்டில் ஸ்டுடியோக்களின் தலையீடுகளால் ஏற்பட்ட அதிருப்தி ஒரு முக்கிய காரணமாகும். அவர் பொது வெளிச்சத்தில் இருந்து விலகி, அநாமதேயமாக வாழ விரும்பியதால், பிரான்ஸ் மற்றும் டெக்சாஸ் போன்ற இடங்களில் வசித்து, தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியைத் தேடினார். மேலும், 1970களின் பிற்பகுதியில் அவர் தொடங்கத் திட்டமிட்ட 'கியூ' (Q) என்ற அவரது பிரம்மாண்டமான தத்துவார்த்தத் திரைப்படம் நிதி ரீதியாக சாத்தியமில்லாததால் கைவிடப்பட்டதும் ஏமாற்றத்தை அளித்தது.

 இருப்பினும், இந்த இடைவெளியில் அவர் திரைக்கதைகளை எழுதி, தனது படைப்புத் திறனைத் தக்க வைத்துக் கொண்டார். இறுதியாக, அவர் தனது படைப்பு சுதந்திரத்தை முழுமையாக மதிக்கும் தயாரிப்பாளர் மற்றும் நிதி ஆதரவைக் கண்டபோது, ஜேம்ஸ் ஜோன்ஸின் நாவலான 'தி தின் ரெட் லைன்'-ஐ இயக்கத் திரும்பினார். 

சுருக்கமாக, படைப்புச் சுதந்திரத்தில் அவர் கொண்டிருந்த பிடிவாதமும், வணிக உலகின் மீதான அதிருப்தியும், சரியான கதைக்களம் மற்றும் நிதி ஆதரவுக்காகக் காத்திருந்த தனிப்பட்ட விருப்பமுமே இந்த நீண்ட இடைவெளிக்குக் காரணமாக அமைந்தன.
இரண்டாம் உலகப் போரின் குவாடல்கனால் போரை இப்படம் சித்தரித்தாலும், இது வெளிப்படையான சண்டைகளைக் காட்டிலும், போர்ச்சூழலில் சிக்கிய மனிதர்களின் மனதின் ஆழமான கேள்விகளையே முதன்மைப்படுத்தியது. 

விட், வெல்ஷ், பெல் போன்ற ஒவ்வொரு கதாபாத்திரமும், 'நான் யார்?', 'இந்தப் போரின் நோக்கம் என்ன?' என்று தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்ளும் பின்னணிக் குரல்கள் வழியாக, மனித இருப்பின் சிக்கலான தத்துவங்களை ஆராய்ந்தன. புகழ்பெற்ற நடிகர்கள் பலர் குழுவாக நடித்திருந்தாலும், இங்கு எந்த ஒரு ஹீரோவும் இல்லை. மாறாக, ஒவ்வொரு வீரனும் தன் பயத்தையும், தியாகத்தையும் மட்டுமே தாங்கி நின்றான். இயக்குநர் மாலிக், இயற்கையின் அபரிமிதமான அழகை, மனிதனின் வற்கொடுமைக்கு எதிரான ஒரு மென்மையான எதிர்ப்பாகப் பயன்படுத்தினார். 

ஜான் டோலின் ஒளிப்பதிவு, காட்சிகளைக் கவிதை போல மாற்றியது. ஹான்ஸ் சிம்மரின் உன்னதமான இசை, சண்டையின் ஒலிகளிலிருந்து விலகி, மனித ஆன்மாவின் அமைதியைத் தேடியது. இந்தப் படம், போரை ஒரு துயரமான நிகழ்வாக மட்டுமே பார்க்காமல், அது மனித மனதின்மீது ஏற்படுத்தும் நிரந்தரமான உளவியல் மற்றும் தார்மீகத் தாக்கத்தை ஆவணப்படுத்தியதன் மூலம், போர் திரைப்படங்களுக்கான எல்லையை விரிவாக்கியது. ஏழு ஆஸ்கர் பரிந்துரைகளைப் பெற்றது இதன் மேன்மைக்குச் சான்று. இது வெறும் போர் காவியம் அல்ல, மாறாக மனிதநேயம், அதிகாரம், இயற்கை ஆகியவற்றின் நுட்பமான பிணைப்பைப் பற்றிப் பேசும் ஒரு காவியத் தியானமாகும்.

இயக்குநர் டெர்ரன்ஸ் மாலிக்கின் தனித்துவமான அணுகுமுறையே இந்தப் படத்தின் படமாக்கலின் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அவர் சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாகப் படப்பிடிப்பை நடத்தி, அதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாகப் படத்தொகுப்பை மேற்கொண்டார். படப்பிடிப்பின்போது அவர் பாரம்பரியமான திரைக்கதையைப் பின்பற்றாமல், தன்னிச்சையாகக் காட்சிகளை எடுத்தார். இதனால், படத்தில் நடித்த முன்னணி நட்சத்திரங்களான பில் புல்மேன் மற்றும் மிக்கி ரூர்க் போன்ற பலரின் காட்சிகள் இறுதி வடிவத்தில் நீக்கப்பட்டன. நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறித்து நிச்சயமற்ற நிலையில் இருந்தனர். மேலும், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து போன்ற அடர்ந்த காடுகள் மற்றும் வெப்பமண்டலச் சூழலில் படப்பிடிப்பு நடந்தது. இதன் விளைவாக, படக்குழுவினர் போக்குவரத்து, தளவாடச் சிக்கல்கள் மற்றும் கடினமான காலநிலை சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மாலிக்கின் துல்லியமான பார்வைக்காக, மொத்த படக்குழுவும் இத்தகைய கடினமான சவால்களை எதிர்கொண்டது.

படத்தின் கதை:-

குவாடல்கனால் தீவு - அமைதியின் அழிவும் போரின் ஆரம்பமும்
இந்தக் கதை, இரண்டாம் உலகப் போரின் போது (1939–1945), ஓசியானியா (Oceania) எனப்படும் பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள மெலனேசியா (Melanesia) என்ற துணைப் பகுதியில் இருக்கும் குவாடல்கனால் (Guadalcanal) என்ற தீவில் நடக்கிறது. இந்தத் தீவு, அப்போது பிரிட்டிஷ் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட சொலமன் தீவுகளின் (Solomon Islands) ஒரு பகுதியாக இருந்தது. 1942 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தான் அமெரிக்கப் படைகளுக்கும் ஜப்பானியப் படைகளுக்கும் இடையேயான இந்தக் கடுமையான மோதல் ஆரம்பமாகிறது. ஜப்பானியப் படைகள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் முக்கியப் பாதையைத் தடுப்பதும், அமெரிக்கப் படைகள் அதை விடுவிப்பதுமே இப்போரின் முக்கிய நோக்கமாகும்.
🌴 அமைதியிலிருந்து சிறைக்கு: பிரைவேட் விட்டின் ஆரம்ப நிலை
அமெரிக்க இராணுவத்தின் 'பிரைவேட்' விட் (Private Witt) என்ற இளைஞன், போரின் கொடூரமான நியதிகளிலிருந்து விலகி வாழ விரும்பினான். தன் ராணுவப் பிரிவிலிருந்து யாருக்கும் சொல்லாமல் விலகிச் (AWOL) சென்ற அவன், தெற்கு பசிபிக் கடலின் சொலமன் தீவுகளில் வசிக்கும் பூர்வீக மெலனேசிய மக்களுடன் அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டான். எந்தக் கவலையும், போட்டிகளும், சண்டைகளும் இல்லாத அந்த எளிய கிராமத்தில், அவன் தன் உண்மையான சந்தோஷத்தைக் கண்டான். போரின் வெறி இங்கு இல்லை; வெறும் நீரும், நிலமும், சந்தோஷமும் மட்டுமே.
ஆனால், விதி அவனைக் கைவிடவில்லை. அவனது கம்பெனியைச் சேர்ந்த மூத்த அதிகாரியும், கடுமையான மனிதருமான முதல் சார்ஜென்ட் வெல்ஷ் (First Sergeant Welsh) என்பவரால் விட் கண்டுபிடிக்கப்பட்டான். அமைதியின் மடியில் இருந்த விட், மீண்டும் ராணுவ அதிகாரத்தின் பிடிக்குள் வந்து, ஒரு படைவீரர் கப்பலில் சிறை வைக்கப்பட்டான். கசப்புடன் தன் பழைய நிலைக்குத் திரும்பியவனுக்கு, மீண்டும் ஆயுதம் ஏந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தண்டனையாக, வரவிருக்கும் கடுமையான போரில், காயமடைந்தவர்களைத் தாங்கிச் செல்லும் 'ஸ்ட்ரெட்சர் பீரர்' (Stretcher Bearer) என்ற பணியில் நியமிக்கப்பட்டான். அவனது மனதின் அமைதிக்குக் கிடைத்த தண்டனையாக இது அமைந்தது.

25-வது காலாட்படைப் பிரிவின் கீழ் இருந்த 'சி' கம்பெனியைச் (C Company) சேர்ந்த வீரர்கள், ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட, குவாடல்கனால் தீவுக்குப் பலம் சேர்க்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட மிக முக்கியமான பணி, தீவின் முக்கியமான தளமான ஹெண்டர்சன் விமான நிலையத்தைப் பாதுகாப்பது. இந்தக் கம்பெனிக்கு கேப்டன் ஜேம்ஸ் ஸ்டாரோஸ் (Capt. James Staros) தலைமை தாங்கினார். ராணுவக் கப்பலில் தங்கள் நேரம் வரும் வரை காத்திருக்கும் அந்த வீரர்கள், தங்கள் குடும்பம், காதல், பயம், மரணம் குறித்த தத்துவார்த்த எண்ணங்களில் மூழ்கியிருந்தனர். ஒவ்வொரு வீரனும், 'நான் ஏன் சாக வேண்டும்?' என்ற கேள்விக்கு விடை தேடி உள்ளுக்குள்ளேயே போராடினான்.
எதிர்பாராத விதமாக, 'சி' கம்பெனி எந்த எதிர்ப்பும் இல்லாமல் குவாடல்கனால் தீவில் தரையிறங்கியது. அடர்ந்த காட்டுக்குள் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். வழியில், பழங்குடி மக்களின் குடியிருப்புகளையும், ஜப்பானியர்கள் விட்டுச் சென்ற தடயங்களையும் கண்டனர். இயற்கையின் அழகுக்குள்ளும், மனிதனின் கொடூரமான போர் நடந்ததற்கான அறிகுறிகளிலும் அவர்கள் குழப்பமடைந்தனர். விரைவில், அவர்களது இலக்கு தென்பட்டது: எதிரிப் படைகள் வலுவாகக் கோட்டையிட்டிருந்த 'மலை 210' (Hill 210). இதுதான் தீவின் முடிவைத் தீர்மானிக்கப் போகும் முக்கியப் புள்ளி.

மறுநாள் விடியற்காலையில் அமெரிக்கப் படைகளின் தாக்குதல் தொடங்கியது. 'சார்லி' கம்பெனி மலையை நோக்கி முன்னேற முயன்றபோது, உச்சியில் இருந்த ஜப்பானியர்களின் கனரக இயந்திரத் துப்பாக்கிகளால் உடனடியாகத் தடுக்கப்பட்டு பின்வாங்க நேரிட்டது. அது ஒரு மரணப் பொறியாக இருந்தது.
போரின் நடுவே, சார்ஜென்ட் கெக் (Sergeant Keck) தலைமையிலான ஒரு சிறு பிரிவு, எதிரித் தாக்குதலில் இருந்து பாதுகாப்பான ஒரு மேட்டுக்குப் பின்னால் ஒதுங்கியது. அங்கே மறைந்திருந்தபோது, எதிர்பாராத விதமாகக் கெக் தன் இடுப்பிலிருந்த கையெறி குண்டின் பாதுகாப்பு ஊசியை இழுத்துவிட்டார். குண்டு வெடித்தால் தன் பிரிவைச் சேர்ந்த அத்தனை பேரும் இறந்துவிடுவார்கள் என்று உணர்ந்த கெக், ஒரு நொடிகூட யோசிக்காமல், அந்தக் குண்டின் மேல் தானே குதித்துத் தன் உயிரைத் தியாகம் செய்தார். ஒருவரின் மரணம் பல உயிர்களைக் காப்பாற்றியது.
இன்னொரு பக்கம், சார்ஜென்ட் வெல்ஷ் – இந்த ராணுவக் கட்டுப்பாட்டு மனிதன் – காயமடைந்து மரணத்தின் விளிம்பில் துடித்துக்கொண்டிருந்த ஒரு வீரனைக் காப்பாற்ற ஓடினான். ஆனால், அவனது காயத்தின் ஆழத்தை உணர்ந்த வெல்ஷ், அவனுக்குத் தேவையற்ற வேதனையைத் தர விரும்பவில்லை. அவனது துயரத்தைப் போக்க, அதிக அளவு வலி நிவாரணியைக் (Morphine) கொடுத்து, அவனது வேதனையான வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தான். இந்த இரக்கமற்ற செயல், போர்க்களத்தில் மனிதநேயம் மரிக்கும் விதத்தைக் காட்டியது.

முன்னேற்றத்தில் தேக்கம் ஏற்பட்டதால், லெப்டினென்ட் கர்னல் கோர்டன் டால் (Lt. Col. Gordon Tall), தன் அதிகார வரம்பிலிருந்து கேப்டன் ஸ்டாரோஸைத் தொலைபேசியில் அழைத்தார். "என்ன விலை கொடுத்தாவது சரி, மொத்தப் படையையும் நேருக்கு நேர் மோதி அந்த பதுங்குகுழியைக் (Bunker) கைப்பற்று!" என்று கர்ஜித்தார்.
ஆனால், மனித உணர்வுள்ள ஸ்டாரோஸ், இது தன் வீரர்களை தற்கொலைக்கு அனுப்பும் வேலை என்று உணர்ந்தார். அதனால், "நான் என் வீரர்களை அழிவுக்குள் தள்ள மாட்டேன்!" என்று அந்த தற்கொலைக் கட்டளையை ஏற்க மறுத்தார். இந்தக் கட்டளையை மீறிய செயல், இராணுவத்தின் கடுமையான படிநிலையில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.
ஸ்டாரோஸின் மறுப்பால் ஆத்திரமடைந்த கர்னல் டால், தன் பட்டாலியன் நிர்வாக அதிகாரி கேப்டன் ஜான் காஃப் (Captain John Gaff) உடன் நேரடியாகப் போர்க்களத்திற்கே வந்தார். அவர்கள் வரும்போது, ஜப்பானியர்களின் எதிர்ப்பு பலவீனம் அடைந்திருப்பது போல் தோன்றியது. டாலுக்கு, ஸ்டாரோஸ் கோழை என்ற எண்ணம் மேலும் வலுப்பட்டது.
அப்போது, பிரைவேட் பெல் (Pvt. Bell) என்ற வீரன், யாருக்கும் தெரியாமல் தனியாக மலை உச்சிக்கு வேவு பார்த்து, ஜப்பானியப் படைகளின் நிலையைத் துல்லியமாக மதிப்பிட்ட தகவலைக் கொடுத்தான். இதைக் கேட்டறிந்த டால், சிறிய அளவிலான வீரர்கள் குழுவை அனுப்பி, பக்கவாட்டுப் பகுதியில் (Flanking Maneuver) தாக்குதல் நடத்தி, பதுங்குகுழியைக் கைப்பற்றலாம் என்று யோசனை தெரிவித்தார். விட், பெல், டால் போன்ற வீரர்கள் இந்த ஆபத்தான பணிக்குத் தாமாக முன்வந்தனர். கேப்டன் காஃப் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பயங்கரமான சண்டைக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெற்றியை ஈட்டி, மலையைக் கைப்பற்றின.

'மலை 210'-ஐக் கைப்பற்றிய வெற்றி, அமெரிக்கப் படைகளுக்கு ஒரு முக்கியமான உத்தியை உறுதிப்படுத்தியது. தங்கள் கடுமையான உழைப்பிற்காக, 'சி' கம்பெனி வீரர்களுக்கு ஒரு வாரம் முழுவதும் போரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், இந்தப் போர்க் காட்சிகளைக் கண்ட வீரர்களுக்கு, அமைதியின் இந்த இடைவெளியில் எந்தவிதமான உண்மையான சந்தோஷமும் கிட்டவில்லை. இரத்தம் சிந்திய வெற்றியின் விலை, அவர்களின் மனதைப் பிணைத்திருந்தது. மகிழ்ச்சி மறக்கப்பட்டு, சோகமும் சோர்வும் சூழ்ந்திருந்தது.

ஸ்டாரோஸின் விலகலும் பெல்லின் துயரமும்
படைவீரர்கள் கூடாரம் அமைத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, கர்னல் டால், கேப்டன் ஸ்டாரோஸை நேரில் சந்தித்தார். போர்க்களத்தில் வீரர்களை இழக்க விரும்பாமல், கட்டளையை மீறிய ஸ்டாரோஸின் செயலை டால் நினைவில் வைத்திருந்தார். டால், ஸ்டாரோஸை வீரர்களுக்குத் தலைமை தாங்கத் தகுதியற்றவராகக் கருதினார். போரின் அழுத்தங்களைத் தாங்க முடியாத அளவுக்கு ஸ்டாரோஸ் 'மிகவும் மென்மையானவர்' என்று டால் மதிப்பிட்டார். இதன் விளைவாக, ஸ்டாரோஸ் தன் கம்பெனித் தலைமைப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

"நீங்கள் ஒரு நல்ல போர் வீரன் அல்ல, நீங்கள் ஒரு நல்ல மனிதர். அது இந்தப் போருக்குத் தேவையில்லை." - டால்

என்று மறைமுகமாகச் சொல்லி, வாஷிங்டன் டி.சி-யில் உள்ள இராணுவச் சட்டக் குழுவில் (JAG Corps) வழக்கறிஞராகப் பணிமாற்றம் கேட்டு விண்ணப்பிக்கும்படி ஸ்டாரோஸிற்கு அறிவுறுத்தினார். 

ஒரு மனிதாபிமானமுள்ள தளபதியின் தோல்வியாக இது அமைந்தது.

இதற்கிடையில், மலையில் வீரத்துடன் சண்டையிட்ட பிரைவேட் பெல்லுக்கு, தன் மனைவியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. தான் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தன் மனைவி வேறொரு ஆடவர் மீது காதல் கொண்டுள்ளதாகவும், அதனால் விவாகரத்து கோருவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 போரின் துயரங்கள் ஒருபுறம் இருக்க, பெல்லின் தனிப்பட்ட வாழ்க்கை, அவனது மனதின் அடித்தளத்தையே உலுக்கியது. நாட்டிற்காகப் போராடும் ஒரு வீரன், தன் வீட்டிலேயே தோல்வியைத் தழுவியது பெருந்துயரம்.

பிரைவேட் விட், மீண்டும் உள்ளூர் மக்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றான். தான் போருக்குச் செல்வதற்கு முன் கண்ட அந்த எளிய, மகிழ்ச்சியான, கவலையற்ற பழங்குடிச் சமூகத்தை இப்போது அவனால் காண முடியவில்லை. போரின் தாக்கம், அந்த அப்பாவியான மக்களிடமும் ஆழமாகப் பதிந்திருந்தது. இப்போது அவர்கள் வெளிநாட்டினரைக் கண்டால் விலகிச் சென்றனர்; அவர்களுக்குள் முரண்பாடுகளும் சண்டைகளும் அதிகமாயின. இந்த மண்ணின் அமைதியையும், அப்பாவிகளின் சந்தோஷத்தையும் போர் எப்படிச் சிதைத்திருக்கிறது என்பதை விட் உணர்ந்தான்.

விட் மனதில் இந்த இரண்டு உலகங்களின் முரண்பாடு எப்போதும் இருந்தது: போரின் பயங்கரமும், இயற்கையின் அமைதியும். அமைதியைப் பிணைத்திருப்பது எது? அன்பா? அல்லது அந்த அன்பைச் சிதைக்கும் வெறுப்பா? என்ற கேள்விகளுடன் அவன் போராடினான்.

ஓய்வுக்குப் பிறகு, 'சி' கம்பெனி, லெப்டினென்ட் பேண்ட் தலைமையில் ஆற்றங்கரையோரமாக ரோந்துப் பணிக்கு அனுப்பப்பட்டது. விட், கார்போரல் ஃபைஃப் (Cpl. Fife) மற்றும் பிரைவேட் கூம்ப்ஸ் (Pvt. Coombs) ஆகியோர் ஆற்று நீரோட்டத்தின் மேலே சென்று வேவு பார்க்கும் பொறுப்பை ஏற்றனர். எதிர்பாராதவிதமாக, அவர்கள் முன்னேறி வந்த ஜப்பானியப் படைகளின் ஒரு பெரிய குழுவை எதிர்கொண்டனர்.
உடனடியாகப் பின்வாங்க முயன்றபோது, பிரைவேட் கூம்ப்ஸ் சுடப்பட்டு காயமடைந்தார். தங்களால் தப்ப முடியாது என்பதை உணர்ந்த விட், ஒரு மிக முக்கியமான முடிவை எடுத்தான். தன் சகாக்களான ஃபைஃப், கூம்ப்ஸ் ஆகியோர் தப்பிச் செல்ல நேரம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி, அவன் தைரியமாக ஜப்பானியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாகச் செயல்பட்டான்.

ஜப்பானிய வீரர்கள் விட்டைச் சுற்றி வளைத்து, சரணடையும்படி மிரட்டினர். ஆனால், அமைதியை நேசித்த அந்த வீரன், சரணடைவதற்குப் பதிலாக, தன் துப்பாக்கியைத் தூக்கி அவர்களை நோக்கிச் சுடப் போவது போல் பாசாங்கு செய்தான். தன் சகாக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, விட் வேண்டுமென்றே தற்கொலைக்குச் சம்மதித்தான். அடுத்த நொடியே, ஜப்பானியப் படையின் துப்பாக்கித் தோட்டாக்களால் விட் கொல்லப்பட்டான்.

 அமைதியைத் தேடி ஓடியவன், இறுதியாகத் தன் உயிரைத் தியாகம் செய்து, தன் நண்பர்களின் அமைதியான வாழ்வுக்கு வித்திட்டான்.

விட் கொல்லப்பட்ட சிறிது நேரத்தில், அவனது சகாக்கள், அவனை அடக்கம் செய்யத் திரும்பினார்கள். விட்டை வெறுத்ததைப் போலக் காட்டிக்கொண்ட சார்ஜென்ட் வெல்ஷ், தன் மனதில் இருந்த விட்டின் நேர்மையின் மீதான மரியாதையை உணர்ந்தார். விட்டின் கல்லறைக்கு முன் நின்ற வெல்ஷ், வெளிப்படையாகத் தெரியாத துயரத்துடன் கண்ணீர் சிந்தினார். போர்க் களத்தின் கடினமான அனுபவங்கள், வெல்ஷின் இரும்பைப் போன்ற இதயத்தையும் உருக்கின.

'சி' கம்பெனிக்கு கேப்டன் போஷ்  என்ற புதிய தளபதி நியமிக்கப்பட்டார். விட்டின் மரணமும், மலை 210-ஐக் கைப்பற்றியதற்கான வெற்றியும் ஒரு முடிவுக்கு வந்த பிறகு, 'சி' கம்பெனிக்குப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இறுதியாக, அவர்கள் அனைவரும் குவாடல்கனால் தீவிலிருந்து இராணுவக் கப்பலில் (LCT) ஏற்றப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

போர் முடிந்தது; வெற்றி கிடைத்தது. ஆனால், அந்த வெற்றிக்குப் பின்னால் இருந்த ஒவ்வொரு வீரனின் மனதிலும், ஆழமான காயங்களும், அமைதி இழந்த வாழ்வுமே மிஞ்சியிருந்தன.

 உண்மையான 'மெல்லிய சிவப்பு கோடு' (Thin Red Line) என்பது, மனித மனதின் விளிம்பில் வரையப்பட்ட, போரின் கோரத்திற்கும், வாழ வேண்டும் என்ற ஆசைக்கும் இடையே உள்ள மெல்லிய எல்லையாகும்.

'தி தின் ரெட் லைன்' (1998) திரைப்படம்  போர் பற்றிய வெளிப்படையான காட்சிப்பதிவல்ல, மாறாக மனித மனதின் ஆழமான தத்துவார்த்த விசாரணையாக விளங்குகிறது. இது வெறும் சண்டைக் காட்சிகள் நிறைந்த சினிமா என்பதற்குப் பதிலாக, அமைதிக்கும் அழிவுக்கும், படைப்பிற்கும் வன்முறைக்கும் இடையில் உள்ள 'மெல்லிய சிவப்பு கோடு' பற்றிச் சிந்திக்க வைக்கும் கவித்துவமான காவியமாகும். 

இயக்குநர் டெர்ரன்ஸ் மாலிக், இரண்டாம் உலகப் போரின் குவாடல்கனால் போர்க்களத்தை, ஒவ்வொரு மனிதனின் ஆத்மாவுக்குள்ளும் நடக்கும் உள்நாட்டுப் போராகவே அணுகியுள்ளார். 

நீங்கள் அளித்த நடிகர்கள் பட்டியல் மற்றும் பட விவரங்களைத் துல்லியமாக, எந்த மாற்றமும் இல்லாமல் விவரிக்கிறேன்.
நடிகர்கள் மற்றும் பாத்திரங்கள்:
சீன் பென் முதல் சார்ஜென்ட் எட்வர்ட் வெல்ஷாக நடித்தார். அட்ரியன் பிரோடி கார்போரல்/சார்ஜென்ட் ஜெஃப்ரி ஃபைஃபாக நடித்தார். ஜிம் காவிசல் பிரைவேட் ராபர்ட் இ. லீ விட்டாக நடித்தார். பென் சாப்ளின் பிரைவேட்/சார்ஜென்ட் ஜாக் பெல்லாக நடித்தார். ஜார்ஜ் க்ளூனி கேப்டன் சார்லஸ் போஷாக நடித்தார். ஜான் குசாக் கேப்டன் ஜான் காஃபாக நடித்தார். வுடி ஹாரெல்சன் சார்ஜென்ட் பிரையன் கெக்காக நடித்தார். எலியாஸ் கோட்டியாஸ் கேப்டன் ஜேம்ஸ் ஸ்டாரோஸாக நடித்தார். ஜாரெட் லெட்டோ இரண்டாம் லெப்டினென்ட் வில்லியம் ஒய்ட்டாக நடித்தார். டாஷ் மிஹோக் ப்ரொமோட்டட் ஃபர்ஸ்ட் கிளாஸ் டான் டால் ஆக நடித்தார். டிம் பிளேக் நெல்சன் பிரைவேட் லைசாண்டர் டில்ஸாக நடித்தார். நிக் நோல்டே லெப்டினென்ட் கர்னல் கோர்டன் டால் ஆக நடித்தார். ஜான் சி. ரெயிலி சார்ஜென்ட் மேனார்ட் ஸ்டார்மாக நடித்தார். லாரி ரொமானோ பிரைவேட் லியோனார்டோ மாஸியாக நடித்தார். ஜான் சாவேஜ் சார்ஜென்ட் ஜாக் மெக்ரானாக நடித்தார். ஜான் டிரவோல்டா பிரிகேடியர் ஜெனரல் ஹோவர்ட் குயின்டார்ட்டாக நடித்தார். ஆரி வெர்வீன் ப்ரொமோட்டட் ஃபர்ஸ்ட் கிளாஸ் சார்லி டேலாக நடித்தார்.
இந்த முக்கிய நட்சத்திர நடிகர்கள் தவிர, சிறிய பாத்திரங்களில் பல நன்கு அறியப்பட்ட நடிகர்கள் நடித்தனர். அவர்களில், பிரைவேட் ஆல்பிரடோ டெல்லாவாக கிர்க் அசெவெடோ, விட்டின் தாயாக பென்னி ஆலன், பிரைவேட் டேவிட் பீலாக மார்க் பூன் ஜூனியர், பிரைவேட் ஆர்வில் கூம்ப்ஸாக மாட் டோரான், சார்ஜென்ட் பீட்டர் பெக்கராக டான் ஹார்வி, பிரைவேட் ஹியூகோ கார்னியாக டேனி ஹோச், பிரைவேட் ஹோமர் ஆஷாக தாமஸ் ஜேன், மார்ட்டி பெல்லாக மிராண்டா ஓட்டோ, மற்றும் பிரைவேட் எட்வர்ட் பீடாக நிக் ஸ்டால் ஆகியோர் அடங்குவர்.
லூகாஸ் ஹாஸ், பில் புல்மேன், டோனல் லாக் மற்றும் மிக்கி ரூர்க் ஆகியோரும் இப்படத்தின் ஒரு பகுதியாக இருந்தனர், ஆனால் அவர்களின் காட்சிகள் இறுதியில் நீக்கப்பட்டன.
ஜான் குசாக்கின் பாத்திரமான கேப்டன் காஃப், குவாடல்கனாலில் மெடல் ஆஃப் ஆனர் விருது வென்ற சார்லஸ் டபிள்யூ. டேவிஸ் என்ற நிஜ நபரை அடிப்படையாகக் கொண்டது. காஃப் ஜப்பானிய பதுங்கு குழியின் மீது தாக்குதல் நடத்துவதற்குக் காரணமாக இருந்த காட்சியானது, டேவிஸ் தனது மெடல் ஆஃப் ஆனர் விருதைப் பெற்ற உண்மையான செயலால் ஈர்க்கப்பட்டது.

ஜிம் காவிசல், ஷான் பென், நிக் நோல்டே, எலியாஸ் கோட்டியாஸ் போன்ற பல ஹாலிவுட் நட்சத்திரங்கள், தங்கள் கதாபாத்திரத்தின் ஆழமான ஆன்மத் தவிப்பைத் துல்லியமாக இதில்  வெளிப்படுத்தினர். இவர்களின் உள்மனப் பேச்சுகள் பின்னணிக் குரலாக ஒலித்து, "நாம் ஏன் இப்படி வாழ்கிறோம்?" போன்ற கேள்விகளை எழுப்பி, பார்வையாளர்களை ஆழ்ந்த சிந்தனைக்கு இட்டுச் செல்கின்றன. 

மாலிக் குவாடல்கனால் தீவின் பசுமையையும், நீரையும், உயிரினங்களையும் போர் வன்முறைக்கு எதிரான அமைதியான சாட்சிகளாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர்.

 துப்பாக்கிச் சத்தங்களுக்கு நடுவே பறவைகளின் கீதத்தைக் கேட்பது, மனித அழிவிற்கும் இயற்கையின் நித்திய வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டைக் கூர்மையாக நமக்கு  உணர்த்துகிறது.

 ஜான் டோல் கையாண்ட ஒளிப்பதிவு, தரையை ஒட்டியோ அல்லது வானத்தை நோக்கியோ நகர்ந்து, வீரர்களின் பார்வையின் வரம்பற்ற தன்மையையும், அவர்கள் சண்டையிடும் மண்ணின் முக்கியத்துவத்தையும் குறித்தது. 

ஹான்ஸ் சிம்மர் அமைத்த பின்னணி இசை, குறிப்பாக மெலனேசிய பழங்குடிகளின் இசைக் கூறுகளுடன் இணைந்து, படத்தின் தத்துவார்த்த ஆழத்தை மேம்படுத்தியது. இப்படம் சிறந்த படம் உட்பட ஏழு ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது, அத்துடன் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் மாலிக்கிற்கு கோல்டன் பியர் விருதையும் பெற்றுத் தந்தது. 

இது போர் சினிமா வகையை ஆழமான தத்துவார்த்த தளத்திற்கு உயர்த்தியதாக சினிமா ஆர்வலர்களால் போற்றிக் கொண்டாடப்படுகிறது. 'தி தின் ரெட் லைன்'  ஒரு அனுபவம். டெர்ரன்ஸ் மாலிக், போரைப் பற்றிய ஒரு கருத்தை நிறுவ முற்படாமல் பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறார்.

 வீர மரணத்தின் மத்தியில் இருக்கும் வாழ்க்கையின் மீதான பேரார்வத்தையும், இரக்கமற்ற அதிகாரத்தின் பிடியில் சிக்கும் மனிதாபிமானத்தின் போராட்டத்தையும் அழகாகவும் வேதனையுடனும் இப்படம் பதிவு செய்துள்ளது.

 இது தலைமுறைகளைக் கடந்து பேசப்படும் உலக சினிமா மேன்மையின் ஒரு அரிய படைப்பாகும்.

1964 ஆம் ஆண்டு வெளிவந்த 'தி தின் ரெட் லைன்'  என்ற திரைப்படம் பற்றியும் பார்ப்போம், இந்தக் கதை, இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க இராணுவத்தின் ஒரு சிறு படைப்பிரிவு ஜப்பானியப் படைகளை எதிர்கொண்ட குவாடல்கனால் தீவின் போர்க்களத்தை மையமாகக் கொண்டது. இந்தப் படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ மார்டன் ஆவார். இது ஜேம்ஸ் ஜோன்ஸ் எழுதிய அதே பெயரிலான நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்தப் பதிப்பு, 1998 இல் டெர்ரன்ஸ் மாலிக் எடுத்த தத்துவார்த்தப் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. 1964 ஆம் ஆண்டுப் பதிப்பு, போரின் நேரடியான, யதார்த்தமான அனுபவங்களில் அதிக கவனம் செலுத்தியது. வீரர்களின் மனப்போராட்டங்கள், பயம், சோர்வு மற்றும் போரின் அழுத்தம் ஆகியவற்றைப் படம் தெளிவாகக் காட்டியது. இது போர்ச் சண்டைக் காட்சிகள், இராணுவ நடைமுறைகள் மற்றும் அதிகார மட்டத்தில் உள்ள மோதல்கள் போன்றவற்றை வெளிப்படையாகச் சித்தரித்தது. குறிப்பாக, வீரர்கள் தங்கள் இலக்குகளை அடையவும், உயிர் பிழைக்கவும் எடுக்கும் தீவிரமான முயற்சிகளைத் திரையில் பதிவு செய்தது. இந்தத் திரைப்படம், மாலிக்கின் பதிப்பைப் போல அதிக தத்துவார்த்த விசாரணைகளை மேற்கொள்ளாமல், குவாடல்கனால் போரில் ஈடுபட்ட சாதாரண அமெரிக்கப் படைவீரர்களின் கடுமையான கள அனுபவத்தை நேர்மையுடன் சொல்லியது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) ஆஸ்கர் (136) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)