"துடுகு கல நன்னே தொர"
என்ற தியாகையரின் பஞ்சரத்ன கீர்த்தனையில் வரும் என்ற சுந்தரத்தெலுங்கு கீர்த்தனை பாடல் அற்புதமானது, இதை பல கர்னாடக இசை மேதைகள் தம் வாழ்நாளில் பாடி சிறப்பு செய்துள்ளனர், யூட்யூபில் ஒவ்வொரு மேதைகள் பாடிய வடிவமும் இந்த ஐந்து கீர்த்தனைகளாக சுமார் ஒரு மணிநேரம் நீளும் வடிவம் கிடைக்கிறது, அத்தனையும் முத்து.
இப்பாடலை கேட்க ஆரம்பித்தால் இதன் இனிமை காரணமாக நிறுத்தவே முடியாது, அப்படி கேட்கத் துவங்கி இறுதியாக பொருளை அறிந்து இங்கே பகிர்ந்திருக்கிறேன்,லயித்து கேட்பவர்கள் மனதில் அமைதி ததும்பும்.
பாடல்:-
துடுகு கல னன்னே தொர
கொடுகு ப்ரோசுரா எம்தோ
துடுகு கல னன்னே தொர
கடு துர்விஷயாக்றுஶ்டுடை கடிய கடியகு னிம்டாரு
துடுகு கல னன்னே தொர
ஶ்ரீ வனிதா ஹ்றுத்குமுதாப்ஜ வாம்க்மானஸாகோசர
துடுகு கல னன்னே தொர
ஸகல பூதமுல யம்து னீவை யும்டக மதிலேக போயின
துடுகு கல னன்னே தொர
சிருத ப்ராயமுன னாடே பஜனாம்றுத ரஸவிஹீன குதர்குடைன
துடுகு கல னன்னே தொர
பர தனமுல கொரகு னொருல மதினி
கரகபலிகி கடுபு னிம்ப திரிகினட்டி
துடுகு கல னன்னே தொர
தனமதினி புவினி ஸௌக்யபு ஜீவனமே
யனுசு ஸதா தினமுலு கடிபெடி
துடுகு கல னன்னே தொர
தெலியனி னடவிட க்ஷுத்ருலு வனிதலு ஸ்வவஶமௌட குபதஶிம்சி
ஸம்தஸில்லி ஸ்வரலயம்பு லெரும்ககனு ஶிலாத்முடை
ஸுபக்துலகு ஸமானமனு
துடுகு கல னன்னே தொர
த்றுஷ்டிகி ஸாரம்பகு லலனா ஸதனார்பக ஸேனாமித தனாதுலனு
தேவாதி தேவ னெரனம்மிதினி காகனு பதாப்ஜ பஜனம்பு மரசின
துடுகு கல னன்னே தொர
சக்கனி முக கமலம்புனனு ஸதா னா மதிலோ ஸ்மரண லேகனே
துர்மதாம்த ஜனுல கோரி பரிதாபமுலசே தகிலி னொகிலி துர்விஷய
துராஶலனு ரோயலேக ஸதத மபராதினை சபல சித்துடைன
துடுகு கல னன்னே தொர
மானவதனு துர்லப மனுசு னெம்சி பரமானம்த மொம்தலேக
மத மத்ஸர காம லோப மோஹமுலகு தாஸுடை மோஸபோதி காக
மொதடி குலஜுடகுசு புவினி ஶூத்ருல பனுலு ஸல்புசுனும்டினி காக
னாராதமுலனு ரோய ஸாரஹீன மதமுலனு ஸாதிம்ப தாருமாரு
துடுகு கல னன்னே தொர
ஸதுலகை கொன்னாள்ளாஸ்திகை ஸுதுலகை கொன்னாள்ளு
தன ததுலகை திரிகிதி னய்ய த்யாகராஜாப்த இடுவம்டி
துடுகு கல னன்னே தொர கொடுகு ப்ரோசுரா எம்தோ
துடுகு கல னன்னே தொர
பல்லவி:
துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் (துடுக்குத்தனங்கள்) நிறைந்த என்னைத் தலைவரே (ராமா!)
கொடுகு ப்ரோசுரா எம்தோ
பொருள்: காப்பாற்ற உம்மால் ஆகுமா? (இது என்ன ஆச்சரியம்!)
அனுபல்லவி:
கடு துர்விஷயாக்றுஶ்டுடை
பொருள்: மிகவும் கெட்ட விஷயங்களால் கவரப்பட்டு,
கடிய கடியகு னிம்டாரு
பொருள்: நொடிக்கு நொடி (தவறுகளால்) நிறைந்து இருக்கும்,
துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே
சரணம் 1:
ஶ்ரீ வனிதா ஹ்றுத்குமுதாப்ஜ
பொருள்: லட்சுமி தேவியின் இதயத் தாமரைக்கும்,
வாம்க்மானஸாகோசர
பொருள்: வாக்குக்கும் (பேச்சுக்கும்), மனதிற்கும் எட்டாதவரே,
துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே
சரணம் 2:
ஸகல பூதமுல யம்து னீவை யும்டக
பொருள்: எல்லா உயிர்களிலும் நீரே (இறைவனாக) இருக்கிறீர் என்ற உண்மையை,
மதிலேக போயின
பொருள்: என் அறிவில் கொள்ளாமல் (மறந்திருந்தேன்),
துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே
சரணம் 3:
சிருத ப்ராயமுன னாடே
பொருள்: சிறு வயதிலேயே ( இளம் பருவத்திலிருந்தே),
பஜனாம்றுத ரஸவிஹீன
பொருள்: பஜனை என்னும் அமுதச் சுவையை இழந்து,
குதர்குடைன
பொருள்: வீண் தர்க்கம் செய்யும் குதர்க்கவாதியாக ஆனேன்,
துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே
சரணம் 4:
பர தனமுல கொரகு னொருல மதினி
பொருள்: பிறர் செல்வத்திற்காக (ஆசைப்பட்டு) மற்றவர்களின் மனதில்,
கரகபலிகி கடுபு னிம்ப திரிகினட்டி
பொருள்: துன்பத்தை உண்டாக்கி (மனதை உருக்கி) வயிறு நிரப்ப அலைந்தேன்,
துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே
சரணம் 5:
தனமதினி புவினி ஸௌக்யபு ஜீவனமே
பொருள்: செல்வத்தாலும் அதிகாரத்தாலும் உலக இன்ப வாழ்க்கைதான்,
யனுசு ஸதா தினமுலு கடிபெடி
பொருள்: என எண்ணி எப்போதும் நாட்களைக் கழித்தேன்,
துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே
சரணம் 6:
தெலியனி னடவிட க்ஷுத்ருலு வனிதலு
பொருள்: அறியாத வழிப் பயணத்தில் உள்ள அற்பர்களுக்கும் பெண்களுக்கும்,
ஸ்வவஶமௌட குபதஶிம்சி
பொருள்: அவர்கள் என்னிடம் வசமாவதற்குத் தப்பான வழியைக் காட்டி (உபதேசித்து),
ஸம்தஸில்லி ஸ்வரலயம்பு லெரும்ககனு
பொருள்: மகிழ்ச்சி அடைந்து, ஸ்வரம் (ஒலி) மற்றும் லயம் (தாளம்) பற்றிய அறிவில்லாமல்,
ஶிலாத்முடை
பொருள்: கல் போன்ற மனம் உடையவனாகி,
ஸுபக்துலகு ஸமானமனு
பொருள்: நல்ல பக்தர்களுக்குச் சமமாக என்னையே சொல்லிக் கொண்டு அலைந்த,
துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே
சரணம் 7:
த்றுஷ்டிகி ஸாரம்பகு லலனா ஸதனார்பக
பொருள்: கண்களுக்கு இனிமையான மனைவிகள், வீடுகள், மக்கள் (பிள்ளைகள்),
ஸேனாமித தனாதுலனு
பொருள்: சேனை (படை) போன்ற அளவில்லாத செல்வம் முதலியவற்றை (இவற்றையே),
தேவாதி தேவ னெரனம்மிதினி காகனு
பொருள்: தேவாதி தேவனே என நம்பினேன்; ஆனால்,
பதாப்ஜ பஜனம்பு மரசின
பொருள்: உன் தாமரைத் திருவடிகளைப் போற்றுவதை (பஜனையை) மறந்த,
துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே
சரணம் 8:
சக்கனி முக கமலம்புனனு ஸதா னா மதிலோ
பொருள்: அழகிய உன் முகத்தாமரை எப்போதும் என் மனதில்,
ஸ்மரண லேகனே
பொருள்: நினைவில் இல்லாமல்,
துர்மதாம்த ஜனுல கோரி
பொருள்: கெட்ட அகந்தைக் கொண்ட மனிதர்களை விரும்பி,
பரிதாபமுலசே தகிலி னொகிலி
பொருள்: துன்பங்களால் மாட்டிக் கொண்டு வருந்தி,
துர்விஷய துராஶலனு ரோயலேக
பொருள்: கெட்ட விஷயங்களின் தீய ஆசைகளைக் கைவிட முடியாமல்,
ஸதத மபராதினை
பொருள்: எப்போதும் குற்றம் செய்பவனாய்,
சபல சித்துடைன
பொருள்: நிலையற்ற மனம் கொண்டவனாய் இருந்த,
துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே
சரணம் 9:
மானவதனு துர்லப மனுசு னெம்சி
பொருள்: மனிதப் பிறவி கிடைப்பது அரிது என்று எண்ணாமல்,
பரமானம்த மொம்தலேக
பொருள்: பேரின்பத்தை அடைய முடியாமல்,
மத மத்ஸர காம லோப மோஹமுலகு
பொருள்: அகந்தை, பொறாமை, ஆசை, பேராசை, மயக்கம் (மோகம்) ஆகியவற்றுக்கு,
தாஸுடை மோஸபோதி காக
பொருள்: அடிமையாகி ஏமாந்தேன்; மேலும்,
மொதடி குலஜுடகுசு புவினி
பொருள்: உயர்வடிவாகப் பிறந்தும் உலகில் உள்ள,
ஶூத்ருல பனுலு ஸல்புசுனும்டினி காக
பொருள்: தாழ்வானவற்றை ஏற்று செய்து கொண்டிருந்தேன்; மேலும்,
னாராதமுலனு ரோய
பொருள்: அறிவுக்கு ஒவ்வாத வழிமுறைகளைக் கைவிடாமல்,
ஸாரஹீன மதமுலனு ஸாதிம்ப தாருமாரு
பொருள்: சாரம் இல்லாத மதங்களைப் பற்றிப் பேசுவதில் ஈடுபட்டதால், அலைந்து திரிந்த,
துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே
சரணம் 10 :
ஸதுலகை கொன்னாள்ளாஸ்திகை
பொருள்: மனைவிக்காக சில நாட்கள், சொத்துக்காக சில நாட்கள்,
ஸுதுலகை கொன்னாள்ளு
பொருள்: பிள்ளைகளுக்காக சில நாட்கள்,
தன ததுலகை திரிகிதி னய்ய
பொருள்: அவளுக்காகவும் இவனுக்காகவும் அலைந்து திரிந்தேன் ஐயா,
த்யாகராஜாப்த இடுவம்டி
பொருள்: தியாகராஜரின் அன்பரே! இதுபோன்ற,
துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே!
கொடுகு ப்ரோசுரா எம்தோ
பொருள்: காப்பாயா? இது என்ன ஆச்சரியம்!
துடுகு கல னன்னே தொர
பொருள்: தவறுகள் நிறைந்த என்னைத் தலைவரே
இது போலவே மற்ற நான்கு கீர்த்தனைகளான
ஜகதா நந்தகாரகா
சாதிஞ்சனே
கன கன ருசீரா
எந்தரோ மஹானுபாவுலு
எழுத வேண்டும்.