க்ரீன் புக் Green Book 2018

இயக்குனர் பீட்டர் ஃபாரெல்லி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான "கிரீன் புக்"  உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட  உன்னதமான படைப்பு.

 1962 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் நிலவிய இனவெறி மற்றும் சமூகப் பாகுபாடுகளை ஒரு சாலைப் பயணத்தின் வழியாக இத்திரைப்படம் ஆழமாகப் பதிவு செய்கிறது. 

ஆப்பிரிக்க அமெரிக்க இசைக்கலைஞர் டான் ஷெர்லி மற்றும் அவரது ஓட்டுநராகப் பயணிக்கும் இத்தாலிய அமெரிக்கரான டோனி லிப் ஆகிய இருவருக்குள் மலரும் நட்பே இப்படத்தின் மையக்கருவாக அமைகிறது. 

வரலாற்றுச் சிறப்புமிக்க தி நீக்ரோ மோட்டாரிஸ்ட் கிரீன் புக் எனும் வழிகாட்டிப் புத்தகத்தை மையமாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கிரீன் புக் திரைப்படத்தின் அடிநாதம்  இரு வேறு துருவங்களாக இருக்கும் மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும் முன்முடிவுகளைக் களைந்து ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்து கொள்வதாகும். 

ஒருபுறம் சமூகத்தால் ஒடுக்கப்பட்டாலும் தனது கலையாலும் அறிவாலும் உயர்ந்த நிலையில் இருக்கும் டான் ஷெர்லி மறுபுறம் பிழைப்பிற்காக எதையும் செய்யும் துணிச்சலும் உலக அறிவும் கொண்ட டோனி லிப் என இருவருமே தங்களுக்குள் ஒரு போலி பிம்பத்தைச் சுமந்து திரிகிறார்கள். 

இந்தப் பயணம் வெறும் சாலை வழிப் பயணம் மட்டுமல்ல அது அவர்களின் மனதிற்குள் நிகழும் ஒரு நெடிய பயணம். 

ஒரு கருப்பினக் கலைஞர் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகளை விடவும் அவர் தனது சொந்த இனத்தவரிடமிருந்தே அந்நியப்பட்டு நிற்பது இத்திரைப்படத்தின் மிக முக்கியமான உணர்ச்சிப் புள்ளியாகும்.

தனிமனித கௌரவம்  ஒருவன் மற்றவர்களுக்குக் காட்டும் மரியாதையில் மட்டுமல்ல தனக்குத் தானே கொடுத்துக் கொள்ளும் மதிப்பிலும் இருக்கிறது என்பதை இக்கதை அழுத்தமாகச் சொல்கிறது.

 டான் ஷெர்லி எதிர்கொள்ளும் ஒவ்வொரு அவமானமும் அவரை உடைப்பதற்குப் பதிலாக அவரை மேலும் உறுதிப்படுத்துகிறது. 

அதே சமயம் டோனி லிப் போன்ற ஒரு முரட்டுத்தனமான மனிதனிடம் இருக்கும் எதார்த்தமான அன்பு எப்படி ஒரு மேதையின் தனிமையைப் போக்க வல்லது என்பதை இது உணர்த்துகிறது. 

சட்டம் மனிதர்களைப் பிரிக்கலாம் ஆனால் பகிரப்படும் உணர்வுகளும் ஒருவருக்காக ஒருவர் எடுக்கும் தார்மீக முடிவுகளும் அந்தச் சட்டங்களைக் காட்டிலும் வலிமையானவை என்பதை இப்படம் நிலைநாட்டுகிறது.

உண்மையான மாற்றம்  மேடைப் பேச்சுகளிலோ அல்லது சட்டப் புத்தகங்களிலோ நிகழ்வதை விடவும் சக மனிதனின் வலியைத் தனது வலியாக உணரும் தருணத்திலேயே தொடங்குகிறது. 

டோனி தனது குடும்பம் மற்றும் இனம் சார்ந்த குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வந்து டானின் உலகைப் பார்க்கும்போது ஒரு புதிய மனிதனாக உருவெடுக்கிறார்.

 அதேபோல் டான் தனது தனிமை எனும் கோட்டையிலிருந்து வெளியே வந்து சாமானிய மனிதர்களின் அன்பை ருசிக்கத் தொடங்குகிறார்.

 பாகுபாடுகள் நிறைந்த உலகிற்கு எதிராக வன்முறையை விடவும் மேன்மையான பண்பும் பிணைப்புமே சிறந்த பதிலடி என்பதை இத்திரைப்படம் அதன் ஆழமான கதைப்போக்கின் மூலம் நிறுவுகிறது.

உலக சினிமா அரங்கில் இப்படம் ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை கலந்த வாழ்வியல் நாடகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 மனிதாபிமானம் மற்றும் இன நல்லிணக்கத்தைப் பேசும் இப்படத்தின் கதை அமைப்பு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்தது.

 குறிப்பாக மனித உறவுகளுக்கு இடையே இருக்கும் நுணுக்கமான உணர்வுகளைக் கையாண்ட விதம் இப்படத்தை ஒரு உலகத்தரமான படைப்பாக மாற்றியது. 

பல்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்ட மக்களும் தங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் இதன் உலகளாவிய கருப்பொருள் அமைந்துள்ளது.

விமர்சன ரீதியாக இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் சில விவாதங்களையும் உருவாக்கியது. 

டான் ஷெர்லி மற்றும் டோனி லிப் ஆகியோரின் நடிப்பை விமர்சகர்கள் ஏகமனதாகப் பாராட்டினர். அதே சமயம் இனப் பாகுபாடுகளைக் கையாண்ட விதம் குறித்தும் டான் ஷெர்லியின் நிஜ வாழ்க்கை அந்தரங்க சித்தரிப்பு குறித்தும் சில விமர்சனங்கள் எழுந்தன. 

இருந்தபோதிலும் ஒரு தனிமனிதனின் பார்வையில் ஏற்படும் மாற்றம் சமூக மாற்றத்திற்கு எப்படி வித்திடுகிறது என்பதை இப்படம் நேர்த்தியாக விவரிப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

இயக்குநர் பீட்டர் ஃபாரெல்லி இப்படத்தை மிகவும் யதார்த்தமாகவும்  விறுவிறுப்பாகவும் கையாண்டுள்ளார். 

தனது முந்தைய நகைச்சுவைப் படங்களிலிருந்து மாறுபட்டு ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினையை மென்மையான நகைச்சுவையுடன் கலந்து வழங்கியுள்ளார்.

 காட்சியமைப்புகள் ஒவ்வொன்றும் 1960 களின் காலக்கட்டத்தை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன.

 ஓட்டுநருக்கும் பயணிக்கும் இடையிலான அதிகாரப் படிநிலை எப்படி ஒரு சமமான நட்பாக மாறுகிறது என்பதைத் தனது இயக்கத்தின் மூலம் அவர் செதுக்கியுள்ளார்.

படமாக்கப்பட்ட விதம் மற்றும் அதன் ஒளிப்பதிவு பார்வையாளர்களை அந்தப் பயணத்திலேயே அழைத்துச் செல்கிறது. 

சீன் போர்ட்டரின் ஒளிப்பதிவு அமெரிக்காவின் நிலப்பரப்புகளையும் நகரங்களையும் அழகியல் உணர்வுடன் படம்பிடித்துள்ளது. 

குறைந்த  திட்டத்தொகையில் உருவாக்கப்பட்டாலும்  தொழில்நுட்பத் தரம் மிகவும் உயர்வாக இருக்கிறது. 

நியூ ஆர்லியன்ஸ் மற்றும் லூசியானா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்ட காட்சிகள் அக்காலத்துச் சூழலை அப்படியே கண்முன் நிறுத்துகின்றன.

யுனிவர்சல் பிக்சர்ஸ் மூலம் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. 

23 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் 321 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. 

சீனாவில் இப்படம் பெற்ற அமோக வரவேற்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு டிஜிட்டல் தளங்களிலும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தற்போதும் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.

விக்கோ மார்டென்சன் (டோனி லிப்) மற்றும் மஹர்ஷாலா அலி (டான் ஷெர்லி) ஆகியோரின் நடிப்பு இப்படத்தின் மிகப்பெரிய பலம். 

டோனி லிப் கதாபாத்திரத்திற்காக விக்கோ மார்டென்சன் தனது உடல் எடையைக் கூட்டி ஒரு முரட்டுத்தனமான அதே சமயம் அன்பான மனிதராக வாழ்ந்துள்ளார். 

மஹர்ஷாலா அலி ஒரு செவ்வியல் இசைக்கலைஞரின் கம்பீரத்தையும் உள்ளுக்குள் இருக்கும் தனிமையையும் தனது கண்கள் மூலமே கடத்தியுள்ளார். 

லிண்டா கார்டெல்லினி (டோலோரஸ்) டோனியின் மனைவியாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இசையமைப்பாளர் கிரிஸ் போவர்ஸ் இப்படத்திற்கு மிகச்சிறந்த பின்னணி இசையை வழங்கியுள்ளார்.

 டான் ஷெர்லியின் ஜாஸ் இசை மற்றும் கிளாசிக்கல் இசைக் கோர்ப்புகள் படத்தின் ஆன்மாவாகத் திகழ்கின்றன.

 இசையின் மூலம் ஒரு மனிதன் எப்படித் தனது வலிகளை மறக்கிறான் என்பதையும் மக்களுடன் இணைகிறான் என்பதையும் இசைக்கோர்வைகள் உணர்த்துகின்றன.

 இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசைத்தட்டுக்கள் டிஜிட்டல் தளங்களில் பல மில்லியன் முறை கேட்கப்பட்டு சாதனை படைத்துள்ளன.

91 ஆவது அகாடமி விருதுகளில் இப்படம் சிறந்த திரைப்படம் சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை ஆகிய மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றது. 

மஹர்ஷாலா அலி தனது சிறந்த நடிப்புக்காக இரண்டாவது முறையாக ஆஸ்கார் விருதைப் பெற்றார்.

 கோல்டன் குளோப் விருதுகள் மற்றும் பாஃப்டா விருதுகளிலும் இப்படம் பல முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்றது. 

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் மக்களின் விருப்பமான திரைப்பட விருதைப் பெற்றது இதன் வெற்றிப் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.

டோனி லிப் பாத்திரத்திற்காக விக்கோ மார்டென்சன் தனது உடல் எடையை சுமார் 20 கிலோ வரை அதிகரித்துக் கொண்டார். 

இப்படத்தின் திரைக்கதையை டோனி லிப்பின் உண்மையான மகனான நிக் வாலெலோங்கா எழுதியுள்ளார் . 

படத்தின் இசையமைப்பாளர் கிரிஸ் போவர்ஸ் நடிகர் மஹர்ஷாலா அலிக்கு பியானோ வாசிப்பதற்கான அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார் .

 பியானோ வாசிக்கும்  காட்சிகளில் அலிக்கு மாற்றாக கிரிஸ் போவர்ஸின் கைகளே பயன்படுத்தப்பட்டன.

இப்படத்தின் பாடல்களைத் தேர்வு செய்வதில் புகழ்பெற்ற பாடகர் ராபர்ட் பிளான்ட் முக்கியப் பங்காற்றினார். அவர் பரிந்துரைத்த பல அரிய பாடல்கள் படத்தின் பின்னணியில் இடம்பெற்றுள்ளன. 

குறிப்பாக 1950 மற்றும் 1960 களின் மறக்கப்பட்ட பல இசைக்கோர்ப்புகளைக் குறைந்த செலவில் படக்குழுவினர் பயன்படுத்தினர்.

 படத்தின் இறுதியில் வரும் கருப்பின இசை விடுதிக் காட்சியில் சோபின் எனும் இசைமேதையின் வின்டர் விண்ட் எனும் இசைக்கோர்ப்பு வாசிக்கப்பட்டது. 

இது படத்தின் அதிகாரப்பூர்வ இசைத்தொகுப்பில் இடம்பெறவில்லை. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இப்படத்தை மிகவும் ரசித்து ஐந்து முறை பார்த்ததாகவும் "புட்ச் காசிடி அண்ட் சண்டான்ஸ் கிட்" படத்திற்குப் பிறகு இதுவே அவருக்குப் பிடித்த நண்பர்களைப் பற்றிய திரைப்படம் என்றும் கூறியுள்ளார்.

நிஜ வாழ்க்கையில் டோனி லிப்பின் குடும்ப உறுப்பினர்கள் பலர் இப்படத்தில் கௌரவத் தோற்றங்களில் நடித்துள்ளனர். 

டோனியின் மகன் நிக் வாலெலோங்கா இதில் ஆகி எனும் மாஃபியா பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் டோனியின் மற்றொரு மகனான பிராங்க் ஜூனியர் தனது சொந்த சித்தப்பா ரூடி வாலெலோங்காவாகத் திரையில் தோன்றியுள்ளார்.

 படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரையன் கியூரி பனிப்புயலின் போது உதவும் காவலர் பாத்திரத்தில் நடித்துள்ளார். 

டான் ஷெர்லியின் செல்பிஸ்ட் யூரி தேத் எனும் நிஜக் கதாபாத்திரத்திற்குப் பதிலாக ஓலெக் எனும் கற்பனைக் கதாபாத்திரம் படத்தில் சேர்க்கப்பட்டது. 

டான் ஷெர்லியின் குடும்பத்தினர் கதையில் சில மாற்றங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டாலும் மஹர்ஷாலா அலி அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டதுடன் தனக்கு வழங்கப்பட்ட தகவல்களைக் கொண்டு சிறந்த பங்களிப்பை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் முதலில் ஃபோகஸ் ஃபீச்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்தன பின்னர் பார்டிசிபென்ட் மீடியா நிறுவனம் 23 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்கியது. 

படத்தின் இயக்குநர் பீட்டர் ஃபாரெல்லி இந்தப் படைப்பை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிற்குத் திரையிட்டுக் காட்டினார். படத்தின் தரம் மற்றும் உணர்ச்சிகரமான கதை சொல்லலில் ஈர்க்கப்பட்ட ஸ்பீல்பெர்க் இதனை யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் விநியோகம் செய்ய உதவினார். 

91 ஆவது அகாடமி விருதுகளில் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றதன் மூலம் சிறந்த இயக்குநருக்கான பரிந்துரை இன்றி அந்த விருதைப் பெற்ற ஐந்தாவது திரைப்படம் என்ற வரலாற்றுப் பெருமையை இப்படம் பெற்றது. 

இதற்கு முன்னர் "விங்ஸ் கிராண்ட் ஹோட்டல்", "டிரைவிங் மிஸ் டெய்சி" மற்றும் "ஆர்கோ" ஆகிய படங்கள் மட்டுமே இச்சாதனையைச் செய்திருந்தன.

திரைப்படத்தின் விளம்பரங்களுக்காக மட்டும் சுமார் 37.5 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டன.

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஆரம்பத்தில் மந்தமாகத் தொடங்கினாலும் விருதுகளுக்கான பரிந்துரைகள் மற்றும் ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் இப்படம் நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

 குறிப்பாக ஆஸ்கார் விருது வென்ற பிறகு இப்படத்தின் திரையரங்குகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கப்பட்டு வசூலில் 121 சதவீதம் வளர்ச்சியை எட்டியது. 

இது 2011 ஆம் ஆண்டின் த "கிங்ஸ் ஸ்பீச் " படத்திற்குப் பிறகு ஒரு ஆஸ்கார் வெற்றிப் படத்திற்குப் கிடைத்த மிகப்பெரிய வசூல் உயர்வாகும்.

சீனாவில் இப்படம் 70 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூலித்து டைட்டானிக் படத்திற்கு அடுத்தபடியாக அங்கு அதிக வசூல் செய்த சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்ற இரண்டாவது திரைப்படம் என்ற இடத்தைப் பிடித்தது. 

ஜப்பான் பிரான்ஸ் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றது.

 விமர்சன ரீதியாக 2025 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்ட 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த  திரைப்படங்கள் பட்டியலில் வாசகர்களின் விருப்பத் தேர்வாக இப்படம் 264 ஆவது இடத்தைப் பிடித்தது.

 ஆப்பிரிக்க அமெரிக்க இசைக்கலைஞர் குயின்சி ஜோன்ஸ் டான் ஷெர்லியைத் தனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும் என்றும் மஹர்ஷாலா அலி அந்தப் பாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார். 

டான் ஷெர்லியின் உதவியாளராக நடித்த இக்பால் தேபா மற்றும் தயாரிப்பு நிர்வாகியாக நடித்த பி.ஜே. பைர்ன் போன்ற நடிகர்கள் இப்படத்தின் உண்மைத் தன்மையைக் சிலாகித்தனர்.

========================

படத்தின் கதை:-

1962 ஆம் ஆண்டு நியூயார்க்கின் பிராங்க்ஸ் பகுதியில் இத்தாலிய அமெரிக்கரான டோனி லிப் (விக்கோ மார்டென்சன்) தான் வேலை செய்த கோப்பகபானா இரவு விடுதி புதுப்பித்தல் பணிகளுக்காக மூடப்பட்டதால் வருமானத்திற்கு வழியின்றித் தவிக்கிறார். 

இந்தச் சூழலில் ஒரு கார் ஓட்டுநர் வேலைக்கான நேர்காணலில் அவர் கலந்து கொள்கிறார். அங்கு அவர்  டான் ஷெர்லி (மஹர்ஷாலா அலி) எனும் ஒரு வசதிமிக்க பண்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்க பியானோ இசைக் கலைஞரை சந்திக்கிறார் .

 அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் ஆழமான தெற்கு மாகாணங்களில் எட்டு வாரங்கள் நடைபெறவுள்ள இசைப் பயணத்திற்குத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் காரைச் செலுத்தவும் ஒரு வலிமையான மனிதராக டோனியை டான் ஷெர்லி தேர்வு செய்கிறார்.

 டோனியின் நற்பெயர் மற்றும் விசுவாசத்தை அறிந்து அவரைப் பணியமர்த்தும் டான் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று மீண்டும் நியூயார்க் திரும்புவதாகத் திட்டமிட்டுப் பயணத்தைத் தொடங்குகிறார். 

டானின் இசை நிறுவனம் டோனியிடம் தி நீக்ரோ மோட்டாரிஸ்ட் கிரீன் புக் எனும் கையேட்டை வழங்குகிறது.

 இது ஜிம் க்ரோ சட்டங்கள் அமலில் இருந்த அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் கருப்பின மக்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கும் உணவருந்துவதற்கும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் முகவரிகளைக் கொண்ட ஒரு வரலாற்று ஆவணம்.

பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில் டோனியின் முரட்டுத்தனமான பேச்சு மற்றும் நாகரிகமற்ற பழக்கவழக்கங்கள் டானுக்கு எரிச்சலைத் தருகின்றன.

 அதேபோல டானின் அதிகப்படியான ஒழுக்கமும் கண்டிப்பும் டோனிக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துகின்றன. 

ஆனால் தெற்கு நோக்கி நகர நகர மேடையில் டான் வெளிப்படுத்தும் அபாரமான இசைத்திறமையைக் கண்டு ஓட்டுனர் டோனி வியந்து போகிறார்,மரியாதை கொள்கிறார்.

 அதே சமயம் மேடைக்கு வெளியே டான் சந்திக்கும் கொடூரமான இனவெறிப் பாகுபாடுகள் மற்றும் அவமானங்களைக் கண்டு டோனி மிகுந்த ஆத்திரமும் வேதனையும் அடைகிறார்.

 கென்டக்கி மாநிலத்தின் லூயிஸ்வில் பகுதியில் ஒரு மதுக்கடையில் வெள்ளை இனத்தவர்கள் டானை அடித்துத் துன்புறுத்தி அவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்போது டோனி அங்கே புகுந்து அவரை மீட்டு வருகிறார். 

இனிமேல் தான் இல்லாமல் டான் எங்கும் தனியாகச் செல்லக் கூடாது என்று அவர் அன்புக் கட்டளையிடுகிறார்.

இந்தப் பயணத்தின் ஊடாக டோனி தனது மனைவி டோலோரஸ்ஸுக்கு (லிண்டா கார்டெல்லினி)  எழுதும் கடிதங்கள் மிகவும் சாதாரணமாக இருப்பதை உணரும் டான் அவற்றைத் திருத்தி மிகவும் ஆழமான உணர்ச்சிகரமான மற்றும் கவித்துவமான கடிதங்களாக மாற்ற பின்னின்று உதவுகிறார். 

இது டோனியின் குடும்ப வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

அதேபோல் டான் தனது சகோதரரை விட்டுப் பிரிந்து தனிமையில் இருப்பதைக் கண்ட டோனி அவரை மீண்டும் உறவுகளுடன் இணைய ஊக்குவிக்கிறார்.

 ஒரு கட்டத்தில் டான் ஒரு பொதுக் கழிப்பறையில் ஒரு வெள்ளை இன ஆணிடம் பாலியல் ரீதியாகத் தொடர்பு கொண்டதாகக் காவல்துறையிடம் சிக்கியபோது டோனி எந்தத் தயக்கமும் காட்டாமல் காவலர்களுக்குப் பணம் கொடுத்து அந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருகிறார்.

மிசிசிப்பி மாகாணத்தில் ஒரு இரவு நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கருப்பின மக்கள் நடமாடக் கூடாது எனும் விதியுள்ள சன்டவுன் டவுன் பகுதியில் இவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். 

அங்கே டோனி ஒரு காவலரைத் தாக்கியதால் சிறையில் இருவரும் அடைக்கப்படுகிறார்கள்.

 அப்போது டான் தனது வழக்கறிஞரை அழைப்பதாகக் கூறி அப்போதைய அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ராபர்ட் கென்னடியைத் தொடர்பு கொண்டு மேலிடத்து அழுத்தத்தின் மூலம் விடுதலையாகிறார். 

இது இருவருக்கும் இடையே ஒரு பெரிய வாக்குவாதத்தை உருவாக்குகிறது. தகுதியும் திறமையும் இருந்தும் தன் சொந்த இனத்தவராலும் வெள்ளை இனத்தவராலும் முழுமையாக ஏற்கப்படாத தனது தனிமை மற்றும் அடையாளச் சிக்கலை டான் கண்ணீருடன் டோனியிடம் வெளிப்படுத்துகிறார். 

அந்த மழையிரவில் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சமரசம் அடைகிறார்கள்.

இறுதியாக அலபாமாவின் பர்மிங்காம் நகரில் தனது இறுதி இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டிய நாட்டுப்புற கிளப்பில் டான் அங்கிருந்த உணவகத்தில் நுழையத் தடை விதிக்கப்படுகிறார். 

அவர் அங்குள்ள மேடையில் இசைக்கலாம் ஆனால் அங்கேயே உணவருந்தக் கூடாது என்ற மேலாளர் பிரையன் ஸ்டெபனெக்  நிபந்தனையை டான் எதிர்க்கிறார். 

டோனி அந்த மேலாளரை மிரட்டினாலும் டான் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்க முடிவு செய்கிறார். 

இது டானின் இசை ஒப்பந்தத்தைப் பாதிக்கும் என்றாலும் டோனி தனது நண்பனின் கௌரவத்திற்காக அந்த முடிவை ஆதரிக்கிறார்.

 அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறி ஒரு சாதாரண கருப்பின விடுதிக்குச் சென்று அங்குள்ள இசைக்கலைஞர்களுடன் இணைந்து மிக உற்சாகமாகப் பியானோ வாசிக்கிறார்கள்.

அங்கிருந்து அவர்கள் நியூயார்க்  திரும்பும்போது கடும் பனிப்புயலில் சிக்கிக் கொள்கிறார்கள். வழியில் ஒரு காவலர் அவர்களை நிறுத்தும்போது மீண்டும் ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறார்கள்.

 ஆனால் அந்தக் காவலர் அவர்களின் வாகனத்தின் டயர் பஞ்சராக இருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களுக்கு உதவி செய்து பாதுகாப்பான பயணத்திற்கு வாழ்த்துக் கூறுகிறார். 

கடும் சோர்வடைந்த  டோனி உறங்க டான் காரைச் செலுத்தி கிறிஸ்துமஸ் இரவு அன்று டோனியின் வீட்டிற்கு சொன்னபடியே சென்று சேர்க்கிறார். 

டோனி டானைத் தனது குடும்ப கிருஸ்துமஸ் விருந்துக்கு அழைத்தாலும் டான் தயக்கத்துடன் மறுத்துவிட்டுத் தனது மாளிகைக்குச் செல்கிறார். 

ஆனால் அந்தத் தனிமை அவரை வாட்ட மீண்டும் அவர் டோனியின் வீட்டிற்குத் திரும்புகிறார். அங்கு டோனியின் குடும்பத்தினர் டான் ஷெர்லியை மிகுந்த அன்புடன் வரவேற்றுத் தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்கிறார்கள். 

நிஜ வாழ்க்கையில் டான் தொடர்ந்து பல இசைப் படைப்புகளை உருவாக்கினார், டோனி மீண்டும் கோப்பகபானாவில் பணியில் சேர்ந்தார். 

இவர்கள் இருவரும் 2013 ஆம் ஆண்டு சில மாத இடைவெளியில் இறக்கும் வரை பிரிக்க முடியாத சிறந்த நண்பர்களாக வாழ்ந்தார்கள் என்ற செய்திக் குறிப்புடன் படம் நிறைகிறது.

கிரீன் புக் திரைப்படம் ஒரு மனிதனின் நிறம் அல்லது அவனது சமூக அந்தஸ்து ஆகியவற்றைக் கடந்து இரு வேறு துருவங்களாக இருக்கும் மனிதர்களுக்கிடையிலான புரிதலையும் நட்பையும் மிக ஆழமாகப் பேசுகிறது.

 திறமைக்கும் தகுதிக்கும் இனம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் அதே வேளையில் வெறுப்புணர்வு என்பது பெரும்பாலும் அறியாமையாலேயே பிறக்கிறது என்பதை டோனி லிப் மற்றும் டான் ஷெர்லி இடையிலான உறவு நிரூபிக்கிறது. 

1960 களின் அமெரிக்காவில் நிலவிய கடுமையான இனவெறிச் சூழலில் ஒரு வெள்ளை இனத்தவர் கருப்பினத்தவருக்கு ஓட்டுநராகச் செல்வது என்பது வெறும் வேலையாகத் தொடங்கினாலும் அது இறுதியில் ஒரு தார்மீகப் போராட்டமாக உருவெடுக்கிறது. 

சமூகத்தில் நிலவும் ஆழமான பாரபட்சங்களை வேரறுக்க சட்டங்களை விடவும் மனிதர்களுக்கு இடையே ஏற்படும் நேரடித் தொடர்பும் பகிரப்படும் அனுபவங்களுமே வலிமையானவை என்பதை இப்படம் உணர்த்துகிறது.

டான் ஷெர்லி எனும் கதாபாத்திரம் தனது அடையாளத்தைத் தேடி அலைவது ஒரு முக்கியமான செய்தியை முன்வைக்கிறது.

 அவர் தனது கருப்பின மக்களுடன் முழுமையாக இணைய முடியாமலும் வெள்ளை இனத்தவர்களால் ஒரு கலைப் பொருளாக மட்டுமே மதிக்கப்பட்டு தனிப்பட்ட முறையில் புறக்கணிக்கப்படுவதும் சமூகத்தில் நிலவும் இரட்டைத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

 கண்ணியம் என்பது ஒருவன் தன்னைத் தானே தற்காத்துக் கொள்வதில் இருக்கிறது என்பதையும் வன்முறையை விடவும் அமைதியான உறுதியான எதிர்ப்பு என்பது மிக வலிமையானது என்பதையும் டான் ஷெர்லியின் நடத்தைகள் வழி உணரலாம். 

அதேபோல் டோனி லிப் ஆரம்பத்தில் கொண்டிருந்த முன்முடிவுகள் டானின் திறமையையும் அவர் எதிர்கொள்ளும் வலிகளையும் காணும்போது மாறத் தொடங்குகிறது. 

இது ஒரு மனிதன் தனது குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வரும்போது உலகை எவ்வளவு விசாலமாகப் பார்க்க முடியும் என்பதற்கான சான்றாகும்.
இறுதியில் இத்திரைப்படம் தனிமை என்பது எவ்வளவு பெரிய சாபம் என்பதையும் அன்பு மற்றும் அரவணைப்பு ஒரு மனிதனின் வாழ்வை எப்படி மாற்றும் என்பதையும் காட்டுகிறது. 

டான் ஷெர்லி தனது வசதியான மாளிகையில் தனித்து வாழ்வதை விட டோனியின் எளிய குடும்பத்தில் ஒருவராக இணைவதை விரும்புவது சக மனிதர்களுடனான பிணைப்பின் மேன்மையை விளக்குகிறது.

 நண்பனுக்காகத் தனது வேலையையோ அல்லது வாய்ப்புகளையோ இழக்கத் துணியும் டோனியின் குணம் உண்மையான நட்பு என்பது நிறம் மற்றும் அதிகார வர்க்கத்தை விட மேலானது என்பதைப் பறைசாற்றுகிறது.

 பாகுபாடுகள் நிறைந்த உலகில் ஒருவரையொருவர் மாற்றிக் கொள்வதை விட ஒருவரையொருவர் புரிந்து கொள்வதே உலகத்தை மாற்றும் முதல் படி எனும் உன்னத செய்தியை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

பேரசைட் Parasite (2019)

"பேரசைட்"  2019 ஆம் ஆண்டு வெளிவந்த தென் கொரிய அவல நகைச்சுவை  திரில்லர் படைப்பு. 

போங் ஜூன் ஹோ இயக்கத்தில் உருவான இப்படம் ஒரு ஏழைக் குடும்பம் தங்களின் அடையாளங்களை மறைத்துக்கொண்டு ஒரு பணக்கார குடும்பத்தின் வீட்டிற்குள் ஊடுருவி அவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைவதை மிக நுணுக்கமாக விவரிக்கிறது.

 கான்ஸ் திரைப்பட விழாவில் மிக உயரிய பால்ம் டி ஓர் விருதை வென்ற முதல் கொரியத் திரைப்படம் இது.

பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் இருக்கும் ஒரு குடும்பம் தங்களின் வாழ்வாதாரத்திற்காக எடுக்கும் விபரீத முடிவுகளையும் அதன் பின்விளைவுகளையும் இப்படம் பேசுகிறது.

 சமூகத்தில் நிலவும் வர்க்கப் போராட்டம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஒரு மேலோட்டமான பிரச்சாரமாக மாற்றாமல் மிகச் சிறந்த திரைக்கதை வாயிலாக இப்படம் காட்சிப்படுத்துகிறது.

 நவீன முதலாளித்துவ உலகில் வாழும் மனிதர்களின் நிலையைச் சொல்லும் அதே வேளையில் வர்க்கப் பிரிவினையை வெறும் பணத்தால் மட்டும் அல்லாமல் அவர்கள் வாழும் இடத்தின் உயரத்தைக் கொண்டும் வகைப்படுத்துகிறது.

இத் திரைப்படத்தின் அடிநாதம்  வெறும் வர்க்கப் போராட்டம் மட்டுமல்ல, அது மனிதர்களுக்கே உரிய அந்தஸ்து குறித்த ஏக்கமும், எட்ட முடியாத உயரத்தை அடைய முயலும்போது ஏற்படும் இருப்பியல் ரீதியான வீழ்ச்சியும் ஆகும்.

 இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு மனிதன் தான் இருக்கும் இடத்திலிருந்து ஒரு படி மேலே செல்ல எடுக்கும் முயற்சிகளையும், அந்த முயற்சி தோல்வியடையும் போது அவன் மீண்டும் அதே பழைய பாதாளத்திற்குள் தள்ளப்படுவதையுமே மையமாகக் கொண்டுள்ளன.

 இது உழைப்பால் முன்னேற நினைக்கும் ஒருவனின் கதையல்ல, மாறாக ஏணியே இல்லாத ஒரு சுவரில் ஏற முயன்று கீழே விழுபவனின் கதை.

இப்படத்தின் ஆன்மா  ரகசிய நிலவறையிலும் பாதி நிலத்தடி வீட்டிலும் புதைந்து கிடக்கும் நுட்பமான உணர்வுகளில்தான் இருக்கிறது. 

ஒரு மனிதன் தன்னை ஒரு மேட்டுக் குடியினனாகக் காட்டிக் கொள்ள எவ்வளவுதான் வேடமிட்டாலும், அவனது கடந்த காலமும் அவன் வளர்ந்த சூழலும் அவனோடு ஒட்டியிருக்கும் அந்த வியர்வை வாடையைப் போல அவனைத் துரத்திக் கொண்டே இருக்கும். 

இது சமூக அமைப்பால் ஒரு மனிதனின் மீது திணிக்கப்பட்ட அழியாத முத்திரை. இந்த முத்திரையை உடைக்க நினைக்கும் போதுதான் ஒரு சாதாரண மனிதன் வன்முறையைக் கையிலெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

மேலும், இப்படத்தின் ஆழமான தத்துவம்  வெற்றிடத்தைப் பற்றியது. பார்க் குடும்பத்தின் ஆடம்பர வாழ்க்கை என்பது உழைப்பாளர்கள் இல்லாமல் இயங்க முடியாத ஒரு வெற்றுக்கூடு. 

அதேபோல் கிம் குடும்பத்தின் கனவுகள் என்பது ஆதாரமற்ற ஒரு மேகம் போன்றது. இறுதியில் எஞ்சியிருப்பது ஒரு தந்தை தன் மகனுக்காக நிலவறையிலிருந்து விளக்குகளை எரியச் செய்து அனுப்பும் அந்த மௌனமான மோர்ஸ் குறியீடு மட்டும்தான்.

 அது வெற்றியின் வெளிச்சம் அல்ல, மாறாக என்றென்றும் வெளிவர முடியாத ஒரு இருண்ட சிறைக்குள் இருக்கும் ஒரு மனிதனின் இருப்புக்கான ஒரே சாட்சி.

 ஒருவன் அடைய நினைக்கும் சொர்க்கமே அவனுக்கு நரகமாக மாறும் அந்த விதியைப் பேசுவதே இப்படத்தின் மெய்யியல் ஆகும்.

இயக்குநர் போங் ஜூன் ஹோ இப்படத்தை ஒரு கட்டிடக் கலைஞர் போலவே செதுக்கியுள்ளார். இப்படத்தின் திரைக்கதையில் வரும் ஒவ்வொரு திருப்பமும் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைப்பதோடு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு குறியீட்டை ஒளித்து வைத்துள்ளார்.

 2013 ஆம் ஆண்டு அவர் எழுதிய  நாடகத்தின் அடிப்படையில் உருவான இக்கதை பின்னர் ஒரு முழு நீளத் திரைப்படமாக மாற்றப்பட்டது. 

மாபெரும் மேதமைகளான ஆல்பிரட் ஹிட்ச்காக் மற்றும் அகிரா குரோசாவா ஆகியோரின் திரைமொழியை நினைவுபடுத்தும் அதே வேளையில் இது முற்றிலும் ஒரு தனித்துவமான கொரியத் திரைப்படமாக மிளிர்கிறது.

படமாக்கம் மற்றும் காட்சி அமைப்புகள் இப்படத்தின் பெரும் பலமாகும். ஒளிப்பதிவாளர் ஹாங் கியுங் பியோ அர்ரி அலெக்சா 65 கேமராவைப் பயன்படுத்தி இப்படத்தின் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.

 பணக்கார பார்க் குடும்பத்தின் வீடு இப்படத்திற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு செட் ஆகும். 

சூரிய வெளிச்சத்தின் திசை மற்றும் நிழல் விழும் விதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வீட்டின் ஒவ்வொரு பகுதியும் கட்டப்பட்டது. 

ஏழை மற்றும் பணக்கார வர்க்கங்களின் வாழிடங்களுக்கு இடையிலான வேறுபாட்டை நிலத்தின் உயரத்தைக் கொண்டு காட்டிய விதம் உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றது.

இப்படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞரும் தங்களின் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர். 

கிம் குடும்பத்தின் தலைவராக நடித்த சாங் காங் ஹோ தனது அபாரமான நடிப்பால் வறுமையின் வலியையும் ஆத்திரத்தையும் ஒருசேர வெளிப்படுத்தியுள்ளார். 

பார்க் குடும்பத்தின் தலைவராக நடித்த லீ சுன் கியுன் மற்றும் அவரது மனைவியாக நடித்த சோ யோ ஜியோங் ஆகியோர் ஒரு செல்வந்த குடும்பத்தின் மேலோட்டமான அன்பையும் அதே சமயம் அவர்களிடம் இயல்பாக இருக்கும் வர்க்க பேதத்தையும் மிகச் சரியாகப் பிரதிபலித்தனர். 

மற்ற இளம் நடிகர்களும் ஒவ்வொரு காட்சியிலும் தங்களின் பங்களிப்பை மிகச் சிறப்பாக வழங்கியுள்ளனர்.

இசை மற்றும் படத்தொகுப்பு இப்படத்தின் தீவிரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றன. இசையமைப்பாளர் ஜங் ஜே இல் வழங்கிய பின்னணி இசை ஒரு பதற்றமான சூழலைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது. 

இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ஹேண்டல் ஓபரா பாடல்கள் ஒரு நாடகத்தனமான அதே சமயம் ரத்தமும் சதையுமான வலியைத் திரையில் வடித்தெடுத்தன. 

யாங் ஜின் மோவின் கூர்மையான படத்தொகுப்பு படத்தின் வேகத்தை எங்கும் தொய்வடையாமல் பாதுகாத்தது. 

 ஆஸ்கர் வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சியை இப்படம் நிகழ்த்தியது. சிறந்த திரைப்படம் சிறந்த இயக்குனர் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த சர்வதேசத் திரைப்படம் என நான்கு ஆஸ்கர் விருதுகளை இப்படம் அள்ளியது.

 ஆங்கிலம் அல்லாத ஒரு மொழித் திரைப்படம் ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது இதுவே முதல் முறையாகும். 

பேரசைட் திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றது உலக சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்பட்டாலும் சில தரப்பினரிடையே அது அதிருப்தியையும் விவாதங்களையும் உருவாக்கியது. 

இதற்கு முதன்மையான காரணமாக அமைந்தது மொழி சார்ந்த தார்மீகத் தடை ஆகும். பல தசாப்தங்களாக ஆஸ்கர் மேடையில் ஆங்கில மொழிப் படங்கள் மட்டுமே சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்று வந்த நிலையில் திடீரென ஒரு வெளிநாட்டு மொழிப் படம் அந்த உச்சத்தைத் தொட்டதைச் சில அமெரிக்க ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. 

ஒரு அங்குல உயரமுள்ள சப் டைட்டில் தடையைத் தாண்டினால் உலகெங்கும் உள்ள சிறந்த படங்களைக் காணலாம் என்று அந்தப் படத்தின் இயக்குனர் கூறியிருந்தாலும் ஆங்கிலம் அல்லாத படத்திற்கு முதன்மை விருது வழங்கப்பட்டதைச் சிலர் ஏற்கவில்லை.

அரசியல் ரீதியான பின்னணிகளும் இந்த அதிருப்தியில் முக்கியப் பங்கு வகித்தன. குறிப்பாக அமெரிக்காவின் அப்போதைய அரசியல் தலைமை இந்தப் படத்தின் வெற்றியைக் கடுமையாகச் சாடியது. 

தென் கொரியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த வேளையில் அந்த நாட்டுப் படத்திற்கு ஏன் விருது தரப்பட்டது என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினர்.

 அமெரிக்காவின் பழைய பெருமையைப் பேசும் கான் வித் த விண்ட் போன்ற பிரம்மாண்டமான படங்கள் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றும் கொரியப் படத்திற்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம் தேவையற்றது என்றும் அவர்கள் பகிரங்கமாகவே மேடைகளில் முழங்கினர். 

இது தேசியவாதம் சார்ந்த ரசிகர்களிடையே ஒருவித அதிருப்தியை உருவாக்கியது.
ஆஸ்கர் விருது  ஹாலிவுட் திரையுலகின் தனிப்பட்ட கொண்டாட்டமாகவே கருதப்பட்ட சூழலில் தென் கொரியப் படம் ஒன்று அந்தப் பாரம்பரியத்தை உடைத்ததை ஒரு ஆக்கிரமிப்பாகச் சிலர் கருதினர். 

சர்வதேசத் திரைப்படங்களுக்கு என்று தனிப்பிரிவு இருக்கும்போது பொதுப் பிரிவிலும் அதே படம் வெற்றி பெறுவது ஹாலிவுட் படைப்புகளின் வாய்ப்பைப் பறிப்பதாக அவர்கள் வாதிட்டனர். 

அதே ஆண்டில் போட்டியிட்ட 1917 மற்றும் ஜோக்கர் அல்லது ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் போன்ற தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்த படங்களை ஆதரித்த ரசிகர்களுக்கு ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களின் படைப்புகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரு கொரிய மொழிப் படம் வென்றது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

 பேரசைட் படத்தில் சொல்லப்பட்ட வர்க்கப் போராட்டம் மற்றும் அதன் இருண்ட நகைச்சுவை பாணி அனைத்துக் கலாச்சார மக்களையும் ஒரே விதமாகச் சென்றடையவில்லை.

 படத்தின் கதை சொல்லும் விதம் மற்றும் அதில் காட்டப்பட்ட குறியீடுகள் சிலருக்குப் புரியாத புதிராகவோ அல்லது அந்நியமாகவோ தோன்றியது. 

இத்தகைய காரணங்களால் ஒரு தரப்பினர் இந்தப் படத்தின் ஆஸ்கர் வெற்றியைத் தகுதியற்ற ஒன்றாகக் கருதினர். இருப்பினும் உலக சினிமா விமர்சகர்கள் பலர் இந்தப் படம் சினிமா கலையில் புதிய கதவுகளைத் திறந்திருப்பதாகவே இன்றும் கருதுகிறார்கள்.

 சமூகத்தில் புரையோடிப் போயுள்ள வர்க்கப் பிரிவினையை ஒரு தீராத தழும்பாக இப்படம் உலக மக்களின் மனசாட்சியின் முன் நிறுத்தியுள்ளது.

இத்திரைப்படத்தின் இந்தச் சுவரொட்டி படத்தின் கதையிலுள்ள வர்க்கப் போராட்டத்தையும் அடையாளச் சிக்கலையும் மிகத் துல்லியமாகக் காட்சிப்படுத்துகிறது. 

இதில் கதாபாத்திரங்களின் கண்களை மறைக்கும் கறுப்பு மற்றும் சிவப்பு நிறப் பட்டைகள் ஒரு முக்கியமான குறியீடாகும். 

இத்திரைப்படத்தின்  சுவரொட்டியில் கதாபாத்திரங்களின் கண்களை மறைத்திருக்கும் கறுப்பு மற்றும் வெள்ளை நிறப் பட்டைகள் வர்க்கப் பிரிவினையின் மிக ஆழமான அடையாளங்களாகும். 

ஏழ்மை நிலையில் இருக்கும் கிம் குடும்பத்தினரின் கண்கள் கறுப்பு நிறப் பட்டைகளாலும், செல்வச் செழிப்பில் இருக்கும் பார்க் குடும்பத்தினரின் கண்கள் வெள்ளை நிறப் பட்டைகளாலும் மறைக்கப்பட்டுள்ளன. 

இது சமுதாயத்தில் நிலவும் ஏழை மற்றும் பணக்கார வர்க்கங்களுக்கு இடையிலான வெளிப்படையான மற்றும் கடுமையான பிளவைச் சுட்டிக்காட்டுகிறது. 

இந்த வரிப்பட்டைகள் ஒருவிதத் தணிக்கையைப் போலத் தோன்றுவது தீமையைக் காண மறுக்கும் மனநிலையை வெளிப்படுத்துகிறது. அதாவது, பணக்கார வர்க்கம் தங்களைச் சுற்றியுள்ள ஏழைகளின் துயரங்களைக் காண மறுப்பதையும், ஏழை வர்க்கம் தங்களின் வாழ்வாதாரத்திற்காகச் செய்யும் தார்மீகத் தவறுகளைக் காண மறுப்பதையும் இது குறிக்கிறது.

குற்றவியல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் அடையாளத்தை மறைக்கக் கொரியச் செய்தித்தாள்களில் இது போன்ற பட்டைகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், படத்தில் ஒருவரை ஒருவர் ஏமாற்றும் செயலில் ஈடுபடும் இவர்களின் குற்ற உணர்வையும் இது பிரதிபலிக்கிறது. 

கண்களை மறைப்பதன் மூலம் இவர்களின் தனிமனித அடையாளங்கள் நீக்கப்பட்டு, இவர்கள் வெறும் தனிநபர்கள் அல்லாமல் தத்தமது சமூக வர்க்கத்தின் அடையாளங்களாகவே மாற்றப்பட்டுள்ளனர். 

ஏழைக் குடும்பம் இருண்ட நிலத்தடி வீட்டில் வசிப்பதைக் கறுப்பு நிறமும், பணக்காரக் குடும்பம் ஒளி நிறைந்த மாளிகையில் வசிப்பதை வெள்ளை நிறமும் குறியீடாக உணர்த்துகின்றன.

 இறுதியில், முதலாளித்துவ உலகில் மனிதர்கள் தங்களின் சுய அடையாளத்தை இழந்து வெறும் வர்க்கப் பிரதிநிதிகளாக மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை இந்தச் சுவரொட்டி விளக்குகிறது.

இத்திரைப்படத்தின் தலைப்பு உருவான விதம் ஒரு சுவாரசியமான பின்னணியைக் கொண்டது. கதை ஏழைக் குடும்பம் பணக்கார வீட்டிற்குள் ஊடுருவுவதைப் பற்றியது என்பதால் மார்க்கெட்டிங் குழுவினர் இத்தலைப்பைப் பயன்படுத்தத் தயங்கினர்.

 ஆனால் உழைப்பிற்காக ஏழைகளைச் சார்ந்து வாழும் பணக்காரர்களும் ஒரு வகையில் ஒட்டுண்ணிகளே என்று இயக்குநர் விளக்கி அவர்களைச் சம்மதிக்க வைத்தார். 

படத்திற்காக உருவாக்கப்பட்ட அந்தச் சொகுசு பங்களாவின் மாடிப் பகுதி முழுவதுமே விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தால் செதுக்கப்பட்டது. 

தரைத்தளம் மற்றும் தோட்டம் மட்டுமே திறந்தவெளியில் நிஜமாக அமைக்கப்பட்டு மற்ற இடங்கள் கிரீன் ஸ்கிரீன் முறையில் படமாக்கப்பட்டன.

படத்தின் படத்தொகுப்பு முறையிலும் ஒரு நுணுக்கமான உத்தி கையாளப்பட்டது. இயக்குநர் போங் ஜூன் ஹோ பாரம்பரியமான கவரேஜ் ஷாட்களைத் தவிர்த்துவிட்டு தேவையான காட்சிகளை மட்டுமே படமாக்கினார்.

 இதனால் படத்தொகுப்பாளர் யாங் ஜின் மோ ஒரே காட்சியின் வெவ்வேறு டேக்குகளை ஒன்றிணைத்து மிகக் கச்சிதமான இறுதி வடிவத்தைக் கொண்டு வந்தார். 

அவர் இப்படத்தைத் தொகுக்கப் பயன்படுத்தியது 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு அப்டேட் செய்யப்படாத ஃபைனல் கட் ப்ரோ 7  எனும் பழைய மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

 இப்படத்தின் கருப்பு வெள்ளைப் பதிப்பு சர்வதேசத் திரையிடலுக்கு முன்பே இயக்குநரால் தயார் செய்யப்பட்டு ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

படத்தில் வரும் அந்தப் பணக்கார வீட்டின் சுவர்களில் தொங்கும் ஓவியங்கள் தென்கொரியக் கலைஞர் சியுங் மோ பார்க் என்பவரால் இப்படத்திற்காகவே உருவாக்கப்பட்டவை.

 படத்தின் இறுதியில் வரும் மகன் கதாபாத்திரம் தனது தந்தையை மீட்க அந்த வீட்டை வாங்குவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று கணக்கிட்டபோது சுமார் 564 ஆண்டுகள் ஆகும் என்ற அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது. 

மேலும் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதில் காட்டப்பட்ட ஜப்பகுரி உணவின் பிரபலம் காரணமாக அதைத் தயாரிக்கும் நோம்ஷிம் நிறுவனம் அதே பெயரில் ஒரு புதிய தயாரிப்பையே சந்தையில் அறிமுகப்படுத்தியது. 

ஆஸ்கர் மேடையில் மார்ட்டின் ஸ்கார்செஸியின் புகழ்பெற்ற பொன்மொழியான "மிகவும் தனிப்பட்டதே மிகவும் ஆக்கபூர்வமானது" "The most unique is the most creative" என்பதை மேற்கோள் காட்டியதன் மூலம் ஒட்டுமொத்த உலகையுமே கொரிய சினிமா பக்கம் இயக்குநர் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தென் கொரியாவின் கோயாங்  மாநகராட்சி, படம் படமாக்கப்பட்ட அந்த அக்வா ஸ்டுடியோ செட்டை மீண்டும் உருவாக்கி, அதை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றத் திட்டமிட்டது. 

இதற்காக சுமார் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஏழ்மையைத் தங்களின் வணிக லாபத்திற்காகச் சுற்றுலாத் தலமாக மாற்றுவது அந்தப் பகுதியில் வாழும் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்றும், அவர்களை உயிரியல் பூங்காவில் இருக்கும் குரங்குகளைப் போலப் பார்ப்பதற்குச் சமம் என்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

 இதன் விளைவாக, அந்தப் பகுதியில் வசிக்கும் 1,500 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளிப்பதாக அறிவித்தது. 

ஒரு திரைப்படம் நிஜ வாழ்க்கையிலும் சமூக மாற்றத்திற்கான விவாதத்தை ஏற்படுத்தியதற்கு இது ஒரு சான்றாகும்.

 இப்படத்தின் திரைக்கதை 2013 ஆம் ஆண்டில் ஒரு நாடகமாக உருவகிக்கப்பட்டு பின்னர் பதினைந்து பக்கங்கள் கொண்ட ஒரு சுருக்கமான வரைவாக மாற்றப்பட்டது. 

இயக்குநர் போங் ஜூன் ஹோ தனது இருபதுகளில் ஒரு செல்வந்த குடும்பத்தில் பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமே இக்கதையின் கருவாக அமைந்தது. 

படத்தில் வரும் பணிப்பெண் மூன் குவாங்கிற்கு இருக்கும் பீச் பழ ஒவ்வாமை என்பது இயக்குநரின் கல்லூரித் தோழருக்கு இருந்த உண்மையான பாதிப்பை அடிப்படையாகக் கொண்டது.

 ஒளிப்பதிவாளர் ஹாங் கியுங் பியோ சூரிய வெளிச்சத்தின் திசையை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப ஜன்னல்களையும் அறைகளையும் அமைக்க வலியுறுத்தினார். இந்தப் பங்களா வெறும் அழகிற்காக மட்டுமல்லாமல் கேமரா கோணங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் அசைவுகளுக்கு வசதியாக 2.35:1 என்ற விகிதத்தில் அகலமான அறைகளைக் கொண்டு கட்டப்பட்டது.

 படத்தில் கிம் குடும்பத்தின் வீட்டைச் சூழும் பெருமழை மற்றும் வெள்ளக் காட்சிகளைப் படமாக்குவதற்காக அந்த அழுக்கான தெருவும் பாதி நிலத்தடி வீடும் பிரத்யேகமாக தண்ணீரைத் தேக்கும் வசதியுடன் செட் இடப்பட்டது.

திரைப்படத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில் தென் கொரிய கலாச்சாரத்தின் நுணுக்கங்களை உலகப் பார்வையாளர்களுக்குக் கடத்த மொழிபெயர்ப்பாளர் டார்சி பாக்கெட் பல மாற்றங்களைச் செய்தார்.

 கொரியாவின் சியோல் தேசியப் பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் என்றும் காகோ டாக் செயலிக்குப் பதிலாக வாட்ஸ்அப் என்றும் பெயர்களை மாற்றினார்.

 படத்தில் கிம் குடும்பத்தினர் செய்யும் ஜப்பகுரி  என்ற உணவை ராமன் மற்றும் உடோன் ஆகியவற்றை இணைத்து ராம் டான் என்று புதிய பெயரிட்டு அழைத்தார்.

 கூகுள் தேடலில் கூட கிடைக்காத இந்தப் பெயர் இப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானது.

இசை அமைப்பாளர் ஜங் ஜே இல் பெரும்பாலும் கணினி ஒலிகளைப் பயன்படுத்தி இப்படத்தின் பின்னணி இசையை உருவாக்கினார்.

 படத்தின் இறுதியில் வரும் சோஜு ஹான் ஜான் என்ற பாடலை இயக்குநர் போங் ஜூன் ஹோவே எழுதினார்.

 இதனை இப்படத்தில் மகனாக நடித்த சோய் வூ ஷிக் பாடியுள்ளார். 

உலகப் புகழ் பெற்ற இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி இப்படத்தைப் பாராட்டி இயக்குநருக்கு ஒரு கடிதம் எழுதியதோடு அவரது அடுத்த படைப்பிற்காகக் காத்திருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

============================
படத்தின் கதை:-

சியோல் மாநகரின் ஒரு குறுகிய பாதி நிலத்தடி வீட்டில்  தந்தை கி டேக் மற்றும் தாய் சுங் சூக் தங்களது மகள் கி ஜங் மற்றும் மகன் கி வூ ஆகியோருடன் வறுமையில் வாடி வருகிறார்கள்.

 நிலையான வருமானம் இன்றித் தவிக்கும் இந்த முழு குடும்பமும் பிட்சா அட்டைப்பெட்டிகளை மடித்துக் கொடுக்கும் மிகக் குறைந்த ஊதியம் தரும் வேலையைச் செய்து வருகிறார்கள்.

 அப்போது மகன் கி வூவின் நண்பன் மின் ஹியூக் ஒரு எடைமிகுந்த ஞானக் கல்லை இவர்களுக்கு  பரிசாக வழங்குகிறான், அது அவர்களுக்கு தரித்திரம் களைந்து பெரும் செல்வத்தை வழங்கும் என சொல்கிறான். 

மின் ஹியூக் தான் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதால் தான் பார்த்து வந்த ஆங்கிலப் பயிற்சியாளர் வேலையை நண்பன் கி வூவிடம் ஒப்படைக்கிறான்.

 செல்வந்தர்களான பார்க் குடும்பத்தின் மகள் தா ஹேவை மின் ஹியூக் விரும்புவதாலும் தான் திரும்பி வரும் வரை அவளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாலும் மகன் கி வூவை அந்த வேலைக்கு பரிந்துரைக்கிறான்.

மகள் கி ஜங் தயாரித்த போலிப் பல்கலைக்கழகச் சான்றிதழைப் பயன்படுத்தி யோன்செய் பல்கலைக்கழக மாணவர் கெவின் என்ற பெயரில் மகன் கி வூ அந்த ஆடம்பர வீட்டிற்குள் நுழைகிறான். 

அங்குள்ள தாய் சோய் யோன் கியோவின் நம்பிக்கையைப் பெற்று முதல் பாடத்தின் முடிவிலேயே பணியமர்த்தப்படுகிறான்.

 அங்கிருந்து கிம் குடும்பத்தினர் தங்களது உண்மையான அடையாளத்தை மறைத்து பார்க் குடும்பத்தின் ஒவ்வொரு பணியிலும் தங்களை நுழைக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். 

அதன்படி மகன் கி வூ தனது தங்கை கி ஜங்கை ஒரு கலை சிகிச்சை நிபுணராக ஜெசிகா என்ற பெயரில் அறிமுகம் செய்கிறான். 

பார்க் குடும்பத்தின் இளம் மகன் தா சாங் முன்பு ஒருமுறை சமையலறையில் ஒரு பேய் உருவத்தைக் கண்டு அதிர்ச்சியில்  இருப்பதை மகள் கி ஜங் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறாள்.

பின்னர் மகள் கி ஜங் ஒரு தந்திரத்தைச் செய்து பார்க் குடும்பத்தின் ஓட்டுநர் யூன் தங்கியிருந்த காரில் ஒரு பாலியல் செயல் நடைபெற்றது போன்ற தோற்றத்தை உருவாக்கி அவரை நீக்க வைக்கிறாள்.

 அந்த இடத்தில் தந்தை கி டேக் ஓட்டுநராகப் பணியமர்த்தப்படுகிறார். இறுதியாக அந்த வீட்டில் நீண்ட காலமாக வேலை பார்த்து வந்த வேலைக்காரி மூன் குவாங்கிற்கு இருக்கும் பீச் பழ ஒவ்வாமையைப் பயன்படுத்தி அவருக்குக் காசநோய்  இருப்பதாக நம்ப வைத்து அவரையும் வெளியேற்றுகிறார்கள்.

 அந்தப் பணிக்குத் தாய் சுங் சூக் நியமிக்கப்படுகிறார். அதே நேரத்தில் மகன் கி வூ பார்க் வீட்டு மகள் தா ஹேவுடன் ரகசியக் காதலில் ஈடுபடுகிறான்.

பார்க் குடும்பத்தினர் ஒருமுறை முகாமிற்குச்  சென்றிருக்கும்போது கிம் குடும்பத்தினர் அந்த வீட்டின் மதுபானங்களை அருந்தி அதன் சொகுசை அனுபவிக்கிறார்கள்.

 அப்போது திடீரென பழைய வேலைக்காரி மூன் குவாங் அங்கு வந்து தான் நிலவறையில் ஏதோ ஒன்றை மறந்துவிட்டதாகக் கூறி உள்ளே செல்கிறார். 

அங்கு அந்த வீட்டின் கட்டிடக் கலைஞர் மற்றும் முந்தைய உரிமையாளர் ரகசியமாக அமைத்த ஒரு நிலவறை இருப்பது வெளிப்படுகிறது.

 அதில் வேலைக்காரி மூன் குவாங்கின் கணவர் கியூன் சே பல ஆண்டுகளாகக் கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்து ஒளிந்து வாழ்ந்து வருகிறார்.

 அவர்தான் பார்க் வீட்டு மகன் தா சாங் உணவு திருட வெளியே வரும்போது பார்த்த அந்தப் பேய் உருவம் என்பதும் தெரியவருகிறது. 

பழைய வேலைக்காரி மூன் குவாங் தனது கணவரை அங்கேயே இருக்க அனுமதிக்குமாறு கெஞ்சுகிறார் ஆனால் கிம் குடும்பத்தினர் தவறுதலாகத் தங்களை ஒரே குடும்பத்தினர் என வெளிப்படுத்திக் கொள்ள வேலைக்காரி மூன் குவாங் அவர்களது உண்மையான அடையாளத்தைத் தனது கைபேசியில் படம்பிடித்து அவர்களை மிரட்டுகிறார்.

அப்போது பெருமழை காரணமாகப் பார்க் குடும்பத்தினர் திடீரென வீடு திரும்புகிறார்கள்.

 பதற்றமடைந்த கிம் குடும்பத்தினர் பழைய வேலைக்காரி மூன் குவாங் மற்றும் அவரது கணவர் கியூன் சேவைத் தாக்கி அந்த நிலவறையிலேயே தள்ளுகிறார்கள் இதில் வேலைக்காரி மூன் குவாங் தலையில் பலத்த காயமடைகிறார். 

கிம் குடும்பத்தினர் அங்கிருந்து தப்பிக்கும்போது சியோலில் பெய்த அதிகனமழையினால் அவர்களது பாதி நிலத்தடி வீடு சாக்கடை நீரால் மூழ்குகிறது.

 அவர்கள் ஒரு விளையாட்டு அரங்கில்  அகதிகளாகத் தஞ்சம் புகுகிறார்கள்.

 மறுநாள் பார்க் குடும்பம் தங்களது மகனுக்காகத் தோட்டத்தில் ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்துகிறது.

அங்கு நிலவறையிலிருந்து தப்பி வரும் வேலைக்காரியின் கணவர் கியூன் சே அந்த ஞானக் கல்லால் மகன் கி வூவைத் தலையில் அடித்துவிட்டு தோட்டத்தில் இருக்கும் மகள் கி ஜங்கை சமையலறை கத்தியால் குத்துகிறார்.

 மீண்டும் பேயைப் பார்த்த பார்க் வீட்டு மகன் தா சாங் மீண்டும் அதிர்ச்சியில் மயங்குகிறான்.

 ஒரு போராட்டத்திற்குப் பிறகு தாய் சுங் சூக் வேலைக்காரியின் கணவர் கியூன் சேவை ஒரு பார்பிக்யூ கம்பியால்  குத்திக் கொல்கிறார். 

தன் மகள் கி ஜங் உயிருக்குப் போராடுவதைக் கண்டு தந்தை கி டேக் கதறுகிறார் ஆனால் பார்க் டோங் இக் அதைக் கண்டு கொள்ளாமல் மயங்கி விழுந்த தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லச் சொல்லி தந்தை கி டேக்கை ஓட்டுநராக அதிகாரம் செய்கிறார். 

மேலும் இறந்த கியூன் சேவின் உடலுக்குக் கீழே இருந்த காரின் சாவியை எடுக்கும்போது அவரது உடலிலிருந்து வரும் ஏழ்மையின் நாற்றத்தைப் பார்த்து மூக்கை மூடி அருவருப்படைகிறார். 

இதைக் கண்ட தந்தை கி டேக் ஆத்திரத்தில் பார்க் டோங் இக்கை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடுகிறார்.

சில வாரங்களுக்குப் பிறகு மகன் கி வூ மூளை அறுவை சிகிச்சையில்  பிழைக்கிறான்.

 மகன் கி வூவும் அவனது தாய் சுங் சூக்கும் ஏமாற்று வேலைக்காகக் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்கள்.

 மகள் கி ஜங் இறந்துவிடுகிறாள். தலைமறைவான தந்தை கி டேக் அந்த ரகசிய நிலவறையிலேயே தங்கி விளக்குகள் மூலம் மோர்ஸ் குறியீட்டில்  செய்திகளை அனுப்புகிறார். 

அங்கு நிலவறையில் தலையில் அடிபட்டு இறந்த பழைய வேலைக்காரி மூன் குவாங்கைத் தோட்டத்திலேயே புதைத்துவிட்டதை அவர் மகனிடம் தெரிவிக்கிறார். 

மகன் கி வூ தான் ஒருநாள் பெரிய பணக்காரனாகி அந்த வீட்டை விலைக்கு வாங்கித் தன் தந்தையை விடுவிப்பேன் என்று வறுமையான தனது பழைய பாதி நிலத்தடி வீட்டிலிருந்து ஒரு கடிதம் எழுதுவதோடு இப்படம்  நிறைகிறது.

இத்திரைப்படம் சமூகத்தின் இருவேறு துருவங்களாக இருக்கும் வர்க்கப் பிரிவினையைப் பற்றிய ஒரு கசப்பான உண்மையை உரக்கச் சொல்கிறது.

 ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல அது அவர்கள் சுவாசிக்கும் காற்றிலும் வாழும் இடத்தின் உயரத்திலும் படிந்திருக்கிறது என்பதை அழுந்த உரைக்கிறது. 

கிம் குடும்பத்தினர் வாழும் பாதி நிலத்தடி வீடும் பார்க் குடும்பத்தினர் வாழும் மேட்டுநில பங்களாவும் சமூக அந்தஸ்தின் படிநிலையைக் காட்டுகின்றன. 

குறிப்பாகப் பணக்கார வர்க்கம் ஏழைகளின் உழைப்பைச் சுரண்டினாலும் அவர்களின் இருப்பை ஒருவித அருவருப்புடனேயே அணுகுகிறது என்பதை இப்படத்தில் வரும் ஏழ்மையின் வாடை குறித்த காட்சிகள் அழுத்தமாகப் பதிவு செய்கின்றன.

 இப்படத்தின் தலைப்பு குறிப்பிடும் ஒட்டுண்ணித்தனம் என்பது இரு தரப்பிற்குமே பொருந்துகிறது. ஏழைகள் வாழ்வாதாரத்திற்காகப் பணக்காரர்களைச் சார்ந்து இருக்கும் அதே வேளையில் பணக்காரர்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்கும் அன்றாடப் பணிகளுக்கும் ஏழைகளின் உழைப்பைச் சார்ந்து ஒட்டுண்ணிகளாகவே இருக்கிறார்கள். 

ஆனால் இந்தச் சங்கிலித் தொடரில் அதிகாரம் எப்போதும் ஒரு தரப்பிடம் மட்டுமே குவிந்திருக்கிறது. 

 சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் மக்கள் தங்களது பொதுவான எதிரியான வர்க்கப் பிரிவினையை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாகத் தங்களுக்குள் இருக்கும் ஒரு சிறு இடத்தைப் பிடிப்பதற்காக நிலவறையிலும் நிலத்தடியிலும் அடித்துக் கொள்கிறார்கள்.

 இந்த ஏழைகளுக்கு இடையிலான மோதல் இறுதியாகப் பெரும் அழிவிலேயே முடிகிறது.
இறுதியாக எந்தத் திட்டமும் போடாமல் இருப்பதே சிறந்த திட்டம் என்கிற படத்தின் தத்துவம் ஏழைகளின் திட்டங்கள் எப்போதுமே நிதர்சனமான எதார்த்தத்தால் சிதைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறது. 

மகன் கி வூ தான் ஒருநாள் அந்த வீட்டை விலைக்கு வாங்கித் தன் தந்தையை மீட்பேன் என்று கனவு கண்டாலும் அவனது தற்போதைய நிலை வறுமை நிறைந்த அதே பாதி நிலத்தடி வீடாகவே இருக்கிறது. 

இது ஏழைகள் தங்களது வர்க்கச் சுவரைத் தாண்டி மேலே வருவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பதையும் சமூகக் கட்டமைப்பு அவர்களை மீண்டும் மீண்டும் அதே இடத்திற்கே தள்ளுகிறது என்பதையும் ஒரு தீராத வலியாக இப்படம் உணர்த்துகிறது.

டாய் ஸ்டோரி 4 Toy Story 4 (2019)

பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான "டாய் ஸ்டோரி 4 ".

இப்படைப்பு முந்தைய பாகங்களின் உணர்ச்சிகரமான தொடர்ச்சியாக மட்டுமன்றி பொம்மைகளின் இருப்பியல் குறித்த புதிய தேடலாகவும் அமைந்தது.

 ஆண்டியிடமிருந்து போனி எனும் சிறுமிக்கு கைமாறிய பொம்மைகளின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை மையப்படுத்தும் இத்திரைப்படம் அனிமேஷன் உலகில் ஒரு மேதமை மிக்க படைப்பாகக் கருதப்படுகிறது.

 குப்பையிலிருந்து உருவான போர்க்கி எனும் கதாபாத்திரம் தன்னை ஒரு பொம்மையாக ஏற்க மறுப்பதும் வுடி அதற்கு வாழ்வின் உன்னதத்தைப் புரிய வைப்பதும் உலக சினிமா தரத்திலான ஆழமான திரைக்கதைக்கு சான்றாகும்.

இத்திரைப்படத்தின் அடிநாதம்  ஒரு கருவி அதன் பயன்பாடு முடிந்த பிறகு தேவையற்றதாக மாறும் தருணத்தில் எதிர்கொள்ளும் மனப்போராட்டம் மற்றும் சுய அடையாளத்தைக் கண்டடைவதாகும். 

முந்தைய பாகங்களில் ஒரு பொம்மையின் வாழ்நாள் நோக்கம் என்பது குழந்தையை மகிழ்விப்பது மட்டுமே என நிறுவப்பட்டிருந்தது. 

ஆனால் இப்படத்தில் அந்த வரையறை உடைக்கப்பட்டு உரிமையாளர் இல்லாத பொம்மைகளும் அர்த்தமுள்ள வாழ்வை வாழ முடியும் எனும் புதிய தத்துவம் முன்வைக்கப்படுகிறது.

ஆண்டியிடம் ஒரு நாயகனாக இருந்த வுடி போனியிடம் வரும்போது ஓரங்கட்டப்படுவதை ஏற்க முடியாமல் தவிக்கிறான்.

 போர்க்கி எனும் கதாபாத்திரம் தன்னை ஒரு குப்பை என்று கருதுவதும் வுடி அதை ஒரு பொம்மையாக மாற்ற முயல்வதும் ஒருவரது மதிப்பு என்பது மற்றவர் கொடுப்பதல்ல நமக்கான அடையாளத்தை நாமே தீர்மானிப்பது என்பதை உணர்த்துகிறது. 

போ பீப்பின் வருகை வுடிக்கு ஒரு மிகப்பெரிய திறப்பாக அமைகிறது. ஒரு சிறு அறைக்குள் அடைபட்டுக் கிடப்பதை விட பரந்த உலகில் யாருக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக வாழ்வதும் மற்றவர்களுக்கு உதவுவதும் உன்னதமான வாழ்வு என்பதை வுடி உணரும் இடமே கதையின் மையம்.

பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியேறி நிச்சயமற்ற  சுதந்திரமான வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் வுடியின் முடிவு கடமைக்கும் விருப்பத்திற்கும் இடையிலான போராட்டத்தின் உச்சம். 

விசுவாசம்  ஒரு மனிதரிடம் அல்லது ஒரு குழந்தையிடம் மட்டும் காட்டும் ஒன்றல்ல அது நம் மனசாட்சிக்கும் நாம் வாழும் வாழ்க்கைக்கும் காட்டும் உண்மைத்தன்மை என்பதை இப்படம் ஆழமாகப் பேசுகிறது. 

இறுதியில் தன் பழைய நண்பர்களைப் பிரிந்து போ பீப்புடன் வுடி இணையும் காட்சி ஒரு முடிவல்ல அது அவனது வாழ்வின் புதியதொரு தொடக்கமாக இருக்கிறது.

ஜோஷ் கூலி இப்படத்தை மிக நேர்த்தியாக இயக்கியுள்ளார். ஜான் லாசெட்டர் மற்றும் ஆண்ட்ரூ ஸ்டாண்டன் ஆகியோரின் கதைக்கருவை சிதையாமல் செதுக்கி பழைய மற்றும் புதிய கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவை சமன்படுத்தியதில் இயக்குநரின் பங்கு முக்கியமானது.

 ஒளிப்பதிவாளர்கள் பேட்ரிக் லின் மற்றும் ஜீன் கிளாட் கலாச்சே ஆகியோரின் நுட்பமான காட்சி அமைப்பு மழையில் நனையும் காட்சிகள் மற்றும் பழங்கால பொருட்கள் விற்கும் கடையின் உட்புறங்களில் ஒளியின் தத்ரூபத்தை மிகச்சரியாகப் பிரதிபலித்தன.

டாம் ஹாங்க்ஸ் மற்றும் டிம் ஆலன் ஆகியோரின் குரல்கள் வுடி மற்றும் பஸ் லைட்டியர் கதாபாத்திரங்களுக்கு ஆன்மாவாகத் திகழ்ந்தன.

 அன்னி பாட்ஸ் குரலில் போ பீப் கதாபாத்திரம் ஒரு வலிமையான சுதந்திரமான ஆளுமையாக உருவெடுத்தது.

 மறைந்த நடிகர் டான் ரிக்லெஸின் குரலை பழைய பதிவுகளிலிருந்து எடுத்து மிஸ்டர் பொட்டேட்டோ ஹெட் கதாபாத்திரத்திற்குப் பயன்படுத்தியது தொழில்நுட்ப ரீதியான ஒரு மாபெரும் முயற்சி. 

கீனு ரீவ்ஸ் மற்றும் டோனி ஹேல் போன்றோரின் குரல் பங்களிப்பு நகைச்சுவையையும் உணர்ச்சியையும் சரிவிகிதத்தில் வழங்கியது.

ரேன்டி நியூமேன் தனது இசையமைப்பின் மூலம் இப்படத்தின் ஒவ்வொரு கணத்தையும் அழகாக்கினார்.

 தி பேலட் ஆஃப் தி லோன்சம் கவுபாய் போன்ற பாடல்கள் கதையின் ஆழத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தன. 

2019 ஜூன் மாதம் வெளியான இப்படம் ஒரு பில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூலித்து உலக அளவில் சாதனை படைத்தது. 

92வது அகாடமி விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றதோடு அன்னி விருதுகள் மற்றும் கோல்டன் குளோப் போன்ற கௌரவங்களையும் பெற்று அனிமேஷன் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிலைத்து நிற்கிறது.

 இப்படத்தின் திரைக்கதை எழுதும் பணி 2010 ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட நிலையில் இயக்குனர் ஜான் லாசெட்டர் இதனை ஒரு காதல் கதையாக உருவாக்கத் திட்டமிட்டிருந்தார். 

பின்னர் ஜோஷ் கூலி இயக்குனராகப் பொறுப்பேற்றபோது வுடி மற்றும் போ பீப் இடையிலான உறவை மறுசீரமைத்து கதையின் மையக்கருவை மாற்றியமைத்தார். 

முந்தைய பாகத்தில் போ பீப் கதாபாத்திரம் இடம்பெறாத நிலையில் அதன் பின்னணியை விளக்க லாம்ப் லைஃப் எனும் குறுந்திரைப்படம் தனியாக உருவாக்கப்பட்டது.

நடிகர் டான் ரிக்லெஸ் இப்படத்தின் குரல் பதிவு தொடங்கும் முன்பே 2017 இல் மறைந்துவிட்ட போதிலும் மிஸ்டர் பொட்டேட்டோ ஹெட் கதாபாத்திரத்தை அவர் மூலமே உயிர்ப்பிக்க பிட்சார் நிறுவனம் முடிவு செய்தது.

 இதற்காக கடந்த 25 ஆண்டுகளில் அவர் பங்கேற்ற திரைப்படங்கள் மற்றும் இதர ஊடகங்களில் இடம்பெற்ற பயன்படுத்தப்படாத குரல் பதிவுகளைத் தேடி எடுத்து இப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

 இப்படத்தின் இறுதியில் வரும் ஒரு முக்கிய காட்சி மிக உணர்ச்சிகரமாக இருந்ததால் டாம் ஹாங்க்ஸ் மற்றும் டிம் ஆலன் ஆகியோரால் அந்த வசனங்களைப் பேசும்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

பல்லாண்டு காலமாக பிக்ஸார் அனிமேஷன் திரைப்படங்களுக்கு முன்னால் ஒரு குறும் படம் திரையிடப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் 1995 ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்திற்குப் பிறகு குறும் படம் இன்றி உலகளவில் வெளியான முதல் பிக்ஸார் திரைப்படம் இதுவாகும்.

 இதற்கான உழைப்பு மற்றும் மனித வளத்தை முதன்மைத் திரைப்படத்திற்காகப் பயன்படுத்தியதே இதற்கு காரணமாகும். கீனு ரீவ்ஸ் இப்படத்தில் டியூக் கபூம் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்ததுடன் அதன் உடல் அசைவுகள் மற்றும் வசன உச்சரிப்புகளை உருவாக்குவதிலும் பெரும் பங்களிப்பை வழங்கினார்.

இசை அமைப்பாளர் ரேன்டி நியூமேன் டியூக் கபூம் கதாபாத்திரத்தின் இசைக்காக அக்கார்டியன் மற்றும் மாண்டலின் போன்ற வாத்தியங்களைப் பயன்படுத்தி அதன் பின்னணியில் உள்ள ஏமாற்றத்தை இசையில் பிரதிபலித்தார். 

2019 ஆம் ஆண்டில் டிஸ்னி நிறுவனத்தால் ஒரு பில்லியன் டாலர் வசூலைக் கடந்த ஐந்தாவது திரைப்படமாக இது வரலாற்றுச் சாதனை படைத்தது. 

இறுதியில் வுடி தனது நண்பர்களிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் காட்சி ஒரு வரலாற்றுத் தருணமாகப் படக்குழுவினரால் கருதப்படுகிறது.

 இப்படத்தின் திரைக்கதை எழுதும் பணியில் ஸ்டெபானி போல்சம் இணைந்த பிறகு முந்தைய எழுத்தாளர்களான ரஷிதா ஜோன்ஸ் மற்றும் வில் மெக்கார்மாக் எழுதிய மூலக்கதையின் முக்கால்வாசிப் பகுதியை அவர் முற்றிலுமாக மாற்றியமைத்தார். 

வுடியின் கதாபாத்திர வளர்ச்சியில் ஒரு முழுமையை எட்ட வேண்டும் என்ற நோக்கில் ஜான் லாசெட்டர் இப்படத்தின் ரகசியத்தை பிட்சார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் கூட அதன் முழுமையான வடிவம் உருவாகும் வரை பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் அறிமுகமான போர்க்கி கதாபாத்திரத்திற்காக நடிகர் டோனி ஹேல் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர் ஏற்கனவே நடித்த பதற்றமான கதாபாத்திரங்களின் குரல் வளமே முக்கிய காரணமாக அமைந்தது. 

அதேபோல் போனி கதாபாத்திரத்திற்கு கடந்த பாகங்களில் குரல் கொடுத்த எமிலி ஹானுக்கு பதிலாக கார்ஸ் 3 திரைப்படத்தில் பணியாற்றிய மேடலின் மெக்ரா புதிய குரலாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

 வுடிக்கு வாழ்வின் அடுத்த கட்டத்தைப் புரியவைக்கும் அனுபவம் வாய்ந்த பொம்மைகளாக மெல் ப்ரூக்ஸ் மற்றும் கரோல் பர்னெட் போன்ற பழம்பெரும் நகைச்சுவை கலைஞர்கள் கார்ல் ரெய்னர் மற்றும் பெட்டி ஒயிட் ஆகியோருடன் இணைந்து குரல் கொடுத்தனர்.

தொழில்நுட்ப ரீதியாக டியூக் கபூம் கதாபாத்திரத்தின் தோற்றம் புகழ்பெற்ற ஸ்டண்ட் கலைஞர் ஈவில் க்னீவலின் சாயலைக் கொண்டுள்ளதாகக் கூறி சட்டரீதியான சிக்கல்கள் எழுந்தன. 

இருப்பினும் நீதிமன்றம் இது அனிமேஷன் கலைஞர்களின் தனித்துவமான படைப்பு என தீர்ப்பளித்து அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

 இப்படத்தின் இறுதிப் பகுதியில் வரும் ஒரு சிறிய காட்சியில் ஓரினச்சேர்க்கை தம்பதியினர் காட்டப்பட்டது சில அமெரிக்க அமைப்புகளிடையே விவாதங்களை உருவாக்கியது.

வசூல் ரீதியாக இப்படம் வட அமெரிக்காவில் மட்டும் தி லயன் கிங் திரைப்படத்தின் சாதனையை முறியடித்து அதிக வசூல் செய்த ஜி ரேட்டிங் திரைப்படமாக உருவெடுத்தது. 

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு போர்க்கி கதாபாத்திரத்தை மையமாக வைத்து அதன் தேடல்களை விளக்கும் விதமாக பத்து எபிசோடுகள் கொண்ட கல்வி சார்ந்த தொடர் ஒன்றும் தனியாக வெளியிடப்பட்டது.

 இறுதியாக இப்படம் மறைந்த நடிகர் டான் ரிக்லெஸ் மற்றும் அனிமேட்டர் ஆடம் பர்க் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் இயக்குனர் ஜோஷ் கூலி ஒரு புதிய சவாலை எதிர்கொண்டார். 

வுடி கதாபாத்திரத்தின் மனநிலையைத் துல்லியமாகப் பிரதிபலிக்க ஒரு புதிய இயக்குனராகத் தான் உணர்ந்த அதே நிச்சயமற்ற தன்மையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் உத்வேகமாகப் பயன்படுத்தினார்.

 இப்படத்திற்கான குரல் பதிவுகள் 2018 செப்டம்பர் மாதம் தொடங்கி 2019 ஜனவரி வரை நீடித்தன. 25 ஆண்டுகளுக்கு மேலான பிக்ஸார் வரலாற்றில் ஒரு பொம்மையின் குரலை உருவாக்க இவ்வளவு பெரிய கால இடைவெளியில் சேகரிக்கப்பட்ட காப்பகத் தரவுகள் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

படத்தின் விளம்பர வணிக ரீதியான வெற்றியில் டிக்கெட் முன்பதிவு ஒரு புதிய மைல்கல்லை எட்டியது. டிக்கெட் விற்பனை தளமான ஃபேன்டாங்கோவில் முதல் 24 மணிநேரத்தில் அதிக டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த அனிமேஷன் திரைப்படம் எனும் சாதனையை இது படைத்தது. 

இது அதற்கு முந்தைய சாதனையான இன்க்ரெடிபிள்ஸ் 2 படத்தின் எண்ணிக்கையை விடவும் 50 சதவீதம் அதிகமாகும்.

 இப்படத்தின் ஒட்டுமொத்த லாபம் விளம்பரம் மற்றும் இதர செலவுகள் போக சுமார் 368 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் வரும் கார்னிவல் காட்சிகளில் இடம்பெறும் டக்கி மற்றும் பன்னி கதாபாத்திரங்களுக்கு கீகன் மைக்கேல் கீ மற்றும் ஜோர்டான் பீல் ஆகியோர் வழங்கிய நகைச்சுவை உரையாடல்கள் கதையின் ஓட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றன.

 ஒளிப்பதிவில் பயன்படுத்தப்பட்ட துல்லியம் மற்றும் கதாபாத்திரங்களின் அசைவுகள் 2019 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த பிளாக்பஸ்டர் பட்டியலில் இப்படத்தை ஆறாவது இடத்திற்கு உயர்த்தியது.

 ஜப்பான் மற்றும் ஐக்கிய ராஜ்யம் போன்ற நாடுகளில் இப்படம் அனிமேஷன் வரலாற்றில் இன்றுவரை ஒரு வலுவான வணிக இடத்தைத் தக்கவைத்துள்ளது.

இந்த பாகத்துடன் வுடியின் பயணம் ஒரு முடிவை எட்டியதாகக் கருதப்பட்டாலும் இதன் தொடர்ச்சியாக ஐந்தாவது பாகம் 2026 ஜூன் 19 அன்று வெளியாக உள்ளது.

 இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு புதிய கதாபாத்திரமும் வுடியின் பழைய உலகத்தைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தன. 

ஒரு தற்செயலான குப்பை பொம்மையிலிருந்து தொடங்கி வுடியின் விடுதலை வரை பயணிக்கும் இந்தத் திரைக்கதை அனிமேஷன் திரையுலகில் ஒரு மிகச்சிறந்த முடிவாகப் பார்க்கப்படுகிறது.

==============

படத்தின் கதை:-

ஒரு பொம்மையின் நோக்கம் தன் எஜமானனாகிய குழந்தையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான். 

ஆனால் அந்தப் பொம்மை பழையதாகிவிட்டால் அல்லது அந்தக் குழந்தைக்கு அந்தப் பொம்மை பிடிக்காமல் போய்விட்டால் அந்தப் பொம்மையின் நிலை என்ன? இதுதான் இந்தக் கதையின் அடிப்படை.

இந்தக் கதை வுடி (டாம் ஹாங்க்ஸ்) என்ற ஒரு பொம்மை வீரனைப் பற்றியது. பொதுவாகப் பொம்மைகள் என்றால் குழந்தைகளுக்கு விளையாடப் பயன்படும் ஒரு பொருள். 

ஆனால், இந்தக் கதையில் பொம்மைகளுக்கு உயிர் இருக்கிறது, அவற்றுக்கென உணர்ச்சிகள் இருக்கின்றன. ஒரு குழந்தையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே ஒரு பொம்மையின் வாழ்நாள் லட்சியம்.

கதையின் தொடக்கத்தில், வுடியின் உயிர்த்தோழியான போ பீப் (ஆனி பாட்ஸ்) என்ற பொம்மை, வேறொருவருக்குத் தானமாக வழங்கப்பட்டு வுடியைப் பிரிந்து செல்கிறது.

 காலங்கள் மாறுகிறது, வுடியின் பழைய எஜமானன் ஆண்டி (ஜான் மோரிஸ்) வளர்ந்து கல்லூரிக்குச் சென்றதால், தனது பொம்மைகளை போனி (மேட்லைன் மெக்ரா) என்ற சிறுமிக்குக் கொடுத்துவிடுகிறான்.

போனிக்கு வுடியை விட, அவள் கையால் செய்த போர்க்கி (டோனி ஹேல்) என்ற பொம்மையைப் பிடித்துப் போகிறது. 

இது ஒரு பிளாஸ்டிக் ஃபோர்க் ஸ்பூனால் செய்யப்பட்ட பொம்மை. ஆனால் போர்க்கி தன்னை ஒரு பொம்மையாக நினைக்காமல், ஒரு குப்பை என்று நினைத்துத் தப்பியோட முயல்கிறது. 

போனி வருத்தப்படக் கூடாது என்பதற்காக, வுடி அந்தப் போர்க்கியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறான்.

ஒரு பயணத்தின் போது போர்க்கி காணாமல் போக, அதைத் தேடிச் செல்லும் வுடி, பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த தனது தோழி போ பீப்பைச் சந்திக்கிறான். 

அவள் இப்போது யாரிடமும் அடிமையாக இல்லாமல், காடு மேடெல்லாம் சுற்றித் திரியும் ஒரு சுதந்திரமான பொம்மையாக இருக்கிறாள்.

 இவர்களுடன் கிகில் மெக்டிம்பிள்ஸ் (அலி மகி) மற்றும் டியூக் கபூம் (கீனு ரீவ்ஸ்) போன்ற புதிய நண்பர்களும் இணைகிறார்கள்.

வழியில் கேபி கேபி (கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ்) என்ற ஒரு பொம்மை வுடியின் குரல் பெட்டியைத் திருட முயல்கிறது. 

கேபியின் நோக்கம் தீயது அல்ல, அவளது குரல் பெட்டி பழுதடைந்ததால், அதைச் சரிசெய்து ஒரு குழந்தையிடம் அன்பு பெற வேண்டும் என்பதே அவளது ஆசை.

 இதைப் புரிந்துகொண்ட வுடி, ஒரு கட்டத்தில் தனது குரல் பெட்டியையே அவளுக்குத் தியாகம் செய்கிறான். 

கேபி கேபி இறுதியில் ஒரு குழந்தையிடம் அடைக்கலமாகிறாள்.
கதையின் இறுதியில், எல்லாப் பொம்மைகளும் தங்களது எஜமானி போனியின் வீட்டுக்குத் திரும்புகின்றன. 

ஆனால் வுடி ஒரு முக்கியமான முடிவை எடுக்கிறான். இத்தனை காலம் மற்றவர்களுக்காக வாழ்ந்த வுடி, இப்போது தனது தோழி போ பீப்புடன் இணைந்து ஒரு சுதந்திரமான பொம்மையாக வாழ முடிவெடுக்கிறான்.

அவன் தனது பழைய நண்பர்களான பஸ் லைட்டியர் (டிம் ஆலன்), ஜெஸ்ஸி (ஜோன் குசாக்), ரெக்ஸ் (வாலஸ் ஷான்) மற்றும் பிற தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, எஜமானர் இல்லாத, ஆதரவற்ற பொம்மைகளுக்கு உதவி செய்யும் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறான்.

 இதற்கிடையே போனி தனது வீட்டில் கத்தி ஒன்றைக் கொண்டு போர்க்கிக்கு ஒரு ஜோடியை உருவாக்குகையில் படம் நிறைகிறது.

இப்படம் சொல்லும் செய்தி ஆழமானது மற்றும் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடையது. ஒரு கட்டத்தில் நாம் மிகவும் நேசித்த ஒரு உறவோ அல்லது நமக்கான முக்கியத்துவமோ குறையும்போது, அதை வருத்தத்துடன் பிடித்து வைத்துக் கொள்ளாமல் பக்குவமாக ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வதே வாழ்க்கை என்பதை வுடியின் கதாபாத்திரம் வழியாக இந்தப் படம் உணர்த்துகிறது.

 மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதவை என்பதையும், பழைய கதவு அடைக்கப்படும்போது புதிய கதவுகள் திறக்கும் என்பதையும் இது அழகாக விளக்குகிறது.

மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகச் செயல்படுவதில் ஒரு உன்னதம் இருப்பதை போர்க்கி மற்றும் வுடியின் உறவு காட்டுகிறது. 

தன்னைத் தேவையற்ற குப்பை என்று கருதும் ஒரு பொருளுக்குக் கூட இந்த உலகில் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதையும், மற்றவர்களுக்குப் பயன்படும்போதுதான் ஒரு உயிருக்கான முழுமையான மதிப்பு கிடைக்கிறது என்பதையும் படம் வலியுறுத்துகிறது. 

ஒரு தலைவனாக வுடி தனது சுயநலத்தை விட மற்றவர்களின் நலனுக்காக எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தியாகத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.

சுதந்திரம் மற்றும் சுய அடையாளத்தின் அவசியத்தை போ பீப்பின் வாழ்க்கை முறை நமக்குச் சொல்கிறது. 

ஒருவருக்குக் கட்டுப்பட்டு வாழ்வது மட்டுமே வாழ்க்கை அல்ல, யாருடைய தயவும் இன்றித் தனித்து நின்று உலகிற்குத் தொண்டு செய்வதிலும் ஒரு பெரும் நிம்மதி இருக்கிறது என்பதை அவள் வுடிக்குக் கற்றுத் தருகிறாள்.

 இது வழக்கமான சட்டதிட்டங்களை உடைத்து, நமக்கான புதிய பாதையை நாமே உருவாக்கிக் கொள்வதற்கான தூண்டுதலை அளிக்கிறது.

 எவரையும் அவரது குறைகளை வைத்து எடைபோடக் கூடாது என்ற செய்தியை கேபி கேபி கதாபாத்திரம் மூலம் நாம் அறியலாம். 

அன்பு கிடைக்காத ஏக்கத்தில் ஒருவன் செய்யும் தவறுகளுக்குப் பின்னால் இருக்கும் வழியைப் புரிந்துகொண்டு, அவனுக்குத் தியாகம் செய்து உதவுவதே உண்மையான மனிதநேயம்.

 நட்பு என்பது பிரிவே இல்லாத ஒன்றல்ல, நண்பனின் கனவு நனவாக வேண்டும் என்பதற்காக அவனை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைப்பதும் நட்பின் ஒரு சிறந்த இலக்கணம் என்பதை வுடி மற்றும் பஸ் லைட்டியரின் விடைபெறுதல் நமக்குக் கற்பிக்கிறது.

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் Once Upon a Time in Hollywood 2019

2019 ஆம் ஆண்டு வெளியான குவெண்டின் டாரான்டினோவின் ஒன்பதாவது படைப்பு "ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்" .

இது 1969ஆம் ஆண்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை அப்படியே திரையில் மீட்டுருவாக்கம் செய்த ஒரு கலைப் பொக்கிஷமாகும்.
இயக்குநர் க்வென்டின் டாரான்டினோவின் திரைமொழியில் 'வரலாற்றை மாற்றி எழுதுதல்' என்பது ஒரு மிக முக்கியமான உத்தி.

இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் அவர் உருவாக்கிய இனப்படுகொலை சார்ந்த இங்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் என்ற முந்தைய படத்திற்கும், இந்தப் படத்திற்கும் இடையே ஒரு ஆழமான கருத்தியல் ஒற்றுமை நிலவுகிறது.

 இரண்டுமே நிஜ வரலாற்றில் நடந்த ஆறாத வடுக்களை, சினிமா எனும் மாயக்கண்ணாடியின் மூலம் குணப்படுத்த முயல்கின்றன. நிஜத்தில் துயரமாக முடிந்த சம்பவங்களை, திரையில் ஒரு வெற்றிகரமான நீதியாக மாற்றுவதே இந்த இரண்டு படைப்புகளையும் இணைக்கும் முதன்மையான பாலம்.

நிஜ வரலாற்றில் ஹிட்லரின் நாஜிப் படைகள் செய்த கொடுமைகளும், ஹாலிவுட்டில் மேன்சன் கும்பல் நிகழ்த்திய படுகொலையும் மனிதகுல வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள். 

இந்த இரண்டு படங்களிலுமே இயக்குநர் அந்த வரலாற்றைச் சிதைக்காமல், அதன் போக்கை மட்டும் தனது கற்பனையால் திசைமாற்றுகிறார். 

ஒரு படத்தில் சர்வாதிகாரிகள் ஒரு திரையரங்கிற்குள் கொல்லப்படுவது போலவும், இந்தப் படத்தில் கொலையாளிகள் ஒரு நடிகரின் வீட்டிலேயே முறியடிக்கப்படுவது போலவும் காட்டியிருப்பது, 'சினிமா நீதி' எனப்படும் ஒருவிதமான மனநிறைவை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

இரண்டு படைப்புகளிலுமே 'சினிமா' என்பது ஒரு ஆயுதமாகவே உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நாஜிக்களை அழிக்க எரியும் ஃபிலிம் சுருள்கள் பயன்படுவது போல, இந்தப் படத்தில் ஒரு காலத்தில் சினிமாவில் பயன்படுத்தப்பட்ட நெருப்பு உமிழும் கருவி ஃபிளேம்த்ரோவர் நிஜமான தீயவர்களை அழிக்கப் பயன்படுகிறது. 

 சினிமா கலைஞர்களும் அவர்கள் சார்ந்த கருவிகளுமே வரலாற்றின் வில்லன்களை வீழ்த்தும் வீரர்களாக இங்கே உருவெடுக்கிறார்கள். 

இது சினிமா என்ற ஊடகத்தின் மீது இயக்குநர் கொண்டுள்ள எல்லையற்ற காதலையும் நம்பிக்கையையும் காட்டுகிறது.

பார்வையாளர்களின் மனநிலையோடு விளையாடும் அந்த 'பதற்றமான சூழல்' இரண்டு படங்களிலும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும்.

 நிஜத்தில் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும் என்பதால், திரையில் அந்த ஆபத்தான தருணங்கள் வரும்போது நாம் மிகுந்த அச்சத்துடன் காத்திருப்போம்.

 ஆனால், அந்தப் பயங்கரமான இறுதி முடிவை இயக்குநர் மாற்றி அமைக்கும்போது, ஒருவிதமான நிம்மதி பிறக்கிறது. 

துயரமான உண்மையை விட, அழகான கற்பனையே சிறந்தது என்பதை இந்த இரண்டு படங்களுமே உரக்கச் சொல்கின்றன.

வன்முறையை ஒரு அவல நகைச்சுவை உணர்வுடன்  கையாள்வது இயக்குநரின் தனிப்பாணி. தீயவர்கள் தாங்கள் செய்த வினைக்கேற்ப மிகக் கொடூரமாகவும், அதே சமயம் சற்று வேடிக்கையாகவும் தண்டிக்கப்படுவதை இரண்டு படங்களிலுமே காணலாம்.

 வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிக்கு, கலையின் மூலம் ஒரு படைப்பாளி வழங்கும் இந்த 'கவித்துவப் பழிவாங்கல்' தான் இரண்டு படங்களையும் ஒரே புள்ளியில் இணைக்கும் மிக முக்கியமான ஒற்றுமை. 

ஒரு இனத்தின் வலியையோ அல்லது ஒரு தனிமனிதரின் இழப்பையோ சினிமா எனும் கால இயந்திரத்தால் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கையே இவற்றின் அடிநாதம்.

சினிமாத் துறையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தனது செல்வாக்கை இழந்து வரும் ரிக் டால்டன் எனும் நடிகருக்கும் அவருக்கு நிழலாக விளங்கும் ஸ்டண்ட் கலைஞர் கிளிஃப் பூத்திற்கும் இடையிலான பிணைப்பை இப்படம் மிக நேர்த்தியாகப் பேசுகிறது. 

லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் பிராட் பிட் ஆகிய இரு பெரும் ஆளுமைகளும் தங்கள் நடிப்பின் மூலம் ஒரு காவியத்தன்மையை இப்படத்திற்கு வழங்கியுள்ளனர்.

 ஹாலிவுட்டின் பொற்காலம் முடிவுக்கு வருவதையும் புதிய அலை சினிமாக்கள் உருவாவதையும் ஒரு வரலாற்றுப் பதிவாக மாற்றியதில் இயக்குநரின் மேதமை வெளிப்படுகிறது.

இயக்குநர் டரான்டினோ வரலாற்றைச் சிதைக்காமல் தன் கற்பனைத் திறத்தால் ஒரு மாற்று உண்மையை உருவாக்கிய விதம் வியப்பிற்குரியது. 

குறிப்பாக ஷரோன் டேட் எனும் நடிகையின் நிஜ வாழ்க்கையில் நடந்த துயரமான கொலைச் சம்பவத்தை மையமாக வைத்து அதன் முடிவைத் தனது திரைக்கதையில் மாற்றியமைத்த விதம் ஒரு கவித்துவமான படைப்பாற்றல் ஆகும். 

ராபர்ட் ரிச்சர்ட்சனின் ஒளிப்பதிவு 35மிமீ பிலிம் சுருள்களில் 1960களின் மஞ்சள் வெயிலையும் அந்தக்கால வாகனங்களையும் கட்டிடங்களையும் ஒரு கவித்துவத்துடன் படம்பிடித்துள்ளது. 

படத்தில் வரும் இசை மற்றும் ரேடியோ விளம்பரங்கள் அந்த சகாப்தத்தின் ஆன்மாவைத் தொட்டுச் செல்கின்றன.

விருதுகளைக் குவித்து விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற இப்படைப்பு ஆஸ்கர் மேடையில் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பிராட் பிட்டிற்குப் பெற்றுத் தந்தது.

 ஒரு முழுமையான திரை அனுபவமாக இது அமைவதற்குக் காரணம் இதில் இழையோடும் நுட்பமான நகைச்சுவையும் அதிரடியான சண்டைக் காட்சிகளுமே ஆகும்.

 டரான்டினோவின் முந்தைய படங்களில் இருந்த அதீத வன்முறையைக் காட்டிலும் இதில் ஒருவித முதிர்ச்சியான அணுகுமுறையும் பழைய சினிமா மீதான தீராத காதலும் வெளிப்படுகிறது. 

உலகத் தரத்திலான இத்திரைப்படம் காலம் கடந்து நிற்கும் ஒரு சினிமா ஆவணமாகக் கருதப்படுகிறது.

கதாபாத்திரங்களின் உள்மனப் போராட்டங்களை வசனங்கள் மூலமாகவும் உடல் மொழிகள் மூலமாகவும் வெளிப்படுத்திய விதம் உலக சினிமாவிற்கு ஒரு பாடம் போன்றது. 

படத்தொகுப்பில் பிரெட் ராஸ்கின் செய்துள்ள மாயாஜாலங்கள் 161 நிமிடங்கள் ஓடும் இப்படத்தைச் சற்றும் சோர்வடையாமல் கொண்டு செல்கின்றன. 

சோனி பிக்சர்ஸ் வெளியீட்டில் உலகெங்கும் வசூலை வாரிக் குவித்த இத்திரைப்படம் சினிமா ஒரு வரலாற்றுத் தழும்பை எப்படிக் குணப்படுத்த முடியும் என்பதற்குச் சான்றாகும்.

 படைப்புத் திறனில் எந்த சமரசமும் இன்றி உருவாக்கப்பட்ட இப்படம் குவெண்டின் டரான்டினோவின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாகும்.

வரலாற்றையும் கற்பனையையும் இணைக்கும் இந்தப் பாலம் பார்வையாளர்களை ஒரு புனைவு உலகிற்குள் அழைத்துச் செல்கிறது.

 பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்ததுடன் 21ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த திரைக்கதைகளில் ஒன்றாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 திரையுலகின் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டிய அதே வேளையில் உண்மையான நட்பு மற்றும் விசுவாசத்தின் மதிப்பையும் இப்படம் உரக்கச் சொல்கிறது.

 சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு விருந்தாக அமைந்த இப்படைப்பு ஒரு புதிய வரலாற்றுப் பார்வையைத் தோற்றுவித்துள்ளது.

இப்படத்தின் தொடர்ச்சியாக கிளிஃப் பூத் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு புதிய படைப்புகள் உருவாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 டாரான்டினோ தனது முதல் நாவலாக இப்படத்தின் கதையையே எழுதினார் என்பது இதன் ஆழத்திற்கு மற்றுமொரு சான்று. 

ஒரு குறிப்பிட்ட காலத்தின் கலாச்சார மாற்றத்தை இவ்வளவு நுணுக்கமாகப் பதிவு செய்த படங்கள் மிகக் குறைவு.

 திரைக்கலைஞர்களின் வாழ்க்கைச் சவால்களை ஒரு வண்ணமயமான ஓவியமாகத் தீட்டியுள்ள இப்படம் என்றென்றும் கொண்டாடப்படும் தகுதி கொண்டது.

இந்தத் திரைப்படத்தின் வெற்றி  வெறும் வணிக ரீதியானது மட்டுமல்ல அது ஒரு காலகட்டத்தின் உணர்வுகளை மீட்டெடுத்த வெற்றியுமாகும். 

நடிகர்கள் தங்கள் வாழ்நாள் சிறப்பான நடிப்பை இதில் வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு காட்சியிலும் டரான்டினோவின் தனித்துவமான பாணி பளிச்சிடுகிறது. 

ஹாலிவுட் வரலாற்றில் இது ஒரு அழியாத சித்திரமாக நிலைபெற்றுள்ளது. உலகத் திரை வரலாற்றில் இப்படத்திற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு.

இத்திரைப்படம் 1960களின் ஹாலிவுட் சூழலை மிகத் துல்லியமாக விளக்குகிறது. இதைப் புரிந்துகொள்ள அக்காலத்திய ஸ்டுடியோ அமைப்புகள் மற்றும் படப்பிடிப்புத் தளங்களின் கட்டமைப்பைப் பார்ப்பது அவசியமாகும்.

இயக்குநர் குவெண்டின் டரான்டினோ இப்படத்திற்கு ஒரு ரெட்ரோ தோற்றத்தைக் கொடுக்கப் பயன்படுத்திய லென்ஸ் நுட்பங்கள் மற்றும் ஒளிப்பதிவு முறைகள் இப்படத்தின் காட்சி மொழியைத் தீர்மானித்தன.

திரைக்கதை அமைப்பில் காலத்தின் மாற்றத்தையும் அதன் விளைவாகத் தோன்றும் ஒருவிதமான பாதுகாப்பின்மையையுமே இந்தப் படம்  அடிநாதமாகக் கொண்டுள்ளது. 

ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த நாயகன் ரிக் டால்டன் தான் சார்ந்திருந்த பழைய ஹாலிவுட் உலகம் மெல்ல மறைந்து புதிய தலைமுறை கலைஞர்களின் கைகளுக்குச் செல்வதை உணரும்போது ஏற்படும் அந்தத் தவிப்பு படத்தின் ஆன்மாவாகத் துடிக்கிறது. 

இது வெறும் தனிமனித வீழ்ச்சி பற்றியது மட்டுமல்ல ஒரு சகாப்தத்தின் முடிவு மற்றும் மற்றுமொரு சகாப்தத்தின் உதயத்திற்கு இடைப்பட்ட அந்தச் சந்தியில் நிற்கும் மனிதர்களின் மனநிலையை இது படம் பிடித்துக் காட்டுகிறது.

கிளிஃப் பூத் எனும் கதாபாத்திரம் இந்த மாற்றங்களுக்கு இடையே ஒரு பாறையைப் போல உறுதியாக நிற்பது ரிக் டால்டனின் பலவீனத்திற்கு நேர்மாறான ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது. 

இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு  எஜமான் மற்றும் தொழிலாளி என்பதைக் கடந்து ஒருவரது நிழலாகவும் மற்றவரது ஊன்றுகோலாகவும் மாறியிருக்கிறது. 

ஒரு ஸ்டண்ட் கலைஞர் எப்போதும் திரைக்குப் பின்னால் மறைந்திருப்பவர் என்றாலும் நிஜ வாழ்க்கையில் அவரே நாயகனுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்குவது படத்தின் ஆழமான முரணாகும். 

இந்த இருவரின் பிணைப்பு சிதைந்து வரும் ஒரு தொழில்துறைக்கு நடுவில் எஞ்சியிருக்கும் உண்மையான நட்பின் அடையாளமாகத் திகழ்கிறது.

மறுபுறம் ஷரோன் டேட் கதாபாத்திரத்தின் மூலம் ஒரு புதிய வாழ்வின் தொடக்கத்தையும் நம்பிக்கையையும் இயக்குநர் விதைத்துள்ளார். 

திரையில் ஒரு தெய்வீகத் தன்மையுடனும் களங்கமில்லாத புன்னகையுடனும் உலவும் அவர் அந்தத் தருணத்தின் தூய்மையைப் பிரதிபலிக்கிறார்.

 வரலாற்றில் அவர் சந்திக்கவிருந்த கொடூரமான முடிவை அறிந்திருக்கும் பார்வையாளர்களுக்கு அவர் திரையில் செய்யும் மிகச் சாதாரணமான செயல்கள் கூட ஒருவிதமான கனத்த உணர்வைத் தருகின்றன.

 படத்தின் இறுதியில் யதார்த்தமான வரலாற்றைத் தூக்கியெறிந்துவிட்டு ஒரு நீதியுள்ள கற்பனையை இயக்குநர் கையாண்டிருப்பது இந்தத் தூய்மையைக் காக்க எடுக்கப்பட்ட ஒரு கவித்துவமான முடிவாகும்.

மேன்சன் குடும்பத்தினர் எனும் எதிர்மறை சக்திகள் சமூகத்தின் அமைதிக்குள் ஊடுருவும் ஒரு நச்சுப் படலமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

 அவர்கள் கொண்டு வரும் வன்முறை  அந்த அழகிய கனவு உலகைச் சிதைக்கக் காத்திருக்கும் ஒரு பேரபாயம். ஆனால் படத்தின் இறுதி மோதலில் நிஜ உலகக் கொலையாளிகள் ஒரு கற்பனை உலகின் நாயகர்களிடம் அடிபணிவது என்பது சினிமா எனும் ஊடகம் நிஜத்தின் காயங்களுக்கு வழங்கும் ஒரு மருந்தாகும்.

 வன்முறையை வன்முறையாலேயே எதிர்கொண்டாலும் அது ஒரு வரலாற்றுத் துரோகத்தைத் தடுக்கும் கருவியாக இங்கே மாற்றப்பட்டுள்ளது.

சினிமா  வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல அது ஒரு காலகட்டத்தை அப்படியே உறையச் செய்து பாதுகாக்கும் ஒரு கால இயந்திரம் என்பதை இப்படம் உணர்த்துகிறது. 

ஒரு கலைஞன் தனது வாழ்நாள் முழுவதும் தேடும் அங்கீகாரம் அவனது அண்டை வீட்டின் கதவு திறப்பதன் மூலம் கிடைப்பது ஒரு சுழற்சியைப் பூர்த்தி செய்கிறது. 

பழைய ஹாலிவுட்டின் வீரமும் புதிய ஹாலிவுட்டின் புதுமையும் கைகோர்க்கும் அந்த இறுதித் தருணம் இழந்த புகழை விடவும் எஞ்சியிருக்கும் மனித மாண்பே சிறந்தது என்பதை உரக்கச் சொல்கிறது.

 சினிமாவின் மீதான காதலும் ஒரு வரலாற்றுத் தழும்பை அன்பால் துடைக்க முனையும் படைப்பாளியின் கருணையுமே இப்படத்தின் அடிப்படைச் செய்தியாகும்.

இதில் ரிக் டால்டன் நடித்த 'பவுண்டி லா'  கற்பனைத் தொடரின் காட்சிகள் கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்ட போது, 1950-களின் தொலைக்காட்சித் தரத்தைக் கொண்டு வர அந்தக்கால 'க்ரேன்' மற்றும் 'லென்ஸ்' கருவிகள் பயன்படுத்தப்பட்டன. 

இதில் வியப்பான விஷயம்  அந்தத் தொடருக்காக உருவாக்கப்பட்ட விளம்பர இடைவேளைக் காட்சிகளில் வரும் புகையிலை விளம்பரங்கள் அனைத்தும் அந்த ஆண்டின் ஒரிஜினல் டிசைன்கள். 

டிகாப்ரியோ ஒரு காட்சியில் அந்தத் தொடரின் கதாபாத்திரமாகவே மாறி, ஒரு குறிப்பிட்ட சிகரெட் பிராண்டை விளம்பரப்படுத்தும் விதம், அக்காலத்து நட்சத்திரங்கள் எப்படித் தங்கள் புகழை வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு ஒரு சான்றாகும்.

ஷரோன் டேட் தனது நண்பர்களுடன் 'எல் கோயோட்'  உணவகத்தில் உணவு உண்ணும் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காட்சி, நிஜமாகவே அவர் தனது இறுதி இரவில் உணவருந்திய அதே உணவகத்தில் படமாக்கப்பட்டது.

 படப்பிடிப்பின் போது மார்கோட் ராபி அமர்ந்திருந்த அதே மேஜையில்தான், 1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி நிஜமான ஷரோன் டேட் அமர்ந்திருந்தார். 

அந்த உணவகத்தின் உரிமையாளர்கள் தசாப்தங்களாக மாற்றாமல் வைத்திருந்த அதே உட்புற அலங்காரம், படத்திற்கு ஒரு அமானுஷ்யமான தத்ரூபத்தைக் கொடுத்தது.

கிளிஃப் பூத் மற்றும் ரிக் டால்டன் இருவரும் மது அருந்திக்கொண்டே டிவியில் தங்கள் பழைய படத்தைப் பார்க்கும் காட்சியில், அவர்கள் பேசும் நையாண்டியான வசனங்கள் பெரும்பாலும் டிகாப்ரியோ மற்றும் பிராட் பிட் ஆகியோரின் சொந்த உரையாடல்கள். 

இயக்குநர் கேமராவை ஓடவிட்டு அவர்களை இயல்பாக உரையாடச் சொன்னவர். அதில் அவர்கள் பயன்படுத்திய சில 'ஹாலிவுட் ஸ்லாங்' வார்த்தைகள் 60-களின் ஸ்டுடியோ கலாச்சாரத்தில் மட்டுமே புழக்கத்தில் இருந்தவை. 

இது ஒரு நடிகனுக்கும் அவரது ஸ்டண்ட் மேனுக்கும் இடையிலான அந்த ஆழமான,  அதிகார படிநிலை இல்லாத நட்பை உறுதிப்படுத்தியது.

படத்தின் தயாரிப்பு வடிவமைப்பில் மிக முக்கியமான சவால், 1969-ஆம் ஆண்டின் அந்தப் புகழ்பெற்ற 'ஹாலிவுட் சைன்' பலகையை மீட்டுருவாக்கம் செய்வது.

 அந்தச் சமயம் அந்தப் பலகை மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. அதை நவீன அழகோடு காட்டாமல், அப்போது இருந்த அதே துருப்பிடித்த, வர்ணம் உதிர்ந்த நிலையிலேயே காட்டியது இயக்குநரின் நேர்மையைக் காட்டுகிறது.

ரிக் டால்டனின் அண்டை வீடாகக் காட்டப்படும் ரோமன் போலன்ஸ்கியின் வீடு, அதன் கட்டிடக்கலை முதல் அதன் கேட் வரை அனைத்தும் அந்தத் தெருவின் அசல் வரைபடத்தின்படி மீண்டும் செதுக்கப்பட்டது.

இறுதிக் காட்சியில், மேன்சன் கும்பலைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் அந்தப் பழைய துப்பாக்கியும் கத்தியும், வரலாற்றின் அந்த கொடூர இரவில் அவர்கள் பயன்படுத்திய அதே ஆயுதங்களின் துல்லியமான பிரதிகள். 

ஆனால், இங்கே சினிமா எனும் மாயக்கண்ணாடி மூலம் அந்த ஆயுதங்கள் தகுதியற்ற கைகளில் தோல்வியடைவதைச் சித்தரித்தது ஒரு மாபெரும் குறியீடு. 

படத்தின் கடைசி காட்சியில், ஷரோன் டேட்டின் குரல் இண்டர்காமில் கேட்கும் போது, அதுவரை நிலவிய பதற்றம் மறைந்து ஒரு நிம்மதி பிறக்கும். 

ஒரு படைப்பாளியாக டரான்டினோ வரலாற்றைத் திருத்தவில்லை, மாறாக ஒரு அழகிய ஆன்மாவிற்குத் தனது படத்தின் மூலம் அழியாத்தன்மை வழங்கியுள்ளார் என்பதே இந்தத் திரைப்படத்தின்  தரிசனம்.

ரிக் டால்டன் ஒரு வெஸ்டர்ன் தொடரில் வில்லனாக நடிக்கும்போது, அவர் நீண்ட தலைமுடியுடன் கூடிய 'விக்' அணிந்திருப்பார். அந்த முடியின் அமைப்பு மற்றும் அவரது ஆடை அலங்காரம், 1960-களின் இறுதியில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் தங்களை 'ஹிப்பி' கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முயன்ற அந்தத் தடுமாற்றத்தைக் கேலி செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டது.

 அதேபோல், அந்தப் படப்பிடிப்பின் போது அவர் பயன்படுத்தும் துப்பாக்கிகள் அனைத்தும் அந்த காலக்கட்டத்தில் புழக்கத்தில் இருந்த அசல் 'ப்ராப்ஸ்'  ஆகும்.
 அவை ஒவ்வொன்றும் கையால் இயக்கப்படும் பழைய முறையிலேயே செயல்பட்டன.

ஷரோன் டேட் தனது நண்பர்களுடன்  உணவகத்திற்குச் செல்லும் காட்சியில், அந்த உணவகத்தின் மேஜை விரிப்புகள் முதல் அங்கு பரிமாறப்பட்ட மெனு கார்டுகள் வரை அனைத்தும் 1969-ஆம் ஆண்டின் அசல் வடிவமைப்பு. 

அந்த உணவகத்தின் சுவர்களில் இருந்த ஓவியங்கள் கூட அக்காலத்து கலை நுணுக்கங்களை அப்படியே பிரதிபலித்தன.

 இந்தத் துல்லியம், அந்தச் சந்திப்பு எவ்வளவு இயல்பானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருந்தது என்பதை உணர்த்தப் பயன்படுத்தப்பட்டது. 

இது பின்னாளில் நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தோடு ஒப்பிடும்போது ஒரு கசப்பான முரணாகத் தெரிகிறது.

கிளிஃப் பூத் கதாபாத்திரம் தனது காரில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சுற்றி வரும் நீண்ட காட்சிகளில், சாலையோரங்களில் இருந்த பெட்ரோல் பங்குகள் மற்றும் அவற்றின் விலைப்பட்டியல்கள் 1969-ஆம் ஆண்டின் விலையிலேயே சுமார் 35 சென்ட்கள் விலையில் அமைக்கப்பட்டிருந்தன.

 இந்தக் காட்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான பழைய கார்களின் உரிமையாளர்கள், படப்பிடிப்பின் போது அந்த கார்களில் நவீன மாற்றங்கள் எதுவும் தெரியக்கூடாது என்பதற்காகத் தங்கள் கார்களை மிகுந்த கவனத்துடன் பராமரித்து வழங்கினர். 

ஒரு காட்சியில் பின்னணியில் தெரியும் ஒரு பழைய பேருந்து, உண்மையில் அந்தச் சமயம் ஓடிக்கொண்டிருந்த அதே வழித்தட எண்ணைக் கொண்டிருந்தது.

படத்தின் இறுதிக்கட்ட மோதலில், ரிக் டால்டனின் மனைவி கதாபாத்திரமான பிரான்செஸ்கா கப்புச்சி மேன்சன் கும்பலை எதிர்கொள்ளும் விதம், இத்தாலிய ஆக்ஷன் படங்களில் வரும் வீராங்கனைகளின் உடல்மொழியை ஒத்திருக்கும்.

 இத்தாலியிலிருந்து ஹாலிவுட்டிற்கு வரும் ஒரு நடிகையின் கலாச்சார அதிர்ச்சியை அவரது கதாபாத்திரம் மூலம் இயக்குநர் மென்மையாகக் கையாண்டிருப்பார். 

அவர் பயன்படுத்தும் சில பிரத்யேக இத்தாலிய வசவுகள் மற்றும் அவரது ஆவேசம், அந்தப் பதற்றமான சூழலிலும் ஒருவிதமான அவல நகைச்சுவையை உருவாக்கியது.

 அந்த மறக்க முடியாத இரவு நேரத்தில் ஷரோன் டேட்டின் வீட்டின் முன் கேமரா மெல்ல உயர்ந்து செல்லும் போது, பின்னணியில் ஒலிக்கும் இசை மெல்லக் குறைந்து ஒரு அமைதி நிலவும். 

அந்த அமைதி, 'வரலாறு மாற்றப்பட்டுவிட்டது' என்பதற்கான மௌன சாட்சி. திரையில் தோன்றும் படத்தின் தலைப்பு 'ஒன்ஸ் அபான் எ டைம்', இது ஒரு விசித்திரமான தேவதைக் கதை என்பதையும், இதில் நடப்பவை நிஜமான வரலாற்றின் ஒரு கவித்துவமான மாற்று வடிவம் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. 

ஒரு மாபெரும் கலைஞனின் வீழ்ச்சியும், ஒரு அழகிய உயிரின் மீட்பும் ஒரே புள்ளியில் சந்திக்கும் அந்தத் தருணமே இப்படத்தின் முத்தாய்ப்பாகும்.

இயக்குநர் இந்தப் படத்தில் சி.ஜி.ஐ  தொழில்நுட்பத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, 1969-ஆம் ஆண்டின் லாஸ் ஏஞ்சல்ஸை நிஜமாகவே கட்டியெழுப்பினார்.

 இதற்காகப் புகழ்பெற்ற 'பான்டாஜஸ்'  மற்றும் 'புய்'  போன்ற திரையரங்குகளின் முகப்புத் தோற்றங்களை பழைய காலத்திற்கு மாற்றியதோடு மட்டுமல்லாமல், அந்த வீதிகளில் ஓடிய நூற்றுக்கணக்கான பழைய கார்களைத் தேடிப்பிடித்து வரவழைத்தார். 

அந்த கார்களில் இருந்த உரிமத் தட்டுகள் கூட 1969-ஆம் ஆண்டின் அந்தந்த மாதங்களுக்கு உரிய ஸ்டிக்கர்களுடன் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

 இது ஒரு வரலாற்று ஆவணம் போன்ற துல்லியத்தைத் திரைப்படத்திற்கு அளித்தது.
கிளிஃப் பூத் கதாபாத்திரத்தின் துணிச்சலைக் காட்டும் விதமாக, அவர் தனது டிரெய்லருக்கு வெளியே ஒரு கூரையின் மேல் ஏறி டிவி ஆண்டெனாவைப் பழுதுபார்க்கும் காட்சி ஒன்று வரும். 

அந்த உயரமான இடத்தில் பிராட் பிட் எவ்விதப் பாதுகாப்பு கயிறுகளும் இன்றி  சாதாரணமாக நடந்து நடித்தார். 

இது அந்த கதாபாத்திரத்தின் 'பயமற்ற' குணாதிசயத்தை நடிகரே நேரடியாக வெளிப்படுத்திய தருணம். அதேபோல், ரிக் டால்டன் இத்தாலியில் நடித்ததாகக் காட்டப்படும் அந்தப் படங்களின் பெயர்கள், உண்மையில் 60-களில் வெளிவந்த இரண்டாம் தர ஆக்ஷன் படங்களின் தலைப்புகளை நையாண்டி செய்யும் விதமாகவும், அதே சமயம் அந்த வகை சினிமாக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் சூட்டப்பட்டவை.

ஷரோன் டேட் ஒரு புத்தகக் கடைக்குச் செல்லும் காட்சியில், அந்தக் கடையின் உட்புறம் மற்றும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த இதழ்கள் அனைத்தும் 1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த அதே இதழ்களாகும். 'லைப்'  மற்றும் 'லுயுர்'  போன்ற பத்திரிகைகளின் அசல் பிரதிகளைச் சேகரித்து அந்த அடுக்கில் வைத்திருந்தனர்.

 இதற்காகத் தனி ஒரு குழுவே பழைய புத்தகக் கடைகளில் பல மாதங்கள் ஆய்வு செய்தது. 

இந்தத் துல்லியம் பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரியாவிட்டாலும், நடிகர்கள் அந்தச் சூழலுக்குள் முழுமையாக ஒன்றிப்போக இது பேருதவியாக இருந்தது.

ரிக் டால்டனின் வீட்டில் நடக்கும் அந்த விறுவிறுப்பான கிளைமாக்ஸ் காட்சியில், மேன்சன் கும்பலைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திய அந்தப் பழைய கார் பழுதடைந்து சத்தம் போடும் காட்சி, நிஜமாகவே அந்த கும்பல் அன்று பயன்படுத்திய அதே மாடல் காரைக் கொண்டு படமாக்கப்பட்டது. 

அந்த காரின் என்ஜின் எழுப்பும் ஒவ்வொரு ஒலியும் வன்முறை தொடங்கப்போவதை உணர்த்தும் ஒரு எச்சரிக்கை மணியாகப் பயன்படுத்தப்பட்டது. 

அந்த மோதலின் போது கிளிஃப் பூத்தின் செல்ல நாய் காட்டும் ஆக்ரோஷமான நடிப்புக்காக, அந்த நாய்க்குத் தசைப் பிடிப்புகள் வராமல் இருக்க பிரத்யேகமான உடற்பயிற்சிகளும் ஓய்வு நேரங்களும் வழங்கப்பட்டன.

இறுதிக் காட்சியில் ரிக் டால்டன் தனது அண்டை வீட்டின் இண்டர்காம் மூலம் பேசும் போது, அந்த ஒலியின் தரம்  1960-களின் இண்டர்காம் கருவிகளில் இருந்த அதே 'க்ராக்லிங்' சத்தத்துடன் இருக்குமாறு ஒலிப்பதிவு செய்யப்பட்டது. 

அந்தத் தருணத்தில் வானத்திலிருந்து கேமரா மெல்லக் கீழே இறங்கி அந்தத் தெருவை முழுமையாகக் காட்டும் போது, அது ஒரு சோகமான வரலாற்றுப் பக்கத்தை அன்பால் மாற்றியமைத்த திருப்தியைப் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. 

வரலாற்றில் அந்தத் தெரு இரத்தத்தால் நனைந்திருக்க வேண்டும், ஆனால் சினிமாவில் அது ஒரு புதிய நட்பின் தொடக்கமாக மாற்றப்பட்டதே இந்தத் திரைப்படத்தின் ஆகச்சிறந்த திரைக்கதை விந்தையாகும்.

 ரிக் டால்டன் கதாபாத்திரத்திற்காக உருவாக்கப்பட்ட போலி திரைப்படங்களின் பெயர்களும் அவற்றின் பாணியும் வியக்க வைக்கின்றன. 

'நெப்ராஸ்கா ஜிம்' போன்ற ஸ்பகெட்டி வெஸ்டர்ன் படங்களுக்காக இத்தாலிக்குச் செல்லும் ரிக் டால்டன், அங்கு புகழ்பெற்ற இயக்குநர்களுடன் பணியாற்றுவதாகக் காட்டப்படும். 

அந்தப் போலித் திரைப்படங்களின் போஸ்டர்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்கள்  மற்றும் வண்ணங்கள் 1960-களின் இத்தாலியத் திரையுலகின் அசல் பாணியை அப்படியே பிரதிபலிக்கின்றன.

  அந்தப் போஸ்டர்களில் ரிக் டால்டனின் பெயர் பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருப்பது, சர்வதேச சந்தையில் அவரது வீழ்ச்சியடைந்து வரும் புகழைத் தக்கவைக்க எடுக்கும் முயற்சியின் வெளிப்பாடாகும்.

ஷரோன் டேட் கதாபாத்திரத்தின் நிஜமான ஆத்மாவைத் திரையில் கொண்டு வர, அவரது சகோதரி டெப்ரா டேட்டிடம் இருந்து பல ஆலோசனைகள் பெறப்பட்டன. 

மார்கோட் ராபி அந்தப் பாத்திரத்திற்காகத் தயாரானபோது, ஷரோன் டேட் நிஜமாகவே பயன்படுத்திய சில வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தினார். 

இது வெறும் நடிப்பு என்பதைத் தாண்டி, அந்தப் பாத்திரத்தின் உணர்வை நடிகை உள்வாங்க உதவியது. மேலும், ஒரு காட்சியில் அவர் அணிந்திருக்கும் கண்ணாடிகள் மற்றும் சில உடைகள் ஷரோன் டேட்டின் அசல் சேகரிப்பிலிருந்து பெறப்பட்டவை என்பது அந்தப் பாத்திரத்திற்கு வழங்கப்பட்ட வரலாற்று ரீதியான கௌரவமாகும்.

படத்தின் ஒலி அமைப்பில் ஒரு முக்கியமான அம்சம் , 1969-ஆம் ஆண்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் பின்னணி இரைச்சலை உருவாக்க, பழைய கார் என்ஜின்களின் ஒலிகள் மிக நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டன. 

பிராட் பிட் ஓட்டும் காடிலாக் காரின் என்ஜின் சத்தம் முதல், அந்தத் தெருக்களில் செல்லும் பழைய பஸ்களின் பிரேக் சத்தம் வரை ஒவ்வொன்றும் அந்த ஆண்டிற்கே உரித்தான தனித்துவமான அதிர்வெண்களில் ஒலிக்கச் செய்யப்பட்டன. 

நவீன கார்களின் மென்மையான ஒலிகள் எங்கும் ஊடுருவிவிடக் கூடாது என்பதில் படக்குழுவினர் காட்டிய கவனம் அந்தச் சூழலை மெய்த்தன்மையுடன் மாற்றியது.

மேன்சன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரிக் டால்டனின் வீட்டிற்குள் நுழையும் அந்தப் பதற்றமான தருணத்தில், பின்னணியில் ஒலிக்கும் மௌனம் மற்றும் மிக மெல்லிய இசை ஒரு விதமான அச்சுறுத்தலை உருவாக்குகின்றன. 

அந்தச் சமயத்தில் ரிக் டால்டன் ஒரு நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டிருப்பார். அவர் கேட்கும் அந்தப் பாடல்கள் மற்றும் அந்தத் தருணத்தின் ஒளியமைப்பு, வெளியே நடக்கப்போகும் பெரும் வன்முறைக்கும் அவர் இருக்கும் அமைதியான உலகிற்கும் இடையிலான முரணைக் காட்டுகிறது.

 இந்தப் படப்பிடிப்பின் போது பயன்படுத்தப்பட்ட அந்த நீச்சல் குளம் மற்றும் அதன் சுற்றுப்புறம், அக்காலத்து ஹாலிவுட் நட்சத்திரங்களின் வாழ்க்கை முறையை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இயக்குநர் டாரான்டினோவின் படங்களில் பொதுவாக வரும் காலணிகள் மற்றும் பாதங்கள் குறித்தக் காட்சிகள் இப்படத்திலும் ஒரு குறியீடாக வருகின்றன. 

குறிப்பாக கிளிஃப் பூத் மற்றும் மேன்சன் கும்பலைச் சேர்ந்த பெண்  இடையிலான கார் பயணக் காட்சியில், அந்தக் காலத்து ஹிப்பி கலாச்சாரத்தின் சுதந்திரமான போக்கை இது காட்டுகிறது.

படத்தின் இறுதியில் ரிக் டால்டன் தனது அண்டை வீடான ரோமன் போலன்ஸ்கியின் வீட்டிற்குள் நுழையும்போது, கேமரா அந்த வீட்டின் வாயிற்கதவை நோக்கி மெல்ல நகர்ந்து செல்லும். 

அந்தத் தருணம், ஒரு விபத்தால் அழிய வேண்டிய வரலாறு, ஒரு மாற்றுக் கதையின் மூலம் அழகாகக் காப்பாற்றப்பட்டதை எவ்வித வசனமும் இன்றி உணர்த்தியது ஒரு உன்னதமான திரைமொழி.

படத்தின் கதை:-

1969 ஆம் ஆண்டின் ஹாலிவுட் பொற்காலத்தை கண்முன் நிறுத்தும் இந்த படைப்பில், லியோனார்டோ டிகாப்ரியோ ரிக் டால்டனாகவும், பிராட் பிட் கிளிஃப் பூத்தாகவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

பிப்ரவரி மாதத்தின் ஒரு காலைப் பொழுதில் ரிக் டால்டன் தனது சரிந்து வரும் திரைவாழ்க்கையை எண்ணி பெருமூச்சு விடுகிறார்.

 பவுண்டி லா போன்ற தொடர்களில் ஒரு காலத்தில் நாயகனாக வலம் வந்தவருக்கு இப்போது மற்றவர்களின் படங்களில் அடிவாங்கும் வில்லன் வேடங்களே மிஞ்சுகின்றன.

 ஏஜென்ட் மார்வின் ஸ்வார்ஸ் (அல் பசினோ) அவருக்கு இத்தாலிய ஸ்பகெட்டி வெஸ்டர்ன் படங்களை பரிந்துரைக்கும்போது, அது தனது தரத்திற்கு இழுக்கு என ரிக் குமுறுகிறார். 

அவருக்கு நிழலாகவும்,டூப் கலைஞராகவும் ஓட்டுநராகவும், நண்பனாகவும் இருக்கும் கிளிஃப் பூத் (பிராட் பிட்), ஒரு முன்னாள் உலகப்போர் வீரர். தனது மனைவியைக் கொன்றதாக அவர் மீது படிந்துள்ள கறை, ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர் ராண்டி மில்லர் (கர்ட் ரசல்) போன்றவர்களிடம் அவருக்கு வேலை கிடைக்காமல் செய்கிறது. 

கிளிஃப் ஒரு சிறிய டிரெய்லரில் தனது விசுவாசமான பிட்புல் நாய் பிராந்தியுடன் வசித்து வருகிறார்.

ரிக் டால்டனின் வீட்டிற்கு அடுத்த வீட்டில் புகழ்பெற்ற இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி (ரஃபாள் ஜாவியுருச்சா) மற்றும் பேரழகி ஷரோன் டேட் (மார்கோட் ராபி) குடிபுகுகிறார்கள். 

ஒருவேளை அவர்கள் மூலமாக தனது தலைவிதி மாறக்கூடும் என ரிக் ஏங்குகிறார். ஒரு மதியம், கிளிஃப் தனது காரில் செல்லும்போது புசிகேட் (மார்கரெட் குவாலி) என்ற இளம்பெண்ணைச் சந்திக்கிறார். 

அவள் அவரைத் தனது குழுவினர் வசிக்கும் ஸ்பான் ரான்ச் என்ற இடத்திற்கு அழைத்துச் செல்கிறாள். அது ஒரு பழைய படப்பிடிப்புத் தளம். 

அங்குள்ள முதியவர் ஜார்ஜ் ஸ்பான் (பரூஸ் டெர்ன்) என்பவரை இந்த ஹிப்பிகள் ஏமாற்றி சுரண்டுகிறார்களோ என்ற சந்தேகத்தில் கிளிஃப் உள்ளே செல்கிறார். 

அங்கு கிளெம் (ஜேம்ஸ் லாண்ட்ரி ஹெபர்ட்) போன்றவர்களுடன் அவருக்கு மோதல் ஏற்படுகிறது.

இதற்கிடையில் லான்சர் படப்பிடிப்பில் ரிக் டால்டன் வசனங்களை மறந்து தடுமாறி, தனது கேரவனில் ஆவேசமாக அழுது தீர்க்கிறார்.

 ஆனால் பின்னர் அவர் வெளிப்படுத்தும் அசுரத்தனமான நடிப்பு இயக்குனர் சாம் வநாமேக்கர் (நிக்கோலஸ் ஹம்மண்ட்) மற்றும் உடன் நடிக்கும் சிறுமி ட்ரூடி (ஜூலியா பட்டர்ஸ்) ஆகியோரை வியக்க வைக்கிறது. 

இது அவருக்கு இத்தாலி செல்லும் துணிவைத் தருகிறது. இத்தாலியில் செர்ஜியோ கோர்புச்சி போன்றவர்களுடன் பணியாற்றி மூன்று நான்கு படங்களை முடித்துவிட்டு, பிரான்செஸ்கா கப்புச்சி (லோரன்சா இஸோ) என்ற பெண்ணை மணந்து மீண்டும் அமெரிக்கா திரும்புகிறார்.

 ஆனால் பொருளாதார நெருக்கடியால் கிளிஃபை பணியிலிருந்து விடுவிக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழல் அவருக்கு ஏற்படுகிறது.

வரலாற்றின் கருப்பு நாளான 1969 ஆகஸ்ட் 8 அன்று, ரிக் மற்றும் கிளிஃப் இருவரும் இறுதிமுறையாக மது அருந்திவிட்டு வீடு திரும்புகிறார்கள். 

அதே நேரத்தில் சார்லஸ் மேன்சனின் சீடர்களான டெக்ஸ் (ஆஸ்டின் பட்லர்), சடி (மிகி மேடிசன்), கேட்டி (மேடிசன் பீட்டி) மற்றும் ஃபிளவர்சைல்டு (மாயா ஹாக்) ஆகியோர் ஷரோன் டேட்டின் வீட்டிற்குள் நுழையத் திட்டமிடுகிறார்கள். 

ஆனால் வீட்டின் வெளியே நின்ற ரிக்கின் கோபமான திட்டுக்களால் திசைமாறும் அவர்கள், ரிக்கின் வீட்டிற்குள்ளேயே நுழைகிறார்கள். 

அங்கு போதையில் இருந்த கிளிஃப் மற்றும் அவரது நாய் பிராந்தி ஆகியோரிடம் அந்த கும்பல் சிக்கிக் கொள்கிறது.

 கிளிஃப் தனது ஸ்டண்ட் திறமையால் அவர்களைச் சிதைக்கிறார். டெக்ஸ் கொல்லப்பட, படுகாயமடைந்த சடி துப்பாக்கியுடன் நீச்சல் குளத்தில் விழுகிறாள். 

அங்கு இசையில் மூழ்கியிருந்த ரிக், தன் கைவசம் இருந்த ஸ்டண்ட் ஃபிளேம் த்ரோவரால் அவளைச் சுட்டு எரித்து சாம்பலாக்குகிறார். 

நிஜ வரலாற்றில் ஷரோன் டேட் கொல்லப்பட்ட அந்த இரவு, டரான்டினோவின் கற்பனையில் ரிக் டால்டனுக்கு ஒரு புதிய வாழ்வைத் தரும் இரவாக மாறுகிறது.

இந்தத் திரைப்படத்தில் புரூஸ் லீயாக மைக் மோ, ஜே செப்ரிங்காக எமிலி ஹிர்ஷ் என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளமே அணிவகுத்துள்ளது.

 குவென்டின் டரான்டினோவே ஒரு விளம்பர இயக்குனராகவும் தனது குரலைப் பதிவு செய்தும் இந்த உன்னத படைப்பைச் செதுக்கியுள்ளார்.

இத்திரைப்படம் வெறுமனே ஒரு கதையை மட்டும் சொல்லாமல் காலம் கடந்து நிற்கும் நட்பையும் ஹாலிவுட் திரையுலகின் மாற்றங்களையும் ஒரு காவியமாகப் பதிவு செய்கிறது. 

படத்தின் மையக்கருத்தாக ரிக் டால்டன் மற்றும் கிளிஃப் பூத் இடையிலான பிணைப்பு அமைகிறது. ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த ரிக் தனது புகழ் மங்குவதை எண்ணி அஞ்சுகிறார் ஆனால் அவரது ஒவ்வொரு சரிவிலும் நிழலாக நின்று தாங்கிப்பிடிக்கும் கிளிஃப் பூத் ஒரு உண்மையான நண்பனுக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்.

 திரையுலகில் நட்சத்திர அந்தஸ்து என்பது நிலையற்றது என்பதையும் அதே சமயம் தனிமனித உறவுகள் மட்டுமே ஒரு மனிதனை மன உளைச்சலில் இருந்து மீட்கும் என்பதையும் டரான்டினோ மிக அழகாகச் சித்தரித்துள்ளார்.

ஹாலிவுட்டின் பொற்காலம் என்று போற்றப்படும் 1960களின் இறுதிக்காலம் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பதை இப்படம் நுணுக்கமாக விவரிக்கிறது.

 பழைய வெஸ்டர்ன் படங்களின் சகாப்தம் முடிந்து புதிய அலை சினிமாக்கள் உருவான அந்த இடைப்பட்ட காலத்தை ரிக் டால்டனின் தடுமாற்றம் பிரதிபலிக்கிறது.

 ரிக் தனது பழைய பாணி நடிப்பிலிருந்து மாறி புதிய காலத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளப் போராடும் காட்சிகள் ஒரு கலைஞனின் அகப்போராட்டத்தை ஆழமாக விளக்குகின்றன. 

அதே வேளையில் திரையில் நாயகனாகத் தோன்றும் ரிக் நிஜ வாழ்க்கையில் பலவீனமானவராகவும் திரைக்குப் பின்னால் இருக்கும் ஸ்டண்ட் கலைஞர் கிளிஃப் நிஜ வாழ்க்கையில் அசாத்திய துணிச்சல் மிக்க நாயகனாகவும் காட்டப்படுவது முரணான அழகியல் ஆகும்.

வரலாற்றின் கசப்பான பக்கங்களைச் சினிமா எனும் மாயக்கண்ணாடி வழியாக மாற்றி எழுத முடியும் என்ற செய்தியை இப்படத்தின் கிளைமாக்ஸ் உரக்கச் சொல்கிறது. 

நிஜ வரலாற்றில் 1969 ஆம் ஆண்டு நடந்த ஷரோன் டேட்டின் கொடூரக் கொலை என்பது ஹாலிவுட்டின் அப்பாவித்தனம் தொலைந்த ஒரு இருண்ட புள்ளியாகக் கருதப்படுகிறது. 

ஆனால் டாரான்டினோ தனது கற்பனைத் திறத்தால் அந்த இரவில் கொலையாளிகள் ரிக் டால்டனின் வீட்டில் நுழைந்து தர்ம அடி வாங்குவதாகக் காட்டியதன் மூலம் அநீதி வீழ்த்தப்படுவதையும் அப்பாவி உயிர்கள் காக்கப்படுவதையும் ஒரு நீதியாக முன்வைக்கிறார்.

 இது ஒரு வகையில் மறைந்த அந்த கலைஞர்களுக்குத் திரை உலகம் செய்யும் அஞ்சலியாக அமைகிறது.
 இப்படம் நம்பிக்கையின் செய்தியைத் தாங்கி நிற்கிறது. 

தனது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று ரிக் வருந்தும்போது எதிர்பாராத விதமாக ஒரு ஆபத்தான சூழல் அவருக்குப் புகழையும் புதிய வாசல்களையும் திறந்து விடுகிறது. 

பக்கத்து வீட்டு ஷரோன் டேட்டின் அழைப்பு என்பது ஒரு நடிகனுக்குக் கிடைக்கும் வாய்ப்பு மட்டுமல்ல அது ஒரு புதிய தொடக்கத்தின் அடையாளம். 

காலத்தின் ஓட்டத்தில் பழையவை மறைந்து புதியவை வந்தாலும் திறமையும் விசுவாசமும் கொண்டவர்களுக்கு உலகம் என்றும் கதவைத் திறந்தே வைத்திருக்கும் என்பதை இப்படம் உணர்த்துகிறது. 

ஒரு கலைஞன் தன் மீது வைத்திருக்கும் சுயமரியாதையும் அவனுக்குத் துணையாக நிற்கும் உண்மையான நட்பும் இருந்தால் எந்த ஒரு வீழ்ச்சியிலிருந்தும் மீண்டு வரலாம் என்பதே இப்படைப்பு சொல்லும் உன்னத செய்தியாகும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) ஆஸ்கர் (74) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)