பல்லாவரம் | மறைமலை அடிகள் வாழ்ந்த வீடு

பல்லாவரம் மறைமலை அடிகள் வாழ்ந்த வீடு இது, எண் 58,சாவடி தெரு பல்லாவரத்தில் இன்னும் குத்துக்கல்லாக உள்ளது, பல்லாவரத்துக்கும் மறைமலை அடிகளுக்கும் நெடுங்கால பந்தம் உள்ளது.

1960 ஆம் ஆண்டு முதல் பல்லாவரம் போர்ட் ஹை ஸ்கூல் என்று அழைக்கப்பட்டு வந்த அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளி மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலைபள்ளி என பெயர் மாற்றம் கண்டு இன்றும் இயங்கி வருகிறது.

மறைமலை அடிகள் நாகப்பட்டினத்தில் 15.7.1876 அன்று பெருவணிகர் குடும்பத்தில் பிறந்தார், இயற்பெயர் வேதாசலம் சுவாமி , இவர் பெற்றோர் திருக்கழுக்குன்றம் சென்று மூலவரை தரிசித்து மகன் பிறந்ததால் இந்த பெயர் வைத்தனர், மிகுந்த செல்வாக்குடன் வளர்ந்தார், அன்றைய ப்ரிட்டிஷ் இந்தியாவில் நான்காம் ஃபார்ம் (இன்றைய 10 ஆம் வகுப்பு) படித்தவர், அதன் பின்னர் தந்தையார் மறைவுக்குப் பிறகு பள்ளிக் கல்வியில் இருந்து இடை நின்றவர், தமிழ் ஆராய்ச்சியில் தன் முனைப்புடன் கரை கண்டவர், அவரின் தனித் தமிழ் ஆர்வத்தை  நன்கு உணர்ந்த தலைமைத் தமிழ்ப் பேராசிரியராய் இருந்த திரு. சூரிய நாராயண சாஸ்திரியார் அவருக்கு தாம்பரம் மெட்ராஸ் கிருத்துவ கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பரிந்துரை செய்து பணியமர்த்துகிறார், பின்னாளில் அதே கல்லூரியில்  தமிழ்த்துறையில் பேராசிரியராகவும் உயரக் காரணமாகிறார், நாராயண சாஸ்திரி அவர்கள் தன் தீவிர தமிழ்ப்பற்றின் காரணமாக தன் பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக் கொண்டது  பின்னாளில் வேதாசல சுவாமியாக இருந்தவர் மறைமலைஅடிகள் என பெயரை மாற்றிக் கொள்ள காரணமாயிற்று.

இப் பின்னணியில் கற்றது கைமண் அளவு என்று தமிழை 
விடாமல் ஆராய்ச்சி செய்கிறார் மறைமலை அடிகள், தமது 21ஆவது வயதில் முத்தமிழையும் நன்கு படித்து தேர்ந்தும் விட்டார். பிறகு ஆங்கிலம், வடமொழியையும் நன்கு படித்துப் புலமை பெற்றார்.

ஆய்வு செய்து பலபல புத்தகங்கள் எழுதுகிறார்,சிறந்த மேடைப் பேச்சாளராகவும் உருவெடுக்கிறார், தமிழ் சொற்பொழிவு என்பது ஆங்கில சொற்பொழிவை விட எத்தனை இனிமையானது என நன்கு நிறுவிவிடுகிறார், சமகால தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆர்வலர்கள் என அத்தனை செரிவான பட்டிமன்ற விவாதங்களை முன்னெடுத்தவர், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் முன்னோடியாக திகழ்ந்தவர்.

இந்நிலையில் கல்லூரி இளங்கலை படிப்புகளுக்கு தாய்மொழியை பாடமாக எடுத்து படிப்பது அவசியமல்ல, எந்த விருப்ப மொழியையும் படிக்கலாம் என்ற விதிமுறை மெட்ராஸ் பல்கலைக்கழக நிர்வாகத்தாரால் அமல்படுத்தப்பட, கொள்வாரின்றி தமிழ் துறை காற்றாடுகிறது, மெட்ராஸ் மாகாணமெங்கும் நூற்றுக்கணக்கான தமிழ்துறை  பேராசிரியர்கள் பணி இழக்கின்றனர்.

இந்த பின்னணியில் மறைமலை அடிகள் அவர்கள்  10.4.1911 அன்று தமிழ் பேராசிரியர் பணியில் இருந்து விடைபெறுகிறார்,நெடுங்காலம் தாம்பரம் சேலையூரில் தங்கியிருந்த MCC staff quarters வீட்டை விட்டு இடம் பெயர்கிறார்,  பல்லாவரத்தில் தன் சொற்பொழிவு வருமானத்தில் வாங்கிய இந்த முக்கால் ஏக்கர் பண்ணை நிலத்தின் மையத்தில் வளைவுகள் கொண்ட porch  வைத்து  பங்களா வீட்டைக் கட்டி மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளுடன் 1.5.1911 அன்று குடி பெயர்கிறார், பல்லாவரத்துக்கு குடி வந்த போது அடிகளின் வயது 35. அவரின் தாயாருக்கு வயது 70. மனைவிக்கு 32. அடிகளாருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் இருந்தனர். பல்லாவரத்தில் குடியேறிய நாட்களில் கடைசி மகள் திரிபுரசுந்தரி பிறந்தார். இவர் பிறந்து சில திங்களில் அடிகளார் 27.8.1911 அன்று இல்லறத் துறவியானார்.
ஆனால் திரவியம் என்பது தேவை என்பதை உணர்ந்திருக்கிறார், தமிழின் முதல் தொழிற்முறை சொற்பொழிவாளர் என்று மறைமலை அடிகளைச் சொல்லலாம், அந்நாட்களிலேயே திருமணம் மற்றும் இதர பட்டி மன்றங்களுக்கு சொற்பொழிவாற்ற 5000 ரூபாய் சன்மானமாக பெற்றுள்ளார், அதை அவரது தன்வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளதைப் படித்துள்ளேன்.

மறைமலை அடிகள் இந்த பண்ணை வீட்டுக்கு குடிவந்து சுமார் இருபதாண்டுகள் கழிந்த பின்னரே பல்லாவரம் ரயில் நிலையம் திறக்கப்பட்டுள்ளது (11 May 1931), அப்போது பல்லாவரம் சுற்று வட்டாரத்தில் ஓல்ட் ட்ரங்க் ரோடு (GST ரோடு )  இருந்துள்ளது, பழமையான ராணுவ கண்டோன்மெண்ட் இருந்துள்ளது, தர்கா ரோடு இருந்துள்ளது, கார்டன் வுட்ராஃப் என்ற தோல் பதனிடும் தொழிற்சாலை கிழக்கு பல்லாவரத்தில் இருந்துள்ளது, பெருவாரியான தொழிலாளர்கள் பல்லாவரம் சாவடி தெருவில் வீடு கட்டி குடியிருந்ததை கேட்டுள்ளேன், அந்த தொழிற்சாலைக்கு சரியான நேரத்துக்கு வேலைக்கு செல்வதற்கு நேரம் அறிய வசதியாக பல்லாவரம் மாங்காளி அம்மன் கோயில் அருகே  சாவடித் தெரு நாற்சந்தி முனையில் மணிக்கூண்டு இருந்தது, அது 1970 ஆம் ஆண்டு வரை இயங்கி இருந்துள்ளதை அறிவேன், நெடுநாளாக அந்த மணிக்கூண்டு பாழடைந்து கடந்த கால வரலாற்றுக்கு சாட்சியாக இருந்து வந்தது,அந்த மணிக்கூண்டில் மாலை  ஆறு மணி அடிக்க அக்கம்பக்கத்தில் இருந்து மறைமலை அடிகளாரின் சொற்பொழிவு கேட்க கூட்டம் கூடியுள்ளனர், இரவு பத்து மணி அடிக்கும் வரை சொற்பொழிவு நீண்டுள்ளதை கார்டன் வுட்ராஃபில் பணியாற்றிய தொண்டு கிழப்பாட்டன் ஒருவர் என் நண்பனைப் பார்க்க அவன் வீட்டுக்கு போகையில் வரலாற்று ஆவணமாக விவரித்துள்ளார் .

1938 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு குடும்பத்துடன் சிறை சென்றவர் மறைமலை அடிகள், 13.11.1938 அன்று அந்த மாநாட்டில் வைத்து மறைமலை அடிகள் அவர் மகள்,சுதந்திர போராட்ட  தியாகி நீலாம்பிகை , சுதந்திர போராட்ட தியாகி தர்மாம்பாள் அவர்கள் சேர்ந்து தந்தை பெரியார் அவர்களுக்கு " பெரியார்" என்ற தன்னலமற்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
மறைமலை அடிகள் 15.9.1950 அன்று  மறைந்தார்,அவரை பல்லாவரத்தின் மிகப்பழமையான ஜமீன்தார்லைன் சுடுகாட்டில் எரியூட்டினர்.

நாங்கள் 1986 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை இந்த வீட்டின் இடம் வலமாக மாறி மாறி ஒண்டுக்குடித்தன குளுகுளு நாட்டு ஒடு வேய்ந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்தோம், 

அன்றைய நாட்களில் மராமத்து எதுவும் இன்றி மாலைக்கருக்கலில் பதின்ம சிறுவன் எனக்கு பயம் விளைவித்த வீடு இது, சுற்றத்தில் இந்த வீட்டில் மறைமலை அடிகளின் ஆவி உலவுகிறது என்ற கட்டுக்கதை இருந்தது, அவர் குண்டலினியை எழுப்பி சோதனை செய்கையில் இறந்ததாகவும், மரணத்துக்கு பின் மனித நிலை என்ன என்று விடாமல் ஆராய்ந்ததாகவும் வதந்திகள் உலவின, இந்த பிரம்மாண்ட வீட்டின் பின்னால் சாக்கடை,  தடதடக்கும் ரயிலடி,வடகிழக்கு மூலையில் பிரம்மாண்டமான பாசனக் கிணறு, தென்கிழக்கு மூலையில் கூரை இடிந்து பாழடைந்த பணியாளர் குடியிருப்பு அறைகள், அதன் உள்ளே குட்டி போட்ட பூனைகள், சதா கத்தும் புறாக்கள், ஆந்தைகள் என வயிற்றில் கிலியை உண்டாக்கும் சூழல், குண்டு பல்பு மஞ்சள் நிற விளக்கொளி காலத்தில் ஸ்டார்டர் சோக் பட்டி இவை கொண்ட ட்யூப் லைட் கூட ஆடம்பரம் தான், அதன் காரணமாக இருளோ என்று தான் இருக்கும்,  இருளில் இந்த வீட்டைக் கடந்து தெருவில் நடக்கையில் பாடத்தில் படித்த வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு  விளையாட  போகும் போது சொல்லி வைப்பாங்க உன் வீரத்தை கொழுந்தினிலே கிள்ளி வைப்பாங்க என்ற பாடலை சத்தமாக பாடியபடியே கடப்பேன், மறந்தும் கூட இருளில் இந்த வீட்டுப்பக்கம் தலை திருப்பி பார்க்க மாட்டேன்.

பகலில் உள்ளே சென்று தெற்கு புறத்தில் நடுநாயகமாக இருந்த பிரம்மாண்டமான மகிழ மரத்தடியில் விளையாடுவேன்,பாடங்கள் படிப்பேன்,  1988 ஆம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தி பீச் முதல் தாம்பரம் வரை ரயிலில் கதவடியில் நின்று பொதுமக்களுக்கு கையசைத்தபடி வந்தார், 
முதல்நாளே ஒலிபெருக்கியில் அதை காங்கிரஸ் கட்சியினர் சொன்னதால் சுற்று வட்டாரத்தில் இருந்த ஜனங்கள் திரண்டு அந்த மகிழ மரத்தடியில் நின்று அவருக்கு கையசைத்து வழியனுப்பியது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது , மகிழம் பூக்களை பொறுக்கி வந்து நூலில் கோர்த்து சுவாமி படத்துக்கு அணிவிப்பேன், இங்கு சிறிய கிளை நூலகம் வீட்டின் வரவேற்பறையில் செயல்பட்டது, வாரத்தின் சில நாட்களில் மட்டும் மாடி அறை திறக்கப்பட்டு அந்த மரப்படிகளில் பார்வையாளர்களை அனுமதிப்பர், மறைமலை அடிகள் தன் தமிழ் ஆராய்ச்சி பணிக்காகவும் எழுத்துப் பணிக்காகவும் வேண்டி  அப்போதே இருபதாயிரம்  ரூபாய்க்கு பல மொழிப் புத்தகங்கள் வாங்கி சேமித்திருந்தவர், தினமும் டைரி நாட்குறிப்பு  ஆங்கிலத்தில் எழுதியவர், அவர் எழுதிய கைப்பிரதிகளை பத்திரமாக கண்ணாடி அலமாரியில் பூட்டியே வைத்திருப்பர், இன்றும் பல எழுத்தாளரும் எழுதத் தயங்கும் யோகம், ஆத்ம விசாரம், குண்டலினி எழுப்புதல் போன்ற பொருளடக்கத்தில் சுமார் ஐம்பது புத்தகங்களை எழுதியவர், அவர் புத்தகங்கள் அனைத்தும் அடிப்படை மாணவர்களுக்கானதல்ல,தமிழ்  முனைவர் மாணாக்கர்களுக்கானது, எழுத்தை உள்வாங்கவே கடும் உழைப்பை கோரியது, எனவே அவரின் மாடி நூலக அறையை தகுதிவாய்ந்த கொள்வார் அதிகம்  இல்லாததால் பூட்டியே வைத்திருந்ததைக் கண்டிருக்கிறேன், மறைமலை அடிகள் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது தகுதியுள்ள பார்வையாளர்களுக்கு மட்டும் அறைகள் திறக்கப்பட்டன.

பத்து கிரவுண்டுக்கு கூடுதலான மனையில் மேற்கு பார்த்த வீடு இது ,தெருவின் கோணத்துக்கு வீட்டை கட்டாமல் வடக்குத் தெற்காக வீட்டை காற்று வருவதற்கு வேண்டி சாய்வான கோணத்தில் கட்டியதை படத்தில் பாருங்கள்,  மிகச் சிறிய இருபது அடி அகலம் கொண்ட தெரு இது, வீட்டின் முகப்பு தோட்டத்தில் வட்ட நீருற்றும்  கூட இருந்தது, அன்று ஆறடி உயர காம்பவுண்டு சுவர் இருந்தது, உள்ளே வாகனங்கள் நிறுத்த விசாலமான இடம் இருந்தது, நான் நீரூற்று இயங்கிப் பார்த்ததில்லை, 
வீட்டு மேற்கு நுழைவு வாயிலை ஒட்டி வடமேற்கு மூலையில் கலை மன்றம் என்று ஒரு சொற்பொழிவு மேடையும் கூட இருந்தது,இன்றும் உள்ளது, நான்கு புறமும் நீண்ட திறந்தவெளி விட்டு கட்டிய வீடு இது.
இந்த கூகுள் எர்த் படத்தில் இருந்து  இதன் விஸ்தீரண அளவை கணக்கிட்டுள்ளேன்.

கழுதை தேய்ந்து கட்டெரும்பானது போல இன்று நூலகம் திறப்பதில்லை, திறப்பதேயில்லை, 27 ஆவது வார்டு ரேஷன் கடையாக மாறிவிட்டது மறைமலை அடிகளார் வாழ்ந்த வீடு, மறைமலை அடிகள் வாழ்ந்த வீட்டையும் ஐம்பது நூல்களையும்  நாட்டுடைமையாக்கிவிட்டனர் , அவரின் மகன் எழுபது வயதான மறை . பழனியப்பன் ராயப்பேட்டை தொகுப்பு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வறுமையில் உழல்கிறார், மனைவியும் அவரும் அரசு தரும் முதியோர் உதவித்தொகை தலா 1000₹ வாங்கி உய்வதை காணச் சகிக்கவில்லை, ஐம்பது நூல்களின் ராயல்டி எத்தனை லட்சங்கள் பெறும்? அரசு நாட்டுடைமையாக்கிய இந்த பண்ணை வீடு கிரவுண்டு ஒன்றரை கோடி ரூபாய் என கணக்கிட்டாலும் கூட சுமார் பதினைந்து கோடிகள் பெறும், ஆனால் அவர்கள் முதுமையில் வறுமையில் உழல்வது நிதர்சனமாக இங்கே காணக்கிடைக்கிறது,
https://youtu.be/1dKKETPyVW0 

ஆனால் இது வரை  வழிபிறந்தபாடில்லை, நர்மதா பதிப்பகம் உள்ளிட்ட  பதிப்பகங்கள் மறைமலை அடிகளின் நூல்களை பிதுர்ராஜ்ய சொத்துகள் போல பாவித்து மறுபதிப்புகள் கொண்டு வருகின்றன, கொண்டு வரடரடும் , ஆனால் அந்த வறுமையில் உழலும் வாரிசுகளுக்கு கண்ணியமான பங்குத்தொகையைத் தர வேண்டியது தார்மீக கடமையும் தர்மமாகும் .

நான் பல்லாவரம் மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவன் என்பதால் எனக்கு மறைமலை அடிகளின் வாழ்க்கை வரலாற்றை தேடிப் படிப்பதில் பால்யத்தில் ஆர்வம் ஏற்பட்டது, இந்த கட்டுரையை அப்படி கண்டவற்றையும் கேட்டவற்றையும் நினைவில் வைத்து எழுதுகிறேன், விரைவில் மறைமலை அடிகள் அவர்கள் வாழ்ந்த வீட்டிற்கு நேரில் சென்று படங்கள் எடுத்து பதிவிடுகிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)