அழியாத கோலங்கள் (1979) | பாலு மகேந்திரா | சலீல் சவுத்ரி | கமல்ஹாசன்







அழியாத கோலங்கள் (1979) திரைப்படம் இயக்குனர் பாலு மகேந்திராவின் முக்கியமான படைப்பு, coming of age Genre  திரைப்படத்திற்கு சரியான உதாரணம் இப்படம்,படம் பார்த்த அத்தனை பேரையும்  தன் பால்ய நாட்களை தனிமையில்  அசைபோட வைத்து விடும் இப்படம்.

படத்தை திருச்சியை அடுத்த இருங்கூர், பெட்டவாய்த்தலை, சிறுகமணி உள்ளிட்ட ஊர்களில்  படமாக்கியிருந்தார் பாலு மகேந்திரா,படத்தின் தயாரிப்பு அண்ணாசாலை தேவி திரையரங்க உரிமையாளர்களான தேவி பிலிம்ஸ் நிர்வாகத்தார்,எட்டு லட்ச ரூபாய் முதலீட்டில் இத்தனை அழகிய படத்தை உருவாக்கினார் இயக்குனர் பாலுமகேந்திரா.தமிழில் இவர் இயக்கிய முதல் படம் இது, தமிழில் படம் செய்ய மாட்டேன் என பிடிவாதமாக இருந்த இயக்குனருக்கு உற்ற புரிதலுடன் இந்த தயாரிப்பாளர் கிடைக்க தன் கனவுத்திரைப்படத்தை இயக்கினார்.

அவ்வூரின் மூன்று விடலைச் சிறுவர்களான ரகு ,பட்டாபி, கௌரி சங்கரின்  பால்யம் தான் இக்கதை ., இதில் கௌரி சங்கர் (கமல்ஹாசன்) நிகழ்காலத்தில் பெரிய நிறுவனத்தின் CEO, அவருக்கு அன்று காலை ஒரு inland letter பால்ய நண்பன் பட்டாபியிடமிருந்து வருகிறது, அதில் இவர்களின் பால்யத்தின் ஆதர்சமான இந்துமதி டீச்சர் நேற்று இறந்துவிட்டதை பகிர்கிறார் பட்டாபி, அங்கே கௌரிசங்கர் தன் பால்யத்தில் ஆழ்ந்து நிலைகுத்திவிடுகிறார், அங்கே அழகிய கிராமத்தில் இவர்களின் மலரும் நினைவுகள் துவங்குகிறது.

அவர்கள் சதா சர்வ காலமும் வாய்க்கால் குட்டிச்சுவர் மீதும், ரயில்வே கேட்டின் மீதும் அமர்ந்து வயதுக்கு மீறிய பேச்சு பேசுகின்றனர், திருட்டு மாங்காய் உடைத்து தின்கின்றனர், porn புத்தகங்களை படிக்கின்றனர்.

அவ்வூர் தபால் நிலையத்தில் வெண்நிற ஆடை மூர்த்தி ஒரே ஊழியர் அவரே போஸ்ட் மாஸ்டர் அவரே தபால்காரர் ,மிதமான சபலிஸ்ட் .வயது கடந்தும் அவர் மணமுடிக்கவில்லை, வெளியில் கிடைக்கும் உணவை உண்டு , இவர் ஆசைக்கு ஒத்திசையும் பெண்களை ஊரின் பாழடைந்த கோயில் மண்டபத்திற்குள் வைத்து சம்போகம் செய்கிறார்.

அவரை உளவறியும் இந்த மூன்று விடலைகள் அவர் உபயோகிப்பதைப் பார்த்து, இவர்களும் ஆணுறையை எப்படியோ வாங்கியவர்கள் அவ்வூரின் ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் அந்த ஒத்திசைந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று அசடு வழித்தவர்கள், சுற்றி வளைத்து அவளுக்கு அத்தனை சமிஞ்யை காட்டி கூட, அவள் அதை புரிந்து கொள்ளாமல் இவர்களை தவிர்க்க அவளை அக்கா என்று அழைக்கவேண்டியதாகிறது, இவர்கள் அவளிடம் ஒரு சொம்பு  தண்ணீர் வாங்கிக் குடித்து வருகின்றனர், வரும் வழியில் ஆணுறையில் பலூன் ஊதி விளையாடியபடி வருகின்றனர்.

அவ்வூரின் எலிமென்டரி பள்ளிக்கு வரும் திருமணமாகாத ஆசிரியை இந்துமதியின் அமைதியான தோற்றத்தில் எளிமையான அழகில் மயங்கும் இம்மூன்று சிறுவர்கள் அவர் மீது மையல் கொள்கின்றனர்.   
 
இந்துமதி டீச்சருக்கு கல்கத்தாவில் நிலக்கரிச் சுரங்கத்தில்  Mine Engineering படித்துவிட்டு பணிபுரியும் அத்தை மகன் / காதலர் பிரதாப் போத்தன், 

அவரின் அம்மா இந்துமதி டீச்சருக்கு துணையாக இந்த கிராமத்தில் உடன் இருக்கிறார்,  பிரதாப் விடுமுறையில்  இவ்வூருக்கு வருகிறார்.

அவர் இந்துமதி வீட்டின் திண்ணையில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக்கொண்டே ஒயிலாக சிகரட் பிடிப்பதை ஒளிந்து பார்க்கும் இந்த விடலைகள் , நாணல் புற்கள் மண்டிய வரப்பில்  அமர்ந்து சிகரட் வாங்கி வந்து  புகைக்கின்றனர்.

இதில் இந்த மூவரில் வட்டக்கண்ணாடி அணிந்து துரு துருவெனப் பார்க்கும் ரகு மட்டும் இளையவன் ,அவன் பலான செயல்களில் எட்டி நின்று பார்த்து விட்டு ஓட்டமெடுத்து விடுகிறான்.

அழியாத கோலங்கள் படம் ஹாலிவுட்டில் வெளியான Summer of 42 (1971) படத்தின் தழுவல் என்று இயக்குனர் பாலுமகேந்திரா பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.
ஐரோப்பிய சினிமாவில் மூத்த திரைக்கதை ஆசிரியரான Luciano Vincenzoni 2000 ஆண்டில் கடைசியாக எழுதிய படமான Malena விலும்  அழியாத கோலங்கள் படத்தில் இந்த குறும்புக்கார விடலைகள் இந்துமதி டீச்சருக்கு மளிகை வாங்கித் தரும் காட்சி உண்டு, அதே போல இந்துமதி டீச்சர் இயல்பாக தொடுவதை தவறாக புரிந்து கொண்டு மருகும் காட்சிகள், இந்துமதி டீச்சரின் முறைப்பையன்/ காதலன் ஊரில் இருந்து வருகையில் அவரைப் பிடிக்காமல் கருவி முகம் திருப்பிக் கொள்ளும் காட்சிகளுக்கு ஒப்பான காட்சிகள் Malena என்ற இத்தாலிய படத்திலும் இருந்தன.அவரும் summer of 42 படத்தில் இருந்தே உந்துதல் கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இதில் விடலை பட்டாபிக்கு அவன் வீட்டிற்கு அத்தை மகள் பள்ளி விடுமுறைக்கு வருகிறாள், அவளை பட்டாபி உறங்குகையில் பூனை போல நெருங்கி அவள் ஸ்பரிசத்தை நுகர்வது, அவளின் அங்கங்களை உணர்வது எல்லாம் ஒரு அழகிய கவிதை போலவே படமாக்கியுள்ளார் இயக்குனர், 

கரணம் தப்பினால் மரணம் என்பது போல கொஞ்சம் பிசகியிருந்தால் இப்படம் ஊராரால் தூற்றப்பட்டு இயக்குனருக்கு முடிவுரை எழுதியிருப்பார்கள், இயக்குனர் தன் சினிமா வாழ்வு முழுமைக்கும் இருமாந்திருக்க தகுதியான படைப்பாக இப்படத்தை செதுக்கியிருக்கிறார்,

எதுவும் குறையவில்லை, எதுவும் மிகையாகயில்லை, அந்த கெடச்சா உனக்கு சொந்தம் Item Song கூட மிகையாகத் தெரியவில்லை. படத்தில் நாணல் புற்களை மிக அழகாக பெரும்பான்மையான காட்சிகளில் theme ஆகவே காண்பித்துள்ளார், எழில் கொஞ்சும் அந்த இரு புறம் மரங்கள் இடையில் செல்லும் சாலை வங்காள படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது, 

புது வெள்ளத்தில் விடலைகளுடன் நீரில் குதித்து குளிக்கும் சிறுவன் சுழலில் சிக்கி இறக்கிறான், அவன் மரத்தில் மாட்டிய சட்டை,அதன் பின் கண்டெடுக்கப்படும்  ரகுவின் ஜடம்,அவனின் வட்டக் கண்ணாடி நம்மை என்னவோ செய்யும்,

அவனின் தகனம் கூட Silhouette ல் தான் அக்கினிக் கொழுந்தைக் காட்டுகிறார் , உடன் ஊரார் தலைகள்,மஞ்சள் நெருப்புக்கு tight close-up வைக்கிறார் இயக்குனர்.

விடலைச்சிறுவன் ரகுவிற்கு நீச்சல் தெரியாது என்பது எங்கும் வசனமாக வரவில்லை, மாறாக பாசன வாய்க்காலில் நண்பர்கள் நீந்த ,அவர்கள் முதுகில் இவர் தவளை போல தாவி அமர்ந்து நீந்துவது போல ஒரு shot வைத்திருந்தார் இயக்குனர்.

படத்தை நடிகர் கமல்ஹாசன் துவக்கியும் முடித்தும் வைக்கிறார், ஆனால் அவரது இத்தனை அற்புதமான தோற்றம் uncredited என்கையில் வியப்பு மேலிடுகிறது.

40 வருடங்கள் கடந்தும் இப்படம் இத்தனை fresh ஆக இருக்கிறது, ஒவ்வொரு காட்சியையும் நம் வாழ்வில் பொருத்திப் பார்க்கும் படி இருக்கிறது, இது போல ஒரு படம் ,பாய்ஸ்  படம் இருபது வருடங்கள் கடந்து வந்தது ஆனால் இந்தப்படத்தின் தரத்துடன் ஒப்பிடுகையில் முன்னால் நிற்கவில்லை.

படத்தின் இசை சலீல் சௌதுரி அவர்கள்,அற்புதமான பாடல்கள் அற்புதமான பின்னணி இசையை வழங்கியிருந்தார், அபாரமான மௌனத்தையும் காட்சியை உணர்ந்து உள்வாங்கி உடன் இழைத்திருந்தார் ,  

படத்தில் எல்லா பாடல்களையும் கங்கை அமரன் எழுதினார், இப்படத்தில் நடிகை ஷோபாவுக்கு உதவி- இயக்குனர் என்று டைட்டில் க்ரெடிட் வருகிறது, படத்தின் ஒளிப்பதிவு, கதை,திரைக்கதை, வசனம் அனைத்தும் பாலுமகேந்திரா அவர்களே.

நடிகர் பிரதாப் போத்தன் தமிழில் அறிமுகமான படம்.நடிகர் கமல்ஹாசன் இப்படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினாலும் அவருக்கு படத்தில் பெயர் வரவில்லை, ஏன் என்று தெரியவில்லை.

1.பூவண்ணம் போல மின்னும் என்ற  அற்புதமான பாடலை P.ஜெயச்சந்திரன் & சுசீலாம்மா பாடினார்கள்,
https://youtu.be/NjARuzQ4DtI 

இப்பாடலை சலீல்தா 1978 ஆம் ஆண்டு வெளியான ஏதோ ஒரு ஸ்வப்னம் படத்தில் "பூமானம் பூத்துழஞ்நு" என்ற தாசேட்டா பாடிய பாடலின் மெட்டில் இருந்து மீள்உருவாக்கம் செய்தார்.
https://youtu.be/fwVkoxGfKFU

2.நான் என்னும் பொழுது பாடல் டைட்டில் பாடல் எஸ்பிபி பாடியது , மிக அற்புதமான பாடல்,பாட மிகவும் கடினமான பாடல், பயிற்சி இல்லை என்றால் இந்தப் பாடலை பாட முடியாது, அதனாலேயே இப்பாடல் பூவண்ணப் போல புகழ் பெறவில்லை என நினைக்கிறேன்.
https://youtu.be/OFjIk_b11jY

இப்பாடலை இயக்குனர் பாலு மகேந்திரா படத்தின் துவக்கத்திலும் படத்தின் முடிவிலும் அழகாக பகிர்ந்து வைத்துள்ளார், 
https://youtu.be/oLFEFeSYxPc

இப்பாடலை 1971 ஆம் ஆண்டில் சலீல் சௌத்ரி இசை அமைத்த ஆனந்த் இந்தி படத்தில் லதா மங்கேஷ்கர் குரலில் நா ஜியா லகே நா என்ற இனிய பாடலில் இருந்து மீள் உருவாக்கம் செய்தார்.அப்பாடல் இங்கே https://youtu.be/qCqDuxVTbi8

3.கெடச்சா உனக்கு சொந்தம் என்ற தெருக்கூத்து பாடல் ஜானகியம்மா பாடினார்.https://youtu.be/1l2mxojPVS8

#பாலு_மகேந்திரா,#அழியாத_கோலங்கள்,#சலீல்_தா,#சலீல்_சௌதுரி,
#கமல்ஹாசன்,#ஷோபா,#பிரதாப்_போத்தன்,#வெண்நிற_ஆடை_மூர்த்தி,#கங்கை_அமரன்,#சுசீலாம்மா,#P_ஜெயச்சந்திரன்,#SPB


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)