அங்காடி நாய்| கவிஞர் கண்ணதாசன்




"மண்காட்டிப் பொன்காட்டி மாய் இருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே."

மனத்தை "அங்காடி நாய்" என்கிறார் பட்டினத்தார் .கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அதை அர்த்தமுள்ள இந்துமதத்தில் அழகான ,எளிய நுணுக்கமான தத்துவங்களுடன் விவரிக்கிறார்.

கடைத் தெருவில் ஒவ்வொரு கடையாக ஓடி அலைகிற நாயைப்போல், மனமும் ஓடுகிறது என்கிறார்.

மனிதனின் துயரங்களுக்கு எல்லாம் காரணம் மனந்தானே?

"பேயாய் உழலும் சிறு மனமே " என்கிறார் பாரதியார்.

மனதின் ஊசலாட்டத்தை பற்றி அவரும் கவலை கொள்கிறார்.

பயப்படக்கூடிய விஷயங்களிலே, சில சமயங்களில் இந்த மனம் துணிந்து நிற்கிறது.

துணிய வேண்டிய நேரத்தில் பயந்து ஒடுங்குகிறது.

காரணம் இல்லாமல் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு கலங்குகிறது.

நடந்து போன காலங்களுக்காக அழுகிறது.

நடக்கபோகும் எதிர்காலத்தைக் கண்டு அஞ்சுகிறது.

அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்து நிற்கிறது.

அந்த ஆறுதல் தனக்கே தேவைப்படும் போது சக்தியற்றுப் போய்விடுகிறது.

பசுமையை கண்டு மயங்குகிறது.

வறட்சியை கண்டு குமுறுகிறது.

உறவினருக்காக கலங்குகிறது.

ஒரு கட்டத்தில் மரத்துப்போய் விடுகிறது.

ஆசைகளை வளர்த்துக் கொள்கிறது.

ஆசா பாசங்களில் அலை மோதுகிறது.

விரக்தியடைந்த நிலையில், தன் கழுத்தை தானே அறுத்துக் கொள்ளும் வலிமையை தன் கைகளுக்கு கொடுத்து விடுகிறது.

கொலை, திருட்டு, பொய், இரக்கம், கருணை, பாசம், எல்லாவற்றுக்கும் மனமே காரணம்.

மனதின் இயக்கமே மனித இயக்கம்.

எதிலும் துணிந்து நிற்கக்கூடிய சக்தி எப்போது இந்த மனதிற்கு வரும்?

"எல்லாம் மாயையே" என்ற இந்து தத்துவத்தை நம்பினால் வரும்.

கீதையிலே கண்ணன் சொல்கிறான்:

"என்னைப் பரம் எனக் கொள்க; வேறொன்றில் பற்றை அழித்து என்னை தியானித்து வழிபடுக. இறப்பும் பிறப்புமாகிய கடலிலிருந்து உன்னை நான் கைதூக்கி விடுவேன்".

நல்லது; அப்படியே செய்து பார்ப்போம்.

ஆனாலும் முடியவில்லையே!

நெருப்புக்குத் தப்புகிறோம்; நீரில் மூழ்குகிறோம்.

நாய்க்குத் தப்புகிறோம்.

நரியின் வாயில் விழுகிறோம்.

ஒன்றை மறந்தால், இன்னொன்று வருகிறது.

புகை பிடிப்பதை நிறுத்துவதற்காக வெற்றிலைப் போடப்போய், வெற்றிலை போட்டுக்கொண்டே புகைபிடிக்கும் இரட்டைப் பழக்கம் வருவதுபோல், மறக்க முயன்றவற்றை மறக்கமுடியாமல், புதிய நினைவுகளும் புகுந்துக் கொண்டு விடுகின்றன.

கள்ள நோட்டு அடித்ததற்காக ஒருவனை சிறையில் தள்ளினார்களாம். அவன் சிறையில் இருந்துக் கொண்டே கள்ள நோட்டைத் தயாரித்தானாம்! இனி அவனை எங்கே கொண்டு போய் தள்ளுவது?

மனதுக்கு, மனைவியைவிட மற்றொருத்தியே அழகாக தோன்றுகிறாள்.

கைக்குக் கிடைத்து விட்ட மலரில் வாசம் தெரிவதில்லை.

கிடைக்காத மலர்கள் கற்பனையில் எழுந்து மனத்தை இழுக்கின்றன.

நிறைவேறிவிட்ட ஆசைகளில் மனது பெருமிதபடுவதில்லை.

நிறைவேறாத ஆசைகளுக்காகவே இது மரண பரியந்தம் போராடுகிறது.

மகாலட்சுமியே மனைவியாகக் கிடைத்தாலும் சினிமா நடிகைக்காக ஏங்கி நிற்கும் ரசிகனைப்போல், உள்ளவற்றைவிட இல்லாதன குறித்தே மனம் ஏங்குகிறது. 

பிறர் புகழும் போது நெக்குருகுகிறது.

இகழும் போது கவலைப்படுகிறது.

ஒரு ஆயிரம் பின்னல்கள்; ஒரு ஆயிரம் சிக்கல்கள்!

சிலந்தி எப்படி வலை கட்டிற்றென்று அதற்க்குத்தான் தெரியும்.

இந்தச் சிக்கல்கள் எப்படி வருகின்றன என்று இறைவனுக்குத்தான் தெரியும்.

கப்பலில் பயணம் செய்வது நம் பொறுப்பு.

அதைக் கரை சேர்க்க வேண்டியது இறைவன் பொறுப்பு.

அலை இல்லா கடல் ஒன்றை இறைவன் உருவாக்கும் போது சலனமில்லாத மனம் ஒன்றும் உருவாகி விடும்.

'மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்பார்கள்.

'எப்போது ஊற்றுவான் ?' என்று மனம் ஏங்குகிறது.

சலனமும், சபலமும், கவலையும் இல்லாதவர்கள் யார் இருக்கிறார்கள்?

செத்துப் போன தன் குழந்தயை உயிர் மீட்டுத் தரும்படி, புத்த தேவனிடம் ஒரு தாய் கெஞ்சினாள்.

"சாவே நிகழாத வீட்டில் சாம்பல் எடுத்து வா, மீட்டுத் தருகிறேன்" என்று புத்தர் சொன்னாராம்.

தாய், நாடெல்லாம் அலைந்து "சாவே நிகழாத வீடே இல்லையே"! என்றாள்.

"இந்த கதையும் அதில் ஒன்றுதான்" என்று கூறிப் புத்தர் அவளை வழி அனுப்பினாராம்.

கவலையே இல்லாத மனிதன் என்று ஒருவனை நான் பார்த்துவிட்டால், நான் கவலைபடுவதில் அர்த்தம் உண்டு. 

எனக்கு நூறு என்றால் என்னொருவனுக்கு இருநூறு. அதுவரைக்கும் நான் பாக்கியசாலி.

அவனைவிடக் குறைவாகத்தானே இருக்கிறேன்.

எல்லாம் நிறைவேறி, நிம்மதியாக உயிர் விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை.

ஒருவனுக்கு துயரம் மனைவியால் வருகிறது.
ஒருவனுக்கு மக்களால் வருகிறது
ஒருவனுக்கு நண்பனால் வருகிறது
ஒருவனுக்கு எதிரியால் வருகிறது
ஒருவனுக்கு சம்பந்தமே இல்லாத எவனோ ஒருவனால் வருகிறது

கடலில் பாய்மரக் கப்பல்தான் காற்றிலே தள்ளாடுகிறது.

எதிலும் கெட்டிக்காரனாக இருப்பவனுக்குத்தான் அடிக்கடி சஞ்சலம் வருகிறது.

காகிதக் கப்பலுக்கு என்ன கவலை?

மனம் காகிதம் போல மென்மையாக இருக்கட்டும்.

சுகதுக்கங்கள், கோடை, பனி, மழை- அனைத்தையும் தாங்கட்டும்.

மனதுக்கு வருகின்ற துயரங்களை பரந்தாமனிடம் ஒப்படைத்து விடு.

பிறர்க்கு தொல்லை இல்லாமல் உன் மகிழ்ச்சியை நீ அனுபவி.

சாவைதான் தவிர்க்க முடியாது. சஞ்சலத்தைத் தவிக்க முடியும்.

சிறு வயதில் எனக்கு தாய் தந்தையர்கள் சாவார்கள் என்று என்னும்போது தேகமெல்லாம் நடுங்கும்.

ஒரு நாள் அவர்கள் இறந்தே போனார்கள்.

நாற்ப்பதெட்டு மணி நேரத்தில் நடுங்கிய தேகம் அடங்கி விட்டது.

"ஐயோ, இது நடந்து விடுமோ?" என்று எண்ணினால்தான் துடிப்பு, பதைப்பு.

"நடக்கத்தான் போகிறது" என்று முன்கூட்டியே எண்ணிவிட்டால் அதிர்ச்சி உன்னிடம் நெருங்காது.

தர்மனும் அழுதான். பீமனும் அழுதான். ராமனும் அழுதான், ராவணனும் அழுதான்.

நெஞ்சத்தின் பதைப்பை "கடன் பட்டார் நெஞ்சம்" என்றான் கம்பன்.

பட்ட கடன் ஒன்றானால், பத்திரத்தை தீர்த்து வாங்கி விடலாம்.

ஒவ்வொரு கடனையும் தீர்த்த பிறகும், வட்டி பாக்கி நிற்கிறது.

மழை நின்று விட்டாலும், தூவானம் தொடர்கிறது.

மரண பரிபந்தம் மனம் தன் வித்தையைக் காட்டிக் கொண்டே இருக்கிறது.

மனதுக்கு இப்படி எல்லாம் சுபாவங்கள் உண்டு என்று இருபது வயதிலேயே தெரிந்துக் கொண்டு விட்டால், பிறகு வருவனவெல்லாம் "மாயையே" என்று வைராக்கியம் பிறந்து விடும்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே 
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே 
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே 

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றுங்கள். மனம் அங்காடி நாய்போல் அலைவதை அடக்குங்கள். சாகப்போகும் கட்டைக்கு சஞ்சலம் எதற்கு?

செத்தார்க்கு நாம் அழுதோம்.
நாம் செத்தால் பிறர் அழுவார்.
அதோடு மறந்து விடுவார்.

மனதுக்கு நிம்மதியைக் கொடுங்கள்.

பகவான் கிருஷ்ணனின் காலடிகளை பிடித்துக் கொண்டு தூங்குங்கள்.

இங்கே இருந்தாலும் அவன் தான் காரணம்; அங்கு சென்றாலும் அவன் தான் காரணம்.

இங்கிருந்து அவன் கொண்டுப் போகும் தூதுவனுக்குப் பெயர் தான் மரணம்.

அடுத்த ஜனனத்தை அவன் நிர்ணயக்கட்டும்.

(நன்றி:- கவிஞர் கண்ணதாசன் அரத்தமுள்ள இந்துமதம் 2 ஆம் பாகம்)


Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)