இதா இவிட வரே (இதோ இங்கு வரை)|1978 | மலையாளம் | P.பத்மராஜன்












பப்பேட்டா என்ற பி.பத்மராஜன் கதை, திரைக்கதை எழுதி ஐ.வி.சஸி இயக்கிய படங்களுக்கு ஒரு ப்ரத்யேகதை உண்டு,வணிக அம்சங்கள் கலந்திருந்தாலும் ஒரு  அபாரமான எளிமையின் அழகியல் பொதிந்த கலைப்படைப்பாக அவை மிளிரும்.

இதா இவிட வரே படத்தின் திரி ப்ரதிகாரம் தான் ,அதாவது பழிவாங்குதல் ,இது விஸ்வநாதனின் ப்ரதிகாரம், பப்பேட்டாவின் vengeance எப்போதும் அதிரவைப்பது,  தனித்துவமானது, இக்கதை பகையாளி குடும்பத்தை உறவாடிக் கெடு என்னும் பாணி பழிவாங்குதல் கொண்டது.,இது பப்பேட்டா கதை எழுதி மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்ற இதா இவிட வரே (இதோ இங்கு வரை)|1978

பழிக்குப் பழி வாங்கியவனை அவன் மனசாட்சி கூட இறுதியில் மன்னிக்காது என்ற கூற்றை பலமாக முன்வைப்பவை பப்பேட்டாவின் கதைகள் , அவரது பெருவழியம்பலம், கரிம்பின்பூவின்அக்கரே துவங்கி பழிவாங்க அலைபவனின் மனசாட்சியை  நுணுக்கமாக அணுகிய படைப்புகள், இதா இவிட வரே திரைப்படம் கூட அப்படி ஒரு Non linear பாணி முத்து.


இப்படத்தின் போஸ்டர் தனித்துவமானது, எங்கள் பல்லாவரம் தேவி (ஜனதா)தியேட்டரில் ஒவ்வொரு வெள்ளியும் திரையிடும் படங்களுக்கு சாவடித் தெருவில் தெரு துவக்கத்திலும் முடிவிலும் கருப்பு வெள்ளை,வண்ணப் போஸ்டர்கள் ஒட்டுவார்கள், அதில் அனேகம் ஐ.வி.சசி இயக்கிய மீள் வெளியீட்டு திரைப்படங்களாகவே இருக்கும்,காரணம் பத்து மடங்கு கச்சவடம் தான்.

அப்போஸ்டர்களில்  A என்ற வாசகம் பெரிதாக இளைஞர்களை ஈர்க்கும் படி இருக்கும் , அப்படி ஒட்டிய போஸ்டர்களில் இந்த நடிகை ஜெயபாரதி முதுகு தெரியும்படியான போஸ்டர் எனக்கு மறக்கமுடியாதது, 

அப்படித்தான் இயக்குனர் ஐவி.சசி என் மனதில் பதிந்தார் , ஆனால் எப்படிப் பட்ட ஒரு படைப்பை  எப்படி தவறாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர்,
எத்தனை பேர் பப்பேட்டாவின்   படைப்புகளுக்கு உரிய மரியாதையைத் தந்தனர் என்ற ஐயம் எனக்கு உண்டு,  அவரின் படைப்புகளுக்கான சரியான மதிப்பீட்டை  என்னால் தாமதமாகவே அவருக்குத் தர முடிந்தது.


இதா இவிட வரே படைப்பு சினிமா ஆர்வலர்களால் மிகவும்  கொண்டாடப்பட்டது இப்படைப்பில் நான் ரசித்ததை இயன்ற வரையில் இங்கு ஆவணப்படுத்தியுள்ளேன்.


இனி கதைக்குள் பயணிப்போம், விசுவநாதன் (M.G.சோமன்)என்ற ஓவியன் வயநாட்டின் அந்த அழகிய காயல் கிராமத்திற்குள் விடியலில் வருகிறான், ஜீன்ஸ் கால்சராயும் ஜீன்ஸ் சட்டையும் , நளினமான சப்பாத்துகளும் அணிந்திருக்கிறான், 
அங்கு அரைத்தூக்கத்தில் இருந்த கட்டுமஸ்தான  படகுக்காரனை எழுப்பி (ஜெயன்)  போகலாமா? எனக் கேட்கிறான், அவன் எங்கே போகனும்?  என்று கேட்க ,  இதா இவிட வரே  என்று அக்கரையைச் சுட்டுகிறான்.இது போல படத்தில் நான்கு இடங்களில் இந்த இடம் சுட்டுதல் வருகிறது.
அக்கரை காயல் கிராமத்தில்  படகுக்காரன்  நன்கு பழகிவிட்ட விஸ்வநாதனுக்கு நல்ல தேநீராக வாங்கித் தந்து நட்பாகிறான், 
அங்கு விஸ்வநாதன் முகத்தில் அந்த காயல் கிராமத்தின் பரீட்சயம் நன்கு தெரிகிறது, நெடுங்காலம் கழித்து தாய் மண்ணை மிதித்த திருப்தி அது, அவன் தாய் கமலாட்சியின் குரல் அவன் காதில் மட்டும் கேட்கிறது.


அங்கு சில நாட்கள் தங்க வீடு கிடைக்குமா? என்று ஆவலுடன் கேட்கிறான் , அவ்வூரின் வேலை வெட்டியில்லாத , சிறு சிறு பொய்கள் பேசி களவுகள்  செய்யும் நாணு (அடூர் பாஸி )வீடு பிடித்துத் தர ஆர்வமாகி முன் வருகிறான்,
 உடனே சென்று அங்கு முப்பது வருடங்களாக பூட்டிக்கிடக்கும் கணவன் மனைவியாக கொலையானோரின் விட்டுச் சாவியை அவ்வீட்டருகே வசிக்கும் சங்கரி என்ற வாழ்ந்து கெட்டு சோரமும் போனவளிடமிருந்து  வாங்கி வருகிறான், 


ஐம்பது ரூபாய் வாடகையாவது உனக்கு வாங்கித் தருகிறேன் என்று  அவளுக்கு ஆசை காட்டுகிறான், அவள் பணம் என்றதும் காணாதது கண்டது போல கிடந்து அலைகிறாள்.
கையோடு விஸ்வநாதனை அந்த பாழடைந்த ஓட்டு வீட்டுக்கு கூட்டிப்போய் விட்ட நாணு, காபி வாங்கி வர ஃப்ளாஸ்கை எடுத்துப் போகிறான், அப்போது முப்பது வருடங்களுக்கு முந்தைய நினைவுகளில் மூழ்குகிறான் விஸ்வநாதன்.

இவர் தந்தை படகுக்காரன் வாசு அந்த வயநாட்டு காயலின் பெரிய பயணிகள் படகின் ஓட்டுனர்,  நல்ல சம்பளம் வாங்குபவர், தினமும் மீன், கறி , சாராயம் ,இரண்டு மனைவிகள் ,அதுவும் ஒரே வீட்டில்  வசிக்கும் அக்கா தங்கை சக்களத்திகள் என்று தினம் ராஜபோகம் அனுபவிக்கிறார்.

அவரின் கூடாநட்பாக வாத்துகள் மேய்க்கும் முரடன் பய்லி ஆசான் (மது) அண்டை வீட்டில் வசிக்கிறான்,ஆசான் என்றால் அனுதினம் குடித்து விட்டு குஸ்தி போடுவதால் வைத்திருக்க வேண்டும், 

தினமும் அந்தியில் வாத்துகளை கூடடைத்துவிட்டு வாசு வீட்டில் பய்லியும் அவன் அண்ணன் வக்கச்சனும் (பகதூர்) நடு நிசி வரை சாராயம் குடித்து இறைச்சி சாப்பிட்டு கும்மாளம் அடித்துவிட்டுச் செல்வதைப் பதிவாக வைத்திருக்கின்றனர்,

இதற்கு கறி மீன் பொறித்துத்  தந்து கிளாஸில் சாராயம் சோடா  பக்குவமாக ஊற்றி கலந்து  தருவது வாசுவின் சின்னப் பெண்டாட்டி சங்கரி, 
இந்த கெடுபழக்கம் சங்கரிக்கும் பைலி ஆசானுக்கும் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறது, இரண்டாமவள் சங்கரி (ஸ்ரீலதா) பார்க்க அழகாக தள தளவென இருப்பதால் வாசுவுக்கு எப்போதும் அவள் மீது தான் அதிக மையல், 

தன் மூத்த மனைவி கமலாட்சி (கவியூர் பொன்னம்மா ) மீது அன்பு இருந்தாலும் காதல் மட்டும் இல்லை,வாசுவின் பிரியமுள்ள ஒற்றை மகன் விசுவநாதனுக்கு அவள் தாய் என்பதால் இன்னும்  இங்கே பிழைத்து கிடக்கிறாள், 

கணவன் மதிக்காத மனைவியாதலால் அவளை தங்கை சங்கரி அவளை மதிப்பதேயில்லை, அவள் அறியவே சங்கரி மற்றும் பைலிஆசான் சரச லீலைகள் பகலில் மூத்தவள் காயலில் குளிக்கப் போகையில் இனிதே வீட்டுக்குள் அரங்கேறுகிறது,
அது போல ஒரு அசந்தர்ப்பத்தில் சிறுவன் விஸ்வநாதன் உள்ளே தாழிட்ட கதவைத் வேகமாய் தட்டுகிறான், அங்கே இவர்களின் சல்லாபம் கலைந்து, கதவு திறக்கப்பட்டு பைலி ஆசான் வெளியே வந்து அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு வெளியேறுகிறான்.

சின்னம்மா சங்கரி சிறுவனிடம் பைலி ஆசான் பீடிக்கு நெருப்பு கேட்டு வந்தவன் எதிர்பார்க்காத போது கதவை உள்ளே தாழிட்டான் என்றும், நல்ல வேளை நீ வந்தாய், உன் அம்மா வந்திருந்தால் அப்பாவிடம் வத்தி வைத்து பெல்டால் மரண அடி வாங்கித் தருவாள் என்று அவனை வார்த்தைகளால் குளிர்விக்கிறாள், விஸ்வநாதன் இன்றிரவு தந்தை வந்ததும் இதை நிச்சயம் சொல்வேன் என்று முகத்தை திருப்பிக் கொள்கிறான். 

இரவு சிறுவன் தந்தையிடம் சொல்லும் முன் அவளே சென்று பைலிக்காரன் பீடிக்கு நெருப்பு கேட்க வந்தவன் கதவை சார்த்தி என் கையை பிடித்துவிட்டான் என அழுதவள், அப்போது அக்கா கமலாட்சி குளிக்கப் போயிருந்தாள், விஸ்வநாதன் இதற்கு சாட்சி என்று கயிறு திரிக்கிறாள்,
நீ குளிக்கப் போயிருந்த போது இது நடந்தது  உண்மையா? என்று கமலாட்சியைக் கேட்க, இது என்ன பிரமாதம் நான் வீட்டில் இருந்தாலும் இது நடந்திருக்குமே, இவர்கள் தான் என்னை பொருட்டாகவே மதிப்பதில்லையே, இதை நீங்கள் முன்பே யோசித்திருக்கனும், என்று குத்துவாக்கு கூறுகிறாள்,

இதை தாங்கிக் கொள்ள முடியாத வாசு பெல்டால் மனைவி கமலாட்சியையும் அடித்துவிட்டு, தன் கட்டாரியை எடுத்துக் கொண்டு கருவியபடி பாலத்தின் குட்டைச்சுவரில் பய்லிக்காரனுக்கு காத்திருக்கிறார், அந்தி சாய்கையில்  பைலிகாரனும் அவன் அண்ணன் வக்கச்சனும் வாத்துகளை கூடடைக்க மேய்த்து வருகின்றனர், வக்கச்சன் மூத்தவர் என்றாலும் சாது, நயவஞ்சகமற்றவர், தன் கட்டுக்கடங்காத தம்பியை பல சந்தர்ப்பத்தில் திருத்தமுடியாமல் தோற்ற வியக்தி.

கோபமாக முறைத்தபடியிருக்கும் வாசுவிடம் பைலி தோளில் கை வைத்து என்ன கோபம் உனக்கு?  எனக் கேட்டது தான் தாமதம்,வாசு கட்டாரியுடன் பாய்கிறார்,  இருவருக்கும் கடும் சண்டை நிகழ்கிறது, பாலத்தினடியில் நீரில் வைத்து கடும் சண்டை,  மூர்க்கமாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள, வக்கச்சன் எத்தனை விலக்கிவிடப் பார்த்தும் முடியவில்லை,

மழை கொட்டத் துவங்குகிறது,  சிறுவன் விஸ்வநாதன் இந்த கடும் சண்டையை கண்ணுற்றவன் தாயை ஓடிப்போய் அழைத்து வருகிறான், அங்கே கமலாட்சி இருவரையும் தடுக்க தைரியமாக உள்ளே புகுந்து போராடுகிறாள், வாசுவின் கத்தி பைலியால் பறிக்கப்படுகிறது, அங்கே பைலியின் கைக்கு கோடாரி கிடைக்கிறது,

 ஆவேசத்தின் உச்சத்தில் பைலி வாசுவின் மனைவி கமலாட்சியை கழுத்தில் வெட்டிக் கொல்கிறான், தடுக்கப் பாய்ந்த கணவன் வாசுவையும் கழுத்தில் வெட்டிக் கொல்கிறான், சிறுவன் பைலி அங்கே உறைந்து நின்றவன் அங்கு ஒரு நொடி கூட நிற்க விரும்பாமல் எங்கோ ஓடி விடுகிறான், 
எங்கு சென்றான் எனத் தெரியவில்லை, பின்கதை எதுவும்  சொல்லப்படுவதில்லை,அப்படி ஓடியவன்  இதா இவிட வரே என்று இவ்வீட்டிற்கு மீண்டும் பிரதிகாரம் எடுக்க வந்து விட்டான்.

விஸ்வநாதன் மிக மெதுவாக ஆனால் தீர்க்கமாக  செயல்படுகிறான், பக்கத்து வீட்டில் வசிக்கும் விவசாயி சிவராமன் நாயர் ( சங்கராடி ) மகள் தங்கமணியை (விதுபாலா) இவனுக்குப் பிடிக்கிறது, அவளுக்கும் இவனைப் பிடிக்கிறது, இருவருக்கும் காதல் அரும்பினாலும், இவன் ஆற்றவேண்டிய கடமை இருப்பதால்  எதற்கும் அவசரப்படுவதில்லை, அவரிடம் சென்று பெண் கேட்பதில்லை, அடிக்கடி அவள் சிகப்பு ரோஜாவை இவன் வீட்டு எழுத்து மேஜையில் வைத்து ஒளிந்து நின்று பார்க்கிறாள்.

அவ்வூரில் காயல் கரையில் , வயல்வெளிகளில்  வைத்து பல ஓவியங்கள் வரைகிறான் விஸ்வநாதன், தங்கமணியிடமும் அவளை வரைய சம்மதம் கேட்கிறான், அதை விற்காமல் , தனித்திருக்கையில் பார்த்து ரசிப்பேன் என்கிறான்.அதே போலவே வரையவும் ஆரம்பிக்கிறான்.

இப்போது சாராயக்கடையில்  குடிக்கையில் அங்கே சிப்பந்தி வந்து உள்ளூர் வஸ்தாது பைலி ஆசானுக்கு நூறு மில்லி சாராயம் மாமுல் கேட்டதாகச் சொல்கிறான் , இவன் தர மறுக்க அங்கே இவன் எதிரே பெஞ்சில் வந்து அமர்ந்து,இது தான் இங்கே பதிவு, எனக்கு முதல் மரியாதை செய்தால் தான் நீ இங்கே குடிக்கலாம் என்ற பைலி, விசுவநாதனை சிவந்த கண்ணால் நோக்கி ஊடுருவி பயமுறுத்துகிறான் , 

சாராயக்கடையே அமளி துமளியாகிறது,முகங்கள் மறைந்து பார்க்கிறது,  விசுவநாதன் தனக்கு ஊற்றிய சாராய கிளாசை பைலி ஆசான் எடுத்து வாயருகே பருக கொண்டு செல்ல, அதை தட்டிவிட்டு உடைக்கிறான் விசுவநாதன், பைலி ஆசான் முதல் முறையாக மலைத்து உறைய, விசுவநாதன் எஞ்சிய சாராயத்தை தரையில் ஊற்றுகிறான், பைலி ஆசான் இப்போது ரத்தபலி ஆகும் என மிரட்ட,அப்படியென்றால்  உன் இடத்தில் ஆகட்டும், அங்கே நேரில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு காசை தரையில் வீசிவிட்டு அகல்கிறான்.

மறுநாள் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு பைலிஆசான் வீட்டிற்கு நேராக செல்கிறான் விசுவநாதன், அவனை எதிர்கொண்ட வக்கச்சனிடம், பைலியை சாராயக்கடை சண்டைக்கு நேருக்கு நேர் கண்டு வழக்கை தீர்க்க வந்ததாகச் சொல்கிறான் விசுவநாதன்.அங்கே பைலி ஆசானின் மகள் இளமை அழகு திமிரும் அம்மினியைப் பார்க்கிறான் விசுவநாதன், மனதிற்குள் வேறு விதமாக திட்டம் தீட்டிக்கொண்டு அங்கிருந்து அகல்கிறான். 

பைலி வந்தவுடன் இது என்னடா புது வம்பு இழுத்து வந்தாய் ,என்று விசுவநாதன் வந்த விபரம் சொல்கிறார் வக்கச்சன், இது வயசுப்பெண் உள்ள இடம், இனி தள்ளு முள்ளு வேண்டாம், அவனை நேரில் பார்த்து சமாதானம் பேசி வா என அனுப்புகிறார் .

பைலி ஆசான் விசுவநாதனின் வீட்டு வெளியே நின்று குரல் கொடுக்கிறான், விசுவநாதன் வெளியே வந்து அவனை நெடுநேரம் கண்ணால் முறைத்து மீண்டும் பயமுறுத்துகிறான், பைலியும் அசராமல் அங்கேயே நிலைகுத்தி  நிற்கிறான், 

இப்போது ஓங்கிக் குரலெடுத்து நட்புடன் சிரிக்கிறான் விசுவநாதன் ,பைலியும்  கைகொடுத்து அவன் தோளில் தட்டிச் சிரிக்கிறான், அதுமுதல் இருவரும் நட்பாகின்றனர், சாராயக்கடையில் அமர்ந்து மணிக்கணக்கில் குடிக்கின்றனர், காயலில் படகில் அமர்ந்து தான் சந்தர்ப்பவசத்தால் இரு கொலைகள் செய்து விட்டு 7ஆண்டுகள் சிறையில் கழித்துத் திரும்பியதை விவரிக்கிறான் பைலி, சலனமின்றி அமைதியாக கேட்கிறான் விஸ்வநாதன்.

பைலி சிறையில் இருந்து திரும்பியவன் மீண்டும் அண்ணன் வக்கச்சனுடன் இணைந்து வாத்து மேய்க்க மேற்கில் மழைமேகத்தைத் தொடர்ந்து போகிறான், அங்கே அழகிய கிராமத்தின் திருவிழாவில் வைத்து தந்தையில்லாத ஏழைப்பெண் ஜானுவை (சாரதா) பார்த்து எப்படியாவது அவளை அடைய ஆசைப்படுகிறான்,
இவனின் முரட்டுத்தனத்தையும் மீறி அவளுக்கு அவனை உள்ளூரப் பிடித்ததை அறிகிறான் பைலி, அவள் ஒரே சொந்தமான ஏழை சித்தியிடம் (மீனா) சென்று சந்தையில் வாத்துக்களை விற்ற பணத்தை விசிறிக் காட்டுகிறான், 

இரவு வீட்டிற்கு வருவேன் என்று சொன்னபடி வீட்டிற்கு வந்து விடுகிறான், ஜானுவை நான் ஏற்கிறேன் என்று சொல்லி பணத்தை அங்கே தரையில் பரிசமாக வைத்து விட்டு, அவள் அறைக்குள் சென்றவன், அவளைத் தழுவுகிறான், அவளுக்கு இனம் புரியாத பயமும், நாணமும், அந்த அழுக்கு முரடன் மீது பிரியமும் ஒருங்கே தோன்றுகிறது, அவள் மெல்ல பைலியை வரித்துக் கொள்ளத் துவங்குகிறாள், 
மறுநாள் விடியலில் பைலிக்கு அவசரப்பட்டு  முந்தியை விரித்தோமோ என்று அழுகிறாள் ஜானு, அவன் மடியில் முகம் புதைத்து அழுகிறாள், ஒரு மாதம் செல்கையில், மழை மேகங்கள் மேற்கில் வேகமெடுக்க, வாத்துக்களின் இனப்பெருக்கத்துக்கும் மேய்ச்சலுக்கும்  கால்நடையாக வாத்தின் பின்னால் போகும் நாடோடிக் கூட்டம் என்பது நினைவுக்கு வர, 

பைலி , ஜானுவின் அம்மாவிடம் ஜானுவை கிருத்துவராக மதம் மாற்ற பள்ளியில் அச்சனிடம் பேசனும், சொந்த பந்தத்துக்கு பேசனும் என்று சாக்கு போக்கு சொல்லியவன்,  ஜானுவை நான் கைவிடமாட்டேன்,
என்று வாக்குறுதி தந்துவிட்டு வாத்துக்கூட்டங்களின் பின்னால் செல்லும் வக்கச்சனுடன்  இணைந்து கொள்கிறான்.

மூன்று வருடங்களுக்குப் பின் அந்த காயல்கரை கிராமத்திற்கு மீண்டும் வரும் பைலி வீட்டின் கூடத்தில் பெண் குழந்தை விளையாடுவதைப் பார்க்கிறான், பைலியை வேகமாக தடுத்து நிறுத்திய ஜானுவின் அம்மா, எங்கே வந்தாய்? மகாபாவி என அக்கினிப்பிழம்பாய் வெடிக்கிறாள்.,

பைலி ஜானு எங்கே ? எனக்கேட்க ,ஜானு இந்த பெண்குழந்தையை பெற்று இறக்கியவள் ,குழந்தையின் முகத்தைக் கூட பார்க்காமல் இறந்து விட்டாள், உன்னை வருவாய்,வருவாய் என நம்பி நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்து மோசம் போனோம் என்கிறாள், உன் நிழல் கூட இங்கே விழக்கூடாது, வெளியே போ என்கிறாள்.பைலி குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க வெளியேறுகிறான், வீட்டில் சென்று அண்ணன் வக்கச்சனிடம் ஜானு பிள்ளைப்பேறில் இறந்த விஷயம் சொல்கிறான் பைலி, 

மறுநாளே மீனாவின் வீடு சென்ற வக்கச்சன் அவள் செலவுக்கு நூறு ரூபாய் தந்து விட்டு, நைச்சியமாகப் பேசி குழந்தை அம்மினியை தூக்கி வந்திருக்கிறார், இத்தனை நாள் இருவரும் கண்ணுக்கு கண்ணாக அம்மினியை ஊட்டி , போற்றி வளர்த்ததைச் சொல்கிறான் பைலி, அவள் எங்கள் சொத்து ,அவள் எங்கள் நிதி என்கிறான், அவளை மிகவும் உயர்ந்த ஒருவனுக்கு தான் கட்டிக்கொடுப்பேன் என்கிறான்.
இவ்வார்த்தை விஸ்வநாதனுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த திருப்தியைத் தருகிறது.,

பின்னாட்களில் அம்மினியின் வாய்த்துடுக்கிற்கு தீனி போடுவது போல நிறைய வம்புகள் பேசி செல்லமாகச் சீண்டி தன் வழிக்கு கொண்டு வருகிறான் விசுவநாதன்.,
அன்று ஒருநாள் வக்கச்சனும் பைலியும் தன் வீடு வந்து பக்கத்து ஊர்  சந்தைக்கு வருந்தி அழைக்கையில் தனக்கு வேலை இருக்கிறது என்று பொய் சொன்னவன், அவர்கள் சந்தைக்கு புறப்பட்டு போனதை உறுதி செய்கிறான், 

பைலியின் வீட்டிற்கு செல்லும் வழியில் அம்மினியைப் பார்க்க,இருவரும் நெடுநேரம் பேசி கதைக்கின்றனர், அப்போது மழை ஆரம்பிக்க இருவரும் அவளின் குடிசைக்கு ஓடி விரைகின்றனர், அம்மினி உள்ளே சென்று கதவை வெறுமன சாத்திய படி உடைகளை மாற்றுகிறாள், அவள் பாவாடையை உயர்த்திக்கட்டி,முழு நிலவு போல  பளிங்கு முதுகை கதவுக்கு காட்டியிருக்க விஸ்வநாதன்  கதவு திறந்து உள்ளே அருகில் வந்து தழுவி அணைக்கிறான், கூதலுக்கு அவளுக்கு சுகமாக அவன் உடம்பு வெப்பம் மாறுகிறது,
அவன் முழுமையாக அம்மினியை ஆக்கிரமிக்கிறான், அவளின் பளிங்கு முதுகில் படரந்த சுருள் சுருளான நீண்ட  கேசத்துடன் ஈரப்பாவாடையை  உயர்த்திக் கட்டிய  அவளை முழுமையாக விசுவநாதன் ஆட்கொள்கிறான்,

அவள் தன் அம்மா ஜானு போல கூடல் முடிந்ததும் தன்நிலை உணர்ந்தவுடன் அழுவதில்லை , அத்தனை அகமகிழ்கிறாள், இந்த திருமணத்துக்கு முந்தைய கூடாக்காமத்தையும் சாதாரணமாகவே நினைக்கிறாள் அம்மினி,

இவன் தன்னை திருமணம் செய்வானா என எண்ணுவதில்லை, இவனை திருமணம் செய்யச் சொல்லியும் கேட்பதில்லை, அம்மினி கூடலில் ராசலீலையில் இவள் அப்பன் பைலி போல , இவளை  கர்ப்பமாக்கி கைவிட்டு இவள் அப்பனை விட்டு கால்பிடிக்க வைப்பேன் என்று விசுவநாதன் இருமாப்புடன் உறுதி பூணுகிறான்.

இந்த கூடல் காட்சியை ஒளிப்பதிவாளர் ராமசந்திரபாபு அவர்கள் விரசமின்றி அத்தனை அழகியலுடன் படமாக்கியிருந்தார், சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய நடிகை  ஜெயபாரதியின் அழகை இத்தனை பூரணமாக ஒரு படைப்பில் யாரும் கவர்ந்து வந்ததில்லை என்றே சொல்லலாம்.

மறுநாள் காலை சிவராமன் நாயர் விசுவநாதனிடம் வந்தவர் தன் மகள் தங்கமணிக்கு வரன் தகைந்திருப்பதாகச் சொல்கிறார், நாளையே திருமணம் ,மாப்பிள்ளைக்கு வயது கூடத்தான், என்ன செய்ய ?  இந்த வட்டாரத்தில் ஏழைப்பெண்ணுக்கு நல்ல வரன் கிடைப்பது அத்தனை எளிதல்ல, அவள் சம்மதத்தை கேட்டால்,அவள் மறுப்பாள்,எனவே நான் கேட்கவில்லை என்கிறார் சிவராமன் நாயர், 

மறுநாள் நெல்வயலில் ஓவியப் பலகையை வயல் வறப்பில் ஊன்றி  கசவுப் புடவை அணிந்த  தங்கமணியின் ஓவியத்தை சிரத்தையாக வரைகிறான் விசுவநாதன்,அவனை முகூர்த்தத்திற்கு அழைக்க வருகிறான் நாணு, 

இவன் ஓவியம் வரைய வேண்டும், பின்னர் வருகிறேன் என மறுக்கிறான், சற்று நேரத்தில்  பின்னணியில் காயலில் படகில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் நாதஸ்வரம் மேளம் முழங்க வருவதற்கும்   விஸ்வநாதன் வரையும் ஓவியத்தில் தங்கமணி கழுத்தில் பொன் தாலியை வரைவதற்கும் சரியாக இருக்கிறது,

 விசுவநாதனுக்கு இவ்வூருக்கு  வந்து நாளாகிறது புரிகிறது, முடிக்க வேண்டிய வேலை இன்னும் இருப்பது அவனை பயமுறுத்துகிறது.
சில வாரங்கள் கழித்து பைலி வீட்டுப்பக்கம் சென்று காயலில் அம்மினி நீந்திக் குளிப்பதைக் கண்டு தென்னம்பாலை பொருக்கு ஒன்றை  எடுத்து அவள் மீது எறிகிறான் விசுவநாதன், 

அவள் திரும்பிப் பார்க்க அருகே அழைத்தவன் அவளுக்கு வீட்டு விலக்கிற்கு நாள் தள்ளிப் போயிருக்கிறதா? என்று கேட்கிறான்,  அவள் இவனிடம் ஆமாம் என்று சீண்டி விளையாடியவள்  இவன் முகம் போன போக்கைக் கண்டு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை , நீ தைரியமாக இருக்கலாம் ,நான் உன்னை எந்த சூழலிலும் என் அப்பாவிடம் காட்டித் தரவேமாட்டேன் என்கிறாள்,  இது அவனுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறது, 

மறுநாள் காலை நாணு  தலையைச் சொரிந்தபடி சங்கரி ஐந்து மாத வாடகை கேட்டதைச் சொல்கிறான், இவனுக்கு தன் சொந்த வீட்டிற்கு கண்ட தேவடிச்சிக்கும் வாடகை தர சிறிதும் இஷ்டமில்லை, தவிர இவ்வூருக்கு வந்து ஐந்து மாதமானதா ? என்ற உண்மையும் சுரீரென உறைக்கிறது.

உடனே காயலின் எதிர்கரைக்குப் போனவன், அங்கே வாத்துமேய்த்த படி எதிர்பட்ட அம்மினியிடம் தனிமையில் கதைகள் பேசி களித்திருக்கிறான், அவளை தன் இடத்திற்கு கூடலுக்கு  அழைக்கிறான், அவள் ஊரார் பார்த்து விட்டு அப்பனிடம் வத்தி வைப்பார்கள் என மறுத்தவள்  எங்கே உனக்கு தைரியம் இருந்தால் அந்திக்கு என் வீட்டிற்கு வாயேன் பார்ப்போம்  என்கிறாள் , அவளுக்குள் அதீத ஆசை கொப்பளிக்கிறது.

விசுவநாதன்  அந்திக்கு அவள் குடிசைக்குச் சென்றவன் அம்மினி வாத்துக்களை கூடடைத்து விட்டு உள்ளே வரக் காத்திருக்கிறான் , அங்கே பைலி  வெளியூருக்குச்  சென்றவன் இன்னும் வீடு திரும்பவில்லை,
இப்போது விசுவநாதனைத் தேடிக் கொண்டு நாணு இங்கே வந்து விடுகிறான், விஸ்வநாதனைத் தேடி ஒருவர் அவன் வீட்டுக்கு வந்திருப்பதாகவும், சாராயக்கடையில் காணாததால் இங்கு வந்து கேட்பதாகச் சொல்லிவிட்டுப் போகிறான்.

பெரியப்பா வக்கச்சன்  வாட்டும் குளிருக்கு கம்பளியை போர்த்தி தூங்கியே விட்டார், இப்போது இவர்களின் ராசலீலைகள் , ரதிமன்மதன் திருவிழா துவங்குகிறது, இந்த தருணத்தில் வரும் ராசலீலா பாடலை மிகுந்த ரசனையுடன் படமாக்கியிருப்பார் ஒளிப்பதிவாளர் ராமசந்திரபாபு,
ஒரு குச்சுக் கூரை , மண் சுவர் வீடு,அதன் மூங்கில் ஜன்னல் கிராதிகள் அதனூடே ஊறும் கேமரா இவர்கள் சாரைப் பாம்புகளாக பிண்ணி முயங்குவதை சிறைபிடிக்கிறது,  
கூடடைந்த வாத்துக் கூட்டங்கள் தூங்காமல் தத்தித் தத்தி கூண்டுகளுக்குள் நடந்தபடியே இருக்கின்றன,
அந்தச் ஓசை எதுவும் இவர்களுக்கு தொந்தரவாகவே இல்லை, இந்த சணல் கோணி தரைவிரிப்பு அம்சதூளிகா மஞ்சமாக அம்மினிக்குத் தோன்றுகிறது, 
அத்தனை ஆதூரமாக விசுவநாதனை இணைசேர்கிறாள் அம்மினி, பின்னணியில்  தாசேட்டன் குரலில் ஓலிக்கும்    ராசலீலா  பாடல் ஒருவர் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்.
பொழுது விடிய, அம்மினி விஸ்வநாதனை வெட்கத்துடன் எழுப்பி கிளம்பு , இல்லை என்றால் அப்பனிடம் மாட்டி நாம் அடிவாங்கவேண்டி வரும் என்று பரபரக்கிறாள்.

அவள் வெளியே போய் வாத்துகளை எழுப்பி மேய்ச்சலுக்கு தயார் செய்யும் வேளையில் விஸ்வநாதன் கையோடு கொண்டு வந்த குப்பியில் இருந்த  விஷப்பொடியை வாத்துத் தீவனக் கூடையில் கொட்டி குச்சியால் கிளறிவிட்டு, ஸ்தலம் விடுகிறான்.
காலையில் வீடு திரும்பிய பைலி  தீவனம் நன்றாக தின்ற வாத்துக்களை சந்தையில் சென்று விற்க காயலில் இறக்கி படகில் அமர்ந்து துடுப்பிடுகிறான், 

அப்போது இவன் வளர்த்த வாத்துக்கள் காயலில் ஒவ்வொன்றாக செத்து மடிந்து மிதக்கின்றன,பைலி கலங்கி அழுகிறான், அவற்றை குழி தோண்டி அடக்குகிறான், வக்கச்சன் நேற்று நாணு இங்கு விஸ்வநாதனைத் தேடி வந்தான், அவன் தீவனத்தில் விஷம் கலந்திருப்பானோ என்ற ஐயம் தனக்கிருப்பதாகச் சொல்கிறார்.

இப்போது எதிர் கரையின்  தென்னந்தோப்பில் , விசுவநாதனும் நாணுவும் சாராயம் அருந்துகையில் தன் கோடாலியால் சாராய குப்பியை வெட்டி உடைக்கிறான் பைலி,  நாணுவை வசமாக பிடித்து பைலி, கடுமையாக தாக்குகிறான், நாணு அங்கே நிலத்தில்  மூர்ச்சயாகிவிடுகிறான், அவனை கோடாலியால் வெட்ட  ஓங்கிய பைலி கையை பற்றி விடுகிறான் விசுவநாதன், 

என்னை விடுங்கள் சார், என் வாத்துக்களை விஷம் வைத்து கொன்று விட்டான் இவன் என்று ஆத்திரப்பட்டு அடிக்க, வாத்துக்களைக் கொன்றது நான்  தான், இப்போது உன்னையும் கொல்லப்போகிறேன், நான் நீ கொன்ற வாசு, கமலாட்சி மகன் விசுவநாதன் என்கிறான்,
இருவருக்கும் கடும் கைகலப்பு, இடி இடித்து மின்னல் வெட்டி மழை கொட்டுகிறது, அசல் தெருச்சண்டை போல சேற்றில் மூழ்கி உருளுகின்றனர், கடும் சண்டை, மகேஷிண்ட பிரதிகாரத்தில் கடைசி சேறு சண்டையை நினைவூட்டுவது போன்ற சண்டை அது, சண்டையின் முடிவில் பைலி மயங்கி விழுகிறான்,

நன்கு இருட்டிவிடுகிறது, பைலியை அப்படியே தூக்கி தோளில் சுமந்து நடந்தவன்  காயலில் படகிற்குள் இடுகிறான்,மழை கொட்டுகிறது ,  பைலியை ஜலசமாதி செய்ய வேகமாக துடிப்பு இடுகிறான் விசுவநாதன், 
நன்ணீர் காயலைத் தாண்டுகிறது படகு , இன்னும் கொஞ்சம்  தாண்டினால் நடுக் கடலிற்கு எட்டி விடலாம், அப்போது பைலி மயக்கத்தில் இருந்து எழுந்தவன் எங்கே போகிறாய் என்கிறான், இதா இவிட வரே என்று நடுக்கடலைக் காட்டுகிறான் விஸ்வநாதன், 

நடுக்கடலில் மீண்டும் தள்ளுமுள்ளு  , போதையிலும் விசுவநாதனிடம் நன்கு அடிகள் வாங்கியதிலும் நிலைகுலைந்த பைலி படகை ஆட்டி கவிழ்த்து விடுகிறான், 
நீரில் பைலி மூச்சு திணறுகிறான், அக்கணத்தில் கொலை செய்ய கூட்டி வந்த விசுவநாதன்  மூழ்கும் பைலியை ஏனோ தன்னிச்சையாக காப்பாற்றக் கை தருகிறான், 

ஆனால் கடும் மழை இருட்டில் திடீர் சுழலில் மாட்டிய பைலி மூழ்கிவிடுகிறான்., 
விடியலில் விசுவநாதன் காயல் கரையில் உடைந்த படகின் பாகத்தை பற்றியபடி கண்விழிக்கிறான்,கரை திரும்பிய விஸ்வநாதனை அவன் மனசாட்சியே மன்னிப்பதில்லை ,ஒரு தவறைத் திருத்த மற்றொரு தவறு எப்படி சரியாகும் என்று கேள்விகளால் துளைத்தெடுக்கப்படுகிறான் விசுவநாதன், வீட்டுக்குள் வந்தவன் உடலின் காயங்களுக்கு மருந்திட்டுக் கொள்கிறான், 

இவன் சித்தி சங்கரி  வேகமாக சார் சார் என்று அழைத்து வந்தவள் , ஐந்து மாத வாடகை பாக்கி உள்ளதை நினைவூட்டுகிறாள், இவன் அதை பொருட்டாகவே எண்ணாததைக் கண்டவள்,  செய்தி தெரியுமா? சாரின் கூட்டாளி பைலியை யாரோ அடித்து காயலில் தள்ளி கொன்று விட்டனர் என்கிறாள், 

இவன் சுரத்தே இன்றி அப்படியா? என்கிறான், சாருக்கு கவலையாக இல்லையா? வேண்டியவர் மரணமாயிற்றே என்று  தான் சொல்ல ஓடி வந்தேன் என்று அலுத்துக் கொள்கிறாள், விசுவநாதன் சொல்கிறான், பைலியுடனான என் கொஞ்ச நாள் பழக்கத்தை விட உங்கள் சரீர ரீதியான பந்தம் மிகவும் பெரிதாயிற்றே, நீங்களே அவனுக்கு துடிக்காத போது நான் ஏன் துடிக்க வேண்டும் என் சங்கரி சித்தி என்கிறான், 

அப்போது தான் அவளுக்கு இது விசுவநாதன் என்றே உறைக்கிறது, மகனே என்கிறாள், அந்த வார்த்தையை சொல்லி மட்டும் கூப்பிடாதே, உனக்கு அதற்கு தகுதி கிடையாது, உன் நடத்தை என் குடும்பம் தகர்த்தது , நாளை வரை காலை வரை இங்கு இருப்பேன், இதை சொல்ல வேண்டாம் என்று தான் இருந்தேன்,  எனக்கு இன்று இதை ஏனோ சொல்லத் தோன்றியது என்று வெளியேறுகிறான்.

வக்கச்சனை காயல் கரையில் வைத்து பார்த்து பைலி இறந்த துக்கம் கேட்கிறான் விஸ்வநாதன், இப்போது உனக்கு திருப்தியா? நீ படகுக்காரன் வாசுவின் மகன் தானே? எனக்கு நீ என் வீட்டுக்கு வந்து ஒண்டிக்கு ஒண்டி மல்லுக்கு நிறைகையிலேயே ஐயம் தோன்றியது, நான் தான் பைலியிடம் கூட அதை சொல்லவில்லை,அது அவனுக்கே வினையாகிவிட்டது என்கிறார், 

இவன் ,நான் பைலியைக் கொல்ல நினைத்தது உண்மை தான்,ஆனால் விதி பைலியை என் கைகளால் கொல்ல  விடவில்லை,மோசம் செய்து விட்டது,  மழையும் பெருங்காற்றுமே பைலியைக் கொன்றது என்கிறான், தான் நாளை வீட்டுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு அகல்கிறான்.

மறுநாள் காலை அம்மினியை நேரில் பார்க்கச் செல்கிறான் விசுவநாதன், காயலில் நின்ற படகில் தட்டுமுட்டு சாமான்களை ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் வக்கச்சனும் அம்மினியும்,இவனிடம் நாங்கள் எங்கோ போகிறோம் என்கின்றனர்,

அம்மினியிடம் என்னுடன் வா, நான் உன்னை இனி நல்லபடியாக பார்த்துக்கொள்கிறேன் என்கிறான் இவன், கோபத்தில் முகம் சிவந்த அம்மினி பெரியப்பா எல்லாம் சொன்னார், என் ஜீவனத்தை சிதைத்து அப்பனையும்  கொன்றபின்னும் உன் வஞ்சகம் அடங்காமல் இங்கு எப்படி வந்தாய்?என்று அழுகிறாள், நான் அம்மினி, தாராவுக்காரன் பைலியின் மகள், எப்போதும் உன் தயவு எனக்குத் தேவையில்லை என்று படகில் ஏறி அமர்ந்தவள் எதிர்கரைக்கு வக்கச்சன் துடுப்பு  இட ,அழுதபடியே செல்கிறாள்.

விஸ்வநாதன் முன்பும் அனாதை , இப்போதும் அனாதை தான் , ஆனால் அப்போது உள்ளில் கனன்ற வன்மம் இவனை  வாழவிட்டது, இப்போது பழிவாங்கியதும் குறுகுறுக்கும் மனசாட்சி, இவனை இனி நிம்மதியாக இருக்க விடுமா? தெரியாது, 

இப்போது  படகை தனியே துடுப்பு போட்டு  காயலிற்கு நடுவில் சென்று கொண்டிருக்கும்  விசுவநாதன் புள்ளியாக மறைவதை நாம் பார்க்கிறோம்.

இன்று இப்படத்தில் பணியாற்றிய நடிகர்களில் பெண் கலைஞர்கள் தவிர யாரும் உயிருடன் இல்லை, P.பத்மராஜனின் "இதா இவிட வரே " புதினத்தின் ஜீவனை சிதைக்காமல் செல்லுலாய்டில் இப்படி ஒரு தரமுள்ள கச்சவட சினிமாவாக கொண்டு வந்ததில் இயக்குனர் ஐ.வி.சஸி, ஒளிப்பதிவாளர் ராமசந்திரபாபு, இசையமைப்பாளர், G.தேவராஜன் மாஸ்டர், நடிகர்கள் M.G.சோமன், மது, பகதூர், சங்கராடி, அடூர் பாஸி,சாரதா, மீனா, ஜெயபாரதி, விதுபாலா,கவியூர் பொன்னம்மா,  போன்றோரின் பங்கு அலாதியானது.

பப்பேட்டாவின் நமுக்கு பார்க்கான் முந்திரித்தோப்புகளில் திலகன் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர்  பயிலிக்காரன் ,அது முன்பே இதில் மது ஏற்ற கதாபாத்திரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
நமுக்கு பார்க்கான் முந்திரித்தோப்புகளில் திலகன் பார்க்கும் குடிகார மாப்பிள்ளை பெயர்  வக்கச்சன் ,அது முன்பே இங்கு பகதூர் ஏற்ற கதாபாத்திரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

G. தேவராஜன் மாஸ்டர் அவர்களின்  இசை எளிமையாக மென்மையாக நம் செவிகளில் ததும்பி பேரானந்தம் தருவது, இப்படத்தில் கவிஞர் யூசூஃப் அலிகேச்சேரி எழுதி இடம்பெற்ற ஐந்து பாடல்களும் அற்புதமானவை

பாடகி p.,மாதுரி பாடிய "எந்தோ ஏதோ எந்தினியோ?" பாடல் அம்மினி வாத்து மேய்க்கையில் வருகிறது

பாடகர் k.j.யேசுதாஸ் பாடிய "இதா இவிட வரே " படத்தின் துவக்கத்தில் நடிகர் ஜெயன் படகை அக்கரை காயலுக்கு புஜபலம் காண்பித்து துடுப்பிட்டு செலுத்துகையில் வரும்.

பாடகர் p.ஜெயச்ந்திரன் ,p. மாதுரி பாடிய "நாடோடிப்பாட்டின்டே நாடு  " பைலி சிறை மீண்ட பிறகு கலந்து கொள்ளும் திருவிழாவில் ஜானுவைக் கண்டு மையலுறும் பின்னணியில் வருகிறது.

பாடகர் p.ஜெயச்ந்திரன் பாடிய "வெண்ணையோ வெண்ணிலாவுறைஞ்சதோ" அற்புதமான rare gem பாடல், இது தங்கமணி விசுவநாதனை மணமுடிக்க ஆசை கொள்கையில் அவனை நினைத்துப் பாடுவது.


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)