சினிமா ஆர்வலர்கள் யாரும் தவற விடக்கூடாத Noir படைப்பு, ஹங்கேரி நாட்டுத் திரைப்படம்,படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பு, இதே போல கதையம்சத்தில் எத்தனையோ திரைப்படங்கள் கண்டிருக்கிறேன், உதாரணமாக Sleeping with the Enemy , agnisakshi, அவள் வருவாளா? போன்றவை, ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்து war criminals தண்டிக்கப்படும் காலகட்டத்தில் நடக்கும் இக்கதை தனித்துவமான noir படைப்பாக மிளிர்கிறது,
காதலா காதலா திரைப்படத்தில் கமல்ஹாசன் பத்திரிக்கையில் வெளியான obituary விளம்பரத்தை பார்த்துவிட்டு, இறந்து போனவர் தன்னிடம் professional portrait வரைய சொல்லி ஆர்டர் தந்ததாக பொய் சொல்வார், வரைந்த ஓவியத்தை தந்து காசு வாங்கி பிழைப்பார், அதே போல இரண்டாம் உலகப் போரின் முடிவில் லட்சக்கணக்கான காணாமல் போனோரின் உறவினர்கள் தினசரிகளில் உற்றார் உறவுகளை காணவில்லை என பெட்டிச் செய்தி விளம்பரம் தந்தனர், அந்த விளம்பரங்களை குறிவைத்து எனக்கு உங்கள் மகனைத் தெரியும், எனக்கு உங்கள் கணவனைத் தெரியும்,எனக்கு உங்கள் சகோதரனைத் தெரியும்,என கிளம்பிச் சென்று அவர்கள் பற்றி இமாலயப் பொய்களைக் கதையாகச் சொல்லி வீட்டாரை நெகிழவைத்து உணவு, உடை ,பணம் என அவர்கள் மகிழ்ந்து தருவதை பெற்று வந்து உய்யும் நாடோடி நாயகன் Balász,
இவனிடம் எந்த விதமான அடையாள அட்டை,கடவுச் சீட்டும் இல்லை, இவனுக்கு முன்கதை சொல்வதில்லை, அவன் சொல்லும் பொய்கள் மட்டுமே காட்சியாக விரிகின்றன, இப்படி அசகாய சூர பொய்யன்,
Balász ரஷ்யப்படையிடமிருந்து தப்ப வேண்டி ரயிலை இடை நிறுத்தியவன், ஹங்கேரியில் danube நதி ஓடும் அழகிய அடர்ந்த காட்டிற்குள் வருகிறான் ,அங்கு அழகிய முரட்டு துப்பாக்கி வேட்டைக்காரி ஜூடித் மற்றும் அவள் மகன் விர்ஜில் இருவரைப் பார்க்கிறான், ஜூடித் கணவன் ஒரு போர் குற்றவாளி, கொடுங்கோலன் , அவன் போரில் இறந்திருக்ககூடும் என ஜூடித்தும் ஊராரும் நம்புகின்றனர்,
காட்டிற்குள் ஜூடித் , விர்ஜில் துப்பாக்கிக்கு பலியாகாமல் மயிரிழையில் இரக்கம் சம்பாதித்து, அவர்கள் நன்மதிப்பைப் பெற்றுவிடுகிறான் Balász ,அவள் கணவன் berces உடன் ராணுவத்தில் பணியாற்றியதாகவும் அவன் அசகாய சூரன் என்றும் வழமையாக கதைக்கிறான்,மகன் விர்ஜில் அவற்றை நம்புகிறான் , கிரகிக்கிறான் ,ஆனால் ஜூடித் அவற்றை நம்புவதுமில்லை, ரசிப்பதுமில்லை .
இருவாரங்கள் அவர்கள் வீட்டில் சுகமாக தங்குகிறான்,காட்டுக்குள. பெரிய கடா மானை கொம்பு வாத்தியம் ஊதி வரவழைத்து வேட்டையாடி துண்டம் போட்டு சந்தையில் சென்று விற்க உதவுகிறான்,
ஹங்கேரிய அதிகாரிகள் இவன் சொல்லும் பொய்யையும் நம்பி
இவனுக்கு தற்காலிக அடையாள அட்டை தருகின்றனர் ,
வீட்டில் ஜூடித்திற்கும் இவனுக்கும் மிக அழகாக காதல் அரும்புகிறது,எண்ணும் போதெல்லாம் கணவன் மனைவி போல இருவரும் முயங்குகின்றனர், இவனையே கணவனாக வரிக்கலாம் என எண்ணுகையில் அவ்வூரின் வேட்டைக்காரன்,பெரிய war criminal , ஜூடித்தின் கணவன் berces திரும்ப வந்து விடுகிறான், அதுவும் Balász ஐ தெரியும் என அமோதிக்கிறான், அவன் சொன்ன கதைக்கு கச்சிதமாக continuity சொல்கிறான்,தன் வீட்டாருக்கு உதவிதற்கு ஆரத்தழுவி நன்றி கூறுகிறான்.
ஜூடித்திற்கும் Balászற்கும் அதிர்ச்சியில் மின்சாரக் கம்பியை மிதித்தது போல ஆகிறது,
இனி என்ன ஆகும், படம் கண்டிப்பாக பாருங்கள்.
திரைக்கதையின்படி, சில காட்சிகள் சோவியத் போர் முனையிலும் (szovjet hadszíntéren), சில காட்சிகள் குண்டு வீசப்பட்ட புடாபெஸ்டிலும் (szétbombázott Budapest), மீதமுள்ளவை ஜெமென்க் (Gemenc) பகுதிக்கு அருகில் உள்ள பாரன்ஃபாக் (Bárányfok) மற்றும் அதன் வெளிப்புறப் பகுதிகளிலும் (külterületein) நடக்கின்றன.
போர்முனைக் காட்சிகள் டாட்ரா மலைத்தொடரில் (Tátrában) படமாக்கப்பட்டன. பாரன்ஃபாக் காட்சிகளோ, மற்ற இடங்களுடன் சேர்த்து, பேட்டி (Páty) கிராமத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் (külterületén) மற்றும் ஃபோட் ஏரிகளிலும் (fóti tavaknál) படமாக்கப்பட்டுள்ளன.
#சென்னை_திரைப்பட_விழா