Train to Pakistan | ட்ரெய்ன் டு பாகிஸ்தான் | குஷ்வந்த் சிங்

"Freedom is for the educated people who fought for it. We were slaves of the English, now we will be slaves of the educated Indians—or the Pakistanis."

Train to pakistan | ட்ரெய்ன் டு பாகிஸ்தான், எழுத்தாளர் குஷ்வந்த் சிங் 1956 ஆம் ஆண்டு எழுதிய நாவலைத் தழுவி 1998 ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழிப்படம், embedded சப்டைட்டிலுடன் யூட்யூபில் காணக்கிடைக்கிறது.
படத்தின் இயக்கம் பமீலா ரூக்ஸ். 

ஹுக்கும் சந்த் (மோகன் அகஸி) என்ற  மாவட்ட மாஜிஸ்திரேட்டின் கண்களில் இருந்து இக்கதை விரிகிறது,
எதோ ஒரு சொல்லப்படாத கலவரத்தில் தன் மனைவி மகளை இழந்து தனிமையில் ஸ்காட்ச் விஸ்கி போதையில் வசிக்கிறார் ஹுக்கும் சந்த், 

அந்த ஊர் மனோ மஜ்ரா அமைதியான கிராமம்  என்பதால் வருடாவருடம் அரசுக்கு குற்றவாளிகளை கணக்கு காட்டுவதற்கு என்றே ஜுகா என்ற ஜுகா சிங்கை மட்டும் ஊருக்குள் விட்டு வைத்திருக்கிறார், அவனுக்கும் பிற ஊர்களின் கொள்ளையர்களுக்கும் அவ்வப்பொழுது சண்டை மூட்டி விட்டு  தொலைவில் இருந்து அந்த கொள்ளையர்களை தன் ஆட்களை நிறுத்தி சுட்டுக் கொன்று அரசுக்கு குற்றவழக்கு கணக்கு காட்டுகிறார்.

ஜுகாசிங்கின் தந்தை ஒரு புரட்சியாளராக இருந்து பிடிபட்டு இவர் தலைமையில் தான் தூக்கிலிடப்பட்டார்.ஜுகாசிங் அன்னமிட்ட தன் ஊரில் கன்னமிடுவதில்லை என்ற கொள்கை உடையவன்.

ஹுக்கும் சந்த் மாலையில் தன் ஆடம்பரமான  ஜல்சாகர் அறையில் இஸ்லாமிய இசை குழு பாடல்கள் பாடி இசைக்க களித்திருக்கிறார், அக்குழுவின் பாடகி அழகிய ஹசினா (திவ்யா தத்தா) இக்கிழவருக்கு ஒரு விருப்பத்துக்குரிய அடிமை போலவே இணக்கத்துடன் நடந்து கொள்கிறாள்.கவலைகள் கொண்ட உள்ளத்தை பாடி,ஆடி சரசகலைகள் செய்து குளிர்விக்கிறாள்.

சமீப காலமாக நடக்கும் பிரிவினை துயர் குற்றங்கள் மாஜிஸ்த்ரேட் ஹுக்கும் சந்த்தை  நிம்மதியாக இருக்க விடுவதில்லை, தன் இறந்து போன மகள் வயது இருக்கும் ஹசீனாவை மணக்கவும் மனமில்லை, அவளுக்கு அடைக்கலம் தரவும் இயலவில்லை, ஊரில் பெரிய பண்ணையாளர்களாக இருக்கும் சீக்கியர்கள் அவ்வூரின் விவசாய நிலங்களில் காலங்காலமாக கூலிவேலை செய்யும் முஸ்லிம்களை நிச்சயம் கொன்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையான செய்தி வருகையில் முஸ்லிம்களை இவர் நிர்கதியாக கைவிடுகிறார், அவர்களை அகதி முகாமுக்கு அனுப்புகிறார் ஹுக்கும் சந்த்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தேசப்பிரிவினைக் காலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில்  பஞ்சாப் மாகாணத்தில்  உள்ள மனோ மஜ்ரா என்ற கற்பனை கிராமத்தில் அது வரை தொப்புள் கொடி உறவாக வசித்த சீக்கியர்களும் முஸ்லீம்களும்  சந்தித்த மதக் கலவரக் கொந்தளிப்பின் கோரமுகத்தின் கதையை நிதர்சனமாக கண்ணுறுகிறோம். 

 பாகிஸ்தானில் இருந்து சீக்கியர்கள் மற்றும் இந்துக்களின் பிணங்கள்  நிறைந்த ரயில் மனோஜ் மஜ்ரா கிராமத்தின் ரயில் நிலையத்திற்கு ஒன்றன் பின் ஒன்றாக வரும் வரை சீக்கியர்களும் முஸ்லிம்களும் கிராமத்தில் மிகுந்த நல்லிணக்கத்துடன் தான் வாழ்கின்றனர்.
அகதிகளாக விருந்தினராக வருபவர்களுக்கு மனோ மஜ்ரா தன் குருதுவாரா கதவுகளை திறந்தே வைத்திருக்கிறது .

அந்த ரயிலில் வந்த பிணங்களை ஊரின் அமைதி வேண்டி ஊரார் அறியாமல் தொலைவில் காட்டில் வைத்து காதும் காதும் வைத்தது போல கும்பலாக தகனம் செய்து வருகிறார் ஹுக்கும் சந்த், ஆனாலும் வீட்டுக்கூரையில் மேல் உரசிச் செல்லும் தகனப் புகை ஊராருக்கு பீதி கூட்டுகிறது,

பிற கிராமங்களில் மதக்கலவரத்தில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களால் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் மண்டை ஓடுகளை சாக்கில் வைத்து அடுக்கி கழுதை மீது ஏற்றி மனோ மஜ்ரா வந்து கலவரத்துக்கு ஆள் திரட்டுகின்றனர் முஸ்லிம்கள், 

அந்த சதியை முறியடித்து அந்த மண்டை ஓடு குழுவை எல்லை தாண்டி கொண்டு விடுகிறார் மாஜிஸ்த்ரேட் ஹுக்கும் சந்த்.

கிராமத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பார்கள் எனக்கருதி ஊருக்குள் அகதியாக வரும் லண்டனில் படித்த கம்யூனிஸ்டான இக்பால் சந்த் (ரஜத் கபூர் ) என்பவரைப் பிடித்து சிறையில் அடைக்கிறார் ஹுக்கும் சந்த், நடிகர் மங்கள் தில்லான் (ஜுனூன் நாடகத்தில் சுமீர் ராஜ் வன்ஷ்) இதில் போலீஸ் இன்பெக்டர் கௌரவ வேடத்தை அழகாக செய்திருந்தார்.

ஊரின் ஒரே கொள்ளையனான ஜுகா என்ற ஜுக்காத் சிங்கை கூட இப்போது (நிர்மல் பாண்டே ) பிடித்து சிறையில் அடைக்கிறார் ஹுக்கும் சந்த், அவனுடைய  அழகிய காதலி நூரான் (ஸ்மரிதி மிஷ்ரா), மதம் தாண்டி ஜுகாவை காதலிக்கிறாள், அவனுடன் அவன் அழைக்கும் போதெல்லாம் கலவி கொண்டு அவன் இரண்டு மாத சிசுவை சுமக்கிறாள் நூரான்,

 நூரானின் தந்தைக்கு கண்பார்வை இல்லை, அவர் ஒரு ஏழை நெசவாளி, அவருக்கு கண் தெரியாது என்பதால் ஜுகா தைரியமாக நூரானின் வீட்டுக்கு வந்து அவளைத் தழுவி முயங்குகிறான், அவர் அப்பா என்ன சப்தம் என கேட்கையில் நூரான் எலி தானிய கூடையை உருட்டுகிறது என்று பொய் சொல்கிறாள், இதே நாவலின் பாதிப்பில் நானும் ஒரு தொழிலாளி திரைப் படத்தில் அம்பிகாவை அவர் கண் தெரியாத அப்பா முன்னாலேயே  புரட்டி எடுப்பார் கமல்ஹாசன் அது உடனே நினைவுக்கு வந்தது.

சில அகதிகளும் எல்லையில் இருந்து மனோ மஜ்ரா கொண்டிருக்கும் மதநல்லிணக்கத்துக்காக அவ்வூருக்குள் படையெடுக்கின்றனர்.  ஆனால் சீக்கிய கிராமவாசிகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கிராமத்தில் இருந்த  முஸ்லிம் குடும்பங்களை மொத்தமாக பாகிஸ்தானுக்கு வெளியேற்ற புதிதாக பிறந்த இந்திய அரசு முடிவு செய்கிறது, ஹுக்கும் சந்த்திற்கு கையறுநிலை.

நேற்றுவரை தாயாய் பிள்ளையாய் பழகியவர்களே இன்று மிருகவெறியுடன் மாற்று மதத்தவரை கொலை கொள்ளை வன்கலவி செய்ய விழைகையில் நடுநடுங்கிப் போகின்றனர்.தெறித்து ஊர் விட்டு எல்லையில் உள்ள அகதிகள் முகாமிற்கு ராணுவ லாரியில் கண்ணீரும் கம்பலையுமாய் தம் காலநடைகள் வீடுகள் பொருட்களை விட்டுவிட்டு ஒரே ஒரு துணி மூட்டையுடன் ஏறிச் செல்கின்றனர்.

மனோ மஜ்ரா கிராமத்திற்கு வெளியில் இருந்து வரும் சில மதவெறி கொண்ட  சீக்கியர்கள் ரயிலில் முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு முன் அப்பாவி முஸ்லிம்களை  கொத்துக் கொத்தாக கொல்லத் திட்டம் தீட்டுகிறார்கள். 
மனோ மஜ்ரா கிராமத்து  சீக்கிய மதத்தைச் சேர்ந்த கொள்ளையன்  ஜுகத் சிங்கின் முஸ்லிம் காதலி  நூரானும் அந்த பாகிஸ்தானுக்கு செல்லும் ரயிலில் அகதியாகப் போகிறாள்.   ஹுக்கும் சந்த்தின் ஆசைநாயகி ஹசீனாவும் அதே ரயிலில் போகிறாள், சட்டத்தால் உதவ முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறையில் இருந்து தன் வழமையான பலியாடு ஜூகாவை விடுதலை செய்கிறார் ஹுக்கும் சந்த், தன் தவறுக்காக தன் இயலாமைக்காக தன்னை நம்பியவர்களை கைவிட்டதற்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு விஸ்கியை தொடர்ந்து பருகுகிறார் ஹுக்கும் சந்த்.
சீக்கிய மதவாதிகள் ரயில் பயணிகளை கொன்று குவிக்கும் திட்டத்தை ஜுகத் சிங் முறியடிப்பதை தான் நாம் நெகிழ்ச்சியுடன்  பார்க்கிறோம்.

இந்த பாகிஸ்தான் செல்லும் ரயில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த அகதிகளால் நிரம்பி வழிகிறது, அவர்கள் இந்த ரயிலின் ஜன்னல்கள் மற்றும் கூரையின் மீது கூட கூட்டமாக அமர்ந்துள்ளனர்.  
ரயிலின் மேற்கூரையில் கொத்தாக அமர்ந்திருப்பவர்களை பாலத்தின் தொடக்கத்தில் கயிறு கட்டி கீழே தள்ளிவிட்டு கொன்றுவிடுவதுதான் சீக்கிய மதவாதிகளின் சதி.  
ஆனால் இந்த கொடூரமான திட்டத்தை தன் உயிரைத் தந்து முறியடித்து அந்த பாலத்தின் மீது ஏறி கயிறை அறுத்து , சீக்கிய மதவாதிகளின் துப்பாக்கியால் சுடப்பட்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்து சாகிறார் ஜுகத் சிங், 

படம் வயது வந்தோர் மட்டும்  பாருங்கள் , படம் non linear  மற்றும் பூடகமாக கதை சொல்லும் கோடிட்ட இடங்களை  நிரப்புக பாணி  முறையில் நகருகிறது, படத்தின் ஒளிப்பதிவு சன்னி ஜோஸப், 
இசை Piyush Kanojia
Taufiq Qureshi,Kuldeep Singh இந்த மூவர்.

இப்படத்தில் வரும் நிர்மல் பாண்டே மற்றும் ஸ்மிருதி மிஷ்ரா ஜோடிகளையும் , மோகன் அகஸி மற்றும் திவ்யா தத்தா ஜோடிகளை ஒருவர் வாழ்நாளில் மறக்க முடியாது, அப்படி அந்தந்த கதாபாத்திரங்களில் நிஜமாகவே வாழ்ந்திருக்கின்றனர்.

PS: அண்ணாத்தே படத்தில் தலைவரும் அவர் முறைப்பெண்ணும் இருட்டு கரும்புக் காட்டுக்குள் சும்மா பேசிக்கொண்டிருந்தோம் என்பார்கள் அது போல நிர்மல் பாண்டே மற்றும் ஸ்மிருதி மிஷ்ரா ஜோடி அப்படி ரசமாக பேசுகின்றனர்.

படத்தில் வரும் சுவைமிகுந்த ஆங்கில வசனங்கள் 

"The last to learn of gossip are the parties concerned"

"India is constipated with a lot of humbug. Take religion. For the Hindu, it means little besides caste and cow-protection. For the Muslim, circumcision and kosher meat. For the Sikh, long hair and hatred of the Muslim. For the Christian, Hinduism with a sola topee. For the Parsi, fire-worship and feeding vultures. Ethics, which should be the kernel of a religious code, has been carefully removed."

#train_to_pakistan
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)