சாஹேப் உத்தம் சிங்


சாஹேப்  உத்தம் சிங் கொடுங்கோலன் ஜெனரல் ட்வையரை (Michael O'Dwyer ) சுட்டுக் கொன்ற  நாள் 13 மார்ச் 1940.

முதலில்  நாம் இரண்டு கயவர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவன் பஞ்சாப் மாநில கவர்னர்  ட்வையர் எ Michael O'Dwyer

மற்றொருவன் ஜெனரல் டயர்  Reginald Edward Harry Dyer, 

சாஹேப்  உத்தம் சிங் கொடுங்கோலன் ஜெனரல் ட்வையரை மட்டுமே கொன்றார், ஜெனரல் டயர் தப்பிவிட்டான்.

ஏன் அந்த கொடுங்கோலன்  ஜெனரல் ட்வையரை உத்தம் சிங் 21 வருடங்கள் காத்திருந்து கொல்ல வேண்டும்? 

ஜாலியன் வாலாபாக் ஒரு முன்னோட்டம்.

தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 ஐ சீக்கியர்கள் ஒரு நாள் முன்பாக பைசாகிப் பண்டிகை எனக் கொண்டாடுவார்கள், 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் மக்களுக்கு அந்த பைசாகிப் பண்டிகை மிகுந்த துக்க தினமாக அமைந்தது, 

அன்று மாலை சுமார் 5-30 மணிக்கு பைசாகிப் பண்டிகையைக் கொண்டாடவும் , அப்போது புதிதாக அமல்படுத்தப்பட்ட ரௌலட் சட்டம் என்ற கொடிய சட்டத்தை எதிர்த்தும் ஏற்பாடு செய்திருந்த  சீக்கிய மதகுருமாரின் சுதந்திரப் போராட்ட பேச்சைக் கேட்கவும் ,பஞ்சாபில் வெள்ளையருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை தீவிரப்படுத்தவும் சுற்றியுள்ள வெளியூர்களில் இருந்தெல்லாம் ஆயிரக்கணக்கில் ஆண்கள் , பெண்கள்  குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக ஜாலியன் வாலாபாக் திடலில் திரண்டனர்.

பல மக்களுக்கு அங்கே மாலை 6மணி முதல்  ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது தெரிந்திருக்கவில்லை, அங்கே சொற்பொழிவு துவங்கிய சற்று நேரத்தில் சுமார் ஜம்பது சிப்பாய்களுடன் ஆஜரான ஜெனரல் Dier தன் ரெஜிமென்டின்  துப்பாக்கி குண்டுக் கையிருப்பான 1650 தீரும் வரை தொடர்ந்து சுட உத்தரவிட்டான்.

அந்த ஆறு ஏக்கர் பரந்த பெரிய மைதானத்தில் இருந்த கிணற்றில் உயிருக்குப் பயந்து பலர் குதித்து மடிந்தனர், இந்த துப்பாக்கிச் சூட்டில் 1000 பேர் கொல்லப்பட்டனர், 

1500 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை தீவிரமாக முடுக்கி விட்டதில் முக்கிய பங்கு வகித்தது,

இடது புறம் உள்ள படத்தில் இருப்பது ஜாலியன் வாலாபாக்கில் 1500 பொதுமக்களை சுட்டுக் கொலை செய்ய ஆணையிட்ட ஜெனரல் டயர்  Reginald Edward Harry Dyer, 

வலப்பக்கம் இருப்பது Dierக்கு கடைசி வரை பக்க பலமாக இருந்த அன்றைய பஞ்சாப் மாநில கவர்னர்  ட்வையர் எ Michael O'Dwyer

 கீழே படத்தில் இருப்பது சாஹேப் உத்தம் சிங், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான புரட்சி வீரன், ஜாலியன் வாலாபாக் படுகொலை நடக்கையில் இவருக்கு 20 வயது,   இவர் 21 ஆண்டுகள் காத்திருந்து  ட்வையரை லண்டனில் ஒரு பொதுக்கூட்டத்தில் வைத்து13 March 1940 அன்று சுட்டுக் கொன்றார்.

சுட்டவுடன் தப்பி ஓடவில்லை, இந்தக் கயவனை கொன்றதன் மூலம் என் மண்ணைப் பெருமைப் படுத்தியிருக்கிறேன் , இதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்றார் உத்தம் சிங்,

அடுத்து வந்த 42 நாட்கள் கடும் உண்ணாவிரதம் இருந்தவர், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பரெஸ்டன்வில் சிறையில் 31 July 1940 அன்று தூக்கிலிடப்பட்டார்.இவரது நினைவு நாள் பஞ்சாபில் விடுமுறை நாளாகும்.

உத்தம் சிங்கால் 21 வருடக் காத்திருப்புக்குப் பின்னர். அன்று எய்தவனான Michael O Dwyer ஐ பழி தீர்க்க முடிந்தது,  அம்பான ஜெனரல் டயர் முன்பே July 23, 1927 ஆம் ஆண்டு இறந்து விட்டதால் , அவன் கதை உத்தம் சிங்கால் முடிக்கப்படவில்லை.

படுகொலை சம்பவத்துக்குப் பின் கலொனலாக பதவி இறக்கம் பெற்ற ஜெனரல் டயர், இங்கே இந்தியாவிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு இங்கிலாந்து சென்றவன் இங்கிலாந்திலும் புறக்கணிக்கப்பட்டு,பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டவன், தன் 62 ஆம் வயதில் நோய்முற்றி இங்கிலாந்தில் சாமர்செட் என்ற ஊரில்  23 ஜூலை , 1927 ஆம் ஆண்டு மரணமடைந்துள்ளான்,

இவனுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என்ற சாபம் ஜெனரல் Dyer விஷயத்தில் ஏனோ பலிக்கவேயில்லை.மக்களைக் கொடூரமாக கொலை செய்த மனித மிருகங்களுக்கு சாதாரண சாவு கிடைப்பது வினோதம் தான்.

உத்தம் சிங் அந்த 21 வருட காத்திருப்பு காலத்தில் ஜெனரல் டயரை தேடிச் செல்லாதது ஏன் என விளங்கவில்லை.

#உத்தம்சிங்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)